Search This Blog

பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சிவகாசி தண்ணீர் அவ்வளவு மோசமா?

அப்படி இப்படி லேபரா இருந்து நானும் தொழிலதிபரா ஆயிட்டேன்னு முன்னாடி ஒரு பதிவுல எழுதியிருந்தேன்னு நினைக்கிறேன்.(ஞாபகமறதி இருந்தாதாதான் பெரிய தொழிலதிபர்னு உன்னைய யார் குழப்பி விட்டதுன்னு கேக்காதீங்கோ.)

போன வாரத்துல தொழில் நிமித்தப்பயணமா (அரசியல்வாதி போனா அது மரியாதை நிமித்தப்பயணம்) மதுரை, சிவகாசிக்கு போனேன். மதுரையில சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்குற நண்பரும் என்னோட சிவகாசிக்கு வந்தார்.

கிளம்பும்போது அவர் வீட்டுல இருந்து 2 லிட்டர் பாட்டில்ல தண்ணீரைக்கொண்டு வரவுமே எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்துச்சு.




"குடிக்கிறதுக்கு கூட மினரல் வாட்டர் வாங்கிடலாம். புழக்கத்துக்கு தண்ணீர் கிடைக்கிறதுதான் கஷ்டம். அந்த ஊர்ல நல்லா மழை பெய்தால்தான் புழங்குற தண்ணிக்கு பஞ்சம் இல்லாம இருக்கும்." அப்படின்னு சாப்ட்வேர் நண்பர் சொன்னது என்னை பெரிய அளவுல பாதிக்கலை. மிஞ்சிப்போனா அந்த ஊர்ல நாலு மணி நேரம் இருக்கப்போறோம். அதுக்குப் போய் இந்த பில்ட்அப்பான்னு நினைச்சேன். காலை டிபன் சாப்பிட்டப்ப ஒரு ஹோட்டல்ல தான் கொஞ்சம் தண்ணி குடிச்சேன். அப்ப எதுவும் தெரியலை.

ஆனா ஊருக்கு போயிட்டு திருவாரூருக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைவலி, ஜூரம்னு படுத்துது.

மதுரை, சிவகாசின்னு போனதுல அந்த தண்ணி ஒத்துக்கலைன்னு நான் சொன்னப்ப இங்க இன்னொரு நண்பர், "தம்பி, அவசரப்பட்டு முடிவெடுத்துடாத...அந்த ஊர்கள்ல நீ குடிச்சது உண்மையிலேயே நல்ல தண்ணியாக்கூட இருக்கலாம். நம்ம ஊரு தண்ணி கெட்டுப்போய் அதை தொடர்ந்து குடிச்சதால உனக்கு நல்ல தண்ணி ஒத்துக்காம கூட இருக்கலாம்." அப்படின்னு சொன்னாரு. இந்த இன்னொரு கோணத்தை கேட்டு நான் மிரண்டு போயிட்டேன்.

செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் மூலமா விளையிற காய்கறிகளை நம்ம உடம்பு ஏத்துக்குதுறது சாத்தியம்னா இதுவும் சாத்தியம்தான் அப்படின்னு தமிழ்ப்படத்துல துப்பறியும் போலீஸ் அதிகாரி சொல்றமாதிரி என்னைய குழப்பிவிட்டுட்டு அந்த நண்பர் போயிட்டார்.

நான்தான் சொல்பேச்சு கேட்காத உடம்போட நாலு நாளா அவஸ்தைப்படுறேன்.

சொந்தக்கதை இருக்கட்டும். தொழில் கதை என்னாச்சுன்னுதானே கேட்குறீங்க...

விசிட்டிங்கார்டு, அதே மாடல்ல 3மடங்கு பெரிய அளவு கார்டு இதுமாதிரியான சில மேட்டர் பிரிண்டிங் செய்ய வேண்டியிருந்தது. இதெல்லாம் பொதுவா 1000 கார்டுக்கு மேல அச்சடிக்க வாடிக்கையாளர்கள் தயங்குவாங்க. ஆனா இதையெல்லாம் சிவகாசி பிரஸ்ல கொடுத்து வாங்க முடியாது.

ஏன்னா குறிப்பிட்ட சில ரகங்களுக்குதான் மினிமம் 5000 எண்ணிக்கையில அச்சடிச்சு தர்றாங்க. அதனால குறைவான எண்ணிக்கை ஆர்டர்களுக்கு எல்லாம் கோயம்புத்தூர்தான் பெஸ்ட் அப்படின்னு சிவகாசியிலேயே பரிந்துரை செய்யுறாங்க.

நான் முக்கியமா போனது கோவில்கள்ல விபூதி பிரசாதம் கொடுக்க பயன்படும் கவர்கள் ஆர்டர் கொடுக்கத்தான். அதை பிரிண்ட் செய்து கட் பண்றது பெரிய வேலை இல்லை. பசை தடவி ஒட்டுறதுதான் பெரிய இம்சை. அந்த ஜாப்புக்குதான் காண்ட்ராக்ட் ஆளுங்க ரொம்ப குறைவா கிடைக்குறாங்க அப்படின்னு ஒரு பிரஸ் அதிபர் சொன்னார்.

தினமலர் நாளிதழ்ல பக்கம் வடிவமைச்சு இருந்தா கூட இது மாதிரி மல்டிகலர் ஜாப் ஒர்க் எடுத்து செய்யணும்னா எந்த அளவுல எந்த எண்ணிக்கையில ஆர்டர் எடுக்கணும். பொதுவா அங்க பயன்படுற பேப்பர் அளவு என்ன? அதுல க்ரிப்பர் ஏரியா, வேஸ்டேஜ் ஏரியா எல்லாம் எவ்வளவுன்னு தெளிவான விவரங்களை சிவகாசிக்கு போனதும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

ஏட்டுப்படிப்பை விட செயல்வழிக்கல்வி எவ்வளவு முக்கியம்னு நான் உணர்ந்துகிட்டேன்.

பள்ளியில் என்னுடன் படிச்ச மூன்று நண்பர்கள் வழக்கறிஞரா பிராக்டீஸ் செய்யுறாங்க. அவங்களோட டைப்பிங் ஒர்க் ரொட்டீனா இருக்கு. அதை மீறி கிடைக்கிற நேரத்துல சில மல்டிகலர் ஆர்டர்கள் எடுத்து செய்துகிட்டு இருக்கேன்.

ஒண்ணு மட்டும் எனக்கு தெளிவா தெரியுதுங்க. இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். அதுக்கு இடைவிடா முயற்சியும் உழைப்பும் ரொம்ப அவசியம். இது எல்லாருக்குமே பொருந்தும்னு நினைச்சு செயல்பட்டா எல்லாம் ஜெயம்தான்.

சனி, 12 மார்ச், 2011

தடுமாறுகிறதா இளையபாரதம்?

அப்துல்கலாம் ஐயா இளைஞர்களை நல்ல விதமா பெரிய லட்சியத்தை அடையணும்னு கனவு கண்டு அதற்கான முயற்சிகள்ல இறங்க சொன்னாங்க. சொல்லிகிட்டும் இருக்காங்க.

ஆனா இளைய தலைமுறையில பொறுப்பில்லாம நடந்துக்குறவங்களோட சதவீதம் அதிகமாகிட்டே வருதோன்னு சந்தேகமா இருக்கு.

ஓரிரு நாட்களுக்கும் முன்பு திருச்சி பகுதியில லஞ்சம் வாங்கி பிடிபட்ட தனி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய ரெண்டு பேரோட போட்டோவும் சில பத்திரிகைகளில் வந்திருந்தது.

அந்த தனி தாசில்தாருக்கு அம்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.(பல பேரோட உடம்பு இதெல்லாம் எனக்கு பிடிக்கலைன்னு அலர்ஜியானாத்தான் டை அடிக்கிறதையே நிறுத்துறாங்க. அதனால வயசை சட்டுன்னு சொல்ல முடியலை.) அந்த ஆள் ஜாலியா ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போறது மாதிரிதான் வர்றாரு. இவய்ங்க என்னத்த, தண்டனை, வாங்கி அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிருக்கலாம்.

ஆனா கூட பிடிபட்ட வி.ஏ.ஓ பொண்ணுக்கு இருபத்து நாலு வயசுதான் ஆகுதாம். லஞ்ச வழக்குல பிடிபட்ட குறைஞ்ச வயசு ஆள் இந்த விஜயலெட்சுமியாத்தான் இருக்கும்னு சொல்றாங்க. (சத்தமா சொல்லாதீங்கப்பா...ஒருத்தர் அதை பாராட்டி அறிக்கை விட்டுட்டு உடனே அதுக்காக தனக்கு பாராட்டு விழா நடத்தணும்னு அடம் பிடிப்பாரு.)

இந்த பொண்ணு பணியில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுதாம். அரசுத்துறையில இருக்குற பல கேடு கெட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்குறதை நியாயப்படுத்தி சொல்ற ஒரே காரணம் என்ன தெரியுமா?

"வேலை வாங்க அல்லது பிரமோஷன் வாங்க லஞ்சம் கொடுத்தேன்."

இந்த பொண்ணு இப்போ தேர்வு எழுதி அதுல வேலை வாங்கினதாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஏன் இந்த பேராசை?

ஆனா இந்தப் பொண்ணு லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொன்னா, இவ எங்க நம்மை எல்லாம் மாட்டி விட்டுடுவாளோ...அதனால இவளை எந்த வம்புலயாவது கோர்த்து விட்டுடணும்னு ஒரு கூட்டம் தயாராயிருக்கும். இதுக்கு பயந்துதான் பலரும் வாங்க ஆரம்பிப்பாங்க. அப்புறம் என்ன புலிவால் புடிச்ச கதைதான்.

பிறகு, அந்த வழக்கம், ஆசையாகி பேராசையாக ரொம்ப காலம் ஆகாது.

என்னைப் பொறுத்தவரை அரசியல்வியாதிகள் கட்சி நடத்தவும் தேர்தலுக்கு செலவழிக்கவும் பெரிய பெரிய பேங்க்கை கொள்ளை அடிச்சாதான் முடியும். அது நடைமுறையில அவ்வளவா சாத்தியமில்லை. அதுதான் மக்கள் சுரண்டப்படுற எல்லா விஷயங்களிலும் இவங்க மையப்புள்ளியா இருக்காங்க.

இப்போ நாகப்பட்டினத்துல ஒரு பெண், கண்டக்டரை தாக்கியதால ரெண்டு மணி நேரம் பேருந்தை இயக்காம வேலை நிறுத்தம் பண்ணியிருக்காங்க.

அந்தப் பெண், எட்டு ரூபாய் டிக்கட்டுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டியிருக்கு. அதுல ஆரம்பிச்சிருக்கும் வில்லங்கம்.

நாகப்பட்டணத்துல இறங்கியதும் மாத்திக்குடுங்கன்னு நடத்துனர் சொல்லியிருக்காரு.

அந்த அம்மாவும் எங்கயோ சில்லறை மாத்தி ஐம்பது ரூபாயை குடுத்துருக்கு. நாற்பது ரூபாயை மட்டும் கொடுத்துட்டு ரெண்டு ரூபாயை தராம போயிருக்காரு. அதை அந்த அம்மா கேட்டதும் தகராறு ஆயிருக்கு.

ரெண்டு ரூபாயை அந்த அம்மா மூஞ்சியில தூக்கி வீசிட்டு அசிங்கமா பேசுனதாலதான் செருப்பால அடிச்சேன்னு அவங்க சொல்றாங்க. கண்டக்டர் வேற எதோ காரணம் சொல்றாரு.

டூட்டியில இருக்குறப்ப அவங்க என்ன செஞ்சாலும் பயணி மேலதான் குற்றம் சுமத்தப்படும்னு ஒரு காரணத்தை வெச்சுகிட்டு இவங்க ஆட்டம் தாங்கலை.

பஸ்சுல இருக்குற ஐம்பது பேருக்கும் 1ரூபா, ரெண்டு ரூபா சில்லரை குடுக்குற சூழ்நிலையில பணம் இல்லைன்னா கஷ்டம்தான். அதை நாகரிகமான வார்த்தையில அழுத்தமா மறுக்க நிறைய கண்டக்டருங்களுக்கு தெரியுறதே இல்லை.

பயணி கிட்ட இருந்து தப்பான வார்த்தை வர்றதுக்கு முன்னாலயே கேவலமான பேச்சு பேசுறதையே நிறைய கண்டக்டர்கள் பிழைப்பா வெச்சுருக்காங்க.

நான் பார்த்த வரை, பயணிகள் கிட்ட நல்லா பேசுற கண்டக்டருங்க கொஞ்சம் கம்மிதான். எரிஞ்சும் விழாம குழையவும் இல்லாம நடந்துக்குறவங்கதான் அதிகம்.

ஆனா இப்போ செருப்படி வாங்குன மாதிரியான கண்டக்டருங்க ரொம்ப பேர் அரசு பஸ் தனக்கே சொந்தம்னுங்குற மாதிரி நடந்துக்குறாங்க. அராஜக அரசியல்வாதிகளோட பிம்பம்தான் இவங்களும்.

பஸ்சுல போகும் சூழ்நிலை வர்றப்ப அப்பாவியான ஆட்கள் பலரும் ஓரளவு சில்லரையோடதான் போறாங்க.

அப்படி இல்லாம வீம்புக்காகவும், குடிச்சுட்டும் பிரச்சனை பண்ற சிலரை கண்டக்டர்கள் கண்டுக்குறதே இல்லை. அவங்க வீரமெல்லாம் அப்பாவிகள் மேலதான்.

என்னத்த சொல்றது?

தடுமாறுகிறதா இளையபாரதம்?

அப்துல்கலாம் ஐயா இளைஞர்களை நல்ல விதமா பெரிய லட்சியத்தை அடையணும்னு கனவு கண்டு அதற்கான முயற்சிகள்ல இறங்க சொன்னாங்க. சொல்லிகிட்டும் இருக்காங்க.

ஆனா இளைய தலைமுறையில பொறுப்பில்லாம நடந்துக்குறவங்களோட சதவீதம் அதிகமாகிட்டே வருதோன்னு சந்தேகமா இருக்கு.

ஓரிரு நாட்களுக்கும் முன்பு திருச்சி பகுதியில லஞ்சம் வாங்கி பிடிபட்ட தனி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய ரெண்டு பேரோட போட்டோவும் சில பத்திரிகைகளில் வந்திருந்தது.

அந்த தனி தாசில்தாருக்கு அம்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.(பல பேரோட உடம்பு இதெல்லாம் எனக்கு பிடிக்கலைன்னு அலர்ஜியானாத்தான் டை அடிக்கிறதையே நிறுத்துறாங்க. அதனால வயசை சட்டுன்னு சொல்ல முடியலை.) அந்த ஆள் ஜாலியா ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போறது மாதிரிதான் வர்றாரு. இவய்ங்க என்னத்த, தண்டனை, வாங்கி அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிருக்கலாம்.

ஆனா கூட பிடிபட்ட வி.ஏ.ஓ பொண்ணுக்கு இருபத்து நாலு வயசுதான் ஆகுதாம். லஞ்ச வழக்குல பிடிபட்ட குறைஞ்ச வயசு ஆள் இந்த விஜயலெட்சுமியாத்தான் இருக்கும்னு சொல்றாங்க. (சத்தமா சொல்லாதீங்கப்பா...ஒருத்தர் அதை பாராட்டி அறிக்கை விட்டுட்டு உடனே அதுக்காக தனக்கு பாராட்டு விழா நடத்தணும்னு அடம் பிடிப்பாரு.)

இந்த பொண்ணு பணியில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுதாம். அரசுத்துறையில இருக்குற பல கேடு கெட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்குறதை நியாயப்படுத்தி சொல்ற ஒரே காரணம் என்ன தெரியுமா?

"வேலை வாங்க அல்லது பிரமோஷன் வாங்க லஞ்சம் கொடுத்தேன்."

இந்த பொண்ணு இப்போ தேர்வு எழுதி அதுல வேலை வாங்கினதாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஏன் இந்த பேராசை?

ஆனா இந்தப் பொண்ணு லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொன்னா, இவ எங்க நம்மை எல்லாம் மாட்டி விட்டுடுவாளோ...அதனால இவளை எந்த வம்புலயாவது கோர்த்து விட்டுடணும்னு ஒரு கூட்டம் தயாராயிருக்கும். இதுக்கு பயந்துதான் பலரும் வாங்க ஆரம்பிப்பாங்க. அப்புறம் என்ன புலிவால் புடிச்ச கதைதான்.

பிறகு, அந்த வழக்கம், ஆசையாகி பேராசையாக ரொம்ப காலம் ஆகாது.

என்னைப் பொறுத்தவரை அரசியல்வியாதிகள் கட்சி நடத்தவும் தேர்தலுக்கு செலவழிக்கவும் பெரிய பெரிய பேங்க்கை கொள்ளை அடிச்சாதான் முடியும். அது நடைமுறையில அவ்வளவா சாத்தியமில்லை. அதுதான் மக்கள் சுரண்டப்படுற எல்லா விஷயங்களிலும் இவங்க மையப்புள்ளியா இருக்காங்க.

இப்போ நாகப்பட்டினத்துல ஒரு பெண், கண்டக்டரை தாக்கியதால ரெண்டு மணி நேரம் பேருந்தை இயக்காம வேலை நிறுத்தம் பண்ணியிருக்காங்க.

அந்தப் பெண், எட்டு ரூபாய் டிக்கட்டுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டியிருக்கு. அதுல ஆரம்பிச்சிருக்கும் வில்லங்கம்.

நாகப்பட்டணத்துல இறங்கியதும் மாத்திக்குடுங்கன்னு நடத்துனர் சொல்லியிருக்காரு.

அந்த அம்மாவும் எங்கயோ சில்லறை மாத்தி ஐம்பது ரூபாயை குடுத்துருக்கு. நாற்பது ரூபாயை மட்டும் கொடுத்துட்டு ரெண்டு ரூபாயை தராம போயிருக்காரு. அதை அந்த அம்மா கேட்டதும் தகராறு ஆயிருக்கு.

ரெண்டு ரூபாயை அந்த அம்மா மூஞ்சியில தூக்கி வீசிட்டு அசிங்கமா பேசுனதாலதான் செருப்பால அடிச்சேன்னு அவங்க சொல்றாங்க. கண்டக்டர் வேற எதோ காரணம் சொல்றாரு.

டூட்டியில இருக்குறப்ப அவங்க என்ன செஞ்சாலும் பயணி மேலதான் குற்றம் சுமத்தப்படும்னு ஒரு காரணத்தை வெச்சுகிட்டு இவங்க ஆட்டம் தாங்கலை.

பஸ்சுல இருக்குற ஐம்பது பேருக்கும் 1ரூபா, ரெண்டு ரூபா சில்லரை குடுக்குற சூழ்நிலையில பணம் இல்லைன்னா கஷ்டம்தான். அதை நாகரிகமான வார்த்தையில அழுத்தமா மறுக்க நிறைய கண்டக்டருங்களுக்கு தெரியுறதே இல்லை.

பயணி கிட்ட இருந்து தப்பான வார்த்தை வர்றதுக்கு முன்னாலயே கேவலமான பேச்சு பேசுறதையே நிறைய கண்டக்டர்கள் பிழைப்பா வெச்சுருக்காங்க.

நான் பார்த்த வரை, பயணிகள் கிட்ட நல்லா பேசுற கண்டக்டருங்க கொஞ்சம் கம்மிதான். எரிஞ்சும் விழாம குழையவும் இல்லாம நடந்துக்குறவங்கதான் அதிகம்.

ஆனா இப்போ செருப்படி வாங்குன மாதிரியான கண்டக்டருங்க ரொம்ப பேர் அரசு பஸ் தனக்கே சொந்தம்னுங்குற மாதிரி நடந்துக்குறாங்க. அராஜக அரசியல்வாதிகளோட பிம்பம்தான் இவங்களும்.

பஸ்சுல போகும் சூழ்நிலை வர்றப்ப அப்பாவியான ஆட்கள் பலரும் ஓரளவு சில்லரையோடதான் போறாங்க.

அப்படி இல்லாம வீம்புக்காகவும், குடிச்சுட்டும் பிரச்சனை பண்ற சிலரை கண்டக்டர்கள் கண்டுக்குறதே இல்லை. அவங்க வீரமெல்லாம் அப்பாவிகள் மேலதான்.

என்னத்த சொல்றது?