Search This Blog

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூலை, 2016

ரகசியம் ஆவணப்படத்தில் இருப்பது - மந்திரமா - தந்திரமா



The
Secret என்ற ஆங்கில நூல் ரகசியம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது  மின்னூலாகவும், ஆவணப்படம் (தமிழிலும் கூட) போன்றவை
சமீப காலமாக இணையத்தில் அதிகமாக பகிரப்படுகின்றன. அந்த ஆவணப்படத்தை நான் முழுமையாக
பார்த்தேன். உலகம் முழுவதும் ஈர்ப்பு விதியில்தான் இயங்குகின்றது என்ற கோணத்தில் வெற்றி
ரகசியம் அலசப்பட்டிருந்தது.




அதாவது
நல்லது, கெட்டது என்பதெல்லாம் ஈர்ப்பு விதிக்கு தெரியாது. நீங்க என்ன நினைக்கிறீர்களோ
அதைத்தான் அந்த ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்கிறார்கள்.





நம்
முன்னோர்கள் “எண்ணம் போல் வாழ்வு” என்று ஒற்றை வரியில் சொல்லியிருப்பதை நாம் அலசி ஆராய்ந்து
பின்பற்றாமல் போய்விட்டோமோ என்று எண்ண வைத்தது இந்த வீடியோ.


சிலருக்கு
(ஏன் எனக்கு கூட) எந்த விசயம் நடக்கக்கூடாது, அதை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ
அதையே நாம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது இந்த ஈர்ப்பு விதியினால்தான் இருக்குமோ?





இந்த
வீடியோவைப் பார்த்ததும் என் மனதில் வேறு சில எண்ணங்களும் எழுந்தன.





பிரபல
ஆன்மிகவாதியைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நாசர் நடித்த தமிழ்ப்படம் சகுனி. அந்தப்
படத்தின் ஒரு காட்சியில்,





“இவ்வளவு
பணம் ஏது சாமி” என்று கார்த்தி கேட்பார்.





“என்னிடம்
வந்த மக்களின் கஷ்டத்தை தீர்த்து வைத்தோம். அவர்கள் காணிக்கையாக பணத்தை கொண்டு வந்து
கொடுத்தார்கள்.”  – இது நாசரின் பதில்.





“மனசாட்சியை
தொட்டு சொல்லுங்க சாமி... நாமளா தீர்த்து வெச்சோம்...? கஷ்டத்தோட வந்தவனுக்கு ஆறுதல்
சொன்னோம். ஆறு மாசத்துல அந்த கஷ்டம் அவனுக்கு தன்னால சரியாயிருக்கும். அவனவன் வந்து
காசை கொட்டிட்டு போயிட்டான்... ” என்று கார்த்தி சொல்லவும், நாசர் அதை ஆமோதித்து அசடு
வழிவார்.





கடவுள்
நம்பிக்கையோ, தன்னம்பிக்கையோ... பிரார்த்தனை, பரிகாரம், தியானம் அல்லது எதுவோ ஒன்றை
செய்து முடித்தவுடன் நம் மனதில், இதை செய்து விட்டோம். அதனால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும்
என்று நம்பத்தொடங்குகிறோம். அந்த அதிர்வலைகள்தான் நம்பிக்கையின் ஆழத்தைப் பொறுத்து
நம் வேண்டுதலை நிறைவேற்றுகிறதோ என்ற கருத்து என் மனதில் தோன்றுகிறது.





சென்னையில்
உள்ள பிரபல ஜோதிடர் அவர். சினிமாத்துறை பிரபலங்கள் உட்பட பல துறை பிரபலங்கள் அவரது
வாடிக்கையாளர்கள். கேரளா உள்ளிட்ட இடங்களில் பலரையும் வைத்து பரிகாரம் செய்து தருவதால்
கட்டணமும் மிக அதிகம். அவரிடமும் பட்ஜெட் பேக் இருக்கிறது என்று நண்பர் ஒருவர் சென்றார்.
அந்த நண்பருக்கு மேற்படி ஜோதிடர் சில ஆயிரங்கள் கட்டணமாக பெற்றுக் கொண்டு நவரத்தினக்கற்கள்
பதித்த எந்திரம் ஒன்றை பிரேம் செய்து கொடுத்தார். அந்த கற்கள் இருக்கும் இடத்தில் விரலைக்
கொண்டு சென்றால் காந்தம் போல் இழுத்தது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த
நண்பரிடம் இந்த எந்திரத்தை கொடுத்த ஜோதிடர் சொன்ன பிரார்த்தனை வழிமுறைகள் என்ன தெரியுமா?





பூஜை
அறையில் வைத்து அந்த எந்திரத்திற்கு தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாம்பிராணி
போட்டு ஏதாவது சின்ன அளவில் நைவேத்யம் செய்து, குறைந்தபட்சம் அரை மணி நேரம் நீங்கள்
எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதை அடைந்து விட்டதாகவே கற்பனை செய்து
வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த நண்பர் ஆற்றில் ஒரு கால்,
சேற்றில் ஒரு கால் கதையாக முழு நம்பிக்கையோடு இதை தொடரவில்லை என்று நினைக்கிறேன். இந்த
விசயத்தை அவர் சொன்னபோது எனக்கும் சாதாரணமாக தோன்றியது. ஆனால் “ரகசியம்” வீடியோவை பார்த்த
பிறகு இந்த ஈர்ப்பு விதியைத்தான் அவர் பூஜை பெயரால் செய்ய வைத்து சக்சஸ் கொடுக்கிறாரோ
என்ற எண்ணம் என் மனதில் எழுகிறது.







“ரகசியம்”
பற்றி நிறைய கேள்விகள், எண்ணங்கள் என் மனதில் எழுகின்றன. அவ்வப்போது அவற்றை பதிவிடுகிறேன்.


புதன், 12 ஜூன், 2013

12-06-2013 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதினம்

இது குறித்து நான் எழுதிய கதைக்கு 2500 ரூபாய் பரிசு கிடைத்தது. ராணி வார இதழும், தமிழக அரசின் குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் 2006 ஆம் ஆண்டு மே மாத தலைப்பு - குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் பெற்றோர் பங்கு.

அதற்கு நான் எழுதி அனுப்பிய சிறுகதை 2006 மே மாதத்துக்குரியதாக தேர்வு பெற்று செப்டம்பர் மாதம் பிரசுரமானது. இதை எழுதிய நானும் குழந்தை தொழிலாளியாக இருந்தவனே. ஆனால் யார் செய்த புண்ணியமோ படிப்பு நடுவில் ஒரு முறை தடைபட்டாலும் கல்லூரி வரை சென்று படிக்க முடிந்தது. ஆனால் பள்ளிப்பக்கமே செல்ல முடியாமல் இன்றும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாத அளவில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முக்கிய முதல் காரணம், பெற்றோர்தான். அடுத்ததாக கொடுத்தவனே பறித்துக்கொண்டானே என்ற வார்த்தைகளுக்கேற்ப நடந்து கொண்டு ................ கடை நடத்தி .................. பானம் மூலம் யார் ஏழைகளின் பணத்தை பிடுங்கிக்கொள்கிறார்கள் என்று பப்ளிக்காக சொன்னால் ஆட்டோ வரலாம். அல்லது வழக்கு பாயலாம்.

பெற்றோரை முக்கிய காரணம் என்று நான் சொல்லக்காரணம், வருமானம் இல்லை என்ற வாதம் ஒரு வகையில் சரி என்றாலும், இன்னொரு பக்கம் ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை நான் பார்த்த வரை மிக அதிகமாகவே இருக்கிறது. கட்டிடத்தொழிலாளி, வெல்டர், தச்சுவேலை, மின்சாரப்பணியாளர், பிளம்பர் என்று பல வேலைகளிலும் இருக்கும் ஆட்களில் வேலைத்திறன் மிக்கவர் மிக குறைவே. மற்றபடி இந்த வேலை பார்ப்பவர்கள் மனதில் இந்த தொழில் மீது உண்மையான ஆர்வத்துடன் செயல்பட்டால் சாப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு சற்றும் குறைவில்லாமல் சம்பாதிக்கலாம்.

ஏற்கனவே இதை விட பலமடங்கு சம்பாதிப்பவர்களும் உரிய வழிகாட்டுதல், ஆலோசனை இல்லாததால் சேமிக்க வாய்ப்பு இல்லாமலும், முறையற்ற செலவுகள் செய்பவர்களுமாக இருக்கின்றனர். கல்வியின்மைதான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியும். கல்வி என்றால் பாடப்புத்தகத்தை மட்டும் சொல்லவில்லை. அது ஒரு பகுதிதான். மற்ற நூல்கள் வாசிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளிகளில் நீதிக்கதைகள் வகுப்பும் விளையாட்டு வகுப்பும் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.

விளைவு - சுய நலத்தின் மறு வடிவமாக இன்றைய தலைமுறை மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தவங்களுக்காக ஐயோ பாவம் என்று நான் கவலைப்பட்டால் அப்படியா என்று கேட்டுவிட்டு இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுத்தும் ஆட்களைத்தான் நான் அதிகம் சந்திக்கிறேன். அதனால் நானும் இப்போது என்னை கண்ணாடி போல் மாற்றிக்கொள்ள வேண்டியதாகி விட்டது. உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா அது தக்காளி சட்னியா என்று வடிவேலு ஒரு படத்தில் கேட்பது போல் சுய நல குணம் கொண்டவர்களைத்தான் நான் அதிகம் சந்திப்பதால் பல சமயங்களில் விரக்தியாக உணர்கிறேன். ஆனால் இப்போது ஒரு தெளிவு வந்துவிட்டது. கடமையை செய், பலனை எதிர்பாராதே என்று செயல்படுவது எந்த இடத்தில் சாத்தியமோ, நமக்கு வருமானம் வராவிட்டாலும் நஷ்டம் ஏற்படுத்தாதோ...அந்த இடத்தில் மட்டுமே அப்படி நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன். மற்றபடி தன் காசு என்று கறாராக இருக்கும் நபர்களிடம் என் காசு என்று நானும் எனக்கு வரவேண்டிய பண விஷயத்தில் கவனமாக வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

சில கஷ்டமர்கள் என்னிடம் வந்து செல்லும்போது "கடைசியில் என்னையும் இப்படி ஆக்கிட்டாங்களே" என்று சினிமாவசனம் அடிக்கடி எப்போதாவது என் மைண்ட் வாய்சில் கேட்கும்.

-----------------------------------

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), எந்த வயதில் வேலைபார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், லேசான வேலை பார்க்கலாம் (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்).

- இந்த தகவல் ஒரு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் நிஜத்தில் இப்படியா நடக்கிறது.

-----------------------------------

சின்ன புள்ளைங்க விஷயத்தை விட்டுடுவோம். நான் கல்லூரி முடித்து 8 வருஷத்துல பல இடத்துல வேலை பார்த்துட்டேன். அவனுங்க குடுக்குறதா சொன்ன காசை விட அதிகமாவே கூவிருக்கேன்.(ஐ மீன் உழைத்திருக்கிறேன்) இதை வெளி பார்ட்டிகிட்ட அந்த முதலாளி (அ) மேனேஜரே சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு பேசுன சம்பளம் ஒரு இடத்துலேயும் ஒழுங்கா வந்தது இல்லை.(தனியா ஒயரிங் வேலை பார்க்க போனப்பவும் இப்படித்தான் நடந்தது.)

ஆனால் இப்போ நான் (அ) நண்பர்கள் எங்களுக்கு ஆக வேண்டியதுக்கு நியாயமான அளவு சம்பளத்தை விட அதிகமா கொடுக்க தயாரா இருந்தும் ஆளுங்க 500 ரூபா வாங்குனா 200 ரூபாய்க்குதான் வேலை செய்யுறாங்க. ஆனா என் ராசிக்கு 500 ரூபாய்க்கு வேலை செய்தா மொத்தமே 50 ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் 5 இண்டால்மெண்ட்டுல.

அது சரி, வேலை பார்க்காம சம்பளம் வாங்குறதுக்கும், தனக்காக அடுத்தவன் உழைச்சு சம்பாதிச்சு தர்றதுக்கும் ஜாதகத்துல ஒரு அமைப்பு வேணும் போலிருக்கு.

---------------------------------
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 1
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 2
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 3
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 4

வியாழன், 6 ஜூன், 2013

எப்படி சிறுகதை எழுதுவது?



ஒரு பத்திரிகையில சிறுகதைப்போட்டி அறிவிச்சதும் எழுத ஆசைப்படவேண்டியது. கடைசி தேதிக்கு இரண்டு நாள் முன்பு வரை அப்படி எழுதலாம். இப்படி மிரட்டலாம்னு கற்பனையிலேயே காலம் தள்ள வேண்டியது. அப்புறம் முதல்நாள் காலையில 4 மணிக்கு எழுந்து உட்கார்ந்து 6 மணிக்குள்ள அவசர அவசரமா கதையை எழுதி (இப்போ சில வருசமா கம்ப்யூட்டர் டைப்பிங்) அனுப்பிட்டு அந்த கதையை பரிசுக்கு தேர்ந்தெடுக்கலையேன்னு புலம்ப வேண்டியது. கடந்த பல வருசமா எனக்கு இதே பிழைப்பா போச்சு.









Image Credit : Indiaglitz



அப்படி இருந்தும் சில கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள் பிரசுரம் ஆனதோட கணிசமான தொகையையும் வாங்கித்தந்திருக்கு.



சிறுகதை எழுதுவது எப்படின்னு சுஜாதா எழுதுன சிறுகதைத்தொகுதியை ஆர்வத்தோட எடுத்து படித்துப்பார்த்து அசடு வழிஞ்சவங்கள்ல நானும் ஒருத்தன். முதல்ல எழுதுறதுக்கு என்ன முக்கிய தகுதி தெரியுமா. நிறைய படிக்கணும். அப்புறமா எழுத முயற்சிக்கலாம். சிறுகதை, நாவல் எழுதணும்னா கற்பனை அதிகமா இருக்கணும். பக்கத்து வீட்டு கிருஷ்ணசாமியைப் பத்தி எழுதுனா கூட அவரே இது நான் இல்லைன்னு சொல்ற மாதிரி மாத்தி எழுத கத்துக்கணும்.



இப்போ வலைப்பூ தொடங்கி எழுதுறவங்களுக்கு பத்திரிகை ஆசிரியர், உதவி ஆசிரியர், பக்கம், கருத்து இது மாதிரி எந்த கவலையும் இல்லை. ஆனா அச்சு ஊடகத்துல கதை பிரசுரம் ஆகணும்னா பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யணும். (இப்போ அனேகமா பல வெகுஜன இதழ்கள் புதியவர்களின் சிறுகதையை பிரசுரிப்பதே இல்லை) அப்படி சில யுக்திகளை நான் கத்துக்க காரணமா அமைந்தது ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகம்தான். இதன் முதல் பதிப்பு சென்னை தியாகராயநகரில் உள்ள மதிநிலையத்தின் வெளியீடாக வந்தது. இந்த புத்தகத்தை பொறுமையாக படித்துப்பார்த்தால் போதும். சாதாரணமாக எழுதுபவர்கள் கண்டிப்பாக தங்களை மேம்படுத்திக்கொள்ள இயலும். ஆனால் இப்போது பிரபல இதழ்களில் உங்கள் கதைகள் உடனடியாக பிரசுரமாக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வதற்கு இல்லை.



2002ஆம் ஆண்டு நான் இந்த புத்தகத்தை வாங்கினேன் என்று நினைக்கிறேன். திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த புத்தகத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.



அந்த புத்தகத்தில் உள்ள யுக்திகளைப்படித்து புரிந்து கொண்டு என் கற்பனைக்கு வடிவம் தந்தபிறகுதான் வரிசையா சில பிரபலமில்லாத இதழ்களில் பிரசுரமாயின. (இவற்றிற்கு சன்மானம் எல்லாம் கிடையாது) ஆனால் அப்படி கதைகள் பிரசுரமாக ஆரம்பித்த நாலு மாதத்திற்குள் நான் எழுதி அனுப்பிய சிறுகதை பிரபல நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. இது தவிர மேலும் பல இதழ்களில் நான் எழுதிய சில சிறுகதைகளும், கோயில்கள் பற்றிய தகவல் கட்டுரைகளும் பிரசுரமாயிருக்கின்றன.



என்னுடைய அனுபவத்தில் ஆனந்தவிகடன், தினமணி, தினமலர் (சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர் பதிப்புகள்) மட்டுமே சன்மானத் தொகையினை சரியாக அனுப்பி வைக்கின்றன. சில பிரபல இதழ்களில் இருந்து எனக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் சன்மானங்கள் வராமலேயே போயிருக்கின்றன. அங்கே பணிபுரிபவர்கள் எடுக்கிறார்களா, தபால் துறையில் தவறுகிறதா என்று எந்த பதிலும் கிடைப்பதில்லை.



2014 பிப்ரவரி மாதம் மிகப்பிரபல நாளிதழின் ஆன்மிக இணைப்பில் நான் எழுதிய கோவில் பற்றிய தகவல் கட்டுரை பிரசுரமானது. அதை கம்போஸ் செய்யும்போது மூலவரின் பெயர் குறித்த சந்தேகம் கேட்க அந்த இணைப்பிதழின் ஆசிரியர் எனக்கு போன் செய்தார். சந்தேகங்களை கேட்டுவிட்டு, நீங்கள் எழுதும் நடை நன்றாக இருக்கிறதே. ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதக்கூடாது என்று கேட்டார். அப்போது பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் நான்கு புகைப்படங்களுடன் இரண்டு பக்கங்கள் அதிகமான தகவல்களுடன் பிரசுரமான அந்த கட்டுரைக்கு எனக்கு தொகை அனுப்பப்படவில்லை. நானும் மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும்  கேட்டுவிட்டேன். பிறகு சொற்பத் தொகை மணி ஆர்டரில் வந்தது.



கடமையை செய், பலனை எதிர்பாராதே டைப் ஆளுங்களுக்குதான் இது சரிப்பட்டு வரும். அதனால் இப்போது நான் பத்திரிகைகளுக்கு எழுத்துக்கள் அனுப்புவதில் இருந்து சற்று இடைவெளியை கடைப்பிடிக்கிறேன்.



எனக்கு பரிசு வாங்கித்தந்த கதைகள் என்ன கருப்பொருளில் இருந்தாலும் சரி, தொடக்கத்தில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பாராவுக்குள் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லி அதை வைத்து கதையை நகர்த்துவேன். இறுதியில்தான் அந்த சஸ்பென்ஸ் உடையும். எழுதிப்பழகுபவர்களுக்கு இது மாதிரியான கதைகள் அனுப்ப ஓரளவு செளகர்யமான இதழ்கள் என்றால் பாக்யா, ராணி, தினத்தந்தி குடும்பமலர், ஞாயிறுமலர் ஆகியவைதான்.



ஒருபக்க கதைகள் அனுப்ப குங்குமம் இதழுக்கு முயற்சிக்கலாம். குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் அதில் பணிபுரியும் ஆசிரியர் குழு எழுதுறதா இருக்கலாம் என்று நண்பன் ஒரு முறை சந்தேகத்தை கிளப்பினான். எனக்கும் அந்த சந்தேகம் இருப்பதால் அவர்களுக்கு எந்த கதையும் நான் அனுப்புவதில்லை. நீங்கள் முயற்சித்துப்பார்க்கலாம். (என் சந்தேகம் தவறாகக்கூட இருக்கலாம் இல்லையா)



சிறு வயதில் இருந்தே எனக்கு கதைப்புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். பாடப்புத்தகத்தை படிக்காமல் இது என்ன வெட்டி வேலை என்று என் அம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அப்படி நான் கிடைப்பதை எல்லாம் வைத்து படித்ததால்தான் இப்போது தமிழில் தவறின்றி டைப் செய்ய முடிகிறது. சொந்தமாக டிடிபி சென்டர் வைத்து நடத்த முடிகிறது. அந்த வகையில் வாசிப்பு வழக்கம்தான் எனக்கு வாழ்வாதாரத்தை தந்துள்ளது என்று சொல்லலாம்.



நிறைய படிங்க. அப்புறமா எழுதுங்க. இது நான் சொன்னது இல்லை. பிரபல எழுத்தாளர்கள் சொன்னது.



இப்படி நானும் அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பதால்தான் பல நேரங்களில் நான்கு வரியில் இருக்கும் ஒரு தகவலைக்கூட செய்தியாக்கி கடந்த இரண்டு வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் ஒரு நாளிதழுக்கு அனுப்பி வருகிறேன்.



என்னதான் ஒருவர் உத்திகளை சொல்லிக்கொடுத்தாலும் எழுத வேண்டிய விஷயங்கள் ஒருவரது மனதில் தோன்றி டெவலப் ஆக வேண்டும். அதை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லித்தரமுடியாது. உங்களுக்காக நான் சாப்பிட முடியாது. உங்களுக்காக நான் படித்து தேர்வெழுத முடியாது (எழுதினால் மாட்டிக்கொள்வோம்) என்பது போல.

---------------------------------------------

சிறுகதை எழுதுவது குறித்து இணையத்தில் தேடியபோது கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகளை கொடுத்திருக்கிறேன்.

---------------------------------------

1. இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. சுட்டி : http://solvanam.com/?p=15167

------------------------------------------






சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுட்டி : http://www.luckylookonline.com/2009/08/blog-post_17.html


-----------------------------------------


பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு. சுட்டி :http://etamil.blogspot.in/2008/01/blog-post.html


------------------------------------


எப்படி சிறுகதை எழுதுவது?

ஒரு பத்திரிகையில சிறுகதைப்போட்டி அறிவிச்சதும் எழுத ஆசைப்படவேண்டியது. கடைசி தேதிக்கு இரண்டு நாள் முன்பு வரை அப்படி எழுதலாம். இப்படி மிரட்டலாம்னு கற்பனையிலேயே காலம் தள்ள வேண்டியது. அப்புறம் முதல்நாள் காலையில 4 மணிக்கு எழுந்து உட்கார்ந்து 6 மணிக்குள்ள அவசர அவசரமா கதையை எழுதி (இப்போ நாலு வருசமா கம்ப்யூட்டர் டைப்பிங்) அனுப்பிட்டு அந்த கதையை பரிசுக்கு தேர்ந்தெடுக்கலையேன்னு புலம்ப வேண்டியது. கடந்த 10 வருசமா எனக்கு இதே பிழைப்பா போச்சு.

Image Credit : Indiaglitz

அப்படி இருந்தும் சில கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள் பிரசுரம் ஆனதோட கணிசமான தொகையையும் வாங்கித்தந்திருக்கு.

சிறுகதை எழுதுவது எப்படின்னு சுஜாதா எழுதுன சிறுகதைத்தொகுதியை ஆர்வத்தோட எடுத்து படித்துப்பார்த்து அசடு வழிஞ்சவங்கள்ல நானும் ஒருத்தன். முதல்ல எழுதுறதுக்கு என்ன முக்கிய தகுதி தெரியுமா. நிறைய படிக்கணும். அப்புறமா எழுத முயற்சிக்கலாம். சிறுகதை, நாவல் எழுதணும்னா கற்பனை அதிகமா இருக்கணும். பக்கத்து வீட்டு கிருஷ்ணசாமியைப் பத்தி எழுதுனா கூட அவரே இது நான் இல்லைன்னு சொல்ற மாதிரி மாத்தி எழுத கத்துக்கணும்.

இப்போ வலைப்பூ தொடங்கி எழுதுறவங்களுக்கு பத்திரிகை ஆசிரியர், உதவி ஆசிரியர், பக்கம், கருத்து இது மாதிரி எந்த கவலையும் இல்லை. ஆனா அச்சு ஊடகத்துல கதை பிரசுரம் ஆகணும்னா பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யணும். (இப்போ அனேகமா பல வெகுஜன இதழ்கள் புதியவர்களின் சிறுகதையை பிரசுரிப்பதே இல்லை) அப்படி சில யுக்திகளை நான் கத்துக்க காரணமா அமைந்தது ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகம்தான். இது சென்னை தியாகராயநகரில் உள்ள மதிநிலையத்தின் வெளியீடாக வந்தது. இந்த புத்தகத்தை பொறுமையாக படித்துப்பார்த்தால் போதும். சாதாரணமாக எழுதுபவர்கள் கண்டிப்பாக தங்களை மேம்படுத்திக்கொள்ள இயலும். ஆனால் இப்போது பிரபல இதழ்களில் உங்கள் கதைகள் உடனடியாக பிரசுரமாக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வதற்கு இல்லை.

2002ஆம் ஆண்டு நான் இந்த புத்தகத்தை வாங்கினேன் என்று நினைக்கிறேன். திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த புத்தகத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.

அந்த புத்தகத்தில் உள்ள யுக்திகளைப்படித்து புரிந்து கொண்டு என் கற்பனைக்கு வடிவம் தந்தபிறகுதான் வரிசையா சில பிரபலமில்லாத இதழ்களில் பிரசுரமாயின. (இவற்றிற்கு சன்மானம் எல்லாம் கிடையாது) ஆனால் அப்படி கதைகள் பிரசுரமாக ஆரம்பித்த நாலு மாதத்திற்குள் நான் எழுதி அனுப்பிய சிறுகதை பிரபல நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. இது தவிர மேலும் பல இதழ்களில் நான் எழுதிய சில சிறுகதைகளும், கோயில்கள் பற்றிய தகவல் கட்டுரைகளும் பிரசுரமாயிருக்கின்றன.

என்னுடைய அனுபவத்தில் ஆனந்தவிகடன், தினமணி, தினமலர் (சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர்) பதிப்புகள்) மட்டுமே சன்மானத்தொகையினை சரியாக அனுப்பி வைக்கின்றன. சில பிரபல இதழ்களில் இருந்து எனக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் சன்மானங்கள் வராமலேயே போயிருக்கின்றன. அங்கே பணிபுரிபவர்கள் எடுக்கிறார்களா, தபால் துறையில் தவறுகிறதா என்று எந்த பதிலும் கிடைப்பதில்லை.

பிப்ரவரி மாதம் மிகப்பிரபல நாளிதழின் ஆன்மிக இணைப்பில் நான் எழுதிய கோவில் பற்றிய தகவல் கட்டுரை பிரசுரமானது. அதை கம்போஸ் செய்யும்போது மூலவரின் பெயர் குறித்த சந்தேகம் கேட்க அந்த இணைப்பிதழின் ஆசிரியர் எனக்கு போன் செய்தார். சந்தேகங்களை கேட்டுவிட்டு, நீங்கள் எழுதும் நடை நன்றாக இருக்கிறதே. ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதக்கூடாது என்று கேட்டார். அப்போது பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் நான்கு புகைப்படங்களுடன் இரண்டு பக்கங்கள் அதிகமான தகவல்களுடன் பிரசுரமான அந்த கட்டுரைக்கு எனக்கு தொகை அனுப்பப்படவில்லை. நானும் மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும்  கேட்டுவிட்டேன். ஒன்றும் வேலைக்காகவில்லை.

கடமையை செய், பலனை எதிர்பாராதே டைப் ஆளுங்களுக்குதான் இது சரிப்பட்டு வரும். அதனால் இப்போது நான் பத்திரிகைகளுக்கு எழுத்துக்கள் அனுப்புவதில் இருந்து சற்று இடைவெளியை கடைப்பிடிக்கிறேன்.

எனக்கு பரிசு வாங்கித்தந்த கதைகள் என்ன கருப்பொருளில் இருந்தாலும் சரி, தொடக்கத்தில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பாராவுக்குள் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லி அதை வைத்து கதையை நகர்த்துவேன். இறுதியில்தான் அந்த சஸ்பென்ஸ் உடையும். எழுதிப்பழகுபவர்களுக்கு இது மாதிரியான கதைகள் அனுப்ப ஓரளவு செளகர்யமான இதழ்கள் என்றால் பாக்யா, ராணி, தினத்தந்தி குடும்பமலர், ஞாயிறுமலர் ஆகியவைதான்.

ஒருபக்க கதைகள் அனுப்ப குங்குமம் இதழுக்கு முயற்சிக்கலாம். குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் அதில் பணிபுரியும் ஆசிரியர் குழு எழுதுறதா இருக்கலாம் என்று நண்பன் ஒரு முறை சந்தேகத்தை கிளப்பினான். எனக்கும் அந்த சந்தேகம் இருப்பதால் அவர்களுக்கு எந்த கதையும் நான் அனுப்புவதில்லை. நீங்கள் முயற்சித்துப்பார்க்கலாம். (என் சந்தேகம் தவறாகக்கூட இருக்கலாம் இல்லையா)

சிறு வயதில் இருந்தே எனக்கு கதைப்புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். பாடப்புத்தகத்தை படிக்காமல் இது என்ன வெட்டி வேலை என்று என் அம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அப்படி நான் கிடைப்பதை எல்லாம் வைத்து படித்ததால்தான் இப்போது தமிழில் தவறின்றி டைப் செய்ய முடிகிறது. சொந்தமாக டிடிபி சென்டர் வைத்து நடத்த முடிகிறது. அந்த வகையில் வாசிப்பு வழக்கம்தான் எனக்கு வாழ்வாதாரத்தை தந்துள்ளது என்று சொல்லலாம்.

வரும் 15ஆம் தேதி கல்கி வார இதழின் சிறுகதைப்போட்டிக்கு கதை அனுப்ப கடைசி தேதி.

வரும் 30ஆம் தேதி தினமலர்-வாரமலர் இதழுக்கு கதைகள் அனுப்ப கடைசி தேதியாகும்.

இரண்டு போட்டிகளுக்குமே அந்த இதழ்களில் வெளிவந்த கூப்பனை கத்தரித்து இணைத்து அனுப்ப வேண்டியிருக்கும்.

நிறைய படிங்க. அப்புறமா எழுதுங்க. இது நான் சொன்னது இல்லை. பிரபல எழுத்தாளர்கள் சொன்னது.

இப்படி நானும் அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பதால்தான் பல நேரங்களில் நான்கு வரியில் இருக்கும் ஒரு தகவலைக்கூட செய்தியாக்கி கடந்த இரண்டு வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் ஒரு நாளிதழுக்கு அனுப்பி வருகிறேன்.

என்னதான் ஒருவர் உத்திகளை சொல்லிக்கொடுத்தாலும் எழுத வேண்டிய விஷயங்கள் ஒருவரது மனதில் தோன்றி டெவலப் ஆக வேண்டும். அதை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லித்தரமுடியாது. உங்களுக்காக நான் சாப்பிட முடியாது. உங்களுக்காக நான் படித்து தேர்வெழுத முடியாது (எழுதினால் மாட்டிக்கொள்வோம்) என்பது போல.
---------------------------------------------
சிறுகதை எழுதுவது குறித்து இணையத்தில் தேடியபோது கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகளை கொடுத்திருக்கிறேன்.
---------------------------------------
1. இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. சுட்டி : http://solvanam.com/?p=15167
------------------------------------------

சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுட்டி : http://www.luckylookonline.com/2009/08/blog-post_17.html
-----------------------------------------
பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு. சுட்டி :http://etamil.blogspot.in/2008/01/blog-post.html
------------------------------------

வெள்ளி, 24 மே, 2013

எல்.இ.டி மற்றும் சி.எப்.எல் விளக்குகள் கேடு விளைவிக்குமா?









மின்சிக்கனம், வெப்பம் குறைவு போன்ற பல்வேறு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று மார்க்கெட்டுக்குள் நுழைந்த எல்.இ.டி விளக்குகள் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. இப்படி எல்லாம் நடக்காது என்று யாராலும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் இயற்கையை மீறிய செயற்கை தன்னுடைய இன்னொரு முகத்தை பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டிக்கொண்டேதான் இருக்கிறது.









Image Credit



பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கும் குழல்விளக்கு (டியூப்லைட்) மற்றும் சி.எப்.எல் பல்ப்புகளில் ஒளியை பிரதிபலிப்பதற்காக உட்புறம் பூசப்பட்டிருக்கும் பாதரசம் இந்த பல்புகள் உடைந்தால் காற்றில் கலந்து ஏதோ ஒரு வேதியல் மாற்றத்திற்குள்ளாகி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.



ஆனால் எல்.இ.டி. விளக்குகள் இப்படி உடையும் வரை காத்திருக்காமல் அவற்றிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளே மனிதர்களின் விழித்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுவது நமக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகத்தான் கருத வேண்டும். 





எல்.இ.டி.பல்ப் குறித்த எச்சரிக்கை கட்டுரை thinkspain என்ற இணையதளத்தில் கட்டுரை வெளிவந்ததாக புதியதலைமுறை 30.05.2013 இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விளக்குகள் ஏற்படுத்தும் பாதிப்பு ஒருபுறமிருக்கட்டும். இது போன்ற வில்லங்கங்களை நம் உடைக்குள் விட்டுவிட்டு குத்துதே, குடையுதேன்னு புலம்புறதுக்கு யார் காரணம்?



கும்பமேளாவில் ஜனத்திரள் நீராட செல்வது போல் ஒரு நானோமீட்டர் அளவுக்கு கூட இடைவெளியில்லாமல் கட்டிடங்களை கட்டும் போக்கு அதிகரித்து வரும்போது இதுபோன்று பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது. காற்றோட்டமான, நல்ல வெளிச்சம் தரும் வகையில் பகல் நேரத்தில் மின்விளக்கு, மின்விசிறி தேவைப்படாத அளவுக்கு வீடுகள் கட்டப்பட்டால்தான் இரவு நேரங்களில் அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மின்விளக்குகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதை விடுத்து சின்னதா வீட்டை கட்டினா புழக்கத்துக்கு என்ன செய்யுறது என்று பன்னாட்டு நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட எம்.டி அறையைப்போல் வீடுகளை கட்டினால் எல்.இ.டி விளக்குகள் மட்டுமல்ல இன்னும் என்னென்ன கேடுவிளைவிக்கும் என்று அந்த இயற்கையால் கூட உறுதியாக சொல்லமுடியாது.


வியாழன், 9 மே, 2013

தேர்வுக்காய்ச்சல்





இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின்றன. இன்று தொலைக்காட்சிகளிலும் நாளை நாளிதழ்களிலும் டெம்ப்ளேட்டாக சில செய்திகள் வெளியாகும். அதாவது வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தனியார் பள்ளிகள் அதிகளவில் சிறப்பிடங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டுள்ளன. ஆனால் சில அரசுப்பள்ளி மாணவர்களும் சாதனை செய்திருக்கிறார்கள் என்ற வகையில் அந்த செய்திகள் இருக்கும்.




இந்த டெம்ப்ளேட் செய்திகள் வரிசையில் தேர்வில் தோல்வி அல்லது தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை, மாணவன் தண்டவாளத்தில் தலையைக்கொடுத்தார் ஆகிய செய்திகளும் இடம்பிடிப்பதுதான் வேதனை.



அடிப்படைக்கல்வியான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்று ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சியடைய வேண்டியது அவசியம்தான். ஆனால் எல்லோராலும் அது முடிகிற காரியமில்லை. ஏனெனில் ஒவ்வொருவருடைய திறனும் ஒவ்வொரு வகையில் மாறுபடும். இந்த தேர்வுகளில் 35 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டாலோ, பொறியியல் படிப்பில் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் மகன் பார்டரில் பாஸ் செய்தாலோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்காக டார்ச்சர் கொடுத்து அவர்கள் பிள்ளைகள் தற்கொலை முடிவு வரை செல்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.



உயிருடன் இருந்தால் உலகையே வெல்லலாம். இப்படி யாருக்கும் பயனில்லாமல் உயிரை மாய்த்துக்கொண்டால் பெற்றோர்கள் கூட சில நாட்களில் அல்லது சில மாதங்களில் உங்களை மறந்துவிடுவார்கள் என்பதை தடுமாறும் மாணவர்கள்/மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.



சில காரணங்களால் நான் 1999ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுத முயற்சித்தேன். தேர்வுக்கட்டணம் கட்டியநபர் ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தியதால் ஹால் டிக்கெட் வரவில்லை. தில்லுமுல்லு செய்து தேர்வெழுத முயற்சிக்க கூடாது என்று தேர்வுத்துறையிடமிருந்து எனக்கு எச்சரிக்கை கடிதம்தான் வந்தது. சுற்றி இருந்தவர்கள் நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை போலிருக்கு. அதனால்தான் இப்படி ஹால்டிக்கெட் வராம போயிடுச்சு. நீ பேசாம இப்போ பார்த்த வேலையையே தொடர்ந்து செய் என்றார்கள்.



அப்படி பேசியவர்கள் மீது கோபம் வந்தாலும் என் மன எண்ணம் வேறு



விதமாக சிந்தித்தது. 1ஆம் வகுப்பில் இருந்து இதுவரை ஒரு முறை கூட பெயிலாகாமல் இருந்தோம். இப்போதும் நான் தேர்வு எழுதினால் பெயில் ஆக வாய்ப்பில்லை. அதனால் தேர்வு எழுதவிடாமல் செய்யவே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று மனதை நானே தேற்றிக்கொண்டேன். அது தவிர அரசுக்கல்லூரிகளில் இப்போதும் டிமாண்டாக இருக்கும் துறையான வணிகவியல் துறையில்தான் சேருவேன். அதிலும் மெரிட்டில் இடம் பிடிப்பேன் என்று எனக்கு நானே இலக்கு வைத்துக்கொண்டு 1999 செப்டம்பரில் தேர்வெழுதினேன்.



இப்போதும் பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் விருப்பத்துக்காகதான் படிக்கிறார்களே தவிர சொந்த விருப்பத்தில் அல்ல. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நமது கல்வி முறை தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது. அதில் சாதிப்போம் என்று யோசிக்க கூட விடாத அளவுக்கு இயந்திரத்தனமாக இருக்கிறது என்ற கருத்து எனக்கு உண்டு. அப்படி எல்லாம் இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று நீங்கள் சொல்லலாம். அது உண்மையாக இருந்தாலும் இது தொடக்க நிலைதான். நமது கல்விமுறை இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.



2007ஆம் ஆண்டு தேர்வுக்காய்ச்சல் என்ற தலைப்பில் சமநிலைச்சமுதாயம் என்ற சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். அந்த படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி படிக்கலாம்.


வெள்ளி, 8 மார்ச், 2013

வில்லங்கமார்ட்டும் சுயதொழிலும்

தொழிலில் நஷ்டம் வருவதற்கான காரணங்கள் ஒன்றிரண்டு எனக்கு புரிந்தது. அது குறித்த சற்றே சிறிய (கொஞ்சம் பெருசுதான்னு நினைக்கிறேன்) பதிவு.

தொழில்ல பெரிய அளவுல சம்பாதிக்கணும்னா கட்டாயமா சில காரியங்கள் செய்தாகணும். அதாவது சில விதிமுறைகளை பூர்த்தி செய்வது. அதை செய்யலைன்னா தொழில்ல சோபிக்க முடியாதான்னு ஒரு கேள்வி வரும். அந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யலைன்னா சில விளைவுகள் ஏற்படும். அந்த விளைவுகளை தாங்குற சக்தி உங்களுக்கு இருந்தா உங்க தொழில்ல நீங்க பெரிய ஆள். இல்லைன்னா, வடிவேல் ஒரு படத்துல அய்யய்யோ...என் கிணத்தை காணோம்னு சொல்ற மாதிரி அடடா போன மாசம் இங்க இந்த கடை (அல்லது அலுவலகம் அல்லது தொழிற்சாலை) வெச்சிருந்தோமே...இப்ப இல்லையேன்னு நமக்கு நாமே புலம்ப வேண்டியதுதான். ஏன்னா தினமும் ஜெயிச்சுகிட்டு இருக்குற வியாபார நிறுவனத்தை பொதுமக்கள் நினைவுல வெச்சுக்கணும்னாலே அஞ்சு நிமிட இடைவெளியில்10 தடவை விளம்பரம் போடவேண்டியிருக்கு. இந்த அழகுல தோல்வி அடைஞ்சு காணாம போன நிறுவனத்தை யார் நினைவில் வெச்சுக்க போறா?

பல ஆண்டுகள் வெற்றிகரமா இயங்கிய நிறுவனம் அல்லது பொருள் காணாமப்போச்சுன்னா சில ஓய்வு பெற்ற ஆசாமிகள் தன் வயது நண்பர்களுடன் பேசும்போது மலரும் நினைவுகளில் அசைபோட வாய்ப்பு உண்டு. இதெல்லாம் நமக்கு எதுக்கு?

2011 ஜனவரி மாதம் வரை நாம எங்கேயாச்சும் வேலைக்குதான் போகப்போறோம். அப்படி இல்லைன்னா பெரிய சினிமா கதாசிரியர் (தமிழ்சினிமாவுல கதாசிரியர் நிலைமை என்னன்னு எல்லாருக்கும் தெரியுமே) இந்த நினைப்புலதான் நம்ம கனவு வண்டி ஓடிகிட்டு இருந்தது. சேமிப்புன்னு ஒரு பைசா கிடையாது. உருப்படியான சம்பளமும் இல்லை. திடீர்னு ஒண்ணு ரெண்டு சம்பவங்கள்ல காயப்பட்டு சொந்த தொழில் தொடங்குறேன்னு பிரபல நாளிதழ்ல பக்க வடிவமைப்பாளர் பணியை உதறிட்டு வெளியில வந்தாச்சு. வீட்டுல ஒரு கம்ப்யூட்டரும் பிரிண்டரும் கம்ப்யூட்டர் டேபிளும் இருந்ததை நம்பி ஜாப்டைப்பிங் தொழில் செய்ய இடம் தேடினேன்.

எந்த தொழில் செய்தாலும் அதற்கான முன்முயற்சிகள் நிறைய எடுக்கணும். உதாரணமா மனு, ஆவணங்கள் டைப்பண்ணி கொடுக்குற ஜாப்டைப்பிங் சென்டர் வைக்கிறதா இருந்தா கம்ப்யூட்டர், பிரிண்டர், மேசை, நாற்காலிகள், யுபிஎஸ் உள்ளிட்ட அடிப்படை முதலீட்டுடன், ஒரு ஆண்டுக்கு உங்க வீட்டுல உங்க தொழில்ல இருந்து ஒரு ரூபா கூட எதிர்பார்க்காம இருக்கணும். அதாவது குடும்பம் செலவுக்கு கூட வேற சோர்ஸ் இருக்கணும். அவங்க உங்களுக்கு பாக்கெட்மணி தர்ற அளவுல இருந்தாலும் நல்லது.

ஒரு வருசத்துக்கு கடை வாடகை, ஆள் சம்பளம், பிரிண்டருக்கான உதிரிபாகங்கள் செலவு, பேப்பர், இங்க் காட்ரிஜ், கம்ப்யூட்டருக்கான ஸ்பேர்பார்ட்ஸ், சில ஆர்டர்களை முடிச்சு கொடுத்துட்டு காசு வாங்குற அளவு பொருளாதார திறன் இதெல்லாம் குறைந்தபட்சம் இல்லாம தொழில் தொடங்காதீங்க.

இந்த விசயங்களை எல்லாம் நிறைய புத்தகங்கள்ல படிச்சாச்சேன்னு நினைக்கலாம். இதை நான் பதிவுல எழுதக்காரணம், மேலே சொன்ன எதையுமே நான் தொழில் தொடங்குறதுக்கு முன்னால பின்பற்றலை. அதோட விளைவை நான் இப்போ அனுபவிக்கிறேன்.

ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், 40 ஆயிரம் ரூபாய் பழைய கடன் (நபர்ஜாமீன் 20 ஆயிரம், நகைக்கடன் 20 ஆயிரம்) இத்துடன் தொழில் தொடங்கும் முன்பு நண்பரிடம் வாங்கிய 20ஆயிரம் ரூபாய் கடன் என்று அறுபதாயிரம் கடனுடன் தொழில் ஆரம்பித்தேன். இதற்கு பதில் 60ஆயிரம் ரூபாய் கையில் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியிருந்தால் முன்னேறியிருக்கலாம். சேமிப்பை பற்றி நினைக்காமல் இருந்த என் தவறுதான் இதற்கு காரணம்.

ஜாப்டைப்பிங் தொழிலை வீட்டில் வைத்து செய்து கொண்டு நான் கஸ்டமரை தேடிச்செல்வதுபோல் அமைத்துக்கொண்டிருந்தால் இவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்திருக்காது. நாம் கஸ்டமரை தேடிச்செல்வதில் வேறு பல சிக்கல்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு நாம் செய்து கொடுக்கும் பணியின் அருமை தெரியாது. நமக்குரிய கட்டணத்தை பெறுவதற்குள் நாக்கு தள்ளிவிட வாய்ப்பு உண்டு.

பணம் இல்லாம எவ்வளவு பேர் முன்னேறியிருக்காங்க என்று ஒரு கேள்வி வரும்.  அதற்கு வேறு தொழில்கள் உள்ளன. உதாரணமாக ஒரு அரிசி வியாபாரியிடம் 2 மூட்டை அரிசி(தலா 25 கிலோ) டோர்டெலிவரி செய்யச்சொன்னால் டூவீலரில் அனுப்பிவைப்பார். 20 மூட்டை கேட்டால் குட்டியானையில் டெலிவரி கிடைக்கும். 2ஆயிரம் மூட்டை கேட்டால் லாரியில் வரும். வியாபாரி அவ்வளவு ஸ்டாக்கையும் தன்னிடமிருந்துதான் தரவேண்டும் என்பதில்லை. ஒரு போன் மூலமே கிலோவுக்கு 1 ரூபாய் லாபம் என்ற அளவில் 50 ஆயிரம், 1 லட்சம் என்று சம்பாதித்து விடமுடியும். அந்த தொழிலிலும் ரிஸ்க் இல்லையா என்ற கேள்வி வரும். எல்லா தொழிலிலும் வில்லங்கம் உண்டு. நான் சில தொழில்களுக்கிடையே உள்ள வேறுபாட்டைக் குறிப்பிடுவதற்காகத்தான் சொன்னேன்.

சிலர் 100 பக்கம் டைப் செய்து விட்டு பணத்தை குறைத்து வாங்கிக்கொள்ளக்கூடாதா என்று கேட்பார்கள். ஆயிரம் நோட்டீஸ் அடிக்கும் இடத்தில் 5ஆயிரம் நோட்டீஸ் கேட்டால் 5 சதவீத லாபம் வேண்டாம் மொத்தமாக 4 சதவீதம் லாபம் போதும் என்று குறைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் டிசைனிங் கட்டணம் வாங்கியிருப்போம். ஒரே டிசைனை மெஷின் பிரிண்ட் செய்து தள்ளப்போகிறது. அவ்வளவுதான்.

ஆனால் 100 வெவ்வேறு டிசைனை செய்ய சொல்லிவிட்டு விலை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம் நம்முடையது. 1 டிசைனுக்கு அரைமணி நேரம் என்றால் 100 டிசைனுக்கு 50 மணி நேரம். 1000 டிசைன் என்றால் 500 மணி நேரம். அதாவது சுமார் 2 மாத உழைப்பு. ஒரு டிசைனுக்கு 50 ரூபாய் என்றால் ஆயிரம் டிசைனுக்கு 50ஆயிரம் ரூபாய். ஆனால் அதற்கு இரண்டு மாதம் தினமும் 10 மணி நேரம் உழைக்க வேண்டும். கணிணி தேய்மானம், மின்கட்டணம், யுபிஎஸ் தேய்மானம், இதுபோக டிசைன் செய்யும் ஆள் சம்பளம், இட வாடகை என்று கணக்கிட்டு பார்த்தால் எவ்வளவு மிஞ்சும் என்று உங்களுக்கே தெரியும்.

வில்லங்க மார்ட் போன்ற நிறுவனங்கள் வாங்கி விற்று கொள்ளை லாபம் அடிக்கத்தான் விரும்புவார்களே தவிர, புதியதாக உருவாக்குவதில் இப்படி முனைப்புடன் அடிமாட்டு ரேட்டில் இறங்க சொல்லுங்களேன் பார்ப்போம்.

இன்னும் சுருக்கமான உதாரணம் என்றால் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு அல்லது தியேட்டரில் படம் திரையிடுவதைக்கூற முடியும். உற்பத்தி அல்லது ஒளிபரப்பு கட்டணம் ஒன்றுதான். அதை ஒருவர் பார்த்தாலும் அல்லது தியேட்டரில்500 பேர் பார்த்தாலும் கூடுதல் செலவு ஏற்படுவதில்லை. (எக்ஸ்ட்ரா பேன் போடுவதை எல்லாம் இதில் சேர்க்காதீர்கள்.) அரைமணிநேரத்துக்குப் பிறகு வருபவன் 1 ரூபாய் கொடுத்தாலும் லாபம்தான்.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் மக்கள் எல்லாவற்றையும் பேரம் பேசி விலைகுறைக்கதான் பார்ப்பார்கள். ஆனால் தொழில் செய்பவர்களில் சிலர் போதிய அனுபவமின்மையால் அவர்களை அறியாமல் நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

இன்னொரு உதாரணம் : ஜெராக்ஸ் மெஷின்.  1980களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகலுக்கு 1 ரூபாய் கட்டணம் என்று அந்த மெஷினை உருவாக்கியவர் சொல்லியிருக்கிறார். அடிப்படை கட்டணத்தில் ஆண்டுக்கு 10 சதவீதம் கட்டண உயர்வு என்று வைத்துக்கொண்டால் கூட 30 ஆண்டுகளில் ஒரு ஜெராக்ஸ் எடுக்க3 ரூபாய் கட்டணம் இருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் பல இடங்களில் தட்டுத்தடுமாறி 2 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள்.

அந்த மெஷின் 50ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்திற்கு கூட இருக்கிறது. நம் புத்திசாலி ஜெராக்ஸ்கடை உரிமையாளர்கள் அதை கணக்கிலேயே வைக்காமல் ஒரு தடவை ரீபிள் செய்ய ஆயிரம் ரூபாய், 3ஆயிரம் காப்பி எடுக்கலாம். 30 பைசா அடக்கம். பேப்பர் 30 பைசா. அப்போ ஒரு ரூபாய்க்கு போட்டா லாபம்தான்னு இருந்தாங்க. ஜெராக்ஸ் மெஷின்ல ஸ்பேர்பார்ட்ஸ் போயிட்டா வர்ற செலவு, இட வாடகை, மெ´னுக்கு போட்ட முதல், ஆள் சம்பளத்தை எல்லாம் எந்த கணக்குல வெக்கிறது? அதே இடத்துல வேற தொழில் ரொம்ப ஓஹோன்னு நடந்தா அவங்களுக்கு ஓ.கே. அண்ணாச்சி மளிகைக்கடையில கறிவேப்பிலையை காய்கறி விலையில ஏத்தி வெக்கிற மாதிரி அட்ஜஸ்ட் ஆகிடும். ஆனால் வெறும் ஜெராக்ஸ் மட்டும்னா?

இப்படி ஒவ்வொரு தொழில்லயும் பல மறைமுக செலவுகள், நஷ்டங்கள் இருக்கும். அதுல சிலவற்றை நேரடியாக வாடிக்கையாளர் தலையைத்தடவி வாங்க முடியும். பலதை வாங்க முடியாது. அப்படி வர்ற நஷ்டம், மற்ற வகையில் வர்ற லாபத்துல 10 முதல்20 சதவீதம் இருந்தா பரவாயில்லை. ஆனா மற்ற இனங்களின் லாபத்தையும் சேர்த்து நம் கையை விட்டு எடுத்துக்கிட்டு போனா என்ன செய்யுறது?

பலர் சொந்தத்தொழில் தோற்க முக்கிய காரணம் அனுபவமின்மை என்று ஒரே வார்த்தையில் பெரியவர்கள் விளக்கம் சொல்லி முடித்துவிடுவார்கள். அனுபவம் என்றால் அது நேரடியாக அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. பக்கத்தில் இருப்பவர்களிடம், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்று எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் நாம் சறுக்காமல் இருக்க பல வழிமுறைகளை கற்றுக்கொள்ள முடியும்.

மளிகை பொருட்கள் என்றால் அதை யாரிடம் வேண்டுமானாலும் விற்க முடியும். அதையும் ஒரே நாளில் விற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஹோட்டல் கதை வேறு. 100 இட்லி சுட்டால் அதை யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால் அதற்கு ஒரு கால வரையறை உண்டு.

நாளிதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றை ஒரு லட்சம் காப்பி பிரிண்ட் செய்தால் கூட யாரிடம் வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். (அவற்றிலும் ரிட்டன் போன்ற பல ரிஸ்க் இருக்கிறது.) ஆனால் ஒருவர் திருமணப்பத்திரிகை ஆர்டர் கொடுத்தால் அதை நீங்கள் அவரிடம் மட்டுமே விற்க முடியும். பத்திரிகை என்று இல்லை. போலீசாருக்கு அல்லது கலெக்டருக்கு ஒரு புகார் மனு டைப் செய்தால் கூட பதினைந்து நிமிட நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதை அந்த நபர் தவிர வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது என்பதை தொழில் செய்பவர் உணர்ந்திருக்க வேண்டும். இதனால்தான் புதிய கஸ்டமர்கள் வந்தால் 4 பக்கம் டைப்செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றினால் குறைந்தது 50 ரூபாயாவது அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போங்கள் என்று கறாராக கூறுவார்கள்.

இன்னும் சிலர் அட்வான்ஸ் வாங்கியிருந்தால்கூட டைப் செய்து வைத்துவிட்டு கொடுத்த நபர் திரும்ப வந்தபிறகுதான் ப்ரூப் எடுத்து கொடுப்பார்கள். எந்த நிலையிலும் எதுவும் வீணாக கூடாது. வீணாகும் ஒவ்வொரு ரூபாயும் தொழிலில் நமக்கு நெருக்கடியை உருவாக்கும் என்பதை உணர வேண்டும். நானே தொழில் ஆரம்பித்த புதிதில் சிலர் கொடுத்த மேட்டரை அர்ப்பணிப்புடன் டைப் செய்து உருவாக்கியிருப்பேன். பல காரணங்களால் அவர்கள் அதை வாங்க வர மாட்டார்கள். அல்லது வேறு சில சூழ்நிலையால் பாதி மேட்டருக்கு மேல் மாற்றி எழுதி எடுக்க நேரிடும்போது அருகில் இருக்கும் வேறு சென்டரில் டைப் செய்து வாங்கிக்கொள்வார்கள். அதே சமயம் அவர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டால் அவருக்கு நம்மை டீலில் விடும் எண்ணம் வராது. அப்படி செய்தாலும் நமக்கு முதலுக்கு மோசம் வராது.

மறுபடியும் நான் சொல்ல நினைக்கும் விசயம் இதுதான்.
அரிசி வியாபாரி வாடிக்கையாளரிடம் முன்பணம் வாங்காமல் கொள்முதல் செய்து இருப்பு வைத்து ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளர் வரவில்லை என்றால் வேறு வாடிக்கையாளர்களுக்கோ, மொத்த வியாபாரிகளுக்கோ கொடுத்துவிட முடியும். பிரிண்டிங் போன்ற விசயங்களில் அது முடியாது.இப்போது கட்டாயம் முன்பணம் அல்லது முழுப்பணம் வாங்க வேண்டிய அல்லது முன்பணம் தேவையில்லாத தொழில் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும்.

இப்படித்தான் ஒவ்வொரு தொழிலுக்கும் பல நெளிவு சுழிவுகள் உண்டு. சில எல்லாவற்றிற்கும் பொருந்திப்போகும். ஒன்றுக்கு பொருத்தமாக இருக்கும் விதி மற்றொன்றுக்கு ஒத்துவராது. இதை எல்லாம் ஓரளவாவது அறிந்து கொண்டு அல்லது அந்த தொழில் நடக்கும் இடத்தில் வேலைபார்த்துவிட்டு நீங்கள் புதிய தொழில் தொடங்கினால் நல்லது. அப்படி இல்லாவிட்டாலும் தொழில் ஆரம்பித்தபிறகு வரக்கூடிய சிக்கல்களை சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் அப்படி ஒரு சின்ன சிக்கலில் மாட்டிக்கொண்டு என் அளவில் பெரிய நஷ்டத்துடன் இரண்டு நாட்கள் கடையை பூட்டிவிட்டு சென்னைக்கு அலையவேண்டிய நிலை ஏற்பட்டது. அதைப்பற்றி தனிப்பதிவு எழுதுகிறேன்.

உங்கள் ஒருத்தரோட உடல் உழைப்பை மட்டும் நம்பிய தொழிலா இருந்தா அதிகமா பண முதலீடு போடக்கூடாது. உங்களுக்காக மெஷினோ மற்றவர்களோ (சம்பளத்துக்கு ஆள் சேர்ப்பு) சம்பாதித்துக்கொடுக்க வாய்ப்பு இருந்தா பண முதலீடு அதிமானா கவலை இல்லை.

ஏன்னா நான் ஒருத்தர் மட்டும் என் தொழிலை கவனிக்கிறதால ஒரு நாளைக்கு உச்ச பட்ச வருமானமே500 ரூபாயை தாண்ட வாய்ப்பில்லை. ஒரே நேரத்துல4 ஆர்டர் வந்தா நான் ஒரு ஆள் செய்ய முடியாது. ஆனா4 பேர் வேலைக்கு இருந்தா அது வேற சூழ் நிலை.

அதே சமயம் சேல்ஸ் தொடர்பான தொழில் என்றால் நீங்கள் 10 அல்லது100 பேரிடம் கூட கொள்முதல் செய்து கொடுக்க முடியும். வருமான உச்சத்துக்கு வரையறை கிடையாது. 10 பேர் ஒரே நேரத்துல டிசைன் செய்த பிளக்ஸ் பிரிண்டிங் மட்டும் செய்து கேட்டா உங்க ஊர்ல இருக்குற எல்லா பிளக்ஸ் பிரிண்டிங் கம்பெனியிலயும் சமமா ஆர்டரை பிரிச்சு கொடுத்து ரெண்டு நாள் இரவு பகலா வேலை செய்து கூட ஆர்டரை முடிக்கலாம். ஆனா எல்லா டிசைனையும் நீங்களே உருவாக்கணும்னா, அங்கே நேரம் பற்றாக்குறை முதல் தடையா இருக்கும்.

தொழிலுக்கு நேரம் ஒரு பிரச்சனையா இல்லாம இருந்தா எதை வேண்டுமானாலும் சமாளிக்கலாம்.

****************************************************************
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சிதிலமடைந்து இடிந்து விழும் அபாயத்துக்கு சென்றுகொண்டிருந்த பிள்ளையார் கோவில் ஒன்றின் திருப்பணி நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அந்த ஆலயத்தின் மடப்பள்ளியை ஒருவர் ஆக்கிரமித்து புகையிலை சிகரெட் உள்ளிட்ட  பொருட்களைக்கூட விற்பனை செய்துகொண்டிருந்தார். அதனால் கோயிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி அந்தப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கூட சில சங்கடங்கள் இருந்தன.

நாங்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறைப்படி மனு கொடுத்து அந்த ஆக்கிரமிப்பை அகற்றி திருப்பணியை நிறைவு செய்ய முயற்சி செய்துகொண்டு இருந்தோம். ஆனால் அந்த ஆக்கிரமிப்பாளர் சட்டத்திற்கு புறம்பான முறையில் சிலரை வைத்து எங்களுக்கு கடுமையான மிரட்டல்களை தந்து தப்பிக்கப்பார்த்தார். கடைசியில் அந்த ஆக்கிரமிப்புக்கு முன்பு கோவில் இருந்த அமைப்பின் புகைப்படம் வலுவான ஆதாரமாகிவிட்டதால் வேறு வழியின்றி நகராட்சி உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர் கடையை இடம் மாற்றிக்கொண்டார்.

போகும் அன்று மின்சார இணைப்புகளை உடைத்து கோவிலுக்கு பயன்படுத்த லாயக்கற்ற வகையில் செய்துவிட்டுதான் அகன்றார். ஆனால் சுமார் மூன்று வருடம் அவருடைய நடவடிக்கைகளை கவனித்து வந்ததால் இப்படி அவர் செய்யாமல் போயிருந்தால்தான் எங்களுக்கு வியப்பு ஏற்பட்டிருக்கும். இப்படித்தான் சுவிட்சு போர்டுகளை உடைத்துவிட்டுப்போவார் என்று எதிர்பார்த்திருந்ததால் மாலை 5.30மணிக்கு நிலவரம் தெரிந்து10 நிமிடத்தில் மாற்று ஏற்பாடு மூலம் டெம்ரவரி சுவிட்சு போர்டை இயங்கச்செய்துவிட்டோம்.

ஆறு லட்ச ரூபாய் என்ற அளவில் மதிப்பீடு செய்து ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி இப்போது8 லட்ச ரூபாயைத்தாண்டி விட்டது

இன்னும் பெயிண்டிங், 500சதுர அடி மண்டபத்துக்கு மேலே தட்டுஓடு, நான்கு கால கும்பாபிசேக செலவு ஆகியவை இன்னும் காத்திருக்கின்றன. என்னால் பணம் கொடுத்து இந்த ஆலய திருப்பணியில் பங்கேற்க இயலவில்லை. கட்டுமானத்தில் மின்சாரப்பணிகள் செய்ததும், கட்டுமானப்பணிகளை ஒருங்கிணைத்த வேலைகளிலும்தான் என்னால் உடல் உழைப்பு என்ற அளவில் பங்களிப்பு செய்ய முடிந்தது.

திருப்பணி நிறைவடைய மேல்தளத்தில் தட்டுஓடு, பெயிண்டிங் பணிகள் முக்கியமாக இருக்கின்றன. கோவில் அமைப்பு, தற்போதைய நிலை, இதுவரை ஆன செலவு, இனி செய்ய வேண்டிய பணிகள் என்று முழு விவரங்களுடன் பத்திரிகைகளுக்காக கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கிறேன். இதை இணையத்தில் வெளியிடக்காரணம், இது மாதிரியான ஆன்மிகப் பணியில் பங்களிப்பு செய்யும் விருப்பம் சிலருக்கு இருக்கலாம். அவர்களையும் பணியில் இணைத்துக்கொள்ளலாம் என்ற நோக்கில்தான் இந்த பதிவில் தகவல் சொல்லியிருக்கிறேன். விரைவில் இது குறித்த விரிவான பதிவு வெளிவரும்.
******************************************************************
மற்றொரு தகவல்

திருவாரூர் தேர்த்திருவிழா பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த விழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்பு பெரிய கோவிலின் சண்டிகேஸ்வரர் உற்சவமூர்த்தி திருவாரூருக்கு கிழக்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதம்பட்டினம் சிவன்கோவிலில் பிடிமண் எடுத்து பூஜை செய்து திரும்ப பெரியகோவில் செல்லும் வழக்கம் உண்டு. அந்த மருதம்பட்டினம் சிவன் கோவிலும் மிக மோசமான நிலையில் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது.

அதன் நிலை குறித்தும் 2006ஆம் ஆண்டுகளில் பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி அனுப்பி பிரசுரமானது. அதைப்படித்துவிட்டு பலர் ஆன்மிக சுற்றுலா செல்லும்போது அந்த கோவிலுக்கு வந்தார்கள்.

அந்த கோவில் சன்னதி தெருவில் இருந்த வீட்டுக்கு குடிவந்த தொழிலதிபர் ஒருவர் சுமார்40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகளை தொடங்கி அது நிறைவடையும் தருவாயில் உள்ளது. நுழைவாயில் மொட்டை கோபுரமாக இருந்தது. அது இப்போது மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரமாக புதிதாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக வரும் மேமாத வாக்கில் கும்பாபிசேகம் நடைபெற வாய்ப்பு உண்டு.

இப்போதைய புகைப்படம் எடுக்க கேமரா இரவல் கிடைக்கவில்லை. விரைவில் பதிவேற்றுகிறேன்.
******************************************************************

கொசுறு:
ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் அருகில் உள்ள விளமல் கோவில் பற்றிய தகவல்களை புகைப்படத்துடன் கட்டுரையாக்கி தினகரன் ஆன்மிக மலருக்கு அனுப்பியிருந்தேன். அது 09.02.2013 இதழில் பிரசுரமாகியிருக்கிறது.

20.02.2013 விகடன் இதழில் ஒரு ஜோக் பிரசுரம். அதுக்கு அவங்க அனுப்பிய 100 ரூபாய் பணம் வாங்குனதும் தெரியலை. செலவானதும் தெரியலை.












உத்திரத்திலும் சுவற்றிலும் கரையான் அரித்திருக்கும் படங்கள் என் முன்னோர்களின் வீடுதான். இதில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து வேறு இடம் வாங்கி புதிய வீடு கட்டிக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். அவ்வளவு நாள் எங்களால காத்திருக்க முடியாதுன்னு உத்திரமும், சுவரும் பெயர்ந்து விழ ஆரம்பிச்சுடுச்சு. வேற வழியில்லாம 06.03.2013 அன்று பூமி பூஜை போட்டுட்டோம். கோவில் திருப்பணி தொடர்பான வேலைகளுடன் வீட்டுப்பணியும் என்னுடைய பொறுப்பு கணக்கில் கூடியிருக்கிறது.
**********************
ஒரு புகைப்படத்தில் சிமெண்ட் சாலை அருகில் கழிவு நீர் ஓடுவதைப்பார்த்து அதன் ஆழத்தை குறைவாக எடைபோட்டுவிடாதீர்கள். கிட்டத்தட்ட 3 அடி ஆழம் உள்ள சாக்கடையில் மண் சேர்ந்து 3 அங்குலம் கூட மீதமில்லை. உள்ளாட்சி நிர்வாகத்துக்கு அவ்வப்போது மனு போடுவோம். அவர்களும் வந்து மண்ணை அள்ளுவார்கள். ஆங்காங்கே வீடுகளில் வாசலில் குவித்து வைப்பார்கள். இரண்டு நாள் கழ்த்து வந்து அப்படியே எதிரில் உள்ள குளத்தில் தள்ளிவிட்டுப்போய் விடுவார்கள். அவ்வளவுதான்.

இந்த சாக்கடையில் குப்பை அதிகம் சேரக்காரணம் துப்புரவுப்பணியாளர்கள் சரிவர குப்பை அள்ள வராததுடன் தெருவில் ஒரு இடத்தில் மட்டும்தான் குப்பைத்தொட்டி உள்ளது. சுமார் முக்கால் கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த தெருவுக்கு இது போதுமா? மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாக்கடையை பாலிதீன் உள்ளிட்ட குப்பை கழிவுகளல் நிரப்புகிறார்கள்.

நாங்கள் அந்த தவறை செய்வதில்லை. வீட்டுக்கு எதிரில் சிமெண்ட் சாலையில் மறுபுறம் ஓரமாக குப்பையை கொட்டிவைப்போம். என்றாவது வழி தவறி குப்பை வண்டி எங்கள் தெருவுக்குள் வரும்போது அள்ளிச்செல்வார்கள்.
******************************************