Search This Blog

சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூன், 2014

எட்டு வயது அண்ணனின் உயிரைக் காப்பாற்ற காத்திருக்கும் ஒன்பது மாத மழலைத் தங்கை

திருவாரூரில் வசித்து வரும் கே.சிவக்குமார்-கவிதா தம்பதியரின்மகனான மாஸ்டர் சி.அருண்(8) சிவப்பணுக்கள் குறைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றான். அவனது உயிரைக் காப்பாற்ற ஸ்டெம் செல்மாற்று STEMCELL TRANSPLANATION என்ற சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தனது அண்ணனின் சிகிச்சைக்கு உதவ 9 மாத மழலைத்தங்கை சி.நித்ய ஸ்ரீ காத்திருக்கிறாள் என்பது வெறும்செய்தியல்ல. ஒரு குடும்பத்தின் சோகம்.
 
கே.சிவக்குமார் தனதுசொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் காரியாப் பட்டியிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்து வசித்து வரும் ஊர் திருவாரூர். சிவக்குமார்கவிதாதம்பதியருக்கு மாஸ்டர் அருண் பிறந்த பிறகுசுமார் ஒண்ணரை வயது இருக்கும்போது மிகுந்த சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தான். மேலும் அவனது உடல் முழுக்க மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியது. அப்போது தொடங்கியதுதான் இந்த குடும்பத்திற்கான துயரமும் சோகமும். மதுரை ராசாசிஅரசு மருத்துவமனை தொடங்கி தரமணி, வேலூர், சென்னை என தங்கள் ஒரே மகனை காப்பாற்ற பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறிஇறங்கி உள்ளனர்.
 
மாஸ்டர் அருணின் பெற்றோர்கள், நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டதால் இந்த நோய் உண்டாகியிருக்கலாம் என னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்எனசிவக்குமார்-கவிதா தம்பதியினர் ஒரு முடிவுக்கு வந்தனர். மாஸ்டர் அருணுக்கு நாளுக்குநாள் உடல் நிலை மோசமாகி அபாயக்கட்டத்திற்கு செல்லும்போது தங்கள் மகனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்பதால் சிவக்குமார் தனது சொந்த வாகனமான லாரியை விற்றுள்ளார். மேலும் தனது மனைவியின் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களையும் விற்று தொடர்மருத்துவம் பார்த்துள்ளார்.

திருமதிகவிதா சிவக்குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகவும், சிவக்குமார் திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் சொற்ப ஊதியத்தில் ஓட்டுநராகவும் பணிபுரிந்தாலும் கிடைக்கும் வருமானத்தை தங்களது மகனின் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்றே செலவு செய்துள்ளார்கள்.
 
மாஸ்டர் அருணைக் காப் பாற்ற வேண்டும் என்ற ஒரே நினைவுதான் அவர்களிடம் இருந்தது.மாதா மாதம் மருந்து, மாத்திரை, ஊசி மற் றும் ஏ பாசிட்டிவ் வகை (250 மிலி) இரத்தம் ஏற்றுவது என்றே சிகிச்சை தொடர்ந்தது. தொடர்சிகிச்சையின் காரண மாக ஓரளவு உடல்நிலை முன் னேறியிருப்பதைப் போல் தோற்றத்தில் தெரிந்தாலும் அவனுடைய குறைபாடு நீங்க வில்லை. 

சிவப்பணுக்கள் குறைபாட்டின் காரணமாக `ஹீமோ குளோபின் 4 பாயிண்ட் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.இதனிடையே தற்போதுதொடர்ந்து மருத்துவம் பார்த்து வரும் சென்னையைச்சேர்ந்த பெண் குழந்தை மருத்துவர் நீங்கள் ஏன் இன் னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளக்கூடாது என சிவக்குமார் தம்பதியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களோ அடுத்தக்குழந்தையும் இதே குறைபாட்டுடன் பிறந்தால் என்ன செய்வது. மேலும் தங்கள் மகன் அருணுக்கே லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இன்னொரு குழந்தை தேவையில்லை என்று தங்கள்கருத்தை தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அந்த மருத்துவரோ விடாப்பிடியாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள் ளுங்கள். அதன் மூலமாகக் கூட இவனைக் குணப்படுத்த முடியும் என தெரிவித்ததைத் தொடர்ந்து பிறந்தவள்தான் மழலை நித்யஸ்ரீ. தற்போது இந்த மழலைக்கு வயது 9 மாதம் ஆகிறது. இந்த மழலை கருவில் இருந்தபோதே பரிசோதனை செய்து பார்த்ததில் எவ்வித குறைபாடும் இல்லை என்பது தெரிய வந்தது. மருத்துவத்துறையில் இது அற்புதம் எனக் கூறிய மருத்துவர்இந்தக்குழந்தையிடமிருந்தே சிவப்பணுக்களை எடுத்து மாஸ்டர் அருணுக்கு செலுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

பெற்றோர்களின் தொடர் கவனிப்பின் காரணமாகவும், லட்சக்கணக்கில் செலவு செய்த காரணத்தினாலும் எட்டு வயதைஎட்டியுள்ள மாஸ்டர் சி.அருண் தற்போது நான்காம் வகுப்பிற்கு செல்கிறான். ஒரு பக்கம் வைத்தியம், மறு பக்கம் படிப்பு என தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான். சிறுவன் என்பதால் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
 
சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட உள்ளான் மாஸ்டர் அருண். இதற்காக இவனது பெற்றோர்கள் தற்போது சென்னையில் தங்கியுள்ளனர். மாஸ்டர் அருணுக்கு வந்துள்ளநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசின் மருத்துவக்காப்பீட்டு வசதியில்லை. இதனை அரசு நிறுத்திவைத்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இது கொடுமையிலும் கொடுமை. தமிழக அரசின் இந்த நடவடிக் கை உண்மை என்றால் அரசு மறுபரிசீலனை செய்து இது போன்ற நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீட்டு வசதி செய்து தரவேண்டும்.தனது எட்டு வயது அண்ணனுக்கு தாம் உதவப் போகிறோம் என்பதுகுறித்து எதுவும் அறியாத ஒன்பது மாதமழலைச் சகோதரி சி.நித்யஸ்ரீ தனது உடலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த காத்திருக்கிறாள்.

இதனை ஒரு செய்தியாக போகிற போக்கில் உங்களால் வாசிக்க முடியவில்லை அல்லவா. உங்களால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என தோன்றுகிறதல்லவா. அப்படியானால் உங்களின் தொடர்புக்கு அலைபேசி எண்கள் 94867 20219, 97892 70178.


Indian Overseas Bank, Code No.2883, Vilamal, Thiruvarur. Account No.1905க்கு கே.சிவக்குமார் என்ற பெயருக்கு காசோலையாகவோ, வரைவோலையாகவோ தங்களால் இயன்ற தொகையை அனுப்புங்கள். வங்கிக் கணக்குக்கும் நேரடியாக அனுப்பி உதவிடுங்கள். வீட்டு முகவரி C38/19, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி-610 104, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம். இயன்ற உதவியை செய்வோம். காலம் தாழ்த்தாமல்..

.-எஸ்.நவமணி. 

வியாழன், 6 பிப்ரவரி, 2014

விவாகரத்து ஏற்பட காரணம் என்ன?

ரொம்ப நாளா பதிவு போடாம இடைவெளி விழுந்துட்டதால இப்படி விவகாரமான தலைப்பை வெச்சு ஜோதிடமும் தாம்பத்யமும் நூல் அறிமுகத்தை எழுதலாமேன்னு தோணுச்சு. கடந்த ரெண்டு வருஷங்களுக்கும் மேலாக வழக்கறிஞர்களுக்கு டைப் செய்து கொடுக்கறதால எனி டைம் ஏதோ பிரச்சனைகளோடயே இருக்குற மாதிரி பீலிங். அவங்க எழுதிக் கொடுக்குறதை டைப் செய்யுற நமக்கே இந்த கதின்னா நாமளும் பி.எல் படிச்சிருந்தா மண்டையில இருக்குற நாலு முடியும் நம்மளை உதறிட்டு ஓடிப்போக வாய்ப்பிருக்கு.

என்கிட்ட டைப் செய்ய வர்றது மூணே மூணு வழக்கறிஞர் அலுவலகம்தான். அவங்களும் தமிழ்ல டைப் செய்யுற மேட்டரைத்தான் என்கிட்ட கொடுப்பாங்க. (நம்ம இங்கிலீஷ் அறிவு அப்படி.) இதுலேயே மாசத்துக்கு 10 கேஸ் வரை டைவர்ஸ் மேட்டர்தான். (ஒட்டு மொத்த தமிழக நீதிமன்றங்களை, கட்டப்பஞ்சாயத்து கணக்கை எல்லாம் சேர்த்தா... தலை சுத்துதுப்பா) திருமணமான ஒரு ஆண்டு முதல் 10 வருடம் வரை பல்வேறு காலகட்ட தம்பதிகள் வழக்கு போட்டு பிரியுற கேஸ்தான் அதிகமா இருக்கு. சிட்டியில எப்படா ஒரு வருஷம் ஆகும்னு காத்திருக்குற தம்பதிகள் கணக்கு அதிகம்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.

கணவன் மனைவி பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரை ரெண்டு காரணங்களை வெச்சு பார்த்தாலே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது கேஸ் அடங்கிடும் போலிருக்கு. அதாவது சகிப்புத்தன்மை இல்லாமை ஒரு காரணம், அடுத்து ஒருத்தர் முதுகுல வாழ்க்கைத்துணை மட்டுமல்ல குடும்ப உறுப்பினர்கள் (கணவன்-மனைவி ரெண்டு சைடுமே சளைச்சவங்க இல்ல) மொத்தமும் சேர்ந்து குதிரை ஏறுவது.

ஆண்களில் மனைவி பேச்சைக் கேட்டு பெற்றவர்களை துரத்திவிட்டவர்களும், பெற்றோர் பேச்சைக் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்துபவர்களும்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இன்னொரு பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் யார் சொன்னாலும் எவன்(ள்) சொன்னாலும் கேட்குறது இல்லை. இவர்களின் வாழ்க்கைத்துணை பிரிந்து வாழ்வது வேண்டுமானால் சூழ்நிலையின் காரணமாக அவசியமாக இருக்கலாமே தவிர, பெற்றோர் அல்லது மனைவி (அ) கணவன் சரியாக இல்லாமல் விவாகரத்து கோரும் சம்பவங்களை தவிர்ப்பது சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நன்மை தரும் செயலாகவே நான் கருதுகிறேன்.

அது எப்படி சாத்தியம்?

எப்போதுமே அன்பு, விட்டுக்கொடுத்தல் என்பதெல்லாம் இருவழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே அப்படி இருப்பதில்லை. ஒரு சாரர் எதிலுமே விட்டுக்கொடுக்காமல் உறவுகளை சிக்கலாக்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் எதிராளிதான் நாம என்ன சொன்னாலும் கேட்குறாங்களே என்று எல்லாவற்றிலும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதைப்போல் மனைவி / கணவன் நான் என்ன சொன்னாலும் செஞ்சுகிட்டே இருக்காங்களே என்று அளவுக்கு மீறும் போது கொதித்தெழும் அப்பாவி கணவன் / மனைவியை யாராலும் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டு விடுகிறது.
அதிலும் சில பெற்றோர் / மாமனார்-மாமியார் சுய நலம் காரணமாக தங்கள் பிள்ளை/மகள் என்று கூட பார்க்காமல் வாழ்க்கையை கெடுத்துவிடுதையும் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறோம்.



நான்  வெளியில போனா பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி விசாரிக்கிற (உண்மையான பாசத்தில் கேட்பவரைப் பற்றிதான் நான் சொல்கிறேன். சந்தேகபுத்தி கொண்ட கணவன்மார்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை) மனுசனோட எனக்கு வாழ்க்கை தேவையில்லை என்று நீதிமன்ற படியேறும் பெண்களும் உண்டு.

மனைவி மேல் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் கணவன், அவளுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பி கவலைப்படாமல் இருக்கும் கணவனைப் பார்த்து நான்  ‘வெளியில் போனால் இருக்கேனா செத்தேனா என்று கூட கவலைப்படாத மனுசன் கூட என்னால வாழ முடியாது’ என்று விவாகரத்து கேட்கும் பெண்களும் உண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு புரிதல் இல்லாததுதான் காரணம். அந்த புரிதலை எங்கே கற்றுக்கொள்வது? இணையத்தில் அதுவும் வலைப்பூக்களில் உலவுபவர்களில் சிலருக்கு அனுபவஜோதிடம் டாட் காம் என்ற தளம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த எஸ்.முருகேசன் என்பவர் (20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில்முறை ஜோதிடர்) பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.
கணவன் மனைவி புரிதலுக்குத் தேவையான விஷயங்களில் சிலவற்றை எடுத்து ‘ஜோதிடமும் தாம்பத்யமும்’ என்ற தலைப்பில் மல்டி கலர் ரேப்பருடன் 80 பக்க கிரௌன் சைஸ் புத்தகமாக பிப்.7,2014ல் வெளிவருகிறது.

வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கட்டுரைகளை அவரது வலைத்தளத்தில் தேடிப்படிக்கலாம். ஏராளமான உபகதைகளுடன், உதாரணங்களுடன் இருக்கும். அதற்கு நேரம் இல்லை. கைக்கு அடக்கமா முக்கியமான பாயிண்ட்ஸ் கொண்ட புத்தகம்னா தேவலை என்று நினைப்பவர்கள் அவரது வலைத்தளத்தில் சென்று உரிய வழிமுறைகளில் வாங்கிக்கொள்ளலாம்.

பிப்ரவரி 7, 2014 அன்று நான்கு புத்தகங்கள்  வெளியிடப்பட உள்ளன.
1)    ஜோதிடம் 360
2)    ஜோதிடமும் தாம்பத்யமும்
3)    ஆண் - பெண் வித்தியாசங்கள்
4)    பணம் பணம் பணம்

வேலை, வீடு, உடைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அதே மாதிரி மிஸ்சான பஸ்சைப் பத்தியும் மிஸ்சான பொண்ணைப்பத்தி மட்டுமல்ல, மனைவி/கணவனையும் மாற்றிக்கொள்ளலாம் என்ற மனநிலை கொண்டவர்களிடம் விவாதிக்க நான் வரவில்லை. நமக்கு கணவன்/மனைவி இப்படி அமைஞ்சுட்டாங்க. இனி அதை மாத்த முடியாது. அப்போ வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக்கிக்கிறது என்று யோசிக்கும் நபர்களுக்கு இந்த ஜோதிடமும் தாம்பத்யமும் என்ற நூலில் பல வழிமுறைகள் இருக்கும்.

புத்தகம் நாளைக்குதான் (பிப்.7,2014) ரிலீஸ். அதுக்குள்ள உனக்கு மட்டும் ப்ரீவ்யூ ஷோ மாதிரி எழுத்தாளர் புத்தகத்தை முன் கூட்டியே அனுப்பிட்டாரான்னு ஒரு சந்தேகம் வந்துருக்கும். 

அதற்காக சின்ன விளக்கம் : புத்தகத்தை டைப் செட் செய்து அணிந்துரை எழுதியது அடியேன்தான்.

வெள்ளி, 24 மே, 2013

எல்.இ.டி மற்றும் சி.எப்.எல் விளக்குகள் கேடு விளைவிக்குமா?



மின்சிக்கனம், வெப்பம் குறைவு போன்ற பல்வேறு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று மார்க்கெட்டுக்குள் நுழைந்த எல்.இ.டி விளக்குகள் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. இப்படி எல்லாம் நடக்காது என்று யாராலும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் இயற்கையை மீறிய செயற்கை தன்னுடைய இன்னொரு முகத்தை பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டிக்கொண்டேதான் இருக்கிறது.

Image Credit

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கும் குழல்விளக்கு (டியூப்லைட்) மற்றும் சி.எப்.எல் பல்ப்புகளில் ஒளியை பிரதிபலிப்பதற்காக உட்புறம் பூசப்பட்டிருக்கும் பாதரசம் இந்த பல்புகள் உடைந்தால் காற்றில் கலந்து ஏதோ ஒரு வேதியல் மாற்றத்திற்குள்ளாகி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் எல்.இ.டி. விளக்குகள் இப்படி உடையும் வரை காத்திருக்காமல் அவற்றிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளே மனிதர்களின் விழித்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுவது நமக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகத்தான் கருத வேண்டும். 

எல்.இ.டி.பல்ப் குறித்த எச்சரிக்கை கட்டுரை thinkspain என்ற இணையதளத்தில் கட்டுரை வெளிவந்ததாக புதியதலைமுறை 30.05.2013 இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விளக்குகள் ஏற்படுத்தும் பாதிப்பு ஒருபுறமிருக்கட்டும். இது போன்ற வில்லங்கங்களை நம் உடைக்குள் விட்டுவிட்டு குத்துதே, குடையுதேன்னு புலம்புறதுக்கு யார் காரணம்?

கும்பமேளாவில் ஜனத்திரள் நீராட செல்வது போல் ஒரு நானோமீட்டர் அளவுக்கு கூட இடைவெளியில்லாமல் கட்டிடங்களை கட்டும் போக்கு அதிகரித்து வரும்போது இதுபோன்று பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது. காற்றோட்டமான, நல்ல வெளிச்சம் தரும் வகையில் பகல் நேரத்தில் மின்விளக்கு, மின்விசிறி தேவைப்படாத அளவுக்கு வீடுகள் கட்டப்பட்டால்தான் இரவு நேரங்களில் அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மின்விளக்குகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதை விடுத்து சின்னதா வீட்டை கட்டினா புழக்கத்துக்கு என்ன செய்யுறது என்று பன்னாட்டு நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட எம்.டி அறையைப்போல் வீடுகளை கட்டினால் எல்.இ.டி விளக்குகள் மட்டுமல்ல இன்னும் என்னென்ன கேடுவிளைவிக்கும் என்று அந்த இயற்கையால் கூட உறுதியாக சொல்லமுடியாது.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கோவை தீ விபத்திற்கு யார் காரணம்

இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற அடிப்படையில் ஒருவர் விரல் மற்றொருவரையே சுட்டிக்காட்டும்.  இந்த விபத்து நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை, காவலர்கள், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள். மனிதனின் திறமை அளவிடமுடியாதது. அது ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காகவும், பூகம்பம், வெள்ளம் போன்று எதிர்பாரா இயற்கை பேரிடர் காலங்களிலும் பயன்படுத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தால் அங்கிருக்கும் மக்கள் தாங்களாகவே மிக சுலபமாக தப்பியிருக்க முடியும்.

ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? ரொம்ப அடிமட்டத்துல வாழ்றவன்தான் அவனுக்கு கிடைச்ச 6 அடி அகலமுள்ள இடத்தைக்கூட வீடா மாற்றி வாழ்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுறான்னா, வசதிபடைத்தவர்கள் கூட தீப்பெட்டியை அடுக்கியதுபோல பக்கத்து கட்டிடத்து சுவரின் மீது இவர்கள் சுவரையும் வைத்து பசைபோட்டு ஒட்டுனது மாதிரி கட்டுறாங்க.

அதோட நிறுத்துறாங்களா? இயற்கை காற்றோட்ட பாதையை தடுத்து நிறுத்திட்டு ஏசி மெசினை மாட்டி குளோபல் வார்மிங், மின் பற்றாக்குறை இப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாயிடுறாங்க. உண்மையில் சில இயந்திரங்களை பாலைவனத்திலும், பனிப்பொழிவு பிரதேசத்திலும் நார்மலான வெப்பநிலையில் வைத்திருக்கவே ஏசி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? மனித உடம்பில் உள்ள உறுப்புக்கள் 34 டிகிரி என்ற வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைக்குமாம். ஆனால் நாம் குளிர் அறையில் சுகமாக தூங்குவதாக நினைத்து நாட்டையும் நம் உடம்பையும் கெடுத்துவைத்துக்கொண்டிருக்கிறோம். இதுபற்றி விளக்கமாக எழுதினால் ஆயிரம் பக்கங்களை தாண்டிச்செல்லும்.

சுருக்கமாக சொன்னால் ஒரு ............ அலுவலகத்தில் கிளர்க் வேலை பார்க்கும் நபர் அந்த இருக்கையில் அமராமல் மேலதிகாரியின் மனைவிக்கு .............. வாங்கிக்கொடுக்கவோ அல்லது அந்த அதிகாரியின் மச்சானை ஊர்சுற்றிப்பார்க்க அழைத்துச்சென்றாலோ என்ன ஆகும்? அந்த அலுவலகத்தில் அந்த நபர் பார்க்க வேண்டிய வேலை தேங்கி விடும். (இதனால்தான் பல .......... அலுவலகங்களில் இன்று போய் அடுத்த வாரம் வாங்க என்ற வாசகம் பிரபலம்) நம் உடலிலும் நமக்கு தெரியாமலே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கிட்னி இரவு நேரங்களில் தன்னுடைய வேலையை அவ்வளவாக செய்வதில்லையாம். அப்போ அது எந்த ஆபிசர் வீட்டு வேலையை பார்க்க போகுதுன்னு ஒரு சந்தேகம் வரலாம்.

நாம் கொசுக்கடி மற்றும் வெப்பத்துக்கு பயந்து அறையின் ஜன்னல் மற்றும் கதவு அனைத்தையும் சாத்தி விட்டு தூங்கும்போது அறையின் காற்றில் உள்ள ஆக்சிஜன் நாம் 10 நிமிடம் உயிர்வாழத்தேவையான அளவுக்குதான் இருக்குமாம். அதாவது அறைக்கு வெளியில் உள்ள காற்று உள்ளே வந்து உள்ளே உள்ள உஷ்ணக்காற்று (கார்பன்டை ஆக்சைடு கலந்தது) வெளியில் போவது தொடர்ச்சியாக நடந்தால்தான் நம் உடல் உறுப்புகளுக்கு பிரச்சனை பிரச்சனை இருக்காது. அதாவது ஒரு பணியாளர் அவரது இருக்கையில் அமர்ந்து அவருக்குரிய வேலையை செய்வார்.

அப்போ 10 நிமிசத்துல ஆக்சிஜன் தீர்ந்துட்டா நாம செத்தா போயிட்டோம். காலையில நல்லாத்தானே எழுந்திரிக்கிறோம்னு ஒரு சந்தேகம் வரலாம். மனித உடம்பு ஒரு அற்புதமான கூகிள். ஆக்சிஜன் காத்துல இல்லையா, அப்போ உடம்புல எங்க இருக்குன்னு தேடும்போது அது கண்ணுல கிட்னியில இருக்குற தண்ணியோட மூலக்கூறு H2O வை கவனிக்கும். உடனே மூளை கிட்னிக்கு ஒரு ஆர்டர் போட்டு, டேய் நீ சிறுநீர்ல உப்பை பிரிச்சது போதும். உடனே H2O-வுல ஆக்சிஜனை மட்டும் பிரிச்சு அனுப்பிவை அப்படின்னு ஆர்டர் போடும். அப்போ அது நீர்ல உப்பை பிரிச்சு சிறுநீர் வழியா அனுப்புற வேலை என்னாகும். உப்பு சேர்ந்து கட்டியாகும். கிட்னியில கல் சேர்றது எப்படின்னு புரியுதா?

கிட்னியில கல் சேர்றதுக்கு காரணம் கிட்னி ஒழுங்கா வேலை செய்யாம இல்லை. அது என்ன மனுசனா, அது செய்ய வேண்டிய வேலையை நிறுத்திட்டு ஆபிசருக்கும், அரசியல் வியாதிகளுக்கும் ஜால்ரா போடுறதுக்கு. கிட்னியை வேலை செய்ய விடாம தடுக்குறது மனுசன்தான். இப்படி உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய வேலையை செய்ய விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு நாம யார்யாரையோ குற்றம் சொல்லிகிட்டு இருக்கோம்.

நூற்றாண்டு கண்ட வங்கி கட்டிடம் பிரமாண்டமா இருக்கும். கட்டிடத்தை சுற்றி சுமாரா 20 அடி காலியிடம் அந்தப்பகுதியில் மரங்கள். கட்டிடத்தின்  ஒவ்வொரு தளமும் சுமார் 14 அடி இருக்கலாம். பக்கவாட்டுல 6 அடி உயர ஜன்னல். லிண்டல் மட்டத்தை தாண்டி மேல்தள சீலிங்கை ஒட்டியும் பக்கவாட்டு சுவற்றில் சுமார் 2 அடி உயரம், 2 அடி அகலம் என்ற அளவில் வெண்டிலேட்டர். கட்டிடத்தை சுற்றி எல்லா பக்கமும் வெளியேற பாதை. இப்படி மின்விசிறிக்கு கூட அவ்வளவா தேவை இல்லாம, பகல்ல மின் விளக்கு தேவையே இல்லாம இருந்த இடம் இன்னைக்கு சுற்றிலும் கண்ணாடியை ஒட்டிகிட்டு சூரிய வெளிச்சம் மட்டுமல்ல வெளி காற்று கூட உள்ளே நுழைய முடியாம ஏசி இயந்திரத்தோட தன் தனித்தன்மையை இழந்துட்டு நிக்கிது.

வெளிநாட்டுக்காரங்க அவங்க நாட்டு சீதோஷ்ண நிலையினால் குளிர் தாங்காம வடிவமைச்ச கட்டிடங்களைப் பார்த்து நாம சூடுபோட்டுகிட்டே இருக்கோம். ஏப்ரல், மே மாதங்கள்ல நம்ம நாட்டுல சாதாரணமா ரோட்டுல நடந்துபோனா கூட நம்ம உடம்பு தீப்பிடிக்கும்போல இருக்கு. இந்த லட்சணத்துல அரசு அலுவலகங்கள் கூட காற்றோட்டமான சூழ்நிலையை விட்டுட்டு இப்படி ஏசி இயந்திரத்தோட மக்கள் உடல் நலத்தையும் கெடுத்துட்டு, ஒரு ஆபத்துன்னா தப்பிக்க வழி இல்லாத அளவுக்கு கேவலமான முறையில வடிவமைக்கப்படுது.

சட்டம் ஒரு வலை மாதிரி. அதுல சுறா, திமிங்கிலங்கள் மாட்டுவதே இல்லை. அப்பாவி சின்ன மீன்கள் மட்டுமே மாட்டுகின்றன என்று ஒரு வாக்கியம் உண்டு. இப்போது கட்டப்பட்டு வரும் வீடுகள், வணிக வளாகங்களை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. இடிந்து விழக் காத்திருக்கும் எங்கள் வீடு இருக்கும் மனையின் அகலம் 18 அடி இருக்கும். அதில் இரண்டு பக்கமும் தலா மூணரை அடி இடம் விட்டு 11 அடி அகலத்தில் கட்டிடம் கட்டலாம் என்று திட்டமிட்டோம். இதுக்கே ஆயிரத்தெட்டு சிக்கல்கள். மலைமுழுங்கி அதிகாரிகள் பிரச்சனையால் எதுவும் செய்யாமல் நிறுத்திவைத்திருக்கிறோம். ஆனால் பல மோசமான நபர்கள் 18 அடி அகலமுள்ள மனையில் 19 அடிக்கு கட்டிடம் கட்டுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்து ஒரு அரசு ஊழியர் (அவரது மனைவியும் அரசு ஊழியர்தான்) பக்கத்துவீட்டுக்காரர் காற்றோட்டத்துக்கு இடம் விடாமல் கட்டினார் என்று புகார்வாசித்தார். நீங்கள் எவ்வளவு இடம் விட்டு கட்டினீர்கள் என்று கேட்டேன். அதற்குள் அவர் எஸ்கேப். கணவனும் மனைவியும் மாதசம்பளமாக சுமார் 1 லட்சம் பெறுகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் இரண்டு மனைகள் வாங்கி சுற்றிலும் இடம் விட்டு பசுமையான சூழ்நிலையில் வீட்டை அமைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் பிசிறு தட்டாமல் இவர்கள் இடத்தில் லஞ்சம் கொடுத்து வீடு கட்டிவிட்டு வெப்பத்தை சமாளிக்க ஏசி போட்டுவிட்டார்கள். இவரைப்போன்றவர்கள் வீட்டை குளுமையாக்கி நாட்டை நெருப்புக்கோளமாக்குகிறார்கள்.

வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் இயன்றவரை காற்றோட்டமுள்ள வீடாக கட்டிக்கொள்வது நாட்டுக்கும் அவர்களுக்கும் நன்மை அளிக்கும். அதுபோல பெரிய வணிக வளாகங்கள் கட்டுபவர்கள் ஆபத்து காலத்தில் மக்கள் சிரமமின்றி வெளியேறும் வகையில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது யார் காதிலும் விழுவதாக தெரியவில்லை.
-----------------------------
2013-2014 கல்வியாண்டில் இருந்து மிகவும் சிரம நிலையில் இருக்கும் அரசுப்பள்ளி குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என்று போன ஆண்டு தீர்மானித்திருந்தோம். அதன்படி இருபது பேர் ஆளுக்கு சுமார் ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தால் கிடைக்கக்கூடிய 10ஆயிரம் ரூபாயை வைத்து எங்களால் முடிந்த அளவு உதவலாம் என்று தீர்மானித்து இப்போது செயலில் இறங்கியிருக்கிறோம்.

ஓரளவு வாய்ப்பு இருக்கக்கூடிய அனைவரும் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். இப்படி நான்கு பேர் ஒன்றாக சேர்வதற்கு வாய்ப்பில்லை என்றால் உங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்மணியின் குழந்தைக்கு உதவுவது கூட சேவைதான். (பலர் இப்படி வெளியில் தெரியாமல் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.) செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இது வரை செய்யாதவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்.
--------------------------------------
கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு, ஆலயத்திருப்பணிகள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்காக...

இளையபாரதம் தளத்தின் முகப்பில் இருக்கும் கும்பாபிசேக அறிவிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த ஆலயம் இருக்கும் தெருவில்தான் எங்கள் வீடு உள்ளது. சில சூழ்நிலைகளின் காரணமாக சிதிலமடைந்திருந்த இந்த ஆலயத்தை 2009ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து முழுவதுமாக இடித்துவிட்டு மீண்டும் புதியதாக கட்டியுள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிசேக விழா வரும் 14.07.2013 அன்று நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தில் தட்டு ஓடு போடும் பணியும் ஆலயம் முழுவதும் வர்ணப்பூச்சு செய்ய வேண்டிய பணியும் யாகசாலை செலவுகளும் காத்திருக்கின்றன. உள்ளூர்வாசிகள் நேரடியாக கோயிலுக்கே வந்து விபரம் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் writersaran@gmail.com க்கு மெயில் அனுப்பினால் தகவல் தெரிவிக்கிறோம்.