எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் வேலை பார்த்த இடம் ஒரு பெரிய தனியார் நிறுவனம்.சில ஆண்டுகளுக்கு முன்னால வேற ஊருக்கு மாற்றலாகி குடும்பத்தோட போயிட்டார். அதே ஊரிலேயே அவர் பொண்ணையும் திருமணம் செய்து கொடுத்தார்.
மாப்பிள்ளை - செல்போன் ரீசார்ஜ், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஆசை வார்த்தையால வாடகை சைக்கிள் கம்பெனியும் நடத்தி வந்தார். செல்போன் தொடர்பான வியாபாரத்துல அவர் ரொம்பவே திறமைசாலிதான். ஆனால் சைக்கிள் விஷயத்தில் பூஜ்யம் என்பதால் ஒரு ஆளுக்கு நிறைய சம்பளம் கொடுத்து அந்தக் கடையை நடத்தி வந்தார். ஆனால் அதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சைக்கிள் கடையை மூடிவிட்டார்.
அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பினால் பிறகு செல்போன் கடையும் தள்ளாடியது. சைக்கிள் கடையால் பல மாதங்கள் நஷ்டம் வந்திருந்தாலும் நண்பரின் பெண் திருமணமாகிப் போன நேரம்தான் ஒரு கடையை இழுத்து மூடவேண்டியுள்ளது என்று சுற்றத்தார் பேசியிருக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களிலும் நிம்மதி இல்லை.
ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மைதான். (உதவியாக இருந்தாலும் சரி, தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலும் சரி...இரண்டையுமே வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.)
ஆனால் முற்றிலும் தெரியாத தொழிலில் ஈடுபட்டுவிட்டு அதில் நஷ்டம்
மாப்பிள்ளை - செல்போன் ரீசார்ஜ், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஆசை வார்த்தையால வாடகை சைக்கிள் கம்பெனியும் நடத்தி வந்தார். செல்போன் தொடர்பான வியாபாரத்துல அவர் ரொம்பவே திறமைசாலிதான். ஆனால் சைக்கிள் விஷயத்தில் பூஜ்யம் என்பதால் ஒரு ஆளுக்கு நிறைய சம்பளம் கொடுத்து அந்தக் கடையை நடத்தி வந்தார். ஆனால் அதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சைக்கிள் கடையை மூடிவிட்டார்.
அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பினால் பிறகு செல்போன் கடையும் தள்ளாடியது. சைக்கிள் கடையால் பல மாதங்கள் நஷ்டம் வந்திருந்தாலும் நண்பரின் பெண் திருமணமாகிப் போன நேரம்தான் ஒரு கடையை இழுத்து மூடவேண்டியுள்ளது என்று சுற்றத்தார் பேசியிருக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களிலும் நிம்மதி இல்லை.
ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மைதான். (உதவியாக இருந்தாலும் சரி, தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலும் சரி...இரண்டையுமே வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.)
ஆனால் முற்றிலும் தெரியாத தொழிலில் ஈடுபட்டுவிட்டு அதில் நஷ்டம்
ஏற்பட்டால் உடனே மனைவி வந்த நேரம்தான், குழந்தை பிறந்த நேரம்தான்னு சொல்லி தப்பிக்கிறவங்களை என்ன செய்யுறது?
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான். - இந்தப் பழமொழி குறித்த என்னுடைய கருத்தை சொல்றேன்.
இந்தப் பழமொழிக்கு முக்கிய காரணங்களா சோம்பேறித்தனமும், ஆர்வமின்மையும்தான் இருக்கணும். ஏன்னா, செய்யுற தொழிலை விடுறவன் சோம்பேறியா இருக்கலாம். ஆர்வம் இல்லாதவன்தான் தெரியாத தொழிலை அதனுடைய போக்குலேயே விட்டு நஷ்டப்படுவான்.
பேராசை மற்றொரு காரணமா இருக்கும். நீங்க யோசிச்சுப் பார்க்கும்போதும் ஒரு தொழில் வீழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்குறதா தெரியலாம். ஆனா அதுக்கெல்லாம் அடிப்படையா மேலே சொல்லியிருக்குற மூணு காரணங்கள்தான் அதிகமா இருக்கும்.
இது 2008 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய படைப்பு.
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான். - இந்தப் பழமொழி குறித்த என்னுடைய கருத்தை சொல்றேன்.
இந்தப் பழமொழிக்கு முக்கிய காரணங்களா சோம்பேறித்தனமும், ஆர்வமின்மையும்தான் இருக்கணும். ஏன்னா, செய்யுற தொழிலை விடுறவன் சோம்பேறியா இருக்கலாம். ஆர்வம் இல்லாதவன்தான் தெரியாத தொழிலை அதனுடைய போக்குலேயே விட்டு நஷ்டப்படுவான்.
பேராசை மற்றொரு காரணமா இருக்கும். நீங்க யோசிச்சுப் பார்க்கும்போதும் ஒரு தொழில் வீழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்குறதா தெரியலாம். ஆனா அதுக்கெல்லாம் அடிப்படையா மேலே சொல்லியிருக்குற மூணு காரணங்கள்தான் அதிகமா இருக்கும்.
இது 2008 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய படைப்பு.