Search This Blog

வியாழன், 17 நவம்பர், 2011

பஸ் கட்டணம், பால் கட்டணம் உயர்வு - ஆப்பு ஆரம்பம்.

 எந்த ஒரு விலை உயர்வு அறிவித்தாலும் ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டம், பேரணி அப்படின்னு அமர்க்களப்படுத்தும். உண்மையில் இந்த விலை வாசி உயர்வை சுமக்கப்போறவன் கத்த கூட தெம்பில்லாம நசுங்கிப்போய் கிடப்பான்.

அரசாங்க பதிவேடுகளை பேப்பர்ல மட்டுமே பராமரிச்சுகிட்டு இருந்த காலத்துல தொட்டதுக்கும் சென்னைக்கே மொத்த தமிழகமும் ஓடி வரவேண்டி இருந்துச்சு. இப்போ ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்படி இப்படின்னு ஓரளவு நிலைமை பரவாயில்லை.

ஒரு மாணவன் அதிகபட்சம் 5 முதல் 15 நிமிஷத்துக்குள்ள நடந்தே அவனோட பள்ளிக்கூடத்துக்கு போற மாதிரி அருகாமையில இருக்குற பள்ளிகளோட தரத்தை உயர்த்தி ஆசிரியர்களை போதுமான எண்ணிக்கையில நியமிக்கிற வேலையை எந்த அரசு வந்தாலும் செய்யப்போறதே இல்லைன்னுதான் தோணுது.

இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் பார்த்து பார்த்து எரிபொருள் சேமிப்புக்கான நீண்ட கால திட்டத்தை அமல்படுத்துறதை விட்டுட்டு நடுத்தர மக்களை சுரண்டக்கூடிய நடவடிக்கைகளை மட்டும் அயல் நாடுகள் கிட்ட இருந்து நம்ம அரசுகள் எப்படித்தான் கத்துக்குதோ தெரியலை.

ஐநூறு ரூபாய்க்கு கூட வேலை பார்க்காம அம்பதாயிரம் சம்பாதிக்கிற அல்லது சம்பளம் வாங்குறவங்களைப் பத்தி கவலை இல்லை. கட்டிடத் தொழிலாளி மாதிரி சில வகை தொழில் செய்யுற லேபர்களும் விலைவாசி உயர்வைக்காரணம் காட்டி கூலியை உயர்த்திடுவாங்க.

இதுல வீணாப்போய் நசுங்குறது வறட்டு கவுரவம் பார்த்து வாழ வேண்டியிருக்குற நடுத்தர வர்க்க அப்பாவிகள்தான். அவங்க ஏன் கவுரவம் பார்க்கணும்னு சிலர் கேட்கக்கூடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படிச்சதா ஒரு சர்டிபிகேட்டோட இருக்குறவங்கதான் வெடிச்சுகிட்டு வர்ற விலைவாசியோட வேகத்துக்கு சம்பளம் அதிகரிக்காத இடத்துல மாட்டிகிட்டு அவதிப்படுறாங்க.

இதையெல்லாம் பார்த்தா முடியுமா?...விலைவாசி உயர்வுக்கு தகுந்த மாதிரி சம்பாதிக்க கத்துக்கணும்னு அறிவுரைக்கெல்லாம் பஞ்சமே இருக்காது.

இப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை வறுமையான சூழ்நிலையிலேயே வெச்சிருக்குறதன் வெளிப்பாடுதான் அரசுப்பள்ளிகள் நிறைய தடுமாறுவதும், கல்வித்தந்தைகள் நிறைய உருவாவதும்.

அரசு ஊழியர்களில் சில பணியிடங்களுக்கு ஆட்சியாளர்கள் மிக அதிக அளவு சம்பளத்தை ஏற்றி விட்டதே அந்த பணி நியமனத்திற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகத்தான் என்று ஒருவர் சொன்னார். இது உண்மையாங்க?

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

யாரைத்தான் நம்புவதோ...





எதோ ஒரு பத்திரிகையில் தேமுதிக-கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைவரும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்கள்.



சிங்கம்னா சிங்கிளாத்தான் வரும் என்ற ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் வசனத்தை வைத்து தமிழக கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அந்த கார்ட்டூன் ரசிக்கத்தக்கதாக இருந்தது.



எம்.எல்.ஏ , எம்.பி தேர்தல் எல்லாம் எப்படியோ...இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத தொலைவில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது ரொம்பவும் கஷ்டம்.



பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்க தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மக்கள் சுலபமாக ஒதுக்கிவிடுவார்கள்.



நாங்கள் குடியிருக்கும் வார்டில் முக்கியமாக 4 கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். ஒருவர் என் பள்ளித்தோழன், மற்றொருவர் அருகில் குடியிருப்பவர். ஒவ்வொருவருமே என்னை பிரச்சாரத்துக்கு அழைத்தார்கள்.



நான் என்னுடைய வேலைப்பளுவை காரணம் காட்டி மறுத்துவிட்டேன். நான் வாக்களிக்கப்போவது யாருக்கு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் யாருடனாவது பிரச்சாரத்துக்கு சென்றால் நான் அவருக்குத்தான் வாக்களித்தேன் என்று (அவருக்கு வோட்டு போடவில்லை என்றாலும் ) மற்றவர்கள் நம்பி விடுவார்கள்.



ஏன் இந்தவம்பு?



புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்காக எங்கள் தெருவில் மட்டும் தோண்டிக்கொண்டே இருக்கும் வேலையை அடுத்த 5 வருஷத்துக்குள்ளாவது முடியுங்கள் என்று மனு கொடுப்பேன். வேற என்ன செய்யுறது.


யாரைத்தான் நம்புவதோ...

எதோ ஒரு பத்திரிகையில் தேமுதிக-கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைவரும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்கள்.

சிங்கம்னா சிங்கிளாத்தான் வரும் என்ற ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் வசனத்தை வைத்து தமிழக கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அந்த கார்ட்டூன் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

எம்.எல்.ஏ , எம்.பி தேர்தல் எல்லாம் எப்படியோ...இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத தொலைவில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது ரொம்பவும் கஷ்டம்.

பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்க தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மக்கள் சுலபமாக ஒதுக்கிவிடுவார்கள்.

நாங்கள் குடியிருக்கும் வார்டில் முக்கியமாக 4 கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். ஒருவர் என் பள்ளித்தோழன், மற்றொருவர் அருகில் குடியிருப்பவர். ஒவ்வொருவருமே என்னை பிரச்சாரத்துக்கு அழைத்தார்கள்.

நான் என்னுடைய வேலைப்பளுவை காரணம் காட்டி மறுத்துவிட்டேன். நான் வாக்களிக்கப்போவது யாருக்கு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் யாருடனாவது பிரச்சாரத்துக்கு சென்றால் நான் அவருக்குத்தான் வாக்களித்தேன் என்று (அவருக்கு வோட்டு போடவில்லை என்றாலும் ) மற்றவர்கள் நம்பி விடுவார்கள்.

ஏன் இந்தவம்பு?

புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்காக எங்கள் தெருவில் மட்டும் தோண்டிக்கொண்டே இருக்கும் வேலையை அடுத்த 5 வருஷத்துக்குள்ளாவது முடியுங்கள் என்று மனு கொடுப்பேன். வேற என்ன செய்யுறது.

சனி, 10 செப்டம்பர், 2011

கேபிள் குழப்பங்கள்






மீண்டும் அரசு கேபிள் கார்ப்பொரேஷன் என்று தொடங்கிய நாள் முதல் சில கட்டண சேனல்கள் தெரியவில்லையாம்.






அது என்ன "யாம்?"...உனக்கு தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாங்க...எனக்கு நேரடியா இந்த செய்தி தெரியாது. ஏன்னா...எங்க வீட்டுல கேபிள் கனெக்சனை துண்டித்து மூன்று ஆண்டுகள் இருக்கும்.



மாதத்திற்கு நூற்று ஐம்பது ரூபாய் என்பது மிகவும் அதிகமாக எங்களுக்கு தோன்றியது. அதனால் DTH வைத்துவிட்டோம். நாங்கள் வைத்திருப்பதற்கு மாத சந்தா கிடையாது. கருவிகள் வாங்கியது மற்றும் பொருத்துதல் செலவு மட்டுமே.



ஆனால் தெரிந்த தமிழ் சேனல்கள் என்றால் கலைஞர், பொதிகை, ஜீ தமிழ், மெகா ஆகியவைதான். (மக்கள் தொலைக்காட்சி சில காலம் இந்த இணைப்பில் தெரிந்தது. பிறகு கிடையாது.)



இந்த மூன்றாண்டுகளில் பிரபல சில சேனல்களைப் பார்க்காமல் நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம். அது தான் ஏன் என்று புரியவில்லை. ஒரு சில நாளிதழ்களில் சில பே(ய்) சேனல்கள் தெரியாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என்று எழுதுகிறார்கள்.



5 கோடி செலவு செய்து போட்ட ரோட்டுக்கு ஐநூறு கோடியைத்தாண்டியும் வசூல் செய்துகொண்டிருப்பதை எதிர்த்துக் கேள்வி கேட்க யாருக்கும் வாய் வருவதில்லை. தன்னுடைய ...........த்தில் யாராவது சூடு வைத்தால்தான் மக்களுக்கு கோபம் வருமோ என்னவோ...



சில சேனல்களில் ஒளிபரப்பாகும் கேடுகெட்ட சீரியல்களைப் பார்த்த ஒரு தாய், மகனுக்கு பெண் பார்க்கும் முன்பே, வரும் மருமகள் எப்படி எல்லாம் சண்டை வளர்ப்பாள், அதை நான் எப்படி சமாளிக்கப்போகிறேன் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிற நிஜக் கதையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.



சீரியல் வரும் காலத்துக்கு முன்பு மாமியார், மருமகள் சண்டை இல்லையா என்று கேட்கலாம். துணியை கொடியில் இருந்து இழுத்ததுமே வரவில்லை என்பது போன்ற அற்பக்காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து, பொய் வரதட்சணைக்கொடுமை புகார் என்ற அளவுக்கு பிரச்சனைகளை வீதிக்கு இழுத்து வர முக்கிய காரணகர்த்தா இந்த சீரியல்கள்தான்.



அந்த கொடுமைகள் இருக்கட்டும். என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்றுதான். கேபிள் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கிறோம் என்று இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.



ரயிலில் ஏ/சி கோச்சும் உண்டு. 64 பேர் அமரக்கூடிய பெட்டியில் 600 பேரை திணிக்கும் பொது பெட்டியும் உண்டு.



ஒரு காப்பிக்கு 1000 ரூபாய் விலை சொல்லும் 5 நட்சத்திர ஹோட்டலும் உண்டு, 5 இட்லியை 15 ரூபாய்க்கு தரும் கையேந்திபவனும் உண்டு.



1000 ரூபாயிலும் செல்போன் உண்டு. லட்ச ரூபாயிலும் உண்டு. கேபிளில் மட்டும் ஏன் இந்த முற்றுரிமை?...



கட்டண சேனல்களை இணைத்து 150 ரூபாய் கட்டணத்தில் ஒரு விதமாகவும், இலவச சேனல்களை மட்டும் வைத்து 70 ரூபாயில் மற்றொரு முறை என்று இரண்டு வித இணைப்புக்களையும் கொடுத்தால் பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.



சென்னையில் செட் ஆப் பாக்ஸ் இருந்தால் தான் கட்டண சேனல்கள் என்ற நிலை வந்ததும் பலர் 100 ரூபாய்க்கு கிடைக்கும் இலவச சேனல்கள் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். விளம்பர வருவாயில் பெரிய துண்டு விழுந்தது. இதை எதிர்பார்க்காத ஒரு கட்டண சேனல் குழுமம் (ஒரு இணைப்புக்கு நாலு கட்டணசேனலுக்கு மட்டும் தற்போது 46 ரூபாய் கேட்பதாக சொல்லுகிறார்கள்.) சென்னையில் மட்டும் அந்த சேனல்களை இலவசமாக வழங்கியது.



மூன்று மாதங்களுக்கு அந்த சேனல்களை பார்க்கவில்லை என்றால் மக்கள் அந்த சேனல் நிகழ்ச்சிகளை மறந்து விடுவார்கள். அதே சமயம் விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றை மிக குறைந்த விலைக்கோ, அல்லது இலவசமாகவோ அந்த நிறுவனமே வழங்க வாய்ப்பு உண்டு.



அப்படியும் இல்லை என்றால் கட்டண சேனல்களில் விளம்பரமே இருக்கக்கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டால் எல்லாரும் வழிக்கு வருவார்கள்.



என்னைப்போன்ற எவ்வளவோ பேர்கள் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் விளம்பரம் போடும் சேனலுக்கெல்லாம் பணம் கொடுத்து பார்க்கத்தேவையில்லை என்று நினைப்பார்கள். நாங்கள் பார்க்க இலவச சேனல்கள் மட்டும் கொண்ட 70 ரூபாய் இணைப்பையும் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு 150 ரூபாயில் கட்டண சேனல்களையும் கொண்டு தனி இணைப்பும் வழங்கினால் நல்லது.





கேபிள் ஆப்ரேட்டர்களும், சேனல் உரிமையாளர்களுக்கும் ஒத்துப்போகாததற்கு ஒரு முக்கிய காரணம், எத்தனை இணைப்பு என்பதை யாரும் உறுதியாக சொல்லமுடிவதில்லை என்பதும்தான்.



மின் கட்டணத்தைப்போல் கேபிள் கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்தும் வசதி கொண்டுவந்துவிட்டால் கறுப்பு இணைப்புக்கு வேலை இருக்காது. ஆனால் இப்படி வசூல் செய்யும்போது அரசின் பங்கும், கேபிள் ஆப்ரேட்டர்கள் பங்கும் அவரவர் வங்கிக்கணக்கில் சேருமாறு புரோகிராம் செட் செய்துவிட்டால் பிறகு அந்த தொகைக்காக கேபிள் ஆப்ரேட்டர்கள் பொதுமக்களிடமோ, அதிகாரிகளிடமோ அலைய வேலை இருக்காது.



மின் கட்டணம் போன்று கேபிள் கட்டணமும் குறிப்பிட்ட தேதியில் கட்டப்படவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற நிலை இருந்தால் எல்லாரும் பணத்தை ஒழுங்காக கட்டுவார்கள்.



எல்லா இணைப்பும் கணக்கில் வந்துவிட்டால் சேனல் உரிமையாளர்கள் அநியாய வசூல் வேட்டை நடத்த நினைப்பதும் குறையும். பணம் வசூல் செய்ய அலையும் நேரம் மிச்சமானால் சேனல்கள் சரியாக தெரியவில்லை என்ற புகாரை கேபிள் ஆப்ரேட்டர்கள் சரியாக கவனிக்காமல் விடும் அபாயமும் உண்டு.



இதையும் ஒரு முறையில் கட்டுப்படுத்தலாம்.



சேனல்களுக்கான சிக்னல்கள் சரியாக வருகிற பட்சத்தில் கேபிள் ஆப்ரேட்டர் தன் பொறுப்பில் ஒரு நல்ல டிவியை வாடிக்கையாளர் வீட்டில் போட்டுக் காண்பித்து சேனல்கள் சரியாக தெரிவதை உறுதிப்படுத்தலாம். இந்த முறையில் வாடிக்கையாளரின் தொலைக்காட்சியில் கோளாறா...கேபிள் இணைப்பில் கோளாறா என்பதும் தெரிந்து விடும்.



பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் ஆயிரம் வழி உண்டு. அதை வேண்டுமென்றே சிலர் புகைய விடுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.


கேபிள் குழப்பங்கள்


மீண்டும் அரசு கேபிள் கார்ப்பொரேஷன் என்று தொடங்கிய நாள் முதல் சில கட்டண சேனல்கள் தெரியவில்லையாம்.

அது என்ன "யாம்?"...உனக்கு தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாங்க...எனக்கு நேரடியா இந்த செய்தி தெரியாது. ஏன்னா...எங்க வீட்டுல கேபிள் கனெக்சனை துண்டித்து மூன்று ஆண்டுகள் இருக்கும்.

மாதத்திற்கு நூற்று ஐம்பது ரூபாய் என்பது மிகவும் அதிகமாக எங்களுக்கு தோன்றியது. அதனால் DTH வைத்துவிட்டோம். நாங்கள் வைத்திருப்பதற்கு மாத சந்தா கிடையாது. கருவிகள் வாங்கியது மற்றும் பொருத்துதல் செலவு மட்டுமே.

ஆனால் தெரிந்த தமிழ் சேனல்கள் என்றால் கலைஞர், பொதிகை, ஜீ தமிழ், மெகா ஆகியவைதான். (மக்கள் தொலைக்காட்சி சில காலம் இந்த இணைப்பில் தெரிந்தது. பிறகு கிடையாது.)

இந்த மூன்றாண்டுகளில் பிரபல சில சேனல்களைப் பார்க்காமல் நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம். அது தான் ஏன் என்று புரியவில்லை. ஒரு சில நாளிதழ்களில் சில பே(ய்) சேனல்கள் தெரியாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என்று எழுதுகிறார்கள்.

5 கோடி செலவு செய்து போட்ட ரோட்டுக்கு ஐநூறு கோடியைத்தாண்டியும் வசூல் செய்துகொண்டிருப்பதை எதிர்த்துக் கேள்வி கேட்க யாருக்கும் வாய் வருவதில்லை. தன்னுடைய ...........த்தில் யாராவது சூடு வைத்தால்தான் மக்களுக்கு கோபம் வருமோ என்னவோ...

சில சேனல்களில் ஒளிபரப்பாகும் கேடுகெட்ட சீரியல்களைப் பார்த்த ஒரு தாய், மகனுக்கு பெண் பார்க்கும் முன்பே, வரும் மருமகள் எப்படி எல்லாம் சண்டை வளர்ப்பாள், அதை நான் எப்படி சமாளிக்கப்போகிறேன் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிற நிஜக் கதையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சீரியல் வரும் காலத்துக்கு முன்பு மாமியார், மருமகள் சண்டை இல்லையா என்று கேட்கலாம். துணியை கொடியில் இருந்து இழுத்ததுமே வரவில்லை என்பது போன்ற அற்பக்காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து, பொய் வரதட்சணைக்கொடுமை புகார் என்ற அளவுக்கு பிரச்சனைகளை வீதிக்கு இழுத்து வர முக்கிய காரணகர்த்தா இந்த சீரியல்கள்தான்.

அந்த கொடுமைகள் இருக்கட்டும். என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்றுதான். கேபிள் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கிறோம் என்று இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.

ரயிலில் ஏ/சி கோச்சும் உண்டு. 64 பேர் அமரக்கூடிய பெட்டியில் 600 பேரை திணிக்கும் பொது பெட்டியும் உண்டு.

ஒரு காப்பிக்கு 1000 ரூபாய் விலை சொல்லும் 5 நட்சத்திர ஹோட்டலும் உண்டு, 5 இட்லியை 15 ரூபாய்க்கு தரும் கையேந்திபவனும் உண்டு.

1000 ரூபாயிலும் செல்போன் உண்டு. லட்ச ரூபாயிலும் உண்டு. கேபிளில் மட்டும் ஏன் இந்த முற்றுரிமை?...

கட்டண சேனல்களை இணைத்து 150 ரூபாய் கட்டணத்தில் ஒரு விதமாகவும், இலவச சேனல்களை மட்டும் வைத்து 70 ரூபாயில் மற்றொரு முறை என்று இரண்டு வித இணைப்புக்களையும் கொடுத்தால் பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.

சென்னையில் செட் ஆப் பாக்ஸ் இருந்தால் தான் கட்டண சேனல்கள் என்ற நிலை வந்ததும் பலர் 100 ரூபாய்க்கு கிடைக்கும் இலவச சேனல்கள் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். விளம்பர வருவாயில் பெரிய துண்டு விழுந்தது. இதை எதிர்பார்க்காத ஒரு கட்டண சேனல் குழுமம் (ஒரு இணைப்புக்கு நாலு கட்டணசேனலுக்கு மட்டும் தற்போது 46 ரூபாய் கேட்பதாக சொல்லுகிறார்கள்.) சென்னையில் மட்டும் அந்த சேனல்களை இலவசமாக வழங்கியது.

மூன்று மாதங்களுக்கு அந்த சேனல்களை பார்க்கவில்லை என்றால் மக்கள் அந்த சேனல் நிகழ்ச்சிகளை மறந்து விடுவார்கள். அதே சமயம் விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றை மிக குறைந்த விலைக்கோ, அல்லது இலவசமாகவோ அந்த நிறுவனமே வழங்க வாய்ப்பு உண்டு.

அப்படியும் இல்லை என்றால் கட்டண சேனல்களில் விளம்பரமே இருக்கக்கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டால் எல்லாரும் வழிக்கு வருவார்கள்.

என்னைப்போன்ற எவ்வளவோ பேர்கள் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் விளம்பரம் போடும் சேனலுக்கெல்லாம் பணம் கொடுத்து பார்க்கத்தேவையில்லை என்று நினைப்பார்கள். நாங்கள் பார்க்க இலவச சேனல்கள் மட்டும் கொண்ட 70 ரூபாய் இணைப்பையும் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு 150 ரூபாயில் கட்டண சேனல்களையும் கொண்டு தனி இணைப்பும் வழங்கினால் நல்லது.


கேபிள் ஆப்ரேட்டர்களும், சேனல் உரிமையாளர்களுக்கும் ஒத்துப்போகாததற்கு ஒரு முக்கிய காரணம், எத்தனை இணைப்பு என்பதை யாரும் உறுதியாக சொல்லமுடிவதில்லை என்பதும்தான்.

மின் கட்டணத்தைப்போல் கேபிள் கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்தும் வசதி கொண்டுவந்துவிட்டால் கறுப்பு இணைப்புக்கு வேலை இருக்காது. ஆனால் இப்படி வசூல் செய்யும்போது அரசின் பங்கும், கேபிள் ஆப்ரேட்டர்கள் பங்கும் அவரவர் வங்கிக்கணக்கில் சேருமாறு புரோகிராம் செட் செய்துவிட்டால் பிறகு அந்த தொகைக்காக கேபிள் ஆப்ரேட்டர்கள் பொதுமக்களிடமோ, அதிகாரிகளிடமோ அலைய வேலை இருக்காது.

மின் கட்டணம் போன்று கேபிள் கட்டணமும் குறிப்பிட்ட தேதியில் கட்டப்படவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற நிலை இருந்தால் எல்லாரும் பணத்தை ஒழுங்காக கட்டுவார்கள்.

எல்லா இணைப்பும் கணக்கில் வந்துவிட்டால் சேனல் உரிமையாளர்கள் அநியாய வசூல் வேட்டை நடத்த நினைப்பதும் குறையும். பணம் வசூல் செய்ய அலையும் நேரம் மிச்சமானால் சேனல்கள் சரியாக தெரியவில்லை என்ற புகாரை கேபிள் ஆப்ரேட்டர்கள் சரியாக கவனிக்காமல் விடும் அபாயமும் உண்டு.

இதையும் ஒரு முறையில் கட்டுப்படுத்தலாம்.

சேனல்களுக்கான சிக்னல்கள் சரியாக வருகிற பட்சத்தில் கேபிள் ஆப்ரேட்டர் தன் பொறுப்பில் ஒரு நல்ல டிவியை வாடிக்கையாளர் வீட்டில் போட்டுக் காண்பித்து சேனல்கள் சரியாக தெரிவதை உறுதிப்படுத்தலாம். இந்த முறையில் வாடிக்கையாளரின் தொலைக்காட்சியில் கோளாறா...கேபிள் இணைப்பில் கோளாறா என்பதும் தெரிந்து விடும்.

பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் ஆயிரம் வழி உண்டு. அதை வேண்டுமென்றே சிலர் புகைய விடுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

இதயத்தூது

தலைப்பை பார்த்ததும் ஏதோ காதல் கடிதம் என்று நினைத்து விட வேண்டாம். திருவாரூரில் விளம்பரங்களை மட்டுமே நம்பி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வெளிவரும் இலவச இதழ். இப்போது அதை வெளியிடுபவரின் நண்பருடைய முயற்சியால் www.idhayathoothu.in என்ற முகவரியில் இணையத்தில் காணக்கிடைக்கிறது. நானும் எனது பங்களிப்பாக திருவாரூர் மாவட்டம் பற்றிய செய்திகளை, சுற்றுலாதலங்கள், ஆன்மீக தலங்கள் போன்றவற்றின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சிவகாசி தண்ணீர் அவ்வளவு மோசமா?

அப்படி இப்படி லேபரா இருந்து நானும் தொழிலதிபரா ஆயிட்டேன்னு முன்னாடி ஒரு பதிவுல எழுதியிருந்தேன்னு நினைக்கிறேன்.(ஞாபகமறதி இருந்தாதாதான் பெரிய தொழிலதிபர்னு உன்னைய யார் குழப்பி விட்டதுன்னு கேக்காதீங்கோ.)

போன வாரத்துல தொழில் நிமித்தப்பயணமா (அரசியல்வாதி போனா அது மரியாதை நிமித்தப்பயணம்) மதுரை, சிவகாசிக்கு போனேன். மதுரையில சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்குற நண்பரும் என்னோட சிவகாசிக்கு வந்தார்.

கிளம்பும்போது அவர் வீட்டுல இருந்து 2 லிட்டர் பாட்டில்ல தண்ணீரைக்கொண்டு வரவுமே எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்துச்சு.




"குடிக்கிறதுக்கு கூட மினரல் வாட்டர் வாங்கிடலாம். புழக்கத்துக்கு தண்ணீர் கிடைக்கிறதுதான் கஷ்டம். அந்த ஊர்ல நல்லா மழை பெய்தால்தான் புழங்குற தண்ணிக்கு பஞ்சம் இல்லாம இருக்கும்." அப்படின்னு சாப்ட்வேர் நண்பர் சொன்னது என்னை பெரிய அளவுல பாதிக்கலை. மிஞ்சிப்போனா அந்த ஊர்ல நாலு மணி நேரம் இருக்கப்போறோம். அதுக்குப் போய் இந்த பில்ட்அப்பான்னு நினைச்சேன். காலை டிபன் சாப்பிட்டப்ப ஒரு ஹோட்டல்ல தான் கொஞ்சம் தண்ணி குடிச்சேன். அப்ப எதுவும் தெரியலை.

ஆனா ஊருக்கு போயிட்டு திருவாரூருக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைவலி, ஜூரம்னு படுத்துது.

மதுரை, சிவகாசின்னு போனதுல அந்த தண்ணி ஒத்துக்கலைன்னு நான் சொன்னப்ப இங்க இன்னொரு நண்பர், "தம்பி, அவசரப்பட்டு முடிவெடுத்துடாத...அந்த ஊர்கள்ல நீ குடிச்சது உண்மையிலேயே நல்ல தண்ணியாக்கூட இருக்கலாம். நம்ம ஊரு தண்ணி கெட்டுப்போய் அதை தொடர்ந்து குடிச்சதால உனக்கு நல்ல தண்ணி ஒத்துக்காம கூட இருக்கலாம்." அப்படின்னு சொன்னாரு. இந்த இன்னொரு கோணத்தை கேட்டு நான் மிரண்டு போயிட்டேன்.

செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் மூலமா விளையிற காய்கறிகளை நம்ம உடம்பு ஏத்துக்குதுறது சாத்தியம்னா இதுவும் சாத்தியம்தான் அப்படின்னு தமிழ்ப்படத்துல துப்பறியும் போலீஸ் அதிகாரி சொல்றமாதிரி என்னைய குழப்பிவிட்டுட்டு அந்த நண்பர் போயிட்டார்.

நான்தான் சொல்பேச்சு கேட்காத உடம்போட நாலு நாளா அவஸ்தைப்படுறேன்.

சொந்தக்கதை இருக்கட்டும். தொழில் கதை என்னாச்சுன்னுதானே கேட்குறீங்க...

விசிட்டிங்கார்டு, அதே மாடல்ல 3மடங்கு பெரிய அளவு கார்டு இதுமாதிரியான சில மேட்டர் பிரிண்டிங் செய்ய வேண்டியிருந்தது. இதெல்லாம் பொதுவா 1000 கார்டுக்கு மேல அச்சடிக்க வாடிக்கையாளர்கள் தயங்குவாங்க. ஆனா இதையெல்லாம் சிவகாசி பிரஸ்ல கொடுத்து வாங்க முடியாது.

ஏன்னா குறிப்பிட்ட சில ரகங்களுக்குதான் மினிமம் 5000 எண்ணிக்கையில அச்சடிச்சு தர்றாங்க. அதனால குறைவான எண்ணிக்கை ஆர்டர்களுக்கு எல்லாம் கோயம்புத்தூர்தான் பெஸ்ட் அப்படின்னு சிவகாசியிலேயே பரிந்துரை செய்யுறாங்க.

நான் முக்கியமா போனது கோவில்கள்ல விபூதி பிரசாதம் கொடுக்க பயன்படும் கவர்கள் ஆர்டர் கொடுக்கத்தான். அதை பிரிண்ட் செய்து கட் பண்றது பெரிய வேலை இல்லை. பசை தடவி ஒட்டுறதுதான் பெரிய இம்சை. அந்த ஜாப்புக்குதான் காண்ட்ராக்ட் ஆளுங்க ரொம்ப குறைவா கிடைக்குறாங்க அப்படின்னு ஒரு பிரஸ் அதிபர் சொன்னார்.

தினமலர் நாளிதழ்ல பக்கம் வடிவமைச்சு இருந்தா கூட இது மாதிரி மல்டிகலர் ஜாப் ஒர்க் எடுத்து செய்யணும்னா எந்த அளவுல எந்த எண்ணிக்கையில ஆர்டர் எடுக்கணும். பொதுவா அங்க பயன்படுற பேப்பர் அளவு என்ன? அதுல க்ரிப்பர் ஏரியா, வேஸ்டேஜ் ஏரியா எல்லாம் எவ்வளவுன்னு தெளிவான விவரங்களை சிவகாசிக்கு போனதும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

ஏட்டுப்படிப்பை விட செயல்வழிக்கல்வி எவ்வளவு முக்கியம்னு நான் உணர்ந்துகிட்டேன்.

பள்ளியில் என்னுடன் படிச்ச மூன்று நண்பர்கள் வழக்கறிஞரா பிராக்டீஸ் செய்யுறாங்க. அவங்களோட டைப்பிங் ஒர்க் ரொட்டீனா இருக்கு. அதை மீறி கிடைக்கிற நேரத்துல சில மல்டிகலர் ஆர்டர்கள் எடுத்து செய்துகிட்டு இருக்கேன்.

ஒண்ணு மட்டும் எனக்கு தெளிவா தெரியுதுங்க. இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். அதுக்கு இடைவிடா முயற்சியும் உழைப்பும் ரொம்ப அவசியம். இது எல்லாருக்குமே பொருந்தும்னு நினைச்சு செயல்பட்டா எல்லாம் ஜெயம்தான்.

வியாழன், 9 ஜூன், 2011

கந்தா - எங்க ஊர்க்காரரு இயக்குன படமுங்கோ...

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் பரபரப்பாவேத்தான் இருக்கு. காரசாரமான அந்த விஷயங்களைப் பற்றி பதிவு எழுத நேரம் இல்லாத அளவுக்கு நானும் பரபரப்பாயிட்டேன்.





பசித்திருப்பவனிடம் எந்த போதனையும் எடுபடாதுன்னு பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் சொல்லியிருக்காங்க. அது உண்மையும் கூட. எனக்கு ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடி தினமலர் நாளிதழ்ல வேலைக்கு சேர்ந்த நாட்கள்ல அதிகமா உணர ஆரம்பிச்சேன். அதுக்கு காரணம் நான் இது நாள் வரை வேலை செய்த இடங்களில் சம்பளம் ஒழுங்கா வருதோ இல்லையோ நான் கற்று வெச்சிருந்த எலக்ட்ரீஷியன் வேலை மூலமாகவும், பத்திரிகைகளில் பிரசுரமாகும்  துணுக்கு, சிறுகதை, கட்டுரை போன்றவற்றாலயும் பணப்புழக்கத்துக்கு குறைச்சல் இல்லை.

ஆனால் தினமலர் நாளிதழ்ல பக்க வடிவமைப்பாளரா சேர்ந்ததும் சாப்பிட, குளிக்க, துணி துவைக்க கூட உருப்படியா நேரம் கிடைக்கலை. அப்புறம் எங்க எலக்ட்ரீஷியன் வேலை பார்க்குறது. எழுத்தைப் பத்தி கேட்கவே வேண்டாம்.

நாலா பக்கமும் (?!) வந்த வருமானம் நின்னு போன உடனே எப்படா ஒண்ணாம் தேதி வரும்னு ஆயிடுச்சு. இருந்த பொருளாதார நெருக்கடியில சம்பளம் வாங்குன அடுத்த அஞ்சாவது நிமிஷமே அடுத்த ஒண்ணாம் தேதிக்கு இன்னும் 4 வாரம் இருக்கான்னு மலைப்பு வந்தா விளங்குமா?

அப்பவே முடிவு பண்ணிட்டேன். நமக்கு சொந்த தொழில்தான் லாயக்குன்னு. அரசு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் திருவாரூருக்கு வந்த நேரம் 50 சதுரடி கடைக்கு கூட 1 லட்ச ரூபாய் அட்வான்ஸ், 2ஆயிரம் ரூபாய் வாடகைன்னு உயர்ந்துடுச்சு.

இந்த அளவு அட்வான்ஸ் கொடுக்க கூட பணம் சேமிச்சு வெக்கலையேன்னு இப்பதாங்க என்னையே நான் திட்டிகிட்டேன். ரெண்டு மூணு இடத்துல மாடிப்படிக்கு கீழே (மாடிவீட்டு மாது?) ஒதுங்குற இடத்தை வாடகைக்கு பேசிப்பார்த்தேன். பல வருஷமா பூட்டிக்கிடந்த இடத்தை நான் போய் கேட்டதும் பக்கத்து கடையில இருந்தவங்க அவசர அவசரமா போய் பிடிச்சு பெயிண்ட் அடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுத்துகிட்டு இருக்காங்க. நிறைய பேர் ஒரு கடையை நடத்திகிட்டு ஒண்ணு முதல் மூணு கடைகளை புடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுத்துகிட்டு இருக்காங்க.

சிலர் அந்த கடைகளைக்காட்டி வங்கிக்கடன் வாங்க பயன்படுத்துறதா தெரியுது. மற்றவங்க சம்பாதிக்க கூடாதுன்னு நினைச்சு கூட சிலர் மேலும் சில கடைகளை புடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுக்கலாம்னு நினைக்குறேன். இப்படியும் சின்ன புத்தி இருக்கு.

இந்து மதத்துல எவ்வளவோ நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. ஆனா அதுக்கு ஒரு சீரியல் கதாபாத்திரத்துக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை கூட கொடுக்குறதா தெரியலை.

ஜப்பான்ல சுனாமி, பூகம்பத்தால அடுத்த வேளை சோத்துக்கே நிச்சயமில்லாத நிலமை வந்தப்ப கூட எனக்கு இந்த வேளை சாப்பாடு போதும். மீதத்தை வேற யாருக்காவது கொடுங்க. எனக்கு அடுத்த வேளை சாப்பாடு வேற எங்கயாவது கிடைக்கும்னு சொல்ற மக்கள் இருக்காங்க.

இந்த கடை விஷயத்தை பார்த்ததும் நம்ம நாட்டுல அப்படி ஒரு நிலமை ஏற்பட்டா என்ன நடக்கும்னு யோசிச்சேன். இப்ப நடக்குற ஊழல், லஞ்சம் இதெல்லாமே மற்ற மக்களைப் பத்தி கவலைப்படாம முழுக்க முழுக்க சுய நலத்தை மட்டுமே விரும்புற மக்களோட மன நிலையை வெளிக்காட்டுற விஷயங்கள்தான்.

குறைவான அட்வான்ஸ்-வாடகையில இடம் தேடி அலைஞ்சு கம்ப்யூட்டர் சேல்ஸ், சர்வீஸ் செய்த நண்பர் ஒருத்தரோட கடையில என்னுடைய கம்ப்யூட்டரை எடுத்துட்டு போய் வெச்சு ஒரு மாசம் ஜாப் டைப்பிங் செய்து கொடுத்தேன்.

ஆனா எழுத்தாளராக தனிமை அவசியம். அதான் தனி இடம் பார்த்து ஜூன் 5ஆம் தேதி வந்துட்டேன். இனியாவது அப்பப்போ ப்ளாக்ல எழுதணும்னு நினைக்குறேன். ஆனா சோம்பல் புத்தி அப்பப்ப வந்து எட்டிப்பார்க்குதே.

சொந்தக்கதை, புலம்பலை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு இந்த பதிவுல சொல்ல வந்ததை எழுதிடுறேன்.

நான் ஏழாம் வகுப்பு படிச்ச சமயத்துல ராணி வார இதழ்ல ஒரு பக்க கதை ஒண்ணு. அதை எழுதியவர் பெயர் திருவாரூர்பாபுன்னு போட்டிருக்குறதா என் நண்பன் சொன்னான்.

அதுல இருந்து முழு அளவுல எந்த புத்தகத்தையும் படிக்கலைன்னாலும் (பாடப்புத்தகத்தையும் சேர்த்துதான்) எழுத்தாளர்களின் பெயர்களை கவனித்து ஓரளவு கதைகளை படிக்க ஆரம்பிச்சேன்.

அந்த வகையில இப்ப சில பத்திரிகைகள்ல ''திருவாரூர் சரவணன்'' அப்படின்னு நான் எழுதுன கதைகள் வர்றதுக்கு முக்கிய தூண்டுதல்னு திருவாரூர் பாபுவை சொல்லலாம். அவரும் திருவாரூர் அரசுக் கல்லூரியில் பி.காம் படித்ததாக புரொபசர் சொன்னார்.(நானும் அதே கல்லூரியில் அதே டிபார்ட்மெண்ட்தான்)

சரண் இயக்கத்தில் ஜே ஜே, வசூல்ராஜா M.B.B.S, அட்டகாசம் அப்படின்னு சில படங்கள்ல உதவி இயக்குனரா பணியாற்றிய அவர் 'கந்தா' ன்னு ஒரு படத்தை கரண், ராஜேஷ், மித்ரா (காவலன் படத்துல விஜய்யை முதல்ல கல்யாணம் பண்ணிக்கிற அதே மித்ராதான்), விவேக் ஆகியோரை வெச்சு இயக்கியிருக்கார்.

இந்தப்படம் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸ் னு சொன்னாங்க.

எனக்கு இந்த பேனர் கலாச்சாரம் எல்லாம் பிடிக்காது. ஆனா எனக்குத்தெரிஞ்சு திருவாரூர்ல இருந்து போய் தமிழன் எக்ஸ்பிரஸ்ல வேலை பார்த்து சரண் கிட்ட உதவி இயக்குனரா இருந்து ஒரு படத்தை டைரக்ட் செய்த பாபு K.விஸ்வநாத் என்ற திருவாரூர் பாபுக்கு சின்னதா ஒரு பேனர் வெக்கலாம்னு தோணுது.

அந்த பேனர்ல 30 சதவீத அளவுக்கு இப்ப நான் வெச்சிருக்குற ஜாப் டைப்பிங் சென்டர் பேரையும் டிசைன் பண்ணிட்டா கொஞ்ச நாளைக்கு அந்த போர்டையே பெயர்ப்பலகையா பயன்படுத்திக்கலாம்னு ஒரு ஐடியா.

பாபு.கே.விஸ்வநாத் அவர்களை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. ஆனா அவரது தந்தை, சகோதரர்கள் ஆகியோரை எனக்கும் தெரியும். அவர்களுக்கு என்னையும் தெரியும்.

அவரது தந்தை இரா.விஸ்வநாதன் சுதந்திரப்போராட்ட தியாகி. எனக்கு பத்து வயது இருக்கும்போது அவரிடம் பேசியிருக்கிறேன். அதிர்ந்து கூட பேச மாட்டார். எல்லாரிடத்தும் அவ்வளவு இனிமையாக பழகும் அவர் தற்போது மறைந்து விட்டதால் அவரது நினைவுகளுடன் தான் பாபு.கே.விஸ்வநாத் இயக்கிய படம் வெளியாகப்போகிறது.

ஆனால் இப்போது வரை திருவாரூரில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல் இல்லை. இயக்குனர் ஷங்கர் திருவாரூரில் ஒரு தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அந்த தியேட்டருக்குதான் வரும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.