Search This Blog

மர்பி விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மர்பி விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஏப்ரல், 2012

என்ன கொடுமை சரவணன் ?-7


எனக்கு மட்டும் ஏன்இப்படி? - இந்த கேள்வி உங்களில்பலருக்கும் வெவ்வேறுசூழ்நிலைகளில் உங்கள்மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள்இருக்கின்றன. இதில்600வது தேறும். அந்த விதிகளைபடித்தால் இதைஎல்லாம் டேக்இட் ஈஸிஎன்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம்கெடாமல் இருக்கபழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான்எனக்கு தெரியுமே. புதுசா சொல்லவந்துட்டியாக்கும் அப்படின்னுசண்டை போடப்பிடாது. இந்த விதிகள்எல்லாம் நெட்டுலஇருந்து ஒருபுண்ணியவான் எனக்குஅனுப்பினது. உண்மையைசொல்லி நான்முதல்லேயே சரண்டர்ஆயிட்டேன்.
 
மர்பி விதிகள்

36. நமது நண்பர்கள் ஏதேனும் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த உடன் நமது நண்பர்கள் என்னும் பதவியில் இருந்து இறங்கி விடுவார்கள்.
37. காரின் விலையும், ஓட்டுநரின் நிதானமின்மையும் நேர்விகிதத்திலேயே இருக்கும்.
38. நம்மை விட குறைவான வேகத்தில் ஓட்டும் அனைவரையும் முட்டாள்கள் என நினைப்போம்.
39. நம்மை விட அதிகமான வேகத்தில் ஓட்டும் அனைவரும் நிதானம் தெரியாதவர்கள் என நினைப்போம்.
40. உங்களுக்கு பிடித்த திரைப்பாடல் பேருந்து வானொலியில் பாட ஆரம்பிக்கும்போது நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடம் வந்து விடும்.
-விதிகள் தொடரும்...

சனி, 24 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-6

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்,

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.


மர்பி விதிகள்

26. யார் தயங்குகிறார்களா அவர்கள கடைசி.
27. பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி அதை இழக்காமல் இருப்பதில் இருக்கிறது.
28. ஆலோசகர் என்பவர் உங்களிடமே தகவல்கள வாங்கி உங்களுக்கே திருப்பித் தருபவர் ஆவார்.
29.பணம் சாணத்தைப் போன்றது. அதை கலந்து தெளித்துவிட்டால் நல்ல மருந்தாகும். ஆனால் ஒரே இடத்தில் தேக்கி வைத்துவிட்டால் இடமே நாசமாகி விடும்.
30. ஒன்று சிகரத்தில் இருக்க வேண்டும். அல்லது அதல பாதாளத்தில் இருக்க வேண்டும். பாதியில் இருந்தால் கஷ்டம்தான் எப்போதும்.

-விதிகள் தொடரும்...

வெள்ளி, 23 மார்ச், 2012

திருவாரூர் பாபு இயக்கிய கந்தா படத்துக்கு திருவாரூர் சரவணனின் வாழ்த்துக்கள்!

நூற்றுக்கணக்கான சிறுகதைகள், பல குறு நாவல்கள் எழுதிய எழுத்தாளர் திருவாரூர் பாபு. இவரது தந்தை வைத்திருந்த தட்டச்சுப் பயிலகத்தில் அப்போதே கதைகளை தட்டச்சு செய்து தான் அனுப்புவாராம். இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளுக்கு தட்டச்சு செய்து அனுப்புவது எல்லாம் எல்லோராலும் முடியாத காரியம்.


தட்டச்சு செய்வதில் ஒரு சௌகர்யம். கையால் எழுதினால் 15 பக்கம் வரும் சிறுகதை தட்டச்சில் 3 பக்கத்தை தாண்டினால் அதிகம். அப்போது படிப்பவருக்கும் மலைப்பு தெரியாது. அந்த மூன்று பக்க சிறுகதையையும் அலுப்பு தட்டாமல் சொல்லும் உத்தி தெரிய வேண்டும்.

இதை எல்லாம் சரியாகச் செய்ததால்தான் திருவாரூர் பாபுவால் நூற்றுக்கணக்கில் சிறுகதைகளை எழுத முடிந்தது. தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்த இவர் பின்பு இயக்குனர் கே.வி.சரவணன் - அதாங்க அஜீத்தின் அமர்க்களம், அட்டகாசம் ஆகிய படங்களை இயக்கிய சரணிடம் ஜே.ஜே.,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் திருவாரூர் பாபு.

இன்று அவர் இயக்கிய "கந்தா" திரைப்படம் ரிலீசாகிறது. ஒரே ஊர்க்காரர் என்ற பாசத்தினால் மட்டும் இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரது சிறுகதைகளிலேயே நிறைய சமூக அக்கறை காணப்படும். படத்தின் கருவும் ஒரு நல்ல ஆசிரியரும், மாணவனும் சம்மந்தப்பட்ட கதை என்று கூறி இருக்கிறார். அந்த நம்பிக்கையுடன் படத்துக்காக காத்திருக்கிறேன்.

என்ன கொடுமை சரவணன் ?-5

மர்பி விதிகள்

21.மேலாளரைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது என்று  எதுவுமே கிடையாது அவர் செய்து பார்க்கும் வரை.
22. நீங்கள் உங்கள் வாகனத்தை கழுவி முடித்ததும் மழை வந்து இன்னும் நன்றாக கழுவி விடும்.
23. மக்களை ஒரு விஷயத்தை நம்ப வைக்க வேண்டும் என்றால் அதை கிசுகிசுப்பாக சொன்னால் போதும்.
24.பொதுமக்கள் யாரென்றால் செய்தித்தாள்களில் பெயர் இடம்பெறாதவர்களே ஆவார்கள்.
25.நீங்கள் ஒரு வேலையை சரியாக செய்து கொண்டிருந்தால் அது யார் கண்ணிலும் படாது.
விதிகள் தொடரும்...

வியாழன், 8 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-3


எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.
 
மர்பி விதிகள்
11. நீங்கள் எவ்வளவு அலைந்து கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் மலிவாக இன்னொரு இடத்தில் கிடைத்தே தீரும். அது உங்கள் மனைவியின் கண்களில் தான் முதலில் படும்.
12. ஒரு பொருள் சிறந்ததாக இருந்தால் அதை தயாரிப்பதையே நிறுத்தியிருப்பார்கள்.
13. ஒரு படகோட்டியை நதியைக் கடக்கும் வரை திட்டக்கூடாது.
14. இயந்திரங்கள் என்றால் வேலை செய்ய வேண்டும். மனிதர்கள் என்றால் சிந்தனை செய்ய வேண்டும். பெரும்பாலும் இரண்டுமே நடப்பதில்லை.
15. அடுத்தவரின் செலவு எப்போதும் ஊதாரித்தனமாகவும் தேவையில்லாததாகவும் இருக்கும்.

-விதிகள் தொடரும்...