Search This Blog

திங்கள், 12 நவம்பர், 2012

கதை

ஒரு பிரபல வார இதழ்ல மிகப்பெரிய தயாரிப்பாளர் நாங்க இந்த தெலுங்கு படத்தை பார்த்து அந்த படத்தை சுட்டோம். அந்த ஹிந்தி படத்தை பார்த்து இந்தப் படத்துக்காக நாலு சீன் உருவுனோம்னு வாரக்கணக்குல எழுதிகிட்டு இருந்தாரு. அவரு சொல்லப்போய்தான் எந்த எந்த படத்துல எப்படியெல்லாம் பிற மொழிப்படத்துல இருந்து உருவுன சீன் இருந்துச்சுன்னு அந்த வார இதழ் படிச்ச வாசகர்களுக்கு தெரிய வந்துச்சு.

ஆனா இப்போ படத்துக்கு பூஜை போடப்போற செய்தி வந்த அன்னைக்கு சாயந்திரமே இவங்க எந்த ஒலகப்படத்துல இருந்து உருவிருக்காங்க அப்படின்னு இணையத்துல அடிச்சு தொவைச்சு காயப்போட்டுடுறாங்க. உதவி இயக்குனர் கிட்ட இருந்து திருடப்பட்ட கதையை வெச்சு படம் பண்ணும் இயக்குனர் பத்தி ஒரு பக்க கதை எழுதினேன். அது எதுலயும் பிரசுரமாகலை. அதை 2010ஆம் ஆண்டு இளையபாரதத்துல எழுதினேன். இப்போ அது மீள்பதிவாக.

-------------------------------------------------------------

"சார்...டைட்டில்ல கதைன்னு உங்க பேரைப் பார்த்ததும் முகில் எதுவும் பிரச்சனை பண்ணிட மாட்டானே..."

அவன் சொன்னா யாருய்யா நம்புவாங்க?...நாம ரெண்டு பேரும் இருபது வருஷமா சினிமாத்துறையிலதான் இருக்கோம். இதுவரைக்கும் ஒரு படத்துலயாவது நான் சொந்தமா எழுதின கதை இருந்ததா...இல்லைன்னு உனக்கும் எனக்கும்தான் தெரியும்.

ஆனா இதை நானே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அதான்யா நேரம்னுங்குறது.  இதுக்காகத்தான் அவனை உதவி இயக்குனரா வெச்சுகிட்டே சினிமாவுக்கு இப்படி இருக்கணும்...அப்படி மாத்தணும்னு சொல்லியே கதையை வேற வடிவத்துக்கு மாத்திட்டேன். விடுய்யா பார்த்துக்கலாம்."என்ற அந்த பிரபல இயக்குனர் மேலும் ஒரு கோப்பை உற்சாக பானத்தை உள்ளே ஊற்றினார்.

அப்போது கதையைத் தந்த அப்பாவி உதவி இயக்குனரான இளைஞன் வந்தான். அவன் கையில் இரண்டு கடிதங்கள்.

"வாடா...அடுத்த வாரம் நம்ம படம் வெளியாகப் போகுது. நீயும் இப்ப ஒரு கிளாஸ் ஊத்திக் கொண்டாடு..."என்று அழைத்தார் பிரபல இயக்குனர்.

"அதெல்லாம் வேண்டாம் சார். என்னுடைய கதையை நீங்க திரைக்கதையா மாற்றினதும் அது நான் எழுதி தமிழா மாத இதழ்லல வெளிவந்த நாவலாவே மாறிடுச்சு. அதான் அந்த பத்திரிகை நிர்வாகத்துகிட்ட இந்தக் கதையைப் படமாக்க அனுமதிக்கடிதம் வாங்கிட்டு வந்துட்டேன்.

இதுல என்னோட அனுமதிக்கடிதத்தையும் சேர்த்து வெச்சிருக்கேன்.

டைட்டில்ல கதைன்னு என் பேரைப் போடும்போது தமிழா மாத இதழ்லல பிரசுரமானதுன்னும் ஒரு வரி சேர்த்துடுங்க..."என்று அந்த உதவி இயக்குனர் சொன்னதும் பிரபல இயக்குனர் மயங்கிச்    சரிந்தார்.
**************
ஒரு சந்தேகம்.

அச்சு ஊடங்கள்ல பல காரணம் காட்டி நிர்வாகத்தை சரிகட்டி பெரிய புள்ளிகள் தங்களுக்கு பாதகமான செய்தி வெளிவர்றதை தடுத்து இருட்டடிப்பு செய்துடுறாங்க. ஆனா இணையத்துல எழுதுற பொதுமக்கள் வாயை அப்படி மூட முடியாதுன்னுதான் எதை எழுதுனாலும் கைது பண்ற நடவடிக்கையில இறங்குறாங்களோ?

1 கருத்து:

  1. என்னுடைய கதையை நீங்க திரைக்கதையா மாற்றினதும் அது நான் எழுதி தமிழா மாத இதழ்லல வெளிவந்த நாவலாவே மாறிடுச்சு. //

    திருப்பம் தந்த வரிகள் !


    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு