Search This Blog

ஆசிரியர் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 மார்ச், 2010

அவதார் - ஆஸ்கர் - தி ஹர்ட் லாக்கர் - மகளிர் தினத்தில் மகளிருக்கு பெருமை

ஷங்கர் என்னதான் பிரமாண்டத்தில் மிரட்டியிருந்தாலும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் முடிவைக்காட்டிலும் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த காதல் படத்தின் கிளைமேக்ஸ் அதிகமாகவே என்னை பாதித்தது.

இது போல் பல உதாரணங்களை சொல்லலாம்.ரஜினியின் பாட்ஷா, தளபதியைக்காட்டிலும் ஆறிலிருந்து அறுபது வரை படம் அதிக நாட்களுக்கு மனதை விட்டு அகன்றிருக்காது.

விஜய் படங்களில் கில்லி, மதுர இவை அதிரடி என்றால் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்றவற்றின் மென்மையும் படங்களுக்கு வெற்றி தேடித்தருவதில் சளைத்தவை அல்ல.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அதிரடி கதையம்சம் கொண்ட படங்கள் நம்மை பிரமிப்புடன் பார்க்க வைக்கலாம். ஆனால் மனதைத் தொடுபவை எந்த மாதிரியான படங்கள் என்றால் மனதின் வலிகளையும் உணர்வுகளையும் பேசும் படங்கள்தான்.

சமீபத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சக்கைபோடு போட்டு வசூலைக்குவித்த அவதார் படம் போலவே தி ஹர்ட் லாக்கர் படமும் ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இன்று அவதார் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் தி ஹர்ட் லாக்கர் ஆறு விருதுகளையும் வென்றிருக்கின்றன.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 82 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குனர் பிரிவில் முதல் முறையாக பெண் இயக்குனர் விருது பெற்றிருக்கிறார்.மகளிர் தினத்தில் இந்த சிறப்பு நிகழ்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.(அமெரிக்காவில் 7ந் தேதிதானே என்று எதிர்வாதம் புரியக்கூடாது.)
தி ஹர்ட் லாக்கர் படத்தின் கதை தெரியாதவர்களுக்காக சிறு அறிமுகம்:

போர் என்பது போதை தருவது என்ற மெசேஜை நிகரில்லாத த்ரில்லராக தருகிறது இந்தப்படம்.வில்லியம் ஜேம்ஸ் என்ற வெடிகுண்டு நிபுணர்தான் கதையின் ஹீரோ. கவச உடை அணியாமலே, அலட்சியமாகச் சென்று கார்களிலும், சாலைகளிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வித்தியாசமான ஹீரோ. ராணுவ முகாமிலும் ஜாலி; போர்முனையிலும் ஜாலியாக வேலை பார்ப்பவன்.அலட்சியம் ஆகாது என்று சக வீரர்கள் சொல்வதை அசட்டை செய்து, ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஜெயிக்கிறான்.
கிட்டத்தட்ட ஒரு வருட காண்ட்ராக்ட் முடியும் நேரத்தில் தன் பணியில் முதல் தோல்வியைச் சந்திக்கிறான். சோதனைச் சாவடி ஒன்றை நோக்கி வருகிறார் அந்த இராக்கியர். அவர் உடலில் குண்டை கட்டி வைத்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு உயிர் வாழ ஆசை. காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். ஆனால் ஒரு இரும்புப்பட்டையால் பிணைக்கப்பட்ட குண்டை ஜேம்சால் அகற்றவே முடியவில்லை. வெடிக்கப்போகும் நொடியில் அந்த மனிதரை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிவருகிறான். அவனால் அதன் பிறகு தூங்கவே முடியவில்லை. அமெரிக்கா திரும்பியும் மனைவி,குழந்தைகளுடன் அவனால் இயல்பாக இருக்கமுடியவில்லை. எனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்குப் போறேன்.என்று சொல்லிவிட்டு திரும்ப இராக் வருகிறான். போர் என்ற போதை அவனை களத்துக்கு இழுக்கிறது.

உலகசினிமா வரலாற்றிலேயே மிக அதிகமாக வசூலைக் குவித்த படம் அவதார்.இதுவரை கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்கள்.வெறும் 11 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு, 16 மில்லியன் டாலர் ஈட்டியது தி ஹர்ட் லாக்கர்.ஆஸ்கர் வரலாற்றில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த படங்களில் மிகக்குறைந்த வசூல் செய்தது என்ற வித்தியாசமான பெருமையைப் பெறுகிறது இந்தப்படம்.
அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவிதான் தி ஹர்ட் லாக்கர் பட இயக்குனர் கேத்ரின் பிகெலோ. 3 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து, பிரிந்தவர்கள்தான் இருவரும்.ஆஸ்கர் வரலாற்றில் விருதுக்கான தகுதிப்பட்டியலில் இடம் பிடிப்பதே பெரும்பாடு. அப்படி பரிந்துரை பெற்ற நான்காவது பெண் டைரக்டர் கேத்ரின்.

பிரிந்த ஜோடி என்றாலும் கேமரூனுக்கும் கேத்ரினுக்குமிடையே வெறுப்பு வளையம் இல்லை.கோல்டன் குளோப் விருதை வாங்கும்போது, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கேத்ரின்தான் இதை வாங்கப்போகிறார் என்று நினைத்தேன். இதை வாங்கப்போகிறார் என்று நினைத்தேன். அவர் இதற்கு எல்லா வகையிலும் தகுதியானவர். என்று மனம் திறந்து சொன்னார் கேமரூன்.

இந்த இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் அற்புதமான படைப்புகளை கொடுத்து கலை சேவை புரிகிறார்கள்.

ஆனால் குடும்ப சண்டையில் அடிமை சிலரை சாகடிச்சுட்டு மறுபடி குடும்பமே ஒண்ணு கூடி அந்த அடிமைங்க ஏன் செத்தாங்கன்னே யாருக்கும் புரிய விடாம செஞ்ச கொடுமையையும் நாம பார்த்துகிட்டுதான் இருக்கோம். என்ன செய்ய முடியுது?

தொலைக்காட்சியில் ஆஸ்கர் விருது பற்றிய செய்தியைப் பார்த்ததும் வீட்டில் தி ஹர்ட் லாக்கர் படம் பற்றி வெளிவந்திருந்த தகவலை புத்தக குவியலில் தேடி எடுத்தேன். குங்குமம் - 15.2.2010 இதழ்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

நித்திய கேடிகள் - என்னுடைய பார்வை...

தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரும் மது, மாது என்று வாழ்ந்தவர்தான்.அதை விமர்சிப்பதில்லை.அவர் படைப்புகளை நாம் தலையில் வைத்துக்கொண்டாடுகிறோம்.இப்போது பெரிய பதவியில் இருப்பவர்களில் பலரும் மனைவி, துணைவியுடன்தான் இருக்கிறார்கள்.மக்கள் பணத்தில் அவர்கள் இப்போது சுகவாசியாக இருக்கிறார்களே என்று நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகிறது.அதிகாரத்தை மீறி எதுவும் பேசக்கூட முடிவதில்லை.
ஆனால் சாமியார்கள் விஷயம் அப்படி இல்லை.மெத்தப்படித்தவர்களும் பணக்காரர்களும் லட்சக்கணக்கில் பணத்தைக்கொடுத்துவிட்டு அவர் காலைப்பிடித்து தொழுகிறார்கள்.இதை தவிர்ப்பது முழுவதும் நம் கையில்தான் உள்ளது.இல்லறத்துக்குப்பிறகு துறவறம் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு இஷ்டத்துக்கு ஆட்டம் போடுபவர்களை நம்பி மோசம் போனோம் என்று மக்கள் புலம்பும் நிலைக்கு வருவதற்கு சில ஊடகங்கள் துணைபோகின்றன.

பிரகாஷ்ராஜ் சொல்லாததும் உண்மை என்ற தலைப்பில் விகடனில் ஒரு தொடர் எழுதியதை உங்களில் பலர் படித்திருக்கக்கூடும்.அவர் இப்போது மனைவியை ஒதுக்கிவிட்டார், நடன இயக்குனருடன் இருக்கிறார் என்பதெல்லாம் என்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை.
அவர் எழுதிய கட்டுரையில்  பல விஷயங்கள் என்னை சிந்திக்கச் செய்தன.அதில் ஒன்று,ஒரு சிறுகதையைப்பற்றிய அவரது கருத்து.

கதாசிரியரான நாயகன், அவள் தோழி உடம்பை விற்று பிழைப்பதைப்பார்த்து ஏன் இப்படி என்று கேட்டு அவள் தவறை உணரச்செய்வான்.அவளும் அந்த தொழிலை விட்டுவிடுவாள்.ஆனால் சில தினங்களிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்ததும் கதாசிரியருக்கு வருத்தம் வாட்டும். செய்யும் தவறை உணர வைத்த நான் அவளுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை உணர வைக்கவில்லையே என்று புலம்புவதாக கதை முடியும்.

அதாவது சிலரின் இறை நம்பிக்கையை தவறு என்று சொல்வதையே பிழைப்பாக வைத்திருப்பார்கள்.இதில் என்ன தவறு என்பது அந்த கட்டுரை ஆசிரியருடையது மட்டுமல்ல...என்னுடைய கேள்வியும் கூட.

தன்னம்பிக்கை இருந்தால் ஓ.கே. இல்லையென்றால் இறை நம்பிக்கை.வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் வெளியூர் சென்றிருக்கும்போது தனியாக இருப்பவர்கள் எதையோ இழந்தது போல் உணரவே இல்லை என்று சொல்லமுடியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில் இறைநம்பிக்கை என்பது ஒருவனுக்கு தன்னம்பிக்கை தரும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஒரு இடத்திற்கு வாகனத்தில் செல்கிறோம்.சிறு விபத்து. வாகனத்தையும் நம்மையும் தூக்கிவிடுபவர்கள் அருகில் எதாவது நிழல் இருந்தால் அங்கே உட்கார வைக்கிறார்கள்.பிறகு பக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி கொடுப்பார்கள். நாம் அதைக் குடித்துவிட்டு, லேசாக முகம் கழுவிக்கொண்டு பயணத்தை தொடர வேண்டியதுதான்.இத்தகைய இளைப்பாறும் இடம்தான் ஆலயம் என்பது என்னுடைய கருத்து.

அதை விட்டுவிட்டு, நான் இங்கேயேதான் இருப்பேன்.கடவுள் வந்து நான் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்வார் என்று காத்திருப்பதும், அப்படி அவர் அழைத்துச் செல்வாரா என்று கேட்பதும் அறிவுடமை ஆகாது.

இந்து மதத்தில் இருக்கும் பல பழக்கங்கள், சடங்குகள் அடிப்படையில் ஏதாவது ஒரே ஒரு அறிவியல் உண்மையை நம் நன்மையை உத்தேசித்துதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இப்போது கல்வியறிவால் சில தெளிவு இருந்தாலும் நமக்கு நலம் தரும் விஷயங்கள் சிலவற்றை நாம் சோம்பேறித்தனத்தாலோ விதண்டாவாதத்தாலோ செய்வதில்லை.அந்தக்காலத்தில் கல்வியறிவு மிகவும் குறைவாக கொண்ட மக்கள் இருந்ததால் இறைவனின் பெயரால் கட்டாயம் என்று சொன்னதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஒரு சில விஷயங்கள் வேண்டுமானால் இப்போது பொருந்தாமல் இருக்கலாம்.இப்போது பிரச்சனை அந்த சடங்குகளில் இல்லை.அவற்றை ஏன் செய்கிறோம் என்பதற்கான விளக்கம் தெரியாததால்தான் இவ்வளவு குழப்பமும், வில்லங்க கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையும்.

உடல் பசியைப்பற்றி நன்றாக தெரிந்து கொள்வதை தவறு என்று இந்துமதம் சொல்லவில்லை.நன்றாக அனுபவித்து பிறகு 'ச்சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று சொல்வதுதான் நிரந்தரமே தவிர, தொடக்கம் முதலே ஒரு விஷயத்தை தள்ளி வைத்து அதன் மீதான ஆர்வத்தை அதிகரிப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

சிவாலயங்களில் திருமணம் ஆனவர்தான் பூஜை செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் சொல்லப்பட்டுள்ளது.இதை சிதம்பரம் தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள்.அதனால்தான் அங்கே பதினாறு வயது பையனுக்கு பதினான்கு வயது பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இப்போது கூட இருக்கிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இதை பல இடங்களில் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

வயிற்றுப்பசி போலவே உடல்பசியும் இயற்கையே.ஆனால் அதை முறையான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.இதை சரிவர செய்யாமல் போவதின் விளைவுதான் சாமியார்களின் லீலைகள். இப்படி ஒருவர் புத்திமதி சொல்லி கட்டுரை எழுதுகிறாரா...அதில் நல்ல விஷயங்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது.

இதை விட்டுவிட்டு சாமி தரிசனம் தருகிறார் என்று அவரிடம் காசைக்கொடுத்துவிட்டு நிம்மதியைத் தேடிப்போகாதீர்கள். அந்த நிம்மதி, உங்கள் நகரத்திற்கு அருகாமையில் ஒரு கிராமத்துக்கு சென்றால் பாழடைந்த ஆலயத்திலோ, ஆற்றங்கரை ஓரத்திலோ கூட கிடைக்கலாம். நான் செய்வது இதுதான்.சில ஆண்டுகளுக்கு முன்பு சுகி.சிவம் அவர்கள் பெயரைக்குறிப்பிடாமல் ஒன்றுமில்லாதவரைப்பற்றி ஒரு வாரப்பத்திரிகையில் புகழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு என்று சன் தொலைக்காட்சியில் பேசினார். எனக்கு அப்போதே அது நித்தியானந்தா என்று புரிந்து விட்டது.

அவ்வப்போது ஓரிருவர்கள்தான் மாட்டுகிறார்கள்.மாட்டிக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

தூய்மையான அரசியல் வாதி என்று இப்போது இருக்கும் அரசியல் புள்ளிகள் கூட அண்ணா, காமராஜர், காந்தி என்றுதான் சொல்கிறார்கள்.ஆக மொத்தத்தில் இப்போது ஒருவரும்......................................... என்பது இவர்களே ஒப்புக்கொண்ட ஸ்டேட்மெண்ட்.அது போல், நம் முன்னோர்கள் உருவாக்கிய கோவில்களை மேம்படுத்தி வழிபடுவதுதான் நல்லது. நான் தான் சாமி என்று சொல்பவனை கண்டுகொள்ளாதீர்கள். ஆளில்லா கடையில் அவன் எவ்வளவு நாள் டீ ஆத்த முடியும்?

நாயன்மார்கள் என்று போற்றப்படுபவர்கள் கூட சிவனை வழிபடும் பக்தர்களுக்கு தொண்டு செய்யும் அடியேன்.இன்னும் கடவுளின் பக்தன் என்று சொல்லும் அளவுக்கு கூட எனக்கு தகுதியில்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று நான் தான் கடவுள் என்று சொல்பவன் எவ்வளவு மோசக்காரனாக இருக்கவேண்டும் என்று உணர வேண்டியது நம் கடமை.

கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் உருவானதற்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவை எல்லாம் இருப்பதால்தான் வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து புது ஆடை வாங்குவது என்று பல விஷயங்களிலும் நாம் நம்மை புதுப்பித்துக்கொள்ள முடிகிறது.(தினமும் ஜவுளிக்கடைக்கு செல்பவர்களுக்கு இது அபத்தமாக தெரியலாம்.ஆனால் மூன்று வேளை சாப்பாட்டுக்கு கூட சம்பாதிக்க முடியாத பல கோடிக்கணக்கான மக்களுக்கு பண்டிகை தினம்தான் நல்ல உணவு, உடை கடன் வாங்கியாவது கிடைக்கிறது என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.)

அவ்வளவு ஏன்? ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி செய்பவர்கள் கூட பிறந்த நாள், திருமண நாள் என்று எதாவது ஒரு நாளில்தான் செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அந்த குழந்தைகளுக்கு அரை வயிற்று உணவாவது ஏற்பாடு செய்ய சில இல்லங்களின் நிர்வாகிகள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

மூன்று மணி நேரத்தில் தேர்வு எழுத வேண்டும் என்றால்தான் ஒரு ஒழுங்கு இருக்கும்.படிப்பு என்று இல்லை...எந்த விஷயத்திலும் ஒழுங்கு இல்லை என்றால் சிக்கல்தான். வரிசை முறை கடைப்பிடிக்கப்படாததால் பேருந்தில் ஏறுவது முதல் பல காரியங்களிலும் எவ்வளவு இன்னல்கள்?

இப்போது உத்திரப்பிரதேசத்தில் கூட இலவசங்களைப் பெற கூடிய கூட்டத்தில் அறுபது பேருக்கு மேல்  பலியான இடத்தில் வரிசை முறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காதே.

நமக்கு நன்மை தரும் விஷயமாக இருந்தாலும் அதற்கு என்று ஒரு ஒழுங்கு இருந்தால் மட்டுமே நம்மால் கடைப்பிடிக்க முடியும்.

நான் பதினைந்து வயதிலேயே திரையரங்கத்தில் வேலைக்குச் சென்றவன்.திரைப்படம் திரையிடும் கருவியை அப்போதே இயக்கியதால் பிறகு வேறு திரையரங்கத்தில் படம் பார்க்கச் சென்றால், திரையில் வரும் காட்சிகள் பற்றிய எதிர்பார்ப்பை விட அந்த நேரத்தில் ஆப்ரேட்டர் எப்படி மெஷினை இயக்குவார், ஒரு புரொஜக்டரில் இருந்து மற்றொரு புரொஜக்டரில் எப்படி சட்டென்று காட்சி மாறும் என்பது போன்ற ஆராய்ச்சியில்தான் இருப்பேன்.இப்போதெல்லாம் படம் பார்ப்பது என்பது எரிச்சல் தரும் விஷயமாகிவிட்டது.

இவ்வளவுக்கும் நான், சிறுவயதில் சில படங்களுக்கு அழைத்துச்செல்லாததால் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு பல நாட்கள் சரியாக சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.(அப்போது எனக்கு ஒரு திரையரங்கத்தில்தான் இலவசமாக படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தது.)

எனக்கு இருபத்தி ஒரு வயது ஆகும் வரை (கல்லூரியில் மூன்றாம் ஆண்டு) எங்கள் வீட்டில் தொலைக்காட்சி மட்டுமல்ல, வானொலி கூட கிடையாது.எல்லாம் அக்கம்பக்கத்து வீடுகளில்தான்.

பி.காம் முதல்வருடம் படிக்கும்போது உள்ளூர் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக ஒரு ஆண்டு இரவு நேரப்பணி செய்தேன்.அந்தப்பணியில் இருந்து விலகிய பின்பும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது.பிறகு அம்மாவுக்காக ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிதான் வாங்கினோம்.அதிலும் பதினைந்து நாட்கள் கழித்துதான் படம் பார்க்க முடிந்தது.கேபிள் வயர் பொருத்தும் இடத்தில் ஒரு வயர் சரியாக பற்ற வைக்காததுதான் பிரச்சனை.

கேபிளில் வேலை செய்தபோது தொலைக்காட்சியின் மீதான மோகம் சுத்தமாக போய்விட்டது.(அப்போதும் இப்போதும் கதைப்புத்தகங்கள் மீதான காதல்தான் எனக்கு அதிகரித்து வந்துள்ளது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.)

டூவீலரில் ஹாரன் அடிப்பதில் இருந்த ஆர்வம் நான் வண்டி ஓட்டத்தொடங்கியது காணாமல் போனது. கேமராக்களின் மீதான பிரமிப்பு, பல திருமணங்களையும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் படம் பிடித்ததும் குறைந்து விட்டது. நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன் என்று சொல்லவில்லை.ஒரு பொருளை விட்டு விலகி இருக்கும்போது அதன் மீதான ஆர்வம், பக்குவப்பட்ட மனமில்லாதவர்களிடம் வெறியாகத்தான் வெளிப்படும் என்று சொல்கிறேன்.பூவை ரசிப்பதற்கும், அதைக் கசக்கிப்போடுபவர்களுக்கு வித்தியாசம் உண்டுதானே.

உணவு, தூக்கம் இவை சரியாக இல்லை என்றால் ஒரு மனிதனால் ஒழுங்காக இருக்க முடியாது.இதன் மோசமான விளைவு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெவ்வேறு விகிதத்தில் வெளிப்படும் என்பது எனது அனுபவம்.உடலில் ஏற்படும் உணர்ச்சியும் இது போன்ற ஒன்றுதான். சாமியார்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்பது என் மனம் ஏற்றுக்கொண்டு விட்டதால் இந்த செய்தி தெரிந்ததும் என் மனதில் எந்த மாற்றமும் இல்லை. கவலைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சில போலிகளிடம் பணத்தையும் அறிவையும் கொடுத்து ஏமாந்தவர்களாகவே இருப்பார்கள்.

புலம்பும் நண்பர்களுக்கு நான் சொல்லும் ஒரே வார்த்தை பதில், "புறக்கணிப்பு." இதை விட பெரிய தண்டனை ஒன்று இருக்கவே முடியாது.இந்த தண்டனை தவறு செய்த பின்பு அல்ல.இது போன்ற சாமியார்கள் வெளிவரும்போதே ஒதுக்கிவிடுங்கள். அவர்கள் ஆளில்லா கடையில் யாருக்கு இட்லி அவிப்பார்கள் என்று பார்த்துவிடுவோம்.

ஆசிரியர், காவல்துறை, அரசியல் என்று எந்த துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் காமத்தை அடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.பசியைப்போக்குவது போல் இந்த உணர்வைத் தணிக்கவும் ஒரு வரையறை உள்ளது. குப்பைத்தொட்டியில் உள்ள எச்சில் இலைகளில் போய் உணவு உண்ணுவது போன்றது இத்தகைய முறையற்ற உறவு. இனி முடிவெடுக்கவேண்டியது நீங்கள்தான்.

சனி, 6 மார்ச், 2010

பட்டத்துடன் பறக்கும் உயிர்...

வானொலியில் தொகுப்பாளராக இருக்கும் கண்மணி, வடசென்னைப்பகுதியில் மாஞ்சா தடவிய நூலால் கழுத்து அறுபட்டு மறுபிறவி எடுத்த செய்தியை மார்ச் 1-15 தேதியிட்ட தேவதை இதழில் படித்தேன். பட்டம் விடுவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதால் இந்த மாஞ்சா தடவிய நூல் கலாச்சாரத்தை தடுக்காமல் இருக்கிறார்களாம்.
நம் பதிவுலக நண்பர் புலவன் புலிகேசி மேற்குமாம்பலம் பகுதியிலேயே மாஞ்சா நூல் வில்லங்கத்தால் ஆபத்தில் சிக்கி மீண்டிருக்கிறார்.அவர் விரைவில் குணமடையட்டும்.

அரசியலில் பெரிய புள்ளியாக இருப்பவர்கள் வீட்டில் மாஞ்சா நூலால் இழவு விழுந்தால்தான் சட்டத்திருத்தம் கொண்டுவருவார்களா?
******
வெறிநாய்க்கடியால் ஏழைகள் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகிக் கொண்டிருக்கும்போது சில அரை லூசுகள் நாய் உயிர் ரொம்ப முக்கியம் என்று கோர்ட்டில் தடைவாங்கி வைத்திருக்கின்றன.சில இயற்கை வளங்களை சேதாரப்படுத்தாமல் வாழமுடியும் என்ற நிலை இருப்பதை பொருட்படுத்தாமல் அவைகளுக்கு வேட்டு வைக்கிறோம்.

மனித உயிர்களுக்கு ஆபத்து என்று உறுதியாக தெரிந்த பிறகும் அதை தடை செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை.அதுசரி... டென்னிஸ் பந்தில் கூட கிரிக்கெட் விளையாட விடாமல் மெரினா பீச்சை அழகு படுத்துவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்கமுடியும்.

ஒரு ஸ்மால் டவுட்டு....

இலவசம்னு குச்சி ஐசை கொடுத்துட்டு மது வியாபாரத்தின் மூலம் கோவணத்தையும் உருவிடுறவங்க கிட்ட போய் ஆதங்கமா பேசுற என்னைய லூசுன்னு நினைப்பாங்களோ...

வியாழன், 4 மார்ச், 2010

வராக்கடன் திடீரென திரும்பக் கிடைத்தால்...

வராது என்று முடிவு செய்து நஷ்டக்கணக்கில் எழுதிய பணம் திரும்ப வசூலானால் அதை லாபம் என்று குறிப்பிட்டுதான் வரவு வைப்பார்கள்.எனக்கும் அவ்வப்போது அந்த நிலை வருவதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பதினைந்து கோயில்களுக்கு சென்று ஓரளவு தலபுராணங்களை சேகரித்தேன்.அவை அவ்வப்போது சில பத்திரிகைகளில் பிரசுரமானதும் உண்டு.அப்படி நான் மொத்தமாக தினகரன் ஆன்மீக மலருக்கு அனுப்பியவைகளில் ஐந்து மட்டும் 2008ல் மூன்று மாதங்கள் பிரசுரமாயின.

பிறகு அவ்வளவுதான் என்று நான் நினைத்திருந்தபோது தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக மாத இதழில் இதுவரை மூன்று தல வரலாறுகள் பிரசுரமாயிருப்பது வராக்கடன் வசூலான கதைதானே.

இங்கே இருப்பது மார்ச் 2010 இதழில் பிரசுரமான கட்டுரை.

ஆனந்தவிகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாஷிகா கேமராவை வைத்து புகைப்படங்கள் எடுத்தேன்.அப்போதுதான் அந்த பதினைந்து கோயில்களையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
(படத்தின் மீது க்ளிக் செய்தால் தெளிவாகப் படிக்கலாம்.)இதே கட்டுரை பிறகு காலைக்கதிர் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் ஆன்மிககதிர் இதழிலும் வேறு வடிவில் பிரசுரமாகியிருந்தது.தினமலர் இணையதளத்திலும் நான் அனுப்பிய தகவல்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன.(மூலவருடைய புகைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.)  ஆனால்  copyright தினமலருக்காம்.அது சரி...பொது வாழ்வில் இதெல்லாம் சாதாரணமப்பா...

அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழ்நாடு அரசு குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையத்தின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு,தினமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் இரண்டு முறை ஆறுதல்பரிசு - இவை உட்பட பத்திரிகைகளில் பிரசுரமான சில படப்புக்களை திருவாரூர் டாக்கீஸ் வலைப்பூவில் வைத்திருக்கிறேன்.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

பட்டிக்காட்டை விட்டுப் பறந்து போன பச்சை போர்டு...

(இலவச இணைப்பு பரிசலின் புத்தகம் பற்றிய என் கருத்து)
 
சிவகங்கை பகுதி(சீமை)யில் ஆலவிளாம்பட்டிக்காடுன்னு ஒரு கிராமமாம்.அங்க ஒரு மதுக்கடை திறந்திருக்காங்க.பேர சொல்லி அதோட ஓனர் யாருன்னு எழுதுனா உடனே ....................அவமதிச்சுட்டதா வழக்கு போட்டாலும் போட்டுடுவாங்க. (முதல்ல வெச்ச பச்சைக்கலர் போர்டுதான் இப்பவும் இருக்கா இல்ல, மஞ்சளுக்கு மாத்திட்டாங்களான்னு தெரியலையே)

அதுதான் தெருவுக்குத்தெரு குடி நீருக்கான குழாய் இல்லன்னாலும் யாரும் 'குடி'மகன்களுக்கான நீர் கிடைக்காம திண்டாடக்கூடாதுன்னு அரசு முயற்சி எடுக்குறது உனக்குப் பிடிக்கலையான்னுதானே கேட்குறீங்க.

விஷயம் அது இல்லை சார்.அந்த கிராமத்துல வரதட்சணை வாங்கக்கூடாது, புகை ,மது இதையெல்லாம் பயன் படுத்தக்கூடாதுன்னு பல வருஷங்களுக்கு முன்னாலயே சத்தியப்பிரமாணம் பண்ணி அதை ஓலைச்சுவடியிலயும் எழுதி வெச்சிருக்காங்களாம்.(அந்த மக்களோட உரிமையைப் பறிச்சு அடிமையா வெச்சிருக்குறதா ரெண்டு பகுத்தறிவு பேர சொல்லி சண்டைக்கு வராம இருந்தா சரிதான்.)

மக்கள் குடிக்கிறதாலதான் நாங்க மதுக்கடை திறந்தோம். அப்படின்னு அதிகாரத்துல இருக்குறவங்க சொல்லுவாங்க. கடை இருக்குறதாலதான் நாங்க குடிக்கிறோம்...கடை முதலாளியும் பொழைக்கணும்ல அப்படின்னு போதையில உளறுற ஆட்களையும் நாம பார்த்திருப்போம்.

ஆனா இந்த கிராமத்துல மதுக்கடை திறந்திருந்தாலும் ஒருத்தர் கூட அதை வாங்க வரலையாம்.கடையைத்திறந்தவங்களே மூடிட்டாங்களாம்.கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு புரட்சின்னு சொல்லுவாங்க. இது சத்தமும் இல்லாத புரட்சி.

குடும்பத்துக்குள்ள அனாவசிய சச்சரவு இல்லை.அக்கம்பக்கத்து ஆட்களோட குடிச்ச போதையால தகராறு இல்லை.தொண்ணூறு வயசு வரை நிறைய பேர் ஆரோக்கியமா இருக்காங்க.-இதெல்லாம் அந்த கிராமத்து ஆட்களோட ஸ்டேட்மெண்ட்.

24.02.2010 தேதியிட்ட குமுதம் வார இதழ்ல இந்த கட்டுரை வந்துருக்கு.

எக்கச்சக்கமா சம்பாதிக்கிற பணத்தை எப்படி செலவு செய்யுறதுன்னு தெரியலை,வேலைப்பளு காரணமா ஏற்பட்ட அசதியை மறக்க கொஞ்சம் ஜாலியா இருக்கோம் இப்படி விதவிதமா காரணம் சொல்ற புண்ணியவான்களே...உங்களை நான் எதுவும் சொல்லலை.அது உங்க சவுகர்யம். ஆனா அதே போதையோட வண்டியோட்டிகிட்டுப் போய் யாரையாச்சும் காலிபண்ணிட்டு, குடிக்காதவன் ஆக்சிடண்ட் பண்றது இல்லையான்னு உங்க தப்பை நியாயப்படுத்தாதீங்கன்னு தான் சொல்றேன்.

 தினமும் நிச்சயமில்லாத கூலி வேலை செய்து இருநூறு ரூபா சம்பாதிச்சு அவ்வளவையும் குடிச்சு காலி பண்ணிட்டு சிகரட் கடன் கேட்டு கொடுக்காத பெட்டிக்கடைக்காரனோட பொறப்பை கேவலமா பேசிட்டு,வீட்டுல பணம் இல்லாததால சமைக்காத மனைவியை அடிச்சு உதைச்சுட்டு, ஆசிரியர் நோட்டு வாங்கிட்டு வரலைன்னா நாளைக்கு பள்ளிக்கூடத்துக்குள்ள விடமாட்டாராம்னு சொல்ற பையனை,"ஏண்டா...ஒரு பொட்டிக்கடைக்காரன் என்னைய கேவலமா பேசிட்டான். உனக்கு படிப்பு ஒரு கேடா"ன்னு திட்டுற மோசமான மனிதர்களும்,

மது அருந்தி தைரியம் வரவழைத்துக்கொண்டு(?!) கொலைசெய்ய செல்லும் கூலிப்படையினரையும்தான்  குமுதத்துல வெளிவந்த கட்டுரை எனக்கு நினைவூட்டியது.

******

துணிச்சலுக்கு பாராட்டுகள் என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார் நம்ம பரிசல் அண்ணன்.அதனால குழிகளுக்கு நடுவுல இருக்குற சாலைகள்ல(?1) போற எச்சரிக்கையோடதான் தொகுப்புக்குள்ள பயணம் பண்ணினேன்.
பரவாயில்லை...எதிர்பார்த்ததோட நல்லா வந்துருக்கு.(அடப்பாவி...என் தொகுப்போட உள்ளடக்கம் பத்தி எனக்கு தெரியும்.எதிர்பார்த்ததோட நல்லா வந்திருக்குன்னா அப்ப எதையுமே நீ எதிர்பார்க்கலையான்னு பரிசல் அண்ணன் கேட்குறது எனக்கு புரிஞ்சு போச்சு.)

தனிமை-கொலை-தற்கொலை * இந்தக்கதை நம்மில் பெரும்பாலானோர் மிகச்சரி என்று நினைத்துக்கொண்டு ரொம்ப ரொம்ப தவறான காரியத்தில் ஈடுபடுவோம் என்பதை உணர்த்துகிறது. பில் தொகையை எத்தனை முறை கூட்டினாலும் நாம் முதல் முறை போலவே தவறாகத்தான் கூட்டிக்கொண்டிருப்போம். அது போலதான்.

காதல் அழிவதில்லை * மொக்க படத்தோட தலைப்புல (சிம்பு மன்னிக்க)குடும்பத்துல குதூகலம் குறையாம இருக்குற ரகசியத்தை சொல்ற கதை.

காதலிக்கும் ஆசையில்லை * எனக்கு டீ,காப்பி குடிப்பதை நிறுத்தி ரொம்ப நாட்களாகிவிட்டது.இப்போதும் யார் வீட்டுக்காவது போகும்போது அவர்களிடம் எனக்கு வேணாம் என்று மறுக்கும்போது அவர்களின் முகம் களையிழப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

நாம் ரொம்ப பெருமையாக ஒரு விஷயத்தை சொல்லும்போது எதிராளியின் இதயம் கிழிந்து தொங்குவதை கவனிப்பதே இல்லை.அதை எப்படி சொல்ல வேண்டும், என்ற நேர்த்தியை இந்த கதை சொல்கிறது.

நான் ரொம்ப நல்லவனாக்கும் என்று சொல்வது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு பெருமை தரலாம். ஆனால் அந்த வார்த்தைகளும் சிலரை காயப்படுத்தும் என்பதை அழகாக புரிந்துகொண்டேன்.

BUTTERFLY EFFECT *இந்தக்கதை , இந்த நிமிடம் வாழ் என்ற ஞானியரின் தத்துவத்தை அது தத்துவம் என்று புரியாமலேயே கடைப்பிடிப்பது குழந்தைகள்தான் என்று சொல்கிறது.

இருளின் நிறம் * நாணயத்துக்கு மட்டுமல்ல...இருளுக்கும் இன்னொரு பக்கம் உண்டு என்று புரியவைத்த கதை

நான் அவன் இல்லை*ச்சே...இப்படித்தானா போய் சிக்குறது...என்று சார்லியைப் பார்த்து காமெடியாத்தான் சொல்லத்தோன்றியது. நிஜ வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் இப்படித்தான் யு டர்ன் அடித்து கவிழ்த்து விடும் என்ற நிதர்சனம் இந்தக்கதையில்  உண்டு.

மனிதாபிமானம்*என்ன நடந்தது என்று புரியாமல் நாம் உதிர்க்கும் சொற்கள் பல நேரங்களில் மிகவும் தவறாகப் போய் விடும் வாய்ப்பு உண்டு.இந்தக்கதையில் எதுவும் நடக்கவில்லை.ஆனால் எதிர்பாராத வில்லங்கத்தை உருவாக்கிவிடலாம். எனவே போனில் பேசும்போதும் கவனம் தேவைன்னு சொல்லிட்டீங்க.

நட்பில் ஏனிந்த பொய்கள்* பல நேரங்களில் ஒருவரின் நடத்தைதான் மதிப்பை உருவாக்கும் என்பது புரியாமல் ஏன் இந்த பொய்கள் என்று யோசிக்கவைத்த கதை.

கைதி* ஒரு பக்கத்தில் ஒரு கிரைம் ஸ்டோரி. நான் எதாவது டென்ஷனில் இருக்கும்போது சட்டென்று நூலகத்துக்குப்போய் இது மாதிரியான கதைகளைத்தான் எடுத்துப்படிப்பது வழக்கம்.கதைக்கு கையுண்டா காலுண்டான்னு எல்லாம் கேட்காம படிக்கணும் என்று நினைக்கவைத்த கதை.

ஜெனிஃபர் * இது கதையின் இறுதியில் சொன்னதைப்போல் கவர் ஸ்டோரியாகவே போடலாம்.மற்றபடி என்னைப்போல சாமானியர்களுக்கெல்லாம் சாத்தியமில்லை என்று நான் யார் என்பதை புரியவைத்த கதை.

கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன் * செல்போன் ஆடம்பரப்பொருள் என்று ஒரு விவாதம் எழுந்த நேரத்தில் இது மாதிரியான அவசரத்துக்கெல்லாம் உதவுமே என்று சமாதானம் சொன்னார்கள்.ஆனால் இந்த கதையில் உள்ளது போல் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது (படிக்கும்போது) செல்போன் அநாவசியம் என்றும் கத்தத் தோன்றுகிறது.

டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும் * இது ராஜேஷ்குமார் பாணியில் தாவித்தாவிச்செல்லும் கதை. கதையின் தட்டச்சு வடிவமைப்பு எனக்கு உறுத்தியது இந்தக் கதையில்தான்.

மனசுக்குள் மரணம் * ஆண்ட்டி கிளைமாக்ஸ் என்று சொல்வார்களே...அது இந்தக்கதையில் மிகப்பொருத்தமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஸ்டார் நெம்பர் ஒன்!* இதுதான் உலகம்.எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பது பணம்தான். வேறென்ன சொல்ல.

 நட்சத்திரம் *அழகி படத்தில் வந்த ரோட்டோர மனிதர்கள் என் நினைவில் வந்து போனார்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது நான் ரொம்பத்தான் வசதியா இருக்கேனோன்னு ஒரு எண்ணம்.

சமூகக்கடமை * பலர் தனக்கு என்ன பொருந்தும் என்று பார்க்காமல் அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தே பொழுதை போக்குவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களில் பலர் தாங்களே அழிவார்கள், இந்தக்கதையில் வரும் நபர் மற்றவரின் திறமையை ஒன்றுமில்லாமல் செய்வதைப்பார்க்கும்போது அவர்மீது ஆத்திரம் வருகிறது.....அட...பரிசல் அண்ணா...என்னைப்பொறுத்தவரை இந்த ஒரு இடத்துலேயே நீங்க ஜெயிச்சுட்டீங்க....

(பரிசல்,கேபிள் அப்படின்னு லேபிள் போட்டா கூட நாலு ஹிட்ஸ் கிடைக்குது.எதோ உங்க புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுறதால கம்ப்யூட்டரால அதுல ஒர்க் பண்ற ஆளுக்கும் ஏ/சி கிடைக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்-

இதெல்லாம் ஒரு விமர்சனமான்னு ஒரு கேள்வி வரணும்...வந்தாதான் நாங்களும் ரவுடின்னு நாலு பேர் ஒத்துக்குவாங்க.மானத்தைக் காப்பாத்திடுங்கண்ணே...)

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலும் பயிற்சி முடித்த ஆசிரியைகளும்...

மிக அதிகபேர் எழுதக்கூடிய தேர்வுமுடிவுகள் வெளிவந்த நேரத்தில் கூட இவ்வளவு பரபரப்பு இருப்பது சந்தேகம்.ஆனால் அவற்றுக்கு உரிய சான்றிதழ்கள் கிடைத்ததில் இருந்து ஒரு வாரகாலத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நிரம்பி வழியும்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கியபிறகு மாணவர்களும் மாணவிகளும் அதைப்பதிவு செய்வதற்குள் வெந்து நொந்துவிடுகிறார்கள்.இப்போது இந்தப் பட்டியலில் புதியதாக சேர்ந்திருக்கும் கோர்ஸ், ஆசிரியர் பயிற்சி படிப்பு.

சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் ஓரிரு தினங்களுக்கு முன்புதான் சான்றிதழ்களை வழங்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

இன்று திருவாரூரிலும் மாணவிகள் மிக நீ............ண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.பொன்னை (பொண்ணு இல்ல) வைக்கிற இடத்துல பூவை வைக்கிறதா சொல்லுவாங்க. ஆனா பல பொண்ணுங்க டயட் அது இதுன்னு ஐம்பது கிலோ எடை இருக்கவேண்டிய நேரத்துல முப்பத்தஞ்சு கிலோதான் இருப்பாங்க.(முப்பது சதவீதம் தள்ளுபடி?)

இந்த லட்சணத்துல பல மணி நேரம் காத்திருத்தல் அவங்களை மேலும் பலவீனப்படுத்தும். கணிணி வந்த பிறகு இப்படி கால் கடுக்க காத்திருக்குறது நேரத்தைக்கொல்றது மாதிரி.

பதிவு செய்யுற வரிசையை வெச்சுதான் வேலைக்கு கூப்பிடுவாங்களாம். என்ன கொடுமை சார் இது.ஒரு லட்சம் கோடி ரூபா காண்ட்ராக்டை ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொடுத்துட்டு முதல்ல வந்தவங்களுக்கு கொடுத்துட்டோம்னு ரொம்ப கூலா சொன்னாங்க.இது என்ன சினிமா டிக்கட்டா?அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்.

தேர்வு முடிவு வெளிவந்த தேதியை பதிவு பண்ணின தேதியா எடுத்துகிட்டு அந்த அந்த கல்வி நிறுவனங்களிலேயே போய் எல்லா சான்றிதழ்களையும் பதிவு பண்ணிடலாம். அது கஷ்டம்னா, சுழற்சி முறையில வந்து பதிவு பண்ண வைக்கலாம்.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிதான் பதிவு செய்த தேதியா கணக்கு வெச்சுகிட்டா என்ன பிரச்சனை?

இதுல பல நடைமுறை சிக்கல் இருக்குன்னு சொல்லுவாங்க. இஷ்டப்பட்டா எதுவும் சிக்கல் இல்லை. மனசுக்கு விருப்பம் இல்லைன்னாதான் தட்டிக்கழிக்க ஆயிரம் காரணம் இருக்குறதா தெரியும்.

இன்னைக்கு மெகா டி.வி செய்தியில விருதுநகர், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துல கூடி நின்ன கூட்டத்தைக் காட்டினாங்க. நாளைக்கு பேப்பர்ல எவ்வளவு தள்ளுமுள்ளு, தடியடி, உடம்புல வலு இல்லாம மயங்கி விழுந்தது எத்தனைபேர் - இந்த விவரங்கள் எல்லாம் வரும்.

திருவாரூர்ல கொஞ்ச நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்துல வேலை வாய்ப்பு அலுவலகமும் இயங்கி வந்தது.மத்திய பல்கலைக்கழகம் இயங்க தற்காலிக கட்டிடம் வேணும்னு அங்க இருந்த எல்லா அரசு அலுவலகங்களையும் தட்டி விட்டதுல திருவாரூர் கால்நடை மருத்துவமனைக்கு எதிர்ல வந்து வேலைவாய்ப்பு அலுவலகம் விழுந்துடுச்சு.

ஒரே நாள் பதிவுமூப்புன்னு ரெண்டுலட்சம் பேர் இருந்தாலும் அதுல தகுதி படைச்சவங்களைத் தேர்வு செய்ய வேறு வழிமுறையை உருவாக்கணுமே தவிர, கோயில்ல பொங்கல் கொடுக்குற மாதிரி முதல்ல பதிவு பண்ணினாதான் வேலை அப்படின்னு சொல்றது மிக மிக முட்டாள் தனம்.

இது மாதிரி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, ஆசிரியர் பயிற்சி தேர்வு எல்லாம் சனிக்கிழமை எழுதி திங்கள் கிழமை சான்றிதழ் கொடுத்து அவங்க செவ்வாய் கிழமை பதிவுபண்ண கூடிடுறாங்களா?

இல்லையே...ஒவ்வொரு வருஷமும் இந்த கூத்துதானே நடக்குது. ஒரு மா நாடு போட பல மாசங்களுக்கு முன்னாலேயே திட்டமிடுற ஆட்சியாளர்கள், இது மாதிரி நிரந்தர பிரச்சனைகளுக்கு தீர்வு காணுற முயற்சியே எடுக்குறது இல்லையே.

இதுல பொது மக்கள் செய்ய ஒண்ணும் இல்லை.அதிகாரிகளையும் அரசியல்வாதிகள் அல்லது வியாதிகள்தான் ஆட்டி வைக்கணும்.
இந்த கோரிக்கையை வெச்சு இளைஞர்கள் போராடினா, அவங்களையே, பணி செய்ய விடாம தடுத்ததா சொல்லி உள்ள வெச்சிடுவாங்க.

டென்த், பிளஸ்டூவை பள்ளிகள்லேயே பதிவு பண்ற வசதி கொண்டு வந்ததா சொன்னாலும் இந்த முயற்சியும்  தொடர்ந்து நடைபெறணும்.

ஆசிரியர் பணி - புனிதப்பணி. இப்படி எல்லாம் அவங்களை அலைக்கழிச்சா அது நாளைக்கு ஆசிரியரான பிறகு இந்த  கோபம் அவங்களை அறியாமலேயே பிள்ளைங்க மேல திரும்பலாம். இது மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்லலை. ஒரு சில ஆசிரியர்கள் மோசமா நடந்துக்குறதை பார்த்தா, அவங்க வளர்ந்த சூழ்நிலையும்  பட்ட  வடுக்களும்   கூட இதுக்கு காரணமோன்னு நினைக்கத் தோணுது.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

என்ன கொடுமை சார் இது.


"பிட்' அடித்து பிடிபட்ட மாணவன் தற்கொலை

தூத்துக்குடி :கோவில்பட்டி தனியார் பள்ளியில், தேர்வில் 'பிட்' அடித்தபோது பிடிபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன், பெற்றோருக்கு பயந்து ரயிலில்விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி,ராஜிவ் நகர் ராமமூர்த்தி மகன் அருண்குமார்(13), அங்குள்ள தனியார்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தான். நேற்று பள்ளியில் அறிவியல் தேர்வுநடந்த போது, 'பிட்' அடித்தான். அப்போது, அருண்குமாரை பிடித்த ஆசிரியர்,தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தார்.அது தொடர்பாக அருண்குமாரை கண்டித்ததலைமையாசிரியர், பின் அறிவுரை கூறி அனுப்பினார். சம்பவம் குறித்துதெரிந்தால், பெற்றோர் திட்டுவரோ என பயந்த அருண்குமார், வீட்டிற்குப்போகாமல் பல இடங்களில் சுற்றினான். இரவில், தனியார் தியேட்டர் பின்புறமுள்ளதண்டவாளத்திற்கு சென்று, அவ்வழியாக வந்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான். தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
தினமலர் செய்தி.
உழைத்துப்பிழைக்க இந்த உலகத்துல ஓராயிரம் தொழில். ஆனால் இன்னும் தேர்வுல மார்க் எடுக்கலன்னா அவனுக்கு உலகமே இல்லன்னுன்குற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கி வெச்சிருக்குறதுதானே  இது மாதிரியான தற்கொலைக்கு காரணம்?

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

திண்ணை இணைய இதழில் "பூ பூக்கும் ஓசை" சிறுகதை.


பெண்ணின் சம்மதம் இல்லாமல் நிச்சயிக்கப்படும் திருமணத்தை எல்லா பெண்களும் ஏற்றுக்கொள்வது இல்லை.சிலர் திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் இருந்தே மாயமாகும் பெண்கள் பற்றி அவ்வப்போது நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளைப்படிப்பேன். அப்போது இந்த சூழ்நிலையை வைத்து யோசித்த கதைதான் பூ பூக்கும் ஓசை சிறுகதை.

இன்று திண்ணை இணைய இதழில் கதை வெளியானதுமே படித்து வாழ்த்து சொன்ன ராமலெஷ்மி மேடத்துக்கு இளையபாரதம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவாரூரில் திருவிழா - காதலர்தின ஸ்பெஷல் தொடர்கதைக்கு முன்னுரை-3

உறவுகள் சிதைய முக்கியக்காரணம், நாம் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை நினைத்துப்பார்க்க மறுப்பதுதான் என்ற பொருளில் கடந்த இரண்டு முன்னுரைகளையும் எழுதியிருந்தேன்.
எதை மையமாக வைத்து எழுதினாலும் கதை நிகழ்வது ஏதாவது குறிப்பிட்ட ஊரில் இருக்க வேண்டும்.இதற்கு ரொம்ப மெனக்கிட வேண்டாம். உங்கள் ஊர், உங்களுக்கு தெரிந்த பகுதி.இது போதும் என்று எழுத்தாளர் சுஜாதா ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.

அதனால்தான் கதை நிகழும் களமாக திருவாரூரைத் தேர்ந்தெடுத்தேன்.இப்போது ஒரு வாரம் இளையபாரதத்தில் வெளிவரப்போகும் திருவாரூரில் திருவிழா - ஜாலி தொடர்கதை 99 சதவீதம் கற்பனைதான்.என்னுடைய சுய விவரக்குறிப்பில் குறிப்பிட்டது போல் இதெல்லாம் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்ற என்னுடைய ஏக்கங்கள்தான் எழுத்துவடிவம் பெறுகின்றன.

கதையைப்பற்றி இந்த முன்னுரையில் சொன்னால் உங்களுக்கு சுவாரஸ்யம் போய்விடும். அதனால் அது நிகழும் இடங்களை மட்டும் சொல்லிவிடுகிறேன். கல்லூரி, கல்யாண மண்டபம் - இவை இரண்டும்தான் திருவாரூரில் திருவிழா தொடர்கதையில் முக்கியமான இடங்கள்.

தொடர்கதை என்றதும் மிகப்பெரிய அளவில் எழுதி உங்களை படிக்காமலேயே ஓடவைக்க விரும்பவில்லை.தினமும் ஒரு சிறிய அத்தியாயமாக ஏழே நாட்கள்.அவ்வளவுதான். பொறுத்துக்குங்க.
08.02.2010 அன்று திருவாரூரில் திருவிழா - ஜாலி தொடர்கதையின் முதல் அத்தியாயம் இளைய பாரதத்தில் உங்கள் பார்வைக்கு கிடைக்கும்.

சனி, 6 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - காதலர்தின ஸ்பெஷல் தொடர்கதைக்கு முன்னுரை-2

அறுபது வயதில் இரண்டாவது முறை திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் மக்கள், இந்த சடங்குகளை செய்து வைக்கும் குருக்களுடன் சேர்ந்து தாய் தந்தையருக்கே இப்படி செய்யுங்க அப்படி பண்ணுங்க என்று செல்லமாக அதட்டி வேலைவாங்கிக்கொண்டிருந்தார்கள்.

இன்னொரு புறம் பத்து வயது கூட நிரம்பாத வாண்டுகள் செல்போன் கேமராவை வைத்துக்கொண்டு தாத்தா பாட்டியை படம்பிடிப்பதற்காக அவர்களை இயக்கிக்கொண்டிருந்தனர். கோயில் பிரகாரத்தினுள் எந்தப் பக்கம் பார்த்தாலும் பெரும்பாலும் இது மாதிரிக்காட்சிகள்தான்.
சிலர் தன் குடும்பத்தில் உள்ள நபர்களுடன் மட்டும் வந்து சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடையூர் கோயிலில் செய்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுபவர்களும் இந்த கோயிலில் வந்து திருமணம் செய்து கொள்ளும் வகையில் இருப்பது அனைவருக்கும் நம்பிக்கை தரும் விஷயம்.

இதையெல்லாம் பார்க்கும்போது குடும்பத்தைக் குதூகலப்படுத்தும் இது போன்ற ஒரு நிகழ்வு தரும் மகிழ்ச்சியை வற்றிவிடாமல் பாதுகாத்தால் பல குடும்பங்களில் உறவுகள் சிதையாமல் இருக்குமே என்ற ஏக்கம் என் மனதில் ஏற்பட்டது.

அதற்கு காரணம் என்னவென்றால், சஷ்டியப்த பூர்த்தியின்போது குடும்பத்துடன் குதூகலமடைந்தவர்கள் பலர் இருந்தாலும், படிப்பை வெறுக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் மனநிலையுடன் வந்திருந்த ஒரு சில குடும்பங்களையும் பார்த்தேன்.

விட்டுக்கொடுத்து நடந்தால் குடும்பத்திற்குள் பிரச்சனை வராது என்பார்கள். கலவரப்பகுதியில் தடுமாறி கீழே விழுந்தவர் மீது அனைவரும் ஏறி மிதித்து ஓடுவார்கள். ஒருவர் விட்டுக்கொடுத்தால் மற்றவரும் அதுபோல் நடந்து கொள்ள நினைப்பதில்லை.மாறாக அவர் மீது இன்னும் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இந்த அச்சத்தால்தான் இன்றும் பல குடும்பங்களில் மற்றவர்மீது குற்றப்பத்திரிகை வாசித்துக்கொண்டே சந்தோஷங்களை இழந்துவருவதை உணருவதே இல்லை.

வாகனங்களை இயக்கும்போது  நாம் மட்டும் விதிகளைப்பின்பற்றிச் சென்றால் போதாது.எதிரில் வருபவரும் சரியாக வந்தால்தான் நாம் ஒழுங்காக வீடு போய்ச் சேரமுடியும். இல்லை என்றால் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப்பிரிவு, சாதாரண வார்டில் அனுமதி வெளி நோயாளி இல்லையென்றால் வேறு ஒரு இடத்திற்குச் செல்லவோ செய்வோம்.

விட்டுக்கொடுப்பது என்பதும் இப்படித்தான்.பல குடும்பங்களில் யார் விட்டுக்கொடுப்பது என்றுதான் பிரச்சனையே தவிர நான் தான் விட்டுக்கொடுப்பேன் என்று நினைப்பதே கிடையாது.

இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சியின் சந்தோஷமான தருணங்களை அவ்வப்போது நினைத்துப்பார்த்தால் உறவுகளில் விரிசல் மிக மோசமாக விழாது என்பது என் எண்ணம்.

******

திருவாரூரில் திருவிழா தொடர்கதையின் கரு, கற்பனை-உண்மை இது பற்றிய விவரங்கள் நாளை வெளிவரும் அடுத்தபதிவில்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - காதலர்தின ஸ்பெஷல் தொடர்கதைக்கு முன்னுரை-1

ஆரம்பிச்சுட்டாண்டா! ஏற்கனவே தமிழ்ப்படத்துல (நான் சொல்றது தமிழ்ப்படங்களை) காதலை அடிச்சு துவைச்சு நம்மளைப் புழிஞ்சது போதாதுன்னு இது வேறயா?அப்படின்னு நீங்க சலிச்சுக்குறது எனக்கும் புரியுது.இனி பிப்ரவரி 14ந் தேதி முடியுறவரைக்கும் அவனவன் காதலுக்கு மரியாதை செய்யுறதைப் படிக்கிறதுக்கு பதில் 'அவருக்கு' கவிதை வாசிக்கிறதை பார்க்கவே போயிடலாமோன்னு நீங்க கொடூரமான முடிவு எடுத்துடாதீங்க...
நான் ஏற்கனவே மூணு தம்பதியரோட சஷ்டியப்த பூர்த்தி விழாவுல கலந்துகிட்டு இருக்கேன்.எல்லா நிகழ்ச்சியும் முடிஞ்ச பிறகு அவங்க கால்ல விழுந்து ஆசிபெற்றதோட சரி.அது வரைக்கும் என்ன செஞ்சன்னு கேட்காதீங்க.விழா ஏற்பாட்டுல ஈடுபட்டதால இந்த சஷ்டியப்த பூர்த்தி திருவிழாவை பார்க்குற பாக்கியம் இல்லாமலேயே போயிடுச்சு.

04.02.2010 அன்னைக்கு உறவினரோட 60 வயது பூர்த்தி. திருக்கடையூர்ல விசேஷம்.ஏற்கனவே பல முறை அந்த ஊருக்கு வேற வேலையா போயிருந்தாலும் கோயிலுக்குள்ள போனதில்லை. பொதுவாவே ஒரு விழாவுக்கு ஏற்பாட்டாளரா இல்லாம பார்வையாளரா போய் கலந்துக்குறது தனி அனுபவம்.திறமையான ஓட்டுநர் போக்குவரத்து நெரிசல்ல வாகனத்தை இயக்கும்போது நாம ஜாலியா பின்னால உட்கார்ந்து பயணம் செய்யுற மாதிரின்னு வெச்சுக்குங்களேன்.
ஒரு குடும்பத்து திருவிழான்னாலே அங்கே சந்தோஷத்துக்கு குறைவிருக்காது.(ஆட்டுக்கறியில எலும்புதான் மிச்சமிருந்ததுன்னு போர் நடத்துற குடும்பங்களைப் பத்தி அப்புறம் பேசுவோம்.)திருக்கடையூர்ல தினம் தினம் குறைந்தது இருபத்தைந்து திருமணங்களாவது நடைபெற்று வர்றதால அங்க கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேணும்.
என்ன மாதிரி யூத்துங்களுக்கு (ஹேய்...கல்லை எல்லாம் எடுக்கப்பிடாது) திருமணத்தின்போது வெட்கம் வர்றது பெரிய விஷயம் இல்லை.வரவர பசங்களுக்கு வெட்கம் வர்றது சாதாரணமாவும் பொண்ணுங்களுக்கு வெட்கம் வர்றது கஷ்டமான காரியமாவும்தான் இருக்கு.எதாவது ஒரு இடத்துல வெட்கம் இருந்தாலே அந்த இடம் களை கட்டும்.

ஆனா குழந்தைகள் பெற்றோர்களுக்கு தந்தையின் அறுபது வயசுல சஷ்டியப்த பூர்த்தி திருமணத்தை செய்து வைக்கும்போது அந்த இடத்துல கிடைக்குற சந்தோஷத்தை வார்த்தைகளால சொல்ல எனக்குத் தெரியலைங்க. இரண்டாவது முறையா மாங்கல்ய தாரணம் ஆகும்போது அவங்க முகத்துல வர்ற வெட்கம் இருக்கே.அடடா...

இன்னும் இரண்டு நாளைக்கு மட்டும் இந்த முன்னுரை தொடரும்...

புதன், 3 பிப்ரவரி, 2010

எதிர்பார்த்ததும் அதிர்ச்சியும் - வடிவேலு - வைஷ்ணவி - எஸ்தர்

நான் பாக்குறதுக்குதான் காமெடியனா இருப்பேன்.ஆனா உள்ளுக்குள்ள டெரர் அப்படின்னு வடிவேலு ஒரு படத்தில் பேசிய வசனம் இப்போது சிங்கமுத்துவின் செயலில் வெளிப்பட்டு வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரைப் பற்றிய உண்மை வெளிவரவேண்டும் என்றால் அவரைப்பற்றி நன்கு தெரிந்த நபருக்கு போதை ஏற வேண்டும் அல்லது இருவருக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்படவேண்டும். வடிவேலு - சிங்கமுத்து விவகாரத்தில் இரண்டாவது விஷயம் நிகழ்ந்திருக்கிறது.

இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.அதனால் இப்போது நான் பேசப்போவது இந்த செய்தியில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளைப்பற்றிதான்.

சாப்பாட்டைத் தவிர வேறு எதையுமே நாம் போதும் என்று சொல்வதே இல்லை.மற்ற துறைகளைக் காட்டிலும் சினிமாத்துறையில் புகழேணியில் ஏறத் தொடங்கிவிட்டால் கன்னாபின்னாவென்று பணம் கொட்டத்தொடங்கிவிடும்.

ஒரு சாதாரண வியாபாரி புதிய வண்டி வாங்கினாலே அவரிடம் பணியாற்றுபவர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் தீப்பிடிக்கத்தொடங்கிவிடும். மற்றவர்களின் விவகாரமே இப்படி என்றால்,மீடியாவின் ஒட்டுமொத்த கவனமும் இருக்கும் நடிகர்கள் நிலையைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்.

துரதிர்ஷ்ட வசமாக அவர்களுக்கு முதலீடு பற்றியோ பணத்தைப்பாதுகாப்பது பற்றியோ முழு அளவு விபரம் தெரிந்திருப்பது இல்லை.அதற்கு நேரமும் இருப்பது இல்லை.இதனால் பிறரை நம்பவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இன்றைய சூழலில் அடுத்தவர் உதவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது.அதே சமயம் கண்மூடித்தனமாக நம்புவது வேறு. பிறரின் உதவியை அல்லது சேவையைப் பெற்றுக்கொள்வது என்பது வேறு. இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொண்டால் ஏமாந்து நிற்கவேண்டிய சூழ்நிலை அவ்வளவு எளிதில் வராது.

வகுப்பறையில் ஆசிரியை இருக்கும்போது ஐந்து வயது குழந்தைகள் அமைதியாக இருந்தாலும் அவர் எதற்காவது வெளியில் சென்றால் சந்தைக்கடை இரைச்சலின் நிலமைக்கு வகுப்பறையைக் கொண்டுவந்துவிடுவார்கள். கண்காணிப்பு இல்லாத எந்த விஷயமும் உருப்படியாக நடந்தேறாது என்ற உண்மையைப்புரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணம் போதாதா.

கண்காணிப்பு என்பது ஒரு விஷயத்தைக் கட்டுப்படுத்துவதாக இல்லாமல் நமக்குத் தேவையானதைக் கேட்டுப்பெறும் வகையில் இருக்கவேண்டும்.நம் கார் டிரைவரிடம் இப்படி ஸ்டியரிங்கை திருப்பு, இந்த அளவுக்கு ஆக்சிலேட்டரை அழுத்து என்று அபத்தமாக சொல்வதாக இல்லாமல் நான் இங்கே போக வேண்டும் என்ற விஷயத்தை மட்டும் தெளிவாக கேட்பதாக இருக்கவேண்டும்.

வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு ஓட்டுநர் சவுகர்யத்துக்கு விட்டுவிட்டு அவர் திருச்சிக்கு பக்கத்தில் ஒரு புளிய மரத்தில் மோதி நிறுத்தியபிறகு "அய்யய்யோ...நான் சென்னையில இருந்து பெங்களூரு போக சொன்னேன். இவன் திருச்சிக்குப்போய் காரை மோதிட்டான்." என்று புலம்புவதில் புண்ணியம் இல்லை.

நண்பர்களுக்கு சுற்றுலா, சினிமா என்று ஆயிரக்கணக்கில் செலவழிக்கும்போது அதெல்லாம் செலவழிப்பவர்களுக்கே ஒரு பொருட்டாக தெரியாது. ஆனால் எதாவது ஒரு சமயத்தில் பத்துரூபாய் என்ற அளவில் பிரச்சனையாகி நிற்கும்போதுதான் சின்ன வயதில் பத்து பைசா மிட்டாய் வாங்கி சட்டையில் வைத்துக் கடித்து பாதி கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்துதொலைக்கும்.

சிங்கமுத்து அவர் மகனை வைத்து மாமதுரை என்ற படம் எடுத்தபோதே, இப்படி எதாவது குற்றச்சாட்டு கிளம்பும் என்று நான் எதிர்பார்த்ததுதான்.

சினிமாக்காரர்களுக்கு அவர்கள் ஒரு காலத்தில் பட்ட கஷ்டத்துக்கு, புகழ் பெற்றுவிட்டால் பல நூறுமடங்கு வருமானம் வருவதால் இப்படி அவ்வப்போது ஒரு சிலர் ஏமாறுவதாக சொல்கிறார்கள்.

சில தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நண்பர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு பல வியாதிகளை சுமந்து சம்பாதிக்கும் பணத்தை சில தீய வழிகளில் மகிழ்ச்சி என்ற பெயரில் செலவழிக்கிறார்கள். அவர்கள் தங்கள் துறையிலேயே நல்ல வழிகளில் திட்டமிட்டு செலவழித்து தானும் சுற்றி உள்ளவர்களும் நன்றாக இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரணமாகக்கொள்ளலாமே.

******

தொழில் பிரச்சனையில் ஆந்திராவின் தொழிலதிபர் ஒருவரின் மகளைக் கடத்திக் கொன்று பாய்லரில் போட்டு எரித்துவிட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.இந்த அதிர்ச்சியில் அந்த கோடீஸ்வர தந்தை மாரடைப்பால் மரணம் என்ற செய்தி என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு வேறுவிதமானது.

சாராய வியாபாரியான அவர் இந்த அளவு மகள் மீது பாசம் வைத்திருப்பதை ஒருபக்கம் பெருமையாகவும் மறுபக்கம் வெறுப்பாகவும் நான் உணர்கிறேன்.
நம் நாட்டில் இன்னும் எத்தனையோ குடும்பங்கள் குடியால் சீரழிந்து நிற்கின்றன.இப்படி சம்பாதித்தவர் தன் குடும்பத்தினரை நான் பாராட்டி சீராட்டி வசதி வாய்ப்போடு வளர்ப்பது போல் மற்றவர்களும் வளர்க்கவேண்டாமா என்று சிந்தித்திருக்கலாமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை மறுக்கமுடியவில்லை.

(நான் குறிப்பிடுவது, வருமானத்தை குடித்தே அழித்து குடும்பத்தை பசியால் வாடவிட்டிருப்பவர்களைத்தான்.)

அரசியல்வாதிகளில் ஒப்பந்தங்களைப்பெறுவது, மற்றும் இதுபோன்ற தொழில் போட்டிகள்தான் உயிருக்கே உலைவைக்கும் அளவுக்கு மோசமான பகையை வளர்க்கின்றன என்பது என் கருத்து.பிற தொழில்களில் போட்டிகள் இருந்தாலும் கொலைசெய்யும் அளவுக்குப்போவது மிகவும் அரிதாகத்தான் நடக்கிறது.

******

திருச்சியில் தறிகெட்டு ஓடிய மணல் லாரியின் சக்கரம் எஸ்தர் என்ற பொறியியல் கல்லூரி மாணவி மீதே ஏறி நின்ற ஒளிப்படத்தைப் பார்த்து பல நிமிடங்கள் எனக்கு படபடப்பு குறையவே இல்லை. நம் மோட்டார் வாகன சட்டத்தில் காயமடைந்தால் அவரது மருத்துவசெலவுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் உயிரிழந்துவிட்டால் ஓரிரு ஆயிரங்கள் அபராதம் செலுத்தினால் போதும் என்ற வகையில் விதிமுறை இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த அபத்தமான நடைமுறை கண்டிப்பாக மாற்றப்படவேண்டும்.

மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருபத்தைந்து முதல் முப்பது கி.மீ வேகம் மட்டுமே என்பது ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு கோரமான விபத்துகள் நாள்தோறும் அரங்கேறாது.

காயமடைந்தால் செலுத்துவதைவிட உயிரிழப்பு என்றால் பலமடங்கு அதிகமான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.மேலும் இது போன்ற குற்றவாளிகளுக்கு தனி சிறை ஏற்படுத்தப்பட்டு அவர்களை தொழிலாளர்களாகப் பயன்படுத்தி நஷ்டஈடு வசூலாகும் வரை வெளியில் விடவே கூடாது என்பது போன்று கடுமையான விதிமுறை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள் குறையும்.

ஏனெனில் விபத்துக்கு எண்பது சதவீதம் ஓட்டுநரின் தவறே காரணமாகிறது.

******
படங்களைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.

சனி, 30 ஜனவரி, 2010

ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா...

இன்னும் மூன்று மாதங்களுக்குள் நூலகத்தில் 50 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்போவதாக 30.01.2010 தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.இதுவரை பத்து லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் இவர்களால் இரண்டரைகோடி ரூபாய் வைப்புத்தொகை சேர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இது மட்டுமல்ல, உள்ளாட்சித் துறைகளால் வசூல் செய்யப்படும் வரிகளில் அடங்கிய நூலகம் மற்றும் கல்விக்கான தொகையும் உண்டு.இந்தப் பணம் எல்லாம் உருப்படியாக செலவழிக்கப்படுகின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

சென்னை மாநகராட்சியில் மட்டுமே வரியாக வசூலிக்கப்பட்டதில் கல்விக்கான தொகையில் எத்தனையோ மாநகராட்சிப் பள்ளிகளை சீரமைக்கலாம் என்று சொல்கிறார்கள்.ஆனால் அந்த தொகை வேறு பயன்பாட்டுக்கு செலவழிக்கப்பட்டுவருகிறதாம்.

குடிசைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில் சென்னை நகரின் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களை எல்லாம் ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால் துரத்தி அடித்துவிட்டார்கள். அவ்வளவு தூரம் பிள்ளைகளை படிக்க அனுப்பமுடியாது என்று இந்த அப்பாவிகள் மன்றாடியதற்கு கோர்ட் உத்தரவை மீற முடியாது என்று ஒருவர் சொல்கிறார். சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறிய கட்டிடங்கள் எல்லாம் இதே கோர்ட் உத்தரவை மீறிதான் இவ்வளவு காலமாக இருக்கின்றன. இன்னமும் இருந்து கொண்டே இருக்கும்.சட்டத்தின் பிடியில் சிக்குவதெல்லாம் ஏழைகள்தானே.

இப்படி மாணவர்களை வெளியூருக்கு குடும்பத்துடன் துரத்தி அடித்து விட்டு மாணவர்களே சேரவில்லை என்று நகரின் முக்கியப்பகுதிகளில் இருக்கும் மாநகராட்சிப் பள்ளிகளை எல்லாம் மூடிவிடலாம்.அந்த இடங்களை ஊழல் அரசியல்வாதிக்கு தாரை வார்த்துவிடலாம். அவர்கள் அதை கூறு போட்டு வித்து கறுப்பு பணத்தில் புரளலாம். இந்த உண்மை புரியாமல் ஒருவர் திருட்டு வி.சி.டியால் கறுப்பு பணம் வருகிறது என்று அப்பாவியாக பேசுகிறார்.

மறுபடி நூலக விஷயத்துக்கு வருவோம்.
நூலகம் என்றால் பணம் ஒதுக்கி புத்தகம் வாங்குவதுடன் கடமை முடிந்தது என்று எந்த மடையன் நினைத்திருக்கிறானோ தெரியவில்லை.இன்னும் பல ஊர்களில் நூலகம் வாடகைக் கட்டிடத்தில் என்று இடிந்து விழலாம் என்ற யோசனையில்தான் இருக்கின்றன.

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் இந்த மாதிரி அவல நிலையில் இருந்து  தப்பித்து 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்(?!) புதிய கட்டிடத்தில்தான் இருக்கிறது.இணைய இணைப்புடன் கணிணிகள், பெரிய இடம் என்று கட்டமைப்புக்கு குறைவே இல்லை.ஆனால் பயன்படுத்தும் வாசகர்கள் எண்ணிக்கையைப்பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

நூலகத்தின் உள்ளே உள்ள குறைகள் என்று சொன்னால் பணியாளர்களைத்தான் என் கைவிரல் சுட்டிக்காட்டுகிறது.காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணிவரை என்றுதான் வேலை நேரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் தினமும் காலை 8.15 முதல் 8.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் திறப்பார்கள். தனியார் கடைகளில் வேலை செய்பவர்கள் காலை ஒன்பது மணிமுதல் இரவு பத்துமணிவரை அவதிப்படுகிறார்கள்.
ஆனால் இங்கே காலை எட்டு முதல் இரண்டு மணிவரை ஒரு ஷிப்டும் மதியம் இரண்டு மணிமுதல் இரவு எட்டு மணிவரை இரண்டாவது ஷிப்டும் செயல்படும். ஆறுமணி நேரம்தான் நிரந்தர ஊழியர்களுக்கு பணி. ஆனால் காலை எட்டு மணிக்கு ஒரு நாளும் திறப்பது கிடையாது. வருகைப்பதிவேட்டில் மட்டும் காலை ஏழரை மணி என்று குறிப்பிட்டு விடுவார்கள். எனக்கு என்னவோ வாசகர்களுக்குதான் ஏழரை என்று தோன்றுகிறது.

பின்ன என்னங்க.காலையில ஒன்பது மணிக்கு வேலைக்கோ பள்ளிக்கூடத்துக்கோ போக நினைக்குறவங்க எட்டு மணிக்கெல்லாம் நூலகம் வந்துட்டு ஒரு அரைமணி நேரம் எதாவது படிச்சுட்டு இல்ல புத்தகம் தேடி எடுத்துட்டு போகலாம்னு வந்து பார்த்தா எட்டரை மணி வரை திறக்க மாட்டாங்க. அப்புறம் அரை வெளியில போக வேண்டிய அவசரத்துல இருக்குறவங்க எப்படி நூலகத்துக்கு வருவாங்க?

அடுத்து வாரஇதழ்கள் பிரச்சனை.திருவாரூர் நூலகத்துக்கு சில வார இதழ்கள் ஒரு கடையிலதான் வாங்கிட்டு வருவாங்க. அது சரியான நேரத்துக்கு நூலகம் வந்து சேராது.ஆளாளுக்கு இது என் வேலை இல்லை, உன் வேலை இல்லைன்னு பல நேரங்கள்ல பதினைந்து நாட்கள் வரை புத்தகங்கள் வந்து சேராது. திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற நூலகத்துக்கு வந்து புத்தகங்கள் இல்லைன்னா அடுத்து போகத்தான் வேணுமான்னு யோசிப்பாங்க.

ஆனா இப்படி இருபது நாள் கழித்து எடுத்துட்டு வர்ற புத்தகத்தை சில ஊழியர்களே வீட்டுக்கு எடுத்துட்டுப்போய்ட்டு மறு நாள் மதியம்தான் கொண்டுவருவாங்க. அதுக்கு இடையில யாராவது கேட்டா, யாரோ வாசகர்தான் திருடியிருப்பாங்க அப்படின்னு சொல்லிட்டா அவங்க வேலை முடிந்தது.

அப்ப அவங்க சின்சியரா வேலையே பார்க்குறது இல்லையான்னுதானே கேட்குறீங்க? ஏன் இல்லை...இரவு எட்டு மணிக்குப் பூட்டுறதுக்காக ஏழரை மணிக்கே வாசகர்களை மறைமுகமா விரட்ட ஆரம்பிச்சுடுவாங்களே.

அடுத்து திருவாரூர் நூலகத்துக்கு போறதுல வயசானவங்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிரச்சனையைப் பத்தி பார்ப்போம்.
நாகப்பட்டணம் போற புறவழிச்சாலையில ஒரு வயலுக்குள்ளதான் நூலகம் அமைந்திருக்கு. அரைமணி நேரம் நூலகத்துல இருக்குறதா இருந்தாலும்  திருவாரூர்ல இருந்து போறவங்க சாப்பாடு எடுத்துட்டுப் போறது நல்லது. ஏன்னா, மேம்பாலத்துல ஏறி இறங்குறதுக்குள்ள சாப்பிட்டது எல்லாம் செரிச்சுடும்.

அடுத்த பிரச்சனை, இது தேசிய நெடுஞ்சாலையா இருக்குறதால கனரக வாகனப் போக்குவரத்தும் மிக அதிகம். ரயில்வே மேம்பாலத்துல ரெண்டு பேருந்து போற அளவுக்குதான் வழி இருக்கு. ஆனா இரண்டு பக்கமும் தலா ஒரு அடி அகலத்துக்கு மண் குவிஞ்சு கிடக்கும். அதுல சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்டுறது கஷ்டம். அதனால கொஞ்சம் விலகி போகும்போது எதிரும் புதிருமா இரண்டு பேருந்து வந்தா அவ்வளவுதான், அவங்க அடிக்கிற ஹாரன் சவுண்டுல நூலகத்துல எவ்வளவு சத்தம் இருந்தாலும் சைலன்ஸ் தான்.

பெரியவங்களே இந்தப் பாதையில போறது கஷ்டம்.அப்புறம் எப்படி சின்னப்பசங்களை அனுப்புவாங்க?படிக்கிறதுன்னா கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அப்படின்னு நீங்க சொல்றீங்க. ஆனா அதுக்கு உயிரோட இருக்கணுமே அப்படின்னு அவங்க சொல்றாங்க.

நாயகன் படத்துல "நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவுமே தப்பு இல்லை." -இந்த வசனத்தை அரசியல்வாதிங்கதான் ரொம்ப கெட்டியா புடிச்சுகிட்டாங்க.234 பேர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டும் கூடப்போற சட்ட சபைக்கு கொடுக்குற முக்கியத்துவம் ஏழை மாணவர்கள் மேல இல்லை.

கமிஷன் அடிக்கிறதோட அரசியல்வாதி தொடர்புடைய யார் யார் பலனடைவாங்க அப்படின்னு  பார்க்குறதோட சரி.அந்த வேலை மக்களுக்கு உபயோகமா இருக்குமா அப்படின்னு எல்லாம் யோசிக்குறதே இல்லை. திருவாரூர்ல பஸ்ஸ்டாண்ட் நெரிசலான பகுதியில இருக்கு.அதை ஊருக்கு வெளியில கொண்டு போனா மக்களுக்கு நல்லது. ஆனா சில வியாபாரிங்க அப்படி செய்யவிடலை. ஆனா நூலகத்தை பொறம்போக்குல.... ச்சை...புறநகர்ல கட்டிவெச்சுட்டாங்க.
ஐம்பது வரிகளுக்குள்ள இந்த பதிவை எழுதிடலாம்னு நினைச்சேன். முடியலை. எழுத எழுத கோபம்தான் வருது. அதனால இப்ப இதோட நிறுத்திக்குறேன்.

சினிமா தொடர்பான ஒரு சந்தேகம்: சினிமாவைக் கிண்டல் பண்ணி அப்பப்ப படம் வந்திருக்கு. அதோட சில சினிமாக்காரர்களோட கண்டனமும்தான்.இப்ப வந்திருக்குற "தமிழ்ப்படம்"  சினிமாக்காரங்க யாரும் மூச்சு விடலையே. இதுக்குப் பேர்தான் பரமசிவன் கழுத்துல இருந்துகிட்டு பாம்பு கருடன்கிட்ட வாலாட்டுறதோ?

வெள்ளி, 29 ஜனவரி, 2010

கலாம் கனவுக்கு நம்பிக்கையூட்டிய புதிய தலைமுறை இளைஞர்

ஜனவரி 6, 2010 அன்று லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது என்ற செய்தி எல்லா நாளிதழ்களிலும் இடம்பிடிக்கக் காரணமான இளைஞருக்கு இந்த துணிச்சலைத் தந்தது லஞ்சம் கொடுக்காமலேயே நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள சட்டத்தில் வழி இருக்கிறது என்ற வல்லுனரின் விளக்கம் புதிய தலைமுறை இதழில் வெளி வந்த கட்டுரைதானாம்.

ராஜ்குமார் என்ற அந்த இளைஞர் பி.பார்ம் படிக்கும் மாணவர் என்ற செய்தி மேலும் நம்பிக்கை அளிக்கிறது. இவர் ஒருவர் மட்டும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து தவறு செய்யும் அதிகாரியைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் போதாது. எல்லாரும் இதே மன உறுதியுடன் சட்டத்தின் துணையுடன் போராடினால் மாற்றம் நிச்சயம்.

சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க அதிகாலையில் இருந்து நிறைய பேர் காத்துக் கிடக்க, சில பொது மக்கள் காவலாளிகளுக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைய முயற்சித்தபோது தள்ளுமுல்லு ஏற்பட்டு காவல்துறை தடியடி நடத்தும் அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டிருக்கிறது.

லஞ்சம் கொடுத்து முறைகேடாக உள்ளே நுழைய முயன்றவர்களால் கால்கடுக்க வரிசையில் நின்று தங்கள் உரிமைக்குப் போராடியவர்களுக்கு தடியடி.இந்த மாதிரி கொடுமைக்கும் ஒரு வகையில் மக்களேதான் காரணமாக இருக்கிறார்கள்.மக்கள் திருந்தினால் அதிகாரிகள் தங்கள் கையை லஞ்சத்துக்காக நீட்ட முடியுமா?

சில நாடுகளில் கடமையை மீறுவதற்கு மட்டும்தான் லஞ்சம். இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம் என்று இந்தியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அது எத்தனை உண்மை!
உண்மை பேசுவது பெரிய விஷயம் இல்லை.பேசுபவரும் இதே போல் நேர்மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் பூரண பலன் கிடைக்கும்.

******
இது குறித்து தினமலர் வார இதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.அதுவும் உங்கள் பார்வைக்கு.



வாரமலர்
அறத்திற்கு அழிவுண்டா? (ஆன்மிகம்)
- ஞானானந்தம்
- வைரம் ராஜகோபால்


உண்மையே பேசு; அறமே செய் என்கிறது வேதம். இந்த கலிகாலத்தில் உண்மையே பேசினால் ஊரெல்லாம் எதிரி; உலகெல்லாம் பகை என்று பலர் பயப்படுகின்றனர். உண்மையைப் பேசுகிறவர்கள், உண்மை பேசினால் மட்டும் போதாது; அறவழியில் வாழ்கிறவர் களாகவும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வு, அறவழியில் இல்லாமல் உண்மை பேசுகிறேன் என்று பிறரைப்பற்றி பேசினால் துன்பம் தான் மிஞ்சும்.

பழைய வைத்திய முறையில் மருந்துகள் கொடுக்கும் போது, மருந்து மட்டும் சாப்பிட்டால் போதாது; பத்திய உணவுகள் சாப்பிட்டு, சில மோசமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால்தான் மருந்து வேலை செய்யும் என்று சொல்வர். சிலசமயம், பத்தியமற்ற உணவுகள் சாப்பிட்டால் மருந்து விபரீதமாகக் கூட வேலை செய்யும்; அதே மாதிரிதான் உண்மை பேசுவது என்பது மருந்து மாதிரி. அறவழியில் வாழ்வது பத்திய உணவு மாதிரி. இரண்டும் இணைந்து நிகழ வேண்டுமே ஒழிய, உண்மை மட்டும் பேசி அறவழியில் நாம் நடக்கா விட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.

அறவழியில் நடக்கக் கூட பலர் பயப்படுகின்றனர். அறவழியில் நடந்த ராமர், தருமர் கஷ்டப்பட்டனர். அயோக்கியர்கள் சுகவாழ்வு வாழ்கின்றனர் என்று பலர் புலம்புகின்றனர். இது மாயை; பெரிய பொய். அவர்கட்கு நேர்ந்த சோதனை களைத் துன்பங்களாக கருதுகின்றனர்; ஆனால், அவர்கள் அப்படி இல்லை. நெருப்புக்குக் காகிதம் அஞ்சும்... தங்கம் பயப்படுமா? நீங்கள் அறவழியில் நடந்தால் வரும் அனுபவங்களைத் துன்பம் என்று முத்திரை குத்தாதீர்கள்; அறவழியில் நடப்பவருக்கு ஒருநாளும் துன்பம் வராது. "இன்பமே எந்நாளும்... துன்பம் இல்லை' என்கிறது நாவுக்கரசர் தேவாரம்.

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு திருட்டுப் போய்விட்டது. அரசனுக்குக் கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினான்; பயன் இல்லை."ஒரு மாதத்திற்குள் சிலம்பைக் கொண்டு வந்து தருபவர்கட்கு பெரும் பரிசுத் தொகை...' என்று அறிவித்தான். கூடவே, மக்களை மிரட்ட, அதற்கு பிறகு, அது யாரிடம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்று அறிவித்தான்.

அந்த ஊருக்குத் தம் சீடர்களோடு வந்து கொண்டிருந்தார் துறவி ஒருவர். வழியில் கீழே கிடந்த சிலம்பு இவர் கைக்கு அகப்பட்டது. விசாரித்தபோது, "இது ராஜாவின் சொத்து; அதை உடனே கொண்டு போய் கொடுத்தால் பரிசு உண்டு. குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கொடுத் தால், மரண தண்டனை!' என்று துறவிக்குத் தகவல் கிடைத்தது.

அதை கொடுக்கவில்லை துறவி; வைத்துக் கொண்டார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவே இல்லை. சரியாக எந்த நாளுக்குப் பிறகு, கொடுத்தால் மரண தண்டனை என்று ராஜா அறிவித்தாரோ, அதற்குப் பிறகு, அரசரிடம் சிலம்பைக் கொடுத்தார். "இப்போது உமக்கு மரண தண்டனை நான் விதிக்க வேண்டி இருக்குமே, ஏன் கிடைத்ததும் தரவில்லை?' என்று சீறினான் அரசன்.

"ஒன்று... கிடைத்ததும் ஓடோடி வந்திருந்தால் பரிசுக்கு நான் ஆசைப்பட்டதாக அர்த்தம்; நான் பரிசை விரும்பவில்லை. இரண்டு, மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி கொடுக்காமலேயே வைத்திருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தம்; நான் மரணத்திற்குப் பயப்படுபவன் இல்லை. சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் என்று ஆகிவிடும்; நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை. அதனால், இப்போது கொடுத்து விட்டேன்!' என்றார் துறவி. "இப்போது உமக்கு மரணதண்டனை கிடைக்குமே!' என்றான் அரசன். அவனைப் பார்த்து, "அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம், உன் சட்டத்தை விட மேலானது... விடு வழியை...' என்று கூறியபடி கம்பீரமாக நடந்தார் துறவி. தலை வணங்கி வழிவிட்டான் அரசன்.
அறம் அழிவற்றது.
***

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

நாட்டு நடப்பு - பல சந்தோஷங்களும் சில சங்கடங்களும் - 24.01.2010

தினமணி கதிர் 2009ம் ஆண்டு சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு 10000 ரூபாய் பெற்ற "பரட்டச்சி" சிறுகதையை எழுதியவர் ஷாராஜ்.இந்தக் கதையில் சமனற்ற மனநிலையை உடைய பரட்டச்சியையும் யாரோ ஒரு கயவன் கருவுறச்செய்து விடுவான். வீட்டுத்திண்ணையில் இட்லி வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்தான் இவளுக்கு உணவு கொடுத்துவருவாள்.




பரட்டச்சிக்கு குழந்தை பிறக்கப்போகும் நேரம், குப்பைத்தொட்டியில் யாரோ ஒருவர் பச்சிளம் குழந்தையை வீசிச்சென்றிருப்பார்கள்.தெருவே கூடி நின்று தொண்டு நிறுவனத்துக்கு போன் செய்வோமா அல்லது காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்போமா என்று விவாதித்துக்கொண்டு இருப்பார்கள்.

குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் அழுகுரல் திடீரென்று நின்றுவிடும். அந்த நேரத்தில் நிறைமாதமாக அங்கு வந்த பரட்டச்சி குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்தி தன் மார்பில் உயிர்ப்பால் ஊட்ட முயற்சி செய்வாள். பரட்டச்சிக்கு அது நாள் வரை உணவளித்து வந்த இட்லிக்கார அம்மா கூட குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் பசிக்கு என்ன செய்வது என்று யோசிக்காததை நினைத்து அதிருவதை கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

அதிர்ந்தது கதையைப் படித்த நானும்தான்.நாம் என்னதான் சமூக சேவை செய்வதாக கூறிக்கொண்டாலும் நம்மைச் சுற்றி ஒரு மெல்லிய வட்டத்தைத் தாண்டி செல்வது இல்லை, ஏன் அது பற்றி யோசிப்பது கூட இல்லை என்ற உண்மையை உணர்ந்தேன்.

இந்த எழுத்தாளருடன் நான் கைபேசியில் பேசியது உண்டு.அவர் தன்னுடைய கைபேசி எண்ணுடன் எனக்கு கடிதம் எழுதுவதற்கு காரணம், தினமலர்-வாரமலருக்கு நான் எழுதிய கடிதம்தான்.

07.06.2009 தினமலர்-வாரமலரில் அம்ரிதவர்ஷிணி என்ற புனைப்பெயரில் விஷவியூகம் என்ற சிறுகதை பிரசுரமாகியிருந்தது.

தற்கொலை செய்யப்போகும் காதலர்கள், தங்களைக் கொத்த வந்த பாம்பிடமிருந்து ஒரு போராட்டம் நடத்தி தப்பித்தபிறகு மீண்டும் வாழ நினைப்பதுதான் கதை.

சின்னக் குழந்தைகளிடம் இருந்து பொம்மையை வாங்க முயற்சித்தால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் வேறு பல காரணங்களால் அந்த பொம்மையை சிதைக்கவோ, தூக்கி எறியவோ அவர்கள் தயங்குவது இல்லை.

மனிதர்களும் இப்படித்தான்.கடவுள் கொடுத்த உயிரை அற்பக் காரணங்களால் துறக்க நினைப்பார்கள். ஆனால் ஒருவன் கொலை செய்ய வந்தால் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் வழிகள் வலிமையானதாக இருக்கும். இதை அழகாக உணர்த்தியது இந்தக் கதை.


-இதுதான் நான் வாரமலருக்கு எழுதி அனுப்பிய வாசகர் கடிதம். இந்தக் கடிதம் வாரமலரின் "அர்ச்சனை" பகுதியில் பிரசுரமாகவில்லை. ஆனால் இதை சம்மந்தப்பட்ட எழுத்தாளரிடம் தினமலர் நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கிறது.இந்த வரிகள் ஈர்த்ததால்தான் எனக்கு ஷாராஜ் அவர்கள் நேரடியாக கடிதம் எழுதியிருக்கிறார்.

விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 1
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 2
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 3
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 4

இதைப் பற்றி நான் இப்போது சொல்லக் காரணம், எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்றதற்காக ஆசிரியை திட்டியதைத் தாங்க முடியாமல் ஒரு தூக்கு. மனைவி மாற்றானுடன் இருந்ததைப் பார்த்தததும் விஷம்.குடிக்கு அடிமையானதும் தொழிலை இழந்து வருமானம் தடைபட்டு பைத்தியம் பிடிக்கும் நிலைக்குச் சென்று தூக்கு.

இது போல் எனக்குத் தெரிந்து பிரச்சனையை விடத்தெரியாமல் உயிரை விட்டவர்கள் அனைவருமே 17 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போ மற்ற வயதினர் தற்கொலை செய்யலாம் என்று சொல்வதாக நீங்கள் அர்த்தம் கொள்ளக்கூடாது. நமது முன்னாள் குடியரசுத்தலைவர் முதல் கறை படியாத தலைவர்கள், ஊழலில் ஊறும் அரசியல்வாதிகள் - இவர்களில் யாருமே இளைய தலைமுறையை குறைத்து எடை போடுவதில்லை. நல்ல மரியாதைதான் வைத்திருக்கிறார்கள். பிறகு ஏன் மற்றவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தன்மீது வைக்க தயங்க வேண்டும்?(எதிலும் விதிவிலக்குகள் நிறையவே இருக்கின்றன.அதை எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய கடமை இளைய தலைமுறைக்கு அதிகமாகவே இருக்கிறது.)

நேற்றும் ஒரு துர்மரணம். தொழிலில் நன்றாக முன்னேறி வந்த அவன் சில காலமாக மதுவுக்கு அடிமையாகி இருந்தான்.நேற்று காலை முதல் அவன் எங்களிடையே இல்லை.

தவறோ சரியோ ஒருவரின் மனம் நினைப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளும் ஆட்களைத் தவிர மற்றவர்களை அருகில் சேர்க்கவோ, அவர்கள் சொல்வதில் நன்மை தரக்கூடியது இருக்கிறதா என்று நினைக்கவோ இன்று பலரும் தயாராக இல்லை.

என்னுடைய 5 வயதில் இருந்தே அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கிறேன்.இதில் எதுவும் பள்ளிக்கூட பாடம் தொடர்பானது அல்ல.ஆனால் ஒரு நாளும் உயிரை விடுவது பற்றி சிந்தித்ததே இல்லை.இன்று பலருக்கும் பள்ளிப்பாடம்தான் மிகப்பெரிய பிரச்சனையாகத் தோன்றுகிறது.

இப்படி தப்பான முடிவு எடுப்பவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். போனால் வராதது உயிர், காலம் என்பார்கள்.பல விஷயங்களை இன்று செய்யவில்லை என்றால் நாளை அல்லது நான்கு மாதம் கழித்து கூட செய்து கொள்ளலாம். அப்படி செய்வதற்கு முதலில் உயிருடன் இருக்க வேண்டும்.இதை யோசித்தால் யாருக்கும் தற்கொலை எண்ணம் தோன்றாது.

இன்று நாளிதழில் செய்தி ஒன்று படித்தேன். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறான் ஒரு கயவன். அவன் மீது புகார் அளித்துவிட்டார்கள் என்று அத்துமீறிய பையனின் பெற்றோர் பாதிக்கப்பட்ட பெண்ணையே வந்து திட்டியிருக்கிறார்கள். ஊர் முழுவதும் விஷயம் பரவியதால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தப்பு செய்த பையனைத் தண்டிப்பது இருக்கட்டும். முதலில் அவனுக்குப் பரிந்து பேசிய அவன் பெற்றோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

1998ல் சரிகாஷா மரணம்தான் கடைசி ஈவ்டீசிங் பலியாக இருக்கவேண்டும் என்று இதைத் தடுக்க அதிகாரம் படைத்த அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் தினம் தினம் நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்தால் பல நேரங்களில் வேதனைப்படுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நம் நாட்டில் உள்ள சட்டங்கள் பிடிக்காத ஆளின் மீது பொய் வழக்குப் போடவும் பிடித்த ஆள் தவறே செய்தாலும் தப்பிக்க வைக்கவும்தான் அதிகமாக உதவி செய்கின்றன.

இன்னும் ஒரு மாத காலத்தில் பள்ளியில் பத்தாம்வகுப்பு, பிளஸ்டூ பொதுத்தேர்வுகள் தொடங்கப்போகின்றன.தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளை விட பெற்றோர்தான் அதிகமாக டென்ஷன் ஆவார்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தற்கொலை என்பது நிச்சயம் தீர்வு இல்லை. இதை மனதில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை அந்த முடிவெடுக்கத் தூண்டி விடாதீர்கள்.

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டாலும் அதை அச்சமின்றி பெற்றோரிடம் சொல்லி தீர்வு காணும் துணிச்சல் பலருக்கும் இல்லாமல் போவதற்கும் பெரியவர்கள்தான் காரணம்.

நீ ஒழுங்கா போனா அவன் ஏன் தொந்தரவு செய்யுறான்.-இந்த வார்த்தை மிகவும் தவறு.இது மாதிரி பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொன்னாலும் பெரிய தண்டனை கிடைக்காது என்ற துணிச்சல்தான் இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்குக் காரணம்.ஒரு ஊரில் லோக்கல் தாதாவின் பொண்ணுகிட்ட இப்படிப் போய் வம்பு செய்யுறது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அந்த வயசு காரணமா அந்தப் பொண்ணே யாரையாச்சும் பார்த்தால் கூட தெறிச்சு ஓடுறவங்க எண்ணிக்கைதான் அதிகமா இருக்கும்.

******

சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களில் ஒன்று - கல்யாண் ஜூவல்லர்சின் நம்பிக்கை - வாழ்க்கையின் ஆதாரம்.

காதலன், காதலியை அழைத்துச் செல்ல ஆள், வாகனத்துடன் வந்து கோயிலில் காத்திருப்பான். "நம்ம மக ஓடிப்போகப்போறாளாம்" என்று சொல்லும் மனைவியை அடக்கும் தந்தை,"அவ என் பொண்ணு " என்று நம்பிக்கையுடன் சொல்வார்.

அந்த மகளும் காதலனைப் புறக்கணித்து தந்தையிடம் வருவாள். உடனே தந்தை,"அந்தப் பையனை அவங்க அப்பா அம்மாவோட நம்ம வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கச்சொல்லும்மா." என்பார்.

சில நொடிகளில் நெஞ்சை நெகிழவைத்த விளம்பரம்.தந்தை மகளாக இளையதிலகம் பிரபு - சரண்யாமோகன். மிகச்சரியான தேர்வு. அதிலும் தந்தை சம்மதம் கொடுத்ததும் ஆனந்தக் கண்ணீருடன் தந்தையின் தோளில் சரண்யா சாய்ந்து கொள்ளும் காட்சி மிகவும் அற்புதம்.

நம்பிக்கை என்பது இரு தரப்புக்கும் பொதுவான விஷயமாக இருக்கவேண்டும்.ஒருவரிடம் குறைந்தாலும் எதிர்தரப்பின் நம்பிக்கையும் சிதறிவிடும்.

இன்று பல குடும்பங்களில் நடப்பதும் இதுதான்.மகள் அல்லது மகன் தானே தேர்வு செய்த வாழ்க்கைத்துணை என்ற ஒரே காரணத்துக்காக உறவைத்துண்டித்து பல நெகிழ்ச்சியான தருணங்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.அவர்களே தேர்வு செய்த துணை சரியான நபராக இருக்கும் நிலையில் இதை எதிர்ப்பது அர்த்தம் இல்லாத ஒன்று.ஈகோவால் தாங்கள் தோற்றுவிட்டதாக நினைக்காமல் சரியான விஷயங்களை ஒப்புக்கொண்டால் யாரும் எதையும் இழக்காமல் சந்தோஷங்களை அறுவடை செய்யலாம்.


ஒருவேளை தவறான துணையை தேர்வுசெய்திருந்ததை பெற்றோர் சுட்டிக்காட்டினால் ஈகோ காரணமாக அந்த நபருடனேயே வாழ்க்கையை இணைத்துக்கொண்டு அவதிப்படுவதையும் இளைய தலைமுறை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

எனக்குத்தெரிந்து ஒரு இளம்பெண் தன் தந்தையாலேயே வாழ்வைத்தொலைத்துவிட்டாள்.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ம் ஆண்டு அந்தப் பெண் ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.(ஆண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடக்கடவுளே என்று சொல்ல வைக்கும் செய்தி ஒன்று கட்டுரையின் இறுதியில் இருக்கிறது.)

சாதி, பொருளாதாரம், கல்வி என்று பல வேறுபாடுகளைத் தாண்டி அந்தப் பெண்ணுக்கு  அந்தப் பையன் மீது ஈர்ப்பு வர ஒரே காரணம் இனக்கவர்ச்சி மட்டுமே. இந்த எண்ணத்தை அந்தப் பெண்ணின் மனதில் விதைத்தது அவளுடைய தந்தைதான். இந்தப் பெண்ணின் சித்தி(அவள் தாயாரின் தங்கை) தன் கணவனை விட்டு இவர்கள் வீட்டுக்கே வந்து விட்டாள். தந்தையும் சித்தியும் ஏடாகூடமாக இருந்ததை அவ்வப்போது பார்த்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இந்தப் பெண்ணின் மனதில் "அந்த"ஒரு விஷயம்தான் உலகம் என்று தவறாக எண்ண வைத்துவிட்டது.

விளைவு, ஒரு இளைஞனுடன் திருமணம் (?!) செய்து கொள்ள நினைத்து ஓட்டம். காவல்துறை உதவியுடன் மகளை மீட்டு அழைத்து வந்த அவர் சரியான நிபுணர் மூலமாக ஆலோசனையை வழங்கியிருந்தால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் வீணாகியிருக்காது.

ஆனால் அந்த தந்தை, மகளின் படிப்பை நிறுத்தி வீட்டிலேயே வைத்ததுடன் மச்சினியுடனான லீலைகளை நிறுத்தவே இல்லை. மகளாலும் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மூன்று முறை அதே ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியில் போய் தங்கியிருந்து பிறகு மீட்டுக்கொண்டு வரப்பட்டாள்.

ஒரு வழியாக அந்த ஒருவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது. இந்தப் பெண்ணின் கவனம் வேறு ஒருவன் மீது.சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் புதியவனுடன் அந்தப்பெண் வெளியேற, காவல்துறை மூலம் மீட்பு.(மறுபடியும் முதல்லேருந்தா?)

அவளை இப்போது அழைத்துச்சென்றவன் "யோவ்...உன் பொண்ணுதான் என்னைக் கூப்பிட்டா.அவளைக் கேளுய்யா!"அப்படின்னு சொல்லிட்டான். இன்னும் அந்த தந்தை தன்னால்தான் தன் மகள் இப்படி வழிதவறிப்போனாள் என்று உணரவே இல்லை(அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்)

முதல்முறை 2003ல் வெளியேறியதும் மீட்டு அழைத்து வந்தபோதே முறையாக ஆலோசனை அளித்து, படிப்புதான் முக்கியம். படித்து முடித்ததும் நீ அவனை விரும்பினா, அவன் உன்னை நேசிச்சா கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி அவள் கவனத்தை படிப்பு மேல திருப்பியிருக்கலாம்னுதான் நான் நினைக்கிறேன்.

படிப்பை நிறுத்தி வீட்டுல போட்டதும் வேறு எந்த எண்ணமும் அவள் மனசுல வரவே இல்லை.சும்மா இருக்கும் மனம் பேய்களின் கூடாரம் என்ற பழமொழிக்கு வாழும் உதாரணமாக இந்தப் பெண்ணை சொல்லத்தோன்றுகிறது.

இப்போது கல்வியும் இல்லாமல், ஊர் முழுவதும் இவள் பற்றிய உண்மை தெரிந்ததால் திருமணமும் கேள்விக்குறியாகி விட்டது. சமீபத்தில் அவளுடன் வெளியில் சென்றவனும் எதை அந்தப் பெண்ணிடம் எதிர்பார்க்கிறான் என்பது தெரிந்துவிட்டது.

முதலில் இவள் வெளியேறிய 2003ம் ஆண்டை நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னது ஏன் தெரியுமா? இவளுக்கு பதினெட்டு வயது நிறைவடையவே இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறதாம்.

இவ்வளவு சின்ன வயதில் இந்தக் குழந்தையின் வாழ்க்கை இப்படி மோசமாக யார் காரணம்?-நிச்சயமாக அவள் இல்லை.

******

சார்லி சாப்ளின் ஒரு பீரங்கியை தயார் செய்து மிகப்பெரிய வெட்டவெளியில் அதை வெடிக்கச்செய்ய மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்வாராம். ஊரே அவர் வெடிக்கச்செய்யப்போகும் பீரங்கிக் குண்டு சத்தத்திற்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது அந்த குண்டு மிக லேசான சத்தத்துடன் வெடித்து பீரங்கிக்குழாயின் காலடியிலேயே விழுமாம்.


இன்னைக்கு நானும் இப்படி ஒரு ஏமாற்றத்தை சந்திச்சேன். இந்த மாசம் 2ம் தேதி பகல் முழுவதும் திருவாரூர்ல மின்தடை. பராமரிப்பு பணின்னு சொன்னாங்க. ஆனா அடுத்த சில நாட்கள்லயே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடிச்சு சிதறினது.அது ஏன்னு கேட்கக்கூடாது.ஆயில் இல்லைன்னு அரசாங்க ரகசியத்தை நாங்கதான் வெளியில சொல்ல மாட்டோமே.

இன்றும் 24.01.2010 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட்டுன்னு பேப்பர், காரைக்கால் பண்பலை உட்பட பல ஊடகங்கள்லயும் அறிவிப்பு செய்தாங்க. எனக்கும் மற்ற வேலைகள் இருந்ததால இரவுதான் புதிய பதிவு போடணும்னு நினைச்சு காலையில பேப்பரை மட்டும் படிச்சுட்டு வெளியில போயிட்டேன்.

காலையில ஒன்பது மணிக்கு அப்புறமும் மின்சாரம் தொடர்ந்து இருந்துச்சு. 9.59க்கு அப்புறம் பத்து மணியும் ஆச்சுங்க. அப்பவும் பவர் கட் ஆகலை. ஆனா அடுத்து அஞ்சு நிமிஷத்துல போயிடுச்சு. சரின்னு நானும் வெளியில போயிட்டேன்.

சில நண்பர்களை சந்திச்சு பேசிகிட்டு இருந்தா ஒருத்தன் "மாப்பு...கிரிக்கெட் பார்க்கப்போறேன். வைக்காத ஆப்பு"ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டான். என்னடான்னு கேட்டா முக்கால்மணி நேரத்துல மின்சாரம் மறுபடியும் வந்துடுச்சேன்னு அவனும் ஜூட் விட்டுட்டான்.

அடக்கடவுளே...இப்படின்னு தெரிஞ்சுருந்தா பதினோரு மணிக்கெல்லாம் பதிவை ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த முக்கியமான வேலையைப் (தூக்கம்தான்)பார்த்திருக்கலாமே அப்படின்னு புலம்பிட்டு வீட்டுக்கு வந்தேன்.

ரொம்ப மும்முரமா கம்ப்யூட்டர்ல வேலை பார்த்துகிட்டு இருந்தா பொசுக்குன்னு பவரைத் துண்டிப்பாங்க. இப்ப நான் இவ்வளவு ஏற்பாட்டோட வேற வேலையைப் பார்த்தா ஒழுங்கா கொடுத்து வெறுப்பேத்துறாங்க.

மின்சாரவாரியம்:பவரைக் கட் பண்ணினாலும் திட்டுறீங்க...ஒழுங்கா கொடுத்தாலும் சாபம் கொடுக்குறீங்க...வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம்.பழமொழி சரியாத்தான் இருக்கு.
******

சனி, 23 ஜனவரி, 2010

நானும் ஜெயா டி.வியும் - பரிசு போச்சே

2005ம் ஆண்டு ஜெயா டி.வி யில் டாக்யு அவார்ட்ஸ் என்ற ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியில் போட்டிக்கென வந்த இரண்டு குறும்படங்களும் படம் குறித்து தொகுப்பாளர் கோபிநாத்துடைய பேச்சும் சில நேரம் பிரபல இயக்குனர்களின் கருத்தும் இடம்பெறும்.

சில மாதங்கள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பல வாரங்கள் நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களுக்குப்பிறகு சினிமா தொடர்பான ஒரு கேள்வி கேட்டு சரியான பதில் அளித்தவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசும் வழங்கினார்கள்.

நடுவில் ஒரு வாரம் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. அந்த வாரம் தமிழின் முதல் 70 mm திரைப்படம் எது என்ற கேள்விக்கு பலரும்  ராஜராஜசோழன் என்ற விடையை அளித்திருந்தார்கள்.தமிழில்  முதல் சினிமாஸ்கோப் படம்தான்  ராஜராஜ சோழன். முதல் 70 mm படம் மாவீரன். அதனால் அந்த வாரம் யாருக்கும் பரிசு இல்லை.இந்த விடை எனக்குத் தெரிந்தாலும் நிகழ்ச்சியைப் பார்க்காததால் விடையை எழுதி அனுப்ப முடியவில்லை. பரிசு போச்சே என்று ரெண்டு நாள் புலம்பத்தான் முடிந்தது.

அடுத்து ஒரு வாரத்தில் உலகிலேயே அதிக அளவில் ஆவணப்படங்கள் தயாரித்த நிறுவனம் எது என்று கேட்டார்கள். NFDC - National Film Development Corporation என்ற இந்திய நிறுவனம்தான் உலகிலேயே அதிக ஆவணப்படங்களை தயாரித்த நிறுவனம் என்ற விடையை ரொம்பச் சரியா எழுதிட்டோம்ல.

சரியான விடையை எழுதி பரிசு பெறுபவர் "சரவணன் - திருவாரூர்." என்று கோபிநாத் தன் கணீர் குரலில் சொன்னது என்னாலயே நம்பமுடியலை. கல்லூரியில படிக்கும்போது முதல் செமஸ்டர்ல முக்கியமான மூணு பேப்பர்லயும் முதல் மார்க் எடுத்ததும் சந்தேகம் தீராம புரொபசர்கிட்ட பத்து தடவை மார்க்கை திருப்பி திருப்பிக் கேட்ட ஆளாச்சே நானு. ஆனா கோபிநாத் கிட்ட அந்த மாதிரி கேட்க முடியலை.

திரைக்கதை பற்றி அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை பற்றிய புத்தகம், எலிப்பத்தாயம், பி.பத்மராஜனின்(மலையாள இயக்குனர்) பெருவழியம்பலம், மதுரை காமராசர் பல்கலைக்கலையில் பணியாற்றிய பிரபாகர் என்பவரின் சினிமா தயாரிப்பு பற்றிய புத்தகம்,காதல் திரைக்கதை மற்றும் ஒரு புத்தகம் சேர்த்து மொத்தம் ஆறு புத்தகங்களை அனுப்பி வைத்தார்கள். பணம் அனுப்பாம இப்படி புத்தகமா அனுப்பியிருக்காங்களேன்னு எங்க அம்மா என்னையத்தான் திட்டுனாங்க.

பிறகு ஒரு முறை போட்டோகிராபி என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது என்ற கேள்வி கேட்டிருந்தார்கள்.

பெரும்பாலான அறிவியல் சொற்கள் இலத்தீனில் இருந்துதான் ஆங்கிலத்துக்கு இடப்பெயர்ச்சி அடைந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் போட்டோகிராபி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

கிரேக்க மொழியில் போஸ் என்றால் வெளிச்சம் என்று அர்த்தம்.
கிராபோ  என்றால் வரைதல் என்ற பொருள்.அதாவது வெளிச்சத்தில் வரைதல் என்ற அர்த்தத்தில்தான் போஸ்,கிராபோ என்ற வார்த்தைகள் இணைந்து போட்டோகிராபி என்ற சொல் உருவானது.

அந்த வாரத்திற்குரிய வெற்றியாளர் பற்றி அறிவிக்கும்போது யாருமே சரியான விடை எழுதவில்லை என்று கோபிநாத் சொன்னதும் மறுபடியும் பரிசு போச்சே அப்படின்னுதான் நினைச்சேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான அன்னைக்கு ரம்ஜான் பண்டிகைன்னு நினைக்கிறேன். இரவு ஒன்பது மணிக்கு மேல ஆயிடுச்சு.கனமழை பெய்யுது. நான் சரியான விடையை எழுதியிருந்தேன் என்று குறிப்பிட்டு ஒரு பக்கத்தில் கடிதம் எழுதி உடனே ஃபேக்சில் அனுப்பிட்டேன்.நாலு நாளைக்குள் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரிடமிருந்து பதில் வந்திருந்தது.

மழை, பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் நீங்கள் சரியான விடை எழுதிய கடிதம் நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட பிறகுதான் எங்களுக்கு கிடைத்தது. அப்படின்னு வருத்தம் தெரிவிச்சு பதில் எழுதியிருந்தாங்க.அடுத்த வாரத்துலேர்ந்து விடை அனுப்பவேண்டிய கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் அதிகரிச்சாங்க.

திரைப்படம் எடுப்பதில் ட்ரீட்மெண்ட் என்ற வார்த்தை எதைக் குறிக்கும் அப்படின்னு அடுத்த வாரக் கேள்வி.

ஒரு கதையை காட்சிகளாகப் பிரித்து படமாக்கும் விதத்தைதான் ட்ரீட்மெண்ட் என்று சொல்வார்கள் என்று சரியான பதில் எழுதியிருந்தேன்.(இது சுருக்கமான பதில்தான்.உண்மையில் இதைத் தொடர்ந்து சற்று நீண்ட பதிலை எலும்புமுறிவு நோயாளிக்குரிய ட்ரீட்மெண்ட் போலவே எழுதியிருந்தேன்.)

சந்திரமௌலியின் எழுத்து வடிவத்தில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரும்பிப்பார்க்கிறேன்,இயக்குனர் சுசி.கணேசனின் வாக்கப்பட்டபூமி, கி.ராஜநாராயணன் எழுத்துலகத்தை ஆய்வு செய்து பிரேம்-ரமேஷ் எழுதிய புத்தகம், நீலபத்மநாபனின் கதைகள், வையவனின் கதைகள் ஆகிய புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள்.

இந்த முறை வேறு யாரையும் பரிசுக்குரியவர்களாக ஏற்கனவே தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.மற்ற எல்லா வாரங்களிலும் பரிசு பெற்றவர் பெயர், ஊரை கோபிநாத் சொல்லுவார். இந்த முறை பரிசு பெற்றவர் என்ற அவர் சொன்னதும் ஒலி நின்று என் பெயர் முகவரியுடன் டைட்டில் கார்டு காண்பிக்கப்பட்டது.(ரொம்ப ஆராயுறனா?)

எவ்வளவோ நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வாரம் இரண்டு நாள் குறும்படத்திற்கென நேரம் ஒதுக்கலாம்.இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர்கள் என்ற நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதை நான் தொடர்ந்து பார்க்கவில்லை. ஆனால் இது பிரபல இயக்குனர்கள் அதிகம் பேசும் நிகழ்ச்சியாக இருப்பது போல்தான் தெரிகிறது. இந்த அறிவுரைகளை சம்மந்தப்பட்ட இயக்குனர்களிடம் தனியாக கூறிவிடலாம். இவர்கள் பேசுவதை விட கூடுதலாக இரண்டு படங்கள் ஒளிபரப்பானால் மக்களிடம் போய் சேரும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.இது தவறாக கூட இருக்கலாம்.நீங்களும் யோசிங்க. தோணுறத எழுதுங்க.


எல்லா முழு நீளப்படங்களின் இடைவேளையின் போது அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் இருக்கும் குறும்படங்களை திரையரங்கில் திரையிடலாம்.பெரிய படங்கள் பார்க்க வர்ற ஆளுங்க கிட்ட இருந்து வசூல் செய்யுற டிக்கட் தொகையில் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் குறும்படங்களுக்கு நல்ல உதவியா இருக்கும். இதுல எதெல்லாம் சாத்தியம்னு செய்து பார்த்தாதான் தெரியும்.