ஒரு வேலையைச் செய்வது போல் போக்கு காட்டுபவர்களும், சும்மாஇருப்பவர்களும்தான் உண்மையாக வேலை செய்பவர்களைவிட, அதிகமாய்வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
அந்த பணி இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.
"ஏம்ப்பா...அவன் சும்மாதான இருக்கான். இந்த வொர்க்க அவன்கிட்ட கொடுங்க...'
"நீங்க ஃப்ரீயாத்தான இருக்கீங்க... கொஞ்சம் இவருக்கு ஹெல்ப் பண்ணுங்க...'
இப்படி எல்லா வேலைகளிலும் கொஞ்சம் பங்கு இவருக்கு ஒதுக்கப்பட்டு, கடைசியில் இவர் செய்கிற வேலையைப் பார்த்தால் அது எல்லோரையும் விடஅதிக அளவில்தான் இருக்கும். இதற்கு உருப்படியாக ஒரே வேலையில் தன்னைஐக்கியப்படுத்தி விட்டுப் போய்விடலாம். அப்போது அவரை யாரும் தொந்தரவுசெய்ய மாட்டார்கள்.
"அவர் அந்த வேலைல பிஸி' என்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக