Search This Blog

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - காதலர்தின ஸ்பெஷல் தொடர்கதைக்கு முன்னுரை-3

உறவுகள் சிதைய முக்கியக்காரணம், நாம் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை நினைத்துப்பார்க்க மறுப்பதுதான் என்ற பொருளில் கடந்த இரண்டு முன்னுரைகளையும் எழுதியிருந்தேன்.
எதை மையமாக வைத்து எழுதினாலும் கதை நிகழ்வது ஏதாவது குறிப்பிட்ட ஊரில் இருக்க வேண்டும்.இதற்கு ரொம்ப மெனக்கிட வேண்டாம். உங்கள் ஊர், உங்களுக்கு தெரிந்த பகுதி.இது போதும் என்று எழுத்தாளர் சுஜாதா ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.

அதனால்தான் கதை நிகழும் களமாக திருவாரூரைத் தேர்ந்தெடுத்தேன்.இப்போது ஒரு வாரம் இளையபாரதத்தில் வெளிவரப்போகும் திருவாரூரில் திருவிழா - ஜாலி தொடர்கதை 99 சதவீதம் கற்பனைதான்.என்னுடைய சுய விவரக்குறிப்பில் குறிப்பிட்டது போல் இதெல்லாம் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்ற என்னுடைய ஏக்கங்கள்தான் எழுத்துவடிவம் பெறுகின்றன.

கதையைப்பற்றி இந்த முன்னுரையில் சொன்னால் உங்களுக்கு சுவாரஸ்யம் போய்விடும். அதனால் அது நிகழும் இடங்களை மட்டும் சொல்லிவிடுகிறேன். கல்லூரி, கல்யாண மண்டபம் - இவை இரண்டும்தான் திருவாரூரில் திருவிழா தொடர்கதையில் முக்கியமான இடங்கள்.

தொடர்கதை என்றதும் மிகப்பெரிய அளவில் எழுதி உங்களை படிக்காமலேயே ஓடவைக்க விரும்பவில்லை.தினமும் ஒரு சிறிய அத்தியாயமாக ஏழே நாட்கள்.அவ்வளவுதான். பொறுத்துக்குங்க.
08.02.2010 அன்று திருவாரூரில் திருவிழா - ஜாலி தொடர்கதையின் முதல் அத்தியாயம் இளைய பாரதத்தில் உங்கள் பார்வைக்கு கிடைக்கும்.

2 கருத்துகள்: