Search This Blog

ஒரு செய்தி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு செய்தி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 டிசம்பர், 2015

வாடிக்கையாளரிடம்சுரண்டாதீர்!



04-12-2015 - இது உங்கள் இடம் 





தினமலர் : சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர் பதிப்புகள்.





சரவணன், திருவாரூரிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 





கணக்கு வைத்திருக்கும் கிளை தவிர, மற்ற கிளைகளில் பணம் செலுத்தினாலே, குறைந்தபட்ச கட்டணம், 25 ரூபாய் வசூலித்தது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி. கவுன்டர்களில், கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க, இப்படி செய்திருக்கின்றனர் என்று, வாடிக்கையாளர்கள் சமாதானம் ஆகினர்.


அனைத்து வங்கிகளும், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வரையறை வைத்தன. அவற்றில் பணம் நிரப்பவும், பராமரிப்புக்கவும் செலவுகள் இருக்கும் என்று, மக்கள் அதையும் ஏற்றனர்.


ஆனால், கடந்த நவம்பர் முதல், பணம்,



'டிபாசிட்' செய்யும் இயந்திரத்தில், பணம் செலுத்துவதற்கும், ஒரு பரிவர்த்தனைக்கு, 25 ரூபாய் வீதம், அந்த வங்கி கட்டணம் வசூலிக்கத் துவங்கியுள்ளது; இது, மிகவும் அநியாயம்!


பணம் செலுத்தும் இயந்திரத்தில் செலுத்தப்படும் பணம், மற்ற வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்., அட்டை மூலம், தொகை எடுக்கவும் பயன்படுகிறது. அதனால், அடிக்கடி பணம் நிரப்பும் செலவு, வங்கி நிர்வாகத்துக்கு கிடையாது.


மேலும், வங்கிக்குள் சென்று, கவுன்டரில் பணம் செலுத்துவதால் ஏற்படும் நிர்வாக செலவும் மிச்சம். அது தவிர, வங்கி மற்றும் வாடிக்கையாளர் இருவருக்குமே நேரம் சேமிப்பு.


அதனால், இயந்திரத்தில் பணம் செலுத்துவதற்கும் கட்டணம் விதித்து, வாடிக்கையாளர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்; இஷ்டத்திற்கு, வாடிக்கையாளரிடம் சுரண்டும் போக்கிற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?இதை சம்பந்தப்பட்டோர் கவனிப்பரா?


செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஆசையா- ஜோதிடம் 360, நூல் அறிமுகம்



எனக்கு எதிர்காலத்தைப் பற்றி எந்த கவலையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்பவர்களுக்கு கூட அதைப் பற்றிய அச்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். நமது எதிர்காலம் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள நினைப்பது மனித இயல்பு. மனிதனுக்கு பசி, தூக்கம், உரிய வயதில் எதிர்பால் ஈர்ப்பு போன்ற விசயங்கள் எவ்வளவு இயல்பானதோ அப்படித்தான் எதிர்காலத்தின் மீதான ஆர்வமும்.





















வாழ்வின் பல உண்மைகளை எளிமையாக உணர்த்தக்கூடிய நூல் ஜோதிடம் 360. அந்த நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை இங்கே.



அனுபவ ஜோதிடர் சித்தூர் எஸ்.முருகேசன் எழுதியஜோதிடம் 360 என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை படித்த எனக்கு நம் வாழ்வியலின் பல உண்மைகள் புரிந்தன. (இன்னும் புரிந்துகொள்ள முடியாத கோடிக்கணக்கான மர்மங்கள் மனித வாழ்வில் உண்டு. அதை உணர எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாது.)



1. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும்.



2. தேவையற்றதை வாங்கினால் விரைவில் அத்தியாவசியமானதை விற்க நேரிடும்.



3. முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க இளமையில் கஷ்டப்படுங்கள்.



இந்த மூன்று தத்துவங்களையும் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். வாழ்க்கை குறித்த எவ்வளவோ தத்துவங்கள் இருந்தாலும் இந்த மூன்றை உணர்ந்தாலே வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம். ஜோதிடம் 360 முதல் பதிப்பை முழுவதும் படித்ததும் ஜோதிடத்தின்  அடிநாதமும் இந்த மூன்று தத்துவங்களைத்தான் உணர்த்துகிறது என்பது புரிந்தது.



ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று ஏற்கனவே இறைவன் எழுதிவிடுகிறான். பிறகு எப்படி அவற்றில் இருந்து விடுபட முடியும் என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம்.



நம் பூர்வ ஜென்ம பாவங்கள், நம் முன்னோர்களின் பாவங்கள் போன்றவற்றின் மூலம் நவக்கிரகங்களிடம் நாம் கடன் பட்டிருக்கிறோம். அந்த கடனை தீர்ப்பதன் மூலம் தண்டனையின் கடுமை குறையுமா என்பதான முயற்சிதான் பரிகாரங்கள்.



வண்டி பஞ்சர் ஆக வேண்டும் என்று இருந்தால் ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் தடுக்க முடியுமா என்றால் முடியாது. ஆனால் ஒர்க்ஷாப் அல்லது பஞ்சர் ஒட்டும் கடைக்கு அருகில் வண்டி பஞ்சர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. 



ஜோதிடம் 360 புத்தகத்தில் உள்ள விசயங்களும் இதை அடிப்படையாக கொண்டுதான் இருக்கின்றன. சித்தூர் எஸ். முருகேசன் கூறும் பரிகாரங்கள் உங்களை ஆயிரம், லட்சம் என்று பணம் செலவழித்து அதை, இதை செய்ய வேண்டும் என்று குழப்புவதாக இல்லை. மாறாக நம் வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்த வைக்கிறது.



உதாரணமாக 30 வயது மனிதரின் காய்ச்சலை குணப்படுத்தும் ஒரு மருந்து பல நேரங்களில் மற்றொரு நபருக்கு வேலை செய்வதில்லை. அதற்கு காரணம், ஒவ்வொரு மனிதனின் உடல் இயக்கமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல்தான் எல்லா மனிதர்களுக்கும் கிரகங்கள் ஒரே மாதிரியான நன்மை, தீமைகளை வழங்குவதில்லை.



சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலமாக வாடகை, குத்தகை பணமே ஒரு மாதத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் வேறு சிலர், பழைய கூரை வீட்டை மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுவிட்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க 1 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிடும். இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அதை தவிர்ப்பது எப்படி என்ற வித்தை இந்த நூலை படிப்பவர்களுக்கு ஓரளவாவது வசப்பட வாய்ப்பு உண்டு.



ஒரு பெரிய அரங்கத்தில் ஆயிரம் நாற்காலிகள் இருக்கும். அதில் 900 நாற்காலிகள் காலியாக இருக்கும். அவற்றில் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே உடைந்திருக்கும். மிகச்சரியாக அதில் போய் ஒருவர் உட்காருவார். துரதிர்ஷ்டம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம். ஆனால் இப்படி நடப்பது  ஏதோ ஒரு செயலின் (முற்பிறவி அல்லது நாம் ஏற்கனவே செய்த தவறுகள்) எதிர்வினையாக இருக்கக்கூடும்.



ஆக இப்படி ஒவ்வொரு விஷ­யத்திலும் நம்மை மீறிய ஏதோ ஒரு வரையறைக்குட்பட்ட சக்திக்கு கட்டுப்பட்டுதான் உலகமும் மனித வாழ்வும் இயங்குகிறது. அதைப்புரிந்து கொள்ள இந்த நூல் உதவுகிறது. தாறுமாறாக அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதுதான் கடினம்.  குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டு இயங்கும் நம் வாழ்க்கையை சிக்கலற்றதாக்க பல எளிய வழிகள் இருக்கின்றன. நாம்தான் அவற்றை பின்பற்ற மறுத்து மனம் போன போக்கில் வாழ நினைத்து துன்பங்களில் சிக்கிக்கொள்கிறோம். நாமே உருவாக்கிக்கொள்ளும் சிக்கல்களில் இருந்து விடுபட எளிமையான பாதைகளை காட்டுகிறது ஜோதிடம் 360.



1) ஜோதிடம் 360







வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பெண்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்?- நூல் அறிமுகம்



உங்கள் வாழ்வை எளிதாக மேம்படுத்த உதவும் நூல் ஒன்றின் அறிமுகம்தான் இந்த பதிவு.





பெரும்பாலும் ஆண்களுக்கு, இவ்வளவு நாள் இப்படி வீணாயிடுச்சே என்ற கவலையிலும், அடுத்து பத்து வருசம் கழித்து இந்த ரோட்டை வாங்கி நம்ம பேர் வெச்சிடணும் என்ற ஒரு சிறிய (?!) குறிக்கோள் இருக்கும்.



ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவில் சீரியலில் பெண்கள் படும் கஷ்டத்தை நினைத்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கும். வீட்டு ஓனர் மூணு மாசத்துல காலி பண்ண சொல்லிட்டானே. இப்ப புதுசா வீடு பிடிச்சு இடம் மாற 10 ஆயிரம் ரூபாய் துண்டு விழுமே என்ற கவலையில் கணவன் இருப்பான். ஆனால் மனைவியைப் பொறுத்தவரை நீ புதுசா பிடிக்கிற வீட்டுல உன் அம்மா, அப்பா தங்கச்சி தம்பியை கொண்டு வந்து நுழைச்சிடாத என்ற அளவில்தான் யோசிப்பாள்.



மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பெற்றவர்களை நடுத்தெருவில் நிறுத்துபவர்களும், பெற்றோர் சொல்லை வேதவாக்காக கொண்டு மனைவியை 24 மணி நேரமும் டார்ச்சர் செய்து கசக்கிப்பிழிந்து வேலை வாங்குவதும்தான் நாம் அதிகமாக காணும் விசயம்.














நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் ஆண்கள் மிக குறைவு. ஒன்று அம்மா மற்றும் சகோதரிகளிடம் அல்லது மனைவியிடம் சரண்டர் ஆகும் ஆண்களே அதிகம். இந்த உண்மை பெண்களுக்கும் தெரியும்.



பெண்கள் அல்லது ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். கணவன்/மனைவி-யின் செயலுக்கு, குணாதிசயத்துக்கு காரணம் என்ன என்று தெரிந்தால் அன்பை கொடுத்து/பெற்று நிம்மதியாக வாழலாம்.



பல குடும்ப சிக்கல்களுக்கு முக்கிய காரணமே ஆண் அல்லது பெண் ஏன் இப்படி செய்கிறார் என்று அதன் காரணத்தைப் புரிந்து சரிசெய்ய நினைக்காமல் மேலோட்டமாக அவர்கள் செய்யும் செயலை மட்டும் தடுக்க/கண்டிக்க நினைப்பதுதான் விபரீதத்துக்கு காரணம்.



இது மாதிரியான சில அடிப்படை உண்மைகளை அதாவது தாய்-தந்தை, சகோதரன்-சகோதரி, கணவன்-மனைவி ஆகியோரின் செயல்பாடுகளுக்கு உளவியல் ரீதியாக என்ன காரணம் இருக்கும் என்பதை எளிமையாக புரிய வைக்கிறது சித்தூர் எஸ்.முருகேசன் எழுதிய ஆண் பெண் வித்தியாசங்கள் நூல்.



பெண்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் என்று இந்த பதிவுக்கு பெயர் வைக்க காரணம், பெரும்பாலான பெண்களின் கவலையை ஸ்கேன் செய்து பார்த்தீர்கள் என்றால் அன்றைய கதை அல்லது அதிகபட்சம் அடுத்த ஒரு வாரத்துக்குள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்களில் பலர், 8 மாசம் கழித்து ஏழாம் பங்காளி வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போகணும், எந்த ட்ரெய்ன்ல டிக்கட் புக்பண்றதுன்னு இப்போ மண்டையை பிச்சுகிட்டு இருப்பாங்க. (பெண்களையும் சாதாரணமாக நினைத்து விட முடியாது. தன் தம்பி அல்லது அண்ணன் வீட்டு விசேஷம் என்றால் இதை தாண்டி ப்ளான் போடும் கில்லாடிகளாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.)



1) ஜோதிடம் 360






வியாழன், 6 பிப்ரவரி, 2014

விவாகரத்து ஏற்பட காரணம் என்ன? - நூல் அறிமுகம்



ரொம்ப நாளா பதிவு போடாம இடைவெளி விழுந்துட்டதால இப்படி விவகாரமான தலைப்பை வெச்சு ஜோதிடமும் தாம்பத்யமும் நூல் அறிமுகத்தை எழுதலாமேன்னு தோணுச்சு. கடந்த ரெண்டு வருஷங்களுக்கும் மேலாக வழக்கறிஞர்களுக்கு டைப் செய்து கொடுக்கறதால எனி டைம் ஏதோ பிரச்சனைகளோடயே இருக்குற மாதிரி பீலிங். அவங்க எழுதிக் கொடுக்குறதை டைப் செய்யுற நமக்கே இந்த கதின்னா நாமளும் பி.எல் படிச்சிருந்தா மண்டையில இருக்குற நாலு முடியும் நம்மளை உதறிட்டு ஓடிப்போக வாய்ப்பிருக்கு.



என்கிட்ட டைப் செய்ய வர்றது மூணே மூணு வழக்கறிஞர் அலுவலகம்தான். அவங்களும் தமிழ்ல டைப் செய்யுற மேட்டரைத்தான் என்கிட்ட கொடுப்பாங்க. (நம்ம இங்கிலீஷ் அறிவு அப்படி.) இதுலேயே மாசத்துக்கு 10 கேஸ் வரை டைவர்ஸ் மேட்டர்தான். (ஒட்டு மொத்த தமிழக நீதிமன்றங்களை, கட்டப்பஞ்சாயத்து கணக்கை எல்லாம் சேர்த்தா... தலை சுத்துதுப்பா) திருமணமான ஒரு ஆண்டு முதல் 10 வருடம் வரை பல்வேறு காலகட்ட தம்பதிகள் வழக்கு போட்டு பிரியுற கேஸ்தான் அதிகமா இருக்கு. சிட்டியில எப்படா ஒரு வருஷம் ஆகும்னு காத்திருக்குற தம்பதிகள் கணக்கு அதிகம்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.



கணவன் மனைவி பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரை ரெண்டு காரணங்களை வெச்சு பார்த்தாலே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது கேஸ் அடங்கிடும் போலிருக்கு. அதாவது சகிப்புத்தன்மை இல்லாமை ஒரு காரணம், அடுத்து ஒருத்தர் முதுகுல வாழ்க்கைத்துணை மட்டுமல்ல குடும்ப உறுப்பினர்கள் (கணவன்-மனைவி ரெண்டு சைடுமே சளைச்சவங்க இல்ல) மொத்தமும் சேர்ந்து குதிரை ஏறுவது.



ஆண்களில் மனைவி பேச்சைக் கேட்டு பெற்றவர்களை துரத்திவிட்டவர்களும், பெற்றோர் பேச்சைக் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்துபவர்களும்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இன்னொரு பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் யார் சொன்னாலும் எவன்(ள்) சொன்னாலும் கேட்குறது இல்லை. இவர்களின் வாழ்க்கைத்துணை பிரிந்து வாழ்வது வேண்டுமானால் சூழ்நிலையின் காரணமாக அவசியமாக இருக்கலாமே தவிர, பெற்றோர் அல்லது மனைவி (அ) கணவன் சரியாக இல்லாமல் விவாகரத்து கோரும் சம்பவங்களை தவிர்ப்பது சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நன்மை தரும் செயலாகவே நான் கருதுகிறேன்.



அது எப்படி சாத்தியம்?



எப்போதுமே அன்பு, விட்டுக்கொடுத்தல் என்பதெல்லாம் இருவழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே அப்படி இருப்பதில்லை. ஒரு சாரர் எதிலுமே விட்டுக்கொடுக்காமல் உறவுகளை சிக்கலாக்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் எதிராளிதான் நாம என்ன சொன்னாலும் கேட்குறாங்களே என்று எல்லாவற்றிலும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதைப்போல் மனைவி / கணவன் நான் என்ன சொன்னாலும் செஞ்சுகிட்டே இருக்காங்களே என்று அளவுக்கு மீறும் போது கொதித்தெழும் அப்பாவி கணவன் / மனைவியை யாராலும் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டு விடுகிறது.

அதிலும் சில பெற்றோர் / மாமனார்-மாமியார் சுய நலம் காரணமாக தங்கள் பிள்ளை/மகள் என்று கூட பார்க்காமல் வாழ்க்கையை கெடுத்துவிடுதையும் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறோம்.













நான்  வெளியில போனா பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி விசாரிக்கிற (உண்மையான பாசத்தில் கேட்பவரைப் பற்றிதான் நான் சொல்கிறேன். சந்தேகபுத்தி கொண்ட கணவன்மார்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை) மனுசனோட எனக்கு வாழ்க்கை தேவையில்லை என்று நீதிமன்ற படியேறும் பெண்களும் உண்டு.



மனைவி மேல் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் கணவன், அவளுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பி கவலைப்படாமல் இருக்கும் கணவனைப் பார்த்து நான்  ‘வெளியில் போனால் இருக்கேனா செத்தேனா என்று கூட கவலைப்படாத மனுசன் கூட என்னால வாழ முடியாது’ என்று விவாகரத்து கேட்கும் பெண்களும் உண்டு.



இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு புரிதல் இல்லாததுதான் காரணம். அந்த புரிதலை எங்கே கற்றுக்கொள்வது? இணையத்தில் அதுவும் வலைப்பூக்களில் உலவுபவர்களில் சிலருக்கு அனுபவஜோதிடம் டாட் காம் என்ற தளம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த எஸ்.முருகேசன் என்பவர் (20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில்முறை ஜோதிடர்) பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.

கணவன் மனைவி புரிதலுக்குத் தேவையான விஷயங்களில் சிலவற்றை எடுத்து ‘ஜோதிடமும் தாம்பத்யமும்’ என்ற தலைப்பில் மல்டி கலர் ரேப்பருடன் 80 பக்க கிரௌன் சைஸ் புத்தகமாக பிப்.7,2014ல் வெளிவருகிறது.



வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கட்டுரைகளை அவரது வலைத்தளத்தில் தேடிப்படிக்கலாம். ஏராளமான உபகதைகளுடன், உதாரணங்களுடன் இருக்கும். அதற்கு நேரம் இல்லை. கைக்கு அடக்கமா முக்கியமான பாயிண்ட்ஸ் கொண்ட புத்தகம்னா தேவலை என்று நினைப்பவர்கள் அவரது வலைத்தளத்தில் சென்று உரிய வழிமுறைகளில் வாங்கிக்கொள்ளலாம்.



பிப்ரவரி 7, 2014 அன்று நான்கு புத்தகங்கள்  வெளியிடப்பட உள்ளன.

1)    ஜோதிடம் 360

2)    ஜோதிடமும் தாம்பத்யமும்

3)    ஆண் - பெண் வித்தியாசங்கள்

4)    பணம் பணம் பணம்



வேலை, வீடு, உடைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அதே மாதிரி மிஸ்சான பஸ்சைப் பத்தியும் மிஸ்சான பொண்ணைப்பத்தி மட்டுமல்ல, மனைவி/கணவனையும் மாற்றிக்கொள்ளலாம் என்ற மனநிலை கொண்டவர்களிடம் விவாதிக்க நான் வரவில்லை. நமக்கு கணவன்/மனைவி இப்படி அமைஞ்சுட்டாங்க. இனி அதை மாத்த முடியாது. அப்போ வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக்கிக்கிறது என்று யோசிக்கும் நபர்களுக்கு இந்த ஜோதிடமும் தாம்பத்யமும் என்ற நூலில் பல வழிமுறைகள் இருக்கும்.



புத்தகம் நாளைக்குதான் (பிப்.7,2014) ரிலீஸ். அதுக்குள்ள உனக்கு மட்டும் ப்ரீவ்யூ ஷோ மாதிரி எழுத்தாளர் புத்தகத்தை முன் கூட்டியே அனுப்பிட்டாரான்னு ஒரு சந்தேகம் வந்துருக்கும். 





அதற்காக சின்ன விளக்கம் : புத்தகத்தை டைப் செட் செய்து அணிந்துரை எழுதியது அடியேன்தான்.


வியாழன், 7 நவம்பர், 2013

திருவாரூரில் திரைப்பட கலை இயக்குனர் டிராட்ஸ்கி மருது



12-11-2013 செவ்வாய் மாலை 6 மணி முதல் 9 மணி வரை திருவாரூர், கமலாலயம் தென்கரை, இராசம்மாள் திருமண அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஓவியரும் திரைப்பட கலை இயக்குனருமான டிராட்ஸ்கி மருது மற்றும் பலர் பங்கேற்கிறார்கள்.

வைகறை எழுதிய மெளனமும் மணிமுடிகளும் நூல் அறிமுக விழாவை




இலக்கிய வளர்ச்சிக்கழகம் திருவாரூரில் நடத்துகிறது. அந்த விழாவிற்குதான் ஓவியர் டிராட்ஸ்கி மருது வருகை தர இருக்கிறார். திருவாரூர் பகுதியில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள், ஓவியர்கள் ஆர்வமிருந்தால் விழாவிற்கு வருகைதரலாம்.

-திருவாரூர் சரவணன்.
***********************
ஓவியர் டிராட்ஸ்கி மருது பற்றி சில வார்த்தைகள்.... அந்திமழை இணைய இதழில் வெளிவந்தது இங்கே....

"பத்திரிக்கைச் சித்திரங்களில் மருதுவினுடையது கற்பனை வளமிக்க ஓவியங்கள்.மருது செய்வது கதைகளுக்கான சித்திரங்கள் அல்ல.அவைகள் கலைப் படைப்புகள்.பத்திரிக்கைகாரர்கள் அவற்றை கதைகளுக்கு சித்திரங்களாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்"என்று சிற்பி தட்சிணாமூர்த்தி. கணையாழியில்(மார்ச் 1994)முன்பு குறிப்பிட்டிருந்தார்.

கலை சார்ந்த எல்லா தளங்களிலும் இயங்கும் டிராட்ஸ்கி மருது தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஓவியர்.

மதுரையில் பிறந்த மருது சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றார்.பல விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த அவர் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் ஆர்ட் டைரக்டராகவும் பணிபுரிந்துள்ளார்.எழுபதுகளில் மங்கையர்மலர் ,தொண்ணூரில் குமுதம்(சுஜாதா ஆசிரியராக இருந்த காலம்),சென்னை நெசவாளர் கூடத்தில் டெக்ஸ்டைல் டிசைனராக பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.

சிறு பத்திரிக்கைகள் மற்றும் தீவிர இலக்கியங்களுக்கு நிறைய வரைந்துள்ளார்.

கோமலின் சுபமங்களாவில் இவர் வரைந்த நடுபக்க ஓவியங்கள் பெரிதாக சிலோகிக்கப்பட்டது.ஆனந்த விகடனில் மருது வரைந்த அனேக ஓவியங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது .

ஜனரஞ்சக பத்திரிக்கைகள் மற்றும் சிறு பத்திரிக்கைகளின் அன்பை ஒரு சேர பெற்ற ஓவியர்களில் மருது குறிப்பிடத்தக்கவர்.

தேவதை,அசுரன் மற்றும் மூன்று NFDC சினிமாக்களின் கலை இயக்குனராக மருது பணிபுரிந்துள்ளார்.

இது தவிர பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்பெஷல் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.அவற்றில் ராஜகாளியம்மன்,பாளையத்தம்மன்,நாகேஸ்வரி,நைனா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தமிழ், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது தீராத காதல் கொண்ட மருது தமிழின் முண்ணனி இலக்கியவாதிகளை கோட்டோவியத்தில் பதிவு செய்துள்ளார்.









நன்றி : அந்திமழை

ஞாயிறு, 3 நவம்பர், 2013

காவலர்களுக்கு நூலகம் உருவாக்கிய திருவாரூர் எஸ்.பி.



தொலைக்காட்சி ஆதிக்கத்தினால் புத்தகம் வாசிக்கும் பழக்கமே மிகவும் அரிதாகிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.



திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ் இங்குள்ள காவலர்கள் படிப்பதற்காக நீண்ட தூரம் செல்வதை பார்த்து நூலகத்தை உருவாக்கியுள்ளார்.



இது தொடர்பான கட்டுரை தினமலர் - வாரமலரில் இன்று வெளியாகியுள்ளது.



அது அப்படியே உங்கள் பார்வைக்கு.



ஒரு மாவட்டத்திற்கு, கண்காணிப்பாளராக இருந்தோமா, சட்டம் ஒழுங்கு, குற்றங்களை பார்த்தோமா என்றுதான், பெரும்பாலான, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருக்கின்றனர். இதில், சிலர் விதிவிலக்கு. அவர்களில் ஒருவர்தான், காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ்., திருவாரூர் மாவட்ட, காவல் துறை கண்காணிப்பாளர்.




இவர், வாரமலர் இதழில், இடம் பெற காரணம், கான்ஸ்டபிள்களும், தன்னைப் போல, ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர வேண்டும் என்பதற்காக, இவர் எடுத்துள்ள முயற்சிகள்தான். உயர் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் உட்பட, அனைத்து பிரிவு போலீசாரையும், இதில், ஸ்பான்சர்களாக சேர்த்து, போலீசாருக்கென்றே ஒரு நூலகத்தை ஆரம்பித்துள்ளார்.






இந்நூலகத் திற்கு, எஸ்.பி., முதல் கான்ஸ்டபிள் வரை, புத்தகங்களை வழங்கியுள்ளனர். தவிர, ஒவ்வொரு போலீசாரும், சுழற்சி முறையில், மாதந்தோறும், ஒரு நாளிதழ், வார இதழை, தங்கள் சொந்த செலவில், வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில், அரசு நூலகம் போன்று, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.






ஆயுதப்படை டி.எஸ்.பி., திருமலைகுமார் கூறியதாவது:

அரசு நூலகம் அமைக்க, சொந்தக் கட்டடம் இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில், கடந்த, 2000ம் ஆண்டிலிருந்து, நூலகத்திற்கான, கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 




 தற்போது, போலீஸ் குடியிருப்பு ஒன்றை, தற்காலிக நூலகமாக, மாற்றியுள்ளோம். டேபிள், சேர்களை சொந்த செலவில், எஸ்.பி., வழங்கியுள்ளார். நூலகம், தற்போது, தினமும் காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையிலும் இயங்குகிறது. விடுமுறை கிடையாது. கர்ப்பிணி பெண் போலீஸ் ஒருவரை, நூலகராக நியமித்துள்ளோம்.




தற்போது, ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., மற்றும் போலீஸ் தேர்வுக்கான, நூல்களை வைத்துள்ளோம். போலீஸ் குடும்பங்கள் மட்டுமே, தற்போது, உறுப்பினர்களாக உள்ளனர். விரைவில், அரசு நூலகத்துடன் இணைந்து, இன்னும், புதுவித திட்டங்களை உருவாக்க உள்ளோம்.






Image Credit : dinamalar.com



 இதற்கு வித்திட்ட, மாவட்ட எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் கூறுகையில், 'நான், எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அங்குள்ள போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், ஏதாச்சும் செய்யணும்ன்னு நினைப்பேன்.



ராமநாதபுரத்தில் வேலை செஞ்சப்போ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். திருவாரூக்கு வந்த பின், படிப்பதற்காக, போலீசார், நீண்டதூரம் சென்றனர். அதை பார்த்த பின் தான், நூலகம் அமைக்கும் எண்ணம் உருவானது.



'முக்கியமாக, ஐ.பி.எஸ்., தேர்வுக்கு தயார் செய்வது குறித்து, கூடுதல் எஸ்.பி., ஒருவர் மூலம், பயிற்சி அளித்தோம். பயிற்சிக்கு பின், அந்த கூடுதல் எஸ்.பி., தன் நூல்களை எல்லாம், இங்கே கொடுத்து விட்டார். அதேபோல், நான் உட்பட, மாவட்ட போலீஸ் அதிகாரிகள், ஏதாவது விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, நூல்களை மட்டுமே பெற்று, நூலகத்திற்கு வழங்குமாறு கூறியுள்ளேன். இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு...' என்றார்.



இவர், விவசாய பட்டப்படிப்பு படித்தவர் என்பதால், தற்போது ஆயுதபடை மைதானத்தை சுற்றி, பலவகை பழ மரங்களை நட்டு, பராமரித்து வருகிறார். தவிர, ஆலமரத்தின், கிளைகளை வெட்டி, மைதானத்தில் நட்டு, நிழல்தரும் வகையில், வளர ஏற்பாடு செய்துள்ளார்.



தொடர்புக்கு இமெயில் முகவரி: skmaheships@gmail.com



-----------

இந்த கட்டுரையை தினமலர் இணையதளத்தில் படிக்க...


சனி, 2 நவம்பர், 2013

ரோஷித் ஷர்மா 209 (கிரிக்கெட், தீபாவளி சரவெடி)





ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டியில் 200 ரன்னை கடந்தார்



தீபாவளி அன்று சரவெடி வாண வேடிக்கை நிகழ்த்தி158 பந்துகளில் 12 நாலு ரன்கள், 16 ஆறு ரன்கள்  உட்பட 209 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மாவுக்கு பாராட்டுக்கள்.



சச்சின்,

சேவக் வரிசையில்

ரோஹித் ஷர்மா.



ஆனால் ரன் வரிசையில்

சேவக் - 219 (149 பந்து)

ரோஹித் ஷர்மா - 209 (158 பந்து)

சச்சின் 200 நாட் அவுட். (147 பந்து)

இந்திய அணியின் மொத்த ஓட்டங்கள் 383/6



அப்படியே இந்த மேட்ச் வின் பண்ணினா நல்லா இருக்கும்.



---------------------

3-11-2013 அதிகாலை அப்டேட் செய்தது இங்கே....



7வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.





இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆறு போட்டிகளின் முடிவில், தொடர் 2-2 என சமநிலை வகித்தது. ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.



மறுமுனையில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தோகர்டி, மேக்ஸ்வெல், பால்க்னர் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். மெக்கே வீசிய 50வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர், 158 பந்தில் 16 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 209 ரன்கள் எடுத்து அவுட்டானார்.இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் தோகர்டி 2, மெக்கே, பால்க்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



ஆஸி., தோல்வி: இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.  இறுதியில் ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.



ரோகித் சாதனை: 16 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா, அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்


புதன், 23 அக்டோபர், 2013

திருவாரூரில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு பயிலரங்கு





தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது. இங்கு சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற உள்ளது என மத்திய பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி.



தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு வரும் நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது. எல்.வி.பிரசாத் அகடமி இயக்குனர்  ஹரிஹரன் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளார். சினிமா மீது ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் பங்கு பெற்று பயன்பெறலாம்.



ஒரு கல்லூரியில் இருந்து அதிக பட்சமாக 5 நபர்கள் பங்கு பெறலாம் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 30. மேலும் இது குறித்து தகவல் தெரிந்து கொள்ள மற்றும் உங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆதி இராமானுஜம் துணைபேராசிரியரை 9176643777 என்ற தொலைபேசி எண்ணிலும் athiramanujam@cutn.ac.in  என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.



திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் காட்சித்தொடர்பியல் துறை (Visual Communication) சுய நிதிப்பிரிவாக இயங்கிவருகிறது. அந்த மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பெரிய நகரங்களில் படிப்பவர்களுக்கு, வசிப்பவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி கிடைக்கலாம். இந்த ரெண்டு நாள் கருத்தரங்கில் உலகத்தையே புரட்டிப்போடுற மாதிரி படம் எப்படி இருக்கணும்னு புரிஞ்சுடப்போகுதான்னு சிலர் நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரை அவனளவில் பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் என்பதற்கு யாராவது சொன்ன நல்ல வார்த்தைகளாகவோ, யாராவது அவமானப்படுத்திய சம்பவமாகவோ அல்ல்து எதாவது புத்தகம் படிக்கும்போது சட்டென்று ஸ்பார்க் ஆக வைத்த இரண்டு வரிகளாகவோ, ஒரு மணி நேரம் நம்முடன் பயணம் செய்த நபர் சொன்ன வார்த்தைகளாகவோ இருக்கலாம்.



திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அவ்வப்போது பல துறைகளிலும் எதாவது கருத்தரங்கங்கள், வகுப்புகள் என்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எந்த அளவு மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.



இது போன்ற நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் சமீப காலமாகத்தான் வெளியில் தெரிகின்றன.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதளம்



பிரசாத் அகாடமி








 Image Credit : PrasadAcademy.com





******************************************************

டொமை நேம் ரிஜிஸ்ரேஷனுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி.

(இப்போது சொல்லப்போகும் தகவல்கள் பலரும் அறிந்த ஒன்றுதான்)





mullaicomputers.com என்ற வார்த்தைகளை கூப்பனாக பயன்படுத்தினால் Big Rock.in இல் டொமைன் நேம் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு, புதுப்பித்தலுக்கு போன்றவற்றுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. யுஆர் எல் முகவரி - http://www.bigrock.in/



வலைப்பூ எழுதும் பலரும் தற்போது சொந்த டொமைன் வைத்திருக்கிறார்கள். நானும் கூகிள் மூலம் நேரடியாக அதே போல் டாட்.காம் வாங்க முயற்சித்தேன். கிரடிட் கார்டு இருந்தால் மட்டும் வாங்க முடியும் என்ற நிலை இருந்ததால் விட்டுவிட்டேன். பிறகு பிக்ராக் மூலம் பெயரை ரெஜிஸ்டர் செய்துவிட்டேன். ஆனால் ப்ளாக்கை எப்படி Hosting செய்வது என்று தெரியாமல் ஆறு மாதங்கள் writersaran.com ஐ பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கற்போம்.காம் தளத்தில் பிரபுகிருஷ்ணாவுக்கு மெயில் அனுப்பி கேட்டதில் அவர் வழிமுறைகளை தெரிவித்து பதில் அனுப்பினார். கூகிளிலில் தேடினாலும் தெளிவான விளக்கங்களுடன் நிறைய கட்டுரைகள் கிடைக்கும். (எனக்குதான் ஆங்கிலம் தகராறு)



எவ்வளவோ எஸ்டென்ஷனுடன் டொமைன் நேம் இருந்தாலும் இப்போதும் பலருடைய முதல் சாய்சாக இருப்பது .com தான். அது நான் வாங்கும்போது 500 ரூபாயாக இருந்தது. அடுத்து ஒரு ஆண்டு புதுப்பிக்கும்போது 599 என்று நினைக்கிறேன். இப்போது 659 ரூபாயாகிவிட்டது. (எல்லாம் டாலர் மதிப்பு செய்யும் மாயம்)



தீபாவளி ஆஃபர் இருப்பதால் கொஞ்சம் விலை குறைவாக வாங்க நினைப்பவர்கள் இப்போது முயற்சிக்கலாம்.



mullaicomputers.com என்ற கூப்பனை பயன்படுத்தினால் கூடுதலாக கொஞ்சம் டிஸ்கவுண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பிறகு உங்கள் டொமைன் நேமும் கூப்பனாக பயன்படும். அதை வைத்து பலர் டொமைன் வாங்கும்போது உங்களுக்கும் சில ஆபர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பண பலன் நேரடியாக கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு வேறு சில ஆப்ஷன்ஸ் இருக்கிறது. அவற்றை http://www.bigrock.in/  தளத்திற்கு போனால் அறிந்துகொள்ளலாம்.


ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

திருவாரூரில் கும்பாபிஷேகம்









திருவாரூரில் ஓடும் ஆழித்தேரின் பெருமைகள் நிறைய பேர் அறிந்ததுதான். அந்தத் தேர் திருவிழாவுக்கு பிள்ளயார் சுழி போடப்படுவது திருவாரூரை ஓட்டிய மருதம்பட்டினத்தில் உள்ள உள்ள அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கும்.



கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிதிலமடைந்திருந்த ஒரு சிவாலயத்தின் நுழைவாயில் மொட்டைக்கோபுரமாக இருந்த இடத்தில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



















திருவாரூர் பெரிய கோயிலில் ஆழித்தேரோட்ட திருவிழாவான பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான தொடக்க நிகழ்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரர், மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வருவார். அங்கு பூமிக்குரிய பூஜைகள் முடிந்த பின்பு திருமண் எடுத்துச்சென்று முளைப்பாலிகை வளர்த்துதான் திருவாரூரின் பெரிய கோயிலில் கொடியேற்றம் நடைபெறும்.





ஆலயம் உருவான காலம் உறுதியாக தெரியவில்லை. ஆலய அர்ச்சகருக்கு தெரிந்து கடந்த 60ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெற்றதில்லையாம். ஆனால் பஞ்ச பாண்டவர் ஐவரும் தனித்தனியே ஒரு லிங்கம் வைத்து பூஜித்த பெருமைக்குரிய தலம் இது என்று செவிவழிச்செய்திகள் உலா வருகின்றன.





மகாபாரதகாலத்திலேயே தருமன், பீமன், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதாக பெருமைக்குரிய மருதவனம் என்று அழைக்கப்பட்டு இப்போது மருதம்பட்டினம் என்று வழங்கப்படும் ஊரில் இருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு மதுரபாஷினி அம்பிகா சமேத அபிமுக்தீஸ்வரர் சுவாமி ஆலயம் உருவான காலம் தெரியவில்லை. இதை வைத்து பார்க்கும்போது இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் ஆகி பல ஆண்டுகள் ஏன் சில நூறு ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். மிகவும் சிதிலமடைந்திருந்த இந்த ஆலயம் பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்டு மகாமண்டபமும் மூன்று நிலைகளில் நூதன ராஜகோபுரமும் அமைக்கப்பட்டு இன்று செப்டம்பர் 1ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.



 
































தஞ்சமடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருபவர் அபிமுக்தீஸ்வரர். பாண்டவர்கள் கவுரவர்களால் அஞ்ஞான வாசம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்த பிறகு நாடு விட்டு நாடு போய்க்கொண்டே இருந்தார்களாம். அப்போது ஐந்து பேரும் இணைந்து ஒரு இடத்தில் தனித்தனி லிங்கங்கள வைத்து வழிபட்ட தலம்தான் மருதம்பட்டினம். மூலவர் அபிமுக்தீஸ்வரர் சற்று பெரிய லிங்க ரூபத்தில் தரிசனம் தருகிறார். அந்த கருவறையைச் சுற்றி நான்கு மூலைகளிலும் தனித்தனி விமானத்துடன் நான்கு லிங்கங்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன. கிழக்கு முகமாக இரண்டு. மேற்கு முகமாக இரண்டு. இது அபூர்வமான அமைப்பாகும்.





மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் கோயிலில் தற்போது முதலில் வரவேற்பது மூன்று நிலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம். திருப்பணிக்கு முன்பு இது மொட்டை கோபுரமாக இருந்தது.


அதனைக்கடந்து வெளிப்பிரகாரத்தினுள் நுழைந்தால் பிரமாண்டமான மகாமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் நந்திபகவான் வீற்றிருக்கிறார். பழைய ஆலயத்தில் நந்திபெருமானுக்கு மட்டும் சின்னதாக மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. நந்தியம்பெருமானிடம் உத்தரவு பெற்று கருங்கல் தூண் மற்றும் மேற்கூரையுடன் அமைந்த பழமையான மகாமண்டபத்தினுள் நுழைகிறோம். 





எதிரே மூலவர் அபிமுக்தீஸ்வரர் அருள் பொங்க காட்சி தருகிறார். வடக்கே அம்பாள் மதுரபாஷிணி தென்முகமாக தோற்றமளிக்கிறாள். தமிழில் தேன்மொழியாள், இனிமையான குரல்வளம் மிக்கவள் என்று பொருள். மூலவரையும் அம்பாளயும் தரிசித்து விட்டு வெளியே வரலாம். பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் ஏற்கனவே சிதிலமடைந்து பாழடைந்திருந்த மடப்பள்ளி நல்ல முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. பிரகார வலம் வந்தால் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நதி உள்ளது. தெற்கில் குருதெட்சிணாமூர்த்தி தரிசனம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெறும்.





பிரகாரத்தின் மேற்கில் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலெட்சுமி சந்நதிகள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளன.  மூலவர், அம்பாள் விக்ரஹகங்களும், நன்கு லிங்கங்களும் சமமாக ஒரே உயரமுள்ள கருங்கல் பீடத்தில் அமைந்துள்ளன.





திருக்கார்த்திகைக்கு சுப்பிரமணியர் சுவாமி வீதி உலாக்காட்சி உண்டு. பிரதோஷ வழிபாடும், மாசி மாத சிவராத்திரியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





பாண்டவர்களின் வேதனை தீர்த்த இந்த தலத்தை நாடி வந்தவர்கள் அனைவரது துயங்களயும் போக்கும். நம்பி வந்தோருக்கு நலம் யாவும் நல்கும் இறைவன் இத்தல நாயகர்.





திருவாரூர் பெரிய கோயிலுக்கு கிழக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்மயிலாடுதுறை இருப்புப்பாதையை கடந்ததும் சற்று தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்தும், பெரிய கோயிலிலிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.





மதுரபாஷினி அம்பிகா சமேத அபிமுக்தீஸ்வரர் சுவாமியின் அனுக்கிரஹத்தால் பழமையான இந்த ஆலயத்தின் திருப்பணியை முன்னின்று பெரும் பொருட்செலவில் செய்த திரு & திருமதி சந்திரிகா ராஜ்மோகன் குடும்பத்தாருக்கும், இன்னும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த திருப்பணியில் பங்கேற்ற அனைவருக்கும், கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த ஊர் பொதுமக்களுக்கும், இந்த மஹா கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்த ACN  கேபிள் தொலைக்காட்சி நிர்வாகிக்கும், ஆகமவிதிகள் படி யாகசாலை பூஜைகள் செய்த சிவாச்சாரியார்களுக்கும் இன்னும் இந்த மாபெரும் விழாவின் பின்னணியிலும் முன்னணியிலும் இருந்து தொண்டு செய்த அனைத்து உள்ளங்களுக்கும் சிவனடியார்க்கும் ஒரு எளிய பக்தன் என்ற முறையில் இவர்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களை பிரார்த்திக்கிறேன்.





கும்பாபிஷேக விழா குறித்த முந்தைய இடுகைக்கு செல்ல...



கும்பாபிஷேக படங்கள் பின்னர் பதிவேற்றப்படும்...





ஞாயிறு, 21 ஜூலை, 2013

திருவாரூரில் திருவிழா



ஒரு குடும்பத்தில் நடைபெறும் விழாவாக இருந்தால் இந்த தலைப்பு பொருத்தமற்றதாக இருக்கும். ஆனால் நாங்கள் இந்த விழாவில் எதிர்பார்த்த கூட்டத்தை விட மிக அதிகமாகவே பக்தர்கள் கூடினர். ஒரு விழாவை நடத்துபவர்களுக்கு சந்தோஷமே அதைக்காண வரும் பக்தர்களின் கூட்டம்தான்.















இந்த கும்பாபிஷேக பணிகள் காரணமாக தொய்வடைந்திருந்த என் சொந்த அலுவல்களில் கவனம் செலுத்துவதால்  கும்பாபிஷேகம் குறித்த விரிவான பதிவை பின்னர் வெளியிடுகிறேன்.



நாளிதழ் செய்திக்கு அனுப்பிய வரிகளை இங்கே இணைத்திருக்கிறேன்.



திருவாரூர் திருமஞ்சனவீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயம் புதுப்பித்து புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 11ஆம் தேதி முதல் பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.50 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் வே.ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.மூர்த்தி, என்.ராமு, தொழிலதிபர்கள் சக்தி மரவாடி பழனிகுமார், அமுதா ஏஜென்சி சந்திரசேகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கைங்கர்ய பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதவண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


வியாழன், 11 ஜூலை, 2013

திருவாரூரில் விசேஷம் - வாய்ப்பிருப்பவர்கள் வந்துவிடுங்கள்



மனிதன் நிறைய கேட்க வேண்டும். கொஞ்சமாக பேச வேண்டும் என்பதால்தான் இரண்டு காதுகளும், ஒரு வாயும் இருக்கிறது என்று சொல்வார்கள். இந்த சூட்சுமத்தை மறைமுகமாக நமக்கு உணர்த்துவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.



லேட்டஸ்ட்டா செல்போனில் கூட இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் செய்ய கட்டணம் என்ற சாதாரண வியாபார தத்துவம் கூட அதிகமாக பேசாதே என்று கூறுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.



ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் பதிவை மேலே தொடரவும்.




பிள்ளையார் உருவத்திற்கு யானையின் முகத்தை வைத்து, பெரிய காதுகள், வாயை மறைத்திருக்கும் தும்பிக்கை என்று உருவம் வரையறுக்கப்பட்டிருப்பது கூட அதிகம் பேசாதே என்ற தத்துவத்தைதான் குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். அதிலும் யானையின் வாயை மறைத்து தும்பிக்கை முன் இருக்கும். அதாவது பேச்சை விட செயல் முக்கியம் என்ற கருத்துதானே இது. யானையின் தும்பிக்கையால் எவ்வளவோ பலமான காரியங்களை செய்யலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.



பிள்ளையார் கடவுள் உருவத்தின் பின்னால் எண்ணற்ற கதைகளும் தத்துவங்களும் இருக்கின்றன. இணையத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த தளங்களின் சுட்டிகளை பிறகு தருகிறேன்.



வரும் ஞாயிறு 14-07-2013 அன்று திருவாரூர் நகரத்தில் இரண்டு ஆலயங்கள் புதுப்பித்து கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதலாவதாக ஞாயிறு காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவாரூரில் புகழ்பெற்ற ஆழித்தேர் நிலைகொண்டிருக்கும் கீழவீதியில் பிள்ளையார் தேருக்கு அருகில் மாணிக்கவல்லி உடனுறை கைலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்.



அடுத்ததாக திருவாரூர் திருமஞ்சனவீதியில் (ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 14.07.2013 ஞாயிறு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.



திருவாரூரில் உள்ளவர்கள் மட்டுமல்ல. வாய்ப்பிருக்கும் அனைவரும் கும்பாபிஷேக தரிசனம் செய்ய வருமாறு பக்தர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நான்குகால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு, கும்பாபிஷேகம் தரிசனம் செய்தால் 12 ஆண்டுகள் ஆலயத்திற்கு சென்று வழிபட்ட பலன் உண்டு என்பது ஐதீகம்.



அருள்மிகு பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 1973 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு 25 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.



பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1

பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1



-------------------------------------------------------



திருவாரூரில் ஞான விநாயகர் ஆலயம் தீயணைப்புத்துறை மற்றும் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் முன் மண்டபம் மட்டும் புதிதாக கட்டப்பட்டு 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2014ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.



--------------------------------------------------------








































































திருவாரூர் தேர் திருவிழா புகழ்பெற்றது என்று நிறைய பேருக்கு தெரியும். தேரோட்டம் நடைபெறுவதற்குரிய பங்குனி உத்திர திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்னர் பூர்வாங்க பூஜைகள் சண்டிகேஸ்வரர் உற்சவர் முன்னிலையில் திருவாரூர் பெரிய கோயிலுக்கு தென் கிழக்கில் சுமார் ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருதம்பட்டினம் கிராமத்தில் மதுரபாஷினி சமேத அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் நடைபெறும். ஆலயத்தின் மூலவர் இருக்கும் கருவறையை சுற்றி வெளி பிரகாரத்தில் நான்கு லிங்கங்களுடன் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ள  இந்த ஆலயம் மிகப் பழமையாக சிதிலமடைந்து மொட்டை கோபுரத்துடன் காணப்பட்டது. மேலும் மகாலட்சுமி, சுப்பிரமணியர், பைரவர் சன்னதிகள் தரைமட்டமாக இடிந்துவிட்டன. சுமார் 75 வயதாகும் அந்த ஆலய அர்ச்சகருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த ஆலயத்தின் நிலை பற்றி ராணி, தினமணி கதிர், குமுதம் பக்தி ஸ்பெஷல், தினகரன் ஆன்மீகமலர், தினத்தந்தி குடும்பமலர் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.





இறைவன் திருவருளால் அரசிடம் உரிய அனுமதி பெற்று சென்னையில் உள்ள பெரிய தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்தினர் திருப்பணி செய்து வருகிறார்கள். பைரவர், மகாலெட்சுமி, சுப்பிரமணியருக்கு மீண்டும் புதியதாக சன்னதிகள், வெளிப்பிரகாரத்தில் முன்மண்டபம், மொட்டை கோபுர நுழைவாயிலில் மூன்று நிலைகளில் புதிய ராஜகோபுரம் என்று சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளன.





அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் விஜய வருஷம் ஆவணி 16ஆம் தேதி 01.09.2013 அன்று நடைபெற உள்ளது. இது பற்றி விரிவான பதிவு, புகைப்படங்களுடன் விரைவில் வெளிவரும்.