Search This Blog

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மெர்சல் கதை பழைய படங்களின் காப்பியா?


எப்படி கதை எழுதுவது என்ற கேள்வி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விடை முழுவதுமாக கண்டறியாமலேயே இருக்க சாத்தியம் இருப்பதாகத்தான் தெரிகிறது. 



கே டிவி, சமூக வலைதளங்களைப் பார்த்தே படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை அட்லீ விதைத்திருக்கிறார் என்று முகநூலில் ஒரு பதிவு பார்த்தேன். இது மாதிரி சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பிறகு பார்ப்போம்.



எழுத்தாளர் சுஜாதா ஒரு பேட்டியில், எல்லா எழுத்தாளர்களுமே ஒரே கதையத்தான் திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். உடனே, நான் எழுதியிருக்கும் பெரும்பாலான கதைகளை மனதில் ஓட்டிப்பார்த்தேன். அட... ஆமா, நாம கூட பெரும்பாலான கதைகளில் ஒரே கருவைத்தான் அடிப்படையா வெச்சிருக்கோம்னு தோணுச்சு.









ஏன் இப்படி எழுதிகிட்டு இருக்கோம்னு யோசிச்சா இந்த ஒரு கருவை வெச்சு ஒரு கதையிலயே முழுசா எல்லாத்தையும் சொல்ல முடியாது. இன்னும் ஆயிரம் கோணங்களில் ஐயாயிரம் சிறுகதைகள் கூட எழுத முடியும் என்று என்னையறியாமல் என் ஆழ்மனது நம்பிக்கொண்டிருப்பது புரிந்தது.



எழுத்து துறையில் ஜாம்பவான்கள் பலரும் கூட இந்த மன எண்ணத்தில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சுஜாதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சுஜாதா எழுதிய ஆரியபட்டா என்ற நாவலைப் படித்தேன். நூலின் முன்னுரையில், தமிழில் எழுதப்பட்ட இந்த நாவலை திரைக்கதையாக மாற்றி கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், சௌந்தர்யா நடித்து வெளிவந்ததாம். தமிழில் எழுதிய கதையும் கல்கி வார இதழில் 1998ல் தொடர்கதையாக வெளிவந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.



நல்ல திறமைசாலியான விஞ்ஞானி பல வகையிலும் அவமானப்படுத்தப்படுகிறார். அவரது கண்டுபிடிப்புகளுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பாராட்டைக்கூட அடுத்தவர் தட்டிக்கொண்டு சென்று விடுவதால் கோபம் எல்லை மீறிப்போய் நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாத கும்பலுக்கு விலைபோய் விடுகிறார். உண்மை தெரிந்ததும் விஞ்ஞானியின் மனைவியே நாட்டைக்காப்பாற்ற வேண்டி கணவனை சுட்டுக்கொன்று விடுகிறார்.



இந்த ஒன் லைனை படிப்பவர்களுக்கு சிவாஜிகணேசன் நடித்த அந்த நாள் படமே நினைவுக்கு வரலாம். அந்த படமே ரோஷமான் என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்வார்கள்.



ஆரியபட்டா நாவல் திருமகள் நிலையம் 2000ல் நூலாக வெளியிட்டு 2013ல் நாலாம் பதிப்பு வெளிவந்துள்ளது. 150 பக்கம். சுமார் 130 பக்கங்களுக்கு பிறகுதான் கொலை செய்தவர் விஞ்ஞானியின் மனைவிதான் என்ற உண்மை வாசகர்களுக்கு புரியவந்தது. இன்னும் சிலருக்கு, கொலை நடந்த நேரத்தில் அவரது மனைவி வெளியூரில் இருப்பதாக சொல்லப்பட்டதுமே அவர்தான் கொலையாளி என்று யூகித்திருப்பார்கள். நான் கொஞ்சம் லேட்.



(சர்க்கரை)ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதான் சர்க்கரை என்று சொல்வார்கள். உலகம் முழுவதும் உள்ள படைப்புகள் இணைய உதவியினால் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விடுவதால் காப்பி, தழுவல் எல்லாம் முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு விடுகின்றன.



சினிமா ரசிகர்கள் எல்லாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். நான் பார்த்த சில படங்களை வைத்து என்னுடைய பார்வையை சொல்கிறேன்.



80கள் முதல் வெளிவந்த ரஜினிகாந்த் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்... பணக்கார நண்பனால் அவமானப்படுத்தப்படுவார். அல்லது அங்கே வேலைக்காரனாக இருப்பார். கடைசியில் பார்த்தால் அந்த சொத்து முழுவதற்கும் அவர்தான் சொந்தக்காரனாக இருப்பார்.



விஜயகாந்த் படங்களை எடுத்துக்கொண்டால் நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் அவரது கதாபாத்திரங்களின் முக்கிய வேலையாக இருக்கும்.



இயக்குனர்களை எடுத்துக்கொண்டாலும் இப்படி நிறைய சொல்லலாம். விக்ரமனை எடுத்துக்கொண்டால் ரொம்ப நல்லவங்க, குடும்பம், நட்புக்காக நம்ப முடியாத அளவுக்கு தியாகம் செய்யுவாங்க.



ஆர்.கே.செல்வமணியை எடுத்துக்கிட்டா அவ்வப்போது நாட்டை உலுக்கிய செய்திகள்தான் அவர் படங்களுக்கு ஒன் லைன் ஆக இருக்கும். (புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், குற்றப்பத்திரிக்கை இன்னும் பல.)



பொதுவா ஹீரோ சாதாரண ஆளா இருந்து மன பலம், உடல் பலத்தால் மட்டுமே சர்வ சக்தி படைச்ச வில்லனை எதிர்க்குற மாதிரி படம் எடுத்துகிட்டிருந்தாங்க. ரஜினியின் பல படங்களில் கூட இதுதான் கதையா இருக்கும். ஆனா விஷாலை எடுத்துக்குங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் மேல் அவருக்கு என்ன பிரியமோ தெரியல. செல்லமே படத்துல இன்கம்டாக்ஸ் ஆபீசரா (அதாவது கதா நாயகனுக்கு வலுவான பின்புலம் இருப்பதாக) வருவார். சண்டக்கோழி உள்பட பல படங்களில் வில்லன் இவரை விட பலம் குறைஞ்சவனாவே இருப்பாங்க.



சுந்தர்.சி படத்தை எடுத்துக்கிட்டா எல்லா படங்களிலும் உருட்டுக்கட்டையால் ஒருத்தர் மண்டையில இன்னொருத்தர் 'டொம் டொம்' என்று அடிக்கும் காட்சிகள் கன்ஃபர்ம்.



இப்படி எந்த படைப்பாளியை எடுத்துகிட்டாலும் ஏதோ ஒரு அடிப்படை விஷயம் அவருடைய எல்லா படைப்புகளிலும் தொடருவதை காணலாம்.



பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அப்படின்னு இயக்குனர் பேர் வரும்போது, புத்தகத்துல எழுதுனா அது கதை. படமா எடுத்தா திரைக்கதைன்னு நான் சின்ன புள்ளையா இருக்குறப்ப நினைச்சுக்குவேன்.



ஒரே கதையை எப்படி சொல்றோம்னுங்குற திறமையினால பல விதமா சுவாரஸ்யமா சொல்ல முடியும். அதுதான் திரைக்கதை அமைக்கும் விதம்.



இசையைப்பொறுத்தவரை ச ரி க ம ப த நி அப்படின்னு ஏழு ஸ்வரம்தான். அதை எப்படி பயன்படுத்துறோம்னுங்குறதை பொறுத்துதான் இசை ரசிகனை கவரும்னு சொல்லுவாங்க.



கதைகளும் அப்படித்தான். கதைகளின் மொத்த வகையே சில பிரிவுகள்தான். திரைக்கதை அமைக்கும் சாமர்த்தியத்தில்தான் எல்லாம் இருக்கிறது என்று உலகம் முழுவதும் நம்புகிறார்கள்.



இப்போது ரசிகர்கள் என்பவர்கள் இயக்குனர், ஹீரோ, கதாசிரியர்களை விட அதிகமா படிக்கிறாங்க, உலகப்படம் பார்க்குறாங்கன்னு உண்மை புரிந்தவர்கள் படம் பார்க்கும்போது ரசிகனுக்கு போரடிக்குற காட்சிகளை வெச்சு, இந்த சீன் 1936லயே வந்துடுச்சுன்னு ஸ்டேட்டஸ் போட வைக்க மாட்டாங்க. படம் எடுப்பவர்கள் அதிகமாகவே மாத்தி யோசிக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.



அது சரி... மெர்சல் படத்தின் கதை விஜயேந்திர பிரசாத் (இயக்குனர் ராஜமௌலியின் அப்பா) என்று சொன்னார்களே... ஆனா பழைய படங்களை நினைவுபடுத்துகிறதே... நீ என்ன சொல்ல வர்ற? இந்த கதை காப்பியா, இல்லையா என்று கேட்பது புரிகிறது.



படம் பார்க்குறவங்களுக்கு நான் சொல்றது சின்ன விஷயம்தான்.



பம்மல் கே.சம்மந்தம் படத்துல கமல் அடிக்கடி சொல்ற டயலாக்: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.



இந்த வசனத்தை ரசிகர்களை நோக்கி சொல்லவேண்டும் என்றால் படம் எடுப்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.



இயக்குனர் விக்ரமன் "நான் பேச நினைப்பதெல்லாம்" அப்படின்னு ஒரு புத்தகத்துல, ரசிகன் ஒருபடத்தை முழுசா பார்த்துட்டு வந்து, ஆயிரம் குறை சொல்லலாம். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சியிலேயே நெளியக்கூடாதுன்னு சொல்லியிருப்பார். இதை மனதில் கொண்டால் நல்லது.

சனி, 2 நவம்பர், 2013

தீபாவளியும் படம் பார்த்த அனுபவங்களும்

சின்ன வயதில் இருந்தே கதை எழுதும் ஆசை ஒரு ஓரத்தில் இருந்து வந்தது. ஆனால் அதை எப்படி எழுதுவது என்றே தெரியாமல்தான் பல காலம் இருந்தேன். கல்லூரி ஆண்டுமலர் முதன் முதலில் என்னுடைய கதையை பிரசுரம் செய்து முயற்சியை தூண்டி விட்டது. கல்லூரி ஆண்டுமலரில்  வேறு யாரும் கதையே எழுதாததாலும், நான் எழுதிய கதையில் (?!) கொஞ்சமாக மாணவர் சமுதாயத்துக்கு செய்தி இருந்ததாலும் பிரசுரம் செய்து விட்டார்கள். ஆனால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்பியபோதெல்லாம் பல்புதான்.

ரா.கி.ர எழுதிய எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தை படித்த
பின்புதான் கதையை எப்படி வடிவமைப்பது என்ற வித்தை கொஞ்சூண்டு அளவில் லேசாக எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அதன்பிறகு நான் எழுதிய பல கதைகள் பரிசு வாங்கித்தந்திருந்தாலும், 2003 ஆம் ஆண்டு கொஞ்சம் ஸ்பெசல்தான்.

2003 ஆம் ஆண்டு திருச்சி மாலைமுரசு பொங்கல் மலரில் முதல் சிறுகதை பிரசுரமானது. (கல்லூரி ஆண்டுமலர்கள் தவிர்த்து)

தொடர்ந்து மூன்று நான்கு கதைகள் வந்தாலும், 2003 தினமலர்-வாரமலர் (திருச்சி, வேலூர்) டிவிஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் முகங்கள் என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றது. போட்டி முடிவுகள் தீபாவளிக்கு முன்பே வெளிவந்து விட்டதால் ஒரு சின்ன சந்தோசம். அதற்கடுத்த வருடங்களில் எல்லாம் ஆறுதல் பரிசு கதைகள் எழுதியவர்களின் புகைப்படங்களையும் குறிப்பையும் பிரசுரித்தார்கள். ஆனால் என்னிடம் போட்டோ, குறிப்பு வாங்கினாலும் கதை மட்டும்தான் பிரசுரமானது.

அதிலும் ஆறுதல் பரிசுக்கதை பட்டியலில் 5வதாக என்னுடைய கதை வெளிவரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து, அடுத்து ஒவ்வொரு வாரமும் காலை 5 மணியில் இருந்து எதிர்பார்த்து ஏமாறுவது வாடிக்கையாகிப்போனது. கடைசியாக 10வது கதையாகத்தான் என்னுடையது பிரசுரமானது. ஆனால் சிறிய கதையாக இருந்தாலும் வண்ண ஓவியத்துடன் 4 பக்க கதையாக பிரசுரம் ஆனதுதான் ஒரே ஆறுதல்.

2003ல் மாலைமுரசு தீபாவளி மலரில் நான் அனுப்பிய கவிதை மூன்றாம்பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளி குங்குமச்சிமிழ் என்று அறிவித்தார்கள். நாலு மாதம் எந்த தகவலும் அவர்கள் பத்திரிகையில் இருந்து வராததால் நானும் மறந்துவிட்டேன். திடீரென்று ஒருநாள் கடிதம் அனுப்பியிருந்தார்கள். எடுத்துப்பார்த்தால் அன்று மாலை 4 மணிக்கு திருச்சி பேர்ட்ஸ் ரோட்டில் உள்ள மாலை முரசு அலுவலகத்திற்கு பரிசு வாங்கிக்கொள்ள வர சொல்லி அந்த கடிதம் இருந்தது.

அப்போது ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தேன். திருவாரூர் கிளையில் நான் ஒரு ஆள்தான். அதனால் காரைக்கால் தலைமை அலுவலகத்துக்கு வேறு எதோ காரணம் சொல்லிவிட்டு மதியம் 12 மணிக்கு திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பஸ் ஏறிவிட்டேன். ஏற்கனவே 1999 தேர்தல் சமயத்தில் ஒரு நாள் இரவில் ஏதோ விளம்பரம் எடுத்துக்கொண்டு மாலைமுரசு, மாலை மலர் ஆகிய அலுவலகங்களுக்கு சென்ற ஞாபகம் இருந்தது. அதனால் முகவரி கண்டு பிடிக்க அலையாமல் சென்றுவிட்டேன். கதை,கவிதை ஆகியவற்றில் தலா மூன்று பேர் வீதம் ஆறு பேருக்கும் பரிசு வழங்கியதை போட்டோவுடன் மாலைமுரசு நாளிதழில் அடுத்த நாளே பிரசுரமானது.

அதைப்பார்த்து திருவாரூர் கடைத்தெருவில் இருந்த பலர் என்னிடம் விசாரித்தார்கள். இவ்வளவு கவனமாகவா பேப்பர் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அந்த போட்டோக்கள் வெளியான ஃபுட் நோட்டில்தான் திருவாரூர் சரவணன் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நானும் அதன் பிறகு வேறு சில கதைகளுக்கு புனைப்பெயர் வைத்து
அனுப்பினாலும் அது எப்படியோ திருவாரூர் சரவணன் என்றே தொடர்ந்து நாலைந்து முறை பிரசுரமானது. அப்படியே இருக்கட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.

இப்போதெல்லாம் இருபத்து நான்கு மணி நேரமும் தொல்லைக்காட்சிகளில் ஏதாவது ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. எதுவுமே குறைவாக கிடைக்கும்போதுதான் போற்றப்படும். மிதமிஞ்சினால் அலட்சியம்தான் மிஞ்சும் என்பதற்கு சினிமாவும் விதிவிலக்கல்ல. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இப்போதும் திரையரங்குகளில் அதிகமாக கூடுபவர்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்தான்.

சினிமாக்கள் தொலைக்காட்சிகளில் சிரிப்பாய் சிரிக்கத்தொடங்கும் முன்பு எல்லாம் தீபாவளி விடுமுறையில் எங்கள் ஊரில் உள்ள 5 திரையரங்குகளிலும் வெளியான படங்களைப் பார்த்துவிட்டு வந்து ஒரு மாணவன் எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புவான். அவன் பெயர் செந்தில் முருகன். 2 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை நாங்கள் ஒன்றாக படித்தோம். (1988-92) நன்றாக படம் வரையும் அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. அதே போல் இன்னும் சிலர் குறைந்தது 5ல் 3 படங்களையாவது பார்த்துவிட்டுதான் வருவார்கள்.  என்னால் ஒரு படம் கூட பார்க்க முடியவில்லையே என்று மிகவும் கவலைப்பட்டு மனம் புழுங்கியதுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தால் நம் வாழ்க்கையின் காமெடி சீக்சென்சில் இதுவும் ஒன்றாக உணர முடிகிறது.

அதன் பிறகு 1993ல் ஏற்கனவே திருவாரூரில் ரிலீசாகாததால் சோழா தியேட்டரில் ஜென்டில்மேன் படம் தீபாவளிக்கு திரையிடப்பட்டிருந்தது. அந்த தியேட்டரில் பணியாற்றிய ஒருவரின் அண்ணன் மகள் எங்கள் வீட்டின் ஒரு போர்சனில் குடியிருந்தார். அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக என்னையும் அந்த பெண்ணின் மகனையும் அனுப்பி வைத்தார்கள். அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் குறைந்தது 5 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிடப்படுவது உறுதி.

நாங்கள் மதியம் ஒண்ணரை மணிக்கு தியேட்டருக்கு போனபோது இரண்டாவது காட்சியின் இடைவேளை முடிந்து படம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் மூன்றாம் வகுப்பு டிக்கட்டை (2 ரூபாய்) எங்கள் இரண்டு பேருக்கும் கிழித்து கொடுத்து 3 மணி காட்சியை பார்க்க சொல்லிவிட்டார். எனக்கு பைசா செலவில்லாமல் ஜென்டில்மேன் படக்காட்சி.
1994ல் அதே சோழா தியேட்டர். நம்மவர் படம் ரிலீஸ். திரைக்கு பின்னால் உள்ள ஸ்பீக்கர்களை அப்போதுதான் கூடுதல் திறனுடன் மாற்றினார்கள். நம்மவர் படத்தின் ஆரம்ப காட்சியில் கல்லூரியில் கலவரம் நடக்கும். கமல்ஹாசன் வருவதை காட்டியவுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து உதைத்து அமைதியை கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் ஏமாத்திட்டாரே... இதெல்லாம் படமா என்று திட்டினேன். ஆக்சன் பிளாக்குகளை எதிர்பார்க்கும் வயது அது. (8ஆம் வகுப்பு படித்த சமயம்) அதுவரை நான் பார்த்திருந்த படங்கள் பெரும்பாலும் அந்த வகைதானே.

1995ல் சோழாவில் முத்து படம் ரிலீஸ். நான்கு நாட்கள் கழித்துதான் போனேன். காலையில் எட்டே முக்காலுக்கு சென்றுவிட்டேன். 50 பேர் கூட இருக்க மாட்டார்கள். ஆனால் 9 மணிக்கு சரியாக படத்தை திரையிட்டுவிட்டார்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக கதவைத்திறந்து கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். எதுவரைக்கும் என்றால், ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்து படம் போட்டு ரொம்ப நேரமாச்சா தம்பி என்று கேட்டார். நான் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன்பே இடைவேளை என்று லைட்டைப்போட்டார்கள்.

1996 பொங்கலுக்கு நடேஷ் தியேட்டரில் பரம்பரை, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு, சிவசக்தி, பாஞ்சாலங்குறிச்சி என்று நன்றாக ஓடிய படங்கள் (சிவசக்தி திருவாரூரில் நன்றாகத்தான் ஓடியது.) அதிகம். அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் மாலை வேளையிலும், சனி, ஞாயிறிலும் தியேட்டரில்தான் இருப்பேன்.

1996 தீபாவளி அன்று பாஞ்சாலங்குறிச்சி படப்பெட்டி வரவில்லை. ஏன் இப்படி லேட் செய்யுறாங்க என்று பேசிக்கொண்டிருந்தபோது, பிரசாத் பிலிம் லேபில் ஒரு பிரிண்ட் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். ஆனால்
ஜெமினி கலர் லேபில் 1 லட்சம் ரூபாய்தான். அதனால் எல்லாரும் ஜெமினியில் கொடுத்துவிடுகிறார்கள். அதுவும் நாலு நாளைக்கு முன்பு சென்சார் சர்டிபிகேட் வாங்கினால் அதன் பிறகு வசனம், காட்சிகளை சென்சார் சொன்ன மாதிரி திருத்தி பிரிண்ட் போடுறது சாமானியமா என்பார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. 

தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர் உட்பட டைட்டில்கள் மஞ்சள் கலரில் ஓட ஆரம்பித்தால் பெரும்பாலும் அது ஜெமினி கலர் லேப்பில் தயாரான பிரிண்ட் ஆக இருக்கும். எழுத்துக்கள் வெள்ளைக்கலரில் லேசான ட்ராப் ஷேடோவில் இருந்தால் அது பிரசாத் லேப் என்று கூறும் அளவுக்கு எல்லாவற்றையும் கவனிப்போம். பெரும்பாலும் அந்த கணிப்பு சரியாக இருக்கும்.

இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு 50 முதல் 1000 பிரிண்ட் என்றாலும் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் திரையிடப்படுவதால் சிரமம் இல்லை. அப்போதெல்லாம் திருச்சி ஏரியாவில் 10 முதல் 12 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனாலும் படப்பெட்டி தாமதத்தை தவிர்க்க முடியாது. அதிலும் பண்டிகை தினங்களில் 7 முதல் 10 படங்கள் ரிலீசான காலம் அது.

பாஞ்சாலங்குறிச்சி படத்திற்கு தேவா இசை. வந்தியளா... ஆன்னா... ஆவன்னா...ஆகிய இரண்டு குத்துப்பாட்டு, ஜென்டில்மேன் படத்தில் உசிலம்பட்டி பெண்குட்டி பாடல் மெட்டை நினைவு படுத்தும் ஹரிஹரன் பாடிய ஒரு பாட்டு ( உன் உதட்டோரம் சிவப்பை மருதாணி கடனா கேட்கும்...) என கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட். படப்பெட்டி வராததால் ஏற்கனவே ஓடிய இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்ற டப்பிங் படத்தை திரையிட வேண்டிய கட்டாயம். சரி... பாடல்களையாவது போட்டு ஹவுஸ்புல்லான தியேட்டரில் ரசிகர்களை சந்தோசப்படுத்தலாம் என்று பார்த்தால் கேசட் பிளேயரில் பெல்ட் அறுந்துவிட்டது. எப்போதும் புரொஜக்டர் ரூமில் இதெல்லாம் ஸ்பேர் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்போது இல்லை. கடைகளும் தீபாவளிக்கு விடுமுறை என்பதால் பாடல்களும் போட முடியவில்லை. ஏதோ தியானக்கூடம் மாதிரி திரையரங்கில் அமைதி.

எந்த இசையும் இல்லாமல் வெல்வெட் ஸ்கிரீனை மேலே தூக்கும் ஸ்விட்சை அழுத்துவோம். கலர் பல்புகள் எரிய ஸ்கிரீன் மேலெழும்புவதை பார்த்து ரசிகர்கள் ஓ வென்று அலறுவார்கள். இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்ற அந்த டப்பிங் படத்தில் படம் ஆரம்பிக்கும்போது சென்சார் சர்டிபிகேட் காப்பி கிடையாது, (ஜெராக்ஸ் காப்பியை பெட்டியில் வைத்து அனுப்பியிருந்தார்கள் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) நன்றி கார்டுகள் எதுவும் கிடையாது. வெல்வெட் ஸ்கிரீன் முக்கால்வாசி மேலெழும்பியதுடன் புரொஜக்டரை ஆன் செய்ததுடன், சைடில் இருக்கும் ஸ்பீக்கர் ஸ்விட்சுகளையும் ஆன்செய்துவிடுவோம். 1980களில் வரும் படங்களில் கலர் கலரான பின்புலத்தில் டைட்டில் வருமே அப்படி தொடங்கும் அந்த படம்.

இரண்டு பாடல்கள்தான். அதிலும் இடைவேளைக்கு பின்பு வரும் ஒரு பாடலில் நடுவில் வரும் டிரம்ஸ் இசைக்கு லேசாக சவுண்ட் அதிகமாக வைத்ததுடன் சரி. இவ்வாறாக 1996 தீபாவளி கடந்து எங்களை கடந்து சென்றது.

1997ல் ஜுலை மாதம் சூரியவம்சம் படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என்று அனைவருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த படம். திருவாரூர் சோழா தியேட்டரில் சுமார் 90 நாட்கள் ஓடி முடிந்திருந்தது. அங்கே சத்யராஜின் பெரியமனுசன்,
தைலம்மையில் சரத்குமார் நக்மா நடித்த ஜானகிராமன், நடேஷில் பொற்காலம். பாரதிகண்ணம்மா மூலம் சேரனின் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் தீபாவளிக்கு ரிலீசான அந்த படம் பொங்கல் வரை ஓடியது. அப்போது சிலமாதங்கள் பத்தாம் வகுப்பு முடிந்த உடன் படிப்பை தொடராமல் ஐடிஐ க்கு அப்ளிகேசன் போட்டுவிட்டு கிடைக்கவில்லை என்று நான் செங்கம் தியேட்டரில் வேலை பார்த்தேன். அங்கே ஜூராசிக் பார்க் படத்தின் இரண்டாம் பாகம் தி லாஸ்ட் வேர்ல்டு திரையிடப்பட்டது.

அடுத்த ஆண்டு 1998ல் செங்கத்தில் டைட்டானிக், தைலம்மையில் புதுமைப்பித்தன், நடேஷில் சேரனின் தேசியகீதம்  இவற்றில் தைலம்மையில் புதுமைப்பித்தன் படப்பெட்டி வராததால் டைட்டானிக் இரண்டு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. 1998ல் 22 நாட்கள் செங்கம் தியேட்டரில் ஓடிய டைட்டானிக் தினசரி சுமார் 10 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்தது என்று நினைக்கிறேன். நிச்சயமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த தியேட்டருக்கு அது பெரிய வசூல்தான். அதற்கு முக்கிய காரணம் அந்த காலகட்டத்தில் திருவாரூரைப் பொறுத்தவரை சவுண்ட், லைட் இரண்டுமே செங்கத்தில்தான் நன்றாக இருக்கும் என்பார்கள்.

1999 தமிழ் வருடப்பிறப்பு சமயத்தில் செங்கத்தில் ஆனந்தப்பூங்காற்றே திரையிடப்பட்டது. அப்போது ஆப்ரேட்டர் ஒருவர் லீவ் போட்டு சென்றதால் ஆக்டிங் டியூட்டி பார்த்த பிறகு மீண்டும் பிளஸ் டூ படிப்பை தொடர வேண்டும் என்று பாதையை மாற்றினேன். திரையரங்குக்குள்ளான என் அனுபவம் அதன் பிறகு இல்லை.

1999 தீபாவளி அன்று தைலம்மையில் முதல்வன் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. 2000ல் தெனாலி. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் என்னைப்பொறுத்தவரை ஏமாற்றமாகத்தான் இருந்தது. 2001ல் ஆளவந்தான், 2002 ல் ரமணா. 2003ல் தீபாவளிக்கு மறுநாள் பிதாமகன். அதன்பிறகு தீபாவளி அன்று படம் பார்ப்பதை விட்டுவிட்டேன். பிறகு வந்த தீபாவளி அன்று எல்லாம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்கள், மதியத்தில் தூக்கம் என்றுதான் கழிந்தது.

2010ல் தீபாவளியின் போது தினமலரில் பணியாற்றினேன். முதல்நாள் மிக அதிக அளவில் பக்கங்கள் டிசைன் செய்து கொடுத்துவிட்டு பரபரப்பாக முதல் நாள் இரவு 9 கிளம்பிய நினைவு இருக்கிறது. வெளியில் பணியாற்றிய போது தீபாவளிக்கு போனஸ் என்றெல்லாம் எதுவும் நான் பெரிதாக வாங்கியதில்லை.

2003ல் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது வேலைக்கு சேர்ந்து 1 மாதம் கூட ஆகாததால் ஒன்றும் இல்லை.

2004ல் நூற்றாண்டு கண்ட கம்பெனி ஒன்றில் தீபாவளி வரை 6 மாத காலம் பணியாற்றியதற்கு சுமாராக 1000 ரூபாய் அளவில் போனஸ் கிடைத்தது. அது ஒரு மேனுபேக்சரிங் கம்பெனி. அதனால் வழக்கமாக தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாகவே உற்பத்தி செய்த பொருட்களை பார்சலில் அனுப்பிவிடுவார்கள். அந்த ஆண்டு வியாழக்கிழமை தீபாவளி என்பதால் செவ்வாய்கிழமை மதியமே போனஸ் கொடுத்து ஞாயிறு வரை லீவு விட்டுவிட்டார்கள். சம்பளத்துடன் கூடிய அந்த லீவுதான் எக்ஸ்ட்ரா போனஸ்.

2010ல் கூரியர் கம்பெனியில் ஒரு சிறிய தொகை போனஸ் கிடைத்தது. அதே சமயம் தினமலரில் வேலைக்கு சேர்ந்து 40  நாட்கள் மட்டுமே ஆனதால் அதுவரை சம்பளம், போனஸ் எதுவும் இல்லாமல் 500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு கிப்ட் பாக்ஸ் ஒன்றும், 1 கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரமும் கிடைத்தது. அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு வங்கி மேலாளர் எங்கள் அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு கிலோ ஸ்வீட் கொடுத்து வாழ்த்து சொன்னார்.

2011ல் நாம சொந்தமாக அலுவலகம் திறந்துவிட்டதால் போனஸ் கொடுக்கவோ, வாங்கவோ வேலையில்லை. அப்போது நம்ம அலுவலகம் இருந்த கட்டிடத்திற்கு வாட்ச்மேன் யாரும் கிடையாது. அதனால் போனஸ் கொடுக்க யாருமில்லை. இப்போது 2012,13 இரண்டு ஆண்டும் நம் அலுவலகம் இயங்கும் வளாகத்திற்கு வாட்ச்மேன், கூட்டி சுத்தம் செய்யும் ஒரு வயதான அம்மா இருப்பதால் என்னால் முடிந்த மிகச்சிறிய தொகை ஒன்றை தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னதாகவே கொடுத்து விடுவதை வழக்கமாக்கிவிட்டேன். நம்ம அலுவலகத்தில் என்னைத்தவிர யாரும் இல்லாததால் பணியாளருக்கு போனஸ் கொடுக்கும் வேலை இல்லை. பார்ப்போம்... அடுத்த வருடம் நாமும் போனஸ் கொடுக்கும் அளவுக்கு
தொழிலை வளர்க்க முடிகிறதா என்று...

எக்ஸ்ட்ரா போனஸ்
கொஞ்சம் வேலை இருந்ததால் காலை 8.30 மணிக்கே நம்ம அலுவலகத்துக்கு போனேன். தியேட்டர் ரொம்ப அமைதியா இருந்துச்சு. வேலை பார்த்துகிட்டு இருக்கும்போது திடீர்னு பேண்டு வாத்தியம், பட்டாசுன்னு அமர்க்களம்... வெளியில் எட்டிப்பார்த்தால் கார்த்தி ரசிகர்கள் கொண்டாட்டம்.

அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாத வரை இது மாதிரி கொண்டாட்டங்கள் எல்லாம் ஓ.கே... இளைமையில இது மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் இல்லைன்னா அப்புறம் என்ன அது வாழ்க்கை?!.............

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஆரம்பம் - ஆடியோ விழா நடத்துவது அவசியமா?






ஒண்ணுமே இல்லாத மொக்க படங்களுக்கெல்லாம் ஆடியோ ரிலீஸ், டீசர் ரிலீஸ் அப்படி இப்படின்னு பல லட்சம் (சமயங்களில் கோடிகள்) செலவில் விழா நடத்துவார்கள். அது மட்டுமில்லாம மூன்றாவது காட்சியிலேயே முப்பது பேர் கூட பார்க்காத படத்துக்கு திரையரங்குகளில் திருவிழா மாதிரி கூட்டம் அப்படி இப்படின்னு சில தொல்லைக்காட்சிகளில் ஆத்து ஆத்துன்னு சிலர் ஆத்திகிட்டு இருப்பாங்க. (நான் எல்லாரையும் சொல்லலை.)



ஆனா ஆரம்பம் படத்துக்கு போட்டோ ஷூட் நடத்த கூட எங்களுக்கு நேரமில்லை. 120 நாள் படப்பிடிப்பு அப்படி இப்படின்னு விஷ்ணுவர்தன் பேட்டியில் சொல்லியிருப்பதை பார்க்கவும் இது ஒரு வகை விளம்பர உத்தியோ என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆரம்பம் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் கிடைத்ததுடன் படம் ஒரு முறை பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது என்பதுதான் படம் பார்த்தவர்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது.



படம் பார்த்து முடித்து விட்டு வெளியே வந்ததும் ஆயிரம் குறை சொல்லலாம். ஆனால் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முதல் சீன் பற்றி அடுத்த சீனில் ரசிகன் விமர்சித்துக்கொண்டிருந்தால் படம் காலி என்று இயக்குனர் விக்ரமன் எழுதிய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற புத்தகத்தில்  கூறியிருந்தார். அது உண்மை என்பதை பல படங்கள் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.



சென்டிமெண்ட் படங்களில் காட்சி அமைப்புகள், பாடல்கள், நகைச்சுவை என்று எல்லா அம்சங்களும் நன்றாக இருந்தால் மட்டுமே ஹிட் ஆகும். ஆனால் ஆக்சன் படங்களைப் பொறுத்தவரை இவை எல்லாவற்றையும் விட பரபரவென வேகமாக ஓடும் திரைக்கதைதான் முக்கியம். பாட்ஷா, கில்லி, சிவகாசி, சிங்கம் 1, 2 என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அதற்காக படம் ஆரம்பித்ததில் இருந்து எந்த இலக்கும் இல்லாமல் சுட்டுக்கொண்டோ, அடித்துக்கொண்டே இருந்தாலும் படம் கோவிந்தா... 



இன்னொரு முக்கியமான விசயம், ரசிகன் என்ற வரம்பையும் மீறி, சாதாரண மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சம்பவங்கள் ஓரளவாவது இருப்பது நல்லது என்ற தகவலையும் ஆரம்பம் சொல்லியிருக்கிறது. ரசிகன் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு படத்தை பார்க்கும்போது பிடித்தால் போதும் படம் வெற்றிதான்.



புல்லட் ப்ரூப் ஜாக்கெட் விஷயத்தை சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கழித்து அனைவரும் மறந்து விட்ட நிலையில் கதைகருவாக கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். சூழ் நிலைபுரிஞ்சவங்க பிழைச்சுகிட்டாங்க.








ஆனால் விழா அது இது என்று நடத்தி ரசிகனை ஓவராக உசுப்பேற்றி தியேட்டருக்குள் அனுப்பினால் அவன் மனதில் உள்ள பிம்பத்தை விட்டு விலகிய கதையுடன் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் ஊத்திக்கொள்வதும் நடக்கும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை திரைக்கதையாக்க அனைவரும் பயப்பட இதுதான் காரணம். 60 ஆண்டுகளாக அதை மூன்று நான்கு தலைமுறையினர் புத்தகத்தில் படித்து மனதளவில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். அனைவரையும் திருப்தி படுத்தும் விதத்தில் திரைக்கதை அமைக்க முடியுமா என்ற கேள்வியில்தான் அதை எல்லோரும் முயற்சி என்ற அளவிலேயே வைத்திருக்கிறார்கள்.



புது வீட்டை கட்டுவதை விட ஏற்கனவே இருக்கும் வீட்டை மாற்றி நல்லவிதமாக அமைப்பது கடினம். இதே கான்சப்ட்தான் பட விசயத்திலும். ரசிகர்களை கண்டபடி எதிர்பார்க்க வைத்து சூடுபடுவதை விட இப்படி எதையும் பேசாமல் படத்தை விட்டால் படம் பேசும். ஏற்கனவே சில படங்களில் திரையுலகம் பட்ட சூட்டில் ஆரம்பம் படக்குழு இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே நல்லதொரு ஆரம்பமாக இருந்தால் நல்லது.



ஓவர் பேச்சு நம்ம உடம்புக்கு ஆகாது தம்பி என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் சினிமாவுக்கு மட்டுமல்ல... எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.



அதிலும் சமீப காலமாக சில திரைப்படங்கள் படும் அவதியைப் பார்க்கும்போது ரொம்பவே அடக்கி வாசிப்பது நல்லது என்று தோன்றுகிறது. ஆடியோ, டி.வி. புரோமோ என்று ஓவர் பில்ட்அப் கொடுப்பதற்கு பதில் பட ரிலீசுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே மக்களுக்கு படம் ரிலீசாகும் செய்தியை கொண்டு போய் சேர்க்கும் விதமாக மட்டும் விளம்பரங்கள் இருந்தால் அது தயாரிப்பாளரின் பர்சுக்கும் நல்லது. ரசிகனும் எதிர்பார்த்து ஏமாற மாட்டான்.



அஜீத் படங்கள் - என் அனுபவம்


ஆரம்பம் - ஆடியோ விழா நடத்துவது அவசியமா?


ஒண்ணுமே இல்லாத மொக்க படங்களுக்கெல்லாம் ஆடியோ ரிலீஸ், டீசர் ரிலீஸ் அப்படி இப்படின்னு பல லட்சம் (சமயங்களில் கோடிகள்) செலவில் விழா நடத்துவார்கள். அது மட்டுமில்லாம மூன்றாவது காட்சியிலேயே முப்பது பேர் கூட பார்க்காத படத்துக்கு திரையரங்குகளில் திருவிழா மாதிரி கூட்டம் அப்படி இப்படின்னு சில தொல்லைக்காட்சிகளில் ஆத்து ஆத்துன்னு சிலர் ஆத்திகிட்டு இருப்பாங்க. (நான் எல்லாரையும் சொல்லலை.)

ஆனா ஆரம்பம் படத்துக்கு போட்டோ ஷூட் நடத்த கூட எங்களுக்கு நேரமில்லை. 120 நாள் படப்பிடிப்பு அப்படி இப்படின்னு விஷ்ணுவர்தன் பேட்டியில் சொல்லியிருப்பதை பார்க்கவும் இது ஒரு வகை விளம்பர உத்தியோ என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆரம்பம் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் கிடைத்ததுடன் படம் ஒரு முறை பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது என்பதுதான் படம் பார்த்தவர்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது.

படம் பார்த்து முடித்து விட்டு வெளியே வந்ததும் ஆயிரம் குறை சொல்லலாம். ஆனால் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முதல் சீன் பற்றி அடுத்த சீனில் ரசிகன் விமர்சித்துக்கொண்டிருந்தால் படம் காலி என்று இயக்குனர் விக்ரமன் எழுதிய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற புத்தகத்தில்  கூறியிருந்தார். அது உண்மை என்பதை பல படங்கள் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

சென்டிமெண்ட் படங்களில் காட்சி அமைப்புகள், பாடல்கள், நகைச்சுவை என்று எல்லா அம்சங்களும் நன்றாக இருந்தால் மட்டுமே ஹிட் ஆகும். ஆனால் ஆக்சன் படங்களைப் பொறுத்தவரை இவை எல்லாவற்றையும் விட பரபரவென வேகமாக ஓடும் திரைக்கதைதான் முக்கியம். பாட்ஷா, கில்லி, சிவகாசி, சிங்கம் 1, 2 என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அதற்காக படம் ஆரம்பித்ததில் இருந்து எந்த இலக்கும் இல்லாமல் சுட்டுக்கொண்டோ, அடித்துக்கொண்டே இருந்தாலும் படம் கோவிந்தா... 

இன்னொரு முக்கியமான விசயம், ரசிகன் என்ற வரம்பையும் மீறி, சாதாரண மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சம்பவங்கள் ஓரளவாவது இருப்பது நல்லது என்ற தகவலையும் ஆரம்பம் சொல்லியிருக்கிறது. ரசிகன் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு படத்தை பார்க்கும்போது பிடித்தால் போதும் படம் வெற்றிதான்.

புல்லட் ப்ரூப் ஜாக்கெட் விஷயத்தை சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கழித்து அனைவரும் மறந்து விட்ட நிலையில் கதைகருவாக கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். சூழ் நிலைபுரிஞ்சவங்க பிழைச்சுகிட்டாங்க.


ஆனால் விழா அது இது என்று நடத்தி ரசிகனை ஓவராக உசுப்பேற்றி தியேட்டருக்குள் அனுப்பினால் அவன் மனதில் உள்ள பிம்பத்தை விட்டு விலகிய கதையுடன் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் ஊத்திக்கொள்வதும் நடக்கும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை திரைக்கதையாக்க அனைவரும் பயப்பட இதுதான் காரணம். 60 ஆண்டுகளாக அதை மூன்று நான்கு தலைமுறையினர் புத்தகத்தில் படித்து மனதளவில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். அனைவரையும் திருப்தி படுத்தும் விதத்தில் திரைக்கதை அமைக்க முடியுமா என்ற கேள்வியில்தான் அதை எல்லோரும் முயற்சி என்ற அளவிலேயே வைத்திருக்கிறார்கள்.

புது வீட்டை கட்டுவதை விட ஏற்கனவே இருக்கும் வீட்டை மாற்றி நல்லவிதமாக அமைப்பது கடினம். இதே கான்சப்ட்தான் பட விசயத்திலும். ரசிகர்களை கண்டபடி எதிர்பார்க்க வைத்து சூடுபடுவதை விட இப்படி எதையும் பேசாமல் படத்தை விட்டால் படம் பேசும். ஏற்கனவே சில படங்களில் திரையுலகம் பட்ட சூட்டில் ஆரம்பம் படக்குழு இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே நல்லதொரு ஆரம்பமாக இருந்தால் நல்லது.

ஓவர் பேச்சு நம்ம உடம்புக்கு ஆகாது தம்பி என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் சினிமாவுக்கு மட்டுமல்ல... எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

அதிலும் சமீப காலமாக சில திரைப்படங்கள் படும் அவதியைப் பார்க்கும்போது ரொம்பவே அடக்கி வாசிப்பது நல்லது என்று தோன்றுகிறது. ஆடியோ, டி.வி. புரோமோ என்று ஓவர் பில்ட்அப் கொடுப்பதற்கு பதில் பட ரிலீசுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே மக்களுக்கு படம் ரிலீசாகும் செய்தியை கொண்டு போய் சேர்க்கும் விதமாக மட்டும் விளம்பரங்கள் இருந்தால் அது தயாரிப்பாளரின் பர்சுக்கும் நல்லது. ரசிகனும் எதிர்பார்த்து ஏமாற மாட்டான்.

அஜீத் படங்கள் - என் அனுபவம்

வியாழன், 31 அக்டோபர், 2013

ஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா? - புரொஜக்டர் - அனுபவம்




சூப்பர்ஸ்டாருக்கு அடுத்தபடியா அஜீத்துக்கும் பெரிய மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு ஆரம்பம் விமர்சனத்துல சிலர் எழுதியிருக்காங்க. அது உண்மைதான் போலிருக்கு. இதுக்கு முன்னால குட்டிப்புலி, சுட்டகதை, முத்துநகரம் டைட்டில்களை வெச்சு பதிவு போட்டதும் வழக்கத்தை விட 4 மடங்கு வாசகர்கள் வருகை இருக்கும். ஆனால் ஆரம்பம் டைட்டிலை வெச்சு இந்த பதிவு போட்டதுமே 3 மணி நேரத்துல 600 பேஜ் வியூ. நானே மிரண்டுட்டேன். நம்ம தளத்துக்கு அது ரொம்ப ஓவர்.

இன்று மாலை 5.14க்கு இந்த பதிவு போட்ட பிறகு இப்போ 8.15 மணி நிலவரப்படி இந்த கணக்கு.

நான் பெரும்பாலும் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. படம் பார்த்தாலும் விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் வளரலைன்னுங்குறது என் எண்ணம். பதிவுகளுக்கு லேபிள் கொடுக்குறப்ப கூட சினிமா, அனுபவம்னு மட்டும்தான் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய அளவுல இருக்குற பிரச்சனையை லேசா மாத்தி தொட்டா பிரச்சனை இல்லைன்னு நினைக்குறேன். 




1999ல முதல்வன் படம் ரிலீசான உடனே ரீல் அ(று)ந்து போற அளவுக்கு லோக்கல் சேனல்களில் ஓட்டப்பட்டாலும் திரையரங்குகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். ரகுவரனுடைய மேக்கப் தமிழகத்தில் உள்ள யாரையுமே நினைவூட்டும்படி அமைந்திருக்காது. அப்படி இருந்தும் அந்த படத்துக்கு அப்படி ஒரு சோதனை. சமீப காலமாக விஸ்வரூபம், தலைவா அப்படின்னு ஒரு சில படங்கள் ஒவ்வொரு ரூபத்துல பிரச்சனைகளை சந்திக்குது. அதைப்பார்த்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரித்ததில் ஊழல் என்று ஒரு கான்செப்டை பயன்படுத்தி திரைக்கதை அமைத்து ஒரு முறை ஜாலியாக படம் பார்க்க வைத்துவிட்டார் என்பதுதான் படம் பார்த்த பெரும்பாலானவர்களின் கருத்து.



தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாலயே ரிலீஸ் செஞ்சு கல்லா கட்ட இறங்கியிருக்குற படம் ஆரம்பம். புகை, மது பழக்கம் இருந்தால் அவர்களை தேசத்துரோகி போல் பார்த்தது அந்தக்காலம். இப்போ அந்த பழக்கம் இல்லாதவங்க கூட இப்படிப்பட்ட பழக்கம் இருக்குறவங்களை இதுதான் இப்போதைய உலகம்னு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. 


இணைய தளத்தில் எழுதுபவர்கள் காப்பி அடிச்சு படம் எடுத்தா இப்படியா செய்யுறதுன்னு திட்டுன காலம் போக, Swordfish படத்துல இருந்து அங்கங்க உருவினாலும் இண்ட்ரஸ்டிங்கா எடுத்திருக்காங்கன்னு ஆரம்பம் பட விமர்சனத்துல குறிப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. (இந்த வாசகத்தை முதல்ல குறிப்பிட்ட புண்ணியவான் யாருன்னு தெரியலை. அந்த விமர்சனத்தை காப்பி அடிச்சுதான் பெரும்பாலானோர் பின்தொடர்ந்து எழுதுறாங்கன்னு நினைக்குறேன்.)

இது படத்தின் விமர்சனமோ, கதைச்சுருக்கமோ அல்ல. அவற்றை படிக்க நினைப்பவர்கள் கூகிளாண்டவர்கிட்ட போனாலே போதும். வரிசை கட்டி விமர்சனங்கள் நிற்கும். இருந்தாலும் விமர்சனம்னு நம்பி இளையபாரதத்துக்கு வந்தவங்க ஏமாறாம இருக்க நம்ம ஊர்க்கார நண்பர் எழுதிய விமர்சனம் இங்கே.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் தியேட்டரில் படம் திரையிட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம் ஆப்ரேட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ சினிமா மீதான கிரேஸ் என்னைப் பொறுத்தவரை பத்துப் பனிரெண்டு வயதிற்குள்ளேயே காணாமல் போய்விட்டது.

திருச்சியில் உள்ள மகேஸ்வரி பிக்சர்ஸ் என்ற வினியோகஸ்தர் காதல்கோட்டை படத்தை திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் ரிலீஸ் செய்திருந்தார். திருச்சி ஏரியாவில் இப்போது ஆரம்பம் படம் 38 தியேட்டரில் ரிலீசாகியுள்ளது. ஆனால் தினகரன் விளம்பரத்தில் கூட்டி பார்த்தால் 40 வரும். திருத்துறைப்பூண்டியை இரண்டு முறை டைப் செய்து வைத்திருக்கிறார்கள். இதில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கு பிறகு அதிக தியேட்டரில் ரிலீசாகும் படம் என்ற பில்ட் அப் வேறு. ஆனால் காதல் கோட்டை திருச்சி ஏரியாவில் சுமாராக ஆறு அல்லது எட்டு பிரிண்ட் மட்டுமே வெளியானதாக நினைவு. ஆனால் படம் ஓஹோ என்று ஓட ஆரம்பித்ததும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே ஏகப்பட்ட மவுத் டாக். அந்த படம் திருவாரூரில் ரிலீசாகவில்லை.

ஒரு மாதம் கழித்து வி.சி.குகநாதன் இயக்கிய அஜீத், ரஞ்சித், கீர்த்தனா நடித்த மைனர் மாப்பிள்ளை படம் நான் பகுதி நேரமாக அவ்வப்போது பணியாற்றி வந்த தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது நான் 10ஆம் வகுப்பு படித்த நேரத்தில் காலை நேரத்தில் டியூசன் என்பதால் தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை பெரும்பாலும் அந்த தியேட்டரில்தான் பொழுது போகும். மைனர் மாப்பிள்ளை படத்தின் போஸ்டர் ஒட்டச் சென்ற பையனுடன் நானும் சும்மா பேச்சுத்துணைக்காக சென்றேன். 6, 4, 2 துண்டுகளாக உள்ள போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்ததுமே வழியில் பார்க்கும் மாணவிகள், இளம்பெண்கள் "ஏய்... காதல் கோட்டை படம் வரப்போகுதுடி'' என்று பேசிக்கொண்டு நின்று பார்த்தார்கள். போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த பையன், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா... இந்த தீப்பந்தமெல்லாம் கொளுத்திக்க கூடாதான்னு கவுண்டமணி கேட்குற ஸ்டைல்ல "காதல் கோட்டை மட்டும்தான் பார்ப்பீங்கிளா... மைனர் மாப்பிள்ளை... மேஜர் மாப்பிள்ளை எல்லாம் பார்க்க மாட்டீங்கிளா '' என்று கேட்கவும் அந்த பெண்கள் முகத்தில் வெட்கம்.

அகத்தியனின் முதல் படமான வான்மதியிலும் அஜீத்குமார்தான் ஹீரோ. அதில் தேவா பாடிய பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா பாடல் மிக பிரபலம். அப்போது நான் வேறொரு தியேட்டரில் ஒரு படம் விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாலும் மற்ற தியேட்டர்களில் வந்த படங்களை பார்ப்பதற்கு அவ்வளவாக சூழ்நிலை அமையாது. திருவாரூருக்கு அருகே உள்ள கிராமமான புலிவலத்தில் கருணாநிதி என்ற பெயரில் ஒரு திரையரங்கத்தில் 1998ல் மீண்டும் வான்மதி திரையிடப்பட்டபோது போய் பார்த்தேன். மிஸ் பண்ணாம போய் பார்க்குற அளவுக்கு அந்த படத்தில் எதுவுமே இல்லைதான். ஆனால் வடிவுக்கரசியின் திமிரான வசனங்களை எங்களுடன் படித்த சுந்தர் என்ற நண்பன் அதே மாடுலேசனில் பேசிக் காண்பிப்பான்.

உ.ம்
அரசியல்வாதி : என் பையன் உங்க வீட்டுல வலது கால் எடுத்து வைக்கணும்னு ஆசைப்படுறான்...

வடிவுக்கரசி : காலே இருக்காது பரவாயில்லையா? என்று ரொம்ப இயல்பாக கேட்பார். **********************************************************
2002ல் தீபாவளி அன்று சோழா தியேட்டரில் ரமணா பார்த்துவிட்டு மறுநாள்தான் தைலம்மை தியேட்டரில் வில்லன் படம் பார்த்தேன். அதுவும் சூப்பர்ஹிட் படம்தான்.
ஜெமினி படத்தினால் ரசிகர்களுக்கு பரிச்சயமான கிரண் நடித்த படம். குஷ்பு கேட்கும் அட்ரசில் நேசமணி பொன்னையா தெருவை நாசமாநீ போனியா தெரு என்று அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் படிப்பார். சுக்விந்தர்சிங் பாடும் பாடல்களும் பல அந்த மாதிரி ரகம்தான். ஆனாலும் 18 வயதில் என்ன பிடிக்கும் பாடல் சுக்விந்தர் குரலில் ஹிட்டானது.

***********************************************************
அஜித் நடித்த படங்களில் அதிகமுறை நான் பார்த்தது என்னவென்றால் ஆனந்த பூங்காற்றே படம்தான். அதற்கு காரணம், அந்த படம் ஓடிய தியேட்டரில் நான் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் காலை, மதியம் சில நாட்களில் மாலைக்காட்சி வரை மூன்று காட்சிகள் கூட திரையிட்டிருக்கிறேன். மற்ற தியேட்டர்களில் புரொஜக்டர் அறைக்கும், பிலிம் ரீவைண்ட் செய்யும் அறைக்கும் சிறிய தடுப்பு இருக்கும். ஆனால் அந்த தியேட்டரில் பிலிம் ரீவைண்ட் செய்யும் டேபிளை தூக்கி புரொஜக்டரின் அருகில் வைத்துக்கொண்டு இரண்டு வேலையையும் உதவியாளர் இல்லாமல் ஒருவரே பார்க்க வேண்டியிருக்கும். அதனால் அந்த படத்தை அதிக முறை பார்க்க வேண்டியதாயிற்று. திரும்ப திரும்ப பார்த்தாலும் அப்படி பெரிதாக போரடிக்கவில்லை. பாடல்கள் அனைத்தும் ஹிட்.

***********************************************************
படம் ஜவ்வு மாதிரி இழுத்தால் ஆப்ரேட்டர்களே இப்போதெல்லாம் வெட்டிவிடுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா பேட்டிகளில் சொல்லியிருப்பார்.

கட் செய்வது என்றால் பிலிமை வெட்டி ஒட்டிவிடுவதல்ல. 16 ரீல் கொண்ட படம் என்றால் இரண்டு ரீல்கள் கொண்ட ஸ்பூல் என்ற கணக்கில் 8 ஸ்பூல்களில் பிலிம் லோட் செய்யப்பட்டிருக்கும். 4 ஸ்பூலில் இடைவேளை. 8 வது ஸ்பூலில் படம் முடியும். இது பொதுவான கணக்கு. சில படங்களில் 4வது ஸ்பூல் பாதியில் அதாவது 7வது ரீலில் இடைவேளை வைத்திருப்பார்கள். ஸ்பூல் இறுதியில் இடைவேளை வைத்தால் அப்போதும் ஆப்ரேட்டர்கள், உதவியாளர்கள் அந்த நேரத்தில் பிலிமை ரீவைண்ட் செய்வது, கார்பன் மாற்றுவது அல்லது சரிசெய்வது, அடுத்த ஸ்பூல் பிலிமை புரொஜக்டரில் லோட் செய்வது என்று வேலை பார்ப்பார்கள். ஆனால் இடைவேளையில் படம் பார்ப்பவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ரிலாக்சாக இருப்பார்கள். ஆப்ரேட்டர்களும் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பூல் நடுவில் இடைவேளை வைக்கிறார்கள் என்று எனக்கு ஒரு ஆப்ரேட்டர் விளக்கம் கொடுத்தார்.

சுமாராக 18 முதல் 22 நிமிடங்கள் ஒரு ஸ்பூல் ஓடும். (ஆனால் சத்யராஜ் - பிரபு - ரம்பா நடித்த சிவசக்தி என்ற படத்தில் 7 வது இருந்த இறுதி ஸ்பூல் 35 நிமிடங்கள் ஓடும். காதல் கோட்டை படத்தில் ஹோம்லியாக நடித்து புகழ்பெற்ற தேவயானி இந்த படத்தில் நாதின்தின்னா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார். வார்தைகள் காரணமா அல்லது மோசமான அசைவு காரணமா என்று தெரியவில்லை. தேவயானி போர்ஷன் முக்கால்வாசி கட்டாகி தான் வந்தது.)

அப்படி ஒரு ஸ்பூல் முடிந்ததும் அடுத்த புரொஜக்டரை ஆன் செய்து படத்தை தொடர்ச்சியாக ஓட வைப்பதை சேஞ்ச் அடிப்பது என்று தியேட்டரில் உள்ளவர்கள் கூறுவார்கள். நான் தியேட்டருக்கு போன புதிதில் ஆப்ரேட்டர்கள் ரொம்ப பில்டப் கொடுத்து தாங்கள்தான் பிலிம் மாட்டுவது, சேஞ்ச் அடிப்பது என்பதை செய்ய வேண்டும். நீங்கள் எல்லாம் பிலிம் ரீவைண்ட் செய்வது, சிலைட் போடுவது, கார்பனை தொடர்ந்து ஒழுங்காக எரிய வைப்பது ஆகிய வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். கவனத்துடன் செய்தால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நான் நினைப்பேன். ஆங்கிலப்படங்களில் எல்லாம் ஒரு ஸ்பூல் பிலிம் இறுதியில் கலர் லேப்பில் பாசிட்டிவ் பிரிண்ட் தயாராகும்போதே இரண்டு இடங்களில் மார்க் செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்ப்படங்களில் படம் ரிலீசாகும் தியேட்டரில் உள்ள ஆப்ரேட்டர்தான் அதை செய்வார்.

கடைசியில் முடியும் இடத்தில் இருந்து இரண்டு அடி தூரத்தில் ஒன்று, அதற்கு 5 அடி தூரத்தில் ஒன்று என இரண்டு மார்க் செய்ய வேண்டும். முதல் மார்க் விழுந்தவுடன் புரொஜக்டர் மோட்டாரை ஸ்டார்ட் செய்து கொண்டு லீவரை இழுத்து ஷ­ட்டரை ஓப்பன் செய்ய வேண்டும். இரண்டாவது மார்க் விழுந்தவுடன் ஆட்டமேட்டிக் சேஞ்ச் ஓவர் புஷ் பட்டனை அழுத்த வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் புரொக்டரின் ஷ­ட்டர் மூடிக்கொண்டு இந்த புரொஜக்டரின் ­ஷட்டர் ஓப்பன் ஆகும். அத்துடன் ஆடியோ எக்சைட்டர் லேம்ப் முன்னதில் அணைந்து இதில் எரியத்துவங்கும். ஒரு நொடியில் 24 பிரேம்கள் பிக்சர்கேட்டில் கிராஸ் ஆகும். அதில் ஒரே ஒரு பிரேமில்தான் இந்த மார்க் செய்திருப்போம் (அ) செய்யப்பட்டிருக்கும். அதனால் கவனமாக பார்த்தால்தான் அது தெரியும்.

இந்த கணக்கு தப்பாகிப்போகும்போதுதான் திரையில் End of Part 8/ 10 / என்றெல்லாம் பிம்பம் வரும். அதேபோல் ஸ்பூல் Beginning சரியாக மாட்ட வில்லை என்றாலும் படத்தின் இடையில் கட்டம், வட்டம் என்று ஏதேதோ பிம்பங்கள் வந்து செல்லும். அது எதையும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் செய்வதும் ஆப்ரேட்டர்களின் திறமைதான்.

அப்போதெல்லாம் திருவாரூரில் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் ஒரு படம் ரிலீசானால் முதல் காட்சி தவறினால் முதல் நாள் மாலைக் காட்சிக்குள் பார்த்துவிடுவது  என் வழக்கம். அதற்கு காரணம் சினிமா பைத்தியம் என்று கூற முடியாது. தியேட்டர் புரொஜக்டரை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் ஓடும்போதே புரொஜக்டர் ரூமில் இப்போது ஆப்ரேட்டர் என்ன செய்வார் என்று என் மனதில் ஒரு தனி டிராக் ஓடிக்கொண்டிருக்கும். அது தவிர அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள், படத்தை 850 பேர் உட்கார்ந்து பார்த்து ஹவுஸ் ஃபுல் ஆனாலும் சரி, 20பேர் மட்டும் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, குறைந்தது 10 முதல் 20 நிமிட படங்களை கட் செய்து விடுவார்கள்.

அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள் முதல் காட்சியை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்பூலின் இறுதியிலும், ஆரம்பத்திலும் என்ன வருகிறது என்று பார்த்து வைத்துக்கொள்வார்கள்.

கடைசியில் 3 முதல் ஏழெட்டு நிமிடங்கள் துண்டாக ஏதாவது காட்சி இருந்தால் அது தொடங்குவதற்கு முன்பே அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டால் தீர்ந்தது கதை. பிறகு முதல் புரொஜக்டரை நிறுத்திவிட்டு, அப்படியே பிலிமை கழட்டி ரீவைண்ட் செய்து வைத்துவிடுவார்கள். ஸ்பூலின் இறுதியில் பாடல் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் நம்ம ஆப்ரேட்டர்கள் கவலையே படமாட்டார்கள். அடுத்த ரீலை குறிப்பிட்ட காட்சி வரை பார்வேர்டாக சுற்றிவைத்து அந்த காட்சியில் இருந்து ஸ்டார்ட் செய்து திரையிடுவார்கள். இப்படி 20 நிமிடம் வரை படங்கள் காலியாகிவிடும் என்பதால் எனக்கு பார்க்க பிடிக்காது. நான் இருந்த தியேட்டரில் ரொம்ப ரொம்ப அரிதாக என்றாவது ஒரு நாள் இப்படி நடக்கும். ஆனால் அந்த தியேட்டர் மாதிரி ஹவுஸ்புல் ஆன காட்சியில் விறுவிறுப்பான படங்களில் கூட கை வைக்கும் வேலை இருக்காது.

உதாரணத்துக்கு படையப்பா படத்தை எடுத்துக்கொள்வோம். படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் செளந்தர்யா ரோஜாப்பூவை பறித்து தலையில் வைத்திருப்பதை பிடுங்கி தரையில் போட்டு மிதித்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் செல்லும் காட்சி முடிந்ததுமே பட்டென்று மெசின் சேஞ்ச் ஓவர் ஆனது. அடுத்த காட்சி ஐடியா மணி செத்துட்டான். உங்க தம்பிங்கதான் சாராயம் விக்கிறாங்க என்று செந்தில் கூறும் காட்சி ஆரம்பம்.

படையப்பா படத்தை திரும்பவும் சன்டிவியில் பார்க்கும்போதுதான் வடிவுக்கரசி மகளுக்கு ஆறுதல் சொல்வது, குளத்தங்கரையில் இருந்து சாத்வீகம், அது இது என்று ரஜினி சொல்வது, மவுத்ஆர்கன் வாசிப்பதெல்லாம் இருப்பதே தெரிந்தது. அதேபோல் ரம்யாகிருஷ்ணன் பாலில் விசம் கலந்து செளந்தர்யாவுக்கு கொடுத்ததும் அதை பாம்பு தட்டிவிடும் காட்சிகள் எல்லாம் ஸ்வாஹாதான். முழுப்படத்தையும் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லை.

சேஞ்ச் ஓவர் சுவிட்ச் சப்தம் கேட்கும்போதே இது கட் பண்ற சத்தமா இல்ல... முழுசா ஓடவிட்டு மாத்துறாங்களான்னு தெரிஞ்சிடும். அப்புறம் எங்க படத்தை ரசிச்சு பார்க்குறது. இதனாலயே படம் பார்க்குறதை படிப்படியா குறைச்சு, நான்
காலேஜ் படிச்ச காலத்துல அந்த 3 வருசத்துல மொத்தமா 10லிருந்து 15 படம் பார்த்திருந்தால் அதிகம்.

இப்ப எல்லாம் படங்களை சாட்டிலைட் முறையில் திரையிடுவது, டிஜிட்டல் புரொஜக்சன் என்று எவ்வளவோ இம்ப்ருவ்மெண்ட் வந்துடுச்சு. அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.

**************************************
இந்த கதையை விடுங்க...

ஆரம்பம்னு படத்துக்கு டைட்டில் வெச்சுட்டதால பல இடங்கள்ல ஆரம்பம்னு வசனம் பேசுறதா எழுதியிருந்தாங்க. இந்த அளவுக்கெல்லாம் வசனம் எழுதுறப்ப சுரேஷ், பாலா, விஷ்ணுவர்த்தன் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். ஜாலியா இருந்தா கதையே இல்லன்னாலும் கேட்க மாட்டாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லைன்னா அதைப்போயா கேட்பாங்க... ப்ரீயா உடுங்க சார்....
ஆரூர் மூனா செந்தில் எழுதிய ஆரம்பம் பட விமர்சனம்


ஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா?


சூப்பர்ஸ்டாருக்கு அடுத்தபடியா அஜீத்துக்கும் பெரிய மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு ஆரம்பம் விமர்சனத்துல சிலர் எழுதியிருக்காங்க. அது உண்மைதான் போலிருக்கு. இதுக்கு முன்னால குட்டிப்புலி, சுட்டகதை, முத்துநகரம் டைட்டில்களை வெச்சு பதிவு போட்டதும் வழக்கத்தை விட 4 மடங்கு வாசகர்கள் வருகை இருக்கும். ஆனால் ஆரம்பம் டைட்டிலை வெச்சு இந்த பதிவு போட்டதுமே 3 மணி நேரத்துல 600 பேஜ் வியூ. நானே மிரண்டுட்டேன். நம்ம தளத்துக்கு அது ரொம்ப ஓவர்.

இன்று மாலை 5.14க்கு இந்த பதிவு போட்ட பிறகு இப்போ 8.15 மணி நிலவரப்படி இந்த கணக்கு.

நான் பெரும்பாலும் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. படம் பார்த்தாலும் விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் வளரலைன்னுங்குறது என் எண்ணம். பதிவுகளுக்கு லேபிள் கொடுக்குறப்ப கூட சினிமா, அனுபவம்னு மட்டும்தான் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய அளவுல இருக்குற பிரச்சனையை லேசா மாத்தி தொட்டா பிரச்சனை இல்லைன்னு நினைக்குறேன். 


1999ல முதல்வன் படம் ரிலீசான உடனே ரீல் அ(று)ந்து போற அளவுக்கு லோக்கல் சேனல்களில் ஓட்டப்பட்டாலும் திரையரங்குகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். ரகுவரனுடைய மேக்கப் தமிழகத்தில் உள்ள யாரையுமே நினைவூட்டும்படி அமைந்திருக்காது. அப்படி இருந்தும் அந்த படத்துக்கு அப்படி ஒரு சோதனை. சமீப காலமாக விஸ்வரூபம், தலைவா அப்படின்னு ஒரு சில படங்கள் ஒவ்வொரு ரூபத்துல பிரச்சனைகளை சந்திக்குது. அதைப்பார்த்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரித்ததில் ஊழல் என்று ஒரு கான்செப்டை பயன்படுத்தி திரைக்கதை அமைத்து ஒரு முறை ஜாலியாக படம் பார்க்க வைத்துவிட்டார் என்பதுதான் படம் பார்த்த பெரும்பாலானவர்களின் கருத்து.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாலயே ரிலீஸ் செஞ்சு கல்லா கட்ட இறங்கியிருக்குற படம் ஆரம்பம். புகை, மது பழக்கம் இருந்தால் அவர்களை தேசத்துரோகி போல் பார்த்தது அந்தக்காலம். இப்போ அந்த பழக்கம் இல்லாதவங்க கூட இப்படிப்பட்ட பழக்கம் இருக்குறவங்களை இதுதான் இப்போதைய உலகம்னு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

இணைய தளத்தில் எழுதுபவர்கள் காப்பி அடிச்சு படம் எடுத்தா இப்படியா செய்யுறதுன்னு திட்டுன காலம் போக, Swordfish படத்துல இருந்து அங்கங்க உருவினாலும் இண்ட்ரஸ்டிங்கா எடுத்திருக்காங்கன்னு ஆரம்பம் பட விமர்சனத்துல குறிப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. (இந்த வாசகத்தை முதல்ல குறிப்பிட்ட புண்ணியவான் யாருன்னு தெரியலை. அந்த விமர்சனத்தை காப்பி அடிச்சுதான் பெரும்பாலானோர் பின்தொடர்ந்து எழுதுறாங்கன்னு நினைக்குறேன்.)

இது படத்தின் விமர்சனமோ, கதைச்சுருக்கமோ அல்ல. அவற்றை படிக்க நினைப்பவர்கள் கூகிளாண்டவர்கிட்ட போனாலே போதும். வரிசை கட்டி விமர்சனங்கள் நிற்கும். இருந்தாலும் விமர்சனம்னு நம்பி இளையபாரதத்துக்கு வந்தவங்க ஏமாறாம இருக்க நம்ம ஊர்க்கார நண்பர் எழுதிய விமர்சனம் இங்கே.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் தியேட்டரில் படம் திரையிட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம் ஆப்ரேட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ சினிமா மீதான கிரேஸ் என்னைப் பொறுத்தவரை பத்துப் பனிரெண்டு வயதிற்குள்ளேயே காணாமல் போய்விட்டது.

திருச்சியில் உள்ள மகேஸ்வரி பிக்சர்ஸ் என்ற வினியோகஸ்தர் காதல்கோட்டை படத்தை திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் ரிலீஸ் செய்திருந்தார். திருச்சி ஏரியாவில் இப்போது ஆரம்பம் படம் 38 தியேட்டரில் ரிலீசாகியுள்ளது. ஆனால் தினகரன் விளம்பரத்தில் கூட்டி பார்த்தால் 40 வரும். திருத்துறைப்பூண்டியை இரண்டு முறை டைப் செய்து வைத்திருக்கிறார்கள். இதில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கு பிறகு அதிக தியேட்டரில் ரிலீசாகும் படம் என்ற பில்ட் அப் வேறு. ஆனால் காதல் கோட்டை திருச்சி ஏரியாவில் சுமாராக ஆறு அல்லது எட்டு பிரிண்ட் மட்டுமே வெளியானதாக நினைவு. ஆனால் படம் ஓஹோ என்று ஓட ஆரம்பித்ததும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே ஏகப்பட்ட மவுத் டாக். அந்த படம் திருவாரூரில் ரிலீசாகவில்லை.

ஒரு மாதம் கழித்து வி.சி.குகநாதன் இயக்கிய அஜீத், ரஞ்சித், கீர்த்தனா நடித்த மைனர் மாப்பிள்ளை படம் நான் பகுதி நேரமாக அவ்வப்போது பணியாற்றி வந்த தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது நான் 10ஆம் வகுப்பு படித்த நேரத்தில் காலை நேரத்தில் டியூசன் என்பதால் தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை பெரும்பாலும் அந்த தியேட்டரில்தான் பொழுது போகும். மைனர் மாப்பிள்ளை படத்தின் போஸ்டர் ஒட்டச் சென்ற பையனுடன் நானும் சும்மா பேச்சுத்துணைக்காக சென்றேன். 6, 4, 2 துண்டுகளாக உள்ள போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்ததுமே வழியில் பார்க்கும் மாணவிகள், இளம்பெண்கள் "ஏய்... காதல் கோட்டை படம் வரப்போகுதுடி'' என்று பேசிக்கொண்டு நின்று பார்த்தார்கள். போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த பையன், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா... இந்த தீப்பந்தமெல்லாம் கொளுத்திக்க கூடாதான்னு கவுண்டமணி கேட்குற ஸ்டைல்ல "காதல் கோட்டை மட்டும்தான் பார்ப்பீங்கிளா... மைனர் மாப்பிள்ளை... மேஜர் மாப்பிள்ளை எல்லாம் பார்க்க மாட்டீங்கிளா '' என்று கேட்கவும் அந்த பெண்கள் முகத்தில் வெட்கம்.

அகத்தியனின் முதல் படமான வான்மதியிலும் அஜீத்குமார்தான் ஹீரோ. அதில் தேவா பாடிய பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா பாடல் மிக பிரபலம். அப்போது நான் வேறொரு தியேட்டரில் ஒரு படம் விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாலும் மற்ற தியேட்டர்களில் வந்த படங்களை பார்ப்பதற்கு அவ்வளவாக சூழ்நிலை அமையாது. திருவாரூருக்கு அருகே உள்ள கிராமமான புலிவலத்தில் கருணாநிதி என்ற பெயரில் ஒரு திரையரங்கத்தில் 1998ல் மீண்டும் வான்மதி திரையிடப்பட்டபோது போய் பார்த்தேன். மிஸ் பண்ணாம போய் பார்க்குற அளவுக்கு அந்த படத்தில் எதுவுமே இல்லைதான். ஆனால் வடிவுக்கரசியின் திமிரான வசனங்களை எங்களுடன் படித்த சுந்தர் என்ற நண்பன் அதே மாடுலேசனில் பேசிக் காண்பிப்பான்.

உ.ம்
அரசியல்வாதி : என் பையன் உங்க வீட்டுல வலது கால் எடுத்து வைக்கணும்னு ஆசைப்படுறான்...

வடிவுக்கரசி : காலே இருக்காது பரவாயில்லையா? என்று ரொம்ப இயல்பாக கேட்பார்.

**********************************************************
2002ல் தீபாவளி அன்று சோழா தியேட்டரில் ரமணா பார்த்துவிட்டு மறுநாள்தான் தைலம்மை தியேட்டரில் வில்லன் படம் பார்த்தேன். அதுவும் சூப்பர்ஹிட் படம்தான்.
ஜெமினி படத்தினால் ரசிகர்களுக்கு பரிச்சயமான கிரண் நடித்த படம். குஷ்பு கேட்கும் அட்ரசில் நேசமணி பொன்னையா தெருவை நாசமாநீ போனியா தெரு என்று அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் படிப்பார். சுக்விந்தர்சிங் பாடும் பாடல்களும் பல அந்த மாதிரி ரகம்தான். ஆனாலும் 18 வயதில் என்ன பிடிக்கும் பாடல் சுக்விந்தர் குரலில் ஹிட்டானது.

***********************************************************
அஜித் நடித்த படங்களில் அதிகமுறை நான் பார்த்தது என்னவென்றால் ஆனந்த பூங்காற்றே படம்தான். அதற்கு காரணம், அந்த படம் ஓடிய தியேட்டரில் நான் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் காலை, மதியம் சில நாட்களில் மாலைக்காட்சி வரை மூன்று காட்சிகள் கூட திரையிட்டிருக்கிறேன். மற்ற தியேட்டர்களில் புரொஜக்டர் அறைக்கும், பிலிம் ரீவைண்ட் செய்யும் அறைக்கும் சிறிய தடுப்பு இருக்கும். ஆனால் அந்த தியேட்டரில் பிலிம் ரீவைண்ட் செய்யும் டேபிளை தூக்கி புரொஜக்டரின் அருகில் வைத்துக்கொண்டு இரண்டு வேலையையும் உதவியாளர் இல்லாமல் ஒருவரே பார்க்க வேண்டியிருக்கும். அதனால் அந்த படத்தை அதிக முறை பார்க்க வேண்டியதாயிற்று. திரும்ப திரும்ப பார்த்தாலும் அப்படி பெரிதாக போரடிக்கவில்லை. பாடல்கள் அனைத்தும் ஹிட்.

***********************************************************
படம் ஜவ்வு மாதிரி இழுத்தால் ஆப்ரேட்டர்களே இப்போதெல்லாம் வெட்டிவிடுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா பேட்டிகளில் சொல்லியிருப்பார்.

கட் செய்வது என்றால் பிலிமை வெட்டி ஒட்டிவிடுவதல்ல. 16 ரீல் கொண்ட படம் என்றால் இரண்டு ரீல்கள் கொண்ட ஸ்பூல் என்ற கணக்கில் 8 ஸ்பூல்களில் பிலிம் லோட் செய்யப்பட்டிருக்கும். 4 ஸ்பூலில் இடைவேளை. 8 வது ஸ்பூலில் படம் முடியும். இது பொதுவான கணக்கு. சில படங்களில் 4வது ஸ்பூல் பாதியில் அதாவது 7வது ரீலில் இடைவேளை வைத்திருப்பார்கள். ஸ்பூல் இறுதியில் இடைவேளை வைத்தால் அப்போதும் ஆப்ரேட்டர்கள், உதவியாளர்கள் அந்த நேரத்தில் பிலிமை ரீவைண்ட் செய்வது, கார்பன் மாற்றுவது அல்லது சரிசெய்வது, அடுத்த ஸ்பூல் பிலிமை புரொஜக்டரில் லோட் செய்வது என்று வேலை பார்ப்பார்கள். ஆனால் இடைவேளையில் படம் பார்ப்பவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ரிலாக்சாக இருப்பார்கள். ஆப்ரேட்டர்களும் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பூல் நடுவில் இடைவேளை வைக்கிறார்கள் என்று எனக்கு ஒரு ஆப்ரேட்டர் விளக்கம் கொடுத்தார்.

சுமாராக 18 முதல் 22 நிமிடங்கள் ஒரு ஸ்பூல் ஓடும். (ஆனால் சத்யராஜ் - பிரபு - ரம்பா நடித்த சிவசக்தி என்ற படத்தில் 7 வது இருந்த இறுதி ஸ்பூல் 35 நிமிடங்கள் ஓடும். காதல் கோட்டை படத்தில் ஹோம்லியாக நடித்து புகழ்பெற்ற தேவயானி இந்த படத்தில் நாதின்தின்னா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார். வார்தைகள் காரணமா அல்லது மோசமான அசைவு காரணமா என்று தெரியவில்லை. தேவயானி போர்ஷன் முக்கால்வாசி கட்டாகி தான் வந்தது.)

அப்படி ஒரு ஸ்பூல் முடிந்ததும் அடுத்த புரொஜக்டரை ஆன் செய்து படத்தை தொடர்ச்சியாக ஓட வைப்பதை சேஞ்ச் அடிப்பது என்று தியேட்டரில் உள்ளவர்கள் கூறுவார்கள். நான் தியேட்டருக்கு போன புதிதில் ஆப்ரேட்டர்கள் ரொம்ப பில்டப் கொடுத்து தாங்கள்தான் பிலிம் மாட்டுவது, சேஞ்ச் அடிப்பது என்பதை செய்ய வேண்டும். நீங்கள் எல்லாம் பிலிம் ரீவைண்ட் செய்வது, சிலைட் போடுவது, கார்பனை தொடர்ந்து ஒழுங்காக எரிய வைப்பது ஆகிய வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். கவனத்துடன் செய்தால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நான் நினைப்பேன். ஆங்கிலப்படங்களில் எல்லாம் ஒரு ஸ்பூல் பிலிம் இறுதியில் கலர் லேப்பில் பாசிட்டிவ் பிரிண்ட் தயாராகும்போதே இரண்டு இடங்களில் மார்க் செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்ப்படங்களில் படம் ரிலீசாகும் தியேட்டரில் உள்ள ஆப்ரேட்டர்தான் அதை செய்வார்.

கடைசியில் முடியும் இடத்தில் இருந்து இரண்டு அடி தூரத்தில் ஒன்று, அதற்கு 5 அடி தூரத்தில் ஒன்று என இரண்டு மார்க் செய்ய வேண்டும். முதல் மார்க் விழுந்தவுடன் புரொஜக்டர் மோட்டாரை ஸ்டார்ட் செய்து கொண்டு லீவரை இழுத்து ஷ­ட்டரை ஓப்பன் செய்ய வேண்டும். இரண்டாவது மார்க் விழுந்தவுடன் ஆட்டமேட்டிக் சேஞ்ச் ஓவர் புஷ் பட்டனை அழுத்த வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் புரொக்டரின் ஷ­ட்டர் மூடிக்கொண்டு இந்த புரொஜக்டரின் ­ஷட்டர் ஓப்பன் ஆகும். அத்துடன் ஆடியோ எக்சைட்டர் லேம்ப் முன்னதில் அணைந்து இதில் எரியத்துவங்கும். ஒரு நொடியில் 24 பிரேம்கள் பிக்சர்கேட்டில் கிராஸ் ஆகும். அதில் ஒரே ஒரு பிரேமில்தான் இந்த மார்க் செய்திருப்போம் (அ) செய்யப்பட்டிருக்கும். அதனால் கவனமாக பார்த்தால்தான் அது தெரியும்.

இந்த கணக்கு தப்பாகிப்போகும்போதுதான் திரையில் End of Part 8/ 10 / என்றெல்லாம் பிம்பம் வரும். அதேபோல் ஸ்பூல் Beginning சரியாக மாட்ட வில்லை என்றாலும் படத்தின் இடையில் கட்டம், வட்டம் என்று ஏதேதோ பிம்பங்கள் வந்து செல்லும். அது எதையும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் செய்வதும் ஆப்ரேட்டர்களின் திறமைதான்.

அப்போதெல்லாம் திருவாரூரில் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் ஒரு படம் ரிலீசானால் முதல் காட்சி தவறினால் முதல் நாள் மாலைக் காட்சிக்குள் பார்த்துவிடுவது  என் வழக்கம். அதற்கு காரணம் சினிமா பைத்தியம் என்று கூற முடியாது. தியேட்டர் புரொஜக்டரை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் ஓடும்போதே புரொஜக்டர் ரூமில் இப்போது ஆப்ரேட்டர் என்ன செய்வார் என்று என் மனதில் ஒரு தனி டிராக் ஓடிக்கொண்டிருக்கும். அது தவிர அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள், படத்தை 850 பேர் உட்கார்ந்து பார்த்து ஹவுஸ் ஃபுல் ஆனாலும் சரி, 20பேர் மட்டும் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, குறைந்தது 10 முதல் 20 நிமிட படங்களை கட் செய்து விடுவார்கள்.

அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள் முதல் காட்சியை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்பூலின் இறுதியிலும், ஆரம்பத்திலும் என்ன வருகிறது என்று பார்த்து வைத்துக்கொள்வார்கள்.

கடைசியில் 3 முதல் ஏழெட்டு நிமிடங்கள் துண்டாக ஏதாவது காட்சி இருந்தால் அது தொடங்குவதற்கு முன்பே அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டால் தீர்ந்தது கதை. பிறகு முதல் புரொஜக்டரை நிறுத்திவிட்டு, அப்படியே பிலிமை கழட்டி ரீவைண்ட் செய்து வைத்துவிடுவார்கள். ஸ்பூலின் இறுதியில் பாடல் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் நம்ம ஆப்ரேட்டர்கள் கவலையே படமாட்டார்கள். அடுத்த ரீலை குறிப்பிட்ட காட்சி வரை பார்வேர்டாக சுற்றிவைத்து அந்த காட்சியில் இருந்து ஸ்டார்ட் செய்து திரையிடுவார்கள். இப்படி 20 நிமிடம் வரை படங்கள் காலியாகிவிடும் என்பதால் எனக்கு பார்க்க பிடிக்காது. நான் இருந்த தியேட்டரில் ரொம்ப ரொம்ப அரிதாக என்றாவது ஒரு நாள் இப்படி நடக்கும். ஆனால் அந்த தியேட்டர் மாதிரி ஹவுஸ்புல் ஆன காட்சியில் விறுவிறுப்பான படங்களில் கூட கை வைக்கும் வேலை இருக்காது.

உதாரணத்துக்கு படையப்பா படத்தை எடுத்துக்கொள்வோம். படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் செளந்தர்யா ரோஜாப்பூவை பறித்து தலையில் வைத்திருப்பதை பிடுங்கி தரையில் போட்டு மிதித்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் செல்லும் காட்சி முடிந்ததுமே பட்டென்று மெசின் சேஞ்ச் ஓவர் ஆனது. அடுத்த காட்சி ஐடியா மணி செத்துட்டான். உங்க தம்பிங்கதான் சாராயம் விக்கிறாங்க என்று செந்தில் கூறும் காட்சி ஆரம்பம்.

படையப்பா படத்தை திரும்பவும் சன்டிவியில் பார்க்கும்போதுதான் வடிவுக்கரசி மகளுக்கு ஆறுதல் சொல்வது, குளத்தங்கரையில் இருந்து சாத்வீகம், அது இது என்று ரஜினி சொல்வது, மவுத்ஆர்கன் வாசிப்பதெல்லாம் இருப்பதே தெரிந்தது. அதேபோல் ரம்யாகிருஷ்ணன் பாலில் விசம் கலந்து செளந்தர்யாவுக்கு கொடுத்ததும் அதை பாம்பு தட்டிவிடும் காட்சிகள் எல்லாம் ஸ்வாஹாதான். முழுப்படத்தையும் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லை.

சேஞ்ச் ஓவர் சுவிட்ச் சப்தம் கேட்கும்போதே இது கட் பண்ற சத்தமா இல்ல... முழுசா ஓடவிட்டு மாத்துறாங்களான்னு தெரிஞ்சிடும். அப்புறம் எங்க படத்தை ரசிச்சு பார்க்குறது. இதனாலயே படம் பார்க்குறதை படிப்படியா குறைச்சு, நான்
காலேஜ் படிச்ச காலத்துல அந்த 3 வருசத்துல மொத்தமா 10லிருந்து 15 படம் பார்த்திருந்தால் அதிகம்.

இப்ப எல்லாம் படங்களை சாட்டிலைட் முறையில் திரையிடுவது, டிஜிட்டல் புரொஜக்சன் என்று எவ்வளவோ இம்ப்ருவ்மெண்ட் வந்துடுச்சு. அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.

**************************************
இந்த கதையை விடுங்க...

ஆரம்பம்னு படத்துக்கு டைட்டில் வெச்சுட்டதால பல இடங்கள்ல ஆரம்பம்னு வசனம் பேசுறதா எழுதியிருந்தாங்க. இந்த அளவுக்கெல்லாம் வசனம் எழுதுறப்ப சுரேஷ், பாலா, விஷ்ணுவர்த்தன் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். ஜாலியா இருந்தா கதையே இல்லன்னாலும் கேட்க மாட்டாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லைன்னா அதைப்போயா கேட்பாங்க... ப்ரீயா உடுங்க சார்....



ஆரூர் மூனா செந்தில் எழுதிய ஆரம்பம் பட விமர்சனம்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

சுட்ட கதை - முத்து நகரம் - ரவுடி கோட்டை - திருவாரூர் சோழா 29 ஆண்டு

இது சினிமா விமர்சனம் அல்ல. பழைய நினைவுகளின் தொகுப்பு மட்டுமே. இன்று காலை பேருந்து நிலையம் செல்லும் வழியில் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் சுட்டகதை, நடேஷ் தியேட்டரில் முத்துநகரம், சோழாவில் ரவுடி கோட்டை ஆகிய போஸ்டர்களை பார்த்தேன். அடுத்த வாரம் தீபாவளி. நடேஷ் - ல் ஆல் இன் ஆல் அழகுராஜா, (ஆல் இன் ஆல் - வார்த்தையை சென்சார்காரங்க கிட்ட காட்டுவாங்களா மாட்டாங்களா?) சோழாவில் பாண்டியநாடு ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என்று நாளிதழ் விளம்பரங்கள் வந்துவிட்டன. மிச்சம் இருப்பது ஒரு தியேட்டர். தைலம்மை. இந்த தீபாவளி ரிலீசில் மீதமிருப்பது ஆரம்பம் (அக். 31 ரிலீசாம்) அநேகமாக இதுதான் அந்த தியேட்டரில் ரிலீசாகக்கூடும். (எவ்வளவு கஷ்டமான கண்டுபிடிப்பு)

தீபாவளிக்கு முதல்நாள் 1985ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி திருவாரூர் சோழா தியேட்டர் திறப்புவிழா என்று தியேட்டர் கல்வெட்டில் எப்போதோ பார்த்த நினைவு. அப்படியென்றால் இன்று திருவாரூர் சோழா தியேட்டரின் 29ஆம் ஆண்டு தொடக்க விழா. எனக்கு அப்போ நாலு வயது முடிந்து 5ஆம் வயது ஆரம்பம். சோழா தியேட்டரில் முதல் படமாக முதல் மரியாதை.  அந்த படம் பார்க்க போனது நினைவில் இருக்கிறது. (பள்ளிக்கூடத்துல படிச்சது இருக்கட்டும். பத்து வருசத்துக்கு முன்னால காலேஜ்ல படிச்சது கூட நினைவில் இல்லை.)

பூவிழி வாசலிலே, விக்ரம், வைகாசி பொறந்தாச்சு, பாட்டி சொல்லைத்தட்டாதே, கரகாட்டக்காரன், மன்னன், எஜமான், ஜென்டில்மேன், இந்து, வில்லாதி வில்லன், முத்து, சூரிய வம்சம், படையப்பா போன்ற பல படங்களை அந்த திரையரங்கில் பார்த்தது நினைவில் இருக்கிறது. இவற்றில்  வைகாசி பொறந்தாச்சு, பாட்டி சொல்லைத்தட்டாதே, கரகாட்டக்காரன், சூரியவம்சம், படையப்பா படங்களின் வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கடைசியாக அந்த தியேட்டரில் நான் பார்த்த படம் ஆறு. அதுவும் அப்போதுதான் Dts வைத்தார்கள் என்பதற்காக போனேன்.

1999 வரை திருவாரூரில் 5 தியேட்டர்கள் இருந்தன. மற்ற திரையங்கங்களை விட எனக்கு சோழாவில் படம் பார்ப்பதுதான் ரொம்ப பிடிக்கும். மொக்க படமாக இருந்தாலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வெல்வட் துணியாலான திரை மேலெழும்பும்போது ஒரு மியூசிக் போடுவார்கள். பாடல் நிறுத்தப்பட்டு அந்த மியூசிக் கேசட் போட்டவுடன் தியேட்டர் பணியாளர்கள் ஸ்கிரீனை இழுத்துவிட்டு அரங்கத்தின் கதவுகளை மூடுவார்கள். 5 அடி உயரம் மேலெழும்புவதற்குள் தியேட்டர் சோழா உங்களை வரவேற்கிறது என்று சிலைடு போடப்படும். திருவாரூர் புகழாக சொல்லப்படும் மனுநீதி சோழனை மனதில் கொண்டு, மாடு ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்பதை ஸ்டில்லாக வைத்திருப்பார்கள்.

தியேட்டர் வாசலிலும் அந்த சிற்பம் உண்டு. சுருங்கிக்கொண்டே வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்போது கொஞ்சம் கொஞ்சமாக வெண்திரையில் அந்த பிம்பம் விழுவதை பார்க்க ஆசையாக இருக்கும். அப்போது கேட்ட அந்த மியூசிக்கை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை. அவ்வை சண்முகி படத்தில் வேலை.... பாடல் தொடங்குவதற்கு முன்பு லீட் மியூசிக் ஒன்று வரும். அதுதான் ஓரளவு அந்த பழைய மியூசிக்கோடு ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன். சரியாக அந்த கேசட்டை போட்டுவிட்டு நாலைந்து நொடிகள் கழித்து ஒரு குறிப்பிட்ட சவுண்ட் வரும்போது 15 கலர் பல்ப்புகள் எரிய வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்பும். 3 ஆம் வகுப்பு டிக்கெட்டுக்கு போனால் லேட்டாகத்தான் உள்ளே விடுவார்கள் என்று இதற்காகவே கூடுதல் கட்டண டிக்கெட் எடுத்துப்போக வேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடித்திருக்கிறேன்.

இதெல்லாம் 1994 வரைதான். அந்த ஆண்டு நம்மவர் படம் தீபாவளி ரிலீஸ். அப்போதுதான் ஸ்கிரீன் பின்னால் இருக்கும் ஸ்பீக்கர்களை மாற்றினார்கள். அப்போதெல்லாம் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் முதல் 7 நாட்கள் கூட தினசரி 5 காட்சிகள் திரையிடப்படும். அப்போது காலைக்காட்சியில் மேலே நிறுத்தப்படும் ஸ்கிரீன் இரவுக்காட்சி வரை இறங்காது. அதனால் இந்த மியூசிக் கேட்க வாய்ப்பில்லை. அது தவிர பெரும்பாலும் காலைக்காட்சி முடிந்து மதியக் காட்சி 5 அல்லது 10 நிமிடங்களுக்குள் திரையிடப்பட்டுவிடும் என்பதால் அப்போதும் வெல்வெட் ஸ்கிரீன் மியூசிக் கேட்க வேலையில்லை. இதனால் மதியக் காட்சி போக நான் விரும்புவதில்லை.

பல நேரங்களில் மோட்டார் ரிப்பேர் என்று ஸ்கிரீனை மேலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள். தியேட்டருக்குள் நுழையும் நான், அடப்பாவிகளா... இதை எல்லாம் முன்னாலேயே சொல்ல மாட்டீங்கிளா என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்ததுண்டு. அப்படி நான் 1994 தீபாவளிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு காளை என்ற படத்துக்கு போனபோது காதலன் படத்தில் முக்காபலா, புன்னகை மன்னன் படத்தில் காலம் காலமாக நாங்கள்... மற்றும் சத்யா படத்தின் வளையலோசை கலகலவென்று பாடல்களை ஃபுல் சவுண்ட் வைத்து பாடவிட்டு அப்போதே ஸ்கிரீனை ஏற்றி விடுவார்கள்.பிறகு நியூஸ் ரீல் ஓடும்.

என்னுடைய 15வது வயதில் 1996 ஆம் ஆண்டு வேறு இரண்டு தியேட்டர்களில் பள்ளிக்கு போன நேரம் போக மீதி நேரத்தில் ஆப்ரேட்டர் உதவியாளராக போயிருக்கிறேன். அப்போது நானே திரைப்படக்கருவியை இயக்கி முழு படத்தையும் திரையிட்ட காலத்தில் இப்படி மியூசிக் போட்டு ஸ்கிரீனை மேலேற்ற சந்தர்ப்பம் வாய்த்ததில்லை.
  

ஏனென்றால் நான் பணியாற்றிய ஒரு தியேட்டரில் வெண்திரைக்கு முன்னால் இருக்கும் வெல்வட் ஸ்கிரீன் கிடையாது. மற்றொரு தியேட்டரில் உதவியாளராக இருந்தபோது, ரொம்ப சாதாரண மியூசிக் கேசட் போடப்படுவதால் ஆப்ரேட்டரிடம் சொல்லி, அதெல்லாம் எதுவும் வேணாம். பாட்டு ஓடும்போதே ஆடிட்டோரிய லைட்டை ட்ரிம் பண்ணிட்டு ஸ்கிரீனை ஏத்திடுங்க என்று வழக்கத்தை மாற்றிவிட்டேன். அவர் முதலில் தியேட்டர் முதலாளி எதுவும் திட்டுவார் என்று பயந்தார். படம் ஓடும்போது லைட், சவுண்ட் ஒழுங்கா தரலைன்னாதான் திட்டுவாங்க. அந்த வேலையை சரியா செய்வோம் என்று பெரிய மனுசன் தோரணையில் கூறியதாக நினைவு. (முதலாளிகளுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இது மாதிரியான சின்னவிசயங்களை கவனிக்க வாய்ப்பு குறைவு என்ற துணிச்சலில்தான் அப்படி கூறினேன் என்று நினைக்கிறேன்.)

கடைசியாக நான் முழுப்படத்தையும் திரையிட்டது மற்றொரு தியேட்டரில் ஆனந்தப்பூங்காற்றே என்ற படம். பகல் காட்சிகளை திரையிட வரவேண்டிய ஆப்ரேட்டர் ஒருவர் தொடர் லீவு எடுத்ததால் பல தினங்கள் நான் காலை, மதியக் காட்சிகளை திரையிட்டிருக்கிறேன். 48 நாட்கள் ஓடியது அந்த படம். அதே நேரத்தில் சோழாவில் படையப்பா படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. இது எல்லாம் நான் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பிளஸ்டூ தேர்வு எழுத முயற்சி செய்த நேரம்.

அப்போது 5 தியேட்டர்களிலும் புதுப்படங்கள் வெளியாகும். இப்போது போல் ஒரே படம் மூவாயிரம், நாலாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் காலம் அல்ல. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படம் 1997 பிப்ரவரியில் ரிலீசானது. ஆனால் திருவாரூர் சோழாவில் தமிழ் வருடப்பிறப்புக்குதான் வெளியானது. திருச்சி ஏரியாவில் ஆறு பிரிண்ட் மட்டுமே போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். திருச்சி, தஞ்சாவூர், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை - இது மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

அவ்வளவு ஏன்? 1998 அல்லது 1999 என்று நினைக்கிறேன். தீபாவளிக்கு பத்து நாட்கள் இருந்ததால் பாட்ஷா படத்தை நடேஷ் தியேட்டரில் திரையிட்டார்கள். அப்போதும் நல்ல கூட்டம். தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் வந்தால் ஏழெட்டு படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிவிடும். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு எந்த தியேட்டருக்கும் கவலை இருக்காது. வரிசையாக படங்கள் கிடைக்கும்.

அதேபோல் 1996 தேர்தல் சமயத்தில் நான் 9ஆம் வகுப்பு விடுமுறையில் பணியாற்றிய தியேட்டரில் நாயகன் படம் திரையிட்டோம். மூன்று நாட்கள் பெரிய வசூல்.

இப்போ எல்லாம் பல தொலைக்காட்சிகளிலும் படங்களை ரீல் அறுந்து போகும் அளவுக்கு (ஹார்டு டிஸ்க் பேட் செக்டார் ஆகும் அளவுக்கு) திரும்ப திரும்ப போடுகிறார்கள். அப்படியும் வேறு வழி தெரியாமல் ஒரு தொலைக்காட்சியில் சனிக்கிழமை வரை சீரியல் போடத்தொடங்கிவிட்டார்களாம். பல வீடுகளில் கணவன், மனைவியர் சனி, ஞாயிறு ஆகிய ரெண்டு நாளாச்சும் முகம் கொடுத்து பேசிகிட்டு இருந்தாங்க. அது பொறுக்காம இப்போ அதுலயும் ஒரு நாளைக்கு வேட்டு வெச்சுட்டாங்க.

இப்போது தீபாவளிக்கு 8 நாட்கள் இருக்கும்போது மூன்று படங்கள் சுட்ட கதை - முத்து நகரம் - ரவுடி கோட்டை (ஒன்று டப்பிங்) ரிலீசாகிறது. அந்த அளவுக்கு சிறிய படங்களுக்கு தியேட்டர் பஞ்சம் ஆகிவிட்டது. இன்று காலையில் புதுப்பட போஸ்டர்களை பார்த்ததும் எனக்கு தோன்றியது இதுதான்.

****************************************
இணையத்தில் தேடியபோது திருவாரூர் சோழா தியேட்டரின் ஒளிப்படம் கிடைத்தது. 2003 பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக (நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது) விக்ரம்-ஜோதிகா நடித்த "தூள்'' படம் ரிலீசானது. அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் அது. பிளக்ஸ் கலாச்சாரம் சின்ன ஊர்களுக்கு வரும் முன்பு பெரிய படங்கள் ரிலீசாகும்போது மட்டும்தான் இப்படி கையால் வரைந்த பேனர்கள் தான் தியேட்டர்களில் வைக்கப்படும். கிட்டத்தட்ட அந்த நடிகர் மாதிரியே வரைஞ்சிருக்காங்களே என்பது அந்த வயது மற்றும் அந்த காலகட்ட ஆச்சர்யம். இப்போது ஒளிப்படங்களை வைத்து பிளக்ஸ், அழைப்பிதழ்கள் டிசைனிங் செய்வதும் என்னுடைய தொழிலின் ஒரு பகுதியாகிப்போனதும் காலத்தின் மாற்றமே.

சினிமா நூற்றாண்டுவிழா அரசியலைப்பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. ஆனால் இந்த நேரத்தில் வேறொரு பழைய தொழில்நுட்பத்தை ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஜெமினி கலர்லேப் நிறுவனத்தின் பிலிம் பிராசசிங் செக்சன் மூடப்பட்டுவிட்டதாக செய்தி படித்தேன். ஷ­ங்கர் இயக்கும் ஐ படம்தான் பிலிமில் தயாராகும் கடைசி தமிழ்ப்படம் என்றும் கூறுகிறார்கள். இப்போது தியேட்டர்கள் அனைத்தும் டிஜிட்டல் புரொஜக்சன் முறைக்கு மாறிவிட்டது அனைவருக்கும் தெரியும். 

சவுண்ட் சிஸ்டத்தில் பல்வேறு மாற்றங்கள் காலம் தோறும் இருந்து வந்தது. ஆனால்  வெளிச்சத்துக்கு  கார்பன் போய் பவர்புல் மின்விளக்குகள் வந்தாலும் சினிமா கண்டறியப்பட்ட காலம் முதல் பிலிம் சுருளை புரொக்டரில் பொருத்தி திரையிடும் தொழில் நுட்பம் சுமார் 80 ஆண்டு காலம் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் 2000க்கு பிறகுதான் அதிகமாக டிஜிட்டலில் திரையிடும் வசதிகள் பெருக ஆரம்பித்தன.

வெஸ்ட்ரெக்ஸ், போட்டோபோன் ஆகிய புரொஜக்டர்கள்தான் நான் கையாண்டவை. இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை எத்தனை தியேட்டர்களில் இந்த புரொஜக்டர்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. அப்படி இருப்பவற்றை புகைப்படம் எடுத்து அந்த தொழில் நுட்பத்தையும் என்னுடைய சில அனுபவங்களையும் சேர்த்து கட்டுரையாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது சாத்தியப்படுத்த முயற்சிக்கிறேன். அப்படி செய்ய முடிந்தால் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்த விசயத்தை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் இதுவும் சிறிய பங்களிப்பாக இருக்கக்கூடும்.

------------------------------------

பிரசாத், ஜெமினியில் ஆட்குறைப்பு டிஜிட்டலுக்கு மாறியாச்சு தமிழ் சினிமா ஃபிலிமில் வெளிவரும் கடைசி படம் ஐ

சென்னை : டிஜிட்டல் மயம் காரணமாக பிரபல சினிமா நிறுவனங்களான பிரசாத் மற்றும் ஜெமினி லேப்பில் பிராஸசிங் ஸ்டூடியோ மூடப்படுகிறது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக நம்மை மகிழ்வித்த சினிமா பிலிம், இப்போது மலையேறப் போகிறது. புதிய தொழில்நுட்பமான டிஜிட்டல் கேமரா வந்த பின் பிராஸசிங் வேலைகள் தேவையில்லை என்பதால் லேப்கள் மூடப்படுகின்றன.

சினிமா பிலிமில் உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்த நிறுவனம் ஜெர்மனைச் சேர்ந்த ஆரி. இந்நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் கேமராவான ரெட் ஒன்னை உருவாக்கியது ஓக்லே என்ற அமெரிக்க நிறுவனம். இவர்கள் போட்டியின் காரணமாக, ‘டிஜிட்டல் வேஸ்ட்’ என்ற பிரசாரமும் ‘பிலிம்தான் பெஸ்ட்’ என்றும் விவாதங்கள் நடந்து வந்தன. அது பழங்கதை ஆகிவிட்டது. இப்போது பிலிமை விட்டுவிட்டு உலகம் முழுவதும் டிஜிட்டலில் படம் எடுக்க முன் வந்துவிட்டனர். இதையடுத்து ஆரி, வேறு வழியின்றி அலெக்ஷா என்ற டிஜிட்டல் கேமராவை களமிறக்கியது.

தியேட்டர் புரொஜக்ஷனும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த வருடத்தோடு பிலிமுக்கு குட்பை சொல்ல முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து பல்வேறு நாடுகளில் டிஜிட்டலுக்கு சினிமா மாறிவிட்டது. இங்கும் 90 சதவிகித படங்கள் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிரசாத் லேபில் பிராஸசிங் வேலைகள் குறைந்துவிட்டதால், அங்கு பணியாற்றிய 90 ஊழியர்களுக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டனர். இதே போல ஜெமினி லேப்பிலும் ஆட்குறைப்பு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயா லேப் மூடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

‘பிலிமில் படம் எடுக்கப்படுவது இன்னும் குறையவில்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள ‘ஜன்னல் ஓரம்’, ‘பாண்டிய நாடு’ உட்பட பல படங்கள் பிலிமில்தான் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் படங்கள் பிலிமில் எடுக்கப்பட இருக்கின்றன. ஆனால், தியேட்டர் புரொஜக்சன் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் இந்த படங்களும் டிஜிட்டல் பார்மெட்டுக்கு மாற்றப்படும்’ என்றார் பிராசஸிங்கில் பணியாற்றும் ஒருவர்.

இன்டஸ்ட்ரியில் உள்ள இன்னும் சிலர், ‘இனி டிஜிட்டல்தான் என்பதை சொல்லி வந்தோம். இப்போது அது உறுதியாகிவிட்டது. பிலிமில் ரிலீஸ் ஆன சமீபத்திய படம், சசி இயக்கிய ‘555’. அடுத்து ஷங்கர் இயக்கும் ‘ஐ’ தான், பிலிமில் எடுக்கப்படும் கடைசி படம்’ என்று கூறுகின்றனர். ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுக்க, அது தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தெரிந்துகொள்ள அச்சப்படும் அல்லது ஆர்வமில்லாதவர்கள்தான் பிலிம் சிறந்தது என்று கூறுகின்றனர். ‘கண்களால் பார்க்கப்படும் துல்லியத்தை திரையில் காட்ட முடியும்’ என்றுதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தது.

அது நிறைவேறிட்டது. டிஜிட்டலுக்கு முன் சினிமா, ஒளிப்பதிவாளர் வசம் இருந்தது. இப்போது இயக்குனர் வசம் வந்திருக்கிறது. இனி டிஜிட்டல் உலகம்தான். அதற்கு புஜி உட்பட சில பிலிம் நிறுவனங்கள் மூடப்பட்டதே சாட்சி’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.

டிஜிட்டல் மயம் காரணமாக, வாங்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சினிமா கேமராக்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. பிலிமில், நெகட்டிவ்வை கொடுத்து பைனான்ஸ் வாங்கும் நிலை இருந்தது. டிஜிட்டல் வந்துவிட்டதால் அதற்கு யாரும் பைனான்ஸ் கொடுக்க முன் வருவதில்லை என்கிற நிலை இப்போது இருந்து வருகிறது.

புதன், 23 அக்டோபர், 2013

திருவாரூரில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு பயிலரங்கு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது. இங்கு சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற உள்ளது என மத்திய பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி.

தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு வரும் நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது. எல்.வி.பிரசாத் அகடமி இயக்குனர்  ஹரிஹரன் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளார். சினிமா மீது ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் பங்கு பெற்று பயன்பெறலாம்.

ஒரு கல்லூரியில் இருந்து அதிக பட்சமாக 5 நபர்கள் பங்கு பெறலாம் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 30. மேலும் இது குறித்து தகவல் தெரிந்து கொள்ள மற்றும் உங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆதி இராமானுஜம் துணைபேராசிரியரை 9176643777 என்ற தொலைபேசி எண்ணிலும் athiramanujam@cutn.ac.in  என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் காட்சித்தொடர்பியல் துறை (Visual Communication) சுய நிதிப்பிரிவாக இயங்கிவருகிறது. அந்த மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பெரிய நகரங்களில் படிப்பவர்களுக்கு, வசிப்பவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி கிடைக்கலாம். இந்த ரெண்டு நாள் கருத்தரங்கில் உலகத்தையே புரட்டிப்போடுற மாதிரி படம் எப்படி இருக்கணும்னு புரிஞ்சுடப்போகுதான்னு சிலர் நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரை அவனளவில் பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் என்பதற்கு யாராவது சொன்ன நல்ல வார்த்தைகளாகவோ, யாராவது அவமானப்படுத்திய சம்பவமாகவோ அல்ல்து எதாவது புத்தகம் படிக்கும்போது சட்டென்று ஸ்பார்க் ஆக வைத்த இரண்டு வரிகளாகவோ, ஒரு மணி நேரம் நம்முடன் பயணம் செய்த நபர் சொன்ன வார்த்தைகளாகவோ இருக்கலாம்.

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அவ்வப்போது பல துறைகளிலும் எதாவது கருத்தரங்கங்கள், வகுப்புகள் என்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எந்த அளவு மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இது போன்ற நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் சமீப காலமாகத்தான் வெளியில் தெரிகின்றன.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதளம்

பிரசாத் அகாடமி


 Image Credit : PrasadAcademy.com

******************************************************
டொமை நேம் ரிஜிஸ்ரேஷனுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி.
(இப்போது சொல்லப்போகும் தகவல்கள் பலரும் அறிந்த ஒன்றுதான்)

mullaicomputers.com என்ற வார்த்தைகளை கூப்பனாக பயன்படுத்தினால் Big Rock.in இல் டொமைன் நேம் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு, புதுப்பித்தலுக்கு போன்றவற்றுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. யுஆர் எல் முகவரி - http://www.bigrock.in/

வலைப்பூ எழுதும் பலரும் தற்போது சொந்த டொமைன் வைத்திருக்கிறார்கள். நானும் கூகிள் மூலம் நேரடியாக அதே போல் டாட்.காம் வாங்க முயற்சித்தேன். கிரடிட் கார்டு இருந்தால் மட்டும் வாங்க முடியும் என்ற நிலை இருந்ததால் விட்டுவிட்டேன். பிறகு பிக்ராக் மூலம் பெயரை ரெஜிஸ்டர் செய்துவிட்டேன். ஆனால் ப்ளாக்கை எப்படி Hosting செய்வது என்று தெரியாமல் ஆறு மாதங்கள் writersaran.com ஐ பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கற்போம்.காம் தளத்தில் பிரபுகிருஷ்ணாவுக்கு மெயில் அனுப்பி கேட்டதில் அவர் வழிமுறைகளை தெரிவித்து பதில் அனுப்பினார். கூகிளிலில் தேடினாலும் தெளிவான விளக்கங்களுடன் நிறைய கட்டுரைகள் கிடைக்கும். (எனக்குதான் ஆங்கிலம் தகராறு)

எவ்வளவோ எஸ்டென்ஷனுடன் டொமைன் நேம் இருந்தாலும் இப்போதும் பலருடைய முதல் சாய்சாக இருப்பது .com தான். அது நான் வாங்கும்போது 500 ரூபாயாக இருந்தது. அடுத்து ஒரு ஆண்டு புதுப்பிக்கும்போது 599 என்று நினைக்கிறேன். இப்போது 659 ரூபாயாகிவிட்டது. (எல்லாம் டாலர் மதிப்பு செய்யும் மாயம்)

தீபாவளி ஆஃபர் இருப்பதால் கொஞ்சம் விலை குறைவாக வாங்க நினைப்பவர்கள் இப்போது முயற்சிக்கலாம்.

mullaicomputers.com என்ற கூப்பனை பயன்படுத்தினால் கூடுதலாக கொஞ்சம் டிஸ்கவுண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பிறகு உங்கள் டொமைன் நேமும் கூப்பனாக பயன்படும். அதை வைத்து பலர் டொமைன் வாங்கும்போது உங்களுக்கும் சில ஆபர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பண பலன் நேரடியாக கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு வேறு சில ஆப்ஷன்ஸ் இருக்கிறது. அவற்றை http://www.bigrock.in/  தளத்திற்கு போனால் அறிந்துகொள்ளலாம்.

வியாழன், 30 மே, 2013

குத்துனது நண்பனா இருந்தா வெளியில சொல்லக்கூடாது





குட்டிப்புலி டைட்டிலைப் பார்த்து படத்தின் விமர்சனம் இருக்குமோன்னு வந்தவங்க அடுத்த பதிவுக்கு போயிடலாம். என்ன எழுதுறதுன்னு புரியாம சும்மா மொக்கைன்னு கூட சொல்ல முடியாத அளவுக்கு ஒண்ணுமே இல்லாத பதிவு இது.



குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக்கூடாது - சுந்தரபாண்டியன்ல வர்ற இந்த டயலாக் சினிமாவுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வரும். ரீல்ல வர்ற வசனத்தை நினைச்சு ரியல் லைஃப்ல பின்பற்ற நினைச்சா சுத்தி இருக்குறவய்ங்க சந்தோசமா ஒரு குழியைத் தோண்டி உங்களை புதைச்சுட்டு போய்கிட்டே இருப்பாங்க.



எனக்கு கொஞ்சம் விபரம் தெரியத்தொடங்கியது 1987தான். அதிலிருந்து 2000வரையிலான காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய் மற்றும் ஒரு சில நடிகர்களின் படங்களுக்குதான் ரசிகர் மன்றத்தினர் கட்அவுட், ஆர்ட்டிஸ்ட் பெயிண்டால் வரைந்த பேனர், போஸ்டர் என்று பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடுவார்கள். தீபாவளி, பொங்கல் என்று முக்கிய நாட்களில் தியேட்டர் வாசலை வாழைமரமும் தோரணங்களும் அலங்கரிக்கும்.



அதன்பிறகு சமீப காலமாக சிறிய நகரங்களில் இந்த கலாச்சாரம் ஓரளவு குறைந்திருந்தது. ஆனால் ஸ்டுடியோக்கள் டிஜிட்டல் கேமராவுக்கு அதிகமாக மாறியவுடன் பிறந்தநாள், காதுகுத்து, சடங்கு, திருமணம் என்று பலவற்றிற்கும் சினிமா போஸ்டர்களைத் தாண்டி கலக்கலான போஸ் கொடுத்து பேனர் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது கட்அவுட், கையால் எழுதிய பேனர் கலாச்சாரம்போய் முற்றிலும் டிஜிட்டல் பேனர்கள் ஆதிக்கம் அதிகரித்ததால் மீண்டும் திரைப்பட ரிலீஸ் திருவிழா போல் மாறியுள்ளது.



ஒவ்வொரு மனிதருக்கும் தான் தலைவனாக மதிக்கப்படவேண்டும் என்ற ஆசையை ஆழ்மனதிலேயே இருக்கும்போல தெரிகிறது. இப்போது சசிகுமாரின் ரசிகர் மன்றத்தினர் சசிகுமார் படத்துடன் தங்கள் படத்தையும் போட்டு 40 அடி உயரத்தில் பேனர், தியேட்டர் வாசலில் வாழைமரம் என்று தியேட்டரை திருவிழா நடைபெறும் இடமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தியேட்டருக்கு எதிரில் என் அலுவலகம் இருப்பதால் இதெல்லாம் கண்ணில் படுகிறது.

--------------------------

எதிரி இல்லன்னா வாழலாம். ஆனா வளரமுடியாது. எதிரியை அழிக்க நினைக்க கூடாது. ஜெயிக்க நினைக்கணும் என்று சுந்தரபாண்டியன் படத்தில் வரும் சில வசனங்களுடன் சசிகுமார் படத்திற்கு எதிரே விதவிதமாக ரசிகர்மன்றத்தினரும் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.



படிக்கிற புத்தகத்துலேயும் சரி, பார்க்குற சினிமாவுலேயும் சரி நல்ல பிகர் எல்லாம் சில்லரைப்பசங்களையேத்தான் லவ் பண்றாளுங்க என்று ஒருவன் அலுத்துக்கொள்ளும் வசனம்தான் இப்போது குட்டிப்புலி டீசரில் ஓடிக்கொண்டிருக்கிறது.



அங்காடித்தெரு மகேஷ் மாதிரி பையனும் ஹன்சிகா மாதிரி பொண்ணும் ஜோடியா போனதைப் பார்த்து இது ரெண்டு எட்டா அமைப்பா இருக்குமோன்னு ஒருத்தர் சொன்னார். எனக்கு விபரம் புரியலை. அவர்கிட்ட சந்தேகத்தை கேட்டுட்டோம். அதுக்கு அவர், பையன் பொண்ணு ஜாதகத்துல ரெண்டாமிடம், எட்டாமிடத்து அமைப்பை வைத்து ஒரு கணக்கு இருக்கு. அப்படி இருந்தாதான் எதிர்எதிர் துருவம் ஈர்க்கும்னுங்குற விதிப்படி எதிரும் புதிருமான ஆணும் பெண்ணும் வாழ்க்கையில இணைவாங்கன்னு சொன்னார். அந்த விளக்கத்தை நான் இங்க எழுதி வில்லங்கமாவே பேசுற ஒருசிலர்கிட்ட மாட்டிக்க விரும்பலை.

-----------------------------------------------

எதாச்சும் உருப்படியா எழுதலாம்னா ரெண்டு பிரபல பத்திரிகை செஞ்ச காரியத்தால பத்திரிகைக்கு எழுதுறதை சுத்தமா நிறுத்திடலாமான்னு தோணுது. ஒரு பிரபல வார இதழ்ல இருந்து ஆயிரக்கணக்குல எனக்கு வரவேண்டிய சன்மானத்தை தராம ஏமாத்துனதால இப்போ அந்த இதழுக்கு எதுவுமே எழுதுறது இல்லை.



நான் யோக்கியன்டான்னு சுயதம்பட்டம் அடிச்சுக்குற ரெண்டு பத்திரிகையில இருந்து என்னைப்பொறுத்தவரை ஒரு நல்ல தொகை வரவேண்டியதை இன்னும் அனுப்பலை. நானும் எழுத்துப்பூர்வமா கடிதம் எழுதிப்பார்த்துட்டேன். மெயில் அனுப்பியும் பார்த்துட்டேன். நோ ரெஸ்பான்ஸ், போன்ல பேசவேண்டியதுதானேன்னு கேட்பீங்க. ஒரு பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்குறதா இருந்தா மட்டும்தான் போன்ல உங்களுக்கு மரியாதை கிடைக்கும். இல்லன்னா ஆபீஸ்ல உள்ள அத்தனை பேர்கிட்டயும் உங்க போன் கனெக்சனை கொடுத்து நீங்க சொல்ல வந்த விசயத்தையே மறக்க வெச்சு போன் பேலன்ஸ்ல ஒரு 100 ரூபாயையாவது காலிபண்ணிடுவாங்க.



இந்த லட்சணத்துல ஒரு குறிப்பிட்ட கட்டுரையை பிரசுரம் செய்யுறதுக்கு முதல் வாரம் பேசிய அந்த பத்திரிகை துணையாசிரியர் ஒருவர், உங்க எழுத்து நடை நல்லா இருக்கே. நீங்க தொடர்ந்து இதே மாதிரி எழுதலாமேன்னு கேட்டார். நானும் சரின்னு சொன்னேன். இப்போ அதுக்கு என் மைண்ட் வாய்ஸ் என்னன்னு தெரியுமா? நான் கட்டுரை அனுப்பிகிட்டே இருப்பேன் நீங்க கொடுக்க வேண்டிய சன்மானத்தை ஏமாத்திகிட்டே இருப்பீங்க. அப்படித்தானே.!



Image Credit : KollywoodNow

-----------------------------------------------

கடந்த 5 மாதமா என் தொழில் அனுபவத்துல சுத்தி இருக்குறவங்களும் உப தொழில்ல இருக்குறவங்களும் செய்யுறதையும், கொஞ்சம் கூட பொறுப்பில்லாம நடந்துக்குறதையும், நமக்கு நட்டம் ஏற்படுத்துறதையும் பார்க்கும்போது உழைப்பை வெறுக்குற அளவுக்கு வேதனைதான் மிஞ்சுது. (இதை தனிப்பதிவா எழுதுறேன்.) ஆனாலும் எங்கோ தூரத்துல தெரியுற வெளிச்சப்புள்ளியை நம்பி நம்ம கேரக்டரை மாத்திக்காம செயல்பட்டுகிட்டு இருக்கோம்.