Search This Blog

புதன், 23 அக்டோபர், 2013

திருவாரூரில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு பயிலரங்கு





தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது. இங்கு சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற உள்ளது என மத்திய பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி.



தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு வரும் நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது. எல்.வி.பிரசாத் அகடமி இயக்குனர்  ஹரிஹரன் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளார். சினிமா மீது ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் பங்கு பெற்று பயன்பெறலாம்.



ஒரு கல்லூரியில் இருந்து அதிக பட்சமாக 5 நபர்கள் பங்கு பெறலாம் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 30. மேலும் இது குறித்து தகவல் தெரிந்து கொள்ள மற்றும் உங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆதி இராமானுஜம் துணைபேராசிரியரை 9176643777 என்ற தொலைபேசி எண்ணிலும் athiramanujam@cutn.ac.in  என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.



திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் காட்சித்தொடர்பியல் துறை (Visual Communication) சுய நிதிப்பிரிவாக இயங்கிவருகிறது. அந்த மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பெரிய நகரங்களில் படிப்பவர்களுக்கு, வசிப்பவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி கிடைக்கலாம். இந்த ரெண்டு நாள் கருத்தரங்கில் உலகத்தையே புரட்டிப்போடுற மாதிரி படம் எப்படி இருக்கணும்னு புரிஞ்சுடப்போகுதான்னு சிலர் நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரை அவனளவில் பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் என்பதற்கு யாராவது சொன்ன நல்ல வார்த்தைகளாகவோ, யாராவது அவமானப்படுத்திய சம்பவமாகவோ அல்ல்து எதாவது புத்தகம் படிக்கும்போது சட்டென்று ஸ்பார்க் ஆக வைத்த இரண்டு வரிகளாகவோ, ஒரு மணி நேரம் நம்முடன் பயணம் செய்த நபர் சொன்ன வார்த்தைகளாகவோ இருக்கலாம்.



திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அவ்வப்போது பல துறைகளிலும் எதாவது கருத்தரங்கங்கள், வகுப்புகள் என்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எந்த அளவு மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.



இது போன்ற நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் சமீப காலமாகத்தான் வெளியில் தெரிகின்றன.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதளம்



பிரசாத் அகாடமி








 Image Credit : PrasadAcademy.com





******************************************************

டொமை நேம் ரிஜிஸ்ரேஷனுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி.

(இப்போது சொல்லப்போகும் தகவல்கள் பலரும் அறிந்த ஒன்றுதான்)





mullaicomputers.com என்ற வார்த்தைகளை கூப்பனாக பயன்படுத்தினால் Big Rock.in இல் டொமைன் நேம் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு, புதுப்பித்தலுக்கு போன்றவற்றுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. யுஆர் எல் முகவரி - http://www.bigrock.in/



வலைப்பூ எழுதும் பலரும் தற்போது சொந்த டொமைன் வைத்திருக்கிறார்கள். நானும் கூகிள் மூலம் நேரடியாக அதே போல் டாட்.காம் வாங்க முயற்சித்தேன். கிரடிட் கார்டு இருந்தால் மட்டும் வாங்க முடியும் என்ற நிலை இருந்ததால் விட்டுவிட்டேன். பிறகு பிக்ராக் மூலம் பெயரை ரெஜிஸ்டர் செய்துவிட்டேன். ஆனால் ப்ளாக்கை எப்படி Hosting செய்வது என்று தெரியாமல் ஆறு மாதங்கள் writersaran.com ஐ பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கற்போம்.காம் தளத்தில் பிரபுகிருஷ்ணாவுக்கு மெயில் அனுப்பி கேட்டதில் அவர் வழிமுறைகளை தெரிவித்து பதில் அனுப்பினார். கூகிளிலில் தேடினாலும் தெளிவான விளக்கங்களுடன் நிறைய கட்டுரைகள் கிடைக்கும். (எனக்குதான் ஆங்கிலம் தகராறு)



எவ்வளவோ எஸ்டென்ஷனுடன் டொமைன் நேம் இருந்தாலும் இப்போதும் பலருடைய முதல் சாய்சாக இருப்பது .com தான். அது நான் வாங்கும்போது 500 ரூபாயாக இருந்தது. அடுத்து ஒரு ஆண்டு புதுப்பிக்கும்போது 599 என்று நினைக்கிறேன். இப்போது 659 ரூபாயாகிவிட்டது. (எல்லாம் டாலர் மதிப்பு செய்யும் மாயம்)



தீபாவளி ஆஃபர் இருப்பதால் கொஞ்சம் விலை குறைவாக வாங்க நினைப்பவர்கள் இப்போது முயற்சிக்கலாம்.



mullaicomputers.com என்ற கூப்பனை பயன்படுத்தினால் கூடுதலாக கொஞ்சம் டிஸ்கவுண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பிறகு உங்கள் டொமைன் நேமும் கூப்பனாக பயன்படும். அதை வைத்து பலர் டொமைன் வாங்கும்போது உங்களுக்கும் சில ஆபர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பண பலன் நேரடியாக கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு வேறு சில ஆப்ஷன்ஸ் இருக்கிறது. அவற்றை http://www.bigrock.in/  தளத்திற்கு போனால் அறிந்துகொள்ளலாம்.


திருவாரூரில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு பயிலரங்கு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது. இங்கு சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற உள்ளது என மத்திய பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி.

தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு வரும் நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது. எல்.வி.பிரசாத் அகடமி இயக்குனர்  ஹரிஹரன் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளார். சினிமா மீது ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் பங்கு பெற்று பயன்பெறலாம்.

ஒரு கல்லூரியில் இருந்து அதிக பட்சமாக 5 நபர்கள் பங்கு பெறலாம் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 30. மேலும் இது குறித்து தகவல் தெரிந்து கொள்ள மற்றும் உங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆதி இராமானுஜம் துணைபேராசிரியரை 9176643777 என்ற தொலைபேசி எண்ணிலும் athiramanujam@cutn.ac.in  என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் காட்சித்தொடர்பியல் துறை (Visual Communication) சுய நிதிப்பிரிவாக இயங்கிவருகிறது. அந்த மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பெரிய நகரங்களில் படிப்பவர்களுக்கு, வசிப்பவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி கிடைக்கலாம். இந்த ரெண்டு நாள் கருத்தரங்கில் உலகத்தையே புரட்டிப்போடுற மாதிரி படம் எப்படி இருக்கணும்னு புரிஞ்சுடப்போகுதான்னு சிலர் நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரை அவனளவில் பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் என்பதற்கு யாராவது சொன்ன நல்ல வார்த்தைகளாகவோ, யாராவது அவமானப்படுத்திய சம்பவமாகவோ அல்ல்து எதாவது புத்தகம் படிக்கும்போது சட்டென்று ஸ்பார்க் ஆக வைத்த இரண்டு வரிகளாகவோ, ஒரு மணி நேரம் நம்முடன் பயணம் செய்த நபர் சொன்ன வார்த்தைகளாகவோ இருக்கலாம்.

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அவ்வப்போது பல துறைகளிலும் எதாவது கருத்தரங்கங்கள், வகுப்புகள் என்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எந்த அளவு மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இது போன்ற நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் சமீப காலமாகத்தான் வெளியில் தெரிகின்றன.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதளம்

பிரசாத் அகாடமி


 Image Credit : PrasadAcademy.com

******************************************************
டொமை நேம் ரிஜிஸ்ரேஷனுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி.
(இப்போது சொல்லப்போகும் தகவல்கள் பலரும் அறிந்த ஒன்றுதான்)

mullaicomputers.com என்ற வார்த்தைகளை கூப்பனாக பயன்படுத்தினால் Big Rock.in இல் டொமைன் நேம் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு, புதுப்பித்தலுக்கு போன்றவற்றுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. யுஆர் எல் முகவரி - http://www.bigrock.in/

வலைப்பூ எழுதும் பலரும் தற்போது சொந்த டொமைன் வைத்திருக்கிறார்கள். நானும் கூகிள் மூலம் நேரடியாக அதே போல் டாட்.காம் வாங்க முயற்சித்தேன். கிரடிட் கார்டு இருந்தால் மட்டும் வாங்க முடியும் என்ற நிலை இருந்ததால் விட்டுவிட்டேன். பிறகு பிக்ராக் மூலம் பெயரை ரெஜிஸ்டர் செய்துவிட்டேன். ஆனால் ப்ளாக்கை எப்படி Hosting செய்வது என்று தெரியாமல் ஆறு மாதங்கள் writersaran.com ஐ பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கற்போம்.காம் தளத்தில் பிரபுகிருஷ்ணாவுக்கு மெயில் அனுப்பி கேட்டதில் அவர் வழிமுறைகளை தெரிவித்து பதில் அனுப்பினார். கூகிளிலில் தேடினாலும் தெளிவான விளக்கங்களுடன் நிறைய கட்டுரைகள் கிடைக்கும். (எனக்குதான் ஆங்கிலம் தகராறு)

எவ்வளவோ எஸ்டென்ஷனுடன் டொமைன் நேம் இருந்தாலும் இப்போதும் பலருடைய முதல் சாய்சாக இருப்பது .com தான். அது நான் வாங்கும்போது 500 ரூபாயாக இருந்தது. அடுத்து ஒரு ஆண்டு புதுப்பிக்கும்போது 599 என்று நினைக்கிறேன். இப்போது 659 ரூபாயாகிவிட்டது. (எல்லாம் டாலர் மதிப்பு செய்யும் மாயம்)

தீபாவளி ஆஃபர் இருப்பதால் கொஞ்சம் விலை குறைவாக வாங்க நினைப்பவர்கள் இப்போது முயற்சிக்கலாம்.

mullaicomputers.com என்ற கூப்பனை பயன்படுத்தினால் கூடுதலாக கொஞ்சம் டிஸ்கவுண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பிறகு உங்கள் டொமைன் நேமும் கூப்பனாக பயன்படும். அதை வைத்து பலர் டொமைன் வாங்கும்போது உங்களுக்கும் சில ஆபர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பண பலன் நேரடியாக கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு வேறு சில ஆப்ஷன்ஸ் இருக்கிறது. அவற்றை http://www.bigrock.in/  தளத்திற்கு போனால் அறிந்துகொள்ளலாம்.

திங்கள், 16 செப்டம்பர், 2013

தி இந்து தமிழ் எப்படி



தமிழால் இணைவோம் - என்ற சப் டைட்டிலுடன் (துணை தலைப்பு?) இன்று முதல் தமிழகத்தில் வெளிவருகிறது தி இந்து நாளிதழ்.



தினகரன் புது நிர்வாகத்திலிருந்து வர ஆரம்பித்தபோது அதிரடியாக 1 ரூபாய்க்கு இறங்கி பிற நாளிதழ்களை கலங்க வைத்து பிறகு ஸ்டெடி ஆனது போல இந்து தமிழ் இதழும் காமதேனு என்ற பெயரில் ஒரு ரூபாய் ஐம்பது பைசா விலையில் வெளிவரப்போகிறது என்றெல்லாம் செய்திகள் காற்றில் உலா வந்தன.



நானும் காமதேனு என்ற பெயரில் கூகிளில் இந்த நாளிதழை தேடி ஏமாந்தது எல்லாம் தனி கதை.



இன்று வேறு ஒரு வேலையாக பேருந்து நிலையம் சென்ற போது கடையில் தொங்கிய வால்பேப்பரை பார்த்து விலை கேட்டேன் நாலு ரூபாய் என்றார்கள். ஆக, தமிழ் சினிமா ஹீரோக்களைப்போல் முதல் ரீலில் பாட்டு பைட்டு என்றெல்லாம் அதிரடியாக களம் இறங்காமல் தொடக்கத்தில் இருந்தே சீராக சென்று சந்தைக்குள் நுழையலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.



கடைக்காரர் எடுத்து தரும்போது எனக்கு the hindu ஆங்கில பேப்பருக்கும் தமிழ் பேப்பருக்கும் வித்தியாசம் உடனடியாக தெரியவில்லை. பேப்பரை பிரித்துப்பார்க்கும்போதுதான் தெரிந்தது.



பேப்பரின் தோற்றம், வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவை சாதாரண பாமரனை விட சற்று அடுத்த கட்டத்தில் உள்ளவர்களுக்கானது போல் என் மனதில் படுகிறது.



தமிழில் முதல் இதழ் வெளிவரும்போதே இணையத்திலும் யுனிகோடு வடிவில் பார்வைக்கு கிடைக்கிறது. பொதுவாக ஒரு இதழ் புதிதாக கால் பதிக்கும்போது முதல் இதழ் தலையங்கத்தில் சம்பிரதாயமாக சில வார்த்தைகளை இடம்பெறச்செய்யும். 




இந்து தமிழ் இதழிலும் அதே போன்ற தோற்றத்தில் தலையங்கம் இருந்தாலும், தங்கள் நிருபர்களும், எடிட்டர்களும் எழுதுவதை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று இல்லாமல், வாசகர்களையும் தகுந்த அளவில் பங்கேற்கச்செய்வது என்ற விஷயம் நல்லபடியாக எடுபட்டால் இந்த நாளிதழ் மக்களிடம் பரவலாக போய்ச்சேர வாய்ப்பு உண்டு.



சில நாளிதழ்களும், புலனாய்வு இதழ்களும் வாசகர்களின் கார்டூன்களை அவ்வப்போது வெளியிடுவது உண்டு. ஆனால் தமிழ் இந்து, கார்டூனை முடிந்த அளவு வரைந்தோ அல்லது வார்த்தைகளால் எழுதியோ அனுப்பினால் தங்கள் ஓவியர்களை கொண்டு கார்ட்டூனாக்கி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது வாசகர்களை ஈர்ப்பதாக அமையும்.



தி இந்து இன்று வெளிவந்த நாளிதழ் தீபாவளி போன்ற பண்டிகை சிறப்பிதழைப்போல், பல தலைப்புக்களில் கட்டுரைகளுடனும், நிறைய விளம்பரங்களுடனும் வெளிவந்திருக்கிறது.



இன்று ஒரு நாள் பேப்பரை மட்டும் பார்த்து முழு விமர்சனம் செய்வது, மகாமகத்தன்று கும்பகோணத்தையும், சூப்பர்ஸ்டார் படம் ரிலீசன்று அந்த சினிமா தியேட்டரையும், திருமணம் நடைபெறும் நாளன்று அந்த புதுமணத்தம்பதிகளையும் பற்றிய பார்வையாகவே இருக்கும்.



அதனால் தொடர்ந்து சிலதினங்கள் கவனித்து, வாரத்தின் ஏழு நாட்களும் என்னென்ன பகுதிகளுடன் வெளிவருகிறது என்பதை பார்த்துதான் இது பற்றி பேச வேண்டும்.