Search This Blog

நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 அக்டோபர், 2017

உலகம் உன் வசம்


வாசிப்பில் எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் ஆர்வம் உண்டு. அப்படி சமீபத்தில் படித்த புத்தகம் "உலகம் உன் வசம்.". இதன் ஆசிரியர் சோம.வள்ளியப்பன்.



சிலர் பக்கத்து வீடு, எதிர் வீட்டில் இருப்பவர்களிடம் கூட பேச மாட்டார்கள். வெளி உலகத்திடம் இப்படி தொடர்பே இல்லாமல் இருக்கிறார்களே... அவர்களால் எப்படி இருக்க முடிகிறது என்று யோசித்திருக்கிறேன். இந்த புத்தகம் படித்த பிறகு மனிதன் அவன் குடும்பத்தார்களிடம் பேசாமலிருக்கலாம், பக்கத்து வீடு, எதிர்வீடு ஏன் மேலதிகாரிகளிடம் கூட பேசாமல் இருக்கலாம். ஆனால் யாராவது ஒருவரிடம் கூட பேசாமல் ஒருவன் இருந்தால் என்ன ஆகும் என்பதை மறைமுகமாக இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே புரிந்து கொண்டேன்.



 ஒன்று கிடைக்காதபோதுதான் அதன் அருமை தெரியும் என்பது எல்லா விஷயங்களுக்கும் பொருத்தமாகத்தான் தெரிகிறது. புத்தகத்தை பற்றியும் அதில் உள்ள விஷயங்களில் எனது அனுபவமும் வீடியோவாக...







செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஆசையா

எனக்கு எதிர்காலத்தைப் பற்றி எந்த கவலையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்பவர்களுக்கு கூட அதைப் பற்றிய அச்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். நமது எதிர்காலம் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள நினைப்பது மனித இயல்பு. மனிதனுக்கு பசி, தூக்கம், உரிய வயதில் எதிர்பால் ஈர்ப்பு போன்ற விசயங்கள் எவ்வளவு இயல்பானதோ அப்படித்தான் எதிர்காலத்தின் மீதான ஆர்வமும்.



வாழ்வின் பல உண்மைகளை எளிமையாக உணர்த்தக்கூடிய நூல் ஜோதிடம் 360. அந்த நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை இங்கே.

அனுபவ ஜோதிடர் சித்தூர் எஸ்.முருகேசன் எழுதியஜோதிடம் 360 என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை படித்த எனக்கு நம் வாழ்வியலின் பல உண்மைகள் புரிந்தன. (இன்னும் புரிந்துகொள்ள முடியாத கோடிக்கணக்கான மர்மங்கள் மனித வாழ்வில் உண்டு. அதை உணர எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாது.)

1. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும்.

2. தேவையற்றதை வாங்கினால் விரைவில் அத்தியாவசியமானதை விற்க நேரிடும்.

3. முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க இளமையில் கஷ்டப்படுங்கள்.

இந்த மூன்று தத்துவங்களையும் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். வாழ்க்கை குறித்த எவ்வளவோ தத்துவங்கள் இருந்தாலும் இந்த மூன்றை உணர்ந்தாலே வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம். ஜோதிடம் 360 முதல் பதிப்பை முழுவதும் படித்ததும் ஜோதிடத்தின்  அடிநாதமும் இந்த மூன்று தத்துவங்களைத்தான் உணர்த்துகிறது என்பது புரிந்தது.

ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று ஏற்கனவே இறைவன் எழுதிவிடுகிறான். பிறகு எப்படி அவற்றில் இருந்து விடுபட முடியும் என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம்.

நம் பூர்வ ஜென்ம பாவங்கள், நம் முன்னோர்களின் பாவங்கள் போன்றவற்றின் மூலம் நவக்கிரகங்களிடம் நாம் கடன் பட்டிருக்கிறோம். அந்த கடனை தீர்ப்பதன் மூலம் தண்டனையின் கடுமை குறையுமா என்பதான முயற்சிதான் பரிகாரங்கள்.

வண்டி பஞ்சர் ஆக வேண்டும் என்று இருந்தால் ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் தடுக்க முடியுமா என்றால் முடியாது. ஆனால் ஒர்க்ஷாப் அல்லது பஞ்சர் ஒட்டும் கடைக்கு அருகில் வண்டி பஞ்சர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. 

ஜோதிடம் 360 புத்தகத்தில் உள்ள விசயங்களும் இதை அடிப்படையாக கொண்டுதான் இருக்கின்றன. சித்தூர் எஸ். முருகேசன் கூறும் பரிகாரங்கள் உங்களை ஆயிரம், லட்சம் என்று பணம் செலவழித்து அதை, இதை செய்ய வேண்டும் என்று குழப்புவதாக இல்லை. மாறாக நம் வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்த வைக்கிறது.

உதாரணமாக 30 வயது மனிதரின் காய்ச்சலை குணப்படுத்தும் ஒரு மருந்து பல நேரங்களில் மற்றொரு நபருக்கு வேலை செய்வதில்லை. அதற்கு காரணம், ஒவ்வொரு மனிதனின் உடல் இயக்கமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல்தான் எல்லா மனிதர்களுக்கும் கிரகங்கள் ஒரே மாதிரியான நன்மை, தீமைகளை வழங்குவதில்லை.

சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலமாக வாடகை, குத்தகை பணமே ஒரு மாதத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் வேறு சிலர், பழைய கூரை வீட்டை மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுவிட்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க 1 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிடும். இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அதை தவிர்ப்பது எப்படி என்ற வித்தை இந்த நூலை படிப்பவர்களுக்கு ஓரளவாவது வசப்பட வாய்ப்பு உண்டு.

ஒரு பெரிய அரங்கத்தில் ஆயிரம் நாற்காலிகள் இருக்கும். அதில் 900 நாற்காலிகள் காலியாக இருக்கும். அவற்றில் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே உடைந்திருக்கும். மிகச்சரியாக அதில் போய் ஒருவர் உட்காருவார். துரதிர்ஷ்டம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம். ஆனால் இப்படி நடப்பது  ஏதோ ஒரு செயலின் (முற்பிறவி அல்லது நாம் ஏற்கனவே செய்த தவறுகள்) எதிர்வினையாக இருக்கக்கூடும்.

ஆக இப்படி ஒவ்வொரு விஷ­யத்திலும் நம்மை மீறிய ஏதோ ஒரு வரையறைக்குட்பட்ட சக்திக்கு கட்டுப்பட்டுதான் உலகமும் மனித வாழ்வும் இயங்குகிறது. அதைப்புரிந்து கொள்ள இந்த நூல் உதவுகிறது. தாறுமாறாக அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதுதான் கடினம்.  குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டு இயங்கும் நம் வாழ்க்கையை சிக்கலற்றதாக்க பல எளிய வழிகள் இருக்கின்றன. நாம்தான் அவற்றை பின்பற்ற மறுத்து மனம் போன போக்கில் வாழ நினைத்து துன்பங்களில் சிக்கிக்கொள்கிறோம். நாமே உருவாக்கிக்கொள்ளும் சிக்கல்களில் இருந்து விடுபட எளிமையான பாதைகளை காட்டுகிறது ஜோதிடம் 360.

1) ஜோதிடம் 360

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பெண்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்?

உங்கள் வாழ்வை எளிதாக மேம்படுத்த உதவும் நூல் ஒன்றின் அறிமுகம்தான் இந்த பதிவு.

பெரும்பாலும் ஆண்களுக்கு, இவ்வளவு நாள் இப்படி வீணாயிடுச்சே என்ற கவலையிலும், அடுத்து பத்து வருசம் கழித்து இந்த ரோட்டை வாங்கி நம்ம பேர் வெச்சிடணும் என்ற ஒரு சிறிய (?!) குறிக்கோள் இருக்கும்.

ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவில் சீரியலில் பெண்கள் படும் கஷ்டத்தை நினைத்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கும். வீட்டு ஓனர் மூணு மாசத்துல காலி பண்ண சொல்லிட்டானே. இப்ப புதுசா வீடு பிடிச்சு இடம் மாற 10 ஆயிரம் ரூபாய் துண்டு விழுமே என்ற கவலையில் கணவன் இருப்பான். ஆனால் மனைவியைப் பொறுத்தவரை நீ புதுசா பிடிக்கிற வீட்டுல உன் அம்மா, அப்பா தங்கச்சி தம்பியை கொண்டு வந்து நுழைச்சிடாத என்ற அளவில்தான் யோசிப்பாள்.

மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பெற்றவர்களை நடுத்தெருவில் நிறுத்துபவர்களும், பெற்றோர் சொல்லை வேதவாக்காக கொண்டு மனைவியை 24 மணி நேரமும் டார்ச்சர் செய்து கசக்கிப்பிழிந்து வேலை வாங்குவதும்தான் நாம் அதிகமாக காணும் விசயம்.



நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் ஆண்கள் மிக குறைவு. ஒன்று அம்மா மற்றும் சகோதரிகளிடம் அல்லது மனைவியிடம் சரண்டர் ஆகும் ஆண்களே அதிகம். இந்த உண்மை பெண்களுக்கும் தெரியும்.

பெண்கள் அல்லது ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். கணவன்/மனைவி-யின் செயலுக்கு, குணாதிசயத்துக்கு காரணம் என்ன என்று தெரிந்தால் அன்பை கொடுத்து/பெற்று நிம்மதியாக வாழலாம்.

பல குடும்ப சிக்கல்களுக்கு முக்கிய காரணமே ஆண் அல்லது பெண் ஏன் இப்படி செய்கிறார் என்று அதன் காரணத்தைப் புரிந்து சரிசெய்ய நினைக்காமல் மேலோட்டமாக அவர்கள் செய்யும் செயலை மட்டும் தடுக்க/கண்டிக்க நினைப்பதுதான் விபரீதத்துக்கு காரணம்.

இது மாதிரியான சில அடிப்படை உண்மைகளை அதாவது தாய்-தந்தை, சகோதரன்-சகோதரி, கணவன்-மனைவி ஆகியோரின் செயல்பாடுகளுக்கு உளவியல் ரீதியாக என்ன காரணம் இருக்கும் என்பதை எளிமையாக புரிய வைக்கிறது சித்தூர் எஸ்.முருகேசன் எழுதிய ஆண் பெண் வித்தியாசங்கள் நூல்.

பெண்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் என்று இந்த பதிவுக்கு பெயர் வைக்க காரணம், பெரும்பாலான பெண்களின் கவலையை ஸ்கேன் செய்து பார்த்தீர்கள் என்றால் அன்றைய கதை அல்லது அதிகபட்சம் அடுத்த ஒரு வாரத்துக்குள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்களில் பலர், 8 மாசம் கழித்து ஏழாம் பங்காளி வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போகணும், எந்த ட்ரெய்ன்ல டிக்கட் புக்பண்றதுன்னு இப்போ மண்டையை பிச்சுகிட்டு இருப்பாங்க. (பெண்களையும் சாதாரணமாக நினைத்து விட முடியாது. தன் தம்பி அல்லது அண்ணன் வீட்டு விசேஷம் என்றால் இதை தாண்டி ப்ளான் போடும் கில்லாடிகளாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.)

1) ஜோதிடம் 360

வியாழன், 6 பிப்ரவரி, 2014

விவாகரத்து ஏற்பட காரணம் என்ன?

ரொம்ப நாளா பதிவு போடாம இடைவெளி விழுந்துட்டதால இப்படி விவகாரமான தலைப்பை வெச்சு ஜோதிடமும் தாம்பத்யமும் நூல் அறிமுகத்தை எழுதலாமேன்னு தோணுச்சு. கடந்த ரெண்டு வருஷங்களுக்கும் மேலாக வழக்கறிஞர்களுக்கு டைப் செய்து கொடுக்கறதால எனி டைம் ஏதோ பிரச்சனைகளோடயே இருக்குற மாதிரி பீலிங். அவங்க எழுதிக் கொடுக்குறதை டைப் செய்யுற நமக்கே இந்த கதின்னா நாமளும் பி.எல் படிச்சிருந்தா மண்டையில இருக்குற நாலு முடியும் நம்மளை உதறிட்டு ஓடிப்போக வாய்ப்பிருக்கு.

என்கிட்ட டைப் செய்ய வர்றது மூணே மூணு வழக்கறிஞர் அலுவலகம்தான். அவங்களும் தமிழ்ல டைப் செய்யுற மேட்டரைத்தான் என்கிட்ட கொடுப்பாங்க. (நம்ம இங்கிலீஷ் அறிவு அப்படி.) இதுலேயே மாசத்துக்கு 10 கேஸ் வரை டைவர்ஸ் மேட்டர்தான். (ஒட்டு மொத்த தமிழக நீதிமன்றங்களை, கட்டப்பஞ்சாயத்து கணக்கை எல்லாம் சேர்த்தா... தலை சுத்துதுப்பா) திருமணமான ஒரு ஆண்டு முதல் 10 வருடம் வரை பல்வேறு காலகட்ட தம்பதிகள் வழக்கு போட்டு பிரியுற கேஸ்தான் அதிகமா இருக்கு. சிட்டியில எப்படா ஒரு வருஷம் ஆகும்னு காத்திருக்குற தம்பதிகள் கணக்கு அதிகம்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.

கணவன் மனைவி பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரை ரெண்டு காரணங்களை வெச்சு பார்த்தாலே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது கேஸ் அடங்கிடும் போலிருக்கு. அதாவது சகிப்புத்தன்மை இல்லாமை ஒரு காரணம், அடுத்து ஒருத்தர் முதுகுல வாழ்க்கைத்துணை மட்டுமல்ல குடும்ப உறுப்பினர்கள் (கணவன்-மனைவி ரெண்டு சைடுமே சளைச்சவங்க இல்ல) மொத்தமும் சேர்ந்து குதிரை ஏறுவது.

ஆண்களில் மனைவி பேச்சைக் கேட்டு பெற்றவர்களை துரத்திவிட்டவர்களும், பெற்றோர் பேச்சைக் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்துபவர்களும்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இன்னொரு பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் யார் சொன்னாலும் எவன்(ள்) சொன்னாலும் கேட்குறது இல்லை. இவர்களின் வாழ்க்கைத்துணை பிரிந்து வாழ்வது வேண்டுமானால் சூழ்நிலையின் காரணமாக அவசியமாக இருக்கலாமே தவிர, பெற்றோர் அல்லது மனைவி (அ) கணவன் சரியாக இல்லாமல் விவாகரத்து கோரும் சம்பவங்களை தவிர்ப்பது சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நன்மை தரும் செயலாகவே நான் கருதுகிறேன்.

அது எப்படி சாத்தியம்?

எப்போதுமே அன்பு, விட்டுக்கொடுத்தல் என்பதெல்லாம் இருவழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே அப்படி இருப்பதில்லை. ஒரு சாரர் எதிலுமே விட்டுக்கொடுக்காமல் உறவுகளை சிக்கலாக்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் எதிராளிதான் நாம என்ன சொன்னாலும் கேட்குறாங்களே என்று எல்லாவற்றிலும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதைப்போல் மனைவி / கணவன் நான் என்ன சொன்னாலும் செஞ்சுகிட்டே இருக்காங்களே என்று அளவுக்கு மீறும் போது கொதித்தெழும் அப்பாவி கணவன் / மனைவியை யாராலும் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டு விடுகிறது.
அதிலும் சில பெற்றோர் / மாமனார்-மாமியார் சுய நலம் காரணமாக தங்கள் பிள்ளை/மகள் என்று கூட பார்க்காமல் வாழ்க்கையை கெடுத்துவிடுதையும் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறோம்.



நான்  வெளியில போனா பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி விசாரிக்கிற (உண்மையான பாசத்தில் கேட்பவரைப் பற்றிதான் நான் சொல்கிறேன். சந்தேகபுத்தி கொண்ட கணவன்மார்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை) மனுசனோட எனக்கு வாழ்க்கை தேவையில்லை என்று நீதிமன்ற படியேறும் பெண்களும் உண்டு.

மனைவி மேல் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் கணவன், அவளுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பி கவலைப்படாமல் இருக்கும் கணவனைப் பார்த்து நான்  ‘வெளியில் போனால் இருக்கேனா செத்தேனா என்று கூட கவலைப்படாத மனுசன் கூட என்னால வாழ முடியாது’ என்று விவாகரத்து கேட்கும் பெண்களும் உண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு புரிதல் இல்லாததுதான் காரணம். அந்த புரிதலை எங்கே கற்றுக்கொள்வது? இணையத்தில் அதுவும் வலைப்பூக்களில் உலவுபவர்களில் சிலருக்கு அனுபவஜோதிடம் டாட் காம் என்ற தளம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த எஸ்.முருகேசன் என்பவர் (20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில்முறை ஜோதிடர்) பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.
கணவன் மனைவி புரிதலுக்குத் தேவையான விஷயங்களில் சிலவற்றை எடுத்து ‘ஜோதிடமும் தாம்பத்யமும்’ என்ற தலைப்பில் மல்டி கலர் ரேப்பருடன் 80 பக்க கிரௌன் சைஸ் புத்தகமாக பிப்.7,2014ல் வெளிவருகிறது.

வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கட்டுரைகளை அவரது வலைத்தளத்தில் தேடிப்படிக்கலாம். ஏராளமான உபகதைகளுடன், உதாரணங்களுடன் இருக்கும். அதற்கு நேரம் இல்லை. கைக்கு அடக்கமா முக்கியமான பாயிண்ட்ஸ் கொண்ட புத்தகம்னா தேவலை என்று நினைப்பவர்கள் அவரது வலைத்தளத்தில் சென்று உரிய வழிமுறைகளில் வாங்கிக்கொள்ளலாம்.

பிப்ரவரி 7, 2014 அன்று நான்கு புத்தகங்கள்  வெளியிடப்பட உள்ளன.
1)    ஜோதிடம் 360
2)    ஜோதிடமும் தாம்பத்யமும்
3)    ஆண் - பெண் வித்தியாசங்கள்
4)    பணம் பணம் பணம்

வேலை, வீடு, உடைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அதே மாதிரி மிஸ்சான பஸ்சைப் பத்தியும் மிஸ்சான பொண்ணைப்பத்தி மட்டுமல்ல, மனைவி/கணவனையும் மாற்றிக்கொள்ளலாம் என்ற மனநிலை கொண்டவர்களிடம் விவாதிக்க நான் வரவில்லை. நமக்கு கணவன்/மனைவி இப்படி அமைஞ்சுட்டாங்க. இனி அதை மாத்த முடியாது. அப்போ வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக்கிக்கிறது என்று யோசிக்கும் நபர்களுக்கு இந்த ஜோதிடமும் தாம்பத்யமும் என்ற நூலில் பல வழிமுறைகள் இருக்கும்.

புத்தகம் நாளைக்குதான் (பிப்.7,2014) ரிலீஸ். அதுக்குள்ள உனக்கு மட்டும் ப்ரீவ்யூ ஷோ மாதிரி எழுத்தாளர் புத்தகத்தை முன் கூட்டியே அனுப்பிட்டாரான்னு ஒரு சந்தேகம் வந்துருக்கும். 

அதற்காக சின்ன விளக்கம் : புத்தகத்தை டைப் செட் செய்து அணிந்துரை எழுதியது அடியேன்தான்.