Search This Blog

அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 அக்டோபர், 2017

சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற திருவாரூர்க்காரர்கள்




தமிழ் நாட்டைப்பொறுத்தவரை 1993ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோள் ஒளிபரப்பில் தனியார் நிறுவனங்கள் இறங்கியபிறகு சிறுகதை, தொடர்கதை, குறு நாவல், நாவல் போன்றவற்றை குறைந்து கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. இப்போது அச்சு ஊடகமாக வெளிவரும் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் கூட பல்வேறு அரசியல் நிகழ்வுகள், சிறப்புக்கட்டுரை என்ற அளவில்தான் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றன. இதைப் பற்றி விவாதித்தால் வாசகர்கள் விரும்புவதில்லை. அதனால் கதைகளுக்கான ஒதுக்கீட்டை குறைத்துவிட்டோம் என்பதுதான் பத்திரிகைகளின் பதிலாக இருக்கிறது.









பல பத்திரிகைகள் சிறுகதைகள் பிரசுரம் செய்வதையே நிறுத்திவிட்ட நிலையில் கல்கி, தினமணி, தினமலர் போன்ற பிரபல இதழ்களும் சில பல சிற்றிதழ்கள், அமைப்புகளும் இன்னும் சிறுகதைப்போட்டிகளை அறிவித்து பல புதிய எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வர காரணமாக இருக்கின்றன.





2017ல் தினமலர் வாரமலர் (திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம் பதிப்புகள்) நடத்திய போட்டியில் நான் கலந்துகொள்ளவில்லை. நான் ஏற்கனவே 2003ல் ஆறுதல் பரிசும், 2010ல் இரண்டாம் பரிசும் பெற்றிருக்கிறேன். தினமலர் மதுரை, சென்னை, கோவை, புதுச்சேரி பதிப்பில் 2007ஆம் ஆண்டு ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறேன். சில ஆண்டுகளாக நான் எழுதுவதில் சரிவர கவனம் செலுத்தாததால் என்னுடைய படைப்புகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது. அதனால் இந்த ஆண்டு கலந்துகொள்ள தோன்றவில்லை.







கடந்த 01.10.2017ல் தினமலர்-வாரமலர் சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியிருந்தது. ஆறுதல் பரிசு விபரத்தில் திருவாரூரை சேர்ந்த சுப ஸ்ரீவெங்கடேஸ்வரன், இந்திரா பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும், விளமல் முகவரியை சேர்ந்த லதா சங்கரலிங்கம் ஆக திருவாரூரைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள விபரம் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.





ஒரு சிறுகதை பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த எழுத்தாளர்கள் அத்துடன் தேங்கி விடாமல் தொடர்ந்து எழுதி சிறப்பிடம் பெற வாழ்த்துகள்.


 இந்திரா இ.ஆ.ப - சிறுகதை தொகுப்பு 60 பக்க சிறிய மின்னூல்








நான் எழுதியவற்றில் ஆறு சிறுகதைகளை மட்டும் தொகுத்து மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். அதை இங்கு இலவசமாக பதிவிறக்கம்செய்து அனைவரும் படிக்கலாம், பகிரலாம்.




திங்கள், 3 மார்ச், 2014

சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...ஒரு குரூப்பாத்தான் அலையுறாய்ங்க?






.




கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.



இது பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.இப்போது என் கவனத்துக்கு வந்த விஷயமே வேறு.சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.



எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.



போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை ஏய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தண்ணியடிக்க மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.



அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.



அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.



"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.



அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.



"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.



"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.



எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.



நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.



எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.



சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.



இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.



அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.



ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.



வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான்.பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.



எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.



பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.



"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.



எழுதப்பட்ட தேதி - 25-மார்ச்-2010


செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஆசையா

எனக்கு எதிர்காலத்தைப் பற்றி எந்த கவலையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்பவர்களுக்கு கூட அதைப் பற்றிய அச்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். நமது எதிர்காலம் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள நினைப்பது மனித இயல்பு. மனிதனுக்கு பசி, தூக்கம், உரிய வயதில் எதிர்பால் ஈர்ப்பு போன்ற விசயங்கள் எவ்வளவு இயல்பானதோ அப்படித்தான் எதிர்காலத்தின் மீதான ஆர்வமும்.



வாழ்வின் பல உண்மைகளை எளிமையாக உணர்த்தக்கூடிய நூல் ஜோதிடம் 360. அந்த நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை இங்கே.

அனுபவ ஜோதிடர் சித்தூர் எஸ்.முருகேசன் எழுதியஜோதிடம் 360 என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை படித்த எனக்கு நம் வாழ்வியலின் பல உண்மைகள் புரிந்தன. (இன்னும் புரிந்துகொள்ள முடியாத கோடிக்கணக்கான மர்மங்கள் மனித வாழ்வில் உண்டு. அதை உணர எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாது.)

1. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும்.

2. தேவையற்றதை வாங்கினால் விரைவில் அத்தியாவசியமானதை விற்க நேரிடும்.

3. முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க இளமையில் கஷ்டப்படுங்கள்.

இந்த மூன்று தத்துவங்களையும் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். வாழ்க்கை குறித்த எவ்வளவோ தத்துவங்கள் இருந்தாலும் இந்த மூன்றை உணர்ந்தாலே வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம். ஜோதிடம் 360 முதல் பதிப்பை முழுவதும் படித்ததும் ஜோதிடத்தின்  அடிநாதமும் இந்த மூன்று தத்துவங்களைத்தான் உணர்த்துகிறது என்பது புரிந்தது.

ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று ஏற்கனவே இறைவன் எழுதிவிடுகிறான். பிறகு எப்படி அவற்றில் இருந்து விடுபட முடியும் என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம்.

நம் பூர்வ ஜென்ம பாவங்கள், நம் முன்னோர்களின் பாவங்கள் போன்றவற்றின் மூலம் நவக்கிரகங்களிடம் நாம் கடன் பட்டிருக்கிறோம். அந்த கடனை தீர்ப்பதன் மூலம் தண்டனையின் கடுமை குறையுமா என்பதான முயற்சிதான் பரிகாரங்கள்.

வண்டி பஞ்சர் ஆக வேண்டும் என்று இருந்தால் ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் தடுக்க முடியுமா என்றால் முடியாது. ஆனால் ஒர்க்ஷாப் அல்லது பஞ்சர் ஒட்டும் கடைக்கு அருகில் வண்டி பஞ்சர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. 

ஜோதிடம் 360 புத்தகத்தில் உள்ள விசயங்களும் இதை அடிப்படையாக கொண்டுதான் இருக்கின்றன. சித்தூர் எஸ். முருகேசன் கூறும் பரிகாரங்கள் உங்களை ஆயிரம், லட்சம் என்று பணம் செலவழித்து அதை, இதை செய்ய வேண்டும் என்று குழப்புவதாக இல்லை. மாறாக நம் வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்த வைக்கிறது.

உதாரணமாக 30 வயது மனிதரின் காய்ச்சலை குணப்படுத்தும் ஒரு மருந்து பல நேரங்களில் மற்றொரு நபருக்கு வேலை செய்வதில்லை. அதற்கு காரணம், ஒவ்வொரு மனிதனின் உடல் இயக்கமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல்தான் எல்லா மனிதர்களுக்கும் கிரகங்கள் ஒரே மாதிரியான நன்மை, தீமைகளை வழங்குவதில்லை.

சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலமாக வாடகை, குத்தகை பணமே ஒரு மாதத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் வேறு சிலர், பழைய கூரை வீட்டை மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுவிட்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க 1 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிடும். இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அதை தவிர்ப்பது எப்படி என்ற வித்தை இந்த நூலை படிப்பவர்களுக்கு ஓரளவாவது வசப்பட வாய்ப்பு உண்டு.

ஒரு பெரிய அரங்கத்தில் ஆயிரம் நாற்காலிகள் இருக்கும். அதில் 900 நாற்காலிகள் காலியாக இருக்கும். அவற்றில் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே உடைந்திருக்கும். மிகச்சரியாக அதில் போய் ஒருவர் உட்காருவார். துரதிர்ஷ்டம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம். ஆனால் இப்படி நடப்பது  ஏதோ ஒரு செயலின் (முற்பிறவி அல்லது நாம் ஏற்கனவே செய்த தவறுகள்) எதிர்வினையாக இருக்கக்கூடும்.

ஆக இப்படி ஒவ்வொரு விஷ­யத்திலும் நம்மை மீறிய ஏதோ ஒரு வரையறைக்குட்பட்ட சக்திக்கு கட்டுப்பட்டுதான் உலகமும் மனித வாழ்வும் இயங்குகிறது. அதைப்புரிந்து கொள்ள இந்த நூல் உதவுகிறது. தாறுமாறாக அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதுதான் கடினம்.  குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டு இயங்கும் நம் வாழ்க்கையை சிக்கலற்றதாக்க பல எளிய வழிகள் இருக்கின்றன. நாம்தான் அவற்றை பின்பற்ற மறுத்து மனம் போன போக்கில் வாழ நினைத்து துன்பங்களில் சிக்கிக்கொள்கிறோம். நாமே உருவாக்கிக்கொள்ளும் சிக்கல்களில் இருந்து விடுபட எளிமையான பாதைகளை காட்டுகிறது ஜோதிடம் 360.

1) ஜோதிடம் 360

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பெண்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்?

உங்கள் வாழ்வை எளிதாக மேம்படுத்த உதவும் நூல் ஒன்றின் அறிமுகம்தான் இந்த பதிவு.

பெரும்பாலும் ஆண்களுக்கு, இவ்வளவு நாள் இப்படி வீணாயிடுச்சே என்ற கவலையிலும், அடுத்து பத்து வருசம் கழித்து இந்த ரோட்டை வாங்கி நம்ம பேர் வெச்சிடணும் என்ற ஒரு சிறிய (?!) குறிக்கோள் இருக்கும்.

ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவில் சீரியலில் பெண்கள் படும் கஷ்டத்தை நினைத்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கும். வீட்டு ஓனர் மூணு மாசத்துல காலி பண்ண சொல்லிட்டானே. இப்ப புதுசா வீடு பிடிச்சு இடம் மாற 10 ஆயிரம் ரூபாய் துண்டு விழுமே என்ற கவலையில் கணவன் இருப்பான். ஆனால் மனைவியைப் பொறுத்தவரை நீ புதுசா பிடிக்கிற வீட்டுல உன் அம்மா, அப்பா தங்கச்சி தம்பியை கொண்டு வந்து நுழைச்சிடாத என்ற அளவில்தான் யோசிப்பாள்.

மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பெற்றவர்களை நடுத்தெருவில் நிறுத்துபவர்களும், பெற்றோர் சொல்லை வேதவாக்காக கொண்டு மனைவியை 24 மணி நேரமும் டார்ச்சர் செய்து கசக்கிப்பிழிந்து வேலை வாங்குவதும்தான் நாம் அதிகமாக காணும் விசயம்.



நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் ஆண்கள் மிக குறைவு. ஒன்று அம்மா மற்றும் சகோதரிகளிடம் அல்லது மனைவியிடம் சரண்டர் ஆகும் ஆண்களே அதிகம். இந்த உண்மை பெண்களுக்கும் தெரியும்.

பெண்கள் அல்லது ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். கணவன்/மனைவி-யின் செயலுக்கு, குணாதிசயத்துக்கு காரணம் என்ன என்று தெரிந்தால் அன்பை கொடுத்து/பெற்று நிம்மதியாக வாழலாம்.

பல குடும்ப சிக்கல்களுக்கு முக்கிய காரணமே ஆண் அல்லது பெண் ஏன் இப்படி செய்கிறார் என்று அதன் காரணத்தைப் புரிந்து சரிசெய்ய நினைக்காமல் மேலோட்டமாக அவர்கள் செய்யும் செயலை மட்டும் தடுக்க/கண்டிக்க நினைப்பதுதான் விபரீதத்துக்கு காரணம்.

இது மாதிரியான சில அடிப்படை உண்மைகளை அதாவது தாய்-தந்தை, சகோதரன்-சகோதரி, கணவன்-மனைவி ஆகியோரின் செயல்பாடுகளுக்கு உளவியல் ரீதியாக என்ன காரணம் இருக்கும் என்பதை எளிமையாக புரிய வைக்கிறது சித்தூர் எஸ்.முருகேசன் எழுதிய ஆண் பெண் வித்தியாசங்கள் நூல்.

பெண்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் என்று இந்த பதிவுக்கு பெயர் வைக்க காரணம், பெரும்பாலான பெண்களின் கவலையை ஸ்கேன் செய்து பார்த்தீர்கள் என்றால் அன்றைய கதை அல்லது அதிகபட்சம் அடுத்த ஒரு வாரத்துக்குள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்களில் பலர், 8 மாசம் கழித்து ஏழாம் பங்காளி வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போகணும், எந்த ட்ரெய்ன்ல டிக்கட் புக்பண்றதுன்னு இப்போ மண்டையை பிச்சுகிட்டு இருப்பாங்க. (பெண்களையும் சாதாரணமாக நினைத்து விட முடியாது. தன் தம்பி அல்லது அண்ணன் வீட்டு விசேஷம் என்றால் இதை தாண்டி ப்ளான் போடும் கில்லாடிகளாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.)

1) ஜோதிடம் 360

சனி, 2 நவம்பர், 2013

தீபாவளியும் படம் பார்த்த அனுபவங்களும் (சினிமா, தீபாவளி, முதல் கதை)



சின்ன வயதில் இருந்தே கதை எழுதும் ஆசை ஒரு ஓரத்தில் இருந்து வந்தது. ஆனால் அதை எப்படி எழுதுவது என்றே தெரியாமல்தான் பல காலம் இருந்தேன். கல்லூரி ஆண்டுமலர் முதன் முதலில் என்னுடைய கதையை பிரசுரம் செய்து முயற்சியை தூண்டி விட்டது. கல்லூரி ஆண்டுமலரில்  வேறு யாரும் கதையே எழுதாததாலும், நான் எழுதிய கதையில் (?!) கொஞ்சமாக மாணவர் சமுதாயத்துக்கு செய்தி இருந்ததாலும் பிரசுரம் செய்து விட்டார்கள். ஆனால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்பியபோதெல்லாம் பல்புதான்.

ரா.கி.ர எழுதிய எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தை படித்த
பின்புதான் கதையை எப்படி வடிவமைப்பது என்ற வித்தை கொஞ்சூண்டு அளவில் லேசாக எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அதன்பிறகு நான் எழுதிய பல கதைகள் பரிசு வாங்கித்தந்திருந்தாலும், 2003 ஆம் ஆண்டு கொஞ்சம் ஸ்பெசல்தான்.

2003 ஆம் ஆண்டு திருச்சி மாலைமுரசு பொங்கல் மலரில் முதல் சிறுகதை பிரசுரமானது. (கல்லூரி ஆண்டுமலர்கள் தவிர்த்து)

தொடர்ந்து மூன்று நான்கு கதைகள் வந்தாலும், 2003 தினமலர்-வாரமலர் (திருச்சி, வேலூர்) டிவிஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் முகங்கள் என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றது. போட்டி முடிவுகள் தீபாவளிக்கு முன்பே வெளிவந்து விட்டதால் ஒரு சின்ன சந்தோசம். அதற்கடுத்த வருடங்களில் எல்லாம் ஆறுதல் பரிசு கதைகள் எழுதியவர்களின் புகைப்படங்களையும் குறிப்பையும் பிரசுரித்தார்கள். ஆனால் என்னிடம் போட்டோ, குறிப்பு வாங்கினாலும் கதை மட்டும்தான் பிரசுரமானது.

அதிலும் ஆறுதல் பரிசுக்கதை பட்டியலில் 5வதாக என்னுடைய கதை வெளிவரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து, அடுத்து ஒவ்வொரு வாரமும் காலை 5 மணியில் இருந்து எதிர்பார்த்து ஏமாறுவது வாடிக்கையாகிப்போனது. கடைசியாக 10வது கதையாகத்தான் என்னுடையது பிரசுரமானது. ஆனால் சிறிய கதையாக இருந்தாலும் வண்ண ஓவியத்துடன் 4 பக்க கதையாக பிரசுரம் ஆனதுதான் ஒரே ஆறுதல்.

2003ல் மாலைமுரசு தீபாவளி மலரில் நான் அனுப்பிய கவிதை மூன்றாம்பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளி குங்குமச்சிமிழ் என்று அறிவித்தார்கள். நாலு மாதம் எந்த தகவலும் அவர்கள் பத்திரிகையில் இருந்து வராததால் நானும் மறந்துவிட்டேன். திடீரென்று ஒருநாள் கடிதம் அனுப்பியிருந்தார்கள். எடுத்துப்பார்த்தால் அன்று மாலை 4 மணிக்கு திருச்சி பேர்ட்ஸ் ரோட்டில் உள்ள மாலை முரசு அலுவலகத்திற்கு பரிசு வாங்கிக்கொள்ள வர சொல்லி அந்த கடிதம் இருந்தது.

அப்போது ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தேன். திருவாரூர் கிளையில் நான் ஒரு ஆள்தான். அதனால் காரைக்கால் தலைமை அலுவலகத்துக்கு வேறு எதோ காரணம் சொல்லிவிட்டு மதியம் 12 மணிக்கு திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பஸ் ஏறிவிட்டேன். ஏற்கனவே 1999 தேர்தல் சமயத்தில் ஒரு நாள் இரவில் ஏதோ விளம்பரம் எடுத்துக்கொண்டு மாலைமுரசு, மாலை மலர் ஆகிய அலுவலகங்களுக்கு சென்ற ஞாபகம் இருந்தது. அதனால் முகவரி கண்டு பிடிக்க அலையாமல் சென்றுவிட்டேன். கதை,கவிதை ஆகியவற்றில் தலா மூன்று பேர் வீதம் ஆறு பேருக்கும் பரிசு வழங்கியதை போட்டோவுடன் மாலைமுரசு நாளிதழில் அடுத்த நாளே பிரசுரமானது.

அதைப்பார்த்து திருவாரூர் கடைத்தெருவில் இருந்த பலர் என்னிடம் விசாரித்தார்கள். இவ்வளவு கவனமாகவா பேப்பர் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அந்த போட்டோக்கள் வெளியான ஃபுட் நோட்டில்தான் திருவாரூர் சரவணன் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நானும் அதன் பிறகு வேறு சில கதைகளுக்கு புனைப்பெயர் வைத்து
அனுப்பினாலும் அது எப்படியோ திருவாரூர் சரவணன் என்றே தொடர்ந்து நாலைந்து முறை பிரசுரமானது. அப்படியே இருக்கட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.

இப்போதெல்லாம் இருபத்து நான்கு மணி நேரமும் தொல்லைக்காட்சிகளில் ஏதாவது ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. எதுவுமே குறைவாக கிடைக்கும்போதுதான் போற்றப்படும். மிதமிஞ்சினால் அலட்சியம்தான் மிஞ்சும் என்பதற்கு சினிமாவும் விதிவிலக்கல்ல. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இப்போதும் திரையரங்குகளில் அதிகமாக கூடுபவர்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்தான்.

சினிமாக்கள் தொலைக்காட்சிகளில் சிரிப்பாய் சிரிக்கத்தொடங்கும் முன்பு எல்லாம் தீபாவளி விடுமுறையில் எங்கள் ஊரில் உள்ள 5 திரையரங்குகளிலும் வெளியான படங்களைப் பார்த்துவிட்டு வந்து ஒரு மாணவன் எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புவான். அவன் பெயர் செந்தில் முருகன். 2 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை நாங்கள் ஒன்றாக படித்தோம். (1988-92) நன்றாக படம் வரையும் அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. அதே போல் இன்னும் சிலர் குறைந்தது 5ல் 3 படங்களையாவது பார்த்துவிட்டுதான் வருவார்கள்.  என்னால் ஒரு படம் கூட பார்க்க முடியவில்லையே என்று மிகவும் கவலைப்பட்டு மனம் புழுங்கியதுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தால் நம் வாழ்க்கையின் காமெடி சீக்சென்சில் இதுவும் ஒன்றாக உணர முடிகிறது.

அதன் பிறகு 1993ல் ஏற்கனவே திருவாரூரில் ரிலீசாகாததால் சோழா தியேட்டரில் ஜென்டில்மேன் படம் தீபாவளிக்கு திரையிடப்பட்டிருந்தது. அந்த தியேட்டரில் பணியாற்றிய ஒருவரின் அண்ணன் மகள் எங்கள் வீட்டின் ஒரு போர்சனில் குடியிருந்தார். அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக என்னையும் அந்த பெண்ணின் மகனையும் அனுப்பி வைத்தார்கள். அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் குறைந்தது 5 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிடப்படுவது உறுதி.

நாங்கள் மதியம் ஒண்ணரை மணிக்கு தியேட்டருக்கு போனபோது இரண்டாவது காட்சியின் இடைவேளை முடிந்து படம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் மூன்றாம் வகுப்பு டிக்கட்டை (2 ரூபாய்) எங்கள் இரண்டு பேருக்கும் கிழித்து கொடுத்து 3 மணி காட்சியை பார்க்க சொல்லிவிட்டார். எனக்கு பைசா செலவில்லாமல் ஜென்டில்மேன் படக்காட்சி.
1994ல் அதே சோழா தியேட்டர். நம்மவர் படம் ரிலீஸ். திரைக்கு பின்னால் உள்ள ஸ்பீக்கர்களை அப்போதுதான் கூடுதல் திறனுடன் மாற்றினார்கள். நம்மவர் படத்தின் ஆரம்ப காட்சியில் கல்லூரியில் கலவரம் நடக்கும். கமல்ஹாசன் வருவதை காட்டியவுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து உதைத்து அமைதியை கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் ஏமாத்திட்டாரே... இதெல்லாம் படமா என்று திட்டினேன். ஆக்சன் பிளாக்குகளை எதிர்பார்க்கும் வயது அது. (8ஆம் வகுப்பு படித்த சமயம்) அதுவரை நான் பார்த்திருந்த படங்கள் பெரும்பாலும் அந்த வகைதானே.

1995ல் சோழாவில் முத்து படம் ரிலீஸ். நான்கு நாட்கள் கழித்துதான் போனேன். காலையில் எட்டே முக்காலுக்கு சென்றுவிட்டேன். 50 பேர் கூட இருக்க மாட்டார்கள். ஆனால் 9 மணிக்கு சரியாக படத்தை திரையிட்டுவிட்டார்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக கதவைத்திறந்து கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். எதுவரைக்கும் என்றால், ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்து படம் போட்டு ரொம்ப நேரமாச்சா தம்பி என்று கேட்டார். நான் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன்பே இடைவேளை என்று லைட்டைப்போட்டார்கள்.

1996 பொங்கலுக்கு நடேஷ் தியேட்டரில் பரம்பரை, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு, சிவசக்தி, பாஞ்சாலங்குறிச்சி என்று நன்றாக ஓடிய படங்கள் (சிவசக்தி திருவாரூரில் நன்றாகத்தான் ஓடியது.) அதிகம். அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் மாலை வேளையிலும், சனி, ஞாயிறிலும் தியேட்டரில்தான் இருப்பேன்.

1996 தீபாவளி அன்று பாஞ்சாலங்குறிச்சி படப்பெட்டி வரவில்லை. ஏன் இப்படி லேட் செய்யுறாங்க என்று பேசிக்கொண்டிருந்தபோது, பிரசாத் பிலிம் லேபில் ஒரு பிரிண்ட் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். ஆனால்
ஜெமினி கலர் லேபில் 1 லட்சம் ரூபாய்தான். அதனால் எல்லாரும் ஜெமினியில் கொடுத்துவிடுகிறார்கள். அதுவும் நாலு நாளைக்கு முன்பு சென்சார் சர்டிபிகேட் வாங்கினால் அதன் பிறகு வசனம், காட்சிகளை சென்சார் சொன்ன மாதிரி திருத்தி பிரிண்ட் போடுறது சாமானியமா என்பார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. 







தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர் உட்பட டைட்டில்கள் மஞ்சள் கலரில் ஓட ஆரம்பித்தால் பெரும்பாலும் அது ஜெமினி கலர் லேப்பில் தயாரான பிரிண்ட் ஆக இருக்கும். எழுத்துக்கள் வெள்ளைக்கலரில் லேசான ட்ராப் ஷேடோவில் இருந்தால் அது பிரசாத் லேப் என்று கூறும் அளவுக்கு எல்லாவற்றையும் கவனிப்போம். பெரும்பாலும் அந்த கணிப்பு சரியாக இருக்கும்.

இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு 50 முதல் 1000 பிரிண்ட் என்றாலும் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் திரையிடப்படுவதால் சிரமம் இல்லை. அப்போதெல்லாம் திருச்சி ஏரியாவில் 10 முதல் 12 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனாலும் படப்பெட்டி தாமதத்தை தவிர்க்க முடியாது. அதிலும் பண்டிகை தினங்களில் 7 முதல் 10 படங்கள் ரிலீசான காலம் அது.

பாஞ்சாலங்குறிச்சி படத்திற்கு தேவா இசை. வந்தியளா... ஆன்னா... ஆவன்னா...ஆகிய இரண்டு குத்துப்பாட்டு, ஜென்டில்மேன் படத்தில் உசிலம்பட்டி பெண்குட்டி பாடல் மெட்டை நினைவு படுத்தும் ஹரிஹரன் பாடிய ஒரு பாட்டு ( உன் உதட்டோரம் சிவப்பை மருதாணி கடனா கேட்கும்...) என கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட். படப்பெட்டி வராததால் ஏற்கனவே ஓடிய இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்ற டப்பிங் படத்தை திரையிட வேண்டிய கட்டாயம். சரி... பாடல்களையாவது போட்டு ஹவுஸ்புல்லான தியேட்டரில் ரசிகர்களை சந்தோசப்படுத்தலாம் என்று பார்த்தால் கேசட் பிளேயரில் பெல்ட் அறுந்துவிட்டது. எப்போதும் புரொஜக்டர் ரூமில் இதெல்லாம் ஸ்பேர் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்போது இல்லை. கடைகளும் தீபாவளிக்கு விடுமுறை என்பதால் பாடல்களும் போட முடியவில்லை. ஏதோ தியானக்கூடம் மாதிரி திரையரங்கில் அமைதி.

எந்த இசையும் இல்லாமல் வெல்வெட் ஸ்கிரீனை மேலே தூக்கும் ஸ்விட்சை அழுத்துவோம். கலர் பல்புகள் எரிய ஸ்கிரீன் மேலெழும்புவதை பார்த்து ரசிகர்கள் ஓ வென்று அலறுவார்கள். இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்ற அந்த டப்பிங் படத்தில் படம் ஆரம்பிக்கும்போது சென்சார் சர்டிபிகேட் காப்பி கிடையாது, (ஜெராக்ஸ் காப்பியை பெட்டியில் வைத்து அனுப்பியிருந்தார்கள் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) நன்றி கார்டுகள் எதுவும் கிடையாது. வெல்வெட் ஸ்கிரீன் முக்கால்வாசி மேலெழும்பியதுடன் புரொஜக்டரை ஆன் செய்ததுடன், சைடில் இருக்கும் ஸ்பீக்கர் ஸ்விட்சுகளையும் ஆன்செய்துவிடுவோம். 1980களில் வரும் படங்களில் கலர் கலரான பின்புலத்தில் டைட்டில் வருமே அப்படி தொடங்கும் அந்த படம்.

இரண்டு பாடல்கள்தான். அதிலும் இடைவேளைக்கு பின்பு வரும் ஒரு பாடலில் நடுவில் வரும் டிரம்ஸ் இசைக்கு லேசாக சவுண்ட் அதிகமாக வைத்ததுடன் சரி. இவ்வாறாக 1996 தீபாவளி கடந்து எங்களை கடந்து சென்றது.

1997ல் ஜுலை மாதம் சூரியவம்சம் படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என்று அனைவருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த படம். திருவாரூர் சோழா தியேட்டரில் சுமார் 90 நாட்கள் ஓடி முடிந்திருந்தது. அங்கே சத்யராஜின் பெரியமனுசன்,
தைலம்மையில் சரத்குமார் நக்மா நடித்த ஜானகிராமன், நடேஷில் பொற்காலம். பாரதிகண்ணம்மா மூலம் சேரனின் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் தீபாவளிக்கு ரிலீசான அந்த படம் பொங்கல் வரை ஓடியது. அப்போது சிலமாதங்கள் பத்தாம் வகுப்பு முடிந்த உடன் படிப்பை தொடராமல் ஐடிஐ க்கு அப்ளிகேசன் போட்டுவிட்டு கிடைக்கவில்லை என்று நான் செங்கம் தியேட்டரில் வேலை பார்த்தேன். அங்கே ஜூராசிக் பார்க் படத்தின் இரண்டாம் பாகம் தி லாஸ்ட் வேர்ல்டு திரையிடப்பட்டது.

அடுத்த ஆண்டு 1998ல் செங்கத்தில் டைட்டானிக், தைலம்மையில் புதுமைப்பித்தன், நடேஷில் சேரனின் தேசியகீதம்  இவற்றில் தைலம்மையில் புதுமைப்பித்தன் படப்பெட்டி வராததால் டைட்டானிக் இரண்டு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. 1998ல் 22 நாட்கள் செங்கம் தியேட்டரில் ஓடிய டைட்டானிக் தினசரி சுமார் 10 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்தது என்று நினைக்கிறேன். நிச்சயமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த தியேட்டருக்கு அது பெரிய வசூல்தான். அதற்கு முக்கிய காரணம் அந்த காலகட்டத்தில் திருவாரூரைப் பொறுத்தவரை சவுண்ட், லைட் இரண்டுமே செங்கத்தில்தான் நன்றாக இருக்கும் என்பார்கள்.

1999 தமிழ் வருடப்பிறப்பு சமயத்தில் செங்கத்தில் ஆனந்தப்பூங்காற்றே திரையிடப்பட்டது. அப்போது ஆப்ரேட்டர் ஒருவர் லீவ் போட்டு சென்றதால் ஆக்டிங் டியூட்டி பார்த்த பிறகு மீண்டும் பிளஸ் டூ படிப்பை தொடர வேண்டும் என்று பாதையை மாற்றினேன். திரையரங்குக்குள்ளான என் அனுபவம் அதன் பிறகு இல்லை.

1999 தீபாவளி அன்று தைலம்மையில் முதல்வன் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. 2000ல் தெனாலி. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் என்னைப்பொறுத்தவரை ஏமாற்றமாகத்தான் இருந்தது. 2001ல் ஆளவந்தான், 2002 ல் ரமணா. 2003ல் தீபாவளிக்கு மறுநாள் பிதாமகன். அதன்பிறகு தீபாவளி அன்று படம் பார்ப்பதை விட்டுவிட்டேன். பிறகு வந்த தீபாவளி அன்று எல்லாம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்கள், மதியத்தில் தூக்கம் என்றுதான் கழிந்தது.

2010ல் தீபாவளியின் போது தினமலரில் பணியாற்றினேன். முதல்நாள் மிக அதிக அளவில் பக்கங்கள் டிசைன் செய்து கொடுத்துவிட்டு பரபரப்பாக முதல் நாள் இரவு 9 கிளம்பிய நினைவு இருக்கிறது. வெளியில் பணியாற்றிய போது தீபாவளிக்கு போனஸ் என்றெல்லாம் எதுவும் நான் பெரிதாக வாங்கியதில்லை.

2003ல் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது வேலைக்கு சேர்ந்து 1 மாதம் கூட ஆகாததால் ஒன்றும் இல்லை.

2004ல் நூற்றாண்டு கண்ட கம்பெனி ஒன்றில் தீபாவளி வரை 6 மாத காலம் பணியாற்றியதற்கு சுமாராக 1000 ரூபாய் அளவில் போனஸ் கிடைத்தது. அது ஒரு மேனுபேக்சரிங் கம்பெனி. அதனால் வழக்கமாக தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாகவே உற்பத்தி செய்த பொருட்களை பார்சலில் அனுப்பிவிடுவார்கள். அந்த ஆண்டு வியாழக்கிழமை தீபாவளி என்பதால் செவ்வாய்கிழமை மதியமே போனஸ் கொடுத்து ஞாயிறு வரை லீவு விட்டுவிட்டார்கள். சம்பளத்துடன் கூடிய அந்த லீவுதான் எக்ஸ்ட்ரா போனஸ்.

2010ல் கூரியர் கம்பெனியில் ஒரு சிறிய தொகை போனஸ் கிடைத்தது. அதே சமயம் தினமலரில் வேலைக்கு சேர்ந்து 40  நாட்கள் மட்டுமே ஆனதால் அதுவரை சம்பளம், போனஸ் எதுவும் இல்லாமல் 500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு கிப்ட் பாக்ஸ் ஒன்றும், 1 கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரமும் கிடைத்தது. அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு வங்கி மேலாளர் எங்கள் அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு கிலோ ஸ்வீட் கொடுத்து வாழ்த்து சொன்னார்.

2011ல் நாம சொந்தமாக அலுவலகம் திறந்துவிட்டதால் போனஸ் கொடுக்கவோ, வாங்கவோ வேலையில்லை. அப்போது நம்ம அலுவலகம் இருந்த கட்டிடத்திற்கு வாட்ச்மேன் யாரும் கிடையாது. அதனால் போனஸ் கொடுக்க யாருமில்லை. இப்போது 2012,13 இரண்டு ஆண்டும் நம் அலுவலகம் இயங்கும் வளாகத்திற்கு வாட்ச்மேன், கூட்டி சுத்தம் செய்யும் ஒரு வயதான அம்மா இருப்பதால் என்னால் முடிந்த மிகச்சிறிய தொகை ஒன்றை தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னதாகவே கொடுத்து விடுவதை வழக்கமாக்கிவிட்டேன். நம்ம அலுவலகத்தில் என்னைத்தவிர யாரும் இல்லாததால் பணியாளருக்கு போனஸ் கொடுக்கும் வேலை இல்லை. பார்ப்போம்... அடுத்த வருடம் நாமும் போனஸ் கொடுக்கும் அளவுக்கு
தொழிலை வளர்க்க முடிகிறதா என்று...

எக்ஸ்ட்ரா போனஸ்
கொஞ்சம் வேலை இருந்ததால் காலை 8.30 மணிக்கே நம்ம அலுவலகத்துக்கு போனேன். தியேட்டர் ரொம்ப அமைதியா இருந்துச்சு. வேலை பார்த்துகிட்டு இருக்கும்போது திடீர்னு பேண்டு வாத்தியம், பட்டாசுன்னு அமர்க்களம்... வெளியில் எட்டிப்பார்த்தால் கார்த்தி ரசிகர்கள் கொண்டாட்டம்.

அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாத வரை இது மாதிரி கொண்டாட்டங்கள் எல்லாம் ஓ.கே... இளைமையில இது மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் இல்லைன்னா அப்புறம் என்ன அது வாழ்க்கை?!.............


தீபாவளியும் படம் பார்த்த அனுபவங்களும்

சின்ன வயதில் இருந்தே கதை எழுதும் ஆசை ஒரு ஓரத்தில் இருந்து வந்தது. ஆனால் அதை எப்படி எழுதுவது என்றே தெரியாமல்தான் பல காலம் இருந்தேன். கல்லூரி ஆண்டுமலர் முதன் முதலில் என்னுடைய கதையை பிரசுரம் செய்து முயற்சியை தூண்டி விட்டது. கல்லூரி ஆண்டுமலரில்  வேறு யாரும் கதையே எழுதாததாலும், நான் எழுதிய கதையில் (?!) கொஞ்சமாக மாணவர் சமுதாயத்துக்கு செய்தி இருந்ததாலும் பிரசுரம் செய்து விட்டார்கள். ஆனால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்பியபோதெல்லாம் பல்புதான்.

ரா.கி.ர எழுதிய எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தை படித்த
பின்புதான் கதையை எப்படி வடிவமைப்பது என்ற வித்தை கொஞ்சூண்டு அளவில் லேசாக எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அதன்பிறகு நான் எழுதிய பல கதைகள் பரிசு வாங்கித்தந்திருந்தாலும், 2003 ஆம் ஆண்டு கொஞ்சம் ஸ்பெசல்தான்.

2003 ஆம் ஆண்டு திருச்சி மாலைமுரசு பொங்கல் மலரில் முதல் சிறுகதை பிரசுரமானது. (கல்லூரி ஆண்டுமலர்கள் தவிர்த்து)

தொடர்ந்து மூன்று நான்கு கதைகள் வந்தாலும், 2003 தினமலர்-வாரமலர் (திருச்சி, வேலூர்) டிவிஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் முகங்கள் என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றது. போட்டி முடிவுகள் தீபாவளிக்கு முன்பே வெளிவந்து விட்டதால் ஒரு சின்ன சந்தோசம். அதற்கடுத்த வருடங்களில் எல்லாம் ஆறுதல் பரிசு கதைகள் எழுதியவர்களின் புகைப்படங்களையும் குறிப்பையும் பிரசுரித்தார்கள். ஆனால் என்னிடம் போட்டோ, குறிப்பு வாங்கினாலும் கதை மட்டும்தான் பிரசுரமானது.

அதிலும் ஆறுதல் பரிசுக்கதை பட்டியலில் 5வதாக என்னுடைய கதை வெளிவரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து, அடுத்து ஒவ்வொரு வாரமும் காலை 5 மணியில் இருந்து எதிர்பார்த்து ஏமாறுவது வாடிக்கையாகிப்போனது. கடைசியாக 10வது கதையாகத்தான் என்னுடையது பிரசுரமானது. ஆனால் சிறிய கதையாக இருந்தாலும் வண்ண ஓவியத்துடன் 4 பக்க கதையாக பிரசுரம் ஆனதுதான் ஒரே ஆறுதல்.

2003ல் மாலைமுரசு தீபாவளி மலரில் நான் அனுப்பிய கவிதை மூன்றாம்பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளி குங்குமச்சிமிழ் என்று அறிவித்தார்கள். நாலு மாதம் எந்த தகவலும் அவர்கள் பத்திரிகையில் இருந்து வராததால் நானும் மறந்துவிட்டேன். திடீரென்று ஒருநாள் கடிதம் அனுப்பியிருந்தார்கள். எடுத்துப்பார்த்தால் அன்று மாலை 4 மணிக்கு திருச்சி பேர்ட்ஸ் ரோட்டில் உள்ள மாலை முரசு அலுவலகத்திற்கு பரிசு வாங்கிக்கொள்ள வர சொல்லி அந்த கடிதம் இருந்தது.

அப்போது ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தேன். திருவாரூர் கிளையில் நான் ஒரு ஆள்தான். அதனால் காரைக்கால் தலைமை அலுவலகத்துக்கு வேறு எதோ காரணம் சொல்லிவிட்டு மதியம் 12 மணிக்கு திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பஸ் ஏறிவிட்டேன். ஏற்கனவே 1999 தேர்தல் சமயத்தில் ஒரு நாள் இரவில் ஏதோ விளம்பரம் எடுத்துக்கொண்டு மாலைமுரசு, மாலை மலர் ஆகிய அலுவலகங்களுக்கு சென்ற ஞாபகம் இருந்தது. அதனால் முகவரி கண்டு பிடிக்க அலையாமல் சென்றுவிட்டேன். கதை,கவிதை ஆகியவற்றில் தலா மூன்று பேர் வீதம் ஆறு பேருக்கும் பரிசு வழங்கியதை போட்டோவுடன் மாலைமுரசு நாளிதழில் அடுத்த நாளே பிரசுரமானது.

அதைப்பார்த்து திருவாரூர் கடைத்தெருவில் இருந்த பலர் என்னிடம் விசாரித்தார்கள். இவ்வளவு கவனமாகவா பேப்பர் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அந்த போட்டோக்கள் வெளியான ஃபுட் நோட்டில்தான் திருவாரூர் சரவணன் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நானும் அதன் பிறகு வேறு சில கதைகளுக்கு புனைப்பெயர் வைத்து
அனுப்பினாலும் அது எப்படியோ திருவாரூர் சரவணன் என்றே தொடர்ந்து நாலைந்து முறை பிரசுரமானது. அப்படியே இருக்கட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.

இப்போதெல்லாம் இருபத்து நான்கு மணி நேரமும் தொல்லைக்காட்சிகளில் ஏதாவது ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. எதுவுமே குறைவாக கிடைக்கும்போதுதான் போற்றப்படும். மிதமிஞ்சினால் அலட்சியம்தான் மிஞ்சும் என்பதற்கு சினிமாவும் விதிவிலக்கல்ல. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இப்போதும் திரையரங்குகளில் அதிகமாக கூடுபவர்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்தான்.

சினிமாக்கள் தொலைக்காட்சிகளில் சிரிப்பாய் சிரிக்கத்தொடங்கும் முன்பு எல்லாம் தீபாவளி விடுமுறையில் எங்கள் ஊரில் உள்ள 5 திரையரங்குகளிலும் வெளியான படங்களைப் பார்த்துவிட்டு வந்து ஒரு மாணவன் எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புவான். அவன் பெயர் செந்தில் முருகன். 2 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை நாங்கள் ஒன்றாக படித்தோம். (1988-92) நன்றாக படம் வரையும் அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. அதே போல் இன்னும் சிலர் குறைந்தது 5ல் 3 படங்களையாவது பார்த்துவிட்டுதான் வருவார்கள்.  என்னால் ஒரு படம் கூட பார்க்க முடியவில்லையே என்று மிகவும் கவலைப்பட்டு மனம் புழுங்கியதுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தால் நம் வாழ்க்கையின் காமெடி சீக்சென்சில் இதுவும் ஒன்றாக உணர முடிகிறது.

அதன் பிறகு 1993ல் ஏற்கனவே திருவாரூரில் ரிலீசாகாததால் சோழா தியேட்டரில் ஜென்டில்மேன் படம் தீபாவளிக்கு திரையிடப்பட்டிருந்தது. அந்த தியேட்டரில் பணியாற்றிய ஒருவரின் அண்ணன் மகள் எங்கள் வீட்டின் ஒரு போர்சனில் குடியிருந்தார். அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக என்னையும் அந்த பெண்ணின் மகனையும் அனுப்பி வைத்தார்கள். அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் குறைந்தது 5 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிடப்படுவது உறுதி.

நாங்கள் மதியம் ஒண்ணரை மணிக்கு தியேட்டருக்கு போனபோது இரண்டாவது காட்சியின் இடைவேளை முடிந்து படம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் மூன்றாம் வகுப்பு டிக்கட்டை (2 ரூபாய்) எங்கள் இரண்டு பேருக்கும் கிழித்து கொடுத்து 3 மணி காட்சியை பார்க்க சொல்லிவிட்டார். எனக்கு பைசா செலவில்லாமல் ஜென்டில்மேன் படக்காட்சி.
1994ல் அதே சோழா தியேட்டர். நம்மவர் படம் ரிலீஸ். திரைக்கு பின்னால் உள்ள ஸ்பீக்கர்களை அப்போதுதான் கூடுதல் திறனுடன் மாற்றினார்கள். நம்மவர் படத்தின் ஆரம்ப காட்சியில் கல்லூரியில் கலவரம் நடக்கும். கமல்ஹாசன் வருவதை காட்டியவுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து உதைத்து அமைதியை கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் ஏமாத்திட்டாரே... இதெல்லாம் படமா என்று திட்டினேன். ஆக்சன் பிளாக்குகளை எதிர்பார்க்கும் வயது அது. (8ஆம் வகுப்பு படித்த சமயம்) அதுவரை நான் பார்த்திருந்த படங்கள் பெரும்பாலும் அந்த வகைதானே.

1995ல் சோழாவில் முத்து படம் ரிலீஸ். நான்கு நாட்கள் கழித்துதான் போனேன். காலையில் எட்டே முக்காலுக்கு சென்றுவிட்டேன். 50 பேர் கூட இருக்க மாட்டார்கள். ஆனால் 9 மணிக்கு சரியாக படத்தை திரையிட்டுவிட்டார்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக கதவைத்திறந்து கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். எதுவரைக்கும் என்றால், ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்து படம் போட்டு ரொம்ப நேரமாச்சா தம்பி என்று கேட்டார். நான் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன்பே இடைவேளை என்று லைட்டைப்போட்டார்கள்.

1996 பொங்கலுக்கு நடேஷ் தியேட்டரில் பரம்பரை, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு, சிவசக்தி, பாஞ்சாலங்குறிச்சி என்று நன்றாக ஓடிய படங்கள் (சிவசக்தி திருவாரூரில் நன்றாகத்தான் ஓடியது.) அதிகம். அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் மாலை வேளையிலும், சனி, ஞாயிறிலும் தியேட்டரில்தான் இருப்பேன்.

1996 தீபாவளி அன்று பாஞ்சாலங்குறிச்சி படப்பெட்டி வரவில்லை. ஏன் இப்படி லேட் செய்யுறாங்க என்று பேசிக்கொண்டிருந்தபோது, பிரசாத் பிலிம் லேபில் ஒரு பிரிண்ட் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். ஆனால்
ஜெமினி கலர் லேபில் 1 லட்சம் ரூபாய்தான். அதனால் எல்லாரும் ஜெமினியில் கொடுத்துவிடுகிறார்கள். அதுவும் நாலு நாளைக்கு முன்பு சென்சார் சர்டிபிகேட் வாங்கினால் அதன் பிறகு வசனம், காட்சிகளை சென்சார் சொன்ன மாதிரி திருத்தி பிரிண்ட் போடுறது சாமானியமா என்பார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. 

தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர் உட்பட டைட்டில்கள் மஞ்சள் கலரில் ஓட ஆரம்பித்தால் பெரும்பாலும் அது ஜெமினி கலர் லேப்பில் தயாரான பிரிண்ட் ஆக இருக்கும். எழுத்துக்கள் வெள்ளைக்கலரில் லேசான ட்ராப் ஷேடோவில் இருந்தால் அது பிரசாத் லேப் என்று கூறும் அளவுக்கு எல்லாவற்றையும் கவனிப்போம். பெரும்பாலும் அந்த கணிப்பு சரியாக இருக்கும்.

இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு 50 முதல் 1000 பிரிண்ட் என்றாலும் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் திரையிடப்படுவதால் சிரமம் இல்லை. அப்போதெல்லாம் திருச்சி ஏரியாவில் 10 முதல் 12 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனாலும் படப்பெட்டி தாமதத்தை தவிர்க்க முடியாது. அதிலும் பண்டிகை தினங்களில் 7 முதல் 10 படங்கள் ரிலீசான காலம் அது.

பாஞ்சாலங்குறிச்சி படத்திற்கு தேவா இசை. வந்தியளா... ஆன்னா... ஆவன்னா...ஆகிய இரண்டு குத்துப்பாட்டு, ஜென்டில்மேன் படத்தில் உசிலம்பட்டி பெண்குட்டி பாடல் மெட்டை நினைவு படுத்தும் ஹரிஹரன் பாடிய ஒரு பாட்டு ( உன் உதட்டோரம் சிவப்பை மருதாணி கடனா கேட்கும்...) என கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட். படப்பெட்டி வராததால் ஏற்கனவே ஓடிய இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்ற டப்பிங் படத்தை திரையிட வேண்டிய கட்டாயம். சரி... பாடல்களையாவது போட்டு ஹவுஸ்புல்லான தியேட்டரில் ரசிகர்களை சந்தோசப்படுத்தலாம் என்று பார்த்தால் கேசட் பிளேயரில் பெல்ட் அறுந்துவிட்டது. எப்போதும் புரொஜக்டர் ரூமில் இதெல்லாம் ஸ்பேர் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்போது இல்லை. கடைகளும் தீபாவளிக்கு விடுமுறை என்பதால் பாடல்களும் போட முடியவில்லை. ஏதோ தியானக்கூடம் மாதிரி திரையரங்கில் அமைதி.

எந்த இசையும் இல்லாமல் வெல்வெட் ஸ்கிரீனை மேலே தூக்கும் ஸ்விட்சை அழுத்துவோம். கலர் பல்புகள் எரிய ஸ்கிரீன் மேலெழும்புவதை பார்த்து ரசிகர்கள் ஓ வென்று அலறுவார்கள். இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்ற அந்த டப்பிங் படத்தில் படம் ஆரம்பிக்கும்போது சென்சார் சர்டிபிகேட் காப்பி கிடையாது, (ஜெராக்ஸ் காப்பியை பெட்டியில் வைத்து அனுப்பியிருந்தார்கள் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) நன்றி கார்டுகள் எதுவும் கிடையாது. வெல்வெட் ஸ்கிரீன் முக்கால்வாசி மேலெழும்பியதுடன் புரொஜக்டரை ஆன் செய்ததுடன், சைடில் இருக்கும் ஸ்பீக்கர் ஸ்விட்சுகளையும் ஆன்செய்துவிடுவோம். 1980களில் வரும் படங்களில் கலர் கலரான பின்புலத்தில் டைட்டில் வருமே அப்படி தொடங்கும் அந்த படம்.

இரண்டு பாடல்கள்தான். அதிலும் இடைவேளைக்கு பின்பு வரும் ஒரு பாடலில் நடுவில் வரும் டிரம்ஸ் இசைக்கு லேசாக சவுண்ட் அதிகமாக வைத்ததுடன் சரி. இவ்வாறாக 1996 தீபாவளி கடந்து எங்களை கடந்து சென்றது.

1997ல் ஜுலை மாதம் சூரியவம்சம் படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என்று அனைவருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த படம். திருவாரூர் சோழா தியேட்டரில் சுமார் 90 நாட்கள் ஓடி முடிந்திருந்தது. அங்கே சத்யராஜின் பெரியமனுசன்,
தைலம்மையில் சரத்குமார் நக்மா நடித்த ஜானகிராமன், நடேஷில் பொற்காலம். பாரதிகண்ணம்மா மூலம் சேரனின் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் தீபாவளிக்கு ரிலீசான அந்த படம் பொங்கல் வரை ஓடியது. அப்போது சிலமாதங்கள் பத்தாம் வகுப்பு முடிந்த உடன் படிப்பை தொடராமல் ஐடிஐ க்கு அப்ளிகேசன் போட்டுவிட்டு கிடைக்கவில்லை என்று நான் செங்கம் தியேட்டரில் வேலை பார்த்தேன். அங்கே ஜூராசிக் பார்க் படத்தின் இரண்டாம் பாகம் தி லாஸ்ட் வேர்ல்டு திரையிடப்பட்டது.

அடுத்த ஆண்டு 1998ல் செங்கத்தில் டைட்டானிக், தைலம்மையில் புதுமைப்பித்தன், நடேஷில் சேரனின் தேசியகீதம்  இவற்றில் தைலம்மையில் புதுமைப்பித்தன் படப்பெட்டி வராததால் டைட்டானிக் இரண்டு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. 1998ல் 22 நாட்கள் செங்கம் தியேட்டரில் ஓடிய டைட்டானிக் தினசரி சுமார் 10 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்தது என்று நினைக்கிறேன். நிச்சயமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த தியேட்டருக்கு அது பெரிய வசூல்தான். அதற்கு முக்கிய காரணம் அந்த காலகட்டத்தில் திருவாரூரைப் பொறுத்தவரை சவுண்ட், லைட் இரண்டுமே செங்கத்தில்தான் நன்றாக இருக்கும் என்பார்கள்.

1999 தமிழ் வருடப்பிறப்பு சமயத்தில் செங்கத்தில் ஆனந்தப்பூங்காற்றே திரையிடப்பட்டது. அப்போது ஆப்ரேட்டர் ஒருவர் லீவ் போட்டு சென்றதால் ஆக்டிங் டியூட்டி பார்த்த பிறகு மீண்டும் பிளஸ் டூ படிப்பை தொடர வேண்டும் என்று பாதையை மாற்றினேன். திரையரங்குக்குள்ளான என் அனுபவம் அதன் பிறகு இல்லை.

1999 தீபாவளி அன்று தைலம்மையில் முதல்வன் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. 2000ல் தெனாலி. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் என்னைப்பொறுத்தவரை ஏமாற்றமாகத்தான் இருந்தது. 2001ல் ஆளவந்தான், 2002 ல் ரமணா. 2003ல் தீபாவளிக்கு மறுநாள் பிதாமகன். அதன்பிறகு தீபாவளி அன்று படம் பார்ப்பதை விட்டுவிட்டேன். பிறகு வந்த தீபாவளி அன்று எல்லாம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்கள், மதியத்தில் தூக்கம் என்றுதான் கழிந்தது.

2010ல் தீபாவளியின் போது தினமலரில் பணியாற்றினேன். முதல்நாள் மிக அதிக அளவில் பக்கங்கள் டிசைன் செய்து கொடுத்துவிட்டு பரபரப்பாக முதல் நாள் இரவு 9 கிளம்பிய நினைவு இருக்கிறது. வெளியில் பணியாற்றிய போது தீபாவளிக்கு போனஸ் என்றெல்லாம் எதுவும் நான் பெரிதாக வாங்கியதில்லை.

2003ல் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது வேலைக்கு சேர்ந்து 1 மாதம் கூட ஆகாததால் ஒன்றும் இல்லை.

2004ல் நூற்றாண்டு கண்ட கம்பெனி ஒன்றில் தீபாவளி வரை 6 மாத காலம் பணியாற்றியதற்கு சுமாராக 1000 ரூபாய் அளவில் போனஸ் கிடைத்தது. அது ஒரு மேனுபேக்சரிங் கம்பெனி. அதனால் வழக்கமாக தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாகவே உற்பத்தி செய்த பொருட்களை பார்சலில் அனுப்பிவிடுவார்கள். அந்த ஆண்டு வியாழக்கிழமை தீபாவளி என்பதால் செவ்வாய்கிழமை மதியமே போனஸ் கொடுத்து ஞாயிறு வரை லீவு விட்டுவிட்டார்கள். சம்பளத்துடன் கூடிய அந்த லீவுதான் எக்ஸ்ட்ரா போனஸ்.

2010ல் கூரியர் கம்பெனியில் ஒரு சிறிய தொகை போனஸ் கிடைத்தது. அதே சமயம் தினமலரில் வேலைக்கு சேர்ந்து 40  நாட்கள் மட்டுமே ஆனதால் அதுவரை சம்பளம், போனஸ் எதுவும் இல்லாமல் 500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு கிப்ட் பாக்ஸ் ஒன்றும், 1 கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரமும் கிடைத்தது. அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு வங்கி மேலாளர் எங்கள் அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு கிலோ ஸ்வீட் கொடுத்து வாழ்த்து சொன்னார்.

2011ல் நாம சொந்தமாக அலுவலகம் திறந்துவிட்டதால் போனஸ் கொடுக்கவோ, வாங்கவோ வேலையில்லை. அப்போது நம்ம அலுவலகம் இருந்த கட்டிடத்திற்கு வாட்ச்மேன் யாரும் கிடையாது. அதனால் போனஸ் கொடுக்க யாருமில்லை. இப்போது 2012,13 இரண்டு ஆண்டும் நம் அலுவலகம் இயங்கும் வளாகத்திற்கு வாட்ச்மேன், கூட்டி சுத்தம் செய்யும் ஒரு வயதான அம்மா இருப்பதால் என்னால் முடிந்த மிகச்சிறிய தொகை ஒன்றை தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னதாகவே கொடுத்து விடுவதை வழக்கமாக்கிவிட்டேன். நம்ம அலுவலகத்தில் என்னைத்தவிர யாரும் இல்லாததால் பணியாளருக்கு போனஸ் கொடுக்கும் வேலை இல்லை. பார்ப்போம்... அடுத்த வருடம் நாமும் போனஸ் கொடுக்கும் அளவுக்கு
தொழிலை வளர்க்க முடிகிறதா என்று...

எக்ஸ்ட்ரா போனஸ்
கொஞ்சம் வேலை இருந்ததால் காலை 8.30 மணிக்கே நம்ம அலுவலகத்துக்கு போனேன். தியேட்டர் ரொம்ப அமைதியா இருந்துச்சு. வேலை பார்த்துகிட்டு இருக்கும்போது திடீர்னு பேண்டு வாத்தியம், பட்டாசுன்னு அமர்க்களம்... வெளியில் எட்டிப்பார்த்தால் கார்த்தி ரசிகர்கள் கொண்டாட்டம்.

அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாத வரை இது மாதிரி கொண்டாட்டங்கள் எல்லாம் ஓ.கே... இளைமையில இது மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் இல்லைன்னா அப்புறம் என்ன அது வாழ்க்கை?!.............

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஆரம்பம் - ஆடியோ விழா நடத்துவது அவசியமா?


ஒண்ணுமே இல்லாத மொக்க படங்களுக்கெல்லாம் ஆடியோ ரிலீஸ், டீசர் ரிலீஸ் அப்படி இப்படின்னு பல லட்சம் (சமயங்களில் கோடிகள்) செலவில் விழா நடத்துவார்கள். அது மட்டுமில்லாம மூன்றாவது காட்சியிலேயே முப்பது பேர் கூட பார்க்காத படத்துக்கு திரையரங்குகளில் திருவிழா மாதிரி கூட்டம் அப்படி இப்படின்னு சில தொல்லைக்காட்சிகளில் ஆத்து ஆத்துன்னு சிலர் ஆத்திகிட்டு இருப்பாங்க. (நான் எல்லாரையும் சொல்லலை.)

ஆனா ஆரம்பம் படத்துக்கு போட்டோ ஷூட் நடத்த கூட எங்களுக்கு நேரமில்லை. 120 நாள் படப்பிடிப்பு அப்படி இப்படின்னு விஷ்ணுவர்தன் பேட்டியில் சொல்லியிருப்பதை பார்க்கவும் இது ஒரு வகை விளம்பர உத்தியோ என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆரம்பம் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் கிடைத்ததுடன் படம் ஒரு முறை பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது என்பதுதான் படம் பார்த்தவர்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது.

படம் பார்த்து முடித்து விட்டு வெளியே வந்ததும் ஆயிரம் குறை சொல்லலாம். ஆனால் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முதல் சீன் பற்றி அடுத்த சீனில் ரசிகன் விமர்சித்துக்கொண்டிருந்தால் படம் காலி என்று இயக்குனர் விக்ரமன் எழுதிய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற புத்தகத்தில்  கூறியிருந்தார். அது உண்மை என்பதை பல படங்கள் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

சென்டிமெண்ட் படங்களில் காட்சி அமைப்புகள், பாடல்கள், நகைச்சுவை என்று எல்லா அம்சங்களும் நன்றாக இருந்தால் மட்டுமே ஹிட் ஆகும். ஆனால் ஆக்சன் படங்களைப் பொறுத்தவரை இவை எல்லாவற்றையும் விட பரபரவென வேகமாக ஓடும் திரைக்கதைதான் முக்கியம். பாட்ஷா, கில்லி, சிவகாசி, சிங்கம் 1, 2 என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அதற்காக படம் ஆரம்பித்ததில் இருந்து எந்த இலக்கும் இல்லாமல் சுட்டுக்கொண்டோ, அடித்துக்கொண்டே இருந்தாலும் படம் கோவிந்தா... 

இன்னொரு முக்கியமான விசயம், ரசிகன் என்ற வரம்பையும் மீறி, சாதாரண மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சம்பவங்கள் ஓரளவாவது இருப்பது நல்லது என்ற தகவலையும் ஆரம்பம் சொல்லியிருக்கிறது. ரசிகன் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு படத்தை பார்க்கும்போது பிடித்தால் போதும் படம் வெற்றிதான்.

புல்லட் ப்ரூப் ஜாக்கெட் விஷயத்தை சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கழித்து அனைவரும் மறந்து விட்ட நிலையில் கதைகருவாக கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். சூழ் நிலைபுரிஞ்சவங்க பிழைச்சுகிட்டாங்க.


ஆனால் விழா அது இது என்று நடத்தி ரசிகனை ஓவராக உசுப்பேற்றி தியேட்டருக்குள் அனுப்பினால் அவன் மனதில் உள்ள பிம்பத்தை விட்டு விலகிய கதையுடன் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் ஊத்திக்கொள்வதும் நடக்கும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை திரைக்கதையாக்க அனைவரும் பயப்பட இதுதான் காரணம். 60 ஆண்டுகளாக அதை மூன்று நான்கு தலைமுறையினர் புத்தகத்தில் படித்து மனதளவில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். அனைவரையும் திருப்தி படுத்தும் விதத்தில் திரைக்கதை அமைக்க முடியுமா என்ற கேள்வியில்தான் அதை எல்லோரும் முயற்சி என்ற அளவிலேயே வைத்திருக்கிறார்கள்.

புது வீட்டை கட்டுவதை விட ஏற்கனவே இருக்கும் வீட்டை மாற்றி நல்லவிதமாக அமைப்பது கடினம். இதே கான்சப்ட்தான் பட விசயத்திலும். ரசிகர்களை கண்டபடி எதிர்பார்க்க வைத்து சூடுபடுவதை விட இப்படி எதையும் பேசாமல் படத்தை விட்டால் படம் பேசும். ஏற்கனவே சில படங்களில் திரையுலகம் பட்ட சூட்டில் ஆரம்பம் படக்குழு இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே நல்லதொரு ஆரம்பமாக இருந்தால் நல்லது.

ஓவர் பேச்சு நம்ம உடம்புக்கு ஆகாது தம்பி என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் சினிமாவுக்கு மட்டுமல்ல... எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

அதிலும் சமீப காலமாக சில திரைப்படங்கள் படும் அவதியைப் பார்க்கும்போது ரொம்பவே அடக்கி வாசிப்பது நல்லது என்று தோன்றுகிறது. ஆடியோ, டி.வி. புரோமோ என்று ஓவர் பில்ட்அப் கொடுப்பதற்கு பதில் பட ரிலீசுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே மக்களுக்கு படம் ரிலீசாகும் செய்தியை கொண்டு போய் சேர்க்கும் விதமாக மட்டும் விளம்பரங்கள் இருந்தால் அது தயாரிப்பாளரின் பர்சுக்கும் நல்லது. ரசிகனும் எதிர்பார்த்து ஏமாற மாட்டான்.

அஜீத் படங்கள் - என் அனுபவம்

வியாழன், 31 அக்டோபர், 2013

ஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா?


சூப்பர்ஸ்டாருக்கு அடுத்தபடியா அஜீத்துக்கும் பெரிய மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு ஆரம்பம் விமர்சனத்துல சிலர் எழுதியிருக்காங்க. அது உண்மைதான் போலிருக்கு. இதுக்கு முன்னால குட்டிப்புலி, சுட்டகதை, முத்துநகரம் டைட்டில்களை வெச்சு பதிவு போட்டதும் வழக்கத்தை விட 4 மடங்கு வாசகர்கள் வருகை இருக்கும். ஆனால் ஆரம்பம் டைட்டிலை வெச்சு இந்த பதிவு போட்டதுமே 3 மணி நேரத்துல 600 பேஜ் வியூ. நானே மிரண்டுட்டேன். நம்ம தளத்துக்கு அது ரொம்ப ஓவர்.

இன்று மாலை 5.14க்கு இந்த பதிவு போட்ட பிறகு இப்போ 8.15 மணி நிலவரப்படி இந்த கணக்கு.

நான் பெரும்பாலும் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. படம் பார்த்தாலும் விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் வளரலைன்னுங்குறது என் எண்ணம். பதிவுகளுக்கு லேபிள் கொடுக்குறப்ப கூட சினிமா, அனுபவம்னு மட்டும்தான் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய அளவுல இருக்குற பிரச்சனையை லேசா மாத்தி தொட்டா பிரச்சனை இல்லைன்னு நினைக்குறேன். 


1999ல முதல்வன் படம் ரிலீசான உடனே ரீல் அ(று)ந்து போற அளவுக்கு லோக்கல் சேனல்களில் ஓட்டப்பட்டாலும் திரையரங்குகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். ரகுவரனுடைய மேக்கப் தமிழகத்தில் உள்ள யாரையுமே நினைவூட்டும்படி அமைந்திருக்காது. அப்படி இருந்தும் அந்த படத்துக்கு அப்படி ஒரு சோதனை. சமீப காலமாக விஸ்வரூபம், தலைவா அப்படின்னு ஒரு சில படங்கள் ஒவ்வொரு ரூபத்துல பிரச்சனைகளை சந்திக்குது. அதைப்பார்த்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரித்ததில் ஊழல் என்று ஒரு கான்செப்டை பயன்படுத்தி திரைக்கதை அமைத்து ஒரு முறை ஜாலியாக படம் பார்க்க வைத்துவிட்டார் என்பதுதான் படம் பார்த்த பெரும்பாலானவர்களின் கருத்து.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாலயே ரிலீஸ் செஞ்சு கல்லா கட்ட இறங்கியிருக்குற படம் ஆரம்பம். புகை, மது பழக்கம் இருந்தால் அவர்களை தேசத்துரோகி போல் பார்த்தது அந்தக்காலம். இப்போ அந்த பழக்கம் இல்லாதவங்க கூட இப்படிப்பட்ட பழக்கம் இருக்குறவங்களை இதுதான் இப்போதைய உலகம்னு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

இணைய தளத்தில் எழுதுபவர்கள் காப்பி அடிச்சு படம் எடுத்தா இப்படியா செய்யுறதுன்னு திட்டுன காலம் போக, Swordfish படத்துல இருந்து அங்கங்க உருவினாலும் இண்ட்ரஸ்டிங்கா எடுத்திருக்காங்கன்னு ஆரம்பம் பட விமர்சனத்துல குறிப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. (இந்த வாசகத்தை முதல்ல குறிப்பிட்ட புண்ணியவான் யாருன்னு தெரியலை. அந்த விமர்சனத்தை காப்பி அடிச்சுதான் பெரும்பாலானோர் பின்தொடர்ந்து எழுதுறாங்கன்னு நினைக்குறேன்.)

இது படத்தின் விமர்சனமோ, கதைச்சுருக்கமோ அல்ல. அவற்றை படிக்க நினைப்பவர்கள் கூகிளாண்டவர்கிட்ட போனாலே போதும். வரிசை கட்டி விமர்சனங்கள் நிற்கும். இருந்தாலும் விமர்சனம்னு நம்பி இளையபாரதத்துக்கு வந்தவங்க ஏமாறாம இருக்க நம்ம ஊர்க்கார நண்பர் எழுதிய விமர்சனம் இங்கே.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் தியேட்டரில் படம் திரையிட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம் ஆப்ரேட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ சினிமா மீதான கிரேஸ் என்னைப் பொறுத்தவரை பத்துப் பனிரெண்டு வயதிற்குள்ளேயே காணாமல் போய்விட்டது.

திருச்சியில் உள்ள மகேஸ்வரி பிக்சர்ஸ் என்ற வினியோகஸ்தர் காதல்கோட்டை படத்தை திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் ரிலீஸ் செய்திருந்தார். திருச்சி ஏரியாவில் இப்போது ஆரம்பம் படம் 38 தியேட்டரில் ரிலீசாகியுள்ளது. ஆனால் தினகரன் விளம்பரத்தில் கூட்டி பார்த்தால் 40 வரும். திருத்துறைப்பூண்டியை இரண்டு முறை டைப் செய்து வைத்திருக்கிறார்கள். இதில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கு பிறகு அதிக தியேட்டரில் ரிலீசாகும் படம் என்ற பில்ட் அப் வேறு. ஆனால் காதல் கோட்டை திருச்சி ஏரியாவில் சுமாராக ஆறு அல்லது எட்டு பிரிண்ட் மட்டுமே வெளியானதாக நினைவு. ஆனால் படம் ஓஹோ என்று ஓட ஆரம்பித்ததும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே ஏகப்பட்ட மவுத் டாக். அந்த படம் திருவாரூரில் ரிலீசாகவில்லை.

ஒரு மாதம் கழித்து வி.சி.குகநாதன் இயக்கிய அஜீத், ரஞ்சித், கீர்த்தனா நடித்த மைனர் மாப்பிள்ளை படம் நான் பகுதி நேரமாக அவ்வப்போது பணியாற்றி வந்த தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது நான் 10ஆம் வகுப்பு படித்த நேரத்தில் காலை நேரத்தில் டியூசன் என்பதால் தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை பெரும்பாலும் அந்த தியேட்டரில்தான் பொழுது போகும். மைனர் மாப்பிள்ளை படத்தின் போஸ்டர் ஒட்டச் சென்ற பையனுடன் நானும் சும்மா பேச்சுத்துணைக்காக சென்றேன். 6, 4, 2 துண்டுகளாக உள்ள போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்ததுமே வழியில் பார்க்கும் மாணவிகள், இளம்பெண்கள் "ஏய்... காதல் கோட்டை படம் வரப்போகுதுடி'' என்று பேசிக்கொண்டு நின்று பார்த்தார்கள். போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த பையன், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா... இந்த தீப்பந்தமெல்லாம் கொளுத்திக்க கூடாதான்னு கவுண்டமணி கேட்குற ஸ்டைல்ல "காதல் கோட்டை மட்டும்தான் பார்ப்பீங்கிளா... மைனர் மாப்பிள்ளை... மேஜர் மாப்பிள்ளை எல்லாம் பார்க்க மாட்டீங்கிளா '' என்று கேட்கவும் அந்த பெண்கள் முகத்தில் வெட்கம்.

அகத்தியனின் முதல் படமான வான்மதியிலும் அஜீத்குமார்தான் ஹீரோ. அதில் தேவா பாடிய பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா பாடல் மிக பிரபலம். அப்போது நான் வேறொரு தியேட்டரில் ஒரு படம் விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாலும் மற்ற தியேட்டர்களில் வந்த படங்களை பார்ப்பதற்கு அவ்வளவாக சூழ்நிலை அமையாது. திருவாரூருக்கு அருகே உள்ள கிராமமான புலிவலத்தில் கருணாநிதி என்ற பெயரில் ஒரு திரையரங்கத்தில் 1998ல் மீண்டும் வான்மதி திரையிடப்பட்டபோது போய் பார்த்தேன். மிஸ் பண்ணாம போய் பார்க்குற அளவுக்கு அந்த படத்தில் எதுவுமே இல்லைதான். ஆனால் வடிவுக்கரசியின் திமிரான வசனங்களை எங்களுடன் படித்த சுந்தர் என்ற நண்பன் அதே மாடுலேசனில் பேசிக் காண்பிப்பான்.

உ.ம்
அரசியல்வாதி : என் பையன் உங்க வீட்டுல வலது கால் எடுத்து வைக்கணும்னு ஆசைப்படுறான்...

வடிவுக்கரசி : காலே இருக்காது பரவாயில்லையா? என்று ரொம்ப இயல்பாக கேட்பார்.

**********************************************************
2002ல் தீபாவளி அன்று சோழா தியேட்டரில் ரமணா பார்த்துவிட்டு மறுநாள்தான் தைலம்மை தியேட்டரில் வில்லன் படம் பார்த்தேன். அதுவும் சூப்பர்ஹிட் படம்தான்.
ஜெமினி படத்தினால் ரசிகர்களுக்கு பரிச்சயமான கிரண் நடித்த படம். குஷ்பு கேட்கும் அட்ரசில் நேசமணி பொன்னையா தெருவை நாசமாநீ போனியா தெரு என்று அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் படிப்பார். சுக்விந்தர்சிங் பாடும் பாடல்களும் பல அந்த மாதிரி ரகம்தான். ஆனாலும் 18 வயதில் என்ன பிடிக்கும் பாடல் சுக்விந்தர் குரலில் ஹிட்டானது.

***********************************************************
அஜித் நடித்த படங்களில் அதிகமுறை நான் பார்த்தது என்னவென்றால் ஆனந்த பூங்காற்றே படம்தான். அதற்கு காரணம், அந்த படம் ஓடிய தியேட்டரில் நான் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் காலை, மதியம் சில நாட்களில் மாலைக்காட்சி வரை மூன்று காட்சிகள் கூட திரையிட்டிருக்கிறேன். மற்ற தியேட்டர்களில் புரொஜக்டர் அறைக்கும், பிலிம் ரீவைண்ட் செய்யும் அறைக்கும் சிறிய தடுப்பு இருக்கும். ஆனால் அந்த தியேட்டரில் பிலிம் ரீவைண்ட் செய்யும் டேபிளை தூக்கி புரொஜக்டரின் அருகில் வைத்துக்கொண்டு இரண்டு வேலையையும் உதவியாளர் இல்லாமல் ஒருவரே பார்க்க வேண்டியிருக்கும். அதனால் அந்த படத்தை அதிக முறை பார்க்க வேண்டியதாயிற்று. திரும்ப திரும்ப பார்த்தாலும் அப்படி பெரிதாக போரடிக்கவில்லை. பாடல்கள் அனைத்தும் ஹிட்.

***********************************************************
படம் ஜவ்வு மாதிரி இழுத்தால் ஆப்ரேட்டர்களே இப்போதெல்லாம் வெட்டிவிடுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா பேட்டிகளில் சொல்லியிருப்பார்.

கட் செய்வது என்றால் பிலிமை வெட்டி ஒட்டிவிடுவதல்ல. 16 ரீல் கொண்ட படம் என்றால் இரண்டு ரீல்கள் கொண்ட ஸ்பூல் என்ற கணக்கில் 8 ஸ்பூல்களில் பிலிம் லோட் செய்யப்பட்டிருக்கும். 4 ஸ்பூலில் இடைவேளை. 8 வது ஸ்பூலில் படம் முடியும். இது பொதுவான கணக்கு. சில படங்களில் 4வது ஸ்பூல் பாதியில் அதாவது 7வது ரீலில் இடைவேளை வைத்திருப்பார்கள். ஸ்பூல் இறுதியில் இடைவேளை வைத்தால் அப்போதும் ஆப்ரேட்டர்கள், உதவியாளர்கள் அந்த நேரத்தில் பிலிமை ரீவைண்ட் செய்வது, கார்பன் மாற்றுவது அல்லது சரிசெய்வது, அடுத்த ஸ்பூல் பிலிமை புரொஜக்டரில் லோட் செய்வது என்று வேலை பார்ப்பார்கள். ஆனால் இடைவேளையில் படம் பார்ப்பவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ரிலாக்சாக இருப்பார்கள். ஆப்ரேட்டர்களும் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பூல் நடுவில் இடைவேளை வைக்கிறார்கள் என்று எனக்கு ஒரு ஆப்ரேட்டர் விளக்கம் கொடுத்தார்.

சுமாராக 18 முதல் 22 நிமிடங்கள் ஒரு ஸ்பூல் ஓடும். (ஆனால் சத்யராஜ் - பிரபு - ரம்பா நடித்த சிவசக்தி என்ற படத்தில் 7 வது இருந்த இறுதி ஸ்பூல் 35 நிமிடங்கள் ஓடும். காதல் கோட்டை படத்தில் ஹோம்லியாக நடித்து புகழ்பெற்ற தேவயானி இந்த படத்தில் நாதின்தின்னா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார். வார்தைகள் காரணமா அல்லது மோசமான அசைவு காரணமா என்று தெரியவில்லை. தேவயானி போர்ஷன் முக்கால்வாசி கட்டாகி தான் வந்தது.)

அப்படி ஒரு ஸ்பூல் முடிந்ததும் அடுத்த புரொஜக்டரை ஆன் செய்து படத்தை தொடர்ச்சியாக ஓட வைப்பதை சேஞ்ச் அடிப்பது என்று தியேட்டரில் உள்ளவர்கள் கூறுவார்கள். நான் தியேட்டருக்கு போன புதிதில் ஆப்ரேட்டர்கள் ரொம்ப பில்டப் கொடுத்து தாங்கள்தான் பிலிம் மாட்டுவது, சேஞ்ச் அடிப்பது என்பதை செய்ய வேண்டும். நீங்கள் எல்லாம் பிலிம் ரீவைண்ட் செய்வது, சிலைட் போடுவது, கார்பனை தொடர்ந்து ஒழுங்காக எரிய வைப்பது ஆகிய வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். கவனத்துடன் செய்தால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நான் நினைப்பேன். ஆங்கிலப்படங்களில் எல்லாம் ஒரு ஸ்பூல் பிலிம் இறுதியில் கலர் லேப்பில் பாசிட்டிவ் பிரிண்ட் தயாராகும்போதே இரண்டு இடங்களில் மார்க் செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்ப்படங்களில் படம் ரிலீசாகும் தியேட்டரில் உள்ள ஆப்ரேட்டர்தான் அதை செய்வார்.

கடைசியில் முடியும் இடத்தில் இருந்து இரண்டு அடி தூரத்தில் ஒன்று, அதற்கு 5 அடி தூரத்தில் ஒன்று என இரண்டு மார்க் செய்ய வேண்டும். முதல் மார்க் விழுந்தவுடன் புரொஜக்டர் மோட்டாரை ஸ்டார்ட் செய்து கொண்டு லீவரை இழுத்து ஷ­ட்டரை ஓப்பன் செய்ய வேண்டும். இரண்டாவது மார்க் விழுந்தவுடன் ஆட்டமேட்டிக் சேஞ்ச் ஓவர் புஷ் பட்டனை அழுத்த வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் புரொக்டரின் ஷ­ட்டர் மூடிக்கொண்டு இந்த புரொஜக்டரின் ­ஷட்டர் ஓப்பன் ஆகும். அத்துடன் ஆடியோ எக்சைட்டர் லேம்ப் முன்னதில் அணைந்து இதில் எரியத்துவங்கும். ஒரு நொடியில் 24 பிரேம்கள் பிக்சர்கேட்டில் கிராஸ் ஆகும். அதில் ஒரே ஒரு பிரேமில்தான் இந்த மார்க் செய்திருப்போம் (அ) செய்யப்பட்டிருக்கும். அதனால் கவனமாக பார்த்தால்தான் அது தெரியும்.

இந்த கணக்கு தப்பாகிப்போகும்போதுதான் திரையில் End of Part 8/ 10 / என்றெல்லாம் பிம்பம் வரும். அதேபோல் ஸ்பூல் Beginning சரியாக மாட்ட வில்லை என்றாலும் படத்தின் இடையில் கட்டம், வட்டம் என்று ஏதேதோ பிம்பங்கள் வந்து செல்லும். அது எதையும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் செய்வதும் ஆப்ரேட்டர்களின் திறமைதான்.

அப்போதெல்லாம் திருவாரூரில் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் ஒரு படம் ரிலீசானால் முதல் காட்சி தவறினால் முதல் நாள் மாலைக் காட்சிக்குள் பார்த்துவிடுவது  என் வழக்கம். அதற்கு காரணம் சினிமா பைத்தியம் என்று கூற முடியாது. தியேட்டர் புரொஜக்டரை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் ஓடும்போதே புரொஜக்டர் ரூமில் இப்போது ஆப்ரேட்டர் என்ன செய்வார் என்று என் மனதில் ஒரு தனி டிராக் ஓடிக்கொண்டிருக்கும். அது தவிர அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள், படத்தை 850 பேர் உட்கார்ந்து பார்த்து ஹவுஸ் ஃபுல் ஆனாலும் சரி, 20பேர் மட்டும் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, குறைந்தது 10 முதல் 20 நிமிட படங்களை கட் செய்து விடுவார்கள்.

அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள் முதல் காட்சியை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்பூலின் இறுதியிலும், ஆரம்பத்திலும் என்ன வருகிறது என்று பார்த்து வைத்துக்கொள்வார்கள்.

கடைசியில் 3 முதல் ஏழெட்டு நிமிடங்கள் துண்டாக ஏதாவது காட்சி இருந்தால் அது தொடங்குவதற்கு முன்பே அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டால் தீர்ந்தது கதை. பிறகு முதல் புரொஜக்டரை நிறுத்திவிட்டு, அப்படியே பிலிமை கழட்டி ரீவைண்ட் செய்து வைத்துவிடுவார்கள். ஸ்பூலின் இறுதியில் பாடல் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் நம்ம ஆப்ரேட்டர்கள் கவலையே படமாட்டார்கள். அடுத்த ரீலை குறிப்பிட்ட காட்சி வரை பார்வேர்டாக சுற்றிவைத்து அந்த காட்சியில் இருந்து ஸ்டார்ட் செய்து திரையிடுவார்கள். இப்படி 20 நிமிடம் வரை படங்கள் காலியாகிவிடும் என்பதால் எனக்கு பார்க்க பிடிக்காது. நான் இருந்த தியேட்டரில் ரொம்ப ரொம்ப அரிதாக என்றாவது ஒரு நாள் இப்படி நடக்கும். ஆனால் அந்த தியேட்டர் மாதிரி ஹவுஸ்புல் ஆன காட்சியில் விறுவிறுப்பான படங்களில் கூட கை வைக்கும் வேலை இருக்காது.

உதாரணத்துக்கு படையப்பா படத்தை எடுத்துக்கொள்வோம். படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் செளந்தர்யா ரோஜாப்பூவை பறித்து தலையில் வைத்திருப்பதை பிடுங்கி தரையில் போட்டு மிதித்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் செல்லும் காட்சி முடிந்ததுமே பட்டென்று மெசின் சேஞ்ச் ஓவர் ஆனது. அடுத்த காட்சி ஐடியா மணி செத்துட்டான். உங்க தம்பிங்கதான் சாராயம் விக்கிறாங்க என்று செந்தில் கூறும் காட்சி ஆரம்பம்.

படையப்பா படத்தை திரும்பவும் சன்டிவியில் பார்க்கும்போதுதான் வடிவுக்கரசி மகளுக்கு ஆறுதல் சொல்வது, குளத்தங்கரையில் இருந்து சாத்வீகம், அது இது என்று ரஜினி சொல்வது, மவுத்ஆர்கன் வாசிப்பதெல்லாம் இருப்பதே தெரிந்தது. அதேபோல் ரம்யாகிருஷ்ணன் பாலில் விசம் கலந்து செளந்தர்யாவுக்கு கொடுத்ததும் அதை பாம்பு தட்டிவிடும் காட்சிகள் எல்லாம் ஸ்வாஹாதான். முழுப்படத்தையும் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லை.

சேஞ்ச் ஓவர் சுவிட்ச் சப்தம் கேட்கும்போதே இது கட் பண்ற சத்தமா இல்ல... முழுசா ஓடவிட்டு மாத்துறாங்களான்னு தெரிஞ்சிடும். அப்புறம் எங்க படத்தை ரசிச்சு பார்க்குறது. இதனாலயே படம் பார்க்குறதை படிப்படியா குறைச்சு, நான்
காலேஜ் படிச்ச காலத்துல அந்த 3 வருசத்துல மொத்தமா 10லிருந்து 15 படம் பார்த்திருந்தால் அதிகம்.

இப்ப எல்லாம் படங்களை சாட்டிலைட் முறையில் திரையிடுவது, டிஜிட்டல் புரொஜக்சன் என்று எவ்வளவோ இம்ப்ருவ்மெண்ட் வந்துடுச்சு. அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.

**************************************
இந்த கதையை விடுங்க...

ஆரம்பம்னு படத்துக்கு டைட்டில் வெச்சுட்டதால பல இடங்கள்ல ஆரம்பம்னு வசனம் பேசுறதா எழுதியிருந்தாங்க. இந்த அளவுக்கெல்லாம் வசனம் எழுதுறப்ப சுரேஷ், பாலா, விஷ்ணுவர்த்தன் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். ஜாலியா இருந்தா கதையே இல்லன்னாலும் கேட்க மாட்டாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லைன்னா அதைப்போயா கேட்பாங்க... ப்ரீயா உடுங்க சார்....



ஆரூர் மூனா செந்தில் எழுதிய ஆரம்பம் பட விமர்சனம்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

சுட்ட கதை - முத்து நகரம் - ரவுடி கோட்டை - திருவாரூர் சோழா 29 ஆண்டு



இது சினிமா விமர்சனம் அல்ல. பழைய நினைவுகளின் தொகுப்பு மட்டுமே. இன்று காலை பேருந்து நிலையம் செல்லும் வழியில் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் சுட்டகதை, நடேஷ் தியேட்டரில் முத்துநகரம், சோழாவில் ரவுடி கோட்டை ஆகிய போஸ்டர்களை பார்த்தேன். அடுத்த வாரம் தீபாவளி. நடேஷ் - ல் ஆல் இன் ஆல் அழகுராஜா, (ஆல் இன் ஆல் - வார்த்தையை சென்சார்காரங்க கிட்ட காட்டுவாங்களா மாட்டாங்களா?) சோழாவில் பாண்டியநாடு ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என்று நாளிதழ் விளம்பரங்கள் வந்துவிட்டன. மிச்சம் இருப்பது ஒரு தியேட்டர். தைலம்மை. இந்த தீபாவளி ரிலீசில் மீதமிருப்பது ஆரம்பம் (அக். 31 ரிலீசாம்) அநேகமாக இதுதான் அந்த தியேட்டரில் ரிலீசாகக்கூடும். (எவ்வளவு கஷ்டமான கண்டுபிடிப்பு)



தீபாவளிக்கு முதல்நாள் 1985ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி திருவாரூர் சோழா தியேட்டர் திறப்புவிழா என்று தியேட்டர் கல்வெட்டில் எப்போதோ பார்த்த நினைவு. அப்படியென்றால் இன்று திருவாரூர் சோழா தியேட்டரின் 29ஆம் ஆண்டு தொடக்க விழா. எனக்கு அப்போ நாலு வயது முடிந்து 5ஆம் வயது ஆரம்பம். சோழா தியேட்டரில் முதல் படமாக முதல் மரியாதை.  அந்த படம் பார்க்க போனது நினைவில் இருக்கிறது. (பள்ளிக்கூடத்துல படிச்சது இருக்கட்டும். பத்து வருசத்துக்கு முன்னால காலேஜ்ல படிச்சது கூட நினைவில் இல்லை.)



பூவிழி வாசலிலே, விக்ரம், வைகாசி பொறந்தாச்சு, பாட்டி சொல்லைத்தட்டாதே, கரகாட்டக்காரன், மன்னன், எஜமான், ஜென்டில்மேன், இந்து, வில்லாதி வில்லன், முத்து, சூரிய வம்சம், படையப்பா போன்ற பல படங்களை அந்த திரையரங்கில் பார்த்தது நினைவில் இருக்கிறது. இவற்றில்  வைகாசி பொறந்தாச்சு, பாட்டி சொல்லைத்தட்டாதே, கரகாட்டக்காரன், சூரியவம்சம், படையப்பா படங்களின் வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கடைசியாக அந்த தியேட்டரில் நான் பார்த்த படம் ஆறு. அதுவும் அப்போதுதான் Dts வைத்தார்கள் என்பதற்காக போனேன்.



1999 வரை திருவாரூரில் 5 தியேட்டர்கள் இருந்தன. மற்ற திரையங்கங்களை விட எனக்கு சோழாவில் படம் பார்ப்பதுதான் ரொம்ப பிடிக்கும். மொக்க படமாக இருந்தாலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வெல்வட் துணியாலான திரை மேலெழும்பும்போது ஒரு மியூசிக் போடுவார்கள். பாடல் நிறுத்தப்பட்டு அந்த மியூசிக் கேசட் போட்டவுடன் தியேட்டர் பணியாளர்கள் ஸ்கிரீனை இழுத்துவிட்டு அரங்கத்தின் கதவுகளை மூடுவார்கள். 5 அடி உயரம் மேலெழும்புவதற்குள் தியேட்டர் சோழா உங்களை வரவேற்கிறது என்று சிலைடு போடப்படும். திருவாரூர் புகழாக சொல்லப்படும் மனுநீதி சோழனை மனதில் கொண்டு, மாடு ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்பதை ஸ்டில்லாக வைத்திருப்பார்கள்.



தியேட்டர் வாசலிலும் அந்த சிற்பம் உண்டு. சுருங்கிக்கொண்டே வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்போது கொஞ்சம் கொஞ்சமாக வெண்திரையில் அந்த பிம்பம் விழுவதை பார்க்க ஆசையாக இருக்கும். அப்போது கேட்ட அந்த மியூசிக்கை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை. அவ்வை சண்முகி படத்தில் வேலை.... பாடல் தொடங்குவதற்கு முன்பு லீட் மியூசிக் ஒன்று வரும். அதுதான் ஓரளவு அந்த பழைய மியூசிக்கோடு ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன். சரியாக அந்த கேசட்டை போட்டுவிட்டு நாலைந்து நொடிகள் கழித்து ஒரு குறிப்பிட்ட சவுண்ட் வரும்போது 15 கலர் பல்ப்புகள் எரிய வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்பும். 3 ஆம் வகுப்பு டிக்கெட்டுக்கு போனால் லேட்டாகத்தான் உள்ளே விடுவார்கள் என்று இதற்காகவே கூடுதல் கட்டண டிக்கெட் எடுத்துப்போக வேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடித்திருக்கிறேன்.



இதெல்லாம் 1994 வரைதான். அந்த ஆண்டு நம்மவர் படம் தீபாவளி ரிலீஸ். அப்போதுதான் ஸ்கிரீன் பின்னால் இருக்கும் ஸ்பீக்கர்களை மாற்றினார்கள். அப்போதெல்லாம் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் முதல் 7 நாட்கள் கூட தினசரி 5 காட்சிகள் திரையிடப்படும். அப்போது காலைக்காட்சியில் மேலே நிறுத்தப்படும் ஸ்கிரீன் இரவுக்காட்சி வரை இறங்காது. அதனால் இந்த மியூசிக் கேட்க வாய்ப்பில்லை. அது தவிர பெரும்பாலும் காலைக்காட்சி முடிந்து மதியக் காட்சி 5 அல்லது 10 நிமிடங்களுக்குள் திரையிடப்பட்டுவிடும் என்பதால் அப்போதும் வெல்வெட் ஸ்கிரீன் மியூசிக் கேட்க வேலையில்லை. இதனால் மதியக் காட்சி போக நான் விரும்புவதில்லை.



பல நேரங்களில் மோட்டார் ரிப்பேர் என்று ஸ்கிரீனை மேலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள். தியேட்டருக்குள் நுழையும் நான், அடப்பாவிகளா... இதை எல்லாம் முன்னாலேயே சொல்ல மாட்டீங்கிளா என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்ததுண்டு. அப்படி நான் 1994 தீபாவளிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு காளை என்ற படத்துக்கு போனபோது காதலன் படத்தில் முக்காபலா, புன்னகை மன்னன் படத்தில் காலம் காலமாக நாங்கள்... மற்றும் சத்யா படத்தின் வளையலோசை கலகலவென்று பாடல்களை ஃபுல் சவுண்ட் வைத்து பாடவிட்டு அப்போதே ஸ்கிரீனை ஏற்றி விடுவார்கள்.பிறகு நியூஸ் ரீல் ஓடும்.



என்னுடைய 15வது வயதில் 1996 ஆம் ஆண்டு வேறு இரண்டு தியேட்டர்களில் பள்ளிக்கு போன நேரம் போக மீதி நேரத்தில் ஆப்ரேட்டர் உதவியாளராக போயிருக்கிறேன். அப்போது நானே திரைப்படக்கருவியை இயக்கி முழு படத்தையும் திரையிட்ட காலத்தில் இப்படி மியூசிக் போட்டு ஸ்கிரீனை மேலேற்ற சந்தர்ப்பம் வாய்த்ததில்லை.



  






ஏனென்றால் நான் பணியாற்றிய ஒரு தியேட்டரில் வெண்திரைக்கு முன்னால் இருக்கும் வெல்வட் ஸ்கிரீன் கிடையாது. மற்றொரு தியேட்டரில் உதவியாளராக இருந்தபோது, ரொம்ப சாதாரண மியூசிக் கேசட் போடப்படுவதால் ஆப்ரேட்டரிடம் சொல்லி, அதெல்லாம் எதுவும் வேணாம். பாட்டு ஓடும்போதே ஆடிட்டோரிய லைட்டை ட்ரிம் பண்ணிட்டு ஸ்கிரீனை ஏத்திடுங்க என்று வழக்கத்தை மாற்றிவிட்டேன். அவர் முதலில் தியேட்டர் முதலாளி எதுவும் திட்டுவார் என்று பயந்தார். படம் ஓடும்போது லைட், சவுண்ட் ஒழுங்கா தரலைன்னாதான் திட்டுவாங்க. அந்த வேலையை சரியா செய்வோம் என்று பெரிய மனுசன் தோரணையில் கூறியதாக நினைவு. (முதலாளிகளுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இது மாதிரியான சின்னவிசயங்களை கவனிக்க வாய்ப்பு குறைவு என்ற துணிச்சலில்தான் அப்படி கூறினேன் என்று நினைக்கிறேன்.)



கடைசியாக நான் முழுப்படத்தையும் திரையிட்டது மற்றொரு தியேட்டரில் ஆனந்தப்பூங்காற்றே என்ற படம். பகல் காட்சிகளை திரையிட வரவேண்டிய ஆப்ரேட்டர் ஒருவர் தொடர் லீவு எடுத்ததால் பல தினங்கள் நான் காலை, மதியக் காட்சிகளை திரையிட்டிருக்கிறேன். 48 நாட்கள் ஓடியது அந்த படம். அதே நேரத்தில் சோழாவில் படையப்பா படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. இது எல்லாம் நான் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பிளஸ்டூ தேர்வு எழுத முயற்சி செய்த நேரம்.



அப்போது 5 தியேட்டர்களிலும் புதுப்படங்கள் வெளியாகும். இப்போது போல் ஒரே படம் மூவாயிரம், நாலாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் காலம் அல்ல. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படம் 1997 பிப்ரவரியில் ரிலீசானது. ஆனால் திருவாரூர் சோழாவில் தமிழ் வருடப்பிறப்புக்குதான் வெளியானது. திருச்சி ஏரியாவில் ஆறு பிரிண்ட் மட்டுமே போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். திருச்சி, தஞ்சாவூர், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை - இது மட்டும்தான் என்று நினைக்கிறேன்.



அவ்வளவு ஏன்? 1998 அல்லது 1999 என்று நினைக்கிறேன். தீபாவளிக்கு பத்து நாட்கள் இருந்ததால் பாட்ஷா படத்தை நடேஷ் தியேட்டரில் திரையிட்டார்கள். அப்போதும் நல்ல கூட்டம். தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் வந்தால் ஏழெட்டு படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிவிடும். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு எந்த தியேட்டருக்கும் கவலை இருக்காது. வரிசையாக படங்கள் கிடைக்கும்.



அதேபோல் 1996 தேர்தல் சமயத்தில் நான் 9ஆம் வகுப்பு விடுமுறையில் பணியாற்றிய தியேட்டரில் நாயகன் படம் திரையிட்டோம். மூன்று நாட்கள் பெரிய வசூல்.



இப்போ எல்லாம் பல தொலைக்காட்சிகளிலும் படங்களை ரீல் அறுந்து போகும் அளவுக்கு (ஹார்டு டிஸ்க் பேட் செக்டார் ஆகும் அளவுக்கு) திரும்ப திரும்ப போடுகிறார்கள். அப்படியும் வேறு வழி தெரியாமல் ஒரு தொலைக்காட்சியில் சனிக்கிழமை வரை சீரியல் போடத்தொடங்கிவிட்டார்களாம். பல வீடுகளில் கணவன், மனைவியர் சனி, ஞாயிறு ஆகிய ரெண்டு நாளாச்சும் முகம் கொடுத்து பேசிகிட்டு இருந்தாங்க. அது பொறுக்காம இப்போ அதுலயும் ஒரு நாளைக்கு வேட்டு வெச்சுட்டாங்க.



இப்போது தீபாவளிக்கு 8 நாட்கள் இருக்கும்போது மூன்று படங்கள் சுட்ட கதை - முத்து நகரம் - ரவுடி கோட்டை (ஒன்று டப்பிங்) ரிலீசாகிறது. அந்த அளவுக்கு சிறிய படங்களுக்கு தியேட்டர் பஞ்சம் ஆகிவிட்டது. இன்று காலையில் புதுப்பட போஸ்டர்களை பார்த்ததும் எனக்கு தோன்றியது இதுதான்.



****************************************

இணையத்தில் தேடியபோது திருவாரூர் சோழா தியேட்டரின் ஒளிப்படம் கிடைத்தது. 2003 பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக (நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது) விக்ரம்-ஜோதிகா நடித்த "தூள்'' படம் ரிலீசானது. அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் அது. பிளக்ஸ் கலாச்சாரம் சின்ன ஊர்களுக்கு வரும் முன்பு பெரிய படங்கள் ரிலீசாகும்போது மட்டும்தான் இப்படி கையால் வரைந்த பேனர்கள் தான் தியேட்டர்களில் வைக்கப்படும். கிட்டத்தட்ட அந்த நடிகர் மாதிரியே வரைஞ்சிருக்காங்களே என்பது அந்த வயது மற்றும் அந்த காலகட்ட ஆச்சர்யம். இப்போது ஒளிப்படங்களை வைத்து பிளக்ஸ், அழைப்பிதழ்கள் டிசைனிங் செய்வதும் என்னுடைய தொழிலின் ஒரு பகுதியாகிப்போனதும் காலத்தின் மாற்றமே.



சினிமா நூற்றாண்டுவிழா அரசியலைப்பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. ஆனால் இந்த நேரத்தில் வேறொரு பழைய தொழில்நுட்பத்தை ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஜெமினி கலர்லேப் நிறுவனத்தின் பிலிம் பிராசசிங் செக்சன் மூடப்பட்டுவிட்டதாக செய்தி படித்தேன். ஷ­ங்கர் இயக்கும் ஐ படம்தான் பிலிமில் தயாராகும் கடைசி தமிழ்ப்படம் என்றும் கூறுகிறார்கள். இப்போது தியேட்டர்கள் அனைத்தும் டிஜிட்டல் புரொஜக்சன் முறைக்கு மாறிவிட்டது அனைவருக்கும் தெரியும். 





சவுண்ட் சிஸ்டத்தில் பல்வேறு மாற்றங்கள் காலம் தோறும் இருந்து வந்தது. ஆனால்  வெளிச்சத்துக்கு  கார்பன் போய் பவர்புல் மின்விளக்குகள் வந்தாலும் சினிமா கண்டறியப்பட்ட காலம் முதல் பிலிம் சுருளை புரொக்டரில் பொருத்தி திரையிடும் தொழில் நுட்பம் சுமார் 80 ஆண்டு காலம் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் 2000க்கு பிறகுதான் அதிகமாக டிஜிட்டலில் திரையிடும் வசதிகள் பெருக ஆரம்பித்தன.



வெஸ்ட்ரெக்ஸ், போட்டோபோன் ஆகிய புரொஜக்டர்கள்தான் நான் கையாண்டவை. இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை எத்தனை தியேட்டர்களில் இந்த புரொஜக்டர்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. அப்படி இருப்பவற்றை புகைப்படம் எடுத்து அந்த தொழில் நுட்பத்தையும் என்னுடைய சில அனுபவங்களையும் சேர்த்து கட்டுரையாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது சாத்தியப்படுத்த முயற்சிக்கிறேன். அப்படி செய்ய முடிந்தால் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்த விசயத்தை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் இதுவும் சிறிய பங்களிப்பாக இருக்கக்கூடும்.





------------------------------------









பிரசாத், ஜெமினியில் ஆட்குறைப்பு டிஜிட்டலுக்கு மாறியாச்சு தமிழ் சினிமா ஃபிலிமில் வெளிவரும் கடைசி படம் ஐ



சென்னை : டிஜிட்டல் மயம் காரணமாக பிரபல சினிமா நிறுவனங்களான பிரசாத் மற்றும் ஜெமினி லேப்பில் பிராஸசிங் ஸ்டூடியோ மூடப்படுகிறது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக நம்மை மகிழ்வித்த சினிமா பிலிம், இப்போது மலையேறப் போகிறது. புதிய தொழில்நுட்பமான டிஜிட்டல் கேமரா வந்த பின் பிராஸசிங் வேலைகள் தேவையில்லை என்பதால் லேப்கள் மூடப்படுகின்றன.



சினிமா பிலிமில் உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்த நிறுவனம் ஜெர்மனைச் சேர்ந்த ஆரி. இந்நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் கேமராவான ரெட் ஒன்னை உருவாக்கியது ஓக்லே என்ற அமெரிக்க நிறுவனம். இவர்கள் போட்டியின் காரணமாக, ‘டிஜிட்டல் வேஸ்ட்’ என்ற பிரசாரமும் ‘பிலிம்தான் பெஸ்ட்’ என்றும் விவாதங்கள் நடந்து வந்தன. அது பழங்கதை ஆகிவிட்டது. இப்போது பிலிமை விட்டுவிட்டு உலகம் முழுவதும் டிஜிட்டலில் படம் எடுக்க முன் வந்துவிட்டனர். இதையடுத்து ஆரி, வேறு வழியின்றி அலெக்ஷா என்ற டிஜிட்டல் கேமராவை களமிறக்கியது.



தியேட்டர் புரொஜக்ஷனும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த வருடத்தோடு பிலிமுக்கு குட்பை சொல்ல முடிவு செய்துள்ளனர்.








இதையடுத்து பல்வேறு நாடுகளில் டிஜிட்டலுக்கு சினிமா மாறிவிட்டது. இங்கும் 90 சதவிகித படங்கள் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிரசாத் லேபில் பிராஸசிங் வேலைகள் குறைந்துவிட்டதால், அங்கு பணியாற்றிய 90 ஊழியர்களுக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டனர். இதே போல ஜெமினி லேப்பிலும் ஆட்குறைப்பு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயா லேப் மூடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.



‘பிலிமில் படம் எடுக்கப்படுவது இன்னும் குறையவில்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள ‘ஜன்னல் ஓரம்’, ‘பாண்டிய நாடு’ உட்பட பல படங்கள் பிலிமில்தான் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் படங்கள் பிலிமில் எடுக்கப்பட இருக்கின்றன. ஆனால், தியேட்டர் புரொஜக்சன் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் இந்த படங்களும் டிஜிட்டல் பார்மெட்டுக்கு மாற்றப்படும்’ என்றார் பிராசஸிங்கில் பணியாற்றும் ஒருவர்.



இன்டஸ்ட்ரியில் உள்ள இன்னும் சிலர், ‘இனி டிஜிட்டல்தான் என்பதை சொல்லி வந்தோம். இப்போது அது உறுதியாகிவிட்டது. பிலிமில் ரிலீஸ் ஆன சமீபத்திய படம், சசி இயக்கிய ‘555’. அடுத்து ஷங்கர் இயக்கும் ‘ஐ’ தான், பிலிமில் எடுக்கப்படும் கடைசி படம்’ என்று கூறுகின்றனர். ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுக்க, அது தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தெரிந்துகொள்ள அச்சப்படும் அல்லது ஆர்வமில்லாதவர்கள்தான் பிலிம் சிறந்தது என்று கூறுகின்றனர். ‘கண்களால் பார்க்கப்படும் துல்லியத்தை திரையில் காட்ட முடியும்’ என்றுதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தது.



அது நிறைவேறிட்டது. டிஜிட்டலுக்கு முன் சினிமா, ஒளிப்பதிவாளர் வசம் இருந்தது. இப்போது இயக்குனர் வசம் வந்திருக்கிறது. இனி டிஜிட்டல் உலகம்தான். அதற்கு புஜி உட்பட சில பிலிம் நிறுவனங்கள் மூடப்பட்டதே சாட்சி’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.



டிஜிட்டல் மயம் காரணமாக, வாங்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சினிமா கேமராக்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. பிலிமில், நெகட்டிவ்வை கொடுத்து பைனான்ஸ் வாங்கும் நிலை இருந்தது. டிஜிட்டல் வந்துவிட்டதால் அதற்கு யாரும் பைனான்ஸ் கொடுக்க முன் வருவதில்லை என்கிற நிலை இப்போது இருந்து வருகிறது.