Search This Blog

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

மறைந்து வருகிறதா மனித நேயம் - புதிய தலைமுறை (17.12.2009)


புதிய தலைமுறை 17.12.2009 தேதியிட்ட இதழின் ஆசிரியர் பக்கத்தில் மறைந்து வரும் மனித நேயம் பற்றி எழுதியிருந்தார்கள். விபத்துக்குள்ளானவரைக் காப்பாற்ற பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை. அதிலும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கூட சிகிச்சை அளிக்க முன்வராமல் ஆம்புலன்ஸ் சேவைக்கு சொல்லியனுப்பிவிட்டு பேசாமல் இருந்து விட்டார்கள் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது மிகவும் கவலை தரும் விஷயம்.

விபத்தில் சிக்கியவர் நமது உறவினராகவோ நண்பராகவோ இருந்தால் இப்படி செய்வோமா என்று பலரும் கேட்கிறார்கள். போட்டி மிகுந்த இன்றைய உலகில் இன்னும் தொண்ணூறு சதவீதம் பேர் தினக்கூலிகளாகவும் தனியார் அலுவலகப் பணியாளராகவும்தான் இருப்பார்கள். அரசுத்துறை ஊழியராக இருந்தாலும் பலர் மேலதிகாரி என்னும் சர்வாதிகாரியிடம் சிக்கி தினம் தினம் சிதைபவராகத்தான் இருக்கிறார்கள்.

இவர்கள் குடும்ப விஷயங்களுக்காக (நல்லதோ - கெட்டதோ) விடுப்பு அல்லது பர்மிஷன் போடுவதே பல நேரங்களில் சாத்தியப்படாத ஒன்றாக இருக்கும். இது போன்ற ஊழியர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை ஏஜன்சியிடமிருந்து பெறவோ அல்லது பதிவு செய்யப் போகவோ மேலதிகாரி அல்லது முதலாளியிடம் கெஞ்சி அனுமதி பெற்று செல்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இது சிறிய உதாரணம்தான்.


விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பதனால் ஏற்படும் தாமதத்தால் பணியிடத்தில் சில இடையூறுகளைக்கூட தாங்கிக்கொள்வார்கள்.

நாம்தான் குற்றவாளியோ என்ற சந்தேகம் உதவி செய்தவருக்கே தோன்றிவிடும் அளவுக்கு சில சமயம் சாட்சி அது இது என்று அலைக்கழிக்கப்படுவதற்கு அஞ்சியே பலரும் நமக்கு எதுக்கு வம்பு என்ற எண்ணத்தில் தெறித்து ஓடிவிடுகிறார்கள். இது பற்றி ஒரு வாசகர் கடிதம் புதிய தலைமுறை இதழுக்கு அனுப்பியிருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக