Search This Blog

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கோவை தீ விபத்திற்கு யார் காரணம்



இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற அடிப்படையில் ஒருவர் விரல் மற்றொருவரையே சுட்டிக்காட்டும்.  இந்த விபத்து நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை, காவலர்கள், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள். மனிதனின் திறமை அளவிடமுடியாதது. அது ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காகவும், பூகம்பம், வெள்ளம் போன்று எதிர்பாரா இயற்கை பேரிடர் காலங்களிலும் பயன்படுத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தால் அங்கிருக்கும் மக்கள் தாங்களாகவே மிக சுலபமாக தப்பியிருக்க முடியும்.




ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? ரொம்ப அடிமட்டத்துல வாழ்றவன்தான் அவனுக்கு கிடைச்ச 6 அடி அகலமுள்ள இடத்தைக்கூட வீடா மாற்றி வாழ்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுறான்னா, வசதிபடைத்தவர்கள் கூட தீப்பெட்டியை அடுக்கியதுபோல பக்கத்து கட்டிடத்து சுவரின் மீது இவர்கள் சுவரையும் வைத்து பசைபோட்டு ஒட்டுனது மாதிரி கட்டுறாங்க.



அதோட நிறுத்துறாங்களா? இயற்கை காற்றோட்ட பாதையை தடுத்து நிறுத்திட்டு ஏசி மெசினை மாட்டி குளோபல் வார்மிங், மின் பற்றாக்குறை இப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாயிடுறாங்க. உண்மையில் சில இயந்திரங்களை பாலைவனத்திலும், பனிப்பொழிவு பிரதேசத்திலும் நார்மலான வெப்பநிலையில் வைத்திருக்கவே ஏசி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? மனித உடம்பில் உள்ள உறுப்புக்கள் 34 டிகிரி என்ற வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைக்குமாம். ஆனால் நாம் குளிர் அறையில் சுகமாக தூங்குவதாக நினைத்து நாட்டையும் நம் உடம்பையும் கெடுத்துவைத்துக்கொண்டிருக்கிறோம். இதுபற்றி விளக்கமாக எழுதினால் ஆயிரம் பக்கங்களை தாண்டிச்செல்லும்.



சுருக்கமாக சொன்னால் ஒரு ............ அலுவலகத்தில் கிளர்க் வேலை பார்க்கும் நபர் அந்த இருக்கையில் அமராமல் மேலதிகாரியின் மனைவிக்கு .............. வாங்கிக்கொடுக்கவோ அல்லது அந்த அதிகாரியின் மச்சானை ஊர்சுற்றிப்பார்க்க அழைத்துச்சென்றாலோ என்ன ஆகும்? அந்த அலுவலகத்தில் அந்த நபர் பார்க்க வேண்டிய வேலை தேங்கி விடும். (இதனால்தான் பல .......... அலுவலகங்களில் இன்று போய் அடுத்த வாரம் வாங்க என்ற வாசகம் பிரபலம்) நம் உடலிலும் நமக்கு தெரியாமலே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கிட்னி இரவு நேரங்களில் தன்னுடைய வேலையை அவ்வளவாக செய்வதில்லையாம். அப்போ அது எந்த ஆபிசர் வீட்டு வேலையை பார்க்க போகுதுன்னு ஒரு சந்தேகம் வரலாம்.



நாம் கொசுக்கடி மற்றும் வெப்பத்துக்கு பயந்து அறையின் ஜன்னல் மற்றும் கதவு அனைத்தையும் சாத்தி விட்டு தூங்கும்போது அறையின் காற்றில் உள்ள ஆக்சிஜன் நாம் 10 நிமிடம் உயிர்வாழத்தேவையான அளவுக்குதான் இருக்குமாம். அதாவது அறைக்கு வெளியில் உள்ள காற்று உள்ளே வந்து உள்ளே உள்ள உஷ்ணக்காற்று (கார்பன்டை ஆக்சைடு கலந்தது) வெளியில் போவது தொடர்ச்சியாக நடந்தால்தான் நம் உடல் உறுப்புகளுக்கு பிரச்சனை பிரச்சனை இருக்காது. அதாவது ஒரு பணியாளர் அவரது இருக்கையில் அமர்ந்து அவருக்குரிய வேலையை செய்வார்.



அப்போ 10 நிமிசத்துல ஆக்சிஜன் தீர்ந்துட்டா நாம செத்தா போயிட்டோம். காலையில நல்லாத்தானே எழுந்திரிக்கிறோம்னு ஒரு சந்தேகம் வரலாம். மனித உடம்பு ஒரு அற்புதமான கூகிள். ஆக்சிஜன் காத்துல இல்லையா, அப்போ உடம்புல எங்க இருக்குன்னு தேடும்போது அது கண்ணுல கிட்னியில இருக்குற தண்ணியோட மூலக்கூறு H2O வை கவனிக்கும். உடனே மூளை கிட்னிக்கு ஒரு ஆர்டர் போட்டு, டேய் நீ சிறுநீர்ல உப்பை பிரிச்சது போதும். உடனே H2O-வுல ஆக்சிஜனை மட்டும் பிரிச்சு அனுப்பிவை அப்படின்னு ஆர்டர் போடும். அப்போ அது நீர்ல உப்பை பிரிச்சு சிறுநீர் வழியா அனுப்புற வேலை என்னாகும். உப்பு சேர்ந்து கட்டியாகும். கிட்னியில கல் சேர்றது எப்படின்னு புரியுதா?



கிட்னியில கல் சேர்றதுக்கு காரணம் கிட்னி ஒழுங்கா வேலை செய்யாம இல்லை. அது என்ன மனுசனா, அது செய்ய வேண்டிய வேலையை நிறுத்திட்டு ஆபிசருக்கும், அரசியல் வியாதிகளுக்கும் ஜால்ரா போடுறதுக்கு. கிட்னியை வேலை செய்ய விடாம தடுக்குறது மனுசன்தான். இப்படி உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய வேலையை செய்ய விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு நாம யார்யாரையோ குற்றம் சொல்லிகிட்டு இருக்கோம்.



நூற்றாண்டு கண்ட வங்கி கட்டிடம் பிரமாண்டமா இருக்கும். கட்டிடத்தை சுற்றி சுமாரா 20 அடி காலியிடம் அந்தப்பகுதியில் மரங்கள். கட்டிடத்தின்  ஒவ்வொரு தளமும் சுமார் 14 அடி இருக்கலாம். பக்கவாட்டுல 6 அடி உயர ஜன்னல். லிண்டல் மட்டத்தை தாண்டி மேல்தள சீலிங்கை ஒட்டியும் பக்கவாட்டு சுவற்றில் சுமார் 2 அடி உயரம், 2 அடி அகலம் என்ற அளவில் வெண்டிலேட்டர். கட்டிடத்தை சுற்றி எல்லா பக்கமும் வெளியேற பாதை. இப்படி மின்விசிறிக்கு கூட அவ்வளவா தேவை இல்லாம, பகல்ல மின் விளக்கு தேவையே இல்லாம இருந்த இடம் இன்னைக்கு சுற்றிலும் கண்ணாடியை ஒட்டிகிட்டு சூரிய வெளிச்சம் மட்டுமல்ல வெளி காற்று கூட உள்ளே நுழைய முடியாம ஏசி இயந்திரத்தோட தன் தனித்தன்மையை இழந்துட்டு நிக்கிது.



வெளிநாட்டுக்காரங்க அவங்க நாட்டு சீதோஷ்ண நிலையினால் குளிர் தாங்காம வடிவமைச்ச கட்டிடங்களைப் பார்த்து நாம சூடுபோட்டுகிட்டே இருக்கோம். ஏப்ரல், மே மாதங்கள்ல நம்ம நாட்டுல சாதாரணமா ரோட்டுல நடந்துபோனா கூட நம்ம உடம்பு தீப்பிடிக்கும்போல இருக்கு. இந்த லட்சணத்துல அரசு அலுவலகங்கள் கூட காற்றோட்டமான சூழ்நிலையை விட்டுட்டு இப்படி ஏசி இயந்திரத்தோட மக்கள் உடல் நலத்தையும் கெடுத்துட்டு, ஒரு ஆபத்துன்னா தப்பிக்க வழி இல்லாத அளவுக்கு கேவலமான முறையில வடிவமைக்கப்படுது.



சட்டம் ஒரு வலை மாதிரி. அதுல சுறா, திமிங்கிலங்கள் மாட்டுவதே இல்லை. அப்பாவி சின்ன மீன்கள் மட்டுமே மாட்டுகின்றன என்று ஒரு வாக்கியம் உண்டு. இப்போது கட்டப்பட்டு வரும் வீடுகள், வணிக வளாகங்களை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. இடிந்து விழக் காத்திருக்கும் எங்கள் வீடு இருக்கும் மனையின் அகலம் 18 அடி இருக்கும். அதில் இரண்டு பக்கமும் தலா மூணரை அடி இடம் விட்டு 11 அடி அகலத்தில் கட்டிடம் கட்டலாம் என்று திட்டமிட்டோம். இதுக்கே ஆயிரத்தெட்டு சிக்கல்கள். மலைமுழுங்கி அதிகாரிகள் பிரச்சனையால் எதுவும் செய்யாமல் நிறுத்திவைத்திருக்கிறோம். ஆனால் பல மோசமான நபர்கள் 18 அடி அகலமுள்ள மனையில் 19 அடிக்கு கட்டிடம் கட்டுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.



எனக்குத் தெரிந்து ஒரு அரசு ஊழியர் (அவரது மனைவியும் அரசு ஊழியர்தான்) பக்கத்துவீட்டுக்காரர் காற்றோட்டத்துக்கு இடம் விடாமல் கட்டினார் என்று புகார்வாசித்தார். நீங்கள் எவ்வளவு இடம் விட்டு கட்டினீர்கள் என்று கேட்டேன். அதற்குள் அவர் எஸ்கேப். கணவனும் மனைவியும் மாதசம்பளமாக சுமார் 1 லட்சம் பெறுகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் இரண்டு மனைகள் வாங்கி சுற்றிலும் இடம் விட்டு பசுமையான சூழ்நிலையில் வீட்டை அமைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் பிசிறு தட்டாமல் இவர்கள் இடத்தில் லஞ்சம் கொடுத்து வீடு கட்டிவிட்டு வெப்பத்தை சமாளிக்க ஏசி போட்டுவிட்டார்கள். இவரைப்போன்றவர்கள் வீட்டை குளுமையாக்கி நாட்டை நெருப்புக்கோளமாக்குகிறார்கள்.



வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் இயன்றவரை காற்றோட்டமுள்ள வீடாக கட்டிக்கொள்வது நாட்டுக்கும் அவர்களுக்கும் நன்மை அளிக்கும். அதுபோல பெரிய வணிக வளாகங்கள் கட்டுபவர்கள் ஆபத்து காலத்தில் மக்கள் சிரமமின்றி வெளியேறும் வகையில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது யார் காதிலும் விழுவதாக தெரியவில்லை.

-----------------------------

2013-2014 கல்வியாண்டில் இருந்து மிகவும் சிரம நிலையில் இருக்கும் அரசுப்பள்ளி குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என்று போன ஆண்டு தீர்மானித்திருந்தோம். அதன்படி இருபது பேர் ஆளுக்கு சுமார் ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தால் கிடைக்கக்கூடிய 10ஆயிரம் ரூபாயை வைத்து எங்களால் முடிந்த அளவு உதவலாம் என்று தீர்மானித்து இப்போது செயலில் இறங்கியிருக்கிறோம்.



ஓரளவு வாய்ப்பு இருக்கக்கூடிய அனைவரும் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். இப்படி நான்கு பேர் ஒன்றாக சேர்வதற்கு வாய்ப்பில்லை என்றால் உங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்மணியின் குழந்தைக்கு உதவுவது கூட சேவைதான். (பலர் இப்படி வெளியில் தெரியாமல் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.) செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இது வரை செய்யாதவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்.

--------------------------------------

கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு, ஆலயத்திருப்பணிகள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்காக...



இளையபாரதம் தளத்தின் முகப்பில் இருக்கும் கும்பாபிசேக அறிவிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த ஆலயம் இருக்கும் தெருவில்தான் எங்கள் வீடு உள்ளது. சில சூழ்நிலைகளின் காரணமாக சிதிலமடைந்திருந்த இந்த ஆலயத்தை 2009ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து முழுவதுமாக இடித்துவிட்டு மீண்டும் புதியதாக கட்டியுள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிசேக விழா வரும் 14.07.2013 அன்று நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தில் தட்டு ஓடு போடும் பணியும் ஆலயம் முழுவதும் வர்ணப்பூச்சு செய்ய வேண்டிய பணியும் யாகசாலை செலவுகளும் காத்திருக்கின்றன. உள்ளூர்வாசிகள் நேரடியாக கோயிலுக்கே வந்து விபரம் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் writersaran@gmail.com க்கு மெயில் அனுப்பினால் தகவல் தெரிவிக்கிறோம்.


கோவை தீ விபத்திற்கு யார் காரணம்

இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற அடிப்படையில் ஒருவர் விரல் மற்றொருவரையே சுட்டிக்காட்டும்.  இந்த விபத்து நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை, காவலர்கள், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள். மனிதனின் திறமை அளவிடமுடியாதது. அது ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காகவும், பூகம்பம், வெள்ளம் போன்று எதிர்பாரா இயற்கை பேரிடர் காலங்களிலும் பயன்படுத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தால் அங்கிருக்கும் மக்கள் தாங்களாகவே மிக சுலபமாக தப்பியிருக்க முடியும்.

ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? ரொம்ப அடிமட்டத்துல வாழ்றவன்தான் அவனுக்கு கிடைச்ச 6 அடி அகலமுள்ள இடத்தைக்கூட வீடா மாற்றி வாழ்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுறான்னா, வசதிபடைத்தவர்கள் கூட தீப்பெட்டியை அடுக்கியதுபோல பக்கத்து கட்டிடத்து சுவரின் மீது இவர்கள் சுவரையும் வைத்து பசைபோட்டு ஒட்டுனது மாதிரி கட்டுறாங்க.

அதோட நிறுத்துறாங்களா? இயற்கை காற்றோட்ட பாதையை தடுத்து நிறுத்திட்டு ஏசி மெசினை மாட்டி குளோபல் வார்மிங், மின் பற்றாக்குறை இப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாயிடுறாங்க. உண்மையில் சில இயந்திரங்களை பாலைவனத்திலும், பனிப்பொழிவு பிரதேசத்திலும் நார்மலான வெப்பநிலையில் வைத்திருக்கவே ஏசி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? மனித உடம்பில் உள்ள உறுப்புக்கள் 34 டிகிரி என்ற வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைக்குமாம். ஆனால் நாம் குளிர் அறையில் சுகமாக தூங்குவதாக நினைத்து நாட்டையும் நம் உடம்பையும் கெடுத்துவைத்துக்கொண்டிருக்கிறோம். இதுபற்றி விளக்கமாக எழுதினால் ஆயிரம் பக்கங்களை தாண்டிச்செல்லும்.

சுருக்கமாக சொன்னால் ஒரு ............ அலுவலகத்தில் கிளர்க் வேலை பார்க்கும் நபர் அந்த இருக்கையில் அமராமல் மேலதிகாரியின் மனைவிக்கு .............. வாங்கிக்கொடுக்கவோ அல்லது அந்த அதிகாரியின் மச்சானை ஊர்சுற்றிப்பார்க்க அழைத்துச்சென்றாலோ என்ன ஆகும்? அந்த அலுவலகத்தில் அந்த நபர் பார்க்க வேண்டிய வேலை தேங்கி விடும். (இதனால்தான் பல .......... அலுவலகங்களில் இன்று போய் அடுத்த வாரம் வாங்க என்ற வாசகம் பிரபலம்) நம் உடலிலும் நமக்கு தெரியாமலே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கிட்னி இரவு நேரங்களில் தன்னுடைய வேலையை அவ்வளவாக செய்வதில்லையாம். அப்போ அது எந்த ஆபிசர் வீட்டு வேலையை பார்க்க போகுதுன்னு ஒரு சந்தேகம் வரலாம்.

நாம் கொசுக்கடி மற்றும் வெப்பத்துக்கு பயந்து அறையின் ஜன்னல் மற்றும் கதவு அனைத்தையும் சாத்தி விட்டு தூங்கும்போது அறையின் காற்றில் உள்ள ஆக்சிஜன் நாம் 10 நிமிடம் உயிர்வாழத்தேவையான அளவுக்குதான் இருக்குமாம். அதாவது அறைக்கு வெளியில் உள்ள காற்று உள்ளே வந்து உள்ளே உள்ள உஷ்ணக்காற்று (கார்பன்டை ஆக்சைடு கலந்தது) வெளியில் போவது தொடர்ச்சியாக நடந்தால்தான் நம் உடல் உறுப்புகளுக்கு பிரச்சனை பிரச்சனை இருக்காது. அதாவது ஒரு பணியாளர் அவரது இருக்கையில் அமர்ந்து அவருக்குரிய வேலையை செய்வார்.

அப்போ 10 நிமிசத்துல ஆக்சிஜன் தீர்ந்துட்டா நாம செத்தா போயிட்டோம். காலையில நல்லாத்தானே எழுந்திரிக்கிறோம்னு ஒரு சந்தேகம் வரலாம். மனித உடம்பு ஒரு அற்புதமான கூகிள். ஆக்சிஜன் காத்துல இல்லையா, அப்போ உடம்புல எங்க இருக்குன்னு தேடும்போது அது கண்ணுல கிட்னியில இருக்குற தண்ணியோட மூலக்கூறு H2O வை கவனிக்கும். உடனே மூளை கிட்னிக்கு ஒரு ஆர்டர் போட்டு, டேய் நீ சிறுநீர்ல உப்பை பிரிச்சது போதும். உடனே H2O-வுல ஆக்சிஜனை மட்டும் பிரிச்சு அனுப்பிவை அப்படின்னு ஆர்டர் போடும். அப்போ அது நீர்ல உப்பை பிரிச்சு சிறுநீர் வழியா அனுப்புற வேலை என்னாகும். உப்பு சேர்ந்து கட்டியாகும். கிட்னியில கல் சேர்றது எப்படின்னு புரியுதா?

கிட்னியில கல் சேர்றதுக்கு காரணம் கிட்னி ஒழுங்கா வேலை செய்யாம இல்லை. அது என்ன மனுசனா, அது செய்ய வேண்டிய வேலையை நிறுத்திட்டு ஆபிசருக்கும், அரசியல் வியாதிகளுக்கும் ஜால்ரா போடுறதுக்கு. கிட்னியை வேலை செய்ய விடாம தடுக்குறது மனுசன்தான். இப்படி உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய வேலையை செய்ய விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு நாம யார்யாரையோ குற்றம் சொல்லிகிட்டு இருக்கோம்.

நூற்றாண்டு கண்ட வங்கி கட்டிடம் பிரமாண்டமா இருக்கும். கட்டிடத்தை சுற்றி சுமாரா 20 அடி காலியிடம் அந்தப்பகுதியில் மரங்கள். கட்டிடத்தின்  ஒவ்வொரு தளமும் சுமார் 14 அடி இருக்கலாம். பக்கவாட்டுல 6 அடி உயர ஜன்னல். லிண்டல் மட்டத்தை தாண்டி மேல்தள சீலிங்கை ஒட்டியும் பக்கவாட்டு சுவற்றில் சுமார் 2 அடி உயரம், 2 அடி அகலம் என்ற அளவில் வெண்டிலேட்டர். கட்டிடத்தை சுற்றி எல்லா பக்கமும் வெளியேற பாதை. இப்படி மின்விசிறிக்கு கூட அவ்வளவா தேவை இல்லாம, பகல்ல மின் விளக்கு தேவையே இல்லாம இருந்த இடம் இன்னைக்கு சுற்றிலும் கண்ணாடியை ஒட்டிகிட்டு சூரிய வெளிச்சம் மட்டுமல்ல வெளி காற்று கூட உள்ளே நுழைய முடியாம ஏசி இயந்திரத்தோட தன் தனித்தன்மையை இழந்துட்டு நிக்கிது.

வெளிநாட்டுக்காரங்க அவங்க நாட்டு சீதோஷ்ண நிலையினால் குளிர் தாங்காம வடிவமைச்ச கட்டிடங்களைப் பார்த்து நாம சூடுபோட்டுகிட்டே இருக்கோம். ஏப்ரல், மே மாதங்கள்ல நம்ம நாட்டுல சாதாரணமா ரோட்டுல நடந்துபோனா கூட நம்ம உடம்பு தீப்பிடிக்கும்போல இருக்கு. இந்த லட்சணத்துல அரசு அலுவலகங்கள் கூட காற்றோட்டமான சூழ்நிலையை விட்டுட்டு இப்படி ஏசி இயந்திரத்தோட மக்கள் உடல் நலத்தையும் கெடுத்துட்டு, ஒரு ஆபத்துன்னா தப்பிக்க வழி இல்லாத அளவுக்கு கேவலமான முறையில வடிவமைக்கப்படுது.

சட்டம் ஒரு வலை மாதிரி. அதுல சுறா, திமிங்கிலங்கள் மாட்டுவதே இல்லை. அப்பாவி சின்ன மீன்கள் மட்டுமே மாட்டுகின்றன என்று ஒரு வாக்கியம் உண்டு. இப்போது கட்டப்பட்டு வரும் வீடுகள், வணிக வளாகங்களை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. இடிந்து விழக் காத்திருக்கும் எங்கள் வீடு இருக்கும் மனையின் அகலம் 18 அடி இருக்கும். அதில் இரண்டு பக்கமும் தலா மூணரை அடி இடம் விட்டு 11 அடி அகலத்தில் கட்டிடம் கட்டலாம் என்று திட்டமிட்டோம். இதுக்கே ஆயிரத்தெட்டு சிக்கல்கள். மலைமுழுங்கி அதிகாரிகள் பிரச்சனையால் எதுவும் செய்யாமல் நிறுத்திவைத்திருக்கிறோம். ஆனால் பல மோசமான நபர்கள் 18 அடி அகலமுள்ள மனையில் 19 அடிக்கு கட்டிடம் கட்டுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்து ஒரு அரசு ஊழியர் (அவரது மனைவியும் அரசு ஊழியர்தான்) பக்கத்துவீட்டுக்காரர் காற்றோட்டத்துக்கு இடம் விடாமல் கட்டினார் என்று புகார்வாசித்தார். நீங்கள் எவ்வளவு இடம் விட்டு கட்டினீர்கள் என்று கேட்டேன். அதற்குள் அவர் எஸ்கேப். கணவனும் மனைவியும் மாதசம்பளமாக சுமார் 1 லட்சம் பெறுகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் இரண்டு மனைகள் வாங்கி சுற்றிலும் இடம் விட்டு பசுமையான சூழ்நிலையில் வீட்டை அமைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் பிசிறு தட்டாமல் இவர்கள் இடத்தில் லஞ்சம் கொடுத்து வீடு கட்டிவிட்டு வெப்பத்தை சமாளிக்க ஏசி போட்டுவிட்டார்கள். இவரைப்போன்றவர்கள் வீட்டை குளுமையாக்கி நாட்டை நெருப்புக்கோளமாக்குகிறார்கள்.

வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் இயன்றவரை காற்றோட்டமுள்ள வீடாக கட்டிக்கொள்வது நாட்டுக்கும் அவர்களுக்கும் நன்மை அளிக்கும். அதுபோல பெரிய வணிக வளாகங்கள் கட்டுபவர்கள் ஆபத்து காலத்தில் மக்கள் சிரமமின்றி வெளியேறும் வகையில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது யார் காதிலும் விழுவதாக தெரியவில்லை.
-----------------------------
2013-2014 கல்வியாண்டில் இருந்து மிகவும் சிரம நிலையில் இருக்கும் அரசுப்பள்ளி குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என்று போன ஆண்டு தீர்மானித்திருந்தோம். அதன்படி இருபது பேர் ஆளுக்கு சுமார் ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தால் கிடைக்கக்கூடிய 10ஆயிரம் ரூபாயை வைத்து எங்களால் முடிந்த அளவு உதவலாம் என்று தீர்மானித்து இப்போது செயலில் இறங்கியிருக்கிறோம்.

ஓரளவு வாய்ப்பு இருக்கக்கூடிய அனைவரும் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். இப்படி நான்கு பேர் ஒன்றாக சேர்வதற்கு வாய்ப்பில்லை என்றால் உங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்மணியின் குழந்தைக்கு உதவுவது கூட சேவைதான். (பலர் இப்படி வெளியில் தெரியாமல் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.) செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இது வரை செய்யாதவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்.
--------------------------------------
கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு, ஆலயத்திருப்பணிகள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்காக...

இளையபாரதம் தளத்தின் முகப்பில் இருக்கும் கும்பாபிசேக அறிவிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த ஆலயம் இருக்கும் தெருவில்தான் எங்கள் வீடு உள்ளது. சில சூழ்நிலைகளின் காரணமாக சிதிலமடைந்திருந்த இந்த ஆலயத்தை 2009ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து முழுவதுமாக இடித்துவிட்டு மீண்டும் புதியதாக கட்டியுள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிசேக விழா வரும் 14.07.2013 அன்று நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தில் தட்டு ஓடு போடும் பணியும் ஆலயம் முழுவதும் வர்ணப்பூச்சு செய்ய வேண்டிய பணியும் யாகசாலை செலவுகளும் காத்திருக்கின்றன. உள்ளூர்வாசிகள் நேரடியாக கோயிலுக்கே வந்து விபரம் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் writersaran@gmail.com க்கு மெயில் அனுப்பினால் தகவல் தெரிவிக்கிறோம்.

புதன், 17 ஏப்ரல், 2013

பொதுமக்கள் நூலகம் வருவதை நூலக ஊழியர்கள் தடுக்கிறார்களா?-











திருவாரூர் மாவட்ட மைய நூலகம் அனைத்து வசதிகளுடன் இருந்தாலும் தினசரி வாசகர்களின் எண்ணிக்கை 300 முதல் 600 என்ற சராசரி  அளவில்தான் இருக்கிறது. திருவாரூர் நகரின் மையப்பகுதியான தெற்குவீதியில் இருக்கும் கல்யாணசுந்தரம் நூலகத்திற்கே  20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி 400 முதல் 500 வாசகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகளில் கல்வித்தரம் கூடியிருக்கிறது, மக்கள் தொகை கூடியிருக்கிறது என்று புள்ளி விபரங்கள்தான் சொல்கின்றனவே தவிர பாடப்புத்தகம் தவிர்த்த படிப்பு கேவலமான சூழ்நிலையில்தான் இருக்கிறது. தொலைக்காட்சியை முக்கிய காரணியாக சுட்டிக்காட்டினாலும் ஒரு மாவட்ட மைய நூலகத்திற்கு தினசரி 2ஆயிரம் வாசகர்களாவது பயன்படுத்தவில்லை என்றால் எங்கே பிரச்சனை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.




போட்டித்தேர்வு எழுதும் பலருக்கு திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒத்துக்கொள்கிறோம். ஆனால் சாதாரண பொழுதுபோக்கு என்ற அளவில் தொலைக்காட்சியை தவிர்த்து எதாவது படிப்போம் என்று நூலகத்திற்கு வரும் வாசகர்கள் நொந்து போய் வருகையை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குதான் வெகுஜன இதழ்கள் இங்கே வாசிக்க கிடைக்கின்றன.



திருவாரூர் மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நாகைபுறவழிச்சாலையில் அபாயகரமான கனரகப் போக்குவரத்தைக் கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. இது வயதானவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்த தடையாக இருக்கும் முதல் காரணியாகும்.



அடுத்து நூலகத்தின் தினக்கூலி பணியாளர்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திருவாரூர் கடைத்தெருவில் சென்று வார இதழ்களை வாங்கி வர ஆள் இல்லை என்று உயர் அலுவலர்கள் சாக்குப்போக்கு சொல்லிவிடுகிறார்கள். நகரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு மேம்பாலத்தில் ஏறி இறங்கி சிரமப்பட்டு சென்று பார்த்தால் முதல் வாரம் வரவேண்டிய வார இதழ்கள் கூட இருக்காது.



11-4-2013 முதல் 14-4-2013 வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நூலகம் விடுமுறை. அடுத்து வந்த திங்கள், செவ்வாய் இரண்டு வேலை நாட்களில் கூட 10-4-2013 வரை வரவேண்டிய வார இதழ்களைக்கூட வாங்கி வைக்கவில்லை. கேட்டால் ஆள் இல்லை என்று சால்சாப்பு.



மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொள்வோம். வாசகர்கள் கணிணியில் பிரெளசிங் செய்ய இருக்கும் அறையிலிருந்து கணிணியை வெளியே எடுத்துவைத்துவிட்டு அந்த அறையில் ஏசியில் தூங்குவோம். ஆனால் யாரும் எதையும் கேட்டுவிடக்கூடாது. வாசகர்கள் வந்தால் இருப்பதை படித்துவிட்டு பேசாமல் போக வேண்டியதுதானே. நிர்வாகத்தில் தலையிட இவர்கள் யார் என்று கூட சிலரை திட்டுவதாக கேள்வி. உண்மை என்னவென்று தெரியவில்லை.



நூலகத்தில் வாங்கச்செய்வதற்காக சில வார இதழ்களும், மாத இதழ்களும் நூலக அலுவலர்களுக்கு பணம் கொடுத்திருக்க கூட வாய்ப்பு உண்டு. அந்த பணம் மட்டும் வேண்டும். ஆனால் நூலகத்திற்கு வர வேண்டிய புத்தகங்களை ஒழுங்காக வாங்கி வர மாட்டோம். மேலும் தினசரி 10 முறை டீ, காபி, சாப்பாடு வாங்கி வர ஆட்களை எப்படியாவது தயார் செய்து பேருந்துநிலையம், கடைத்தெரு பகுதிக்கு அனுப்புவோம். அது எங்கள் உரிமை என்று கூட நூலக ஊழியர்கள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.



மக்கள் குடித்து சீரழிந்து பிறரையும் சாகடிக்கும் வகையில் வாகனம் ஓட்டுகிறார்கள். அந்த மது வியாபாரம் செய்யும் இடங்கள் ஆண்டுக்கு 4நாள் அல்லது 5 நாட்கள்தான் விடுமுறை. ஆனால் மக்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டிய நூலகத்தை எல்லா அரசு விடுமுறை நாட்களிலும் சாத்திவிடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாதவனும் போட்டித்தேர்வுக்கு படிப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பவனும் மட்டும்தான் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அளவில்தான் இப்போதைய வேலை நாட்களும் வேலை நேரமும் இருக்கிறது.



தாலுக்கா நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகத்தின் வேலை நேரம் 12 மணி நேரம். நிரந்தர ஊழியர்களுக்கு ஆறு மணி நேர வேலை வீதம் 2 பிரிவாக இருக்கிறார்கள். நாட்டில் எந்த துறையில் ஆறு மணி நேர வேலை இருக்கிறது. அந்த நேரத்தில் கூட இவர்கள் வேலை செய்யமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது.



மூன்று புகைப்படத்தையும் பார்த்தால் காட்டு பங்களா போல் இருக்கும் நூலகத்தின் நிலையும், மேம்பாலத்துக்கு செல்லும் அபாயகரமான சாலையின் அமைப்பும் புரியும்.



இது திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தின் நிலை. இன்னும் தமிழ்நாடு பூராவும் சுற்றி வந்தால் என்ன கதியாக இருக்குமோ தெரியவில்லை.



வேறு சில வாசகர்கள் இந்த நூலகத்தின் செயல்பாடு குறித்து புகார் கொடுத்ததாகவும் அந்த புகார்கள் இந்த நூலக உயரதிகாரிக்கே உரிய விசாரணை மேற்கொள்ளும்படி வந்ததாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பொய்ப்புகார் கொடுத்துவிட்டதாக பைல்கள் மூடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்றே தெரியவில்லை.



நூலக ஊழியர்களின் போக்கு மறைமுகமாக நூலகத்திற்கு வருபவர்கள் தாமாகவே வராமல் இருந்துவிடச்செய்யும் நோக்கத்துடன் செய்வதாக கூட இருக்கலாம்.



உண்மை அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.

---------------------------------



பெரும்பாலும் அரசு ஊழியர்களின் அராஜகம் எப்படி இருக்கிறது என்ற சாம்பிளுக்கு பின்வரும் தகவல் கூடுதல் இணைப்பு.

***************

சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் தரமுடியாத பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் விரட்டி அடித்து அந்த பெண்ணுக்கு பேருந்து நிலையத்தில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக இருக்கிறது. பிரச்சனையை விசாரிக்கும் அதிகாரி, கடந்த சில மாதங்களில் 600 பிரசவம் ஆன இந்த ஆஸ்பத்திரியில் இது ஒன்றுதான் இப்படியாகிவிட்டது என்று சொல்கிறார்.



ஆமாம் அது உண்மைதான் ஐயா...எல்லாரிடமும் காசு கேட்டதும் கொடுத்திருப்பார்கள். இந்த பெண்ணிடம் அதற்கு பணம் இல்லாததால் விஷயம் வீதிக்கு வந்துவிட்டது.


பொதுமக்கள் நூலகம் வருவதை நூலக ஊழியர்கள் தடுக்கிறார்களா?



திருவாரூர் மாவட்ட மைய நூலகம் அனைத்து வசதிகளுடன் இருந்தாலும் தினசரி வாசகர்களின் எண்ணிக்கை 300 முதல் 600 என்ற சராசரி  அளவில்தான் இருக்கிறது. திருவாரூர் நகரின் மையப்பகுதியான தெற்குவீதியில் இருக்கும் கல்யாணசுந்தரம் நூலகத்திற்கே  20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி 400 முதல் 500 வாசகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகளில் கல்வித்தரம் கூடியிருக்கிறது, மக்கள் தொகை கூடியிருக்கிறது என்று புள்ளி விபரங்கள்தான் சொல்கின்றனவே தவிர பாடப்புத்தகம் தவிர்த்த படிப்பு கேவலமான சூழ்நிலையில்தான் இருக்கிறது. தொலைக்காட்சியை முக்கிய காரணியாக சுட்டிக்காட்டினாலும் ஒரு மாவட்ட மைய நூலகத்திற்கு தினசரி 2ஆயிரம் வாசகர்களாவது பயன்படுத்தவில்லை என்றால் எங்கே பிரச்சனை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

போட்டித்தேர்வு எழுதும் பலருக்கு திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒத்துக்கொள்கிறோம். ஆனால் சாதாரண பொழுதுபோக்கு என்ற அளவில் தொலைக்காட்சியை தவிர்த்து எதாவது படிப்போம் என்று நூலகத்திற்கு வரும் வாசகர்கள் நொந்து போய் வருகையை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குதான் வெகுஜன இதழ்கள் இங்கே வாசிக்க கிடைக்கின்றன.

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நாகைபுறவழிச்சாலையில் அபாயகரமான கனரகப் போக்குவரத்தைக் கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. இது வயதானவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்த தடையாக இருக்கும் முதல் காரணியாகும்.

அடுத்து நூலகத்தின் தினக்கூலி பணியாளர்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திருவாரூர் கடைத்தெருவில் சென்று வார இதழ்களை வாங்கி வர ஆள் இல்லை என்று உயர் அலுவலர்கள் சாக்குப்போக்கு சொல்லிவிடுகிறார்கள். நகரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு மேம்பாலத்தில் ஏறி இறங்கி சிரமப்பட்டு சென்று பார்த்தால் முதல் வாரம் வரவேண்டிய வார இதழ்கள் கூட இருக்காது.

11-4-2013 முதல் 14-4-2013 வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நூலகம் விடுமுறை. அடுத்து வந்த திங்கள், செவ்வாய் இரண்டு வேலை நாட்களில் கூட 10-4-2013 வரை வரவேண்டிய வார இதழ்களைக்கூட வாங்கி வைக்கவில்லை. கேட்டால் ஆள் இல்லை என்று சால்சாப்பு.

மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொள்வோம். வாசகர்கள் கணிணியில் பிரெளசிங் செய்ய இருக்கும் அறையிலிருந்து கணிணியை வெளியே எடுத்துவைத்துவிட்டு அந்த அறையில் ஏசியில் தூங்குவோம். ஆனால் யாரும் எதையும் கேட்டுவிடக்கூடாது. வாசகர்கள் வந்தால் இருப்பதை படித்துவிட்டு பேசாமல் போக வேண்டியதுதானே. நிர்வாகத்தில் தலையிட இவர்கள் யார் என்று கூட சிலரை திட்டுவதாக கேள்வி. உண்மை என்னவென்று தெரியவில்லை.

நூலகத்தில் வாங்கச்செய்வதற்காக சில வார இதழ்களும், மாத இதழ்களும் நூலக அலுவலர்களுக்கு பணம் கொடுத்திருக்க கூட வாய்ப்பு உண்டு. அந்த பணம் மட்டும் வேண்டும். ஆனால் நூலகத்திற்கு வர வேண்டிய புத்தகங்களை ஒழுங்காக வாங்கி வர மாட்டோம். மேலும் தினசரி 10 முறை டீ, காபி, சாப்பாடு வாங்கி வர ஆட்களை எப்படியாவது தயார் செய்து பேருந்துநிலையம், கடைத்தெரு பகுதிக்கு அனுப்புவோம். அது எங்கள் உரிமை என்று கூட நூலக ஊழியர்கள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

மக்கள் குடித்து சீரழிந்து பிறரையும் சாகடிக்கும் வகையில் வாகனம் ஓட்டுகிறார்கள். அந்த மது வியாபாரம் செய்யும் இடங்கள் ஆண்டுக்கு 4நாள் அல்லது 5 நாட்கள்தான் விடுமுறை. ஆனால் மக்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டிய நூலகத்தை எல்லா அரசு விடுமுறை நாட்களிலும் சாத்திவிடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாதவனும் போட்டித்தேர்வுக்கு படிப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பவனும் மட்டும்தான் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அளவில்தான் இப்போதைய வேலை நாட்களும் வேலை நேரமும் இருக்கிறது.

தாலுக்கா நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகத்தின் வேலை நேரம் 12 மணி நேரம். நிரந்தர ஊழியர்களுக்கு ஆறு மணி நேர வேலை வீதம் 2 பிரிவாக இருக்கிறார்கள். நாட்டில் எந்த துறையில் ஆறு மணி நேர வேலை இருக்கிறது. அந்த நேரத்தில் கூட இவர்கள் வேலை செய்யமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது.

மூன்று புகைப்படத்தையும் பார்த்தால் காட்டு பங்களா போல் இருக்கும் நூலகத்தின் நிலையும், மேம்பாலத்துக்கு செல்லும் அபாயகரமான சாலையின் அமைப்பும் புரியும்.

இது திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தின் நிலை. இன்னும் தமிழ்நாடு பூராவும் சுற்றி வந்தால் என்ன கதியாக இருக்குமோ தெரியவில்லை.

வேறு சில வாசகர்கள் இந்த நூலகத்தின் செயல்பாடு குறித்து புகார் கொடுத்ததாகவும் அந்த புகார்கள் இந்த நூலக உயரதிகாரிக்கே உரிய விசாரணை மேற்கொள்ளும்படி வந்ததாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பொய்ப்புகார் கொடுத்துவிட்டதாக பைல்கள் மூடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்றே தெரியவில்லை.

நூலக ஊழியர்களின் போக்கு மறைமுகமாக நூலகத்திற்கு வருபவர்கள் தாமாகவே வராமல் இருந்துவிடச்செய்யும் நோக்கத்துடன் செய்வதாக கூட இருக்கலாம்.

உண்மை அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.
---------------------------------

பெரும்பாலும் அரசு ஊழியர்களின் அராஜகம் எப்படி இருக்கிறது என்ற சாம்பிளுக்கு பின்வரும் தகவல் கூடுதல் இணைப்பு.
***************
சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் தரமுடியாத பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் விரட்டி அடித்து அந்த பெண்ணுக்கு பேருந்து நிலையத்தில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக இருக்கிறது. பிரச்சனையை விசாரிக்கும் அதிகாரி, கடந்த சில மாதங்களில் 600 பிரசவம் ஆன இந்த ஆஸ்பத்திரியில் இது ஒன்றுதான் இப்படியாகிவிட்டது என்று சொல்கிறார்.

ஆமாம் அது உண்மைதான் ஐயா...எல்லாரிடமும் காசு கேட்டதும் கொடுத்திருப்பார்கள். இந்த பெண்ணிடம் அதற்கு பணம் இல்லாததால் விஷயம் வீதிக்கு வந்துவிட்டது.

சனி, 13 ஏப்ரல், 2013

தள்ளாட்டத்தில் வண்டி ஓடுவது எதில் போய் முடியும்?











மக்களுக்கு ஊத்திக்கொடுத்து அதில்தான் அதே மக்களை வாழ  வைப்பதாகவும் இந்த வருமானம் இல்லாவிட்டால் பலர் கஞ்சிக்கில்லாமல் இறக்க கூடும் என்று சிலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.





உண்மையில் ஒரு நாளைக்கு பல நூறுகளும் பல ஆயிரங்களும் சம்பாதிப்பவனின் குடும்பம் இந்த தள்ளாட்டத்தினால் வாழ வழியின்றி கவிழ்ந்து விடுவதில்லை. ஒன்றிரண்டு நூறு சம்பாதிப்பவன் அதில் பாதியையோ அல்லது முழு வருமானத்தையோ அல்லது கடன் வாங்கி கூட தள்ளாட்டத்திற்கு ஆட்படும்போதுதான் அவன் குடும்பம் உணவுக்கு வழியில்லாமல், நல்ல கல்வி இல்லாமல் திண்டாடுகிறது. அதுமட்டுமின்றி இப்படி தள்ளாட்டத்தில் வாகனம் ஓட்டிச் சென்று குடிக்காமல் ஒழுங்காக போகும் நபரையும் சாகடித்து அவன் குடும்பத்தையும் தெருவில் நிறுத்துவதை பல மிருகங்கள் செய்து வருகின்றன.





சில தினங்களுக்கு முன்பு நாளிதழ்களில் ஒரு செய்தி.





/////////////// திருநெல்வேலி: குடிபோதையில் டிரைவர் ஓட்டிய அரசு பஸ், மோதியதில் மூவர் காயமுற்றனர்.


திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, காயல்பட்டணத்திற்கு அரசு பஸ் நேற்று காலை 9:00 மணிக்கு, கிளம்பியது. 25 பயணிகள் இருந்தனர். பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே பஸ் வந்தபோது, ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த பெண்கள் மீது உரசியபடி சென்றது. இதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். இதனால், பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு சத்தம் போட்டனர்.





ஆனால், டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். சற்று தொலைவில், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு முன் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்தபோது, ரோட்டின் எதிர்திசையில் இருந்த மின்கம்பத்தில் பஸ் மோதியது. அதில் இருந்த பெண்கள், பஸ்சை நிறுத்துமாறு கத்தினர்.


டிரைவர் பஸ்சை நிறுத்தாமல், இடதுபுறமாக திருப்பினார். அங்கு காதுகேளாதோர் பள்ளியின் காம்பவுண்ட் அருகே நின்ற கழிவுநீர் சுத்திகரிக்கும் லாரிகள் மீதும், பள்ளி முன் சென்றுகொண்டிருந்த மாணவிகள் மீதும் மோதியது.





சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்திய அரசு பஸ், பள்ளி காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது.


இதில் மாணவிகள் மெல்பா, சஜீலா, பஸ்சில் இருந்த ஜொகைரா பீவீ ,50, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பெருமாள்புரம் போலீசார் விசாரித்து, பஸ் டிரைவர் களக்காடு முகம்மதுகனி,45,யை கைது, செய்தனர்./////////////// - தினமலர்.





நான் கடந்த மார்ச் மாதம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்லும் பேருந்தில் ஏறினேன். நண்பகல் 1.30 மணி இருக்கும். அந்த நேரத்தில் ஒரு ஓட்டுனர் அந்த பேருந்தின் மையப்பகுதி இருக்கையில் அமர்ந்து அந்த கருமத்தை குடித்துக்கொண்டிருந்தான். இந்த மாதிரி ஆட்களால் எத்தனை குடும்பம் அழியப்போகுதோ.





இதை நீ அப்பவே போலீஸ்ல சொல்லவேண்டியதுதானேன்னு கேட்பீங்க. இப்படி குடிச்சுட்டு வண்டி ஓட்டுற ஆளுங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துட்டு மதுவை ஒழிக்கணும்னு கோரிக்கை வைக்குறவங்களை அடிச்சு கால் கையை முறிக்குற சமுதாயமாச்சே நம்மளுது.





இப்ப கூட பார்த்தீங்களா, யார் ஊத்திக்கொடுக்குறாங்க, அவங்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்குறாங்கன்னு ஓப்பனா எழுத முடியாத கேவலமான இடத்துலதான் நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.





மனித உயிர் மேல அக்கறை இல்லாத கேடுகெட்ட ஜனங்க எல்லா இடத்துலேயும் அதிகமாயிட்டாங்க. பல நேரங்கள்ல பொதுமக்கள்தான் முதல் குற்றவாளியா இருக்காங்க.





17.12.2009ல் நான் எழுதுன பதிவை இங்க போய் படிங்க. அங்க போக விரும்பாதவங்க இங்கேயே படிச்சுக்கலாம்.


v


v


v


v


v


v








ஓடும் வேனில் இடம் மாறி அலறவிட்ட அரை வேக்காடுகள். (மீள்பதிவு)





சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கேமராமேனாக இருந்தேன். ஒரு திருமணவிழாவை படம் பிடிக்க வழக்கம்போல் முதல் நாளே சென்றுவிட்டேன். திருவாரூரிலிருந்து கும்பகோணத்தில் மணமகளை அழைக்க மாப்பிள்ளை வீட்டாருடன் வழக்கம்போல்(?) இணைந்துகொள்ள வேண்டியதாயிற்று.





இது வரைக்கும் மட்டுமில்ல...பெண்ணை அழைத்துக் கொண்டு திரும்பி பாதி தூரம் வர்ற வரை எல்லாம் சரியாத்தாங்க இருந்துச்சு. பஞ்சு மூட்டை போல பிதுங்கிக்கொண்டிருந்த வேனில் பாதி பேருக்குமேல் இளம்பெண்கள்தான். வாகன ஓட்டுநரும் உதவியாளரும் இருபத்தைந்து வயதை எட்டியிருப்பது சந்தேகமே. அவனுங்க மனசுக்குள்ள கொசு பறக்குறதுக்கு கேட்கவா வேணும்? (பட்டாம் பூச்சி பறந்ததுன்னு சொல்லலாம்...அந்த ரெண்டு பேரும் பண்ணின வேலைக்கு கொசுன்னு சொல்றதே அதிகம்)





வேனுக்குள்ள இருந்த நீயும் யூத்துதானே... உன் நெஞ்சுக்குள்ள எதுவும் பறக்கலையான்னு நீங்க கேட்குறது புரியுது. நான் அப்ப கேமரா மேல மட்டும்தாங்க கவனம் வெச்சேன்.(நம்புங்கப்பா)





அந்த ஓட்டுநரும் உதவியாளரும் வேன் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் இடம் மாறி அமர்ந்து வாகனத்தை இயக்கினார்கள். அதைக் கண்டதும் எனக்கு ஆத்திரமாக வந்தது.(உண்மையை சொல்லப்போனால் உதறல்னுதான் சொல்லணும்.)





ஆனால் மணமகளின் தோழிகளில் சிலர்,"சூப்பர், சூப்பர்" என்று கத்தி ஓட்டுநரையும் உதவியாளரையும் போற்றிப் புகழ்ந்தார்கள். இதைக் கண்டித்த ஒன்றிரண்டு வயதான பெண்களின் குரல் இளம்பெண்களின் இரைச்சலில் காணாமல் போய் விட்டது.





உடனே அந்த உதவியாளர்," இது சாதாரண சாலையாக இருந்ததால்தான் முப்பது கி.மீ. வேகத்தில் மாறி உட்கார்ந்தோம். அதே சமயம் இது மட்டும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால், எண்பது கி.மீ. வேகத்தில் கூட இடம் மாறி உட்கார்ந்து ஓட்டுவோம்." என்று பெருமை பொங்க பேசினான்.





என்னுடைய கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன்.உன் கோபம் அவங்க செய்த தப்பை நினைச்சா இல்லன்னா அந்தப் பொண்ணுங்க அவங்களை புகழ்ந்ததுக்கான்னு சந்தேகப்படாதீங்க. மெய்யாலுமே வண்டி ஓடும்போதே இடம் மாறின அவங்க முட்டாள்தனத்துக்காகதாங்க கோபப்பட்டேன்.





இது போல பல சம்பவங்கள் உண்டு. பஸ்சில் பயணிக்கிறபோது மற்ற பேருந்துகளை முந்திச் செல்ல ஓட்டுநரை ஊக்கப்படுத்தும் பயணிகளைப் பார்த்திருக்கிறேன். சிறிது கவனம் தவறினாலும் மரணம் என்பதையும், வேகம் விவேகமல்ல என்பதையும் உணராமல் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துவது எவ்வளவு பெரிய விபரீதத்தை விளைவிக்கும் என்பதை ஆர்வக்கோளாறான சிலர் புரிந்துகொள்வது எப்போது?





இதெல்லாம் சரிதான். அந்த அரைவேக்காட்டுக்காரங்களை நீ கண்டிக்க வேண்டியதுதானேன்னுதானே கேட்டீங்க?...வேன்ல நான் ஒரு ஆள் சொன்னா யாருங்க கேட்பா? அதனால மண்டபத்துக்கு வந்ததும் மாப்பிள்ளையோட அப்பாகிட்ட சொல்லி வேன் உரிமையாளரை வரவழைத்தோம். அந்த வேன் உரிமையாளர் என்னை விட அதிகமாகவே கொதிப்படைந்து விட்டார்.





ஆனால் எல்லா உரிமையாளர்களும் இப்படி நடந்துகொள்வது சிரமம்தான். பல நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. ஆனால் அந்த சிக்கல்களை எதிர்கொள்ள இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை. முதலாவதாக ஆள் உயிருடன் இருக்க வேண்டும். இரண்டாவதாக வாகனம் முழுதாக இருக்க வேண்டும்.





நாம் புரிந்து கொண்டால் சரி.





இதெல்லாம் நடந்தது 2005ல்


தள்ளாட்டத்தில் வண்டி ஓடுவது எதில் போய் முடியும்?



மக்களுக்கு ஊத்திக்கொடுத்து அதில்தான் அதே மக்களை வாழ  வைப்பதாகவும் இந்த வருமானம் இல்லாவிட்டால் பலர் கஞ்சிக்கில்லாமல் இறக்க கூடும் என்று சிலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ஒரு நாளைக்கு பல நூறுகளும் பல ஆயிரங்களும் சம்பாதிப்பவனின் குடும்பம் இந்த தள்ளாட்டத்தினால் வாழ வழியின்றி கவிழ்ந்து விடுவதில்லை. ஒன்றிரண்டு நூறு சம்பாதிப்பவன் அதில் பாதியையோ அல்லது முழு வருமானத்தையோ அல்லது கடன் வாங்கி கூட தள்ளாட்டத்திற்கு ஆட்படும்போதுதான் அவன் குடும்பம் உணவுக்கு வழியில்லாமல், நல்ல கல்வி இல்லாமல் திண்டாடுகிறது. அதுமட்டுமின்றி இப்படி தள்ளாட்டத்தில் வாகனம் ஓட்டிச் சென்று குடிக்காமல் ஒழுங்காக போகும் நபரையும் சாகடித்து அவன் குடும்பத்தையும் தெருவில் நிறுத்துவதை பல மிருகங்கள் செய்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு நாளிதழ்களில் ஒரு செய்தி.

/////////////// திருநெல்வேலி: குடிபோதையில் டிரைவர் ஓட்டிய அரசு பஸ், மோதியதில் மூவர் காயமுற்றனர்.
திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, காயல்பட்டணத்திற்கு அரசு பஸ் நேற்று காலை 9:00 மணிக்கு, கிளம்பியது. 25 பயணிகள் இருந்தனர். பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே பஸ் வந்தபோது, ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த பெண்கள் மீது உரசியபடி சென்றது. இதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். இதனால், பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு சத்தம் போட்டனர்.

ஆனால், டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். சற்று தொலைவில், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு முன் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்தபோது, ரோட்டின் எதிர்திசையில் இருந்த மின்கம்பத்தில் பஸ் மோதியது. அதில் இருந்த பெண்கள், பஸ்சை நிறுத்துமாறு கத்தினர்.
டிரைவர் பஸ்சை நிறுத்தாமல், இடதுபுறமாக திருப்பினார். அங்கு காதுகேளாதோர் பள்ளியின் காம்பவுண்ட் அருகே நின்ற கழிவுநீர் சுத்திகரிக்கும் லாரிகள் மீதும், பள்ளி முன் சென்றுகொண்டிருந்த மாணவிகள் மீதும் மோதியது.

சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்திய அரசு பஸ், பள்ளி காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது.
இதில் மாணவிகள் மெல்பா, சஜீலா, பஸ்சில் இருந்த ஜொகைரா பீவீ ,50, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பெருமாள்புரம் போலீசார் விசாரித்து, பஸ் டிரைவர் களக்காடு முகம்மதுகனி,45,யை கைது, செய்தனர்./////////////// - தினமலர்.

நான் கடந்த மார்ச் மாதம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்லும் பேருந்தில் ஏறினேன். நண்பகல் 1.30 மணி இருக்கும். அந்த நேரத்தில் ஒரு ஓட்டுனர் அந்த பேருந்தின் மையப்பகுதி இருக்கையில் அமர்ந்து அந்த கருமத்தை குடித்துக்கொண்டிருந்தான். இந்த மாதிரி ஆட்களால் எத்தனை குடும்பம் அழியப்போகுதோ.

இதை நீ அப்பவே போலீஸ்ல சொல்லவேண்டியதுதானேன்னு கேட்பீங்க. இப்படி குடிச்சுட்டு வண்டி ஓட்டுற ஆளுங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துட்டு மதுவை ஒழிக்கணும்னு கோரிக்கை வைக்குறவங்களை அடிச்சு கால் கையை முறிக்குற சமுதாயமாச்சே நம்மளுது.

இப்ப கூட பார்த்தீங்களா, யார் ஊத்திக்கொடுக்குறாங்க, அவங்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்குறாங்கன்னு ஓப்பனா எழுத முடியாத கேவலமான இடத்துலதான் நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

மனித உயிர் மேல அக்கறை இல்லாத கேடுகெட்ட ஜனங்க எல்லா இடத்துலேயும் அதிகமாயிட்டாங்க. பல நேரங்கள்ல பொதுமக்கள்தான் முதல் குற்றவாளியா இருக்காங்க.

17.12.2009ல் நான் எழுதுன பதிவை இங்க போய் படிங்க. அங்க போக விரும்பாதவங்க இங்கேயே படிச்சுக்கலாம்.
v
v
v
v
v
v


ஓடும் வேனில் இடம் மாறி அலறவிட்ட அரை வேக்காடுகள். (மீள்பதிவு)

சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கேமராமேனாக இருந்தேன். ஒரு திருமணவிழாவை படம் பிடிக்க வழக்கம்போல் முதல் நாளே சென்றுவிட்டேன். திருவாரூரிலிருந்து கும்பகோணத்தில் மணமகளை அழைக்க மாப்பிள்ளை வீட்டாருடன் வழக்கம்போல்(?) இணைந்துகொள்ள வேண்டியதாயிற்று.

இது வரைக்கும் மட்டுமில்ல...பெண்ணை அழைத்துக் கொண்டு திரும்பி பாதி தூரம் வர்ற வரை எல்லாம் சரியாத்தாங்க இருந்துச்சு. பஞ்சு மூட்டை போல பிதுங்கிக்கொண்டிருந்த வேனில் பாதி பேருக்குமேல் இளம்பெண்கள்தான். வாகன ஓட்டுநரும் உதவியாளரும் இருபத்தைந்து வயதை எட்டியிருப்பது சந்தேகமே. அவனுங்க மனசுக்குள்ள கொசு பறக்குறதுக்கு கேட்கவா வேணும்? (பட்டாம் பூச்சி பறந்ததுன்னு சொல்லலாம்...அந்த ரெண்டு பேரும் பண்ணின வேலைக்கு கொசுன்னு சொல்றதே அதிகம்)

வேனுக்குள்ள இருந்த நீயும் யூத்துதானே... உன் நெஞ்சுக்குள்ள எதுவும் பறக்கலையான்னு நீங்க கேட்குறது புரியுது. நான் அப்ப கேமரா மேல மட்டும்தாங்க கவனம் வெச்சேன்.(நம்புங்கப்பா)

அந்த ஓட்டுநரும் உதவியாளரும் வேன் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் இடம் மாறி அமர்ந்து வாகனத்தை இயக்கினார்கள். அதைக் கண்டதும் எனக்கு ஆத்திரமாக வந்தது.(உண்மையை சொல்லப்போனால் உதறல்னுதான் சொல்லணும்.)

ஆனால் மணமகளின் தோழிகளில் சிலர்,"சூப்பர், சூப்பர்" என்று கத்தி ஓட்டுநரையும் உதவியாளரையும் போற்றிப் புகழ்ந்தார்கள். இதைக் கண்டித்த ஒன்றிரண்டு வயதான பெண்களின் குரல் இளம்பெண்களின் இரைச்சலில் காணாமல் போய் விட்டது.

உடனே அந்த உதவியாளர்," இது சாதாரண சாலையாக இருந்ததால்தான் முப்பது கி.மீ. வேகத்தில் மாறி உட்கார்ந்தோம். அதே சமயம் இது மட்டும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால், எண்பது கி.மீ. வேகத்தில் கூட இடம் மாறி உட்கார்ந்து ஓட்டுவோம்." என்று பெருமை பொங்க பேசினான்.

என்னுடைய கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன்.உன் கோபம் அவங்க செய்த தப்பை நினைச்சா இல்லன்னா அந்தப் பொண்ணுங்க அவங்களை புகழ்ந்ததுக்கான்னு சந்தேகப்படாதீங்க. மெய்யாலுமே வண்டி ஓடும்போதே இடம் மாறின அவங்க முட்டாள்தனத்துக்காகதாங்க கோபப்பட்டேன்.

இது போல பல சம்பவங்கள் உண்டு. பஸ்சில் பயணிக்கிறபோது மற்ற பேருந்துகளை முந்திச் செல்ல ஓட்டுநரை ஊக்கப்படுத்தும் பயணிகளைப் பார்த்திருக்கிறேன். சிறிது கவனம் தவறினாலும் மரணம் என்பதையும், வேகம் விவேகமல்ல என்பதையும் உணராமல் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துவது எவ்வளவு பெரிய விபரீதத்தை விளைவிக்கும் என்பதை ஆர்வக்கோளாறான சிலர் புரிந்துகொள்வது எப்போது?

இதெல்லாம் சரிதான். அந்த அரைவேக்காட்டுக்காரங்களை நீ கண்டிக்க வேண்டியதுதானேன்னுதானே கேட்டீங்க?...வேன்ல நான் ஒரு ஆள் சொன்னா யாருங்க கேட்பா? அதனால மண்டபத்துக்கு வந்ததும் மாப்பிள்ளையோட அப்பாகிட்ட சொல்லி வேன் உரிமையாளரை வரவழைத்தோம். அந்த வேன் உரிமையாளர் என்னை விட அதிகமாகவே கொதிப்படைந்து விட்டார்.

ஆனால் எல்லா உரிமையாளர்களும் இப்படி நடந்துகொள்வது சிரமம்தான். பல நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. ஆனால் அந்த சிக்கல்களை எதிர்கொள்ள இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை. முதலாவதாக ஆள் உயிருடன் இருக்க வேண்டும். இரண்டாவதாக வாகனம் முழுதாக இருக்க வேண்டும்.

நாம் புரிந்து கொண்டால் சரி.

இதெல்லாம் நடந்தது 2005ல்




வியாழன், 11 ஏப்ரல், 2013

ஜெமினி - ஏவிஎம் - நேரம் தவறாமை







12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)



ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.



ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.



திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.



இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.



ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.



ஒரு சின்ன விசயம். எந்த ஒரு விசயத்திலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது என் வழக்கம். ஆனால் நான் செய்து வரும் டி.டி.பி தொழிலில் என்னால் பல நேரங்களில் குறித்த நேரத்தில் பணி செய்து கொடுக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையை இப்போது என்னால் வெல்லமுடியவில்லை. அதற்கு காரணம் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான்.



சில நாட்களில் காலை முதல் மாலை வரை எந்த வேலையும் இருக்காது. கடந்த பல ஆண்டுகளாக மாலை 6 மணிக்கு கரண்ட் போய்விடுகிறது. இது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் மிஸ்டர் பப்ளிக் ஒருவர் மாலை 5.45 மணிக்கு வந்து இரண்டு பக்க மேட்டரை டைப் செய்து உடனே பிரிண்ட் எடுக்க வேண்டும் என்பார். நாம என்ன குமுதம், ஆனந்தவிகடனா பிரிண்ட் செய்து வெச்சிருக்கோம். காசை வாங்கிட்டு உடனே எடுத்துக்கொடுக்க.



டி.டி.பி என்பது வரும் வாடிக்கையாளருக்காக அவருக்கு சொந்தமான அவருக்கு மட்டுமே பயன்படக்கூடிய விசயத்தை டைப்செய்து தருவதாகத்தான் இருக்கும். ஒரே ஒரு பக்கத்தை டைப் செய்து 50ஆயிரம் ஜெராக்ஸ் போட்டு தரும் வேலையல்ல என்பதை வாடிக்கையாளருக்கு விளங்க வைக்கவே பாதி எனர்ஜி வேஸ்ட் ஆகிடும்.



இன்னொரு சிக்கல், பலர் தனக்கு வேண்டிய தகவலை சரியாக எழுதி எடுத்து வரமாட்டார்கள். பக்கத்தில் இருந்து ஆக்கல், அழித்தல், வார்த்தையை மாற்றுதல் வேலையை செய்துகொண்டு நமக்கு டென்சனை ஏற்றுவார்கள். கடைசியாக பார்த்தால் சரியான முறையில் வழக்கறிஞர்களால் எழுதி தரப்பட்ட ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் குறைந்தது 6 பக்கம் டைப் செய்துவிடுவேன். ஆனால் ஒழுங்காக எழுதி வராமல் பக்கத்தில் இருந்து டிக்டேட் செய்யும் இம்சை அரசர்களால் ஒரு மணி நேரத்தில் 3 பக்கம் கூட முடிக்க முடியாது.



அவர்கள் கொத்துபரோட்டா போட்ட தகவலை நாம் செம்மைப்படுத்தி ஒழுங்கான ஆவணமாக்கி எடுத்து கொடுத்தால் 3 பக்கம்தானே. இதுக்கு அவ்வளவு காசு தரணுமா என்று நம்முடைய அரைமணி நேரத்துக்கு காற்றிலேயே அல்வா கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.



ஒரு நாளைக்கு எட்டுமணி நேர பணி என்று மாதம் 30 நாளும் பணி செய்வதாக வைத்துக்கொண்டால்கூட ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 60ரூபாய் என்ற தொகை கூலியாக கிடைத்தால்தான் இன்றைய விலைவாசிக்கு மாத சம்பளம் 15ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்ட முடியும். (கட்டிட தொழிலாளர், தச்சர், பெயிண்டர் போன்றவர்களுக்கு  இதைவிட அதிக தின சம்பளம் உண்டு. அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் கம்ப்யூட்டர், கடுமையான இட வாடகை, லட்சக்கணக்கில் அட்வான்ஸ், ஒரு யூனிட் 10 ரூபாய் என்ற அநியாய மின்கட்டணம் உள்ளிட்ட எந்த செலவும் கிடையாது)



ஆனால் 1 மணி நேரத்தில் 3 பக்கம் டைப் செய்து ப்ரூப், ஒரிஜினல் என்று ஆறுபக்கம் பிரிண்ட் (அடக்கவிலை 30 ரூபாய்) போக மீதி 30 ரூபாய் கிடைத்தால் அதில் வாடகை, கரண்ட் பில், கம்ப்யூட்டர், பிரிண்டர் மெயின்டனன்ஸ், பேப்பர் உள்ளிட்ட செலவுகளை கழித்துப்பார்த்தால் என் உழைப்புக்கு கூலி கோவிந்தாதான்.



தொழில் ஆரம்பித்து பல மாதங்கள் கழித்துதான் நான் தொழில் செய்யவில்லை. தனியாக அமர்ந்து கூலி வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போ நம்ம கதை புலிவாலை பிடித்த கதைதான்.



நாட்டுல எவ்வளவு பேர் இந்த தொழில் செய்து பெரிய ஆளாயிருக்காங்க. உன்கிட்ட இருந்து மட்டும் ஏன் இந்த புலம்பல் அப்படின்னு பலருக்கு தோணும். தொழில் என்றால் என்ன தெரியுமா? நாம் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் வேலை தடைபடக்கூடாது. நமக்கு வருமானம் வந்துகொண்டே  இருக்கணும். நமக்காக பணியாளர்களோ அல்லது இயந்திரமோ அல்லது இரண்டுமே சேர்ந்து நமக்காக சம்பாதித்து கொடுக்கணும். அதற்குப்பெயர்தான் தொழில்.



தொழில்ல நேரம் தவறாமை, நேர்மை இரண்டும் முக்கியம்னு சொல்லுவாங்க. நேர்மையை நான் விடாம கெட்டியா பிடிச்சுகிட்டேன். ஆனா நேரம் தவறாமையை பல நேரங்கள்ல என்னால பின்பற்றமுடியலை. அதற்கு காரணம் அதற்கான பிடி என் கையில இல்லை. அதை சரிசெய்யணும்னா, பெரிய அளவுல முதலீடு வேணும். அதை வெச்சு என் அலுவலகத்து சூழ்நிலையை மாற்றினாதான் வர்றவங்களை நேரம் தவறாமையை பின்பற்ற செய்ய முடியும். அது நிறுவனத்துக்கும் நல்லது. வாடிக்கையாளருக்கும் நல்லது. அதை இப்போ என்னால செய்ய முடியாது. ஏன்னா, ஆரம்ப கட்டத்துல நான் அந்த கடுமையை காட்டினா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. இந்த உண்மை புரிஞ்சதால அடக்கி வாசிக்கிறேன்.


ஜெமினி - ஏவிஎம் - நேரம் தவறாமை


சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)

ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.

ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.

திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.

இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.

ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.

ஒரு சின்ன விசயம். எந்த ஒரு விசயத்திலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது என் வழக்கம். ஆனால் நான் செய்து வரும் டி.டி.பி தொழிலில் என்னால் பல நேரங்களில் குறித்த நேரத்தில் பணி செய்து கொடுக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையை இப்போது என்னால் வெல்லமுடியவில்லை. அதற்கு காரணம் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான்.

சில நாட்களில் காலை முதல் மாலை வரை எந்த வேலையும் இருக்காது. கடந்த பல ஆண்டுகளாக மாலை 6 மணிக்கு கரண்ட் போய்விடுகிறது. இது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் மிஸ்டர் பப்ளிக் ஒருவர் மாலை 5.45 மணிக்கு வந்து இரண்டு பக்க மேட்டரை டைப் செய்து உடனே பிரிண்ட் எடுக்க வேண்டும் என்பார். நாம என்ன குமுதம், ஆனந்தவிகடனா பிரிண்ட் செய்து வெச்சிருக்கோம். காசை வாங்கிட்டு உடனே எடுத்துக்கொடுக்க.

டி.டி.பி என்பது வரும் வாடிக்கையாளருக்காக அவருக்கு சொந்தமான அவருக்கு மட்டுமே பயன்படக்கூடிய விசயத்தை டைப்செய்து தருவதாகத்தான் இருக்கும். ஒரே ஒரு பக்கத்தை டைப் செய்து 50ஆயிரம் ஜெராக்ஸ் போட்டு தரும் வேலையல்ல என்பதை வாடிக்கையாளருக்கு விளங்க வைக்கவே பாதி எனர்ஜி வேஸ்ட் ஆகிடும்.

இன்னொரு சிக்கல், பலர் தனக்கு வேண்டிய தகவலை சரியாக எழுதி எடுத்து வரமாட்டார்கள். பக்கத்தில் இருந்து ஆக்கல், அழித்தல், வார்த்தையை மாற்றுதல் வேலையை செய்துகொண்டு நமக்கு டென்சனை ஏற்றுவார்கள். கடைசியாக பார்த்தால் சரியான முறையில் வழக்கறிஞர்களால் எழுதி தரப்பட்ட ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் குறைந்தது 6 பக்கம் டைப் செய்துவிடுவேன். ஆனால் ஒழுங்காக எழுதி வராமல் பக்கத்தில் இருந்து டிக்டேட் செய்யும் இம்சை அரசர்களால் ஒரு மணி நேரத்தில் 3 பக்கம் கூட முடிக்க முடியாது.

அவர்கள் கொத்துபரோட்டா போட்ட தகவலை நாம் செம்மைப்படுத்தி ஒழுங்கான ஆவணமாக்கி எடுத்து கொடுத்தால் 3 பக்கம்தானே. இதுக்கு அவ்வளவு காசு தரணுமா என்று நம்முடைய அரைமணி நேரத்துக்கு காற்றிலேயே அல்வா கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.

ஒரு நாளைக்கு எட்டுமணி நேர பணி என்று மாதம் 30 நாளும் பணி செய்வதாக வைத்துக்கொண்டால்கூட ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 60ரூபாய் என்ற தொகை கூலியாக கிடைத்தால்தான் இன்றைய விலைவாசிக்கு மாத சம்பளம் 15ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்ட முடியும். (கட்டிட தொழிலாளர், தச்சர், பெயிண்டர் போன்றவர்களுக்கு  இதைவிட அதிக தின சம்பளம் உண்டு. அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் கம்ப்யூட்டர், கடுமையான இட வாடகை, லட்சக்கணக்கில் அட்வான்ஸ், ஒரு யூனிட் 10 ரூபாய் என்ற அநியாய மின்கட்டணம் உள்ளிட்ட எந்த செலவும் கிடையாது)

ஆனால் 1 மணி நேரத்தில் 3 பக்கம் டைப் செய்து ப்ரூப், ஒரிஜினல் என்று ஆறுபக்கம் பிரிண்ட் (அடக்கவிலை 30 ரூபாய்) போக மீதி 30 ரூபாய் கிடைத்தால் அதில் வாடகை, கரண்ட் பில், கம்ப்யூட்டர், பிரிண்டர் மெயின்டனன்ஸ், பேப்பர் உள்ளிட்ட செலவுகளை கழித்துப்பார்த்தால் என் உழைப்புக்கு கூலி கோவிந்தாதான்.

தொழில் ஆரம்பித்து பல மாதங்கள் கழித்துதான் நான் தொழில் செய்யவில்லை. தனியாக அமர்ந்து கூலி வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போ நம்ம கதை புலிவாலை பிடித்த கதைதான்.

நாட்டுல எவ்வளவு பேர் இந்த தொழில் செய்து பெரிய ஆளாயிருக்காங்க. உன்கிட்ட இருந்து மட்டும் ஏன் இந்த புலம்பல் அப்படின்னு பலருக்கு தோணும். தொழில் என்றால் என்ன தெரியுமா? நாம் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் வேலை தடைபடக்கூடாது. நமக்கு வருமானம் வந்துகொண்டே  இருக்கணும். நமக்காக பணியாளர்களோ அல்லது இயந்திரமோ அல்லது இரண்டுமே சேர்ந்து நமக்காக சம்பாதித்து கொடுக்கணும். அதற்குப்பெயர்தான் தொழில்.

தொழில்ல நேரம் தவறாமை, நேர்மை இரண்டும் முக்கியம்னு சொல்லுவாங்க. நேர்மையை நான் விடாம கெட்டியா பிடிச்சுகிட்டேன். ஆனா நேரம் தவறாமையை பல நேரங்கள்ல என்னால பின்பற்றமுடியலை. அதற்கு காரணம் அதற்கான பிடி என் கையில இல்லை. அதை சரிசெய்யணும்னா, பெரிய அளவுல முதலீடு வேணும். அதை வெச்சு என் அலுவலகத்து சூழ்நிலையை மாற்றினாதான் வர்றவங்களை நேரம் தவறாமையை பின்பற்ற செய்ய முடியும். அது நிறுவனத்துக்கும் நல்லது. வாடிக்கையாளருக்கும் நல்லது. அதை இப்போ என்னால செய்ய முடியாது. ஏன்னா, ஆரம்ப கட்டத்துல நான் அந்த கடுமையை காட்டினா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. இந்த உண்மை புரிஞ்சதால அடக்கி வாசிக்கிறேன்.

புதன், 10 ஏப்ரல், 2013

மணமாலை விளம்பரம் பார்த்து இப்படியும் மோசடிபேர்வழிகள் வரலாம்



10 ஜாதகம் வந்ததுக்கே சந்தோசப்பட்டு அதுல ஒருத்தருக்கு என்னைய கட்டிவெச்சுட்ட. அக்காவுக்கு முதல் ஜாதகத்துலேயே ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துட்ட...மிச்சம் இருக்குற என் தங்கச்சிக்காச்சும் ஒரு அம்பது அறுபது ஜாதகத்தை பார்க்கலாமே...அப்படின்னு எங்க அக்கா சொல்லுது...அதனால நாங்க அவசரப்படாம பொறுமையா எனக்கு மாப்பிள்ளை தேடுறோம் என்று அந்த பெண் என்னிடம் கூறியபோது எனக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.



அந்த பெண்ணின் வயது 26. இதில் ஒன்றும் பெரிய தாமதம் இல்லை. அந்த பொண்ணு படிச்சு முடிக்கவே 22 அல்லது 23 வயசு ஆகியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. குடும்ப வறுமை காரணமாக அந்த பெண் 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு சுமார் 9 ஆண்டுகாலமாக சொற்ப சம்பளத்தில் ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை. பூர்வீக சொத்துக்களும் இல்லை. சேமிப்பும் இல்லை. (ஆனால் 2 லட்ச ரூபாய் கடன் உண்டு). தந்தை விபத்தில் இறந்துவிட்டார்.



இவ்வளவு சிக்கலில் இருப்பதற்காக அந்த பெண் அவசரப்பட்டு ஏதாவது ஒரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் விரலுக்கு மீறிய வீக்கத்துக்கு ஆசைப்படுவதுதான் தவறு என்று தோன்றுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பு சொந்தவீடு, அரசுப்பணி, மாதம் 30ஆயிரத்துக்கு குறையாமல் சம்பளம் என்று பெரிய பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறார்கள். இந்த தகுதியுடன் இருக்கும் மாப்பிள்ளை வீட்டில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்குமே என்பதை இந்த பெண்ணைப் போன்றவர்கள் வசதியாக மறந்துவிடுவதுதான் சிக்கலே.



வசதிக்குறைவாக இருக்கும் பல இளைஞர்கள் வரதட்சணையை எதிர்பார்க்காமல் தங்களைப்போன்று கஷ்டப்படும் குடும்பங்களில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு சிரமதிசையில் இருக்கும் பெண்கள் கூட நாம் பிறந்த வீட்டில்தான் சிரமத்தை அனுபவித்துவிட்டோம். போகும் வீட்டில் ரத்தின கம்பளத்தில் போய் இறங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த ஆசையை முழுவதும் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் புகுந்தவீட்டில் கணவனுடன் நாமும் உழைத்து நமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.



தானும் உழைக்கத் தயாராக இருக்கும் பெண்களுக்கு கொடுமைக்கார அரக்க குணத்துடன் கணவனும், கணவன் குடும்பத்தாரும் அமைகிறார்கள். வரும் மனைவியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆணின் குடும்பத்துக்கு ராட்சச குணத்துடன் மருமகள் அமைகிறாள். இந்த ஏட்டிக்கு போட்டியான கணக்கு டேலி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை.



---------------------------

இணைய தளத்தில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்ய இயலாதவர்களும், புரோக்கர்களிடம் அவ்வப்போது நூற்றுக்கணக்கில் என்று கொடுத்தே பல ஆயிரங்களை இழக்க வேண்டும் என்று அஞ்சும் பலருக்கும் நாளிதழ்களில் உள்ள வரிவிளம்பரங்கள் மூலம் நல்ல வரன்கள் அமைந்துவிடுவதும் உண்டு.



ஆனால் இப்படி வரும் விளம்பரங்களை சில புல்லுருவிகள் பயன்படுத்திக்கொண்டு பெண்ணை அல்லது மாப்பிளையை ஏமாற்றும் கதைகளை அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு 07.04.2013 அன்று ஒரு நாளிதழின் திருச்சி பதிப்பில் மணமாலை பகுதியில் வெளிவந்த விளம்பரம் பார்த்து ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். மாப்பிள்ளை சுயதொழில் என்று குறிப்பிட்ட விசயம் அந்த நபரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். அதை வைத்து தூண்டில் வீசியிருக்கிறார். அதாவது தான் ஒரு எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனி வைத்திருப்பதாகவும், சுயதொழிலில் நீங்கள் தயாரிக்கும் பொருள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருந்தால் தான் ஏற்றுமதி ஆர்டர் எடுத்து தருவதாகவும், குடும்பம், உடன்பிறப்பு, பூர்வீகம், உறவுகள் இன்னும் பிற விபரங்களை சாதாரண தபாலில் அனுப்பவும். ரிஜிஸ்டர், கூரியர் தபால்கள் வாங்குவதில்லை. போனிலும் பேசுவதில்லை. அதனால் சாதாரண தபாலில் அனுப்புங்கள் என்று எழுதியிருந்தது.



சாதாரணமாக இப்படி ஒரு கடிதம் வந்தால் உடனே பதில் எழுதுவதுதான் பெரும்பாலானோரின் வழக்கமாக இருக்கும். ஆனால் நாங்கள் அப்படி அவசரப்படவில்லை. தெளிவான முகவரி கூட இல்லாமல் போன் எண் இல்லாமல் ஒருத்தன் அந்த முகவரிக்கு கடிதம் எழுத சொல்கிறான் என்றால் போஸ்ட் ஆபீசில் யாரையோ கைக்குள் வைத்துக்கொண்டு அந்த கடிதத்தை பெற்றுக்கொள்வான் என்று ரொம்ப எளிதாக யூகிக்க முடிந்தது.



அவன் கடிதம் எழுதியிருந்த லெட்டர்பேட் ரொம்ப சிம்பிளாக இருந்தது. நிறைய டிசைன் செய்து காஸ்ட்லியாக உருவாக்கியிருந்தால்தான் பிராடு கம்பெனியாக இருக்கும். இப்படி சிம்பிளாக இருந்தால் நம்பகத்தன்மை கூடும் என்று நினைத்திருந்தானோ என்னவோ. ஆனால் எங்களுக்கு கடிதத்தை பார்த்த மாத்திரத்தில் மோசடி என்பது புரிந்தது. ஒரு முக்கிய இடத்தில் அலுவலகம் அமைத்து பந்தா காட்டி நம்பவைப்பவர்களே சடாரென்று கம்பிநீட்டிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சரியான போஸ்டல் அட்ரஸ் கூட தராத மன்னார் அன் கம்பெனியை அவ்வளவு எளிதில் நம்பிவிடுவோமா என்ன... இன்னும் எப்படி எப்படி எல்லாம் யோசித்து ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ...



நண்பர்களே ஜாக்கிரதை. மோசடி வலைகள் பல்வேறு வழிகளில் பின்னப்படலாம். இன்டர்நெட், ஈமெயிலில் இதைத்தாண்டிய ஆபத்து உண்டு. கவனமுடன் நடந்துகொள்ளுங்கள். இது மாதிரி புது டெக்னிக் இருந்தால் (நான் இந்த பதிவில் சொல்லியிருப்பது மிகவும் பழைய டெக்னிக்காக கூட இருக்கலாம்) பதிவேற்றுங்கள். நிச்சயமாக நான்கு பேருக்காவது அதனால் நன்மை விளையும்.



போனில் முக்கியமான நபர் அழைப்பார் என்று காத்திருக்கும்போது டெலி மார்கெட்டிங் போன் வந்தால் எவ்வளவு எரிச்சல் வருமோ அதை தாண்டி கோபம் இந்த கடிதத்தைப் பார்த்ததும் வந்தது. சூப்பரா இல்லாவிட்டாலும் நார்மலா ஒரு ஜாதகம் வரும் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில் இங்கேயும் மார்க்கெட்டிங் லெட்டர் என்றால் கோபம் வராமல் என்ன செய்யும்?


மணமாலை விளம்பரம் பார்த்து இப்படியும் மோசடிபேர்வழிகள் வரலாம்

10 ஜாதகம் வந்ததுக்கே சந்தோசப்பட்டு அதுல ஒருத்தருக்கு என்னைய கட்டிவெச்சுட்ட. அக்காவுக்கு முதல் ஜாதகத்துலேயே ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துட்ட...மிச்சம் இருக்குற என் தங்கச்சிக்காச்சும் ஒரு அம்பது அறுபது ஜாதகத்தை பார்க்கலாமே...அப்படின்னு எங்க அக்கா சொல்லுது...அதனால நாங்க அவசரப்படாம பொறுமையா எனக்கு மாப்பிள்ளை தேடுறோம் என்று அந்த பெண் என்னிடம் கூறியபோது எனக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அந்த பெண்ணின் வயது 26. இதில் ஒன்றும் பெரிய தாமதம் இல்லை. அந்த பொண்ணு படிச்சு முடிக்கவே 22 அல்லது 23 வயசு ஆகியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. குடும்ப வறுமை காரணமாக அந்த பெண் 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு சுமார் 9 ஆண்டுகாலமாக சொற்ப சம்பளத்தில் ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை. பூர்வீக சொத்துக்களும் இல்லை. சேமிப்பும் இல்லை. (ஆனால் 2 லட்ச ரூபாய் கடன் உண்டு). தந்தை விபத்தில் இறந்துவிட்டார்.

இவ்வளவு சிக்கலில் இருப்பதற்காக அந்த பெண் அவசரப்பட்டு ஏதாவது ஒரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் விரலுக்கு மீறிய வீக்கத்துக்கு ஆசைப்படுவதுதான் தவறு என்று தோன்றுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பு சொந்தவீடு, அரசுப்பணி, மாதம் 30ஆயிரத்துக்கு குறையாமல் சம்பளம் என்று பெரிய பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறார்கள். இந்த தகுதியுடன் இருக்கும் மாப்பிள்ளை வீட்டில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்குமே என்பதை இந்த பெண்ணைப் போன்றவர்கள் வசதியாக மறந்துவிடுவதுதான் சிக்கலே.

வசதிக்குறைவாக இருக்கும் பல இளைஞர்கள் வரதட்சணையை எதிர்பார்க்காமல் தங்களைப்போன்று கஷ்டப்படும் குடும்பங்களில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு சிரமதிசையில் இருக்கும் பெண்கள் கூட நாம் பிறந்த வீட்டில்தான் சிரமத்தை அனுபவித்துவிட்டோம். போகும் வீட்டில் ரத்தின கம்பளத்தில் போய் இறங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த ஆசையை முழுவதும் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் புகுந்தவீட்டில் கணவனுடன் நாமும் உழைத்து நமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.

தானும் உழைக்கத் தயாராக இருக்கும் பெண்களுக்கு கொடுமைக்கார அரக்க குணத்துடன் கணவனும், கணவன் குடும்பத்தாரும் அமைகிறார்கள். வரும் மனைவியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆணின் குடும்பத்துக்கு ராட்சச குணத்துடன் மருமகள் அமைகிறாள். இந்த ஏட்டிக்கு போட்டியான கணக்கு டேலி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை.

---------------------------
இணைய தளத்தில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்ய இயலாதவர்களும், புரோக்கர்களிடம் அவ்வப்போது நூற்றுக்கணக்கில் என்று கொடுத்தே பல ஆயிரங்களை இழக்க வேண்டும் என்று அஞ்சும் பலருக்கும் நாளிதழ்களில் உள்ள வரிவிளம்பரங்கள் மூலம் நல்ல வரன்கள் அமைந்துவிடுவதும் உண்டு.

ஆனால் இப்படி வரும் விளம்பரங்களை சில புல்லுருவிகள் பயன்படுத்திக்கொண்டு பெண்ணை அல்லது மாப்பிளையை ஏமாற்றும் கதைகளை அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு 07.04.2013 அன்று ஒரு நாளிதழின் திருச்சி பதிப்பில் மணமாலை பகுதியில் வெளிவந்த விளம்பரம் பார்த்து ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். மாப்பிள்ளை சுயதொழில் என்று குறிப்பிட்ட விசயம் அந்த நபரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். அதை வைத்து தூண்டில் வீசியிருக்கிறார். அதாவது தான் ஒரு எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனி வைத்திருப்பதாகவும், சுயதொழிலில் நீங்கள் தயாரிக்கும் பொருள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருந்தால் தான் ஏற்றுமதி ஆர்டர் எடுத்து தருவதாகவும், குடும்பம், உடன்பிறப்பு, பூர்வீகம், உறவுகள் இன்னும் பிற விபரங்களை சாதாரண தபாலில் அனுப்பவும். ரிஜிஸ்டர், கூரியர் தபால்கள் வாங்குவதில்லை. போனிலும் பேசுவதில்லை. அதனால் சாதாரண தபாலில் அனுப்புங்கள் என்று எழுதியிருந்தது.

சாதாரணமாக இப்படி ஒரு கடிதம் வந்தால் உடனே பதில் எழுதுவதுதான் பெரும்பாலானோரின் வழக்கமாக இருக்கும். ஆனால் நாங்கள் அப்படி அவசரப்படவில்லை. தெளிவான முகவரி கூட இல்லாமல் போன் எண் இல்லாமல் ஒருத்தன் அந்த முகவரிக்கு கடிதம் எழுத சொல்கிறான் என்றால் போஸ்ட் ஆபீசில் யாரையோ கைக்குள் வைத்துக்கொண்டு அந்த கடிதத்தை பெற்றுக்கொள்வான் என்று ரொம்ப எளிதாக யூகிக்க முடிந்தது.

அவன் கடிதம் எழுதியிருந்த லெட்டர்பேட் ரொம்ப சிம்பிளாக இருந்தது. நிறைய டிசைன் செய்து காஸ்ட்லியாக உருவாக்கியிருந்தால்தான் பிராடு கம்பெனியாக இருக்கும். இப்படி சிம்பிளாக இருந்தால் நம்பகத்தன்மை கூடும் என்று நினைத்திருந்தானோ என்னவோ. ஆனால் எங்களுக்கு கடிதத்தை பார்த்த மாத்திரத்தில் மோசடி என்பது புரிந்தது. ஒரு முக்கிய இடத்தில் அலுவலகம் அமைத்து பந்தா காட்டி நம்பவைப்பவர்களே சடாரென்று கம்பிநீட்டிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சரியான போஸ்டல் அட்ரஸ் கூட தராத மன்னார் அன் கம்பெனியை அவ்வளவு எளிதில் நம்பிவிடுவோமா என்ன... இன்னும் எப்படி எப்படி எல்லாம் யோசித்து ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ...

நண்பர்களே ஜாக்கிரதை. மோசடி வலைகள் பல்வேறு வழிகளில் பின்னப்படலாம். இன்டர்நெட், ஈமெயிலில் இதைத்தாண்டிய ஆபத்து உண்டு. கவனமுடன் நடந்துகொள்ளுங்கள். இது மாதிரி புது டெக்னிக் இருந்தால் (நான் இந்த பதிவில் சொல்லியிருப்பது மிகவும் பழைய டெக்னிக்காக கூட இருக்கலாம்) பதிவேற்றுங்கள். நிச்சயமாக நான்கு பேருக்காவது அதனால் நன்மை விளையும்.

போனில் முக்கியமான நபர் அழைப்பார் என்று காத்திருக்கும்போது டெலி மார்கெட்டிங் போன் வந்தால் எவ்வளவு எரிச்சல் வருமோ அதை தாண்டி கோபம் இந்த கடிதத்தைப் பார்த்ததும் வந்தது. சூப்பரா இல்லாவிட்டாலும் நார்மலா ஒரு ஜாதகம் வரும் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில் இங்கேயும் மார்க்கெட்டிங் லெட்டர் என்றால் கோபம் வராமல் என்ன செய்யும்?

திங்கள், 8 ஏப்ரல், 2013

அருங்காட்சியத்திற்கு போகும் சிறுகதைகள்

கல்கி வார இதழில் வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறுகதைப்போட்டி அறிவித்திருக்கிறார்கள். முதல் பரிசு 10ஆயிரம், இரண்டாம் பரிசு 7 ஆயிரத்து 500, மூன்றாம்பரிசு 5000. இது தவிர பிரசுரமாகும் கதைகளுக்கு 500 ரூபாய் சன்மானம் தருவார்கள் என்று நினைக்கிறேன். அறிமுக எழுத்தாளர் என்றால் சிறப்பு பரிசு உண்டு.


கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜுன் 15. ரெகுலராக வாசிப்பில் இருப்பவர்களுக்கு இந்த விவரங்கள் நன்கு தெரியும். இந்த பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது புதியவர்களுக்காக.

நானும் கடந்த 2000வது ஆண்டில் இருந்து தொடர்ந்து சிறுகதைகளை இந்த போட்டிக்கு எழுதி அனுப்பிக்கொண்டேதான் இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட பிரசுரத்துக்கு கூட தேர்வு பெற்றது இல்லை. இரண்டு முறை வாசகர் கடிதம் வந்துள்ளது. பிறகு 2011ல் கல்கி தீபாவளி தமாக்கா போட்டியில் கட்டுரை ஒன்றிற்கு சைக்கிள் பரிசு கிடைத்தது. இந்த ஆண்டும் சிறுகதை பரிசுக்கு முயற்சிக்க வேண்டும். கல்கி போட்டியில் தேர்வாகாத சிறுகதைகளை மீண்டும் பிற இதழ்களுக்கு அனுப்பி அவை அனைத்துமே பிரசுரமாகியிருக்கின்றன. எங்கே சறுக்குகிறேன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

------------------
தமிழ் இதழ்களில் பிரசுரமாகும் சிறுகதைகளில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அந்த ஆண்டின் 12 சிறுகதைகளில் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து நூலாக வெளியிடும் பணியை 43ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனை செய்துவருகிறது. நான் எழுதிய தேன்மொழியாள் என்ற சிறுகதை அமுதசுரபியில் வசுமதி ராமசாமி அறக்கட்டளை பரிசு பெற்று அது 2006ஆம் ஆண்டு ஜனவரி மாத சிறந்த சிறுகதையாகவும் தேர்வு பெற்றது.

தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 1
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 2
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 3
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 4

அந்த கதை இடம்பெற்ற தொகுப்பு பெயர் அருவி. அதில் உள்ள பிற 11 எழுத்தாளர்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். 5 பேர் மட்டும் தொடர்பில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் தொடர்ந்து பல மாதங்கள் தொலைபேசி தொடர்பில் இருந்தார். அவர் பெயர் எம்.ஆர்.ராஜேந்திரன். இவர் கொற்றவன் என்ற பெயரில் கதை, கவிதை, கட்டுரை எழுதியதுடன் கல்கியில் நிருபராகவும் பணியாற்றினார். இப்போது ஒரு மினிபட்ஜெட் படம் இயக்கியுள்ளதாக கல்கியில் ஒரு பக்க செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய அலைபேசி எண்ணும் என்னுடைய மொபைல்போன் மாற்ற அலைக்கழிப்பில் எங்கே சென்றது என்று தெரியவில்லை.

இலக்கியச்சிந்தனைக்கு ஒவ்வொரு மாதமும் வந்து குவியும் சிறுகதைகளில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதே கடினமாக இருக்கும். ஆனால் இப்போது ஒரு ஆண்டு முழுவதும் வரும் சிறுகதைகளில் வெகு சுலபமாக சும்மா பேருக்கு 12 கதைகளை தேர்ந்தெடுத்துவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவு வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை குறைத்துவிட்டன. அல்லது ஏறக்குறைய சிறுகதை பிரசுரத்தையே நிறுத்திவிட்டன என்று சொல்லலாம். அப்படி ஒன்றிரண்டு சிறுகதைகளும் பிரபல எழுத்தாளர்களுடையது மட்டுமே பிரசுரமாகின்றன என்று இலக்கியசிந்தனை நிர்வாகி ஒருவர் வருத்தப்பட்டிருந்தார்.

இலக்கியசிந்தனை பற்றிய வலைத்தள சுட்டி


இதழ்கள் அனைத்திலும் சினிமா மட்டுமே பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படி ஒருசில புதியவர்கள் எழுதினாலும் ஒரு பக்க கதை, அரைபக்க கதை என்று நசுக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் இப்படி பிரசுரம் செய்வதால் மக்களின் ரசனையும் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு எங்கும், எதிலும் பொறுமை, சகிப்புத்தன்மை இல்லாமல் அவசரப்படுகிறார்கள். (ஒரு பிரபல இதழில் அதன் துணையாசிரியர்களே உப்புசப்பில்லாத ஒருபக்க கதைகளை எழுதி சன்மானத்தை அவர்களே எடுத்துக்கொள்ளும் கேவலமான நிலையும் இருப்பதாக சிலர் சொல்லக்கேள்வி. அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் சுமார் துணுக்கு மற்றும் ஜோக்குகள், கடிதங்கள் பிரசுரமான வகையில் எனக்கு 2006-07 ஆம் ஆண்டில் மட்டும் 5ஆயிரம் ரூபாய் வரை பணத்தை அனுப்பாமல் மோசடி செய்துவிட்டார்கள். நானும் கடிதம் எழுதி அலுத்துப்போய் விட்டுவிட்டேன். இப்போது அந்த இதழுக்கு நான் எதையுமே எழுதி அனுப்புவதில்லை.)

இந்த ஆண்டு இலக்கியச்சிந்தனை 43ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் வெள்ளிக்கிழமை 12-04-2013 மாலை 6 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலை ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் எனக்கும் வந்திருக்கிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது. ஆனால் பொருளாதார காரணங்களால் என்னால் கலந்து கொள்ள முடிவதில்லை.

நான் பரிசு பெற்ற ஆண்டில் அந்த விழா நடைபெறும் முதல் நாள் வரை சென்னையில்தான் இருந்தேன். முதல் நாள் இரவு புறப்பட்டு மறுநாள் காலை திருவாரூர் வந்துவிட்டேன். அன்று மாலை 4 மணிக்கு என்னிடம் போஸ்ட் மேன் விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்தார். பிரித்துப்பார்த்தால் 6 மணிக்கு விழா. நாம என்ன யஹலிகாப்டர்லயா போகமுடியும்னு நினைச்சு விட்டுட்டேன். அதன்பிறகு போகும் வாய்ப்பே அமையவில்லை.

2012ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக கவிப்பேரரசு திரு. வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற நாவலைப் பாராட்டி ரூ.5000 பரிசை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்க உள்ளதாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் வேளாண்மை வெறுமையானதால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் 11 குடும்பங்களுக்கு இந்த நாவல் ஈட்டிய வருவாயிலிருந்து தலா 1 லட்சம் வீதம் 11 லட்சத்தை பரிவுத்தொகையாக வைரமுத்து வழங்க இருப்பதாகவும் அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடன் 04.04.2012 இதழில் வெளியான ஒற்றைச்சிறகு சிறுகதைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு.

சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்பிருந்தால் போய்வாருங்கள்.

போகிற போக்கில் சிறுகதைகள் என்ற வடிவம் வெகுவிரைவில் நூலகத்தில் கூட கிடைக்காமல் அருங்காட்சியத்தில் போய் பார்க்க வேண்டிய நிலை வரலாம்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

முதல்வன், நாடோடிகள் வெற்றி - கந்தா - ஆனந்த விகடனில் கதையும்



ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா என்ற சிறுகதையை 10.04.2013 தேதியிட்ட ஆனந்த விகடனில் திருவாரூர் பாபு எழுதியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் உருவான முதல் சினிமாவான கந்தா படம் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதை விட பல மடங்கு அதிர்ச்சியை இந்த சிறுகதையின் முடிவு எனக்கு ஏற்படுத்தியது. 




அதற்காக கதையின் முடிவு பெரிய மலையைப் புரட்டுவது போல கனமான விசயத்தை எல்லாம் வைத்து எழுதப்படவில்லை. கதைமாந்தர் ஒருவரின் மனைவி போகிற போக்கில் சொல்கிற ஒற்றை வாக்கியத்துடன் கதை முடியும். அந்த வாக்கியம் வாசகர் எதிர்பாராதவகையில் இருக்கும். நானும் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கதைகளைப் படித்திருப்பேன். சமீப காலத்தில் நான் வாசித்த கதைகளில் கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று மனதின் ஓரத்தில் லேசான யூகம் எட்டிப்பார்த்ததை தகர்த்து வேறு வகையில் அமைந்திருந்தது இந்தக் கதையில்தான்.




சிறுகதைகள் வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு திருவாரூர் பாபு என்ற பெயர் கண்டிப்பாக பரிச்சயமாகியிருக்கும். சுமார் ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் எழுதிய அவருடைய முதல் சிறுகதை பிரசுரமாவதற்கு நான்கு ஆண்டுகள் ஆனதைப்போலவே அவர் இயக்கிய முதல் படம் திரையைத் தொடுவதற்கும் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று திருவாரூரில் கந்தா படம் ரிலீஸ் வெளியான நாளன்று குறிப்பிட்டார்.




நான்கு ஆண்டுகள் கழித்து அவருடைய முதல் கதை பிரசுரமானாலும் அதன் பிறகு ஆயிரம் கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஆனால் முதல் படம் கந்தா பல பிரச்சனைகளால் மிகவும் தாமதமாக திரையைத் தொட்டது அதன் வெற்றியை பாதித்த முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.




படத்தின் ஆறு பாடல்களையும் ஆடியோவில் கேட்கும் போது நன்றாகத்தான் இருந்தது. மூன்று பாடல்களை படமாக்கிய விதமும் குறைசொல்லும்விதமாக இல்லை. (படத்தில் மூன்று பாடல்கள்தான்) பிறகு ஏன் மக்களிடம் பிரபலமடையவில்லை என்று பார்க்கும்போது சேனல்கள் எதிலும் திரும்பத்திரும்ப ஒளி (ஒலி) பரப்பாகவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.




இப்போது படம் எடுப்பது கூட பெரிய விசயம் இல்லை. அதை மார்க்கெட்டிங் செய்வதும், தியேட்டர்களை பிடிப்பதும், அதற்கு முதல் இரண்டு வாரங்கள் கூட்டம் சேர்ப்பதும்தான் பெரிய வேலையாக சவாலாக இருக்கும் என்று பலரும் சொல்வது கந்தா படத்திலும் உண்மையாகிவிட்டது.




படம் நல்ல கருத்தைதான் சொன்னது என்றாலும் அதையும் தாண்டி முழு அளவில் மனது திருப்தி அடைந்தது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. படத்தில் ஒரு மெசேஜ் கூட சொல்லாமல் வெற்றிபெறும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு அமைந்துவிடுகிறது. பாபு எதுவும் மெசேஜ் சொல்லவில்லையோ என்று நினைத்துவிடவேண்டாம். ஆசிரியரும், பெற்றோரும்தான் சமூக விரோதிகள் உருவாக காரணம் என்ற அழுத்தமான மெசேஜ் படத்தில் இருக்கிறது. ஆசிரியரும், பெற்றோரும் தவறானவராக இருந்துதான் பிள்ளையை வீணடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கேட்காத கடனும், பார்க்காத பயிரும் பாழ் என்ற விதிக்கேற்ப பிள்ளையை கவனிக்காமல் விட்டால் கூட சிக்கல்தான் என்ற கருத்து மறைமுகமாக படத்தில் சொல்லப்பட்டுள்ளது.






ஆனால் கந்தா படத்தில் சொல்ல வந்த விசயம் மக்கள் மனதை தொடுவதற்கு தவறிவிட்டது. மேக்கிங்கில் குப்பை என்று சொல்லும்படி எல்லாம் எந்த தவறும் இல்லை. இந்த காரணத்தால்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று அறுதியிட்டு கூறுவது கடினம்.




முதல்வன் படம் படு ரிச்சான ஒரு பேண்டசி கதைக்களம். அந்த படத்தை நான் பார்க்கும்போது, படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய சேசிங், அதிரடி சண்டை என்றெல்லாம் இருக்கலாம் என்று யூகித்தேன். ஆனால் யாரும் அவ்வளவு எளிதில் யூகிக்காத வகையில் நாலு சுவற்றுக்குள் ரகுவரனை வைத்து முதல்வரின் பாதுகாவலர்களையே சுட்டுக்கொல்லவைத்தது என்று ரொம்ப சிம்பிளான கிளைமாக்ஸ்தான் இருந்தது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்திவிட்டது. 





என் பார்வையில் அதற்கு காரணம், கிளைமாக்ஸ் வருவதற்கு சில காட்சிகள் முன்பாகவே இளைஞர்கள் கையில் ஆட்சி, ஊழல் பெருச்சாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் என்ற வகையில் காட்சிகள் அமைந்ததிலேயே ரசிகர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். பெரிய விசயத்தையே சாதித்தாயிற்று. மூட்டைப்பூச்சியை நசுக்க ராணுவம் என்பதெல்லாம் தேவையில்லை. சின்ன விசயத்தை வைத்து ரகுவரனை காலிசெய்துவிடலாம் என்று காட்சி அமைந்ததால் ரசிகனும் திருப்தியாகி விட்டான் என்று சொல்லத் தோன்றுகிறது.




1994ன் இறுதியில் வெளிவந்த படம் புதிய மன்னர்கள். இப்போதும் பொதிகை, மெகா மற்றும் பல தொ(ல்)லைக்காட்சிகளிலும் இந்தப் படம் அவ்வப்போது ஒளிபரப்பாகிறது. படம் வந்தபோது மட்டுமல்ல இப்போதும் தொலைக்காட்சிகளில் படத்தைப் பார்த்த யாரும் படம் நல்லாயில்லை என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனாலும் படம் ஓடவில்லை. இப்படியும் சில படங்களுக்கு பரிதாப ரிசல்ட் கிடைக்கும்.




நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கருத்தை முன்வைத்து நாடோடிகள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தக் கதை யாருடை மனதிலும் சொந்தக்கற்பனையாக உருவான கதையோ, அல்லது தழுவல், உருவலோ என்று நான் வாதிடவில்லை. ஆனால் அந்தப் படத்தை நான் முதன்முதலில் பார்த்ததும் 2000 அல்லது 2001ஆக இருக்கலாம். கல்கி வார இதழ் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தொலைந்தகாலம் என்ற சிறுகதைதான் என் நினைவுக்கு வந்தது.




ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதி இரண்டாம்பரிசு ரூ.7,500 பரிசு பெற்றதுடன் அதை எழுதிய எழுத்தாளர் 35 வயதுக்குட்பட்டவர் என்பதற்காக கூடுதலாக 500 ரூபாயும் பரிசு பெற்ற கதை அது.




நண்பனின் காதலுக்கு உதவப்போய் நண்பன் காதலியின் அப்பாவையோ அண்ணனையோ தவறுதலாக கொலைசெய்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வருவான். ஆனால் நண்பனின் பணக்கார மனைவி வசதி வாய்ப்பில்லாத சூழ்நிலையில் வாழ விருப்பமின்றி அவனை விட்டு பிரிந்து சென்றிருப்பாள். வாரத்தில் இரண்டுநாட்கள் குழந்தையை பார்க்கலாம் என்ற அளவில் விவாகரத்து வழக்கு தீர்ப்பாகி இருக்கும்.





நண்பனின் அரைவேக்காட்டு காதலுக்காக தன் இளமைக்காலம், தன் சகோதரியின் நின்றுபோன திருமணம் என்று பல இழப்புகளை தந்துச் சென்ற தொலைந்த காலத்தை நினைத்து அந்த கதாபாத்திரம் வருந்துவதாக கதை முடியும்.






பொதுவாக சிறுகதைகள், நாவல்களை படமாக்குவதில் பல சிரமங்கள் உண்டு. கதாசிரியரை திருப்திபடுத்த நினைத்தால் ஆடியன்ஸ் எஸ்கேப்பாகிவிடுவார்கள். அதற்காக கதையின் மையக்கருவையே சிதைத்து சின்னாபின்னமாக்கி கதை அல்லது நாவலின் பெயரைக்கெடுக்கும் காரியங்களையும் பல இயக்குனர்கள் செய்ததுண்டு. ஆனால் நாடோடிகள் படத்துக்கு அமைக்கப்பட்ட திரைக்கதை ரசிகர்களைக் கட்டிப்போட்டதன் காரணமாக பெரிய வெற்றி பெற்றது.




கல்கியில் வெளிவந்த சிறுகதையை ஒருபாராவில் சொன்னாலும் முழுக்கதையும் புரிந்துவிடுகிறது. இந்த கதைக்கரு இரண்டரை மணி நேரப்படமாக வந்தபோதும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தது.

திகில், முழு நீளக்காமெடி படங்கள் சில நேரங்களில் விதிவிலக்காகிவிடும். ராஜேஷ் இயக்கிய மூன்று படங்களில் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் மட்டும் லேசாக கதை இருந்தது மாதிரி (அது எங்க சார் இருந்தது. நானே கதை இல்லைன்னு ஒத்துகிட்டேன் அப்படின்னு இயக்குனர் ராஜேஷ் சொல்லலாம்.) எனக்கு தெரிந்தது. காமெடி என்ற பெயரில் மொக்கை ஜோக் சிலவற்றை வைத்து படத்தை முடிக்காமல் காட்சி அமைப்புகளே சிரிப்பை வரவழைத்ததும், சந்தானத்தின் முகபாவனைகளும் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அத்துடன் பாடல்களும் நயன்தாராவும் பக்கபலமாக இருந்தனர்.




முனி பார்ட் 1-ஐ விட காஞ்சனா (முனி பார்ட் 2)  அதிரடி வெற்றி. அதற்கு முக்கிய காரணம் திகில் சமாச்சாரத்துடன் காமெடியைக் கலந்ததுதான். இதையயல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு விசயம் மட்டும் ஓரளவு விளங்குகிறது. கருத்து சொல்லு, சொல்லாம போ... பாடல்கள் ஓரளவு கேட்கும்போதே தாளம் போடச்செய்வதாக இருக்க வேண்டும். சிரிப்புக்கு உத்திரவாதம் தரவேண்டும். அதனால் வயிற்று வலி என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் ரசிகர்களில் பெரும்பாலனவர்கள் இருக்கிறார்கள்.




திருவாரூர் பாபுவும் காமெடிக்கு என்று குண்டு ஆர்த்தி, சத்யன், விவேக்கின் தனி காமெடி டிராக் என்று பயன்படுத்தி காட்சிகள் அமைத்திருந்தார். அத்துடன் பாடல்களும் நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும் வெற்றிக்கனியைப் பறிப்பதைத் தடுக்கும் வில்லனாக சரியான நேரத்தில் படம் ரிலீசாகாதது அமைந்துவிட்டது.




அவருடைய பேட்டி தினகரன் வெள்ளி மலரில் 5-4-2013 பிரசுரமாகியுள்ளது.

Page 1

Page 2



தில், கில்லி உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான கோபிநாத் தயாரித்து ஒளிப்பதிவு செய்யும் படமாக தேரடிவீதி திருக்கண்ணபுரம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இது திருவாரூர் பாபுவின் இரண்டாவது படம். இந்தப்படத்தில் அவருக்கு எல்லாவிசயமும் கூடி வந்து வெற்றி தேவதை அவரது படத்தை முத்தமிடவேண்டும் என்று என்னுடைய மானசீக குருவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.


























































10 ஏப்ரல் 2013 ஆனந்த விகடன் இதழில் திருவாரூர் பாபு எழுதிய கதையின் சில பாராக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.





-----------------------------------------------------



யாருக்கும் சொல்ல வழி இல்லை. போலீஸ் எப்பவும் கண்காணிச்சுக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு உணர்வு. செல்போன்கூட வெச்சுக்கலை. உன்னைக் கண்காணிச்சுட்டு இருப்பாங்களோ... என்னால கஷ்டப்படுவியோனு நெனப்பு. அதான் உனக் குக்கூடச் சொல்லாம... எல்லாம் நாசமாப்போச்சுடா.

நான் காணாப் போனதும் உன்னையும் ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வெச்சு விசாரிச்சதா கேள்விப்பட்டேன்... அழுதேன். எனக்கு வேற வழி தெரியலடா. என்னை மன்னிச்சிரு... உன்னைப் பார்க்கணும்... உன்கூடப் பேசணும்னு துடிச்சிருக்கேன். ஆனா, பொண்டாட்டி குழந்தைகளோடு இருக்கற உனக்கு, என்னால சங்கடம் வந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதனாலதான் இத்தனை வருஷமா உன்னைத் தவிர்த்தேன்!''






வேட்டியால் முகம் துடைத்துக்கொண்டான். 20 வருட சோகத்தை, ஆற்றாமையைத் தன்முன்னே இறக்கிவைக்கிறான் என்பது பரமேஸுக்குப் புரிந்தது . 





''ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா அகால மரணம் அடைந்தார். இந்த போட்டோவ பெரிசா வெச்சு நான் பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் போட்டு, போட்டோ பின்னால  எழுதியிருக்கேன். நாற்பத்துச் சொச்சம் வயசுல நான் செத்துப் போனதை இந்த ஊருக்குச் சொல்லணும்டா. பழைய போட்டோவைப் போட்டாதான் என்னை அடையாளம் தெரியும். ஆயிரம் போஸ்டர் அடிச்சு தெருத் தெருவா ஊர்ல உள்ள அத்தினி சுவத்துலயும் ஒட்டு. என்கிட்ட ஏமாந்தவன், நான் ஏமாத்தினவன் எல்லாம் போஸ்டரைப் பார்த்து 'தொலைஞ்சான்’னு ஒரு பெருமூச்சுவிடுவான். அதுதான் என் ஆத்மா சாந்தி அடையறதுக்கான மந்திர வார்த்தை. எனக்காக இதைச் செய்வியா? என்னோட கடைசி ஆசைடா...''