Search This Blog

புதன், 31 மார்ச், 2010

அங்காடித்தெருவும் சூதாட்டமும்


கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 28.03.2010 அன்று சற்று வித்தியாசமான சுற்று. இதுவரை பல சுற்றுக்களில் பிரகாசிக்க முடியாமல் படங்கள் விலக்கப்பட்டாலும் அந்த இயக்குனர்களிடம் திறமை இருப்பதாக நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள்.




ஆல்பம் படம் எடுத்து தோற்ற வசந்தபாலன் வெயிலில் ஜெயித்தார். இந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சியில் சூதாட்டம் என்ற குறும்படம் எடுத்த சாமும் அப்படித்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.



பெண்ணின் திருமணத்துக்காக இருபத்தைந்தாயிரம் கடன் கேட்கும் வேலைக்காரியிடம்,"ஏன் நாட்டோட பொருளாதாரம் கீழே போகும்போது இவ்வளவு செலவு பண்ணி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்குற. நாலு பேர அழைச்சுட்டு போய் கோவில்ல வெச்சு தாலிகட்டினா போதாதா." என்று கேட்பார்.



ஆனால், வாகனத்துக்கு பேன்சி நம்பர் வாங்க ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பார். ஆனால் அவரது மேனேஜர், ஐம்பதாயிரத்தை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஐம்பதாயிரத்தை மட்டும்தான் பேன்சி நம்பர் வாங்க லஞ்சமாக கொடுப்பார்.



இந்த தொழிலதிபரிடமே வருமானவரித்துறை ரெய்டு வருவதாக பயமுறுத்தி விலை உயர்ந்த வைரங்களை அவரிடமிருந்து போலி ஆபிசர் வைத்து ஒரு நபர் ஏமாற்றுவார்.



இப்படி பல தொழிலதிபர்களிடம் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும், அவரிடமே இருக்கும் மேலாளர் போன்றவர்கள் தில்லுமுல்லு செய்து கொழுத்து வளருவதும், இவர்கள் சூதாட்டம், லஞ்சம், ரெய்டு, போலீஸ் என்று செலவு செய்வதும் இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்தியது இந்த குறும்படம்.



அங்காடித்தெரு படத்தில் கூட பணியாளர்கள் அவதிப்பட்டு பல தொந்தரவுக்கும் ஆளாகும் நேரத்தில் கருங்காலி போன்றவர்கள் அடுத்தவர்களை இம்சித்துக்கொண்டு, தாங்கள் ஜாலியாகத்தானே இருக்கிறார்கள்.


அங்காடித்தெருவும் சூதாட்டமும்

கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 28.03.2010 அன்று சற்று வித்தியாசமான சுற்று. இதுவரை பல சுற்றுக்களில் பிரகாசிக்க முடியாமல் படங்கள் விலக்கப்பட்டாலும் அந்த இயக்குனர்களிடம் திறமை இருப்பதாக நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள்.
ஆல்பம் படம் எடுத்து தோற்ற வசந்தபாலன் வெயிலில் ஜெயித்தார். இந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சியில் சூதாட்டம் என்ற குறும்படம் எடுத்த சாமும் அப்படித்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

பெண்ணின் திருமணத்துக்காக இருபத்தைந்தாயிரம் கடன் கேட்கும் வேலைக்காரியிடம்,"ஏன் நாட்டோட பொருளாதாரம் கீழே போகும்போது இவ்வளவு செலவு பண்ணி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்குற. நாலு பேர அழைச்சுட்டு போய் கோவில்ல வெச்சு தாலிகட்டினா போதாதா." என்று கேட்பார்.

ஆனால், வாகனத்துக்கு பேன்சி நம்பர் வாங்க ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பார். ஆனால் அவரது மேனேஜர், ஐம்பதாயிரத்தை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஐம்பதாயிரத்தை மட்டும்தான் பேன்சி நம்பர் வாங்க லஞ்சமாக கொடுப்பார்.

இந்த தொழிலதிபரிடமே வருமானவரித்துறை ரெய்டு வருவதாக பயமுறுத்தி விலை உயர்ந்த வைரங்களை அவரிடமிருந்து போலி ஆபிசர் வைத்து ஒரு நபர் ஏமாற்றுவார்.

இப்படி பல தொழிலதிபர்களிடம் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும், அவரிடமே இருக்கும் மேலாளர் போன்றவர்கள் தில்லுமுல்லு செய்து கொழுத்து வளருவதும், இவர்கள் சூதாட்டம், லஞ்சம், ரெய்டு, போலீஸ் என்று செலவு செய்வதும் இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்தியது இந்த குறும்படம்.

அங்காடித்தெரு படத்தில் கூட பணியாளர்கள் அவதிப்பட்டு பல தொந்தரவுக்கும் ஆளாகும் நேரத்தில் கருங்காலி போன்றவர்கள் அடுத்தவர்களை இம்சித்துக்கொண்டு, தாங்கள் ஜாலியாகத்தானே இருக்கிறார்கள்.

என் மனதைக் கவர்ந்த இந்த குறும்படம் கலைஞர் தொலைக்காட்சியில் 01.04.2010 இரவு பத்தரை மணிக்கு மறு ஒளிபரப்பாகும்.
******
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது. எடுறா அந்த கீபோர்ட...தட்றா ஒரு தொடர்கதையை அப்படின்னு எனக்குள்ளே ஒரு அவலக்குரல்...ச்சே...அற்புதமான குரலைக்கேட்டு ரெடியாயிட்டோம்ல.
ஏப்ரல் 14, 2010 புதன்கிழமை அன்னைக்கு ஆரம்பம்.

வெள்ளி, 26 மார்ச், 2010

ஆறு வருஷமா என் கேள்விக்கு பதிலே தெரியலையே...இப்பவாச்சும் யாராவது சொல்லுங்களேன்.

"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.
அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?

எனக்கு புரியவில்லையே என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். யாருக்கு என்றுதானே கேட்குறீங்க? மாதமும் தேதியும் நினைவில் இல்லை. 2004ம் ஆண்டு ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்த வாக்கியங்கள்தான் இந்தப் பதிவின் முதல் பாராவில் உள்ளன.

இதைப் படிச்சுட்டு எத்தனை பேர் என் கூட சண்டைக்கு வர்றாங்க, விகடன், சத்குருவுக்கு ஆதரவா பேசுறாங்க, இவனே ஒரு காமெடி பீஸ். இதுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கணுமான்னு ஒதுங்கிப் போறாங்கன்னு பார்ப்போம்.

அப்பவே விகடன்ல இந்த சந்தேகத்தை தீர்த்து வெச்சிருந்தா நான் இந்த பதிவை எழுதியிருக்கப்போறதே இல்லை.ஆனா இப்பவும் அவரோட கருத்துக்களை பெரிய வேதம் மாதிரி சில பிரபலங்களே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சிருக்குறதுதான் எனக்கு நெருடலா இருக்கு.

அவரோட தியான முறைகள் நிறைய பேருக்கு நல்லது பண்ணியிருக்கலாம். அது வரைக்கும் சந்தோஷம். ஆனா அவரோட பல கட்டுரைகள் சராசரி மனிதனை விட்டுட்டு ரொம்ப மேதாவித்தனமா சிந்திக்கிறவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் இருக்கு.

அதையெல்லாம் அப்புறம் விவாதிக்கலாம்.

என்னோட ஆறு வருஷ சந்தேகத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுங்களேன்.

மீண்டும் அந்த வாக்கியங்கள்.

"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.

இதில் சொல்லியிருப்பது சரியா?


அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?

இது என் மனதில் தோன்றிய சந்தேகம். பதிலை நீங்க சொல்லுங்க.

வியாழன், 25 மார்ச், 2010

சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...(ஒரு குரூப்பாத்தான் அலையுறாய்ங்களோ?)

கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.
இது பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.இப்போது என் கவனத்துக்கு வந்த விஷயமே வேறு.சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை ஏய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தண்ணியடிக்க மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான்.பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

புதன், 24 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு - என் பார்வையில்...

என்ன இது ஒருத்தனையே காட்டி அறுத்துகிட்டு இருக்கானுங்க? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் பார்த்து இப்படி கேட்டது வயதான பெண்மணி ஒருவர். நம்மில் பலருக்கு படம் என்றால் பழைய படங்கள் போல பெரிய குடும்பம் அல்லது இப்போதைய கே.எஸ்.ரவிக்குமார் படம் போல இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு பிம்பம் வைத்திருக்கிறோம்.
இப்போது காதலித்துக்கொண்டிருப்பவர்களும் காதலிக்க முடியவில்லையே என்று யோசிப்பவர்களும் பார்த்து ஃபீல் பண்ண வைத்தது வி.தா.வ படம். என்ன தொழில் செய்வது அல்லது என்ன வேலைக்குப் போவது (வேலையே கிடைக்காதவர்களுக்கு அது மட்டும்தான் பெரிய பிரச்சனை.) என்று நிறைய ஆண்கள் இன்று வரை தீர்மானமான முடிவு எடுக்காமல்தான் எதிலோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பெண்களுக்கு திருமணம் அல்லது காதல் விஷயத்தில்தான் இந்த தடுமாற்றம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.(பெண்ணின் மற்ற விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் ...............................களைப் பற்றி நான் சொல்வதற்கில்லை.)

எங்க அப்பா உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா நான் ரெடி. ஆனா நான் உங்களை விரும்புறதா சொல்ல மாட்டேன். என்று சொன்ன ஒரு பெண்ணை நான் பார்த்திருப்பதால் படத்தில் ஜெஸ்ஸியைப் பார்த்ததும் அதில் த்ரிஷா தெரியவில்லை. நிறைய பெண்களின் பிம்பமாகத்தான் பார்க்க முடிந்தது.

என்ன செய்யுறது...பத்து வயசுல இருந்து வேலை நேரம் போக கொஞ்சம் கொஞ்சம் படிப்புன்னு இருந்ததால ஊருல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ..................யை லவ் பண்ணினேன்னு கேட்க மனசு ரெடியாகலை.

இந்த மாதிரி ஒரு பொண்ணு லவ் பண்றதுக்கு கூட கொடுப்பினை வேணும்.அப்படின்னு பலரையும் புலம்ப வெச்சதுதான் இந்த படத்தோட வெற்றி.

ஆனா அந்த பொண்ணு ஜெஸ்ஸியோட கேரக்டர்...சான்சே இல்லை.

இந்தப் படம் வசதியான மற்றும் மிடில் கிளாஸ் இளைஞர்கள் ஒரு வித ஆர்வத்தோடயும் வறுமைக்கோட்டு லெவல்லயும் அதுக்கு கீழயும் இருக்குற இளைஞர்கள் ஐம்பது வருஷத்துக்கு முன்னால காரைப் பார்த்தமாதிரியும்தான் இந்தப் படத்தைப் பார்த்திருப்பாங்க.

ஏன்னா இவங்க வாழ்க்கையில வர்ற காதல் மோதல் மாதிரியான விஷயங்களை நிறைய தமிழ்ப்படங்கள் மித மிஞ்சிய மேக்கப்போடதான் காட்டியிருக்கு.

அடுத்து ரிலீசாகப்போற அங்காடித்தெரு - ரங்கநாதன் தெருவுல இருக்குற பளபளப்பான கடைகளில் இருக்குற ஊழியர்களின் வலி நிறைஞ்ச வாழ்க்கையை சொல்லும்னு நினைக்கிறேன். பார்ப்போம்.
ஒண்ணு படம் வந்து பல நாளைக்கப்புறம் விமர்சனம் எழுதுற...இல்ல படம் ரிலீசாகுறதுக்கு முன்னால டிரெய்லர் விட்டுப் பார்க்குறன்னு சொல்லி திட்டாதீங்க. நாம நினைக்கிறத நினைச்ச நேரத்துல எழுதி இம்சை கொடுக்குறதுக்குதானே பிளாக் இருக்கு?

திங்கள், 22 மார்ச், 2010

நீண்...........ட இடைவேளைக்கப்புறம் பாக்யாவில் நான் எழுதிய கதை!

எத்தனையோ கதை எழுதி அனுப்பியிருந்தாலும் இந்தக் கதையை ஏன் சார் அவங்க பிரசுரம் செஞ்சாங்க?...கதையைப்படிச்சு முடிச்சதும் உங்களுக்கு எதாவது காரணம் தெரியுதான்னு பாருங்க.

கொடை வள்ளல் - ஒரு பக்க கதை

அழைப்பு மணியோசை கேட்டதுமே என் மனதில் குழப்பம்.

"இங்க குடி வந்து ரெண்டு நாள்தானே ஆகுது. வேண்டியவங்களுக்கு எல்லாம் இனிமேதான் முகவரியை தெரியப்படுத்தணும். அதுக்குள்ள யாரா இருக்கும்"என்று நினைத்துக் கொண்டே கதவைத்திறந்தேன்.

ஆறு நடுத்தர வயது ஆண்கள் காவியுடை, நெற்றியில் விபூதி குங்குமம், நோட்டீஸ், மஞ்சள் பை என்று நின்றதுமே, "இந்த மாதிரி ஆளுங்களோட தொல்லை தாங்காதே..."என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்தபடி "என்ன விஷயம்?" என்றேன்.

ஒருவர் தன் பற்களை எல்லாம் என்னிடம் காட்டியே தீருவது என்ற முடிவுடன் ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டு, "சார்...பத்து நாள்ல நம்ம தெரு அம்மன் கோயில் திருவிழா..."என்றவாறு நோட்டீசை என் கையில் திணித்தார். மற்றொருவர் ரசீதுப் புத்தகத்தில் எழுதத் தயாரானார்.

'என் மனைவிக்கு பக்தி அதிகம்னு இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா...பர்சை விட்டு பறந்துடுச்சுடா பெரிய தொகை' என்று நான் மனதுக்குள் அதிர்ந்த  நேரத்தில்தான் அந்த திருப்பம்.
"என்னங்க...நான் பேசிக்குறேன்..." என்று அருகே வந்த என் மனைவி,

"அய்யா...இந்த மாதிரி கோயிலுக்கெல்லாம் பணம் கொடுக்குறது என் வீட்டுக் காரருக்கு சுத்தமா பிடிக்காது. இருந்தாலும் வீடு தேடி வந்த உங்களை வெறும் கையோட அனுப்ப எனக்கு மனசில்லை. இந்தாங்க...இருபது ரூபாய்..."என்று அவர்களிடம் கொடுத்தாள்.

வந்தவர்கள் எதுவும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தந்துவிட்டுச் சென்றார்கள்.

'புது வீட்டுக்கு வந்ததும் என் மனைவி இப்படி மாறிட்டாளே' என்ற சந்தோஷம் எனக்கு. அவளிடமே என் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.

"நீங்க ஏதேதோ கற்பனை பண்ணீக்காதீங்க. நான் அவங்களை இருபது ரூபாயோட அனுப்பக் காரணமே வேற. நேற்றே அந்தக் கோயிலைப் பற்றி விசாரிச்சுட்டேன். இங்க ரெகுலரா பூஜை செய்ய ஆள் கிடையாதாம். வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களுக்கு மட்டும் ஒரு குருக்களை வெச்சு பூஜை செய்யுறாங்களாம். மற்ற நாட்களில் சரியா  விளக்கு கூட எரியுறது இல்லைன்னு சொன்னாங்க.

ஆனா இந்த ஆட்கள் ஒவ்வொரு வருடமும் வசூல் பண்ணி பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சின்னு செலவழிக்கிறாங்களாம். இந்த மாதிரி வசூல் செய்த பணத்தை வெச்சு தினமும் ஒருகால வழிபாடு நடக்க ஏற்பாடு பண்ணின பிறகு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினா பரவாயில்லை.

வருஷம் பூராவும் பட்டினி போட்டுட்டு ஒரே ஒரு நாள் விருந்து வைக்கிற செயலுக்கு நாம் ஏன் அதிகமா கொடுக்கணும்னு நினைச்சுதான் இருபது ரூபாயோட அனுப்பினேன். இந்த திருவிழா முடிஞ்ச பிறகு தினமும் வழிபாடு நடக்க கண்டிப்பா நான் ஏற்பாடு செய்வேன்...

அப்ப ஒரு பெரிய தொகையை நீங்கதான் தரணும்..." என்று என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் 'தடால்' என்று ஒரு சத்தம்...

என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க...நான் தான்  மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.
******
இந்தக்கதையை வழிபாடுன்னு தலைப்பு கொடுத்து அனுப்பியிருந்தேன். மார்ச் 25 ஏப்ரல் 1, 2010 பாக்யா வார இதழ்ல பிரசுரம் ஆகியிருக்கு. ஆனா வேற ஒரு புனைப்பெயர்ல.

ராட்டினத்தை சுத்துனா(கொசுவர்த்தியை ரொம்ப பேர் சுத்திட்டாங்க...இன்னும் சுத்திகிட்டே இருக்காங்க.நம்ம சித்ரா டீச்சரும் கிரைண்டரை சுத்திட்டாங்க.அதனால நான் ராட்டினத்தை சுத்துறேன்.) 2004 ஏப்ரல். பாக்யாவுல ஒரு கதை பிரசுரம் ஆகியிருந்துச்சு. அப்புறம் சில கதைகள் அனுப்பியிருந்தேன்.அவங்க கவனிக்கலை.அப்புறம் நான் வேற பத்திரிகைகள்ல அனுப்புன கதைகளுக்கு பரிசு கிடைக்க ஆரம்பிச்ச உடனே இந்த மாதிரி பத்திரிகைகளை நான் கண்டுக்கலை. ராட்டினத்தை நிறுத்தியாச்சுங்க. அவ்ளோதான் இப்ப இருக்குற மேட்டரு.

வியாழன், 18 மார்ச், 2010

தோட்டா - விலை என்ன? ...........துறையின் சட்டையைப்பிடித்து ஒரு கேள்வி.

தொலைக்காட்சியில் நான் நிகழ்ச்சிகள் பார்க்கும் நேரம் மிகவு........ம் குறைவு. அப்படி நான் பார்த்த கலைஞர் தொலைக்காட்சியின்  நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் என் கண்களில் சிக்கிய படம், என்னை அதிகமாக யோசிக்க வைத்த படம் "தோட்டா - விலை என்ன?" (தலைப்பில் வார்த்தைகள் இடம் மாறி இருக்கலாம். பொறுத்துக்கொள்ளவும். அல்லது சரியான வரிசையை தெரிவிக்கவும்.)
சாகும்போது ஒருவரின் கதறலைக் கேட்க விரும்பி பத்துப்பேரைக் கொன்று புதைத்திருக்கிறேன். என்று ஒரு இளைஞன் அந்த சத்தம் பதிவுசெய்யப்பட்ட டேப் ரெக்கார்டருடன் போலீசாரிடம் சரணடைகிறான்.அவனுடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஒரு சைக்கோ கொலைகாரனைப்போல்தான் இருக்கிறது.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரின் மகளும் பாட்டு கற்றுக்கொள்ள செல்லும்போது அப்பாவிடம் செய்யும் சிறு குறும்பால் பார்வையாளரின் மனதிலும் இடம்பிடிக்கிறாள்.

கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த இளைஞன், "நீங்க கேட்குறதெல்லாம் ஒரு இசையா?...உயிர் போகும்போது ஒருத்தன் கத்துற கத்தல் இருக்கே...அதுக்கு எந்த இசையும் ஈடாகாது.அதனாலதான் பாட்டு பாடுறவங்களா பார்த்து கொலைசெஞ்சு புதைச்சேன்." என்று சொல்கிறான். இந்தக் காட்சியின் போது எனக்கும் அவன் மீது எரிச்சல்தான் வந்தது.

அவன் தொடர்ந்து,"இன்ஸ்பெக்டர்...உங்க வீட்டுல யாராவது பாட்டு கத்துக்குறவங்க இருக்காங்களா?"அப்படின்னு கேட்பான்.உடனே அவருக்கு பாட்டு கத்துக்கப் போறப்ப எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி பாடுன மகளோட நினைப்பு வந்துடும்.(நமக்கும்தான்.)இனிமே இவனை விட்டு வைக்க கூடாதுன்னு நினைச்சு அவனை ஜீப்புல இருந்து கீழ இறக்கி சுட்டுக்கொன்னுடுவார்.

இந்த மாதிரி ஆளுங்களை இப்படித்தான் போட்டுத்தள்ளணும். அப்படின்னு ஒரு எண்ணம்தான் இது வரை படம் பார்த்தவங்களுக்கு தோணும். எனக்கும் அப்படித்தான்.

ஆனா படத்துல முக்கிய திருப்பமே இனிமேதான்.என்கவுண்ட்டர் செய்த இன்ஸ்பெக்டருக்கு போன் வருது. அதுல பேசுறது, அந்த பத்து பிணங்களை பரிசோதனை செய்த டாக்டர்.

"கேன்சர் உட்பட பல காரணங்களால இயற்கையா மரணமடைஞ்ச பத்துபேரோட உடல்கள்தான் அவை. இவங்க கொலை செய்யப்பட்டிருக்க சான்சே இல்லை. அவன் ஏன் இப்படி கொலை செய்ததா பொய் சொல்லி சரணடைஞ்சான்னு தெரியலை. நல்லா விசாரிங்க சார். அவசரப்பட்டு அவனுக்கு தண்டனை வாங்கித்தந்துடாதீங்க.டீடெய்ல்டு ரிப்போர்ட் சீக்கிரம் தந்துடுறேன்."

இதுதான் அந்த டாக்டர் பேசின விஷயம்.இப்போ அதிர்ச்சி அடையுறது இன்ஸ்பெக்டர் மட்டுமில்ல...நாமும்தான்.

இந்தக் காட்சிக்குப்பிறகு போலி என்கவுண்ட்டரில் கொலைசெய்யப்பட்ட இளைஞனின் வாக்குமூலமாக அடுத்த காட்சி வீடியோவில் வருகிறது.

"இந்த வீடியோவை நீங்க பார்க்குறீங்கன்னா என்னைய போலி என்கவுண்ட்டர்ல என்னைய போட்டுத்தள்ளிட்டாங்கன்னு அர்த்தம்.ஏற்கனவே இது மாதிரி போலியான என்கவுண்ட்டர்ல என் அண்ணனை இழந்தேன். அதனால மனித உரிமைகளுக்காக உயிரைக்குடுத்துப் போராடுற போராளிதான் நான்.

இதுக்காகவே ரொம்ப சிரமப்பட்டு நான் குற்றவாளின்னு நம்பவைக்கிற மாதிரி போலி ஆதாரங்களை உருவாக்கியிருக்கேன். இந்த வழக்கை போலீஸ் உணர்ச்சிவசப்படாம நேர்மையா விசாரிச்சா நான் குற்றவாளி இல்லைன்னு சுலபமா கண்டுபிடிச்சுருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் போலீஸ்காரங்க தயாரா இல்லைன்னுங்குறதை  என் உயிரைக் கொடுத்து உங்களுக்குப் புரிய வெச்சிருக்கேன்." இது தவிர இன்னும் சில விஷயங்களை அந்த இளைஞன் பேசுவதுடன் அந்த வாக்குமூலம் முடியும்.

இதைப் பேசி முடித்ததும் அந்த இளைஞனின் முக பாவம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.எதையோ இழந்தது போன்ற உணர்வு.அந்த இயக்குனர் ஐந்து நிமிடத்தில் இப்படி ஒரு அழுத்தமான படம் கொடுத்தது நான் எதிர்பார்க்காத ஒன்று.
******
இந்த நிகழ்ச்சி இன்று 18 மார்ச் 2009 இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகும்.
******
இப்போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள்.கொலை, தற்கொலை போலவே மிகவும் மடத்தனமான ஒன்றுதான் இந்த என்கவுண்ட்டரும்.
சட்டத்தில் கடுமையான விதிகள் குற்றவாளிகளை இறுக்கிப்பிடிக்கவும் நியாயமான பார்வை அப்பாவிகளைக் காப்பாற்றவும் என்று நினைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் நடப்பது என்ன? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தொழில்முறை குற்றவாளிகள் தப்பிக்கவும், சட்டத்தில் உள்ள கடுமையான விதிமுறைகள் அப்பாவிகளை செய்யாத குற்றங்களை சுமத்தி சிக்கவைக்கவும் மட்டுமே அதிகமாகப் பயன்படுகின்றன.

கடுமையான குற்றம் செய்பவர்களை இப்படி தண்டித்தால்தானே பயம் இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம்.அந்த ரவுடிகள் இப்படி வளர முக்கியக் காரணமாக இருப்பதே சில அரசியல்வாதிகளும் சில காவல்துறை அதிகாரிகளும்தானே. அதிலும் பல என்கவுண்ட்டர்கள், இந்த ரவுடிகளை கோர்ட்டில் நிறுத்தினால் தாங்கள் சிக்கிக்கொள்வோமே என்ற பயத்தில் அரசியல்வாதிகள் செய்யச்சொல்வதால்தான் அரங்கேற்றப்படுகின்றன.

வல்லரசு படத்தில் ஒரு வசனம் வரும். மன்சூர்அலிகான் பேரணிக்கு அனுமதி கேட்கச் செல்லும் போது அத்தனை பேரை வெட்டுனேன். இத்தனை பஸ்சைக் கொளுத்தினேன்னு சொல்லிகிட்டே போவார்.  அவரை அடிச்சு துவைக்கும் விஜயகாந்த்,"நீ ஜாதி பேரை சொல்லி ஒரு பஸ் மேல கல்லை வீசுனப்பவே லோக்கல் ஸ்டேஷன்ல இருந்த கான்ஸ்டபிள் உன் கையை உடைச்சுருந்தா நீ இந்த அளவுக்கு ரவுடியா மாறி இருக்க மாட்ட." என்று பேசும் வசனம் நூறு சதவீதம் உண்மை என்பது என் கருத்து.

பல நாடுகளிலும் மரண தண்டனையை முற்றிலும் நீக்கியிருக்கும்போது, அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே இங்கே என்கவுண்டர் என்ற பெயரில் போலி முகமூடிக்குப்பின்னால் படுகொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் கூட பல கைதிகளை வைத்து கோயில்கள், அணைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்போதும் இப்படி கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டிய குற்றவாளிகளை ஏன் இப்படி ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?...அவர்கள் தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழவே முடியாது. ஆயுளுக்கும் இப்படி பொதுப்பணியில் இருந்தே காலம் கழிக்கவேண்டும் என்று ஒரு நிலை இருந்தால் தொடர்ச்சியாக குற்றம் செய்ய ரவுடிகளுக்கு மனம் வருமா? சிறையில் முதல்வகுப்பு,....................ர் வகுப்பு என்று இருப்பதையே நீக்க வேண்டும்.
காலத்தை இழந்தால் கூட நாம் பெற வேண்டிய எதோ ஒன்று தள்ளிப்போகும். ஆனால் உயிரை எடுத்துவிட்டால் பிறகு எந்த சூழ்நிலையிலும் அதற்கு மாற்று என்பது கிடையவே கிடையாது.

இது என்னுடைய கருத்து.இதில் உடன்பாடு இல்லாதவர்கள் என்னைத் திட்டாமல் அவர்களின் கருத்தை அவரவர் வலைப்பூவில் பதிவாக வெளியிடக்கோருகிறேன்.

வெள்ளி, 12 மார்ச், 2010

மழை நீர் சேகரிப்பு - சில வழிமுறைகள்

 மழை நீர் சேகரிப்பு முறையை வெற்றிகரமாக செய்து தரும் பொறியாளர் ஒருவர் திருவாரூரில் இருக்கிறார். நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கல்லூரி ஆண்டு மலரில் அவரது பேட்டியை இடம்பெறச் செய்தோம்.
  அவரை நேர்காணல் செய்வதற்கு என்னால் செல்ல இயலவில்லை. ஆனால் பேட்டி எடுக்கச் சென்று வந்தவர்கள் கிறுக்கிக்கொண்டு வந்ததை தொகுத்து அச்சுக்கு அனுப்பினேன்.

அந்தப் பக்கங்கள் உங்களுக்காக.

படங்களின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும்.
******

இந்த ஒளிப்படத்தில் இருப்பது 2002-2003ம் வருஷம் கல்லூரி ஆண்டு மலரின் ஆசிரியர் குழுவினர். தமிழ்ப்பேராசிரியரும் நானும் மட்டுமே 95 சதவீத வேலைகளைக் கவனித்தது வேறு விஷயம்.


புதன், 10 மார்ச், 2010

நித்தியானந்தா நீலப்படமும் ஷோலே திரைக்காவியமும்

'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?' இந்த வசனத்தைப் பற்றி சொல்லும்முன் ஷோலே படம் பற்றி பேசி விடுகிறேன்.

வாடகை கொடுத்து தினசரி ஒரு காட்சிகாளாக ஒரு படத்தை ஆளில்லா தியேட்டரில் காட்டிவிட்டு திரையுலக வரலாற்றுச் சாதனை என்று சொல்பவர்கள் "பணம் கொடுத்து படம் பார்க்க வர்றவனுங்க தப்பிச்சாச்சு.சம்பளம் வாங்குறதால நான்தான் மாட்டிகிட்டேன்."அப்படின்னு கதறுற ஆப்ரேட்டர்களோட குரலையும் கொஞ்சம் கேட்டால் தேவலை.

இப்படி எல்லாம் இல்லாம மெய்யாலுமே சாதனை பண்ணின ஹிந்திப்படம்தான் ஷோலே. திருவள்ளுவரே கதறுற மாதிரியெல்லாம் அவங்க தமிழ் பேசலை. நேரடி ஹிந்திப்படமாவே ரிலீஸ் ஆனாலும் பள்ளிக்கூடத்தின் பக்கமே ஒதுங்காதவங்க கூட அவ்வளவு ஆர்வமா பார்த்தாங்க.

ஆனா எனக்கு இந்தப்  படத்தைப் பார்க்குற வாய்ப்பு 1997ல தான் கிடைச்சுது.(வழக்கம்போல நான் தியேட்டர்ல வேலை பார்த்தது பத்தின புராணம்தான் இது. கொஞ்சம் பொறுத்துக்குங்க.) இருபத்துமூணு ரீல் கொண்ட படம்.ஒரே டிக்கட்டில் இரண்டு படங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணலாம். அந்த அளவுக்கு நீ.............ளமானது.

புரொஜக்டர் அறையிலதான் எனக்கு வேலைன்னுங்குறதால சென்சார் சர்ட்டிபிகேட்ல இருந்து முழுப்படத்தையும் பார்த்துடுறது வழக்கம்.1975 ம் வருஷம் ஆகஸ்ட் 22ம் தேதி ரிலீசானதுன்னு நினைக்கிறேன். தேதி தவறா இருக்கலாம்.ஆனா வருஷம் இதுதான்.

இப்ப எதுக்கு இந்த புள்ளி விவரம்னுதானே கேட்குறீங்க.இப்ப எவ்வளவோ நாகரீகம் வளர்ந்துருக்குன்னு சொல்றோமே...இந்தப் படத்துல நான் ரொம்பவும் பிரமிப்போட கவனிச்ச ஒரு காட்சி இப்ப நினைவுக்கு வரக்காரணம் நித்தியானந்தா வீடியோ விவகாரத்துல சில ஊடகங்களின்  கேவலமான அணுகுமுறைதான்.
ஷோலே படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே வில்லன் அம்ஜத்கான் அழிப்பதாக காட்சி வரும்.பெரியவர்கள் சிலரை அவர் சுட்டுக்கொன்றதும் சிறுவன் ஒருவன் அங்கே ஓடி வருவான். அப்போது துப்பாக்கியை வைத்து அம்ஜத்கான் குறி பார்ப்பார். விசையை அழுத்து நொடி, நீராவி ரயில் எஞ்சினின் சக்கரம் சுழலுவதும்  இரைச்சலான சத்தத்துடன் நீராவி வெளியேறுவதும்தான் காண்பிக்கப்படும்.

இந்தப் படத்தை நான் திரையிட்டும் பதினாலு ஆண்டுகள் ஆகின்றன.இவ்வளவு நாட்கள் கழித்தும் இந்தக் காட்சி என் மனதில் நிற்கிறது. ஆனால் எவ்வளவோ படங்களில் மிக மோசமான ரத்தக் காட்சிகளைப் பார்த்தும் அவை அந்த நேரம் கூட ஒழுங்காக பதற வைக்கவில்லை.
இயக்குனர் மகேந்திரன், நானும் சினிமாவும் என்ற புத்தகத்தில் "எதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று சில இயக்குனர்கள் அருவருக்கத்தக்க காட்சிகளைப் படமாக்குகிறார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார். கிராமங்களில் புதர் மறைவில் மக்கள் ஒதுங்குவதும் இயற்கைதான். அந்த இயக்குனரின் தாய்-தந்தை கூடுவதும் இயற்கைதான். அதற்காக அவற்றை அப்படியே படமாக்க முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இதையேதான் நானும் கேட்கிறேன்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் மகன் அவமானப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட தந்தை, கத்தியுடன் தண்ணீரில் மூழ்குவார். வெளியே அவரது உடல் வராது. தண்ணீரில் ரத்தம் மட்டும் கொப்பளிக்கும். இந்தக் காட்சியும் நம்மை பதற வைத்ததுதான்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும் தண்ணீரில் மூழ்கி இறந்த  குழந்தையை காட்டாமல் பொம்மை மிதப்பதைதான் காட்டுவார்கள்.இது போல் எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.

சுனாமியில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்திருந்தாலும் மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஒரு புகைப்படக்கலைஞருக்கு விலை உயர்ந்த கேமராவையும் கிட்டத்தட்ட ஐந்தரை லட்ச ரூபாய் பரிசையும் பெற்றுத்தந்த ஒளிப்படம் எது தெரியுமா?
வேறு யாருமில்லாத கடற்கரையில் மண்டியிட்டுக் குனிந்து கதறும் பெண்மணி. அவரின் அருகில் பிரேமின் ஓரத்தில் ஒரு சடலத்தின் கை மட்டும். ஒட்டு மொத்த சுனாமியின் அவலத்தை செய்தி சேனல்களில் வந்த லட்சக்கணக்கான சடலங்களைக்காட்டிலும் இந்த ஒரு ஒளிப்படம் சொன்னது.

மக்களுக்கு துயரத்தையோ ஒரு விஷயத்தையோ உணர்த்த வேண்டும் என்று அவ்வளவு அசிங்கங்களையும் அள்ளித் தெளித்தால் அது வெறும் வியாபார உத்திதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

படங்களில் மோசமான காட்சிகள் இடம்பெற்றாலும் அவற்றை தியேட்டருக்குச் சென்றுதான் பார்ப்போம்.அருவருக்கத்தக்க காட்சிகள் தொலைக்காட்சியில் வந்தாலும் வேறு சேனல் மாறி விடுவோம். ஆனால் எல்லாரும் பரிந்துரைக்கும் சேனல் என்றால் டிஸ்கவரி, நியூஸ் சேனல் பாருங்கள் என்பதுதான். தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிக அளவில் அனைவரும் பார்க்கும் செய்தி சேனல் ஒன்றில் சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்துகிறேன் என்ற போர்வையைப்போர்த்திக்கொண்டு கண்ணியமான பெற்றோர்களை இப்படி அலற விட வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.

பொங்கல் அன்று குருவி படத்தை திரையிட்ட கலைஞர் தொலைக்காட்சியில் நான் ஒரு விஷயத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். சண்டைக் காட்சிகளில், அரிவாள் வெட்டு வரும்போது எல்லாம் காட்சிகள் கருப்பு வெள்ளையாகிவிடும்.படத்திலேயே இப்படியா அல்லது சேனலில் செய்த நல்ல காரியமா என்பது தெரியவில்லை.

விஜய் நடித்த கில்லி படத்தில் அவர் த்ரிஷாவுடன் மதுரையில் இருந்து முதலில் தப்பிக்கும் காட்சியில் டாடா சுமோ சேசிங் எடுக்கும்போது ஒரு வாகனம் மோதி படத்தின் கேமராமேன் கோபிநாத் படுகாயமடைந்ததாக எல்லாம் செய்திகள் வெளியானது. அந்தக் காட்சிகளில் என் கவனத்தைக் கவர்ந்தது இரண்டு ஷாட்டுகள்.

ராஜா என்ற ஸ்டண்ட் நடிகர் (மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரில் வீரப்பனின் கேரக்கடரில் நடித்தவர். அந்த வேடத்திற்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தினார்.இதைப்பார்க்கவில்லையா நீங்கள். போக்கிரி படத்தில் வடிவேலுவின் 'வட போச்சே' காமெடியில் காதலி கெ ளரி எழுதிய கடிதத்தை இழப்பாரே அவர்தான்.) ஏற்கனவே சுமோ ஓட்டிச் செல்லும் ஒருவரை எட்டி கீழே உதைத்துத் தள்ளிவிட்டு இவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கதவை சாத்திக்கொண்டு தொடர்ந்து வாகனத்தை இயக்கும் ஷாட் ஒன்று.

அந்த சுமோவை ஆட்டு மந்தைக்குள் விடும் காட்சியில் ஆட்டின் மீது கார் ஏறும் காட்சியைக் காட்டாமல் முன் பக்க கண்ணாடி முழுவதிலும் ரத்தத்தைக் காட்டுவதோடு, அதை வைப்பர் துடைப்பதாக காட்டுவார்கள்.

சன் தொலைக்காட்சியில் முன்பு கில்லி படத்தை ஒளிபரப்பும்போது ரத்தத்தை வைப்பர் சுத்தம் செய்யும் ஷாட்டை நீக்கியிருந்தார்கள். அவ்வளவு கவனமாக இருந்தவர்கள் நித்தியானதா தொடர்பான காட்சிகளை அருவருக்கத்தக்க வகையில் காட்டியதாக சிலர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.(நாலு ஆட்டோவுல இருபது பேர் உருட்டுக்கட்டையோட வந்து பதில் சொல்லாம இருந்தா சரிதான்.)

எங்க வீட்டுல கேபிள் இணைப்பை துண்டிச்சு ஒரு வருஷமாச்சு.இப்ப சாதாரண டி.டி.ஹெச் இணைப்பு மட்டும்தான். பொதிகை, மக்கள், மெகா, கலைஞர் - இவை மட்டுமே தமிழ் சேனல்கள்.நம்புங்கப்பா.

*******
அடுத்து வெட்டித் தனமா ஒரு தகவல்.

மௌன கீதங்கள் படத்தில் முதல் காட்சியில் பஸ் வந்து நிற்கும். பாக்யராஜ் சூட்கேசுடன் பஸ்சில் ஏறுவார்.அவருடைய லெதர் பேக் கீழே இருக்கும். டைரக்டர் பேக்கை மறந்து விட்டார் என்பது புத்திசாலி ரசிகரின் புளகாங்கிதம். ஆனால் படத்தில் கண்டக்டர் பாக்யராஜிடம்,'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?'  என்று கேட்பார். அசடு வழிய அதை எடுத்துக்கொள்வார் பாக்யராஜ். அசடு ஹீரோதானே தவிர டைரக்டர் அல்ல என்று உணர்த்தி ரசிகர்களை அமைதியாக படம் பார்க்கச் செய்துவிடுவார். ரசிகர்களுடன் கண்ணாமூச்சு ஆடும் இந்த டெக்னிக்கை அடிக்கடி பயன்படுத்துவார், பாக்யராஜ்.

******
ஷோலே படத்தை 1997ல் நாங்கள் மீண்டும் திரையிட்டபோது இருபத்து மூன்று ரீல் ரொம்ப அதிகம்னு நினைச்சு சில காட்சிகளை தவிர்த்து திரையிட்டோம்.படம் பார்க்க வந்திருந்த ஆளுங்க,"என்னப்பா, ஹேம மாலினி மாங்கா தோப்புக்குள்ள மாங்கா பறிக்க போன காட்சியை காணோம்...நீ சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டியா?"அப்படின்னு நீக்கிய காட்சிகளை ரொம்ப ஞாபகமா கேட்டாங்க.அதுக்கு இருபத்தி ரெண்டு வருஷத்துக்கு முன்னால திரையிட்ட படம். இந்த அளவுக்கு காட்சிகள் படம் பார்த்தவங்க மனசுல பதிஞ்சது.ஆனா இப்ப ஒரு படம் பார்த்தா அது எந்தப் படம்னு நினைவுக்கு கொண்டுவரவே வல்லாரை கீரை சாப்பிட வேண்டியிருக்கு. அது சரி...ஒரு படத்துல இருந்து சுட்டா நம்மால கண்டுபிடிக்க முடியும்.டைரக்டருங்க சின்ன வயசுல இருந்து பார்த்த எல்லா படத்துல இருந்தும் சுட்டு சுட்டு படம் எடுத்தா இப்படித்தான்.

செவ்வாய், 9 மார்ச், 2010

மகளிர் மசோதாவும் நாட்டின் அழிவும்...

"எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன். அது இதுக்குதானா" என்று தமிழில் பழமொழி சொல்லுவார்கள்.இவ்வளவு நாட்களாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யாமலேயே தள்ளிப்போட்டார்கள். இந்த ஆண்டு அப்படி என்ன திடீரென்று பெண்கள் மீது கரிசனம் என்று தெரியவில்லையே என்பது என் மனதில் இருந்த சந்தேகம்.
தினமணி நாளிதழில் வெளிவந்த சில கட்டுரைகள்  மூலமாக என் சந்தேகம் தீர்ந்து விட்டது.என்ன...நம் நாட்டு மக்களுக்கு சங்கு ஊதும் நாள் என்று என்பதுதான் சரியாகத் தெரியவில்லை.

அதோ பூனை போகுது பார் அப்படின்னு சொல்லி யானையைக் கடத்துறவங்களாச்சே நம்ம அரசியல் வியாதிகள். மகளிர் மசோதாவை நிறைவேற்ற முனைந்ததுக்குப் பின்னாலயும் மக்களுக்கு எதிரான சதி இருக்கு. ஆனா நம்மளை இதுல இருந்து யார் காப்பாத்துவாங்கன்னுதான் தெரியலை.

எதனால செத்தோம், ஏன் இந்த வியாதி வந்துச்சுன்னு தெரியாம அவஸ்தைப்படுறதோ, போய்ச்சேர்றதோ ரொம்ப கொடுமை.அணு சக்தி ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு எப்படி ஆப்பு வெக்கிதுன்னு தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படிங்க.

ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.இந்தியா விரைவில் ஜப்பான் மாதிரி ஆகப்போகுது. உடனே 'ஆ'ன்னு சந்தோஷமா வாயைப்பிளக்காதீங்க. நான் சொன்னது, ஹிரோஷிமா, நாகசாகி மாதிரி அழியப்போகுது. ஆனா ஒரே நாள்ல ஆகாது.கொஞ்சம் கொஞ்சமா உங்களை மயங்க வெச்சு மொத்தமா ஒழிக்கப்போறாங்க.
***************
கட்டுரை 1

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. 
 அதற்கு என்ன காரணமாம்?அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?
***************
கட்டுரை 2

அ​ணு​சக்​தித் துறை​யில் ஒத்​து​ழைப்​புக்​கான உடன்​பாட்டை அமெ​ரிக்​கா​வு​டன் செய்​து​கொள்ள,​​ அனைத்​துத் தரப்பு எதிர்ப்​பு​க​ளை​யும் மீறி,​​ பிடி​வா​தம் காட்டி அதைச் சாதித்​துக் காட்​டி​ய​வர் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்.​

இந்த உடன்​பாடு இந்​தி​யா​வின் மின்​சா​ரத் தேவை​களை முற்​றி​லு​மாக நிறை​வேற்ற உத​வும் அமு​த​சு​ரபி என்று இந்​திய ஆட்​சி​யா​ளர்​க​ளால் வர்​ணிக்​கப்​பட்​டது.​ இதன் இணைப்​பாக சர்​வ​தேச அணு​சக்​திக் குழு​மத்​து​டன் ஓர் உடன்​பாடு,​​ அணு​சக்தி வர்த்​தக நாடு​கள் குழு​வு​டன் மற்​றோர் உடன்​பாடு என்​றும் மத்​திய அர​சால் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ ஆனால்,​​ இந்த அணு​சக்தி விவ​கா​ரம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தை​க​ளும்,​​ நட​வ​டிக்​கை​க​ளும் முடி​வில்​லா​மல் தொட​ரு​வ​தன் விளை​வா​கப் புதிய விவா​தங்​கள் எழுந்​துள்​ளன.​

இந்​தி​யா​வு​ட​னான அணு​சக்​தித் துறை ஒத்​து​ழைப்​புக்கு அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றம் "ஹைட் சட்​டம்' என்ற ஒன்றை ஏற்​கெ​னவே நிறை​வேற்​றி​யி​ருந்​தது.​ இப்​போது அணு​சக்தி தொடர்​பாக இந்​திய நாடா​ளு​மன்​றத்​தி​லும் ஒரு புதிய சட்​டம் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்ற கோரிக்கை அமெ​ரிக்கா தரப்பி​லி​ருந்து முன்​வைக்​கப்​பட்டு,​​ அதை​யும் மன்​மோ​கன் சிங் அரசு சிர​மேற்​கொண்டு செயல்​ப​டுத்த மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்டு விட்​ட​தா​கச் செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன.​

இ ​தன் பின்​ன​ணி​தான் என்ன?​ அணு​மின் உற்​பத்​திக் கூடங்​களை நிறுவி,​​ மின்​சார உற்​பத்​தி​யில் ஈடு​ப​டு​கை​யில்,​​ விபத்​துக்​கான சாத்​தி​யக்​கூ​று​கள் இருப்​பது இயல்பே.​ அனல்-​புனல் மின் நிலை​யங்​க​ளில்​கூட விபத்​து​கள் நிகழ வாய்ப்பு உண்டு என்​றா​லும்,​​ அணு​மின் நிலைய விபத்து மிகு​தி​யான அபா​யங்​களை உள்​ள​டக்​கி​ய​தாக இருக்​கும்.​ அமெ​ரிக்​கா​வின் "மூன்று மைல் தீவு' அணு​மின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்​த​தும்,​​ ரஷி​யா​வின் "செர்​னோ​பில்' அணு​மின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்​ட​தும்,​​ இத்​த​கைய விபத்​து​க​ளின் அபாய விளை​வு​கள் எந்த அள​வுக்​குக் கடு​மை​யாக இருக்​கும் என்​ப​தற்​கான அனு​ப​வப் பாடங்​க​ளா​கும்.​

இந்த அபா​யத்​தைத் தவிர்க்​கும் வகை​யில் கூடு​தல் எச்​ச​ரிக்​கை​யோ​டும்,​​ பாது​காப்பு ஏற்​பா​டு​க​ளோ​டும் அணு​மின் உற்​பத்​தி​யில் ஈடு​பட வேண்​டி​யது அவ​சி​யம்;​ அது சாத்​தி​ய​மா​ன​தும்​கூட.​ ஆனால் இவை எல்​லா​வற்​றை​யும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடு​மா​னால்,​​ அதன் பாதிப்​பு​களை எதிர்​கொள்​வ​தும்,​​ பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உரிய இழப்​பீ​டு​களை வழங்​கு​வ​தும் தவிர்க்க முடி​யாத கட​மை​கள்.​

÷எ​திர்​பா​ராத அபா​யங்​க​ளுக்​குப் பாது​காப்பு ஏற்​பா​டாக வந்​த​வை​தான் காப்​பீட்​டுத் திட்​டங்​கள்.​ இதற்​காக சர்​வ​தேச அள​வில் சில கோட்​பா​டு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன;​ உலக நாடு​கள் பல​வற்​றில் சட்​டங்​க​ளும் இயற்​றப்​பட்​டுள்​ளன.​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழ​கத்​தின் முயற்​சி​யின் விளை​வாக 1963-ல் அணு​சக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்​பாடு ஒன்று உரு​வாக்​கப்​பட்டு அது 1997 முதல் அம​லாக்​கத்​துக்கு வந்​தது.​

÷வ​ ளர்ச்​சி​ய​டைந்த மேற்​கத்​திய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான,​​ பொரு​ளா​தார ஒத்​து​ழைப்பு மற்​றும் வளர்ச்​சிக்​கான ஸ்தா​ப​னத்​தின் முயற்​சி​யில் அணு​மின் சக்​தித் துறை​யில் மூன்​றா​வது நபர் கடப்​பா​டுக்​கான பாரிஸ் கோட்​பாடு 1960-ல் உரு​வாக்​கப்​பட்டு,​​ 1963-ல் புரூ​செல்ஸ் நக​ரில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் செழு​மைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ 1968 முதல் அம​லுக்கு வந்​தது.​ இந்த வியன்னா மற்​றும் பாரிஸ் கோட்​பா​டு​கள் இரண்​டை​யும் ஒருங்​கி​ணைத்து ஒரு முழு​மை​யான வரை​ய​றையை ஏற்​ப​டுத்த 1988-ல் செர்​னோ​பில் விபத்​துக்​குப் பிறகு ஒரு முயற்​சி​யும் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ 1997-ல்,​​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழக உறுப்பு நாடு​கள் அணு​சக்தி பாதிப்​புக்​கான கூடு​தல் இழப்​பீட்​டுக்​கான கோட்​பாடு ஒன்​றை​யும் நிறை​வேற்​றி​யுள்​ளன.​ இது இன்​ன​மும் அம​லாக்​கத்​துக்கு வர​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​
÷இந்த சர்​வ​தே​சக் கோட்​பா​டு​களை ஏற்​றுக்​கொண்ட நாடு​கள் சில,​​ தத்​தம் நாட்​டுக்​குப் பொருத்​த​மான சட்​டங்​களை இது தொடர்​பாக நிறை​வேற்​றி​யுள்​ளன.​ பிரிட்​டன்,​​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ்,​​ ரஷியா போன்​றவை பாரிஸ் அல்​லது வியன்னா கோட்​பா​டு​களை ஏற்​றுச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளில் சில.​ சர்​வ​தே​சக் கோட்​பாடு எத​னை​யும் அங்​கீ​க​ரிக்​கா​ம​லும்,​​ சொந்த நாட்​டில் சட்​ட​மி​யற்​றா​ம​லும் அணு​சக்​தித் துறை​யில் ஈடு​பட்டு வரும் நாடாக சீனா உள்​ளது.​

÷ர​ஷியா,​​ சீனா போன்ற நாடு​கள் அணு​மின் துறை​யில் உற்​பத்தி மற்​றும் வர்த்​த​கத்தை அர​சுத் துறை​யில் மட்​டுமே மேற்​கொள்​கின்​றன.​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட இதர நாடு​க​ளில் பிர​தா​ன​மாக அணு​மின்​துறை உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் தனி​யார் துறையே ஈடு​பட்டு வரு​கி​றது.​ அணு​மின் விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்​கும் முழு​மை​யான நிவா​ர​ணம் அல்​லது இழப்​பீடு வழங்க வேண்​டிய பொறுப்பு அர​சாங்​கத்​தையே சாரும் என்​பது பொது​வான ஒன்று.​ எனி​னும்,​​ காப்​பீட்​டுத் திட்​டங்​க​ளின் கீழ்,​​ இந்த அணு​மின் பாதிப்பு தொடர்​பான கடப்​பா​டு​க​ளுக்கு வழி​வகை செய்ய வேண்​டும் என்​பதே,​​ இது குறித்​துச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளின் நோக்​க​மாக அமைந்​தது.​

÷அ​ணு​மின் உற்​பத்​தித் துறை​யில் ஈடு​ப​டு​கிற நிறு​வ​னங்​கள் இரு​வ​கைப்​ப​டும்.​ அணு உலை​கள்,​​ இதர சாத​னங்​கள்,​​ எரி​பொ​ருள்,​​ எரி​பொ​ருள் பயன்​பாடு தொடர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​கள் போன்​ற​வற்​றில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் ஒரு​வகை;​ இவற்​றைப் பயன்​ப​டுத்தி அணு​மின் நிலை​யத்தை நிறுவி இயக்​கு​கிற,​​ அதைப் பரா​ம​ரிக்​கிற,​​ உற்​பத்​தி​யா​கும் மின்​சா​ரத்தை விற்று விநி​யோ​கிக்​கிற பணி​க​ளில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் இரண்​டா​வது வகை.​ அணு​மின் விபத்து பாதிப்பு குறித்த குடி​மைக் கடப்​பா​டு​கள் முதல் வகை நிறு​வ​னங்​கள் மீது சுமத்​தப்​ப​டக்​கூ​டாது என்​ப​து​தான்,​​ இது​தொ​டர்​பாக 1957-ம் ஆண்​டி​லேயே சட்​ட​மி​யற்​றிய அமெ​ரிக்க நாடு எடுத்த முடிவு.​  அ​ணு​மின் உலை மற்​றும் இதர சாத​னங்​களை உற்​பத்தி செய்​யும் நிறு​வ​னங்​கள்,​​ உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து நிகழ்ந்​தா​லும்,​​ அதன் பாதிப்​புக்கு எந்த வகை​யி​லும் கடன்​பட்​டவை ஆகாது என்று அவற்​றுக்கு முழு விலக்கு அளித்​து​விட்​டது அமெ​ரிக்க அர​சாங்​கம்.​ மாறாக,​​ விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்கு,​​ அணு​மின் நிலை​யத்​தைச் செயல்​ப​டுத்​து​கிற நிறு​வ​னமே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும்,​​ அதற்​காக அந்த நிறு​வ​னம் காப்​பீட்​டுத் திட்​டத்தை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் சட்​ட​மி​யற்​றப்​பட்​டது.​

÷அ​ணு​சக்தி ஒழுங்​கு​முறை ஆணை​யம் ஒன்​றும் ஏற்​ப​டுத்​தப்​பட்டு,​​ அது சட்​டத்​தின் கீழான காப்​பீட்டை அமெ​ரிக்க அணு​மின் கூடங்​கள் பெற்​றுள்​ள​னவா என்று கண்​கா​ணிக்​கி​றது.​ இந்த அணு​மின் கூடங்​கள் தொடர்​பான காப்​பீட்டு உத்​த​ர​வா​தத்தை "அமெ​ரிக்க அணு​சக்​திக் காப்​பீட்​டா​ளர்​கள்' என்ற ஒரு கூட்​ட​மைப்பு நல்கி வரு​கி​றது.​ இந்​தக் காப்​பீட்​டைப் பெறச் செலுத்த வேண்​டிய வரு​டாந்​திர "பிரீ​மி​யம்' தொகை,​​ ஒரே ஓர் அணு​உ​லை​யைக் கொண்ட மின்​கூ​டத்​துக்கு 4 லட்​சம் டாலர் என்று சரா​ச​ரி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்டு செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ மொத்​தத்​தில் அமெ​ரிக்​கா​வில் அணு​சக்தி சாதன உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டும் தனி​யார் துறை நிறு​வ​னங்​க​ளுக்கு,​​ விபத்து நிவா​ரண இழப்​பீட்டி​லி​ருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்​கும் வித​மா​கவே அந்​நாட்​டுச் சட்​டம் அமைந்​துள்​ளது.​

÷இப்​போது அமெ​ரிக்​கா​வில் தனி​யார் துறை அணு​மின் உற்​பத்தி நிறு​வ​னங்​க​ளாக உள்ள ஜென​ரல் எலெக்ட்​ரிக்,​​ அரேவா,​​ வெஸ்​டிங் ஹவுஸ்,​​ ரோசா​டோம் போன்ற பன்​னாட்டு நிறு​வ​னங்​கள்,​​ இந்​தி​யா​வில் புதிய அணு​மின் கூடங்​க​ளுக்​கான அணு உலை​கள் உள்​ளிட்ட சாத​னங்​களை விற்​பனை செய்ய மும்​மு​ர​மாக முயற்​சி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றன.​ இவை அமெ​ரிக்​கா​வில் உள்​ள​து​போ​லத் தங்​க​ளுக்​குப் பாது​காப்​பான சட்ட ஏற்​பா​டு​கள் இந்​தி​யா​வி​லும் செய்து தரப்​பட வேண்​டும் என்று கோரு​கின்​றன.​ இந்​தக் கோரிக்​கையை அமெ​ரிக்க அர​சாங்​க​மும் வலி​யு​றுத்​து​கி​றது.​ அண்​மை​யில் அமெ​ரிக்க நாட்​டுக்​குப் பய​ணம் மேற்​கொண்ட பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கி​டம்,​​ அதி​பர் ஒபா​மாவே இதற்​கான சட்​டத்தை விரை​வில் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்ற நெருக்​கு​தல் கொடுத்​துள்​ளார் என்​பது வெளிப்​ப​டை​யா​கவே தெரிய வந்​தது.​

÷இந்​தப் பின்​ன​ணி​யில் தான் மத்​திய அரசு அணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய முடி​வெ​டுத்​துள்​ளது.​ இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​

÷அது மட்​டு​மல்ல,​​ அணு​மின் விபத்து நேரிட்​டால்,​​ அந்த விபத்து தொடர்​பான இழப்​பீட்​டுத் தொகைக்கு 45 கோடி டாலர் ​(ரூ.​ 2,300 கோடி)​ உச்​ச​வ​ரம்​பாக விதிக்​கப்​ப​டும் என்று இந்த மசோ​தா​வைப் பற்​றிய விவ​ரங்​கள் தெளி​வு​ப​டுத்​து​கின்​றன.​ அணு​மின் கூட விபத்து,​​ லட்​சக்​க​ணக்​கான மக்​க​ளைக்​கூட பாதிப்​புக்கு இலக்​காக்​கும் பரி​மா​ணம் கொண்​ட​தாக அமை​யக்​கூ​டும்.​ அப்​ப​டிப்​பட்ட நிலை​யில் இந்த 45 கோடி டாலர் என்​பது வெறும் கண்​து​டைப்​பாக மட்​டுமே நின்​று​வி​டும் ஆபத்து எழும்.​ இந்த உச்​ச​வ​ரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டால் மட்​டுமே அதற்கு உள்​ளிட்​டுக் காப்​பீட்​டுத் திட்​டத்​தைப் பெற முடி​யும் என்​பது இந்​தச் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தற்​கான கார​ண​மா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ போபால் விஷ​வா​யுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்​டு​க​ளா​கி​யும்,​​ அதில் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உரிய நிவா​ர​ணம் பெற இய​லாது அல்​லா​டு​கிற நேர்வை நினை​வில் வைத்​துப் பார்த்​தால்,​​ மத்​திய அர​சின் புதிய சட்​டம் எவ்​வ​ளவு பாத​க​மான நிலை​மைக்கு இட்​டுச் செல்​லக் கூடும் என்​பதை ஊகிப்​பது கடி​னம் அல்​லவே!​

÷"லாபங்​கள் அனைத்​தும் தனி​யா​ருக்கு;​ பாதிப்​பு​க​ளும்,​​ இழப்​பும் அர​சாங்​கத்​துக்கு' என்​ப​து​தானே நவீன தாரா​ள​ம​யத்​தின் தாரக மந்​தி​ரம்.​ அதன்​படி அமெ​ரிக்க நாட்​டின் அணு​மின் உற்​பத்தி -​ ​ வர்த்​த​கத் தனி​யார் நிறு​வ​னங்​க​ளுக்கு ரூ.​ 60,000 கோடி வரை விற்று,​​ லாபம் ஈட்​டு​வ​தற்கு வழி​தி​றந்​து​விட முற்​ப​டு​கிற,​​ இந்​திய ஆட்​சி​யா​ளர்​கள்,​​ அவற்​றின் மீது எந்​தக் கட்​டத்​தி​லும் மயி​லி​றகு அள​வு​கூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்​டம் போட்​டுப் பாது​காப்பு நல்க முற்​ப​டு​கின்​ற​னர்.​

÷"என்ன விலை அமெ​ரிக்க அணு உலையே?​ எம் மக்​க​ளின் உயி​ரைக் கூடத் தரு​வேன்' என்று இந்​திய மக்​க​ளின் வாழ்​வு​ரி​மைக்கே எதி​ரான சட்​டத்தை மன்​மோ​கன் சிங் அரசு நிறை​வேற்ற அனு​ம​திக்​கப் போகி​றதா நம் ஜன​நா​யக நாட்​டின் நாடா​ளு​மன்​றம்?

 **************
கட்டுரை 3
அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​
அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!
******
தினமலர் இணைய தளத்தில் வெளிவந்த ஒளிப்படம்.

திங்கள், 8 மார்ச், 2010

அவதார் - ஆஸ்கர் - தி ஹர்ட் லாக்கர் - மகளிர் தினத்தில் மகளிருக்கு பெருமை

ஷங்கர் என்னதான் பிரமாண்டத்தில் மிரட்டியிருந்தாலும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் முடிவைக்காட்டிலும் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த காதல் படத்தின் கிளைமேக்ஸ் அதிகமாகவே என்னை பாதித்தது.

இது போல் பல உதாரணங்களை சொல்லலாம்.ரஜினியின் பாட்ஷா, தளபதியைக்காட்டிலும் ஆறிலிருந்து அறுபது வரை படம் அதிக நாட்களுக்கு மனதை விட்டு அகன்றிருக்காது.

விஜய் படங்களில் கில்லி, மதுர இவை அதிரடி என்றால் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்றவற்றின் மென்மையும் படங்களுக்கு வெற்றி தேடித்தருவதில் சளைத்தவை அல்ல.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அதிரடி கதையம்சம் கொண்ட படங்கள் நம்மை பிரமிப்புடன் பார்க்க வைக்கலாம். ஆனால் மனதைத் தொடுபவை எந்த மாதிரியான படங்கள் என்றால் மனதின் வலிகளையும் உணர்வுகளையும் பேசும் படங்கள்தான்.

சமீபத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சக்கைபோடு போட்டு வசூலைக்குவித்த அவதார் படம் போலவே தி ஹர்ட் லாக்கர் படமும் ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இன்று அவதார் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் தி ஹர்ட் லாக்கர் ஆறு விருதுகளையும் வென்றிருக்கின்றன.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 82 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குனர் பிரிவில் முதல் முறையாக பெண் இயக்குனர் விருது பெற்றிருக்கிறார்.மகளிர் தினத்தில் இந்த சிறப்பு நிகழ்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.(அமெரிக்காவில் 7ந் தேதிதானே என்று எதிர்வாதம் புரியக்கூடாது.)
தி ஹர்ட் லாக்கர் படத்தின் கதை தெரியாதவர்களுக்காக சிறு அறிமுகம்:

போர் என்பது போதை தருவது என்ற மெசேஜை நிகரில்லாத த்ரில்லராக தருகிறது இந்தப்படம்.வில்லியம் ஜேம்ஸ் என்ற வெடிகுண்டு நிபுணர்தான் கதையின் ஹீரோ. கவச உடை அணியாமலே, அலட்சியமாகச் சென்று கார்களிலும், சாலைகளிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வித்தியாசமான ஹீரோ. ராணுவ முகாமிலும் ஜாலி; போர்முனையிலும் ஜாலியாக வேலை பார்ப்பவன்.அலட்சியம் ஆகாது என்று சக வீரர்கள் சொல்வதை அசட்டை செய்து, ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஜெயிக்கிறான்.
கிட்டத்தட்ட ஒரு வருட காண்ட்ராக்ட் முடியும் நேரத்தில் தன் பணியில் முதல் தோல்வியைச் சந்திக்கிறான். சோதனைச் சாவடி ஒன்றை நோக்கி வருகிறார் அந்த இராக்கியர். அவர் உடலில் குண்டை கட்டி வைத்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு உயிர் வாழ ஆசை. காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். ஆனால் ஒரு இரும்புப்பட்டையால் பிணைக்கப்பட்ட குண்டை ஜேம்சால் அகற்றவே முடியவில்லை. வெடிக்கப்போகும் நொடியில் அந்த மனிதரை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிவருகிறான். அவனால் அதன் பிறகு தூங்கவே முடியவில்லை. அமெரிக்கா திரும்பியும் மனைவி,குழந்தைகளுடன் அவனால் இயல்பாக இருக்கமுடியவில்லை. எனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்குப் போறேன்.என்று சொல்லிவிட்டு திரும்ப இராக் வருகிறான். போர் என்ற போதை அவனை களத்துக்கு இழுக்கிறது.

உலகசினிமா வரலாற்றிலேயே மிக அதிகமாக வசூலைக் குவித்த படம் அவதார்.இதுவரை கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்கள்.வெறும் 11 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு, 16 மில்லியன் டாலர் ஈட்டியது தி ஹர்ட் லாக்கர்.ஆஸ்கர் வரலாற்றில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த படங்களில் மிகக்குறைந்த வசூல் செய்தது என்ற வித்தியாசமான பெருமையைப் பெறுகிறது இந்தப்படம்.
அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவிதான் தி ஹர்ட் லாக்கர் பட இயக்குனர் கேத்ரின் பிகெலோ. 3 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து, பிரிந்தவர்கள்தான் இருவரும்.ஆஸ்கர் வரலாற்றில் விருதுக்கான தகுதிப்பட்டியலில் இடம் பிடிப்பதே பெரும்பாடு. அப்படி பரிந்துரை பெற்ற நான்காவது பெண் டைரக்டர் கேத்ரின்.

பிரிந்த ஜோடி என்றாலும் கேமரூனுக்கும் கேத்ரினுக்குமிடையே வெறுப்பு வளையம் இல்லை.கோல்டன் குளோப் விருதை வாங்கும்போது, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கேத்ரின்தான் இதை வாங்கப்போகிறார் என்று நினைத்தேன். இதை வாங்கப்போகிறார் என்று நினைத்தேன். அவர் இதற்கு எல்லா வகையிலும் தகுதியானவர். என்று மனம் திறந்து சொன்னார் கேமரூன்.

இந்த இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் அற்புதமான படைப்புகளை கொடுத்து கலை சேவை புரிகிறார்கள்.

ஆனால் குடும்ப சண்டையில் அடிமை சிலரை சாகடிச்சுட்டு மறுபடி குடும்பமே ஒண்ணு கூடி அந்த அடிமைங்க ஏன் செத்தாங்கன்னே யாருக்கும் புரிய விடாம செஞ்ச கொடுமையையும் நாம பார்த்துகிட்டுதான் இருக்கோம். என்ன செய்ய முடியுது?

தொலைக்காட்சியில் ஆஸ்கர் விருது பற்றிய செய்தியைப் பார்த்ததும் வீட்டில் தி ஹர்ட் லாக்கர் படம் பற்றி வெளிவந்திருந்த தகவலை புத்தக குவியலில் தேடி எடுத்தேன். குங்குமம் - 15.2.2010 இதழ்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

நித்திய கேடிகள் - என்னுடைய பார்வை...

தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரும் மது, மாது என்று வாழ்ந்தவர்தான்.அதை விமர்சிப்பதில்லை.அவர் படைப்புகளை நாம் தலையில் வைத்துக்கொண்டாடுகிறோம்.இப்போது பெரிய பதவியில் இருப்பவர்களில் பலரும் மனைவி, துணைவியுடன்தான் இருக்கிறார்கள்.மக்கள் பணத்தில் அவர்கள் இப்போது சுகவாசியாக இருக்கிறார்களே என்று நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகிறது.அதிகாரத்தை மீறி எதுவும் பேசக்கூட முடிவதில்லை.
ஆனால் சாமியார்கள் விஷயம் அப்படி இல்லை.மெத்தப்படித்தவர்களும் பணக்காரர்களும் லட்சக்கணக்கில் பணத்தைக்கொடுத்துவிட்டு அவர் காலைப்பிடித்து தொழுகிறார்கள்.இதை தவிர்ப்பது முழுவதும் நம் கையில்தான் உள்ளது.இல்லறத்துக்குப்பிறகு துறவறம் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு இஷ்டத்துக்கு ஆட்டம் போடுபவர்களை நம்பி மோசம் போனோம் என்று மக்கள் புலம்பும் நிலைக்கு வருவதற்கு சில ஊடகங்கள் துணைபோகின்றன.

பிரகாஷ்ராஜ் சொல்லாததும் உண்மை என்ற தலைப்பில் விகடனில் ஒரு தொடர் எழுதியதை உங்களில் பலர் படித்திருக்கக்கூடும்.அவர் இப்போது மனைவியை ஒதுக்கிவிட்டார், நடன இயக்குனருடன் இருக்கிறார் என்பதெல்லாம் என்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை.
அவர் எழுதிய கட்டுரையில்  பல விஷயங்கள் என்னை சிந்திக்கச் செய்தன.அதில் ஒன்று,ஒரு சிறுகதையைப்பற்றிய அவரது கருத்து.

கதாசிரியரான நாயகன், அவள் தோழி உடம்பை விற்று பிழைப்பதைப்பார்த்து ஏன் இப்படி என்று கேட்டு அவள் தவறை உணரச்செய்வான்.அவளும் அந்த தொழிலை விட்டுவிடுவாள்.ஆனால் சில தினங்களிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்ததும் கதாசிரியருக்கு வருத்தம் வாட்டும். செய்யும் தவறை உணர வைத்த நான் அவளுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை உணர வைக்கவில்லையே என்று புலம்புவதாக கதை முடியும்.

அதாவது சிலரின் இறை நம்பிக்கையை தவறு என்று சொல்வதையே பிழைப்பாக வைத்திருப்பார்கள்.இதில் என்ன தவறு என்பது அந்த கட்டுரை ஆசிரியருடையது மட்டுமல்ல...என்னுடைய கேள்வியும் கூட.

தன்னம்பிக்கை இருந்தால் ஓ.கே. இல்லையென்றால் இறை நம்பிக்கை.வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் வெளியூர் சென்றிருக்கும்போது தனியாக இருப்பவர்கள் எதையோ இழந்தது போல் உணரவே இல்லை என்று சொல்லமுடியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில் இறைநம்பிக்கை என்பது ஒருவனுக்கு தன்னம்பிக்கை தரும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஒரு இடத்திற்கு வாகனத்தில் செல்கிறோம்.சிறு விபத்து. வாகனத்தையும் நம்மையும் தூக்கிவிடுபவர்கள் அருகில் எதாவது நிழல் இருந்தால் அங்கே உட்கார வைக்கிறார்கள்.பிறகு பக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி கொடுப்பார்கள். நாம் அதைக் குடித்துவிட்டு, லேசாக முகம் கழுவிக்கொண்டு பயணத்தை தொடர வேண்டியதுதான்.இத்தகைய இளைப்பாறும் இடம்தான் ஆலயம் என்பது என்னுடைய கருத்து.

அதை விட்டுவிட்டு, நான் இங்கேயேதான் இருப்பேன்.கடவுள் வந்து நான் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்வார் என்று காத்திருப்பதும், அப்படி அவர் அழைத்துச் செல்வாரா என்று கேட்பதும் அறிவுடமை ஆகாது.

இந்து மதத்தில் இருக்கும் பல பழக்கங்கள், சடங்குகள் அடிப்படையில் ஏதாவது ஒரே ஒரு அறிவியல் உண்மையை நம் நன்மையை உத்தேசித்துதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இப்போது கல்வியறிவால் சில தெளிவு இருந்தாலும் நமக்கு நலம் தரும் விஷயங்கள் சிலவற்றை நாம் சோம்பேறித்தனத்தாலோ விதண்டாவாதத்தாலோ செய்வதில்லை.அந்தக்காலத்தில் கல்வியறிவு மிகவும் குறைவாக கொண்ட மக்கள் இருந்ததால் இறைவனின் பெயரால் கட்டாயம் என்று சொன்னதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஒரு சில விஷயங்கள் வேண்டுமானால் இப்போது பொருந்தாமல் இருக்கலாம்.இப்போது பிரச்சனை அந்த சடங்குகளில் இல்லை.அவற்றை ஏன் செய்கிறோம் என்பதற்கான விளக்கம் தெரியாததால்தான் இவ்வளவு குழப்பமும், வில்லங்க கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையும்.

உடல் பசியைப்பற்றி நன்றாக தெரிந்து கொள்வதை தவறு என்று இந்துமதம் சொல்லவில்லை.நன்றாக அனுபவித்து பிறகு 'ச்சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று சொல்வதுதான் நிரந்தரமே தவிர, தொடக்கம் முதலே ஒரு விஷயத்தை தள்ளி வைத்து அதன் மீதான ஆர்வத்தை அதிகரிப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

சிவாலயங்களில் திருமணம் ஆனவர்தான் பூஜை செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் சொல்லப்பட்டுள்ளது.இதை சிதம்பரம் தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள்.அதனால்தான் அங்கே பதினாறு வயது பையனுக்கு பதினான்கு வயது பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இப்போது கூட இருக்கிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இதை பல இடங்களில் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

வயிற்றுப்பசி போலவே உடல்பசியும் இயற்கையே.ஆனால் அதை முறையான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.இதை சரிவர செய்யாமல் போவதின் விளைவுதான் சாமியார்களின் லீலைகள். இப்படி ஒருவர் புத்திமதி சொல்லி கட்டுரை எழுதுகிறாரா...அதில் நல்ல விஷயங்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது.

இதை விட்டுவிட்டு சாமி தரிசனம் தருகிறார் என்று அவரிடம் காசைக்கொடுத்துவிட்டு நிம்மதியைத் தேடிப்போகாதீர்கள். அந்த நிம்மதி, உங்கள் நகரத்திற்கு அருகாமையில் ஒரு கிராமத்துக்கு சென்றால் பாழடைந்த ஆலயத்திலோ, ஆற்றங்கரை ஓரத்திலோ கூட கிடைக்கலாம். நான் செய்வது இதுதான்.சில ஆண்டுகளுக்கு முன்பு சுகி.சிவம் அவர்கள் பெயரைக்குறிப்பிடாமல் ஒன்றுமில்லாதவரைப்பற்றி ஒரு வாரப்பத்திரிகையில் புகழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு என்று சன் தொலைக்காட்சியில் பேசினார். எனக்கு அப்போதே அது நித்தியானந்தா என்று புரிந்து விட்டது.

அவ்வப்போது ஓரிருவர்கள்தான் மாட்டுகிறார்கள்.மாட்டிக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

தூய்மையான அரசியல் வாதி என்று இப்போது இருக்கும் அரசியல் புள்ளிகள் கூட அண்ணா, காமராஜர், காந்தி என்றுதான் சொல்கிறார்கள்.ஆக மொத்தத்தில் இப்போது ஒருவரும்......................................... என்பது இவர்களே ஒப்புக்கொண்ட ஸ்டேட்மெண்ட்.அது போல், நம் முன்னோர்கள் உருவாக்கிய கோவில்களை மேம்படுத்தி வழிபடுவதுதான் நல்லது. நான் தான் சாமி என்று சொல்பவனை கண்டுகொள்ளாதீர்கள். ஆளில்லா கடையில் அவன் எவ்வளவு நாள் டீ ஆத்த முடியும்?

நாயன்மார்கள் என்று போற்றப்படுபவர்கள் கூட சிவனை வழிபடும் பக்தர்களுக்கு தொண்டு செய்யும் அடியேன்.இன்னும் கடவுளின் பக்தன் என்று சொல்லும் அளவுக்கு கூட எனக்கு தகுதியில்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று நான் தான் கடவுள் என்று சொல்பவன் எவ்வளவு மோசக்காரனாக இருக்கவேண்டும் என்று உணர வேண்டியது நம் கடமை.

கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் உருவானதற்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவை எல்லாம் இருப்பதால்தான் வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து புது ஆடை வாங்குவது என்று பல விஷயங்களிலும் நாம் நம்மை புதுப்பித்துக்கொள்ள முடிகிறது.(தினமும் ஜவுளிக்கடைக்கு செல்பவர்களுக்கு இது அபத்தமாக தெரியலாம்.ஆனால் மூன்று வேளை சாப்பாட்டுக்கு கூட சம்பாதிக்க முடியாத பல கோடிக்கணக்கான மக்களுக்கு பண்டிகை தினம்தான் நல்ல உணவு, உடை கடன் வாங்கியாவது கிடைக்கிறது என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.)

அவ்வளவு ஏன்? ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி செய்பவர்கள் கூட பிறந்த நாள், திருமண நாள் என்று எதாவது ஒரு நாளில்தான் செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அந்த குழந்தைகளுக்கு அரை வயிற்று உணவாவது ஏற்பாடு செய்ய சில இல்லங்களின் நிர்வாகிகள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

மூன்று மணி நேரத்தில் தேர்வு எழுத வேண்டும் என்றால்தான் ஒரு ஒழுங்கு இருக்கும்.படிப்பு என்று இல்லை...எந்த விஷயத்திலும் ஒழுங்கு இல்லை என்றால் சிக்கல்தான். வரிசை முறை கடைப்பிடிக்கப்படாததால் பேருந்தில் ஏறுவது முதல் பல காரியங்களிலும் எவ்வளவு இன்னல்கள்?

இப்போது உத்திரப்பிரதேசத்தில் கூட இலவசங்களைப் பெற கூடிய கூட்டத்தில் அறுபது பேருக்கு மேல்  பலியான இடத்தில் வரிசை முறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காதே.

நமக்கு நன்மை தரும் விஷயமாக இருந்தாலும் அதற்கு என்று ஒரு ஒழுங்கு இருந்தால் மட்டுமே நம்மால் கடைப்பிடிக்க முடியும்.

நான் பதினைந்து வயதிலேயே திரையரங்கத்தில் வேலைக்குச் சென்றவன்.திரைப்படம் திரையிடும் கருவியை அப்போதே இயக்கியதால் பிறகு வேறு திரையரங்கத்தில் படம் பார்க்கச் சென்றால், திரையில் வரும் காட்சிகள் பற்றிய எதிர்பார்ப்பை விட அந்த நேரத்தில் ஆப்ரேட்டர் எப்படி மெஷினை இயக்குவார், ஒரு புரொஜக்டரில் இருந்து மற்றொரு புரொஜக்டரில் எப்படி சட்டென்று காட்சி மாறும் என்பது போன்ற ஆராய்ச்சியில்தான் இருப்பேன்.இப்போதெல்லாம் படம் பார்ப்பது என்பது எரிச்சல் தரும் விஷயமாகிவிட்டது.

இவ்வளவுக்கும் நான், சிறுவயதில் சில படங்களுக்கு அழைத்துச்செல்லாததால் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு பல நாட்கள் சரியாக சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.(அப்போது எனக்கு ஒரு திரையரங்கத்தில்தான் இலவசமாக படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தது.)

எனக்கு இருபத்தி ஒரு வயது ஆகும் வரை (கல்லூரியில் மூன்றாம் ஆண்டு) எங்கள் வீட்டில் தொலைக்காட்சி மட்டுமல்ல, வானொலி கூட கிடையாது.எல்லாம் அக்கம்பக்கத்து வீடுகளில்தான்.

பி.காம் முதல்வருடம் படிக்கும்போது உள்ளூர் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக ஒரு ஆண்டு இரவு நேரப்பணி செய்தேன்.அந்தப்பணியில் இருந்து விலகிய பின்பும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது.பிறகு அம்மாவுக்காக ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிதான் வாங்கினோம்.அதிலும் பதினைந்து நாட்கள் கழித்துதான் படம் பார்க்க முடிந்தது.கேபிள் வயர் பொருத்தும் இடத்தில் ஒரு வயர் சரியாக பற்ற வைக்காததுதான் பிரச்சனை.

கேபிளில் வேலை செய்தபோது தொலைக்காட்சியின் மீதான மோகம் சுத்தமாக போய்விட்டது.(அப்போதும் இப்போதும் கதைப்புத்தகங்கள் மீதான காதல்தான் எனக்கு அதிகரித்து வந்துள்ளது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.)

டூவீலரில் ஹாரன் அடிப்பதில் இருந்த ஆர்வம் நான் வண்டி ஓட்டத்தொடங்கியது காணாமல் போனது. கேமராக்களின் மீதான பிரமிப்பு, பல திருமணங்களையும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் படம் பிடித்ததும் குறைந்து விட்டது. நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன் என்று சொல்லவில்லை.ஒரு பொருளை விட்டு விலகி இருக்கும்போது அதன் மீதான ஆர்வம், பக்குவப்பட்ட மனமில்லாதவர்களிடம் வெறியாகத்தான் வெளிப்படும் என்று சொல்கிறேன்.பூவை ரசிப்பதற்கும், அதைக் கசக்கிப்போடுபவர்களுக்கு வித்தியாசம் உண்டுதானே.

உணவு, தூக்கம் இவை சரியாக இல்லை என்றால் ஒரு மனிதனால் ஒழுங்காக இருக்க முடியாது.இதன் மோசமான விளைவு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெவ்வேறு விகிதத்தில் வெளிப்படும் என்பது எனது அனுபவம்.உடலில் ஏற்படும் உணர்ச்சியும் இது போன்ற ஒன்றுதான். சாமியார்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்பது என் மனம் ஏற்றுக்கொண்டு விட்டதால் இந்த செய்தி தெரிந்ததும் என் மனதில் எந்த மாற்றமும் இல்லை. கவலைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சில போலிகளிடம் பணத்தையும் அறிவையும் கொடுத்து ஏமாந்தவர்களாகவே இருப்பார்கள்.

புலம்பும் நண்பர்களுக்கு நான் சொல்லும் ஒரே வார்த்தை பதில், "புறக்கணிப்பு." இதை விட பெரிய தண்டனை ஒன்று இருக்கவே முடியாது.இந்த தண்டனை தவறு செய்த பின்பு அல்ல.இது போன்ற சாமியார்கள் வெளிவரும்போதே ஒதுக்கிவிடுங்கள். அவர்கள் ஆளில்லா கடையில் யாருக்கு இட்லி அவிப்பார்கள் என்று பார்த்துவிடுவோம்.

ஆசிரியர், காவல்துறை, அரசியல் என்று எந்த துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் காமத்தை அடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.பசியைப்போக்குவது போல் இந்த உணர்வைத் தணிக்கவும் ஒரு வரையறை உள்ளது. குப்பைத்தொட்டியில் உள்ள எச்சில் இலைகளில் போய் உணவு உண்ணுவது போன்றது இத்தகைய முறையற்ற உறவு. இனி முடிவெடுக்கவேண்டியது நீங்கள்தான்.

சனி, 6 மார்ச், 2010

பட்டத்துடன் பறக்கும் உயிர்...

வானொலியில் தொகுப்பாளராக இருக்கும் கண்மணி, வடசென்னைப்பகுதியில் மாஞ்சா தடவிய நூலால் கழுத்து அறுபட்டு மறுபிறவி எடுத்த செய்தியை மார்ச் 1-15 தேதியிட்ட தேவதை இதழில் படித்தேன். பட்டம் விடுவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதால் இந்த மாஞ்சா தடவிய நூல் கலாச்சாரத்தை தடுக்காமல் இருக்கிறார்களாம்.
நம் பதிவுலக நண்பர் புலவன் புலிகேசி மேற்குமாம்பலம் பகுதியிலேயே மாஞ்சா நூல் வில்லங்கத்தால் ஆபத்தில் சிக்கி மீண்டிருக்கிறார்.அவர் விரைவில் குணமடையட்டும்.

அரசியலில் பெரிய புள்ளியாக இருப்பவர்கள் வீட்டில் மாஞ்சா நூலால் இழவு விழுந்தால்தான் சட்டத்திருத்தம் கொண்டுவருவார்களா?
******
வெறிநாய்க்கடியால் ஏழைகள் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகிக் கொண்டிருக்கும்போது சில அரை லூசுகள் நாய் உயிர் ரொம்ப முக்கியம் என்று கோர்ட்டில் தடைவாங்கி வைத்திருக்கின்றன.சில இயற்கை வளங்களை சேதாரப்படுத்தாமல் வாழமுடியும் என்ற நிலை இருப்பதை பொருட்படுத்தாமல் அவைகளுக்கு வேட்டு வைக்கிறோம்.

மனித உயிர்களுக்கு ஆபத்து என்று உறுதியாக தெரிந்த பிறகும் அதை தடை செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை.அதுசரி... டென்னிஸ் பந்தில் கூட கிரிக்கெட் விளையாட விடாமல் மெரினா பீச்சை அழகு படுத்துவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்கமுடியும்.

ஒரு ஸ்மால் டவுட்டு....

இலவசம்னு குச்சி ஐசை கொடுத்துட்டு மது வியாபாரத்தின் மூலம் கோவணத்தையும் உருவிடுறவங்க கிட்ட போய் ஆதங்கமா பேசுற என்னைய லூசுன்னு நினைப்பாங்களோ...

வியாழன், 4 மார்ச், 2010

வராக்கடன் திடீரென திரும்பக் கிடைத்தால்...

வராது என்று முடிவு செய்து நஷ்டக்கணக்கில் எழுதிய பணம் திரும்ப வசூலானால் அதை லாபம் என்று குறிப்பிட்டுதான் வரவு வைப்பார்கள்.எனக்கும் அவ்வப்போது அந்த நிலை வருவதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பதினைந்து கோயில்களுக்கு சென்று ஓரளவு தலபுராணங்களை சேகரித்தேன்.அவை அவ்வப்போது சில பத்திரிகைகளில் பிரசுரமானதும் உண்டு.அப்படி நான் மொத்தமாக தினகரன் ஆன்மீக மலருக்கு அனுப்பியவைகளில் ஐந்து மட்டும் 2008ல் மூன்று மாதங்கள் பிரசுரமாயின.

பிறகு அவ்வளவுதான் என்று நான் நினைத்திருந்தபோது தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக மாத இதழில் இதுவரை மூன்று தல வரலாறுகள் பிரசுரமாயிருப்பது வராக்கடன் வசூலான கதைதானே.

இங்கே இருப்பது மார்ச் 2010 இதழில் பிரசுரமான கட்டுரை.

ஆனந்தவிகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாஷிகா கேமராவை வைத்து புகைப்படங்கள் எடுத்தேன்.அப்போதுதான் அந்த பதினைந்து கோயில்களையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
(படத்தின் மீது க்ளிக் செய்தால் தெளிவாகப் படிக்கலாம்.)இதே கட்டுரை பிறகு காலைக்கதிர் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் ஆன்மிககதிர் இதழிலும் வேறு வடிவில் பிரசுரமாகியிருந்தது.தினமலர் இணையதளத்திலும் நான் அனுப்பிய தகவல்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன.(மூலவருடைய புகைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.)  ஆனால்  copyright தினமலருக்காம்.அது சரி...பொது வாழ்வில் இதெல்லாம் சாதாரணமப்பா...

அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழ்நாடு அரசு குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையத்தின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு,தினமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் இரண்டு முறை ஆறுதல்பரிசு - இவை உட்பட பத்திரிகைகளில் பிரசுரமான சில படப்புக்களை திருவாரூர் டாக்கீஸ் வலைப்பூவில் வைத்திருக்கிறேன்.

திங்கள், 1 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - இது விமர்சனமல்ல...

ஏனெனில் நான் இன்னும் இந்தப்படத்தைப்பார்க்கவே இல்லை.படிக்காமலேயே தேர்வு எழுதிய காலமெல்லாம் கல்லூரியோடு போயாச்சு.இப்பவும் அதே நல்ல காரியத்தை செய்யுற எண்ணம் எனக்கில்லை.படத்தைப்பற்றிய விமர்சனத்தை படம் பார்த்தவர்கள் எழுதட்டும்.இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு.
பதிவர் ஜெட்லி, அவரது வி.தா.வ விமர்சனத்தில் படம் முடிவதற்கு பத்து நிமிடம் முன்பே சிம்பு இயக்கிய தெலுங்கு படத்தின் எண்ட் டைட்டில்  a film by karthik என்று போடுவதாக காட்சி வந்ததும் பாதிப்பேர் எழுந்து சென்றுவிட்டதாக எழுதியிருந்தார். அந்த தகவலை அடிப்படையாக வைத்துதான் இந்த பதிவை எழுதுகிறேன்.
இங்கே திருவாரூரில் வி.தா.வ திரையிடப்பட்டிருந்த தியேட்டரில் படம் பார்த்த கல்லூரி மாணவர்களில் சிலர் படம் முடிந்த பிறகும் சிம்பு-த்ரிஷா சேர்ந்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை...அதே மாதிரி End Tittle போடும் போது கௌதம் வாசுதேவ் மேனன் பெயர் போடாமல் கார்த்திக் பெயர் போட்டார்கள்.இதுவும் ஏன் என்று புரியவில்லை.ஒருவேளை இதுலயும் வித்தியாசம் காட்டிட்டாங்களோ "என்று சொன்னார்கள்.
அதோடு ஆப்ரேட்டர் புரொஜக்டரை நிறுத்தி விட்டாராம். இந்த தியேட்டரில் UFO முறையில் ஹார்ட் டிஸ்க் மூலமாக திரையிட்டார்களா அல்லது பிலிம் சுருளைப்பயன்படுத்தி படம் காட்டினார்களா என்பது தெரியவில்லை.எது எப்படி இருந்தாலும் எவ்வளவு சூப்பராக படம் எடுத்தாலும்  மக்களிடம் அதைக் கொண்டு போய் சேர்ப்பதில்(தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு) புரொஜக்டர் ஆப்ரேட்டர்களுக்கும் பங்கு உண்டு என்பது எனக்குப் புரிகிறது.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கலையாக இருந்தாலும் அடித்தட்டு மக்கள் வரை பெரும்பாலான மக்களை சென்று அடைந்தால் மட்டுமே வெற்றிக்கனி கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நம்முடைய திறமையைக்காட்ட நினைத்து அதிகம் படித்தவர்கள் அல்லது சராசரிக்கும் அதிகமான ரசிகர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் படம் எடுப்பதை யாரும் தடுக்கப்போவதில்லை.

ஆனால் அந்தப் படத்தை எழுதப்படிக்கத் தெரியாத சாதாரண ரசிகனும் பார்க்கத்தான் போகிறான்.அவன் என்னய்யா இது? ஒரு.........................வும் புரியலை அப்படின்னு பேசிட்டு போய்கிட்டே இருப்பான்.அதனால் படைப்பாளி கவலைப்படமாட்டார் என்றே வைத்துக்கொண்டாலும் நிச்சயமாக ரசிகனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.

ஆங்கிலத் திரைப்படங்களில் இறுதியில் டைட்டில் கார்டு போடுகிறார்கள் என்றால் அங்கே முழு டைட்டிலும் முடியும் வரை பார்ப்பார்கள். கதையை சுடுவது போதாது என்று பல இயக்குனர்கள் டைட்டிலையும் இறுதியில் வைத்துவிடுகிறார்கள்.அதை பாதி ரசிகர்கள் பார்க்கத் தயாராக இருந்தாலும் ஆப்ரேட்டர்கள் முழுவதுமாக திரையிட தயாராக இல்லை.

a film by என்று எதாவது பெயர் வந்தாலே பட் டென்று அரங்கத்தில் லைட்டைப்போட்டு புரொஜக்டரை நிறுத்துவதில் நம்ம ஊர் ஆப்ரேட்டர்கள் ரொம்பவும் தெளிவாக இருப்பார்கள்.இதையெல்லாம் கௌதம் அறிந்திருக்கமாட்டார் என்று தோன்றுகிறது.

இப்போது பல ஊர்களில் கடைசி பத்து நிமிடங்கள் End Tittle மட்டுமே இருக்கிறது என்று முன் கூட்டியே புரொஜக்டர் நிறுத்தப்பட்டாலும் படம் முடிந்ததா இல்லையா என்றே ரசிகர்களுக்குப் புரியாத நிலை ஆரோக்கியமானதா என்று தெரியவில்லை.

சுருக்கமாக சொன்னால் ஆளில்லா தியேட்டரில் யாருக்காக டீ ஆத்த வேண்டும் என்பதே என் கேள்வி.

இவர்கள் எப்படி படம் எடுத்தார்கள், அதில் கதை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் அடுத்த விஷயம்.ஆனால் செய்வதை ஒரு அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும்.

நிறைய நிறுவனங்களில் பல பணியாளர்களில் இருந்து முதலாளி வரை எல்லாருமே நம்மால் மட்டுமே இந்த நிறுவனம் இயங்குகிறது என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கடைநிலை ஊழியர்களை கண்டுகொள்வதே கிடையாது.

இது பற்றி விளக்கம் கேட்டால்,"இவன் இல்லன்னா வேற ஆள் கிடைக்காதா..."என்பதுதான் பதிலாக இருக்கும். அவன் அவசியம் இல்லை என்றால் அந்த பணியை செய்ய வேறு ஒரு ஆள் தேவைப்பட்டாலே அந்தப்பணி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது என்பது உண்மை.

இதை மதிக்காத இடத்தில் அந்த தொழில் அழிந்து விடும். அல்லது பல மடங்கு வளர்ச்சி அடைய வேண்டிய இடத்தில் மிக மிக மிக குறைந்த வளர்ச்சியுடன் இருக்கும்.

நம் சினிமா இயக்குனர்களும், சில நடிகர்களும் இப்படித்தான் என்னால் மட்டுமே இந்தப்படம் ஓஹோ புரொடக்ஷன்ஸ் ரேஞ்சில் ஓடுகிறது என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

நன்றாக சமைப்பது மட்டுமல்ல...அதை முறையாக பரிமாறுவதும் ஒரு கலைதான் என்று என்னிடம் ஒருவர் சொன்னார்.திரைப்படம் திரையிடுவது என்பது அப்படித்தான்.கடந்த பத்தாண்டுகளில் திரைப்படம் திரையிடும் தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.ஆனால் திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சுமார் தொண்ணூறு ஆண்டுகாலம் பிலிம் சுருளைப்பயன்படுத்தி மோட்டார் புரொஜக்டரில் திரையிடும் தொழில்நுட்பம் அதன் அடிப்படை தத்துவத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது மிகப்பெரிய சாதனைதான்.

அந்த புரொஜக்டரில் படம் திரையிடும் வேலையை ஒரு திரையரங்கில் சில காலம் செய்து வந்திருக்கிறேன்.இதில் எனக்கு எரிச்சல் தந்த ஒரு விஷயம் உண்டு.

படத்தின் இறுதியில் டைட்டில் போடும் வழக்கத்தை நான் மணிரத்னம் இயக்கிய படங்களில்தான் முதலில் (தமிழ்ப்படங்களில்) பார்த்தேன் என்று நினைக்கிறேன்.அவர்கூட "தளபதி"யில் எல்லா பெயர்களையும் முதலிலேயே போட்டுவிடுவார்.
ஷங்கர், தன்னுடைய முதல் இரண்டு படங்களில் (ஜென்டில்மேன்,காதலன்) முதலிலேயே பெயர் போட்டாலும் இந்தியன் படத்தில் இருந்து இறுதியில்தான் பெயர்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

சரியாக பேட்டா கூட கிடைக்காத சில தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு அவர்களது பெயர், சில நொடிகளாவது திரையில் தோன்றும் என்ற திருப்தியாவது இருந்து வந்தது.

இப்போது பேருக்குதான் பேர் போடுகிறார்கள் என்று சொல்லும் வகையில் ஆகிவிட்டது.

(மொழி, பருத்திவீரன், ஆறு, இம்சைஅரசன் 23ம் புலிகேசி, காதல், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், அந்நியன், பாய்ஸ், திருமலை, கில்லி, வானத்தைப்போல, 12B, நந்தா, பிதாமகன்,பெண்ணின் மனதைத்தொட்டு,அலைபாயுதே, டும் டும் டும் - இந்தப்படங்களை மட்டும்தான் நான் 2000 - 2009 வரையேயான பத்தாண்டு காலத்தில் திரையரங்கில் போய் பார்த்தேன். இவை தவிர சில படங்களை சேட்டிலைட் சேனல்களில் இரண்டு மணி நேர விளம்பரங்களுடன்தான் பார்த்திருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம், மூட்டைப்பூச்சிக்கு ரத்த தானம் செய்ய ஐம்பது ரூபாய் காசு கொடுத்து டிக்கட் வாங்க வேண்டுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுதான்.காபி,டீ குடிக்கும் பழக்கம் கூட இல்லாத எனக்கு ஐம்பது ரூபாய் என்பது பெரிய தொகையாக தோன்றுகிறது.அதிலும் அந்த தொகை கொடுக்க தகுதி வாய்ந்த திரையரங்கம் பெரிய நகரங்களில் வேண்டுமானால் இருக்கலாம்.இதிலும் பருத்திவீரனை சென்னை,விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டரில் ஐம்பது நாட்கள் ஆன பிறகு பத்து ரூபாய் கொடுத்துதான் பார்த்தேன்.)
பாடலாசிரியர் பழநிபாரதி பல போராட்டங்களுக்குப்பிறகு முழுப்படத்துக்கும் பாடல் எழுதிய கோகுலம் (இயக்கம் : விக்ரமன்) படத்தில் தன் பெயரைப்பார்க்கலாம் என்று நண்பர்களுடன் சென்னை உதயம் தியேட்டருக்குச் சென்றிருக்கிறார்.விக்ரமன் படத்திலும் இறுதியில்தானே பிற பெயர்கள் வரும்.படம் முடியும் வரை நம்பிக்கையுடன் இருந்தவருக்கு, எண்ட் டைட்டில் ஓடத்தொடங்கியதுமே கார்பன் அணைக்கப்பட்டுவிட, அந்த நொடியே திரை இருண்டது போலவே பழநிபாரதியின் முகமும் பிரகாசம் இழந்திருக்கிறது.

பாடலாசிரியர் பழநிபாரதியின் அனுபவம் இப்படி என்றால் கந்தசாமி இயக்குனர் சுசி.கணேசனின் அனுபவம் மற்றொரு வகையானது.அவர் இயக்கிய விரும்புகிறேன் படம் 2001ம் ஆண்டு ஜூன் மாதம் சென்சார் செய்யப்பட்டாலும் 2002 டிசம்பர் இறுதி வாரத்தில்தான் ரிலீஸ் ஆனது.நாசரின் கரும்பு வயலில் பிடித்த தீ அந்த கிராமத்தினரின் மொத்த சாகுபடியையும் அழிந்துவிடும் என்று எல்லாரும் கலங்கி நிற்கும்போது நெருப்பை நெருப்பால் அணைக்கும் உத்தி மூலம் பிரசாந்த் மற்ற தோட்டங்களைக் காப்பாற்றியவுடன் தியேட்டர் ஆப்ரேட்டர் லைட்டைப்போட்டுவிட்டார். பார்வையாளர்களும்  இருக்கையை விட்டு எழுந்துவிட்டார்கள்.

ஆனால் கருகிக்கிடக்கும் வயலில் ஆய்வு செய்யும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமன், சிநேகாவின் வாளியை கண்டுபிடித்து எடுத்துவிடுவார்."போச்சு...வாளிக்குள் நெருப்பை வைத்து வீசிய சிநேகாவை கைது செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் நினைப்பார்கள்.இடையிடையே இண்டர்கட்டில் சிநேகா மணமேடைக்கு வரும் காட்சிவேறு.
ஆனால் ஸ்ரீமனின் உடன் வரும் கான்ஸ்டபிள்,"சாப்பாடு கொண்டுவந்த வாளியை மறந்து போட்டுட்டு போயிருப்பாங்க சார்."என்று சாதாரணமாக சொல்லிவிட்டு செல்வார். உடனே ஸ்ரீமன் எரிச்சலுடன் அந்த வாளியைத் தூக்கிப்போட்டு உதைப்பார். அத்துடன் படம் முடியும். இதைப் பார்த்த நான், ஸ்ரீமன் வாளியை உதைக்கும் போது தியேட்டரினுள் லைட்டைப்போட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

Jumanji, Evil dead போன்ற ஆங்கிலப்படங்களைத் திரையிடும்போது  நான் இப்படித்தான் செய்தேன்.

சில மாதங்கள் கழித்து ஒரு பேட்டியில் சுசி.கணேசனும்,"ஸ்ரீமன் வாளியை உதைக்கும் காட்சியில் லைட்டைப்போட்டிருந்தால் ரசிகர்களுக்கு அட என்ற உணர்வைத் தோன்றவைத்திருக்கலாம். நாங்க கஷ்டப்பட்டு யோசிச்சு இப்படி வைத்த காட்சி ரசிகர்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாம போனதுக்கு ஆப்ரேட்டர்கள் காரணமாயிட்டாங்க."என்று சொல்லியிருந்தார்.(இதை அவர்  ஆங்கிலப்படங்களில் இருந்தே சுட்டிருக்கலாம்.அது வேறு விஷயம்)
இப்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் a film by karthik என்ற டைட்டிலுக்குப் பிறகும் பத்து நிமிடம் படம் நீள்வது புதிய உத்தியாகவே இருக்கட்டும்.அதை ஒரு சுற்றறிக்கையாகவே எல்லா தியேட்டருக்கும் அனுப்பியிருக்கலாம். இல்லை என்றால் அந்த டைட்டில் இரண்டு நொடிகள் மட்டுமே இருக்கும்படி செய்து விட்டு கதையைத் தொடர்ந்திருக்க வேண்டும்.

எந்த தொழிலையும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்று நினைத்ததால்தான் நான், தியேட்டரில் ஆடியன்ஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எண்ட் டைட்டிலையும் முழு அளவில் ஓட விடுவேன்.ஜாக்கிசானின் படங்களில் எண்ட் டைட்டில் ஓடும்போது படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்கள்(சாப்பிடுவது அல்ல) காட்டப்படும்.ரசிகர்களும் கூட இதை ஆர்வமுடன் முழுவதுமாக பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள்.
தமிழில் கூட மூவேந்தர், பத்ரி ஆகிய படங்களில் இப்படி ஷீட்டிங் ஸ்பாட் நிகழ்வுகளின் தொகுப்புகளைக் காட்டுவார்கள்.வேறு எதுவும் என் நினைவுக்கு வரவில்லை.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், எந்த தொழிலையும் அனுபவித்து ஆர்வமுடன் செய்தால் அது சிறப்பானதாகவே அமையும். கடமையாகவும், பணம் சம்பாதிப்பதையும் மட்டுமே மனதில் கொண்டு செய்தால் எடுத்தவர்களுக்கே பிடிக்காத மாதிரிதான் படங்கள் உருவாகும் என்பது என் எண்ணம்.