Search This Blog

சனி, 29 டிசம்பர், 2012

டெல்லி துயரம் தொடராமல் இருக்க என்ன செய்யப் போகிறோம்?

பேருந்து நிறுத்தத்துக்கும் மரத்துக்கும் என்ன சம்மந்தம்? ... விடை இந்த பதிவிற்குள் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனில்லாமல் இன்று சிங்கப்பூரில் உயிரிழந்து விட்டார் என்றதும் நீதி கேட்டு கடுமையாக பொதுமக்கள் போராட்டம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அரசு கவனமுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தினம் தினம் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இந்த ஆவேசம் என்று சிலர் சில ஊடகங்களில் கேள்விகளை எழுப்பினார்கள்.

எல்லா சம்பவங்களையும் பார்த்து மனம் கொதித்துப்போய் இருந்தவர்கள் ஒரேடியாக பொங்கிவிட்டார்கள் என்று சிலரும் சில ஊடகங்களும் கருத்து சொன்னதாக அறிகிறேன். இது உண்மையாக கூட இருக்கலாம்.

இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தண்டனை தேவைதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பெண்ணை சக மனுஷியாக பார்க்காமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய பொருளாக சில கயவர்கள் நினைத்து இப்படிப்பட்ட கொடூரங்களை அரங்கேற்றச் செய்யும் மனநிலை எவ்வாறு உருவாகிறது. அந்த மனதை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்பதில்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதும் கிடைக்காததும் இருக்கிறது.

பலர் பல நூறு காரணங்கள் சொன்னாலும் மதுதான் இது போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலர், மதுப்பழக்கம் இல்லாதவர்கள் கூட பெண்களையும், குழந்தைகளையும் சிதைக்கும் கொடூர காரியங்களை செய்கிறார்களே என்று கேட்கிறார்கள்.

அதுவும் உண்மைதான். சும்மா இருக்கும் மனம் சாத்தானின் குடியிருப்பு என்று சொல்வார்கள். வேலையில்லாதவன்தான் இப்படியயல்லாம் தவறு செய்கிறானா? நல்ல பணியில் இருப்பவர்கள் இப்படி தவறு செய்யாமலா இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மனிதனின் மனம் ஓய்வை நாடும்போது அது நல்ல திசையில் திருப்பப்படாமல் வக்கிர திசையை நோக்கி செலுத்தப்படும்போதுதான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போது பாடப்புத்தகங்கள் தவிர்த்து எனக்கு பொழுதுபோக்க கிடைத்த முக்கிய பொருள் புத்தகங்கள்தான். தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தன் என்று பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை சொல்லும் கதைகளுடன் தினசரி நாளிதழ்கள் கூட சிறுவருக்கான இணைப்புகளை புத்திக்கூர்மையை பலப்படுத்தக்கூடிய, நல்ல எண்ணங்களை விதைக்கக்கூடிய உள்ளடக்கங்களுடன்தான் வெளியிட்டார்கள்.

எனக்கு 25 வயதில் சாத்தியப்பட்ட செல்போன் இன்று 3 வயதுக்குழந்தைக்கு கிடைக்கிறது. அவர்கள் வெளியில் போய் விளையாட வழி இருப்பதில்லை. வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவில் ரத்தவெறியைத் தூண்டும் கார்ட்டூன், விளையாட்டுக்கள் என்று பலவும் மனித மனத்தை வக்கிரபுத்தியுடன் கொடூரமான திசையை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த போக்கு நல்ல வசதி படைத்த குடும்பங்கள் மற்றும் ஓரளவு நடுத்தர வசதியுடன் கூடிய குடும்பங்களில் வளரக்கூடிய குழந்தைளைப் பற்றி.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத குடும்பங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் சுற்றுப்புறத்தில் சாக்கடை கூட சரியாக இருப்பதில்லை. அவர்கள் படிக்கும் பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இருப்பதில்லை. பிறகு அவர்களுக்கு எப்படி நூலக அனுபவம் கிடைக்கும்?

அப்படி வசதி இல்லாதவர்கள் தங்கள் சக்திக்கு மீறி படிக்க வைத்தாலும் அந்த பள்ளிகள் பாடப்புத்தகங்களை துரத்துவதற்கு மட்டுமே பழக்கப்படுகிறார்கள். சகிப்புத்தன்மை, நற்பண்புகள் இது போன்று எந்த ஒரு விசயமும் சில இடங்களில் கட்டாயத்தின்பேரில் அவர்கள் பின்பற்றுகிறார்களே தவிர, கூட்டம் சேர்ந்தால், யாரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி எவ்வளவு கொடூரமான செயல்களையும் கண நேரத்தில் தெரிந்து வேண்டுமென்றோ அல்லது அவர்களை மீறியோ செய்து விடுகிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் செய்யும் செயல் தவறு என்று அவர்கள் புத்தி எச்சரித்தாலும், அதை செய்து பார்க்க வேண்டும் என்று அவர்கள் மனதில் குடியிருக்கும் சாத்தான் சொல்வதையே செய்து விடுகிறார்கள்.

இது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் கடுமையான கண்காணிப்பு அவசியம். எல்.கே.ஜி மாணவர்கள் கூட வகுப்பில் ஆசிரியை இல்லை என்றால் சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் போது குரங்கு என்று வர்ணிக்கப்படும் மனித மனம் சும்மாவா இருக்கும்?

சில வெளிநாடுகளில் துண்டுக்காகிதத்தை குப்பைத்தொட்டியை விட்டு வெளியில் போட்டால் கூட அடுத்த 5வது நிமிடம் போலீஸ் வீடு தேடி வரும் என்ற சூழ்நிலை இருப்பதால் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும் நபர், நம் நாட்டில் பத்து வீடுகள் கொண்ட குடியிருப்புக்குள் நுழையும் 4 அடி அகல வாசலின் குறுக்கே யாரும் நுழைய முடியாதபடி அதே நாலடி நீள இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் பழக்கத்துடன் இருப்பதை என்னவென்று சொல்வது?

வெயில் தாங்க முடியவில்லை. போகும் வழியில் ஆங்காங்கே நிழலில் இளைப்பாறிச் செல்லலாம் என்று (காரில் சென்றால் கூட) நினைப்போம். அப்படி நிழல் தருவதற்காக சிமெண்ட், மணல், ஜல்லி கொண்டு நிழற்குடையை கட்டி வைப்போம். தமிழகத்தில் ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் மே மாதம் கத்திரி வெயிலில் இப்படி ஒரு நிழற்குடையில் அரை மணி நேரம் நீங்கள் ஓய்வெடுப்பதற்கும், குளு குளு என்று இயற்கை காற்றுடன் நிழல் தரும் பெரிய மரத்தடியில் நின்று ஓய்வெடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? (அந்த மரம் தரும் நன்மைகளை பட்டியலிட்டால் மிகப்பெரியதாக நீளும். நமக்கு ஆக்சிஜன், மழை தருவதிலிருந்து கரியமில வாயுவை கிரஹித்துக்கொள்வது வரை எவ்வளவோ நன்மைகள்.)

பேருந்து நிறுத்தமும் கட்டிடங்களும் தேவைதான். நான் இல்லை என்று சொல்ல வில்லை. நம் நாட்டில் டெக்னாலஜி டெவலப்மெண்ட் என்று வெறும் நிழற்குடைகளைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, மரங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது மனித மனங்களும் இப்படித்தான், ஏதோ ஒரு இயந்திரம் தயாரிக்கும் பொருள் போல ஆகிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள். 50 வருசத்துக்கு முன்னால இப்படி எல்லாம் இல்லையா என்று கேட்காதீர்கள். அப்போது குற்றம் செய்பவர்களை விரல் விட்டு எண்ண வேண்டியிருந்தது. இப்போது குற்றம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஒருவன் வேலையை முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை விட நல்ல நூல்களை படித்தால் அவன் மனதில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கும் தெரியுமா?

அதெல்லாம் சரி...நல்ல புத்தகங்கள் எங்கே வருகிறது என்றும் நீங்கள் கேட்கலாம். நிறைய எழுத்துக்களில் நேர்மை இருப்பதில்லை என்பதும் உண்மைதான். நிறைய படிக்கும்போது சரடு விட்டு மக்களை முட்டாளாக்குபவர்களையும் அந்த மாதிரியான எழுத்துக்களையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி புரிந்து கொண்டுவிட்ட மக்கள் தொகை அதிகரித்தால் யாருக்கெல்லாம் ஆபத்து வருமோ அவர்கள் என் மீது எதாவது பொய்ப்புகார் கொடுக்க முயற்சிக்கலாம்.

.............அதனால இத்தோட இந்த பதிவை நிறுத்திக்கிறேன்.

புதன், 12 டிசம்பர், 2012

விஸ்வரூபம் - கமலின் வியாபார உத்தி சரியா?


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவு வீடுகளில் தொ(ல்)லைக்காட்சிகளும் கிடையாது. டிவிடி பிளேயரும் கிடையாது. மக்களுக்கு பொழுது போக்கு என்றால் பெரும்பாலும் சினிமா தியேட்டராகத்தான் இருந்தது. அதை விட முக்கியமான விசயம், அதிகாலையில் இருந்து இரவு வரை மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் போக்கு அப்போது இந்த அளவுக்கு இல்லை.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். வேலை செய்யும் இடம், பணி செய்யும் இடத்திற்கும் குடியிருக்கும் இடத்திற்கும் உள்ள தூரம் போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஆற அமர தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அளவுக்கு நேரம் ஒதுங்குவது இல்லை.

பெரும்பாலும் காதலர்களையும் மாணவர் உலகத்தை மட்டுமே தியேட்டர்கள் நம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தனது படத்தை பார்க்கும் நபர்களிடம் ஓரளவுக்காவது சிந்தாமல் சிதறாமல் பணத்தை வசூல் செய்ய வேண்டுமே என்ற நோக்கத்தில்தான் விஸ்வரூபம் படத்தை தொலைக்காட்சியிலும் ரிலீஸ் செய்ய கமல் முடிவு செய்துள்ளார்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதனால் நன்மை, தீமை கலந்துதான் இருக்கும். அதில் உள்ள தீமைகளின் பாதிப்பை எந்த அளவுக்கு குறைக்க வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அந்த முறை ஒத்துவராது என்று மறுத்துவிடுவது பிற்காலத்தில் கிடைக்கும் நன்மைகளையும் புறந்தள்ளியதற்கு சமமாகும்.

நான்குவழிச்சாலைகளை அமைத்துவிட்டு டோல் கேட் அமைத்து வசூலிப்பவர்களிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, சுங்கம் வசூலிக்கும் இடத்தில் அவர்கள் அனுமதி இன்றி ஒரு சைக்கிள் கூட கடந்து செல்ல முடியாத அளவுக்கு கட்டமைப்பு இருக்கும். அதாவது அந்த சாலையில் செல்பவர்களிடம் சிந்தாமல் சிதறாமல் பணம் வசூலிக்கும் முறையை அப்படியே படம் பார்ப்பவர்களிடம் செயல்படுத்த முடியாது. ஆனால் பல தியேட்டர்களில் இருக்கும் பகல் கொள்ளை கட்டணம் ( பார்க்கிங் முதல் கேண்டீன் வரை), நேரமின்மை போன்ற காரணங்களால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வீட்டிலேயே அந்த படத்தை பார்த்துவிடுகிறார்கள். அவர்களிடம் ஓரளவாவது கட்டணம் பெற்று படம் பார்க்க வைப்பதை வருங்காலத்தில் முறைப்படுத்தி செய்தால்தான் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்.

பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஒரு சில சிரமங்களை அனுபவித்தாலும் அவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. ஆனால் நல்ல கதையுடன் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து 10 தியேட்டர் கூட கிடைக்காமல் அதில் 20 காட்சிகள் திரையிடுவதற்குள் அடுத்த படத்திற்காக தூக்கப்பட்டுவிடும். படம் பார்க்கலாம் என்று நினைத்து தியேட்டருக்கு சாமானிய ரசிகன் கிளம்பும் வரை படம் காத்திருப்பதில்லை. அதற்கெல்லாம் டிவியில் திரையிட்டு ரசிகர்களிடம் நேரடியாக வசூலிக்கும் முறை ஓரளவாவது தீர்வு தரும் என்று நினைக்கிறேன்.

16 ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரில் பணியாற்றிய அனுபவத்தில் என் மனதில் தோன்றிய சில விசயங்கள்:

1. அப்போதெல்லாம் எந்த படம் திரையிடப்பட்டாலும் சுமாரான படங்கள் கூட 10 நாளைக் கடந்துவிடும். தோல்வி அடைந்த படங்கள் கூட 14 நாட்கள் ஓடி தியேட்டர்களுக்கு கொஞ்சமாவது லாபம் சம்பாதித்து கொடுத்துக்கொண்டிருந்தன.

2. இதில் நான் கவனித்த இன்னொரு விசயம், மூன்று வாரங்கள் வரை படம் ஓடும்போது, கடைத்தெரு, மார்க்கெட், சுமைதூக்கும் தொழிலாளர்கள் போன்றவர்கள் திரும்ப திரும்ப இரவுக்காட்சிகளுக்கு வருவதை பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு பாடல்கள், சில நகைச்சுவைக்காட்சிகளுக்காக இதுபோன்ற ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்கள். இப்போது அதற்கெல்லாம் வேலையில்லை. ஏனென்றால் இசையருவி, சிரிப்பொலி போன்ற சேனல்களும், உள்ளூர் சேனல்களும் பாடல்கள், நகைச்சுவையை மக்களுக்கு கொடுக்கும் வேலையை பார்த்துக்கொள்கின்றன.

3. அப்படி ரிப்பீட் ஆடியன்ஸ் வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம், கட்டணம். அப்போது எட்டு ரூபாய், பத்து ரூபாய், அதிகபட்சம் 15 ரூபாய் என்றுதான் கட்டணம் இருந்தது. ஆனால் சிறு நகரங்களிலேயே இப்போது குறைந்தபட்சம் 60 ரூபாய். படம் ரிலீசாகும் நாட்களில் 100 முதல் 150 ரூபாய் வரை. கட்டண உயர்வைப் போலவே தியேட்டர்களில் மூட்டைப்பூச்சி, கொசுக்கடி என்று ரசிகர்களை இம்சைப்படுத்தும் விசயங்களும் அதிகரித்துவிட்டன. (கொசுக்கடியே தேவலாம் என்று நினைக்கும் அளவுக்கு சில படங்கள் இருக்கும்.அதைப் பற்றி பிறகு பேசுவோம்)

4. இப்போதும் 30 ரூபாய் என்ற அளவில் கட்டணம் இருந்தால் சாதாரண படங்களுக்கு கூட கூட்டம் வர வாய்ப்பு உண்டு. அதெல்லாம் வர மாட்டாங்க. எப்படி இருந்தாலும் வீட்டில் டிவிடி போட்டுதான் பார்ப்பாங்க என்று சிலர் சொல்லக்கூடும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திருட்டு டிவிடி விற்கும் இடத்தில் ஒரிஜினல் டிவிடியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை செய்யவில்லை என்றால் நஷ்டம் படம் பார்க்கும் மக்களுக்கு இல்லை.

5. திருட்டு டிவிடியை சுத்தமாக ஒழித்து விட்டாலும், அதனால் தியேட்டருக்கு கூட்டம் திருவிழா போல் வந்து விடுமா என்று கேட்டால் அதற்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் மக்களின் சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, குடிநீர் போல் சினிமா இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை எல்லாம் இல்லை.

6. டிவிடி கிடைக்கவில்லை என்றால் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று (என்ன, 2 மணி நேரப்படம் விளம்பரங்களுடன் 5 மணி நேரம் ஒளிபரப்பாகும்) மற்ற வேலைகளைப் பார்க்க போய்விடுவார்கள். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வேலை முடித்து வந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவுக்கு மக்களின் வேலைநேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை.

7. இன்னொரு காரணம், பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை, கதையில் லாஜிக் இல்லை என்று ஏகப்பட்ட இல்லைகள் சொன்னாலும் அப்போதைய படங்களை இப்போது பார்த்தாலும் படம் முடியும் போது ஒரு மனநிறைவு, படம் பார்த்து முடித்த சந்தோசம் கிடைக்கும். ஆனால் இன்றைய படங்களைப் பார்க்கும்போது இவையயல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையும் தொலைக்காட்சியில் சற்றே பழைய படங்களைப் பார்க்கும் போது உணர்வார்கள்.

8. அவ்வளவு ஏன், என்னுடைய மன நிலையை சொல்லட்டுமா? சேது, நந்தா, பிதாமகன், காசி, காதல் இது போன்று முடிவுகள் சோகமாக உள்ள படங்கள் எவ்வளவுதான் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தாலும் தொலைக்காட்சிகளில் மீண்டும் பார்க்க நேரும்போது, நடுவிலேயே வேறு சேனல்களுக்கு மாறிவிடுகிறேன். காரணம், வாழ்க்கையில்தான் இவ்வளவு சிரமப்படுகிறோம், படத்தைப்பார்த்தும் மனம் கலங்க வேண்டுமா என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு.

9. படத்தை படமாத்தான் பார்க்கணும். பெண்கள் மெகாசீரியல்களைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல் நீயும் படத்தைப் பார்த்து அழுதால் அதற்கு நாங்களா பொறுப்பு என்று சிலர் கேட்கக்கூடும். நான் சொல்ல வந்த விசயம் அது இல்லை. இது போன்ற படங்கள் நல்ல படங்கள்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தப் படங்களும் ரசிக்கத்தக்கவைதான். ஆனால் சாமானிய ரசிகன், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து விட்டு சற்று நேரம் இளைப்பாறலாம் என்று படம் பார்க்க வந்தால் இது போன்ற படங்கள் மன நிறைவை அளிக்காது. அவர்களுக்கு இரவு வாட்ச்மேன் தூக்கம் வராமல் இருக்க டீ குடித்து தூக்கத்தைப் போக்கி உற்சாகப்படுத்திக்கொள்வது போல் நிமிர்ந்து உட்காரச்செய்யும் படங்களும் தேவை என்றுதான் சொல்கிறேன்.

10. இப்போதும் இப்படி மசாலா படங்கள் வந்தாலும், ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசி காதுகளை பஞ்சராக்கி அது போன்ற படங்களையும் பிடிக்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

11. முன்பு பிலிம் சுருள் மூலம் தியேட்டரில் படம் திரையிடும்போது, ஆப்ரேட்டர் பணி செய்யும் முறையை வைத்தே படத்தின் தன்மையை கணித்துவிடலாம். ஒரு படம் என்பது 2000 அடி நீளம் உள்ள பிலிம் சுருள் கொண்ட ஏழு பகுதி அல்லது எட்டு பகுதியாக வரும். இடைவேளைக்கு முன்பு நாலு சுருள். பிறகு மூன்று அல்லது நான்கு.

18 முதல் 22 நிமிடங்கள் வரை ஒரு சுருள் ஓடும். ஒரு புரொஜக்டரில் 20 நிமிடம் ஓடி முடிந்த உடன் அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்த ஆப்ரேட்டர் ஓடி முடிந்த பிலிம் சுருளை ரீவைண்ட் செய்வது, மூன்றாவது சுருளை அடுத்த புரொஜக்டரில் பொருத்தி, கார்பனை சரிபார்ப்பது போன்ற பணிகளை 4 முதல் ஆறு நிமிடங்களுக்குள் செய்து விட்டு அவரும் படம் பார்த்துக்கொண்டே கார்பனை நெருக்கி சரியாக எரியூட்டினால் படம் ஆப்ரேட்டருக்கு பிடித்து விட்டது என்று பொருள். எல்லா நாளும் அப்படி பார்க்க வில்லை என்றாலும் குறைந்தது 4 நாட்களாவது இப்படி இருக்க வேண்டும். (பல தியேட்டர்களில் பிலிமை ரீவைண்ட் செய்யவும், கார்பனை ஒழுங்காக எரிக்கவும் உதவியாளர்கள் இருப்பார்கள். நான் சொல்வது ஆப்ரேட்டர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்யும் தியேட்டர்களைப் பற்றி)

அதைவிட்டுவிட்டு ஒரு சுருள் (2 ரீல் ) படம் ஓடும் 20 நிமிடங்களும் ஏற்கனவே ஓடிய பிலிமை ரீவைண்ட் செய்தல், அடுத்து ஓட வேண்டிய பிலிமை மற்றொரு புரொஜக்டரில் பொருத்துதல் ஆகிய வேலைகளை 10 முதல் 13 நிமிடம் வரை செய்து விட்டு படத்தை பார்க்காமல் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு கார்பனை நெருக்கிக்கொண்டிருந்தால் படம் அவர் மனதைக் கவரவில்லை என்று சொல்லலாம்.

13. அந்த காலகட்டத்தில் நான் பார்த்த பல படங்களில் இப்போதும் தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவது என்றால் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, முத்து, அவ்வை சண்முகி, ஜென்டில்மேன், என்று பல படங்களை சொல்லலாம். இவற்றில் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் உள்ள படங்களைத்தான் நாம் விரும்புவோம். எல்லா நேரங்களிலும் அழ நாம் விரும்புவதில்லை. இந்த உண்மையை படமெடுப்பவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. அதற்காக மொக்கை ஜோக்குகளை வைத்து ரம்பம் போட்டுடாதீங்கப்பா.

14. விஸ்வரூபம் படத்தை கமல் தொலைக்காட்சியில் முதலில் ரிலீஸ் செய்வது சரியா தவறான்னு பதிவுக்கு தலைப்பு வெச்சுட்டு என்னென்னமோ எழுதிட்டு போறேன்னு எனக்கும் புரியுது.

என்னைப் பொறுத்தவரை கமல் மட்டுமில்லை. படம் எடுக்கும் எல்லோருமே மக்கள் தியேட்டர்களில் மட்டுமே வந்து (சிலர் பொருளாதார நிலைக்கு ஒரு வாரத்து சம்பளமா இருக்கும்) பணத்தை கொட்டி அழுதுட்டு படம் பார்க்கணும்னு நினைக்காம, அவர்கள் இடத்துக்கே டோர் டெலிவரி மாதிரி ஏதாவது செஞ்சு காசு வசூல் பண்றதுக்கு நேர்த்தியான வழியை முயற்சிக்கணும். இதை சொல்ல வந்துதான் மெகாசீரியல் மாதிரி என்னென்னவோ எழுதுறேன்.

என்ன பண்றது. பல நேரங்கள்ல படம் எடுக்குறவங்களும் இப்படித்தான். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லாம, ஹீரோவைப் பத்தி பில்ட் அப் கொடுக்கவும், மிட்நைட் மசாலாவுல போடுறதுக்காக எடுத்து வச்ச பாட்டை செருகுறதுக்கும் ஏத்த மாதிரி கதையை சின்னாபின்னமாக்கி நான் இப்ப எழுதுன பதிவு மாதிரி ஆடியன்சுக்கு எதையும் புரிய விடாம பண்ணிடுறாங்க.

வியாழன், 6 டிசம்பர், 2012

நண்பன்





12-12-2012 தேதியிட்ட தேவி வார இதழில் பிரசுரமான சிறுகதை



1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்:



திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.



"டேய்...வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா...­ஷங்கர் டைரக்சன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா வேணும்...தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா...'' என்றான் வடிவேல்.



"ச்சே...நம்ம ஊர்ல ஏ/சி தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன். தஞ்சாவூர் விஜயா ஏ/சி, குடந்தை விஜயா ஏ/சி, மாயவரம் விஜயான்னு போட்டிருக்கு. மூணு ஊர்லயும் ஒரே தியேட்டரா பார்த்து படத்தை குடுத்துருக்காங்க.''என்ற மற்றொரு சிறுவனான பிரசாத்தின் பேச்சில் வியப்பு தெரிந்தது.



"அது வேற ஒண்ணும் இல்லடா...இந்த விஜயா தியேட்டர் எல்லாம் படத்தை திருச்சி ஏரியாவுல டிஸ்ட்ரிபியூட் பண்ற முருகன் பிக்சர்ஸ் காரங்களோடதுதான் . அதுனாலதான் அவங்க தியேட்டர்லயே ரிலீஸ் பண்றாங்க.''



"இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?'' என்று பிரசாத் கேட்கவும்,



வடிவேல் முகம் நிறைய பெருமையுடன், ""சோழா தியேட்டர்ல ஆப்ரேட்டரா இருக்குறவர் என் பிரண்டு வீட்டு மாடியிலதான் குடியிருக்கார். அவருதான் இந்த செய்தியெல்லாம் சொல்லுவாரு. ம்ப்ச். என்ன...இந்தியன் படம் தைலம்மையில வராம சோழா தியேட்டர்ல வந்துருந்தா நான் க்யூல நின்னு டிக்கட் வாங்காம அவரோடயே நேரே உள்ள போயி....'' என்று பேசி முடிக்கும் முன்பே முதுகில் அடி விழுந்தது.



வடிவேல் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி கடைக்குள் வீசிவிட்டு அவன் முதுகில் கிருஷ்ணமூர்த்தி மத்தளம் வாசித்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயராமன், பதறிப்போய் சைக்கிளை விட்டு இறங்கினார். வடிவேலுடன்  நின்றுகொண்டிருந்த பிரசாத் திரும்பிப்பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தான்.



"அப்பா...அடிக்காதீங்கப்பா...பேப்பர் படிச்சா என்னப்பா தப்பு...'' என்று அலறியதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணமூர்த்தி தன் மகனை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்.



"யோவ் கிருஷ்ணமூர்த்தி, அவன் உடம்பு என்ன இரும்பா...இந்த அடி குடுத்து புரட்டி எடுக்குற?'' என்று ஜெயராமன் அடிவாங்கிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஆதரவாக பேசவும், அவன் வந்து இவர் பின்னால் ஒளிந்தான்.



"உனக்கு விஷ­யம் தெரியாது கிருஷ்ணமூர்த்தி. ஒரு வீட்டுல எல்லா புள்ளையும் ஒரே மாதிரி இருக்காதுன்றது சரியாப்போச்சு. இவனுக்கு மூத்த பிள்ளைங்கள்ல  ஒருத்தன் பதினொன்னாவது படிக்கிறான். இன்னொருத்தன் ஒன்பதாவது படிக்கிறான். அவனுங்க பாடப்புத்தகத்தை தவிர வேற எதையும் புரட்டிக்கூட பார்க்க மாட்டானுங்க. ஆனா இவன் எந்த நேரத்துல பொறந்தான்னே தெரியலை.



யார் வீட்டுல கதைப்புத்தகத்தைப் பார்த்தாலும் எடுத்து வெச்சுகிட்டு உட்கார்ந்துடுறான். இப்ப புதுசா பேப்பர் படிக்க எங்க போய் பழகுனான்னு தெரியலை. ஏழாவது படிக்கிறதுக்குள்ள எந்த தியேட்டர்ல என்ன படம்...அந்த தியேட்டருக்கு யார் முதலாளின்னு ஆராய்ச்சி பண்றது உருப்புடுறதுக்கா...



அப்புறம் என்னை மாதிரி ஏதாவது துணிக்கடையிலேயோ, மளிகைக்கடையிலேயோ கூலி வேலை பார்க்குறதுலேயே ஆயுசு போயிடும். இதை இவனுக்கு எப்படி புரிய வெக்கிறது?'' என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.



"சின்ன பையனுக்கு என்னய்யா தெரியும்...கொஞ்ச நாளானா சரியாயிடுவான். பள்ளிக்கூடத்துல சரியா படிக்காம இப்படி கண்டதையும் படிச்சா தப்பு. ஆனா கிளாஸ்லேயே நானூறு மார்க் எடுக்குற  ஒரே ஆள் உன் புள்ளை தான்னு நீயே சொல்லியிருக்க.''என்று ஆறுதலாக பேசினார் ஜெயராமன்.



"பாடப்புத்தகத்தை ஒழுங்கா படிச்சா நானூத்தம்பதுக்கு மேல எடுக்கலாம்னுதானே இந்த கருமத்தையயல்லாம் படிக்காதேன்னு சொல்றேன்.''



அவ்வளவு அடி வாங்கியும் வடிவேல், "படிச்சா என்ன தப்பு' என்றுதான் சொன்னானே ஒழிய இனிமே இப்படி செய்யமாட்டேன் என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வரவே இல்லை.



இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உணர்ந்த ஜெயராமன்,  "ரொம்ப அடிக்காதய்யா...பயந்துடப்போறான்'' என்று கிருஷ்ணமூர்த்தியை சமாதானப்படுத்த பார்த்தார்.



"எது...இதுவா பயப்படப்போகுது'' என்று சொன்னவாறே வடிவேலை எட்டி உதைக்க கிருஷ்ணமூர்த்தி முயற்சித்தபோது, சட்டென்று வடிவேல் நகர்ந்துவிட்டான். இதை எதிர்பார்க்காமல் கீழே விழப்போன கிருஷ்ணமூர்த்தியை ஜெயராமன் தாங்கிப்பிடித்தார்.



"எதுவா இருந்தாலும் வீட்டுல வெச்சுக்க...இப்போ உன் மானம்தான் போகுது. கெளம்புப்பா...'' என்று ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியை ஒருவழியாக புறப்பட வைத்தார்.



"வீட்டுல, வெளியில, கடையிலன்னு என்கிட்ட இவன் எங்கதான் உதை வாங்கல...ஆனாலும் திருந்த மாட்டெங்குறான். மூணுல ஒண்ணை கோயிலுக்கு நேர்ந்து விட்டதா நினைச்சுக்க வேண்டியதுதான். எல்லாம் தலைவிதி. அப்புடி இந்த பேப்பர்ல என்னதான் இருக்கு? ஒண்ணு கொலையைப் பத்தி போடுறாங்க. இல்ல கொள்ளை. அதை விட்டா சினிமா. இதைப் படிச்சுகிட்டே இருந்தா சோறு போடுமா? நான் படிக்கும்போதும் சரி. இப்பவும் சரி. பேப்பரை பார்த்தாலே பத்திகிட்டு வருது.'' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி சென்றுவிட்டார்.



ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் ஜெயராமன் சில காலம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு அருகில் குடியிருந்தபோது பழக்கம்.



"நாளைக்கே உடம்பு முடியாம படுத்துட்டா அந்த ஜவுளிக்கடையில இருந்து மொத்தமா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இவனுங்களை கடன் வாங்கி பெரிய படிப்பு வைக்க முடியுமா? நல்ல மார்க் எடுத்துட்டா பணம் குறைவா இருக்குற காலேஜ்ல சேர்த்துடலாம். மூத்தவனுங்க ரெண்டு பேரும் என் பேச்சை கேட்டு ஒழுங்கா படிக்கிறாங்க. சின்னதுதான் தறுதலையா நிக்கிது' என்று அடிக்கடி ஜெயராமனிடம் கிருஷ்ணமூர்த்தி புலம்புவார்.



"வடிவேலு நல்லாத்தான் படிக்கிறான். அது போதாதுன்னு அவனை கரிச்சு கொட்டிகிட்டே இருக்காரு...' என்று கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கனகவள்ளி  மகனை விட்டுக்கொடுக்காமல் பேசுவாள்.



ஆனால் யாருடைய சமாதானமும் கிருஷ்ணமூர்த்தியிடம் எடுபடாது.



+++



ஜெயராமன் பணிபுரிந்த நிறுவன முதலாளிக்கு காரைக்குடியில் ஒரு கிளை இருந்தது. அங்கே பொறுப்பான ஆள் தேவைப்படவே, ஜெயராமன் காரைக்குடிக்கு ஜாகையை மாற்றினார். ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.



வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு, மருமகளுக்கு அவரை தங்களுடன் வைத்திருக்க விருப்பமில்லாமல் போய்விடவே, ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தாள். அவர் மகனும் தன் மனைவியை கண்டிக்கவே இல்லை.



இவருக்குதான் ரோ­ம் அதிகம் ஆயிற்றே. மனைவியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு வந்துவிட்டார்.



+++



2011ஆம் ஆண்டு மார்கழி மாதம் அதிகாலையில் பனிபொழியும் நேரம்:



டீக்கடை, சலூன் என்று எங்காவது வடிவேலு பேப்பர் படிப்பதை பார்த்தால் விரட்டி விரட்டி அடித்து துரத்திய கிருஷ்ணமூர்த்தியை 16 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த நிலையில் ஜெயராமன் எதிர்பார்க்கவே இல்லை.



திருவாரூர் பெரிய கோவிலில் மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி பூஜை முடிந்ததும் தியாகராஜர் சன்னதியை விட்டு பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உள் பிரகார வாசலில் வழக்கம்போல் வெண்பொங்கல் பிரசாதம் வினியோகம் நடந்துகொண்டிருந்தது. ஜெயராமன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பிரசாதத்தை வாங்கிக்கொண்டார். வெறும் கையில் பொங்கலை வாங்கிய சிலர்  சூடு தாங்காத காரணத்தால் உள்ளங்கையில் அந்த பொங்கலை பந்து போல் உருட்டி சமாளித்துக்கொண்டிருந்தனர்.



இதே மாதிரி நடக்கும்னு எதிர்பார்த்துதானே நான் வீட்டுல இருந்து பிளாஸ்டிக் பை எடுத்துட்டு வந்தேன் என்று நினைத்தபடி இரண்டாம்பிரகாரத்தில் வலம் வந்த ஜெயராமனின் முகத்தில் சில்லென்று ஊசி குத்துவது போல் பனிச்சாரல் அடித்தது. நான்கு அடி தூரத்துக்கு அப்பால் வந்தவர்களின் முகம் தெரியவில்லை. காதுக்குள் காற்று நுழையாதவாறு மப்ளரை சுற்றியிருந்தாலும் அதை மீறி  குளிர் தாக்கியதால் மீதமிருந்த ஒன்றிரண்டு பற்கள் மோதிக்கொண்டன.



கொஞ்ச நேரம் பேப்பர் படிச்சுட்டு கிளம்பினா ஓரளவுக்கு பனிமூட்டம் விலகிடும் என்று நினைத்தவாறே கோயில் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள நூலக அறைக்குள் நுழைந்த ஜெயராமன் அங்கே அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் வியப்பில் வாய்பிளந்துவிட்டார். "அய்யா...கிருஷ்ணமூர்த்தி...என்னைத்தெரியுதா?''என்று கேட்டவாறு அருகில் வந்த ஜெயராமனை அவர் ஏறிட்டு பார்த்தார்.



"அடடே...என்னப்பா ஜெயராமா...ரொம்ப வரு­மா ஆளையே காணோம்...நான் தினமும் கோயிலுக்கு வர்றேன் உன்னைப் பார்க்கவே இல்லையே...''என்று கிருஷ்ணமூர்த்தியின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.



அருகில் இருந்து நாளிதழ்கள் படித்துக்கொண்டிருந்த மற்ற வாசகர்கள் சட்டென்று இவர்களைப் பார்த்தார்கள்.



"சாரிங்க...''என்று கிருஷ்ணமூர்த்தி அந்த நூலகத்திலிருந்தவர்களைப் பார்த்து சொல்லி விட்டு, கமலாம்பாள் சன்னதிக்கு செல்லும் வழியில் கோயில் அலுவலகத்தின் பக்கவாட்டில் இருக்கை போன்ற அமைப்பில் வசதியாக ஜெயராமனுடன் அமர்ந்தார். இப்போதும் பனி மெல்லிய சாரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது.



"என்ன ஜெயராமா...காரைக்குடிக்கு போனதுக்கு அப்புறம் ரெண்டு வரு­ம் கடிதம்  போட்ட. அப்புறம் சுத்தமா தொடர்பே இல்லையே...என்னாச்சு.'' என்ற கிருஷ்ணமூர்த்தியின் குரலில் பழைய சிநேகிதனை மீண்டும் பார்த்த ஆர்வம் தெரிந்தது.



"ம்ப்ச்...அதை ஏம்பா கேட்குற...மருமகளுக்கு நாங்க இருக்குறது புடிக்கலை போலிருக்கு. நடந்தா தப்பு. உட்கார்ந்தா தப்புன்னு ஒரே இம்சை. டாய்லட்ல தண்ணி ஊத்தலைன்னு மகன் கிட்ட புகார் செய்யுறா. இதுக்கு மேல அவமானம் தேவையான்னு இங்கேயே வீடு பார்த்து பொண்டாட்டியோட வந்துட்டேன்.



ஆர்டிஆர் கம்பெனியில வேலைக்கும் சேர்ந்துட்டேன். மார்கழி மாசத்துல ஒரு நாள் காலையில மரகதலிங்க தரிசனம் பார்க்கணும்னு ஆசை. வந்துட்டேன். நாளைக்கெல்லாம் எழுந்து வர முடியாது போலிருக்கு. ஏழு மணிக்கு வேலை முடிஞ்சிடும். வீடு எங்க அதே இடம்தானே. முடிஞ்சா வர்றேன். இனி எங்க உயிர் போறது இந்த ஊர்லதானே'' என்று பேசிய ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.



"பொழுது விடிஞ்ச நேரத்துல இது என்ன பேச்சு. நாங்க இருந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டுட்டு கீழே நாங்க வந்தா போனா தங்குறதுக்கு வச்சிருக்கோம். இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருப்பேன். வர்றதுன்னா, போன் பண்ணிட்டு வா.''என்று ஒரு துண்டு சீட்டில் நம்பரை எழுதிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.



"நீங்களும் இந்த ஊர்ல இல்லையா. அது கெட்டுச்சு போ. எங்க சென்னையா?''



"எப்படிப்பா கரெக்டா சொல்ற?''



"நம்ம ஊர்ல இருந்து சென்னைக்கு போனது போக மிச்சம்தானே வேற ஊர்களுக்கு போறது. அது சரி...நீ மட்டும்தான் வந்துருக்கியா. மனைவி, பிள்ளைங்க எல்லாம்?''



"மனைவி தவறி ஆறு வரு­ம் ஆயிடுச்சு. பையன் மனைவியோட பத்து நாள் டூர் போயிருக்கான். நான் இங்க வந்துட்டேன்.''



"அடடா...கனகவள்ளி இறந்த வி­ஷயம் எனக்கு தெரியலையே. பத்து நாள் டூர் போற புள்ள உன் ஒரு ஆளை இப்படியா மார்கழி மாச குளிர்ல தவிக்க விட்டுட்டு போறது? அது சரி...உனக்கு மூணு புள்ளைங்களாச்சே. ஒருத்தன் டூர் போயிருக்கான்னா மத்தவங்க? மூணு பேரும் நல்லாத்தானே இருக்காங்க. சின்னவன் உருப்படியா எதாவது வேலைக்கு போறானா?''



"அது பெரிய கதை. மூணு பசங்களுமே இஞ்சினியரிங் தான் படிச்சாங்க. பெரிய பசங்க ரெண்டுபேருமே குடும்பத்தோட அமெரிக்காவுல இருக்காங்க. சின்னவனும் சென்னை டிசிஎஸ் கம்பெனியில  மாசம் நாப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்குறான். நாலு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணமாச்சு. அவன் மனைவி வேலை பார்க்குறதும் அதே கம்பெனிதான். புதுசா கல்யாணம் ஆனவங்க. இதுல நான் வேற எக்ஸ்ட்ரா லக்கேஜா கூட போகணுமா?



ஒரு குழந்தை பிறக்குறதுக்குள்ள இப்படி டூர் போய் ஜாலியா இருந்தாதான். அப்புறம் குழந்தை, பணிச்சுமைன்னு ஆயிட்டா எங்கேயும் போக முடியாது. அதே வீடு, அதே கம்பெனி, அதே முகங்கள், ஏன் டிவியில கூட அதே மெகா சீரியல்னு இருந்தா குடும்பத்துக்குள்ள ஏன் உரசல் வராது?



ஆனா, முதல்ல நீங்க ஆசைப்பட்ட கோயில்கள் சிலதுக்கு போயிட்டு வந்துடலாம்னு என் புள்ளையும் மருமகளும் கூப்பிட்டாங்க. நான்தான், இப்ப நீங்க விருப்பப்பட்ட இடத்துக்கு போங்க. பேரனோ, பேத்தியோ பிறந்த பிறகு நானும் வர்றேன்னு சொல்லிட்டேன்.



சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத...நாம தூக்கி வளர்த்த புள்ள நம்மள கண்டிச்சுட்டான்னு கோபப்படுறோமே...அறுபது வயசைத் தாண்டி நமக்கே இவ்வளவு ஈகோ இருக்குன்னா முப்பது வயசுல இருக்குற புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு இருக்கும்.



நாம பெத்து வளர்த்த புள்ளை நம்ம நடவடிக்கையை குத்தம் சொல்றானேன்னு கோபப்படுறோம். அதுவே நெருங்கிய நண்பன் சொன்னா தப்பா எடுத்துப்போமா? அந்த மாதிரி புள்ளையையும் நண்பனா நினைச்சா ஏன் கோபம் வரப்போகுது?'' என்று பேசிய கிருஷ்ணமூர்த்தியின் பேச்சில் மட்டுமல்ல. முகத்திலும் அமைதி தெரிந்தது.



"நீ சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன். அவன் வயசைத் தாண்டிதானே நாமளும் வந்துருக்கோம். நமக்கு தெரியாத நாகரிகமா?'' என்ற ஜெயராமனின் குரலில் லேசான காரம்.








"இந்த ஈகோதான்யா நிறைய குடும்பத்தை குலைச்சுப் போட்டுடுது. நம்ம காலத்துல பொண்ணுங்களுக்கு வேற வருமானம் கிடையாது. வேற வழியில்லாம புரு­னையும், மாமனார் மாமியாரையும் அவங்க இம்சைகளோட சகிச்சுகிட்டு இருந்தாங்க. இப்ப காலம் மாறிப்போச்சு.



புரு­னோட அஞ்சு நிமிஷ­ம் தனியா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்குறதைக் கூட குற்றம் சொல்ற மாமனார், மாமியார் அதிகம். அவங்க மனசு விட்டு பேச சந்தர்ப்பம் கிடைச்சா, மனசுல இருக்குற தேடல் குறைஞ்சுடும். எதையும் எரிச்சலோட பார்க்குற மனோபாவம் மாறிடும்.



இந்த மாதிரி சின்ன சின்ன விஷ­யங்கள்ல கிடைக்கிற சின்னப்புள்ளைத்தனமான ஏமாற்றம்தான் குடும்பத்துல பெரிய பிரச்சனையை உருவாக்குது. புள்ளை தன் பொண்டாட்டியோட சினிமாவுகோ கோயிலுக்கோ கிளம்பி போனதுக்கப்புறம், அக்கம்பக்கத்து வீடுகள்ல, நான் இங்க ஒருத்தி சமையலறையில கிடந்து அல்லாடிகிட்டு இருக்கேன். அவ எதைப்பத்தியும் கவலைப்படாம புருஷ­னோட ஜோடி போட்டு கிளம்பிட்டான்னு பேசுற மாமியார்கள் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு தெரியுமா?



இந்த வி­ஷயம் இன்னும் பல மோசமான வார்த்தைகளோட மகன் மருமகள் காதுக்கு போகும்போது விரிசல் ஆரம்பமாகுது.



ஜோடியா சந்தோஷ­மா இருக்கணும்னுதானே கல்யாணம் பண்ணி வெச்சோம். இப்ப பெரியவங்களே அதைப்பார்த்து எரிச்சலடைஞ்சா என்ன அர்த்தம்.'' என்ற கிருஷ்ணமூர்த்தி ஜெயராமனைப் பார்த்தார்.



"வெளில போய்ட்டு நல்லா சுத்திப்பார்த்துட்டு வாங்கன்னு அனுப்புனா மட்டும் மாமனார் மாமியார் மேல மருமகளுக்கு பாசம் வந்துடுமா?''என்று ஜெயராமன் எரிச்சலுடன் கேட்டார்.



"பாசம் வருதோ இல்லையோ, மாமனார் மாமியார் நம்மளுக்கு இடைஞ்சலா இருக்காங்கன்னு ஒரு எண்ணம் வராது. பையன் ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்துட்டான்னா, டிபன் நான் பண்ணி வைக்கிறேன். ரெண்டு பேரும் வெளில போயிட்டு வாங்கன்னு சொல்லிப்பாருங்க. அது புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு சந்தோஷ­த்தை கொடுக்கும் தெரியுமா?
























ரெண்டு தடவை அப்படி நடந்தா, மூணாவது தடவை கிளம்பும்போது உங்களுக்கும் சேர்த்து டிபன் செஞ்சு வெச்சுட்டு கிளம்புவா. இல்லன்னா, நீங்க சிரமப்படவேண்டாம். "நாங்க ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வந்துடுறோம் அத்தை.' அப்படின்னு சொல்லுவா. தொண்ணூறு சதவீதம் இப்படித்தான் நடக்கும்.



அதை விட்டுட்டு, எங்க காலத்துல அப்படி செஞ்சோம். இப்படி இருந்தோம் அப்படின்னு குறை சொல்லிகிட்டே இருந்தா நம்மளை எப்படா அடிச்சு முதியோர் இல்லத்துக்கு துரத்தலாம்னுதான் யோசிப்பாங்க.



அந்த காலத்துல நடந்து போனாம். ஏதாவது முக்கிய செய்தின்னா தந்தி அடிப்போம். இல்ல டிரங்கால் புக் பண்ணி பேசுவோம். இப்ப அப்படியா? எவ்வளவு வசதிகளை அனுபவிக்கிறோம். அந்த மாதிரி புள்ளைங்க விஷ­யத்துலயும் நம்ம அணுகுமுறையை மாத்திக்கணும்.'' என்று கிருஷ்ணமூர்த்தி தெளிவாகவே பேசினார்.



"அதுசரி...உனக்கு எப்படிய்யா இவ்வளவு பக்குவம் வந்துச்சு? நல்ல மருமக கிடைச்சதுனால இப்படி பேசுறியா? எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும். எனக்கு வந்து வாய்ச்ச மருமக ராட்சசியால்ல இருக்கா.'' ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.



"நான் இந்த மாதிரி பக்குவப்பட காரணமே என் சின்னப் புள்ளைதான். மூத்தவனுங்க ரெண்டுபேரும் படிப்பு படிப்புன்னு இருந்தாங்க. வேலை கிடைச்சதும் அம்மா அப்பாவை வெச்சு பார்த்துக்கணும்னு நினைக்கவே இல்லை.



ஆனா வடிவேல், நீங்க காலம் பூராவும் என் கூடவே இருந்துடுங்கன்னு சொல்லிட்டான். மருமகளும் கல்யாணமாகி வந்த புதுசுல, உங்க அப்பா மூணு புள்ளைங்ககிட்டயும் ஆளுக்கு ஒருமாசம்னு இருந்து சாப்பிடுறதுதானே நியாயம்னு கேட்டா. ஆனா இவன், அப்பா அம்மாவை வெச்சு பார்த்துக்க லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது. ஆயிரக்கணக்கான ஏழைங்களுக்கு அன்னதானம் செய்யுறது, கோவில் உண்டியல்ல லட்ச லட்சமா பணம் போடுறதைக் காட்டிலும் பெத்தவங்களை வெச்சு காப்பாத்துறது உயர்ந்த விஷ­யம்.



அதை செய்ய நமக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன்களுக்கு நன்றி சொல்லணும். அவருக்கு நான் ஒரே புள்ளையா பிறந்ததா நினைச்சு என் கூடவேதான் வெச்சுப்பேன். உன்னால முடியலைன்னா விடு. எங்க அப்பாவை நான் பார்த்துக்குவேன்னு சொன்னான். அதுக்கு  அவன் மனைவி, என் அம்மா அப்பாவை நான் இந்த மாதிரி கூட வெச்சுக்க அனுமதிப்பீங்கிளான்னு கேட்டா.



இதுக்கு என் அனுமதி எதுக்கு. தாராளமா வந்து இருக்கலாம். ஆனா அவங்க சம்மந்தி வீட்டுல போய் தங்குறதான்னு யோசிப்பாங்க. அப்படி நினைச்சா, தனி வீட்டுல இருக்கட்டும். வேணுன்னா தனியா வீடு புடிச்சு கொடுத்து மாசத்துல பாதி நாள் நாம அவங்க கூட போய் தங்குவோம். அப்படின்னு சொன்னான். அவன் மனைவி மறு பேச்சு பேசலை. உங்க குணத்தை இப்பதான் முழுசா புரிஞ்சுகிட்டேன்னு சொல்லி அழுறா.



வடிவேலுக்கு இந்த பக்குவத்தை கொடுத்தது, புத்தகங்கள்தான். பேப்பரை கூட படிக்க கூடாதுன்னு அவனை எத்தனையோ நாள் அடிச்சு துவைச்சிருக்கேன். ஆனா அந்த வாசிப்பு பழக்கம்தான், என்னைய நடுத்தெருவுல நிறுத்தாம அவன் கூட வெச்சு பராமரிக்கிற குணத்தை கொடுத்திருக்கு. ஒருத்தனுக்கு நல்ல புத்தகத்தை விட சிறந்த நண்பன் வேற யாரும் இருக்க முடியாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.



கடைசியா ஒண்ணு சொல்றேன். பெத்தவங்க, நம்ம புள்ளை நம்மளை வெச்சு பராமரிக்கணும்னு நினைச்சா சந்தோஷ­ம். ஆனா ஒவ்வொரு விஷயத்தையும் நம்மளை கேட்டுதான் முடிவெடுத்து நடக்கணும்னு நினைச்சா வருத்தம்தான் மிஞ்சும்.



காலம் மாறிப்போச்சுன்னு பேசிகிட்டு இருந்தா மட்டும் போதாது. நாமளும் பல விஷ­யங்கள்ல நம்மளை மாத்திக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்னு சும்மா மனப்பாடம் செஞ்சு எழுத வெச்சா ஒரு மனு­ஷன் மாறிட மாட்டான். அதை உணர வைக்கணும். என் புள்ளையை புத்தகங்கள் உணர வெச்சிருக்கு.'' என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லி முடித்தபோது, புத்தகங்கள் ஒரு மனுஷ­னை இந்த அளவு பக்குவப்படுத்துமா என்று நினைத்த போது, அவர் மகனும் மருமகளும் அவர் நினைவில் வந்து போனார்கள்.



+++


12-12-12 ஒரு சின்ன சந்தோஷம்-நண்பன்

2012ஆம் ஆண்டு ஜனவரி 12, டிசம்பர் 12 ஆகிய இரண்டு தினங்களும் தனிப்பட்ட முறையில் எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உணர்கிறேன்.

முன்னது விவேகானந்தர் பிறந்த தினம், பின்னது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த தினம் என்று அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் எனக்கு இந்த ஆண்டு ஜனவரி 12 மகிழ்ச்சியையும், டிசம்பர் 12 ஊக்கத்தையும் அளித்தன.

கல்கி வார இதழ் 2011 ஆம் ஆண்டு தீபாவளி தமாக்கா என்று ஒரு போட்டியை நடத்தியது. அதில் கலந்து கொண்டு ஏற்கனவே எங்களுக்கு இருந்த ஒரு பிரச்சனையில் என்னுடைய சைக்கிளும் மறைமுகமாக சிறு பாதிப்பை ஏற்படுத்தியதை கட்டுரையாக எழுதியிருந்தேன். அந்த கட்டுரை பிரசுரத்திற்கு தேர்வு பெற்று புதிய சைக்கிளுக்காக 3500 ரூபாய் பரிசுக்கூப்பன் கிடைத்தது. கட்டுரை பிரசுரமான இதழ் கடைகளில் விற்பனைக்கு வந்த தேதி 14.01.2012. இதில் எங்கள் மனதுக்கு நிம்மதி அளித்த விஷயம் என்னவென்றால் கோவிலில் தனியார் ஆக்கிரமிப்பு குறித்து அந்த கட்டுரையில் எழுதியிருந்தேன். இதழ் விற்பனைக்கு வந்த நாளன்று கோவிலை ஆக்கிரமித்திருந்தவர் அங்கே இல்லாமல் தானாகவே வெளியேறி விட்டார். (இனி சட்டப்படி எதுவும் செய்ய முடியாது என்று நினைத்தாரோ என்னவோ) அவர் ஆக்கிரமிப்பை தானாகவே அகற்றிக்கொண்ட தேதி 12-01-2012.

கட்டுரை பிரசுரமான கல்கி இதழின் அட்டையில் நண்பன் பட ஸ்டில் அச்சாகியிருந்தது. பல காரணங்களால் புதியதாக புனைவுகள் எழுதுவதை நிறுத்தியிருந்த நான், மின்வெட்டு காரணமாக கிடைத்த நேரத்தில் நண்பன் என்ற தலைப்பில் சிறுகதை எழுதியிருந்தேன். கதையை எழுதி 8 மாதங்கள் இருக்கும். இப்போது தீபாவளிக்குப் பிறகு தேவி வார இதழுக்கு அனுப்பி வைத்த கதை 12-12-2012 தேவி வார இதழில் 8 பக்கத்துக்கு பிரசுரமாகியுள்ளது. தமிழ் என்பவர் வெகு அழகாக ஓவியம் வரைந்திருக்கிறார். தேவி ஆசிரியர் குழுவுக்கும், ஓவியருக்கும் நன்றி. எவ்வளவுதான் வலைப்பூவில் நம் இஷ்டத்துக்கு எழுதினாலும் அச்சில் ஏறும் எழுத்துக்கள் நம் மனதுக்கு தரும் ஊக்கம் தனிதான்.

எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதிய "எப்படி கதை எழுதுவது?" என்ற புத்தகத்தில் அவர் முக்கியமாக வலியுறுத்தியிருந்த உத்தி, முதல் பாராவிலேயே கதையை தொடங்கி விடுங்கள் என்பதுதான். நான் அப்படி எழுதிய கதைகள்தான் பெரும்பாலும் பிரசுரமானதுடன் பல பரிசுகளையும் பெற்றுத்தந்திருக்கின்றன.

ஆனால் நான் அனுப்பிய நண்பன் என்ற இந்த கதையில் கிட்டத்தட்ட பத்து பாராக்களை தூக்கிவிட்டு பதினோராவது பாராவில் இருந்துதான் தேவி இதழில் பிரசுரம் செய்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது கதை தொடங்கும் இடத்தில் இருந்து சரியாகத்தான் பிரசுரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. அது தவிர கதைக்கு நடுவிலும் சில வாக்கியங்களை நீக்கியிருக்கிறார்கள். அச்சேறிய சிறுகதைக்கும், நான் அனுப்பிய சிறுகதைக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தேன். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முறைக்கு நாலு முறை நானே தேவையற்றதை நீக்கி மிகவும் சரியான அளவில்தான் அனுப்புவேன். அப்படி ஒன்றிரண்டு கதைகள் பிரசுரமாவதும் நான் அனுப்பியதில் ஒரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும். அப்படியே திருத்தம் செய்யப்படிருந்தாலும் மிக மிக சொற்ப எண்ணிக்கையில்தான் இருக்கும். அந்த பழைய நிலையில் நான் இல்லை.

இவ்வளவுக்கும் நெடுந்தொடர் எதையும் நான் பார்ப்பதில்லை. (மின் வேட்டு காரணமாக தாய்க்குலங்களும் அழுகாச்சி சீரியல்களை பார்க்க முடியாத கதையை தனி மெகா சீரியலாக எடுக்கலாம்.) பிறகு ஏன் கதைக்கு அவசியமில்லாத 10 பாராக்களை அப்படியே வைத்து அனுப்பினேன் என்ற கேள்வி என் மனதை குடைந்தது.

1. வலைப்பூவில் இஷ்டத்துக்கு எழுதுவதன் காரணமாக ஏற்பட்ட அலட்சியம்.

2. முன்பு பேப்பரில் நாலைந்து முறை எழுதி, திருத்தி, மீண்டும் எழுதி நகல் எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பியபோது எடுத்துக்கொண்ட அக்கறையை, கணிணியில் டைப் செய்து அனுப்பும்போது காட்ட முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், கணிணியில் பிழைப்பை பார்க்கவே மின்சாரம் கிடைப்பதில்லை. இதில் எங்கே கதையை வெட்டி, ஒட்டி ட்ரிம் செய்வது?

3. மனதில் நினைப்பதை எல்லாம், வாழ்வில் கிடைத்த அனுபவம் என்று எல்லாவற்றையும் வலிந்து கதையில் திணிக்க நினைத்தால் இதுபோல் ஆகிவிடுகிறது.

எனக்கு முக்கியமாக இந்த மூன்று காரணங்கள்தான் தோன்றின.

நான் வளவளவென்று எழுதிய கதை இங்கே இருக்கிறது. புத்தகத்தில் பிரசுரமான கதை ஸ்கேன் செய்து இமேஜ் பைலாக.

-----------------------------------------------------------------------

நண்பன் - சிறுகதை

1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்:

திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.

"டேய்...வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா...­ஷங்கர் டைரக்சன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா வேணும்...தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா...'' என்றான் வடிவேல்.

"ச்சே...நம்ம ஊர்ல ஏ/சி தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன். தஞ்சாவூர் விஜயா ஏ/சி, குடந்தை விஜயா ஏ/சி, மாயவரம் விஜயான்னு போட்டிருக்கு. மூணு ஊர்லயும் ஒரே தியேட்டரா பார்த்து படத்தை குடுத்துருக்காங்க.''என்ற மற்றொரு சிறுவனான பிரசாத்தின் பேச்சில் வியப்பு தெரிந்தது.

"அது வேற ஒண்ணும் இல்லடா...இந்த விஜயா தியேட்டர் எல்லாம் படத்தை திருச்சி ஏரியாவுல டிஸ்ட்ரிபியூட் பண்ற முருகன் பிக்சர்ஸ் காரங்களோடதுதான் . அதுனாலதான் அவங்க தியேட்டர்லயே ரிலீஸ் பண்றாங்க.''

"இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?'' என்று பிரசாத் கேட்கவும்,

வடிவேல் முகம் நிறைய பெருமையுடன், ""சோழா தியேட்டர்ல ஆப்ரேட்டரா இருக்குறவர் என் பிரண்டு வீட்டு மாடியிலதான் குடியிருக்கார். அவருதான் இந்த செய்தியெல்லாம் சொல்லுவாரு. ம்ப்ச். என்ன...இந்தியன் படம் தைலம்மையில வராம சோழா தியேட்டர்ல வந்துருந்தா நான் க்யூல நின்னு டிக்கட் வாங்காம அவரோடயே நேரே உள்ள போயி....'' என்று பேசி முடிக்கும் முன்பே முதுகில் அடி விழுந்தது.

வடிவேல் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி கடைக்குள் வீசிவிட்டு அவன் முதுகில் கிருஷ்ணமூர்த்தி மத்தளம் வாசித்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயராமன், பதறிப்போய் சைக்கிளை விட்டு இறங்கினார். வடிவேலுடன்  நின்றுகொண்டிருந்த பிரசாத் திரும்பிப்பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தான்.

"அப்பா...அடிக்காதீங்கப்பா...பேப்பர் படிச்சா என்னப்பா தப்பு...'' என்று அலறியதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணமூர்த்தி தன் மகனை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்.

"யோவ் கிருஷ்ணமூர்த்தி, அவன் உடம்பு என்ன இரும்பா...இந்த அடி குடுத்து புரட்டி எடுக்குற?'' என்று ஜெயராமன் அடிவாங்கிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஆதரவாக பேசவும், அவன் வந்து இவர் பின்னால் ஒளிந்தான்.

"உனக்கு விஷ­யம் தெரியாது கிருஷ்ணமூர்த்தி. ஒரு வீட்டுல எல்லா புள்ளையும் ஒரே மாதிரி இருக்காதுன்றது சரியாப்போச்சு. இவனுக்கு மூத்த பிள்ளைங்கள்ல  ஒருத்தன் பதினொன்னாவது படிக்கிறான். இன்னொருத்தன் ஒன்பதாவது படிக்கிறான். அவனுங்க பாடப்புத்தகத்தை தவிர வேற எதையும் புரட்டிக்கூட பார்க்க மாட்டானுங்க. ஆனா இவன் எந்த நேரத்துல பொறந்தான்னே தெரியலை.

யார் வீட்டுல கதைப்புத்தகத்தைப் பார்த்தாலும் எடுத்து வெச்சுகிட்டு உட்கார்ந்துடுறான். இப்ப புதுசா பேப்பர் படிக்க எங்க போய் பழகுனான்னு தெரியலை. ஏழாவது படிக்கிறதுக்குள்ள எந்த தியேட்டர்ல என்ன படம்...அந்த தியேட்டருக்கு யார் முதலாளின்னு ஆராய்ச்சி பண்றது உருப்புடுறதுக்கா...

அப்புறம் என்னை மாதிரி ஏதாவது துணிக்கடையிலேயோ, மளிகைக்கடையிலேயோ கூலி வேலை பார்க்குறதுலேயே ஆயுசு போயிடும். இதை இவனுக்கு எப்படி புரிய வெக்கிறது?'' என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.

"சின்ன பையனுக்கு என்னய்யா தெரியும்...கொஞ்ச நாளானா சரியாயிடுவான். பள்ளிக்கூடத்துல சரியா படிக்காம இப்படி கண்டதையும் படிச்சா தப்பு. ஆனா கிளாஸ்லேயே நானூறு மார்க் எடுக்குற  ஒரே ஆள் உன் புள்ளை தான்னு நீயே சொல்லியிருக்க.''என்று ஆறுதலாக பேசினார் ஜெயராமன்.

"பாடப்புத்தகத்தை ஒழுங்கா படிச்சா நானூத்தம்பதுக்கு மேல எடுக்கலாம்னுதானே இந்த கருமத்தையயல்லாம் படிக்காதேன்னு சொல்றேன்.''

அவ்வளவு அடி வாங்கியும் வடிவேல், "படிச்சா என்ன தப்பு' என்றுதான் சொன்னானே ஒழிய இனிமே இப்படி செய்யமாட்டேன் என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வரவே இல்லை.

இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உணர்ந்த ஜெயராமன்,  "ரொம்ப அடிக்காதய்யா...பயந்துடப்போறான்'' என்று கிருஷ்ணமூர்த்தியை சமாதானப்படுத்த பார்த்தார்.

"எது...இதுவா பயப்படப்போகுது'' என்று சொன்னவாறே வடிவேலை எட்டி உதைக்க கிருஷ்ணமூர்த்தி முயற்சித்தபோது, சட்டென்று வடிவேல் நகர்ந்துவிட்டான். இதை எதிர்பார்க்காமல் கீழே விழப்போன கிருஷ்ணமூர்த்தியை ஜெயராமன் தாங்கிப்பிடித்தார்.

"எதுவா இருந்தாலும் வீட்டுல வெச்சுக்க...இப்போ உன் மானம்தான் போகுது. கெளம்புப்பா...'' என்று ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியை ஒருவழியாக புறப்பட வைத்தார்.

"வீட்டுல, வெளியில, கடையிலன்னு என்கிட்ட இவன் எங்கதான் உதை வாங்கல...ஆனாலும் திருந்த மாட்டெங்குறான். மூணுல ஒண்ணை கோயிலுக்கு நேர்ந்து விட்டதா நினைச்சுக்க வேண்டியதுதான். எல்லாம் தலைவிதி. அப்புடி இந்த பேப்பர்ல என்னதான் இருக்கு? ஒண்ணு கொலையைப் பத்தி போடுறாங்க. இல்ல கொள்ளை. அதை விட்டா சினிமா. இதைப் படிச்சுகிட்டே இருந்தா சோறு போடுமா? நான் படிக்கும்போதும் சரி. இப்பவும் சரி. பேப்பரை பார்த்தாலே பத்திகிட்டு வருது.'' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி சென்றுவிட்டார்.

ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் ஜெயராமன் சில காலம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு அருகில் குடியிருந்தபோது பழக்கம்.

"நாளைக்கே உடம்பு முடியாம படுத்துட்டா அந்த ஜவுளிக்கடையில இருந்து மொத்தமா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இவனுங்களை கடன் வாங்கி பெரிய படிப்பு வைக்க முடியுமா? நல்ல மார்க் எடுத்துட்டா பணம் குறைவா இருக்குற காலேஜ்ல சேர்த்துடலாம். மூத்தவனுங்க ரெண்டு பேரும் என் பேச்சை கேட்டு ஒழுங்கா படிக்கிறாங்க. சின்னதுதான் தறுதலையா நிக்கிது' என்று அடிக்கடி ஜெயராமனிடம் கிருஷ்ணமூர்த்தி புலம்புவார்.

"வடிவேலு நல்லாத்தான் படிக்கிறான். அது போதாதுன்னு அவனை கரிச்சு கொட்டிகிட்டே இருக்காரு...' என்று கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கனகவள்ளி  மகனை விட்டுக்கொடுக்காமல் பேசுவாள்.

ஆனால் யாருடைய சமாதானமும் கிருஷ்ணமூர்த்தியிடம் எடுபடாது.

+++

ஜெயராமன் பணிபுரிந்த நிறுவன முதலாளிக்கு காரைக்குடியில் ஒரு கிளை இருந்தது. அங்கே பொறுப்பான ஆள் தேவைப்படவே, ஜெயராமன் காரைக்குடிக்கு ஜாகையை மாற்றினார். ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.

வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு, மருமகளுக்கு அவரை தங்களுடன் வைத்திருக்க விருப்பமில்லாமல் போய்விடவே, ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தாள். அவர் மகனும் தன் மனைவியை கண்டிக்கவே இல்லை.

இவருக்குதான் ரோ­ம் அதிகம் ஆயிற்றே. மனைவியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு வந்துவிட்டார்.

+++

2011ஆம் ஆண்டு மார்கழி மாதம் அதிகாலையில் பனிபொழியும் நேரம்:

டீக்கடை, சலூன் என்று எங்காவது வடிவேலு பேப்பர் படிப்பதை பார்த்தால் விரட்டி விரட்டி அடித்து துரத்திய கிருஷ்ணமூர்த்தியை 16 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த நிலையில் ஜெயராமன் எதிர்பார்க்கவே இல்லை.

திருவாரூர் பெரிய கோவிலில் மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி பூஜை முடிந்ததும் தியாகராஜர் சன்னதியை விட்டு பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உள் பிரகார வாசலில் வழக்கம்போல் வெண்பொங்கல் பிரசாதம் வினியோகம் நடந்துகொண்டிருந்தது. ஜெயராமன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பிரசாதத்தை வாங்கிக்கொண்டார். வெறும் கையில் பொங்கலை வாங்கிய சிலர்  சூடு தாங்காத காரணத்தால் உள்ளங்கையில் அந்த பொங்கலை பந்து போல் உருட்டி சமாளித்துக்கொண்டிருந்தனர்.

இதே மாதிரி நடக்கும்னு எதிர்பார்த்துதானே நான் வீட்டுல இருந்து பிளாஸ்டிக் பை எடுத்துட்டு வந்தேன் என்று நினைத்தபடி இரண்டாம்பிரகாரத்தில் வலம் வந்த ஜெயராமனின் முகத்தில் சில்லென்று ஊசி குத்துவது போல் பனிச்சாரல் அடித்தது. நான்கு அடி தூரத்துக்கு அப்பால் வந்தவர்களின் முகம் தெரியவில்லை. காதுக்குள் காற்று நுழையாதவாறு மப்ளரை சுற்றியிருந்தாலும் அதை மீறி  குளிர் தாக்கியதால் மீதமிருந்த ஒன்றிரண்டு பற்கள் மோதிக்கொண்டன.

கொஞ்ச நேரம் பேப்பர் படிச்சுட்டு கிளம்பினா ஓரளவுக்கு பனிமூட்டம் விலகிடும் என்று நினைத்தவாறே கோயில் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள நூலக அறைக்குள் நுழைந்த ஜெயராமன் அங்கே அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் வியப்பில் வாய்பிளந்துவிட்டார். "அய்யா...கிருஷ்ணமூர்த்தி...என்னைத்தெரியுதா?''என்று கேட்டவாறு அருகில் வந்த ஜெயராமனை அவர் ஏறிட்டு பார்த்தார்.

"அடடே...என்னப்பா ஜெயராமா...ரொம்ப வரு­மா ஆளையே காணோம்...நான் தினமும் கோயிலுக்கு வர்றேன் உன்னைப் பார்க்கவே இல்லையே...''என்று கிருஷ்ணமூர்த்தியின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

அருகில் இருந்து நாளிதழ்கள் படித்துக்கொண்டிருந்த மற்ற வாசகர்கள் சட்டென்று இவர்களைப் பார்த்தார்கள்.

"சாரிங்க...''என்று கிருஷ்ணமூர்த்தி அந்த நூலகத்திலிருந்தவர்களைப் பார்த்து சொல்லி விட்டு, கமலாம்பாள் சன்னதிக்கு செல்லும் வழியில் கோயில் அலுவலகத்தின் பக்கவாட்டில் இருக்கை போன்ற அமைப்பில் வசதியாக ஜெயராமனுடன் அமர்ந்தார். இப்போதும் பனி மெல்லிய சாரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது.

"என்ன ஜெயராமா...காரைக்குடிக்கு போனதுக்கு அப்புறம் ரெண்டு வரு­ம் கடிதம்  போட்ட. அப்புறம் சுத்தமா தொடர்பே இல்லையே...என்னாச்சு.'' என்ற கிருஷ்ணமூர்த்தியின் குரலில் பழைய சிநேகிதனை மீண்டும் பார்த்த ஆர்வம் தெரிந்தது.

"ம்ப்ச்...அதை ஏம்பா கேட்குற...மருமகளுக்கு நாங்க இருக்குறது புடிக்கலை போலிருக்கு. நடந்தா தப்பு. உட்கார்ந்தா தப்புன்னு ஒரே இம்சை. டாய்லட்ல தண்ணி ஊத்தலைன்னு மகன் கிட்ட புகார் செய்யுறா. இதுக்கு மேல அவமானம் தேவையான்னு இங்கேயே வீடு பார்த்து பொண்டாட்டியோட வந்துட்டேன்.

ஆர்டிஆர் கம்பெனியில வேலைக்கும் சேர்ந்துட்டேன். மார்கழி மாசத்துல ஒரு நாள் காலையில மரகதலிங்க தரிசனம் பார்க்கணும்னு ஆசை. வந்துட்டேன். நாளைக்கெல்லாம் எழுந்து வர முடியாது போலிருக்கு. ஏழு மணிக்கு வேலை முடிஞ்சிடும். வீடு எங்க அதே இடம்தானே. முடிஞ்சா வர்றேன். இனி எங்க உயிர் போறது இந்த ஊர்லதானே'' என்று பேசிய ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.

"பொழுது விடிஞ்ச நேரத்துல இது என்ன பேச்சு. நாங்க இருந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டுட்டு கீழே நாங்க வந்தா போனா தங்குறதுக்கு வச்சிருக்கோம். இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருப்பேன். வர்றதுன்னா, போன் பண்ணிட்டு வா.''என்று ஒரு துண்டு சீட்டில் நம்பரை எழுதிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

"நீங்களும் இந்த ஊர்ல இல்லையா. அது கெட்டுச்சு போ. எங்க சென்னையா?''

"எப்படிப்பா கரெக்டா சொல்ற?''

"நம்ம ஊர்ல இருந்து சென்னைக்கு போனது போக மிச்சம்தானே வேற ஊர்களுக்கு போறது. அது சரி...நீ மட்டும்தான் வந்துருக்கியா. மனைவி, பிள்ளைங்க எல்லாம்?''

"மனைவி தவறி ஆறு வரு­ம் ஆயிடுச்சு. பையன் மனைவியோட பத்து நாள் டூர் போயிருக்கான். நான் இங்க வந்துட்டேன்.''

"அடடா...கனகவள்ளி இறந்த வி­ஷயம் எனக்கு தெரியலையே. பத்து நாள் டூர் போற புள்ள உன் ஒரு ஆளை இப்படியா மார்கழி மாச குளிர்ல தவிக்க விட்டுட்டு போறது? அது சரி...உனக்கு மூணு புள்ளைங்களாச்சே. ஒருத்தன் டூர் போயிருக்கான்னா மத்தவங்க? மூணு பேரும் நல்லாத்தானே இருக்காங்க. சின்னவன் உருப்படியா எதாவது வேலைக்கு போறானா?''

"அது பெரிய கதை. மூணு பசங்களுமே இஞ்சினியரிங் தான் படிச்சாங்க. பெரிய பசங்க ரெண்டுபேருமே குடும்பத்தோட அமெரிக்காவுல இருக்காங்க. சின்னவனும் சென்னை டிசிஎஸ் கம்பெனியில  மாசம் நாப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்குறான். நாலு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணமாச்சு. அவன் மனைவி வேலை பார்க்குறதும் அதே கம்பெனிதான். புதுசா கல்யாணம் ஆனவங்க. இதுல நான் வேற எக்ஸ்ட்ரா லக்கேஜா கூட போகணுமா?

ஒரு குழந்தை பிறக்குறதுக்குள்ள இப்படி டூர் போய் ஜாலியா இருந்தாதான். அப்புறம் குழந்தை, பணிச்சுமைன்னு ஆயிட்டா எங்கேயும் போக முடியாது. அதே வீடு, அதே கம்பெனி, அதே முகங்கள், ஏன் டிவியில கூட அதே மெகா சீரியல்னு இருந்தா குடும்பத்துக்குள்ள ஏன் உரசல் வராது?

ஆனா, முதல்ல நீங்க ஆசைப்பட்ட கோயில்கள் சிலதுக்கு போயிட்டு வந்துடலாம்னு என் புள்ளையும் மருமகளும் கூப்பிட்டாங்க. நான்தான், இப்ப நீங்க விருப்பப்பட்ட இடத்துக்கு போங்க. பேரனோ, பேத்தியோ பிறந்த பிறகு நானும் வர்றேன்னு சொல்லிட்டேன்.

சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத...நாம தூக்கி வளர்த்த புள்ள நம்மள கண்டிச்சுட்டான்னு கோபப்படுறோமே...அறுபது வயசைத் தாண்டி நமக்கே இவ்வளவு ஈகோ இருக்குன்னா முப்பது வயசுல இருக்குற புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு இருக்கும்.

நாம பெத்து வளர்த்த புள்ளை நம்ம நடவடிக்கையை குத்தம் சொல்றானேன்னு கோபப்படுறோம். அதுவே நெருங்கிய நண்பன் சொன்னா தப்பா எடுத்துப்போமா? அந்த மாதிரி புள்ளையையும் நண்பனா நினைச்சா ஏன் கோபம் வரப்போகுது?'' என்று பேசிய கிருஷ்ணமூர்த்தியின் பேச்சில் மட்டுமல்ல. முகத்திலும் அமைதி தெரிந்தது.

"நீ சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன். அவன் வயசைத் தாண்டிதானே நாமளும் வந்துருக்கோம். நமக்கு தெரியாத நாகரிகமா?'' என்ற ஜெயராமனின் குரலில் லேசான காரம்.


"இந்த ஈகோதான்யா நிறைய குடும்பத்தை குலைச்சுப் போட்டுடுது. நம்ம காலத்துல பொண்ணுங்களுக்கு வேற வருமானம் கிடையாது. வேற வழியில்லாம புரு­னையும், மாமனார் மாமியாரையும் அவங்க இம்சைகளோட சகிச்சுகிட்டு இருந்தாங்க. இப்ப காலம் மாறிப்போச்சு.

புரு­னோட அஞ்சு நிமிஷ­ம் தனியா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்குறதைக் கூட குற்றம் சொல்ற மாமனார், மாமியார் அதிகம். அவங்க மனசு விட்டு பேச சந்தர்ப்பம் கிடைச்சா, மனசுல இருக்குற தேடல் குறைஞ்சுடும். எதையும் எரிச்சலோட பார்க்குற மனோபாவம் மாறிடும்.

இந்த மாதிரி சின்ன சின்ன விஷ­யங்கள்ல கிடைக்கிற சின்னப்புள்ளைத்தனமான ஏமாற்றம்தான் குடும்பத்துல பெரிய பிரச்சனையை உருவாக்குது. புள்ளை தன் பொண்டாட்டியோட சினிமாவுகோ கோயிலுக்கோ கிளம்பி போனதுக்கப்புறம், அக்கம்பக்கத்து வீடுகள்ல, நான் இங்க ஒருத்தி சமையலறையில கிடந்து அல்லாடிகிட்டு இருக்கேன். அவ எதைப்பத்தியும் கவலைப்படாம புருஷ­னோட ஜோடி போட்டு கிளம்பிட்டான்னு பேசுற மாமியார்கள் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு தெரியுமா?

இந்த வி­ஷயம் இன்னும் பல மோசமான வார்த்தைகளோட மகன் மருமகள் காதுக்கு போகும்போது விரிசல் ஆரம்பமாகுது.

ஜோடியா சந்தோஷ­மா இருக்கணும்னுதானே கல்யாணம் பண்ணி வெச்சோம். இப்ப பெரியவங்களே அதைப்பார்த்து எரிச்சலடைஞ்சா என்ன அர்த்தம்.'' என்ற கிருஷ்ணமூர்த்தி ஜெயராமனைப் பார்த்தார்.

"வெளில போய்ட்டு நல்லா சுத்திப்பார்த்துட்டு வாங்கன்னு அனுப்புனா மட்டும் மாமனார் மாமியார் மேல மருமகளுக்கு பாசம் வந்துடுமா?''என்று ஜெயராமன் எரிச்சலுடன் கேட்டார்.

"பாசம் வருதோ இல்லையோ, மாமனார் மாமியார் நம்மளுக்கு இடைஞ்சலா இருக்காங்கன்னு ஒரு எண்ணம் வராது. பையன் ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்துட்டான்னா, டிபன் நான் பண்ணி வைக்கிறேன். ரெண்டு பேரும் வெளில போயிட்டு வாங்கன்னு சொல்லிப்பாருங்க. அது புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு சந்தோஷ­த்தை கொடுக்கும் தெரியுமா?






ரெண்டு தடவை அப்படி நடந்தா, மூணாவது தடவை கிளம்பும்போது உங்களுக்கும் சேர்த்து டிபன் செஞ்சு வெச்சுட்டு கிளம்புவா. இல்லன்னா, நீங்க சிரமப்படவேண்டாம். "நாங்க ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வந்துடுறோம் அத்தை.' அப்படின்னு சொல்லுவா. தொண்ணூறு சதவீதம் இப்படித்தான் நடக்கும்.

அதை விட்டுட்டு, எங்க காலத்துல அப்படி செஞ்சோம். இப்படி இருந்தோம் அப்படின்னு குறை சொல்லிகிட்டே இருந்தா நம்மளை எப்படா அடிச்சு முதியோர் இல்லத்துக்கு துரத்தலாம்னுதான் யோசிப்பாங்க.

அந்த காலத்துல நடந்து போனாம். ஏதாவது முக்கிய செய்தின்னா தந்தி அடிப்போம். இல்ல டிரங்கால் புக் பண்ணி பேசுவோம். இப்ப அப்படியா? எவ்வளவு வசதிகளை அனுபவிக்கிறோம். அந்த மாதிரி புள்ளைங்க விஷ­யத்துலயும் நம்ம அணுகுமுறையை மாத்திக்கணும்.'' என்று கிருஷ்ணமூர்த்தி தெளிவாகவே பேசினார்.

"அதுசரி...உனக்கு எப்படிய்யா இவ்வளவு பக்குவம் வந்துச்சு? நல்ல மருமக கிடைச்சதுனால இப்படி பேசுறியா? எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும். எனக்கு வந்து வாய்ச்ச மருமக ராட்சசியால்ல இருக்கா.'' ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.

"நான் இந்த மாதிரி பக்குவப்பட காரணமே என் சின்னப் புள்ளைதான். மூத்தவனுங்க ரெண்டுபேரும் படிப்பு படிப்புன்னு இருந்தாங்க. வேலை கிடைச்சதும் அம்மா அப்பாவை வெச்சு பார்த்துக்கணும்னு நினைக்கவே இல்லை.

ஆனா வடிவேல், நீங்க காலம் பூராவும் என் கூடவே இருந்துடுங்கன்னு சொல்லிட்டான். மருமகளும் கல்யாணமாகி வந்த புதுசுல, உங்க அப்பா மூணு புள்ளைங்ககிட்டயும் ஆளுக்கு ஒருமாசம்னு இருந்து சாப்பிடுறதுதானே நியாயம்னு கேட்டா. ஆனா இவன், அப்பா அம்மாவை வெச்சு பார்த்துக்க லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது. ஆயிரக்கணக்கான ஏழைங்களுக்கு அன்னதானம் செய்யுறது, கோவில் உண்டியல்ல லட்ச லட்சமா பணம் போடுறதைக் காட்டிலும் பெத்தவங்களை வெச்சு காப்பாத்துறது உயர்ந்த விஷ­யம்.

அதை செய்ய நமக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன்களுக்கு நன்றி சொல்லணும். அவருக்கு நான் ஒரே புள்ளையா பிறந்ததா நினைச்சு என் கூடவேதான் வெச்சுப்பேன். உன்னால முடியலைன்னா விடு. எங்க அப்பாவை நான் பார்த்துக்குவேன்னு சொன்னான். அதுக்கு  அவன் மனைவி, என் அம்மா அப்பாவை நான் இந்த மாதிரி கூட வெச்சுக்க அனுமதிப்பீங்கிளான்னு கேட்டா.

இதுக்கு என் அனுமதி எதுக்கு. தாராளமா வந்து இருக்கலாம். ஆனா அவங்க சம்மந்தி வீட்டுல போய் தங்குறதான்னு யோசிப்பாங்க. அப்படி நினைச்சா, தனி வீட்டுல இருக்கட்டும். வேணுன்னா தனியா வீடு புடிச்சு கொடுத்து மாசத்துல பாதி நாள் நாம அவங்க கூட போய் தங்குவோம். அப்படின்னு சொன்னான். அவன் மனைவி மறு பேச்சு பேசலை. உங்க குணத்தை இப்பதான் முழுசா புரிஞ்சுகிட்டேன்னு சொல்லி அழுறா.

வடிவேலுக்கு இந்த பக்குவத்தை கொடுத்தது, புத்தகங்கள்தான். பேப்பரை கூட படிக்க கூடாதுன்னு அவனை எத்தனையோ நாள் அடிச்சு துவைச்சிருக்கேன். ஆனா அந்த வாசிப்பு பழக்கம்தான், என்னைய நடுத்தெருவுல நிறுத்தாம அவன் கூட வெச்சு பராமரிக்கிற குணத்தை கொடுத்திருக்கு. ஒருத்தனுக்கு நல்ல புத்தகத்தை விட சிறந்த நண்பன் வேற யாரும் இருக்க முடியாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.

கடைசியா ஒண்ணு சொல்றேன். பெத்தவங்க, நம்ம புள்ளை நம்மளை வெச்சு பராமரிக்கணும்னு நினைச்சா சந்தோஷ­ம். ஆனா ஒவ்வொரு விஷயத்தையும் நம்மளை கேட்டுதான் முடிவெடுத்து நடக்கணும்னு நினைச்சா வருத்தம்தான் மிஞ்சும்.

காலம் மாறிப்போச்சுன்னு பேசிகிட்டு இருந்தா மட்டும் போதாது. நாமளும் பல விஷ­யங்கள்ல நம்மளை மாத்திக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்னு சும்மா மனப்பாடம் செஞ்சு எழுத வெச்சா ஒரு மனு­ஷன் மாறிட மாட்டான். அதை உணர வைக்கணும். என் புள்ளையை புத்தகங்கள் உணர வெச்சிருக்கு.'' என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லி முடித்தபோது, புத்தகங்கள் ஒரு மனுஷ­னை இந்த அளவு பக்குவப்படுத்துமா என்று நினைத்த போது, அவர் மகனும் மருமகளும் அவர் நினைவில் வந்து போனார்கள்.

+++

வியாழன், 29 நவம்பர், 2012

ஜெமினி



பொதுவாக சிறைத்தண்டனை என்பது தவறிழைத்தவர்கள் தங்கள் தப்பை உணர்ந்து திருந்தச்செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? இதற்கான சின்ன விளக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெமினி திரைப்படத்தில் இரு வரி வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மிக ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஒரு சாரரும், இந்த மாதிரியான மசாலா படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் உலகத்தரம் கெட்டுவிடும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இப்போது அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. அந்த படம் தொடர்பாக நான் எழுதிய பழைய பதிவு உங்கள் பார்வைக்கு.
******************************


ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.


முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.

"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க வெளியில வரும்போது எந்த மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.

நான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிரணைப் பார்த்து ஜொள் விடாம சமர்த்துப்பிள்ளையா இருக்கேன்னு இப்பவாச்சும் நம்புறீங்கிளா?

வேலூர் சிறைச்சாலையும் குற்றவாளிகளை மாற்ற, தொழிற்சாலையாக மாறி வரும் விஷயம் தினமலரில் வெளிவந்துள்ளது.

அந்த செய்தி கீழே...

வேலூர்: வேலூர் ஆண்கள் சிறையில் குற்றவாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழிற்சாலையாக மாறி வருகிறது.வேலூர் தொரப்பாடியில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் 1867ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய சிறை, தமிழகத்தில் முதல் சிறை என்ற பெருமை உடையது. இந்த சிறையில் 2,130 கைதிகள் நிரப்பும் வசதிகள் உள்ளன.


சென்னையில் புழல் சிறை துவங்கப்பட்டதால், தற்போது, இங்கு 935 கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 215 பேரும், ஐந்து முதல் பத்து ஆண்டு தண்டனை பெற்ற கைதிகள் 230 பேரும் உள்ளனர்.தண்டனை அனுபவிக்கும் இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது, தொழிற்சாலையாக மாறி வருகிறது. இங்கு ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி, டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகள் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.தொழிற்பயிற்ச்சி பெற்ற கைதிகள் மூலம் ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி ஆகியவை தயார் செய்யப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.


* ஷூ தொழிற்சாலை: தமிழகத்தில் வேறு எந்த சிறையிலும் ஷூதயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் துவங்கப்பட்ட ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் இது வரை 10 லட்சம் ஷூக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 50 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் ஜோடி ஷூக்கள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டு அனைத்தும் மூன்று மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.இந்த ஷூக்கள் போலீஸ், தீயணைப்பு துறை, சிறைத்துறையில் மூலம் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஷூ தயாரிப்பு பணியில் 100 கைதிகள் வேலை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 300 ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது.இதற்காக 60 லட்ச ரூபாய் மதிப்பில் வெளி நாட்டில் இருந்து இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் ( நன்றாக வேலை செய்பவர், கொஞ்சம் வேலை செய்பவர், புதியதாக வேலை செய்பவர் ) என்று தரம் பிரிக்கப்பட்டு மாதம் 600 ரூபாய், 800 ரூபாய், 1,500 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகின்றது.இதில், 40 சதம் இயந்திரத்தின் மூலமும், 60 சதம் கையாலும் தயாரிக்கின்றனர். காலை 7.30 மணி முதல் பகல் 11.30 வரை, மதியம் 1.30 முதல் மாலை 4. 30 வரையில் பணி நடக்கிறது.பணி நேரத்தில் இரு முறை சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கைதிகளுக்கு டீ கொடுக்கின்றனர்.


* டெய்லரிங் யூனிட்: இங்கு 26 தையல் மிஷின்கள் உள்ளது. 33 பேர் வேலை செய்கின்றனர். ஜாக்கெட், சுடிதார் தைக்கின்றனர். நல்ல லாபம் தரும் இந்த தொழிலை செய்து வந்த பத்து பேர் விடுதலையாகியதும் சொந்தமாக கடை வைத்துள்ளனர்.


* ஃபைலிங் பேட் யூனிட்: இங்கு 75 பேர் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 3,000 வீதம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ஃபைல் பேடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தாண்டு 5 லட்சம் ஃபைல் பேடுகள் சப்ளை செய்ய ஆர்டர் பெற்றுள்ளனர். மாதம் 750 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.


* மெழுகு வர்த்தி யூனிட்: மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மெழுகு வர்த்திகள் வேலூர் ரோட்டரி சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


* பவர் லூம்: நான்கு பவர் லூம்கள் உள்ளன. பத்து பேர் வேலை செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு பாண்டேஜ் துணி தயாரித்து சப்ளை செய்கின்றனர். மாதம் 8,000 மீட்டர் பாண்டேஜ் துணி தயாரிக்கின்றனர். ஒரு மீட்டர் விலை 12 ரூபாய். இங்கு பணிபுரியும் கைதிகள் மாதம் 1,500 வரை சம்பளம் பெறுகின்றனர்.


வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் கூறியதாவது:இங்குள்ள மினி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் பெரும் பாலும் ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட காலகைதிகள். ஒரு கமிட்டி மூலம் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து வேலைக்கு அனுப்புகின்றோம்.நிறைய ஆர்டர்கள் வருகிறது. இவர்கள் சம்பாதிக்கும் பணம் இவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், இவர்கள் குடும்பத்தினருக்கும், குழந்தை படிப்பு செலவுக்கும் மாதா, மாதம் அனுப்பப்படுகிறது. ஆர்வத்துடன் கைதிகள் வேலை பார்க்கின்றனர்.வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பு, கல்வி, தோட்டம் பராமரிப்பு போன்றவை அளிக்கப்படுகிறது. விடுலையாகி வெளியே செல்லும் கைதிகள், இந்த பயிற்சி மூலம் யாரையும் எதிர் பார்க்காமல் சுய தொழில் செய்ய அவர்களுக்கு வசதியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பாராவிதமாக தவறிழைப்பவர்கள் தண்டனையை அனுபவித்த பிறகு வெளியில் வந்து மக்களோடு மக்களாக வாழும் வழி இருந்தால் அவர்கள் தவறான பாதையையே வாழ்க்கையாக்கிக் கொள்ள மாட்டார்கள்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

படிக்கிறது கஷ்டமா?

தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 16/24 மணி நேரத்துக்கு குறையாமல் மின்வெட்டு இயல்பு வாழ்க்கைக்கு வேட்டு வைத்துவிட்டதால் மீண்டும் பழைய காலத்துக்கே செல்லத்தொடங்கியிருக்கிறோம். அதில் முக்கியமானது அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுடன் ஊர்வம்பு உட்பட பல விஷயங்களைப் பேசுவது, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மீண்டும் நூலகங்களில் அதிகமாக தென்படுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக வாரம் ஒரு நாள் நூலகத்துக்கு சென்ற நான் இப்போது நூலக வேலை நாட்களில் பெரும்பாலும் சென்று விடுகிறேன். மீண்டும்  வாசிப்பு.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், தயாரிப்பாளர், ஹீரோ உட்பட யாரும் ஸ்கிரிப்டை படித்துப்பார்க்க விரும்புவதில்லை. முதல்ல கதையோட "நாட்" என்னன்னு சொல்லுங்கன்னு கேட்பாங்க. அது நல்லா இருந்ததுன்னா மொத்த கதையையும் நீங்களே சொல்லிடுங்கன்னு கேட்பாங்க. என்று கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டில் எழுதிய பழைய பதிவு கண்ணில் பட்டது. அது இங்கே உங்களுக்கு மீள்பதிவாக.
*************************************************
புதிய சட்டசபை வளாகம் அமைவதால் சாலைவிரிவாக்கம் செய்ய சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை இடித்துவருவதாக படத்துடன் செய்தி வெளிவந்தது. முன்பு ஒரு நாள் நம் முதல்வர், இன்னும் சிறப்பான வசதிகளுடன் புதிய அரங்கம் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அது தேர்தல் வாக்குறுதியாகி விடாது என்று நம்புவோம்.

இந்த அரங்கத்தில் நானும் ஒரு விழாவுக்கு பார்வையாளராக சென்றேன். 2007 ஏப்ரலில் விகடன் பிரசுரம் பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் வெளியிடும் விழாவை பிரமாண்டமாக நடத்தியது.

விழாவை சிறப்பித்தவர்கள், கலைஞர் மு.கருணாநிதி, கவிக்கோ. அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, இளமைக்கவிஞர் வாலி, பொள்ளாச்சிமகாலிங்கம், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுதா சேஷய்யன், விகடன் குழும உரிமையாளர்கள் எஸ்பாலசுப்ரமணியன், பா. சீனிவாசன் மற்றும் ஒரு சிலர் என்
நினைவில் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவர் சீர்காழி சிவ சிதம்பரம.

அப்போது நான் சென்னையில் இருந்ததால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்து அழைப்பிதழ் பெற்றேன். கெல்லீஸ் ஏரியாவில் இருந்து  சென்ற நான் எம்.எல்.ஏ விடுதிக்கு பக்கமாக மிதிவண்டியை பார்க் செய்தது ஒரு  சாதனை(?!) (சுற்றுப்புறச் சூழலை காக்கிறேனாக்கும்.)

விழா குறித்த நேரத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தாமதமாக தொடங்கியது எனக்கு மகிழ்ச்சி தந்த அதிர்ச்சி.

விழாவில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்னப்பா...கல்யாணம் எப்ப வெச்சிருக்க...எந்த மண்டபம்...மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு...அப்படின்னு கேள்வியா கேட்டு அடுக்குவாரு ஒருத்தரு. எப்பன்னு கேட்குறீங்கிளா?...பொண்ணோட கல்யாணப் பத்திரிகையை கொடுக்க வந்தவர்கிட்ட பத்திரிகையை வாங்கி கையில
வெச்சுகிட்டே இவ்வளவு கேள்வி வரும். படிக்கிற பழக்கம் அந்த அளவுக்குதான் இருக்கு. இந்த நிலை மாறனும்." அப்படின்னு பேசினார்.

பெருமை வாய்ந்த அந்த அரங்கம் 2009ம் ஆண்டோட நம்மை விட்டு விலகிடுச்சு.

இது மாதிரி பல விஷயங்கள் புது வருஷத்துல வரும். போகும். நாம நல்ல விஷயங்களுக்கு மனதின் ஓரத்துல இடம் கொடுப்போம். கசப்பான அனுபவங்கள் மறுபடி வராம பார்த்துக்குவோம். இதுதான் புத்தாண்டுல நாம எடுத்துக்குற பாசாங்கில்லாத உறுதிமொழியா இருக்க முடியும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நாகராஜசோழன் - MA MLA

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த அமைதிப்படை திரைப்படத்தில் அமாவாசை (எ) நாகராஜ சோழன் - சோழர் பரம்பரையிலிருந்து ஒரு MLA என்று பேசும் வசனம் அல்வா மேட்டர் போல் பிரபலம். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய விளம்பரங்களை அவ்வப்போது நாளிதழில் பார்த்தேன். இளையபாரதத்தில் பழைய பதிவுகளை தூசு தட்டும்போது 2010 ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் அமைதிப்படை என்ற வார்த்தையை பார்த்ததும் அது இங்கே மீள்பதிவாக.
***********************************************

இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிக அளவில் செலவு செய்வதே மதுவுக்காகதான். குடும்பத்தில் தாம்பத்ய பிரச்சனைக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மேலும், அரசுக்கு வருமானம் பற்றாக்குறையாகிவிடும் என்ற காரணம் சொல்லியே  மதுவிலக்கு என்ற விஷயத்தை எல்லாரும் தட்டிக்கழித்துவிருகிறார்கள்.ஆனால் என் மனதுக்குத் தோன்றிய உண்மைக்காரணம் என்ன தெரியுமா?

அரசியல் பகை காரணமாகத்தான் பெரும்பாலான வன்முறைகள் அரங்கேறுகின்றன. இதில் நடக்கும் படுகொலைகளை செய்பவர்கள் மது அருந்திதான் செய்வார்கள்.மது என்னும் அரக்கன்தான் அவர்களை மிருகத்தைவிட கேவலமாக்கிவிடுகிறது.

மது அருந்துவதே மிகப்பெரிய சிக்கலாகிவிட்டால் இது போன்ற குற்றங்களை
செய்ய ஆள் வேண்டுமே.உண்மை இப்படி இருக்க மதுவிலக்கை அவர்கள் எப்படி கொண்டுவருவார்கள்?

சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த அமைதிப்படை திரைப்படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது என்று நினைக்கிறேன்.அமாவாசை (எ)
நாகராஜசோழன் கதாபாத்திரம்  பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்திருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரு காட்சியில் மணிவண்ணன்,"இந்த சாதி கருமத்தை யாரு கண்டுபிடிச்சா?" என்று சத்யராஜிடம் கேட்பார்.

"மந்திரம் சொன்னவங்க கண்டுபிடிச்சதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுகிட்டாங்க." என்பது சத்யராஜின் பதில்

"ஏங்னா...இந்த சாதியை ஒழிக்கப்போறதா மேடைக்கு மேடை பேசுறீங்கிளே...நிசமாலுமா?"

"உனக்கு வேற எதுவும் தொழில் செய்யத் தெரியுமா?"

"அய்யய்யோ...என்னங்க கெட்ட வார்த்தை எல்லாம்.?"

"தெரியாதுல்ல... எனக்கும்தான். நாம சாதியை ஒழிச்சுட்டோம்னா அப்புறம் நீயும் நானும் மட்டுமில்ல, நம்மளை மாதிரி பொழைப்பு நடத்துற எல்லாருமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்."

இதுவும் சத்யராஜ், மணிவண்ணன் இடையே நடக்கும் உரையாடல்தான்.

மதுவிலக்குக்கும் இந்த வசனம் பொருந்தும்.

மது அருந்தும் வழக்கமுடையவர்கள் உடனே என்னைத் துவைத்துக் காயப்போடும் எண்ணத்துடன், "இந்தப்பழக்கம் இல்லாத நீ மட்டும் ஆயிரம் வருஷம் தாண்டி தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி அப்படியே இருக்கப் போறியா?" இப்படி பின்னூட்டம் இட வாய்ப்பு நிறையவே உண்டு.

நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் மதுவால் சில தீமைகள் பலரது வாழ்வைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கின்றன என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

பொருளாதாரதீமை: மதுவுக்காக ஆயிரம் ரூபாய் செலவழிப்பவனின் வருமானம் பத்தாயிரம் ரூபாயாக இருந்தால் பாதிப்பு உடனடியாக வெளியே தெரிவதில்லை. ஆனால் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் குடும்பத்தை உடனடியாக சீர்குலைத்துவிடும்.

உடல்நலம் தொடர்பான தீமை: சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், தாம்பத்ய குறைபாடு உள்ளிட்ட பல வியாதிகள் மதுவால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்மை.

உறவுசீர்குலைவு: தாம்பத்யத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களில் தொடங்கி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகள் கூட உங்களை வெறுக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த தீமைகள் எல்லாம் குடிக்காதவர்கள் குடும்பத்தில் இல்லையா என்று கேட்பார்கள். இது சரியான பதில் இல்லை என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு பலரை பரலோகம் அனுப்புவதுதான் அது.

மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு.

வெள்ளி, 23 நவம்பர், 2012

புகையிலிருந்து தப்பிப்பது எப்படி?

குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறவங்க சாலையில ஒழுங்கா போறவங்களை அடிச்சு சாகடிக்கிறது நடந்தாலும், அப்படி அசம்பாவிதம் நடக்காத பட்சத்தில் அப்படி குடிக்கிறவங்க நம்ம மேல வாந்தி எடுக்காத வரை சிக்கல் இல்லை. ஆனா பழைய கால ரயில் இஞ்சின் மாதிரி புகையை அடுத்தவன் மூஞ்சியில விட்டு கேன்சரை அனுப்புறவங்களை என்ன செய்யுறதுன்னே புரியலை. 2010ல் எழுதிய பதிவை இப்போவும் எந்த திருத்தம் இல்லாம பிரசுரம் செய்யுற அளவுக்கு எந்த டெவலப்மெண்டும் இல்லாம இருக்கு.

நாகரிகமான வார்த்தையில சுதந்திரமா கருத்து சொல்ல பயமா இருக்கு. ஆனா அடுத்தவன் மூஞ்சியில புகையை விட்டு அவன் ஆயுசைக் குறைக்குறவன் எந்த பயமும் இல்லாம இருக்கான். என்ன கொடுமை சார் இது?

என் காசு...நான் குடிக்குறேன்னு சொல்றவங்களை திருத்த நான் பதிவு எழுதலை. வாயில வெச்சு ஊதுங்க. உடம்பு பூராவும் கட்டி வெச்சு கொளுத்திக்குங்க. அது உங்க இஷ்டம். ஆனா பத்தவெச்சு அடுத்தவன் மூஞ்சுக்கு புகையை அனுப்பாதீங்கன்னுதான் சொல்றேன்.

இப்போ 2010ல் எழுதிய பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு.
****************************************

1996ம் ஆண்டு நான் சினிமாதியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில் படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும் இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)
அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில் இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.

திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ சமாளிச்சு உசுரோட இருக்கு.

இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா இயங்கிகிட்டு இருந்த சமயம்.பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு,பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் ஒரு தியேட்டர்ல குறைந்தபட்சம் முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல நல்லா வசூல் செய்துகிட்டு இருந்துச்சு.

இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை, இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.
இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(பதினைந்து வருஷத்துக்கு முன்னால)

இது தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய், பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு.

அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.

ஆனா இப்போ,மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க.இந்த ஐடியா பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.

காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்? இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே ஏறுவாங்க.அதுவும் ஒருநாள் கூத்துதான்.
பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும் ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய் கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.

செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல் கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.

வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து ரூபாய்,உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி படிச்ச நிபுணர் தேவையில்லை.

எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல் செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால் ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.

இப்போது சினிமா தொழிலிலும் இந்த..................................தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.

இதே டெக்னிக்கை பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எப்படின்னுதானே கேட்குறீங்க?

ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாய் என்று இருப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு, அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.
இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப்  பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?

மிஸ்-சாகிப்போன பர்ஸ்


இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று டிக்கட் கவுண்டருக்குள் கையை நீட்டும்போதுதான் நேரம் முடிந்தது அல்லது டிக்கட் முடிந்தது என்று சொல்வார்கள்.


ஒரு அரங்கத்தில் ஆயிரம் நாற்காலி இருக்கும். அதில் 960 நாற்காலி காலியாக இருக்கும். ஆனால் அங்கோ உடைந்திருக்கும் ஒரே ஒரு நாற்காலியில் மிகச்சரியாக போய் உட்காருவேன். இப்படி ஏன் சறுக்குது என்று புரியாமலேயே அடி வாங்கிக்கொண்டு புலம்பும் மிகச்சாதாரணர்களில் நானும் ஒருவன்.

அப்படி கிடைத்த ஒரு அனுபவத்தை 2010ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். மீண்டும் உங்கள் பார்வைக்காக.
**********************************************

கிராமத்தில் இருந்து பட்டணம்(சென்னை ?!) வரும் இளைஞன் பேருந்து  அல்லது ரயில் நிலையத்திலேயே உடைமைகளைத் தவற விடுவது, சென்னை மாநகரப்பேருந்துகளில் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள் சற்று அளவுக்கு அதிகமாகவே எனக்கு இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தன.

2004ம் ஆண்டு நான் வேலைக்காக மூட்டை முடிச்சுகளோடு மாம்பலம் ரயில்நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கிருந்து வேகமாக ரங்கநாதன் தெரு வழியாக தி.நகரில் நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு மிகச்சரியாக போய் சேர்ந்தேன். ஆட்டோக்காரர்கள் சூழ்ந்துகொள்ளப் பார்ப்பார்கள். சாதாரணமாக ஒரு அலட்சியப் பார்வையுடன் அவர்களைக் கடந்து சென்று கொண்டே இரு என்று
என்னுடைய நண்பர் பாஸ் (எ) பாஸ்கரன் கூறியிருந்தார். அது மிகச் சரியான அளவில் எனக்குப் பலன்தந்தது.

வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்பே பத்து ரூபாய் வரை சில்லறையை சட்டைப்பையில் வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். பொது இடங்களில் பணத்தை மொத்தமாக வெளியில் எடுத்ததே இல்லை என்பதால் மாநகரப்பேருந்துப் பயணமும் எனக்கு சிக்கலாக அமையவில்லை.

சில சூழ்நிலைகள் காரணமாக திருவாரூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டிய கட்டாயம். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் அதற்குள் பேருந்துகள் செல்லும் வழித்தடம் தவிர பிற பாதைகளும் பழக்கமாகிவிட்டன.எல்லாம் என்னுடைய சைக்கிளுடைய உபயம்தான்.

திரும்பவும் 2006ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். அப்போது புரசைவாக்கத்தில் இருந்து சாலிகிராமம் வந்து சேர போக்குவரத்து நெரிசல் நேரத்தில் ஒண்ணரைமணி நேரம் கூட ஆகும். ஆனால் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து பூந்தமல்லிநெடுஞ்சாலை, பச்சையப்பன்கல்லூரி, நெல்சன்மாணிக்கம் பாலம், நுங்கம்பாக்கம் ரயில்நிலையம், சூளைமேடு, வடபழனி நூறடி சாலை வழியாக சில குறுகியபாதைகள், ஒரு சில சிக்னல்கள் என்று சாலிகிராமத்தை வந்து அடைய முக்கால்மணிநேரம்தான் ஆகும்.

பிறகு அலுவலகம் ராயப்பேட்டை பகுதிக்கு மாறிய பிறகும் எனக்கு பயணம் எளிதாகத்தான் இருந்தது. சேத்துப்பட்டு கீழ்ப்பாலம், எழும்பூர், கிரீம்ஸ்ரோடு அல்லது எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சத்யம் தியேட்டர் இந்த பாதை வழியாக ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குப் பின்புறம் ஒரு தெருவில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று வந்ததால் பேருந்துப் பயணம் என்பது மிக மிக குறைவு. இதனால் என்னுடைய பர்ஸ் பறிபோக வாய்ப்பு என்பதும் மிக அரிதாகத்தான் இருந்தது.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கேமரா உதவியாளராக நான் பணியாற்றியபோது அந்த விளம்பர நிறுவனத்தின் காரில் போய்தான் பந்தாவாக இறங்குவோம்.அப்படித்தான் ஒருநாள் கிண்டியில் உள்ள அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் சென்றோம்.

நான் அங்கே செல்வது அதுதான் முதல்முறை. விமான பணிப்பெண்களைக்காட்டிலும் அழகு வாய்ந்த ஒரு தேவதை வந்து உங்களுக்கு உதவட்டுமான்னு ஆங்கிலத்தில் கேட்டதும் கொஞ்ச நேரம் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன். வேற என்ன பண்றது,

அந்தப் பொண்ணு கேட்டது புரியுது. திரும்ப எப்படி ஆங்கிலத்துல பேசுறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கேன். அப்புறம் கூட வந்தவங்க இன்விடேஷனைக்காட்டி வழி கேட்டதும் அப்பவும் அந்த அப்சரஸ் பதில் சொன்னது ஆங்கிலத்துலதான்.

படியேறிப் போகும்போது அந்த கேமராமேன், "டேய் சரவணா, கேமரா பேக்கை நீ வெச்சுக்க...கேமரா ஸ்டாண்டை என்கிட்ட கொடு"ன்னு கேட்டார்.

எனக்கு விஷயம் புரியலை.

நாம நாலு பேர் இருக்கோம். அந்தப் பொண்ணு உங்கிட்ட வந்து ஹெல்ப்பண்ணவான்னு கேட்குது. நான் அரைமணி நேரம் மேக்கப் போட்டது வேஸ்ட்.எல்லாத்துக்கும் மச்சம் வேணும் போலிருக்கேன்னார். அப்பதான் அது நக்கல்னு எனக்கு புரிஞ்சது.

இவரு வயித்தெரிச்சலை தண்ணி(விஸ்கி இல்லை) ஊத்தி அணைக்கலைன்னா நாளைக்கு நமக்கே ஆப்புதான்னு ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்டுச்சு.

"அண்ணே...உங்க டேலண்ட்டுக்கு அதால தடுமாறாம பதில் சொல்ல முடியாதுன்னு பயந்துதான் ஊருக்கு இளைச்ச எங்கிட்ட பேசியிருக்கும்." அப்படின்னு சொன்னேன். (எதுவும் உண்மையா இருக்காது.நாலு பேர்ல நான் முன்னால நடந்தேன். அது எங்கிட்ட பேசிடுச்சு. அவ்வளவுதான். இது  குருநாதருக்குப் புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன்.)

அந்த மீட்டிங் ஹால்ல தமிழக அமைச்சர் ஒருவரும் ஆந்திராவைச்சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் முக்கிய விருந்தினர்கள்.தமிழகத்தில் புதுசா ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு அறிமுகவிழாதான் அது.

இதுல உன் பர்ஸ் எப்படி போச்சுன்னுதானே கேட்குறீங்க?

மீட்டிங் முடிஞ்சு பஃபே முறையில சாப்பாடு, கூலிங், ஹாட்டிரிங்ஸ் எல்லாமும் உண்டுங்க. நான் அப்பவும் வெஜிடேரியன்தான். அந்தப் பக்கம் போகலாம்னு பார்த்தப்ப கேமராமேன், எங்களுக்கு வண்டியோட்டுன புது டிரைவரை பார்க்கிங்ல போய் அழைச்சுட்டு வரசொன்னார். நானும் ரொம்ப ஆர்வமா போனேன்.

திரும்பி வந்தப்ப எல்லார் கையிலயும் ஒரு புது பர்ஸ். மீட்டிங்ல கலந்துகிட்டவங்களுக்கு கிப்ட். நான் போய் கேட்டப்ப தீர்ந்துடுச்சு. மற்ற மூணு பேர்கிட்டயும், "எனக்கும் வாங்கி வெச்சிருக்கலாமே"ன்னு கேட்டேன்.

"நீ வாங்கின பிறகு டிரைவரை அழைச்சுட்டு வர்றதுக்காக போயிருக்கலாமே"ன்னு ரொம்ப கூலா சொன்னாங்க. இதுதான் சென்னைன்னு புரியவெச்ச மற்றொரு தருணம்னு உணர்ந்தேன். இதுதாங்க என் அதிர்ஷ்டம்.

இதுல கொடுமை என்னன்னா, அந்த டிரைவர் எதோ சிகிச்சை எடுத்துக்குறதால வெளியில எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டார். நான் போனதும் வேஸ்ட். பர்சும் போச்சு.

நீதி: எல்லாத்தையும் ஜெயிச்சுட்டோம். யாரும் ஏமாத்த முடியாதுன்னு இறுமாப்பா இருந்தா இப்படித்தான் பல்ப் வாங்கணும்.