Search This Blog

ஞாயிறு, 26 மே, 2013

உள்ளம் உருக வைத்த டி.எம்.எஸ்



குரலிசை மன்னர் டி.எம்.செளந்தர்ராஜன் அவர்கள் நேற்று (25-5-2013)ல் 91 வயதில் காலமானதும் வயது வித்தியாசமின்றி பலருக்கும் அவரது திரை இசைப்பாடல்களும் பக்திப்பாடல்களும் நினைவிற்கு வந்திருக்கும்.



டி.எம்.எஸ் சுமார் 10ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதாக கூறுகிறார்கள். இவற்றில் நான் 150 பாடல்களை கேட்டிருந்தால் பெரிய விசயம். அந்த பாடல்களில் கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே இப்போது கேட்கும்போது கூட மனம் லேசாவதை உணர முடியும்.



டி.எம்.எஸ் என்ற சகாப்தத்தை பற்றி பேசுவதற்கு என்னிடம் விசயம் இல்லை. 1997 கோடை விடுமுறைக்காலம். நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தேன். சில பிரச்சனைகளால் மூடப்பட்டிருந்த அந்த திரையரங்கம் சில மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டபோது தேவரின் தெய்வம் படம் திரையிடப்பட்டது. அந்த படத்தில் ஆறு பாடல்களுமே பிரபல பாடகர்களை வைத்தே படமாக்கப்பட்டிருக்கும். சீர்காழி எஸ்.கோவிந்தராஜனும், டி.எம்.செளந்தர்ராஜனும் இணைந்து திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் என்று பாடும்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற அளவில் மனம் அந்த பாடலையும் இசையையும் விரும்பியது.



மூன்று நாட்கள் மட்டும் அந்தப்படம் திரையிடப்பட்டாலும் மூன்றுநாட்களும் 12 காட்சிகள் திரையிடப்பட்டதில் சுமார் 4ஆயிரம் பேர் பார்த்திருப்பார்கள். எல்லா பாடல்காட்சிகளிலும் படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கைகள் தாளம்போடத்தவறியதில்லை. திரைப்படக்கருவியை இயக்கி டி.எம்.எஸ் தோன்றிய பாடல்காட்சியுடன் தெய்வம் படத்தை திரையிடும் வாய்ப்பு கிடைத்தது இப்போது என் நினைவில் பசுமையாக இருக்கிறது.





Image Credit : Dinamalar




எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமின்றி சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலை நாகேஷூக்காக பாடிய பாடலும் மற்றும் பக்திப்பாடல்களும் இப்போதும் கேட்க கேட்க அலுப்பு தட்டாமல் இருக்கும். அவர் பாடிய பாடல்களை என்ன படம், யார் நடிகர் என்பது தெரியாவிட்டாலும் ரசிக்கலாம். அதுதான் டி.எம்.எஸ்.


உள்ளம் உருக வைத்த டி.எம்.எஸ்

குரலிசை மன்னர் டி.எம்.செளந்தர்ராஜன் அவர்கள் நேற்று (25-5-2013)ல் 91 வயதில் காலமானதும் வயது வித்தியாசமின்றி பலருக்கும் அவரது திரை இசைப்பாடல்களும் பக்திப்பாடல்களும் நினைவிற்கு வந்திருக்கும்.

டி.எம்.எஸ் சுமார் 10ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதாக கூறுகிறார்கள். இவற்றில் நான் 150 பாடல்களை கேட்டிருந்தால் பெரிய விசயம். அந்த பாடல்களில் கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே இப்போது கேட்கும்போது கூட மனம் லேசாவதை உணர முடியும்.

டி.எம்.எஸ் என்ற சகாப்தத்தை பற்றி பேசுவதற்கு என்னிடம் விசயம் இல்லை. 1997 கோடை விடுமுறைக்காலம். நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தேன். சில பிரச்சனைகளால் மூடப்பட்டிருந்த அந்த திரையரங்கம் சில மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டபோது தேவரின் தெய்வம் படம் திரையிடப்பட்டது. அந்த படத்தில் ஆறு பாடல்களுமே பிரபல பாடகர்களை வைத்தே படமாக்கப்பட்டிருக்கும். சீர்காழி எஸ்.கோவிந்தராஜனும், டி.எம்.செளந்தர்ராஜனும் இணைந்து திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் என்று பாடும்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற அளவில் மனம் அந்த பாடலையும் இசையையும் விரும்பியது.

மூன்று நாட்கள் மட்டும் அந்தப்படம் திரையிடப்பட்டாலும் மூன்றுநாட்களும் 12 காட்சிகள் திரையிடப்பட்டதில் சுமார் 4ஆயிரம் பேர் பார்த்திருப்பார்கள். எல்லா பாடல்காட்சிகளிலும் படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கைகள் தாளம்போடத்தவறியதில்லை. திரைப்படக்கருவியை இயக்கி டி.எம்.எஸ் தோன்றிய பாடல்காட்சியுடன் தெய்வம் படத்தை திரையிடும் வாய்ப்பு கிடைத்தது இப்போது என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

Image Credit : Dinamalar

எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமின்றி சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலை நாகேஷூக்காக பாடிய பாடலும் மற்றும் பக்திப்பாடல்களும் இப்போதும் கேட்க கேட்க அலுப்பு தட்டாமல் இருக்கும். அவர் பாடிய பாடல்களை என்ன படம், யார் நடிகர் என்பது தெரியாவிட்டாலும் ரசிக்கலாம். அதுதான் டி.எம்.எஸ்.

சனி, 25 மே, 2013

பழைய வீட்டை இடிக்காதது நல்லது!





திருவாரூர் நகர்பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு தகவல். ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதே பதிவில் இருக்கும் அடுத்த செய்திக்கு போய்விடலாம். திருவாரூர் நகரின் மையப்பகுதியில் உள்ளது பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயம். இந்த ஆலயத்தின் கும்பாபிசேகம் வரும் 14-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. மீதமிருக்கும் வேலைகளில் பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பெரிய அளவில் பக்தர்களின் பங்களிப்பு தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.



பெயிண்டிங் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்ற பட்டியல் எஸ்.பி.கண்ணா என்ற ஓவியரிடம் இருந்து பெறப்பட்டு இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. விருப்பமிருப்பவர்கள் (எங்கிருந்தாலும்) தொடர்புகொள்ளுங்கள். அனைவரும் கும்பாபிசேகத்துக்கு வருகை தந்து தரிசனம் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.



---------------

பழைய வீட்டை இடிக்காமல் அப்படியே நகர்த்தி புதிய இடத்தில் பொருத்தும் தொழில்நுட்பம் தமிழகத்திற்கும் வந்துவிட்டது என்பது குறித்த கட்டுரை 30.05.2013 புதிய தலைமுறை இதழில் பிரசுரமாகியுள்ளது. அந்த கட்டுரையின் இறுதியில் சாலைவிரிவாக்கத்திற்காக லட்சக்கணக்கான வீடுகள் இடிக்கப்படுகின்றன. இந்த நகர்த்தும் முறையை பரிசீலித்தால் மக்களுக்கும் பிரச்சனையில்லை. அரசுக்கும் சங்கடமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுடன் இன்னும் கூடுதலாக சில வரிகளை சேர்த்துக்கொள்ளலாம். இடிப்பதற்கு அவசியமில்லாத வகையில் வலுவாக இருக்கும் கட்டிடங்களை கூடுதலாக பல ஆண்டுகள் பயன்படுத்த முடியுமானால் மணல், ஜல்லி, மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களும், சிமெண்ட் போன்ற செயற்கை வளங்களும் கூடுதலாக வீணாவதை தடுக்க முடியும். அது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.