பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்துக்கள்.
உன் வயசு என்ன? அவர நீ வாழ்த்துறியான்னு திட்டாதீங்க... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்னு சொல்றதெல்லாம் அரசியல் பாணி. நமக்கு இப்ப அது தேவையில்லை...
தனிப்பட்ட ஒரு நபர் இவ்வளவு மக்களை வசியம் செய்திருப்பது சாதனை. இது என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஊக்கம் கொடுக்குது. ஆனா பல பேருக்கு பொறாமையைத் தர்றதாலதான் அவர் மீதான விமர்சனங்கள்.
தனிப்பட்ட ஒரு நபர் இவ்வளவு மக்களை வசியம் செய்திருப்பது சாதனை. இது என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஊக்கம் கொடுக்குது. ஆனா பல பேருக்கு பொறாமையைத் தர்றதாலதான் அவர் மீதான விமர்சனங்கள்.
ரஜினிகாந்த் மட்டுமில்லைங்க. யார் நல்லா இருந்தாலும் அவங்களைச் சுற்றி நாலு பேருக்காவது எரியத்தாங்க செய்யும். இது உலக நியதி. இப்ப நாம நல்லா வளர்றது சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் இன்னும் சில நாடுகளுக்கெல்லாம் பிடிக்கலைன்னுதான் உங்களுக்கும் தெரியுமே. அந்த மாதிரிதான் இதுவும். (மற்றவங்களைக் கொதிக்க விட்டு பிழைப்பு நடத்துறவங்க இந்தப் பட்டியல்ல சேர மாட்டாங்க.)
அவர் படங்கள்ல நாம பின்பற்றவேண்டாத விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். அவரே சில காட்சிகளை தன்னோட படங்கள்ல தவிர்க்க ஆரம்பிச்சுட்டார். அந்த விஷயங்களை 'கதம் கதம் - முடிந்தது முடிந்துபோச்சு' அப்படின்னு அவர் வழியிலேயே விட்டுடுவோம்.
என்னுடைய சிறு வயதில் அவருடைய படங்கள் அவ்வளவாக எனக்கு அறிமுகம் இல்லை. சக மாணவர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டதால் ரொம்ப ஆர்வமா பார்க்கணும்னு நினைச்ச படம் - தளபதி
அந்தப் படத்து ஸ்டில்சோட மாதக் காலண்டர் வேற ரொம்ப எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுச்சு. ஆனா வீட்டுல என்ன காரணத்தாலோ அழைச்சுட்டுப் போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க.(அப்ப எல்லாம் என் அம்மாவோடதான் படத்துக்குப் போவேன்...நிசமாத்தாங்க... நம்புங்க.)
பிறகு 1994ம் வருஷம்தான் எங்க ஊர்ல ரொம்பப் பழைய தியேட்டர்ல... ச்சை... நாடகக் கொட்டகையா இருந்து திரையரங்கமா (?!) மாறின இடத்துல பார்த்தேன்.
இது வரை நான் பார்த்த படங்களிலேயே மிகச் சில காட்சிகள்தான் எத்தனை தடவை பார்த்தாலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை. பாட்ஷா படத்துல ஆனந்தராஜை ரஜினி அடிக்கிற காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் ரோமங்களை சிலிர்க்கச் செய்யும்.
யுவராணி ரத்தக்காயத்துடன் ரஜினி மீது வந்து விழுவார். அப்போது கத்திக்கொண்டே ஓடிவரும் அடியாளை ஒரே அடியில் வீழ்த்தியதும் சில நொடிகள் எங்கோ தூரத்தில் ரயில் செல்லும் ஓசையத்தவிர வேறு பின்னணி இசை எதுவும் இருக்காது.
படம் பார்க்கும்போது திரையரங்கத்திலும் நிசப்தம்தான்.
அண்ணாமலை படத்தில் சரத்பாபுவிடம் சவால்விடும் காட்சி சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் பாட்ஷா படத்தில் வரும் இந்தக் காட்சியைப் போல் அவரது வேறு எந்தப் படத்திலும் (நான் பார்த்தவரை) ஆக்க்ஷன் ப்ளாக் எந்தப் படத்திலும் அமைய வில்லை என்று நினைக்கிறேன்.
ரஜினி என்ற தனி மனிதரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதை மட்டும் எடுத்துக் கொள்வோம். பிறந்தநாளில் வாழ்த்துவோம்.
பொதுவாழ்விற்கு வந்துவிட்டால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் நேரத்தில் விமர்சனம் வேண்டாமே.
இன்னொரு நாள் பேசுவோம்.
என்னுடைய சிறு வயதில் அவருடைய படங்கள் அவ்வளவாக எனக்கு அறிமுகம் இல்லை. சக மாணவர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டதால் ரொம்ப ஆர்வமா பார்க்கணும்னு நினைச்ச படம் - தளபதி
அந்தப் படத்து ஸ்டில்சோட மாதக் காலண்டர் வேற ரொம்ப எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுச்சு. ஆனா வீட்டுல என்ன காரணத்தாலோ அழைச்சுட்டுப் போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க.(அப்ப எல்லாம் என் அம்மாவோடதான் படத்துக்குப் போவேன்...நிசமாத்தாங்க... நம்புங்க.)
பிறகு 1994ம் வருஷம்தான் எங்க ஊர்ல ரொம்பப் பழைய தியேட்டர்ல... ச்சை... நாடகக் கொட்டகையா இருந்து திரையரங்கமா (?!) மாறின இடத்துல பார்த்தேன்.
இது வரை நான் பார்த்த படங்களிலேயே மிகச் சில காட்சிகள்தான் எத்தனை தடவை பார்த்தாலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை. பாட்ஷா படத்துல ஆனந்தராஜை ரஜினி அடிக்கிற காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் ரோமங்களை சிலிர்க்கச் செய்யும்.
யுவராணி ரத்தக்காயத்துடன் ரஜினி மீது வந்து விழுவார். அப்போது கத்திக்கொண்டே ஓடிவரும் அடியாளை ஒரே அடியில் வீழ்த்தியதும் சில நொடிகள் எங்கோ தூரத்தில் ரயில் செல்லும் ஓசையத்தவிர வேறு பின்னணி இசை எதுவும் இருக்காது.
படம் பார்க்கும்போது திரையரங்கத்திலும் நிசப்தம்தான்.
அண்ணாமலை படத்தில் சரத்பாபுவிடம் சவால்விடும் காட்சி சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் பாட்ஷா படத்தில் வரும் இந்தக் காட்சியைப் போல் அவரது வேறு எந்தப் படத்திலும் (நான் பார்த்தவரை) ஆக்க்ஷன் ப்ளாக் எந்தப் படத்திலும் அமைய வில்லை என்று நினைக்கிறேன்.
ரஜினி என்ற தனி மனிதரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதை மட்டும் எடுத்துக் கொள்வோம். பிறந்தநாளில் வாழ்த்துவோம்.
பொதுவாழ்விற்கு வந்துவிட்டால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் நேரத்தில் விமர்சனம் வேண்டாமே.
இன்னொரு நாள் பேசுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக