Search This Blog

வியாழன், 9 மே, 2013

தேர்வுக்காய்ச்சல்





இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின்றன. இன்று தொலைக்காட்சிகளிலும் நாளை நாளிதழ்களிலும் டெம்ப்ளேட்டாக சில செய்திகள் வெளியாகும். அதாவது வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தனியார் பள்ளிகள் அதிகளவில் சிறப்பிடங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டுள்ளன. ஆனால் சில அரசுப்பள்ளி மாணவர்களும் சாதனை செய்திருக்கிறார்கள் என்ற வகையில் அந்த செய்திகள் இருக்கும்.




இந்த டெம்ப்ளேட் செய்திகள் வரிசையில் தேர்வில் தோல்வி அல்லது தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை, மாணவன் தண்டவாளத்தில் தலையைக்கொடுத்தார் ஆகிய செய்திகளும் இடம்பிடிப்பதுதான் வேதனை.



அடிப்படைக்கல்வியான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்று ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சியடைய வேண்டியது அவசியம்தான். ஆனால் எல்லோராலும் அது முடிகிற காரியமில்லை. ஏனெனில் ஒவ்வொருவருடைய திறனும் ஒவ்வொரு வகையில் மாறுபடும். இந்த தேர்வுகளில் 35 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டாலோ, பொறியியல் படிப்பில் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் மகன் பார்டரில் பாஸ் செய்தாலோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்காக டார்ச்சர் கொடுத்து அவர்கள் பிள்ளைகள் தற்கொலை முடிவு வரை செல்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.



உயிருடன் இருந்தால் உலகையே வெல்லலாம். இப்படி யாருக்கும் பயனில்லாமல் உயிரை மாய்த்துக்கொண்டால் பெற்றோர்கள் கூட சில நாட்களில் அல்லது சில மாதங்களில் உங்களை மறந்துவிடுவார்கள் என்பதை தடுமாறும் மாணவர்கள்/மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.



சில காரணங்களால் நான் 1999ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுத முயற்சித்தேன். தேர்வுக்கட்டணம் கட்டியநபர் ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தியதால் ஹால் டிக்கெட் வரவில்லை. தில்லுமுல்லு செய்து தேர்வெழுத முயற்சிக்க கூடாது என்று தேர்வுத்துறையிடமிருந்து எனக்கு எச்சரிக்கை கடிதம்தான் வந்தது. சுற்றி இருந்தவர்கள் நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை போலிருக்கு. அதனால்தான் இப்படி ஹால்டிக்கெட் வராம போயிடுச்சு. நீ பேசாம இப்போ பார்த்த வேலையையே தொடர்ந்து செய் என்றார்கள்.



அப்படி பேசியவர்கள் மீது கோபம் வந்தாலும் என் மன எண்ணம் வேறு



விதமாக சிந்தித்தது. 1ஆம் வகுப்பில் இருந்து இதுவரை ஒரு முறை கூட பெயிலாகாமல் இருந்தோம். இப்போதும் நான் தேர்வு எழுதினால் பெயில் ஆக வாய்ப்பில்லை. அதனால் தேர்வு எழுதவிடாமல் செய்யவே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று மனதை நானே தேற்றிக்கொண்டேன். அது தவிர அரசுக்கல்லூரிகளில் இப்போதும் டிமாண்டாக இருக்கும் துறையான வணிகவியல் துறையில்தான் சேருவேன். அதிலும் மெரிட்டில் இடம் பிடிப்பேன் என்று எனக்கு நானே இலக்கு வைத்துக்கொண்டு 1999 செப்டம்பரில் தேர்வெழுதினேன்.



இப்போதும் பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் விருப்பத்துக்காகதான் படிக்கிறார்களே தவிர சொந்த விருப்பத்தில் அல்ல. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நமது கல்வி முறை தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது. அதில் சாதிப்போம் என்று யோசிக்க கூட விடாத அளவுக்கு இயந்திரத்தனமாக இருக்கிறது என்ற கருத்து எனக்கு உண்டு. அப்படி எல்லாம் இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று நீங்கள் சொல்லலாம். அது உண்மையாக இருந்தாலும் இது தொடக்க நிலைதான். நமது கல்விமுறை இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.



2007ஆம் ஆண்டு தேர்வுக்காய்ச்சல் என்ற தலைப்பில் சமநிலைச்சமுதாயம் என்ற சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். அந்த படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி படிக்கலாம்.


தேர்வுக்காய்ச்சல்

இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின்றன. இன்று தொலைக்காட்சிகளிலும் நாளை நாளிதழ்களிலும் டெம்ப்ளேட்டாக சில செய்திகள் வெளியாகும். அதாவது வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தனியார் பள்ளிகள் அதிகளவில் சிறப்பிடங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டுள்ளன. ஆனால் சில அரசுப்பள்ளி மாணவர்களும் சாதனை செய்திருக்கிறார்கள் என்ற வகையில் அந்த செய்திகள் இருக்கும்.

+2 Result Website Link 2

இந்த டெம்ப்ளேட் செய்திகள் வரிசையில் தேர்வில் தோல்வி அல்லது தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை, மாணவன் தண்டவாளத்தில் தலையைக்கொடுத்தார் ஆகிய செய்திகளும் இடம்பிடிப்பதுதான் வேதனை.

அடிப்படைக்கல்வியான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்று ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சியடைய வேண்டியது அவசியம்தான். ஆனால் எல்லோராலும் அது முடிகிற காரியமில்லை. ஏனெனில் ஒவ்வொருவருடைய திறனும் ஒவ்வொரு வகையில் மாறுபடும். இந்த தேர்வுகளில் 35 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டாலோ, பொறியியல் படிப்பில் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் மகன் பார்டரில் பாஸ் செய்தாலோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்காக டார்ச்சர் கொடுத்து அவர்கள் பிள்ளைகள் தற்கொலை முடிவு வரை செல்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

உயிருடன் இருந்தால் உலகையே வெல்லலாம். இப்படி யாருக்கும் பயனில்லாமல் உயிரை மாய்த்துக்கொண்டால் பெற்றோர்கள் கூட சில நாட்களில் அல்லது சில மாதங்களில் உங்களை மறந்துவிடுவார்கள் என்பதை தடுமாறும் மாணவர்கள்/மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

சில காரணங்களால் நான் 1999ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுத முயற்சித்தேன். தேர்வுக்கட்டணம் கட்டியநபர் ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தியதால் ஹால் டிக்கெட் வரவில்லை. தில்லுமுல்லு செய்து தேர்வெழுத முயற்சிக்க கூடாது என்று தேர்வுத்துறையிடமிருந்து எனக்கு எச்சரிக்கை கடிதம்தான் வந்தது. சுற்றி இருந்தவர்கள் நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை போலிருக்கு. அதனால்தான் இப்படி ஹால்டிக்கெட் வராம போயிடுச்சு. நீ பேசாம இப்போ பார்த்த வேலையையே தொடர்ந்து செய் என்றார்கள்.

அப்படி பேசியவர்கள் மீது கோபம் வந்தாலும் என் மன எண்ணம் வேறு
விதமாக சிந்தித்தது. 1ஆம் வகுப்பில் இருந்து இதுவரை ஒரு முறை கூட பெயிலாகாமல் இருந்தோம். இப்போதும் நான் தேர்வு எழுதினால் பெயில் ஆக வாய்ப்பில்லை. அதனால் தேர்வு எழுதவிடாமல் செய்யவே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று மனதை நானே தேற்றிக்கொண்டேன். அது தவிர அரசுக்கல்லூரிகளில் இப்போதும் டிமாண்டாக இருக்கும் துறையான வணிகவியல் துறையில்தான் சேருவேன். அதிலும் மெரிட்டில் இடம் பிடிப்பேன் என்று எனக்கு நானே இலக்கு வைத்துக்கொண்டு 1999 செப்டம்பரில் தேர்வெழுதினேன்.

இப்போதும் பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் விருப்பத்துக்காகதான் படிக்கிறார்களே தவிர சொந்த விருப்பத்தில் அல்ல. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நமது கல்வி முறை தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது. அதில் சாதிப்போம் என்று யோசிக்க கூட விடாத அளவுக்கு இயந்திரத்தனமாக இருக்கிறது என்ற கருத்து எனக்கு உண்டு. அப்படி எல்லாம் இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று நீங்கள் சொல்லலாம். அது உண்மையாக இருந்தாலும் இது தொடக்க நிலைதான். நமது கல்விமுறை இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

2007ஆம் ஆண்டு தேர்வுக்காய்ச்சல் என்ற தலைப்பில் சமநிலைச்சமுதாயம் என்ற சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். அந்த படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி படிக்கலாம்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கோவை தீ விபத்திற்கு யார் காரணம்



இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற அடிப்படையில் ஒருவர் விரல் மற்றொருவரையே சுட்டிக்காட்டும்.  இந்த விபத்து நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை, காவலர்கள், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள். மனிதனின் திறமை அளவிடமுடியாதது. அது ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காகவும், பூகம்பம், வெள்ளம் போன்று எதிர்பாரா இயற்கை பேரிடர் காலங்களிலும் பயன்படுத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தால் அங்கிருக்கும் மக்கள் தாங்களாகவே மிக சுலபமாக தப்பியிருக்க முடியும்.




ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? ரொம்ப அடிமட்டத்துல வாழ்றவன்தான் அவனுக்கு கிடைச்ச 6 அடி அகலமுள்ள இடத்தைக்கூட வீடா மாற்றி வாழ்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுறான்னா, வசதிபடைத்தவர்கள் கூட தீப்பெட்டியை அடுக்கியதுபோல பக்கத்து கட்டிடத்து சுவரின் மீது இவர்கள் சுவரையும் வைத்து பசைபோட்டு ஒட்டுனது மாதிரி கட்டுறாங்க.



அதோட நிறுத்துறாங்களா? இயற்கை காற்றோட்ட பாதையை தடுத்து நிறுத்திட்டு ஏசி மெசினை மாட்டி குளோபல் வார்மிங், மின் பற்றாக்குறை இப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாயிடுறாங்க. உண்மையில் சில இயந்திரங்களை பாலைவனத்திலும், பனிப்பொழிவு பிரதேசத்திலும் நார்மலான வெப்பநிலையில் வைத்திருக்கவே ஏசி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? மனித உடம்பில் உள்ள உறுப்புக்கள் 34 டிகிரி என்ற வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைக்குமாம். ஆனால் நாம் குளிர் அறையில் சுகமாக தூங்குவதாக நினைத்து நாட்டையும் நம் உடம்பையும் கெடுத்துவைத்துக்கொண்டிருக்கிறோம். இதுபற்றி விளக்கமாக எழுதினால் ஆயிரம் பக்கங்களை தாண்டிச்செல்லும்.



சுருக்கமாக சொன்னால் ஒரு ............ அலுவலகத்தில் கிளர்க் வேலை பார்க்கும் நபர் அந்த இருக்கையில் அமராமல் மேலதிகாரியின் மனைவிக்கு .............. வாங்கிக்கொடுக்கவோ அல்லது அந்த அதிகாரியின் மச்சானை ஊர்சுற்றிப்பார்க்க அழைத்துச்சென்றாலோ என்ன ஆகும்? அந்த அலுவலகத்தில் அந்த நபர் பார்க்க வேண்டிய வேலை தேங்கி விடும். (இதனால்தான் பல .......... அலுவலகங்களில் இன்று போய் அடுத்த வாரம் வாங்க என்ற வாசகம் பிரபலம்) நம் உடலிலும் நமக்கு தெரியாமலே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கிட்னி இரவு நேரங்களில் தன்னுடைய வேலையை அவ்வளவாக செய்வதில்லையாம். அப்போ அது எந்த ஆபிசர் வீட்டு வேலையை பார்க்க போகுதுன்னு ஒரு சந்தேகம் வரலாம்.



நாம் கொசுக்கடி மற்றும் வெப்பத்துக்கு பயந்து அறையின் ஜன்னல் மற்றும் கதவு அனைத்தையும் சாத்தி விட்டு தூங்கும்போது அறையின் காற்றில் உள்ள ஆக்சிஜன் நாம் 10 நிமிடம் உயிர்வாழத்தேவையான அளவுக்குதான் இருக்குமாம். அதாவது அறைக்கு வெளியில் உள்ள காற்று உள்ளே வந்து உள்ளே உள்ள உஷ்ணக்காற்று (கார்பன்டை ஆக்சைடு கலந்தது) வெளியில் போவது தொடர்ச்சியாக நடந்தால்தான் நம் உடல் உறுப்புகளுக்கு பிரச்சனை பிரச்சனை இருக்காது. அதாவது ஒரு பணியாளர் அவரது இருக்கையில் அமர்ந்து அவருக்குரிய வேலையை செய்வார்.



அப்போ 10 நிமிசத்துல ஆக்சிஜன் தீர்ந்துட்டா நாம செத்தா போயிட்டோம். காலையில நல்லாத்தானே எழுந்திரிக்கிறோம்னு ஒரு சந்தேகம் வரலாம். மனித உடம்பு ஒரு அற்புதமான கூகிள். ஆக்சிஜன் காத்துல இல்லையா, அப்போ உடம்புல எங்க இருக்குன்னு தேடும்போது அது கண்ணுல கிட்னியில இருக்குற தண்ணியோட மூலக்கூறு H2O வை கவனிக்கும். உடனே மூளை கிட்னிக்கு ஒரு ஆர்டர் போட்டு, டேய் நீ சிறுநீர்ல உப்பை பிரிச்சது போதும். உடனே H2O-வுல ஆக்சிஜனை மட்டும் பிரிச்சு அனுப்பிவை அப்படின்னு ஆர்டர் போடும். அப்போ அது நீர்ல உப்பை பிரிச்சு சிறுநீர் வழியா அனுப்புற வேலை என்னாகும். உப்பு சேர்ந்து கட்டியாகும். கிட்னியில கல் சேர்றது எப்படின்னு புரியுதா?



கிட்னியில கல் சேர்றதுக்கு காரணம் கிட்னி ஒழுங்கா வேலை செய்யாம இல்லை. அது என்ன மனுசனா, அது செய்ய வேண்டிய வேலையை நிறுத்திட்டு ஆபிசருக்கும், அரசியல் வியாதிகளுக்கும் ஜால்ரா போடுறதுக்கு. கிட்னியை வேலை செய்ய விடாம தடுக்குறது மனுசன்தான். இப்படி உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய வேலையை செய்ய விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு நாம யார்யாரையோ குற்றம் சொல்லிகிட்டு இருக்கோம்.



நூற்றாண்டு கண்ட வங்கி கட்டிடம் பிரமாண்டமா இருக்கும். கட்டிடத்தை சுற்றி சுமாரா 20 அடி காலியிடம் அந்தப்பகுதியில் மரங்கள். கட்டிடத்தின்  ஒவ்வொரு தளமும் சுமார் 14 அடி இருக்கலாம். பக்கவாட்டுல 6 அடி உயர ஜன்னல். லிண்டல் மட்டத்தை தாண்டி மேல்தள சீலிங்கை ஒட்டியும் பக்கவாட்டு சுவற்றில் சுமார் 2 அடி உயரம், 2 அடி அகலம் என்ற அளவில் வெண்டிலேட்டர். கட்டிடத்தை சுற்றி எல்லா பக்கமும் வெளியேற பாதை. இப்படி மின்விசிறிக்கு கூட அவ்வளவா தேவை இல்லாம, பகல்ல மின் விளக்கு தேவையே இல்லாம இருந்த இடம் இன்னைக்கு சுற்றிலும் கண்ணாடியை ஒட்டிகிட்டு சூரிய வெளிச்சம் மட்டுமல்ல வெளி காற்று கூட உள்ளே நுழைய முடியாம ஏசி இயந்திரத்தோட தன் தனித்தன்மையை இழந்துட்டு நிக்கிது.



வெளிநாட்டுக்காரங்க அவங்க நாட்டு சீதோஷ்ண நிலையினால் குளிர் தாங்காம வடிவமைச்ச கட்டிடங்களைப் பார்த்து நாம சூடுபோட்டுகிட்டே இருக்கோம். ஏப்ரல், மே மாதங்கள்ல நம்ம நாட்டுல சாதாரணமா ரோட்டுல நடந்துபோனா கூட நம்ம உடம்பு தீப்பிடிக்கும்போல இருக்கு. இந்த லட்சணத்துல அரசு அலுவலகங்கள் கூட காற்றோட்டமான சூழ்நிலையை விட்டுட்டு இப்படி ஏசி இயந்திரத்தோட மக்கள் உடல் நலத்தையும் கெடுத்துட்டு, ஒரு ஆபத்துன்னா தப்பிக்க வழி இல்லாத அளவுக்கு கேவலமான முறையில வடிவமைக்கப்படுது.



சட்டம் ஒரு வலை மாதிரி. அதுல சுறா, திமிங்கிலங்கள் மாட்டுவதே இல்லை. அப்பாவி சின்ன மீன்கள் மட்டுமே மாட்டுகின்றன என்று ஒரு வாக்கியம் உண்டு. இப்போது கட்டப்பட்டு வரும் வீடுகள், வணிக வளாகங்களை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. இடிந்து விழக் காத்திருக்கும் எங்கள் வீடு இருக்கும் மனையின் அகலம் 18 அடி இருக்கும். அதில் இரண்டு பக்கமும் தலா மூணரை அடி இடம் விட்டு 11 அடி அகலத்தில் கட்டிடம் கட்டலாம் என்று திட்டமிட்டோம். இதுக்கே ஆயிரத்தெட்டு சிக்கல்கள். மலைமுழுங்கி அதிகாரிகள் பிரச்சனையால் எதுவும் செய்யாமல் நிறுத்திவைத்திருக்கிறோம். ஆனால் பல மோசமான நபர்கள் 18 அடி அகலமுள்ள மனையில் 19 அடிக்கு கட்டிடம் கட்டுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.



எனக்குத் தெரிந்து ஒரு அரசு ஊழியர் (அவரது மனைவியும் அரசு ஊழியர்தான்) பக்கத்துவீட்டுக்காரர் காற்றோட்டத்துக்கு இடம் விடாமல் கட்டினார் என்று புகார்வாசித்தார். நீங்கள் எவ்வளவு இடம் விட்டு கட்டினீர்கள் என்று கேட்டேன். அதற்குள் அவர் எஸ்கேப். கணவனும் மனைவியும் மாதசம்பளமாக சுமார் 1 லட்சம் பெறுகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் இரண்டு மனைகள் வாங்கி சுற்றிலும் இடம் விட்டு பசுமையான சூழ்நிலையில் வீட்டை அமைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் பிசிறு தட்டாமல் இவர்கள் இடத்தில் லஞ்சம் கொடுத்து வீடு கட்டிவிட்டு வெப்பத்தை சமாளிக்க ஏசி போட்டுவிட்டார்கள். இவரைப்போன்றவர்கள் வீட்டை குளுமையாக்கி நாட்டை நெருப்புக்கோளமாக்குகிறார்கள்.



வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் இயன்றவரை காற்றோட்டமுள்ள வீடாக கட்டிக்கொள்வது நாட்டுக்கும் அவர்களுக்கும் நன்மை அளிக்கும். அதுபோல பெரிய வணிக வளாகங்கள் கட்டுபவர்கள் ஆபத்து காலத்தில் மக்கள் சிரமமின்றி வெளியேறும் வகையில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது யார் காதிலும் விழுவதாக தெரியவில்லை.

-----------------------------

2013-2014 கல்வியாண்டில் இருந்து மிகவும் சிரம நிலையில் இருக்கும் அரசுப்பள்ளி குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என்று போன ஆண்டு தீர்மானித்திருந்தோம். அதன்படி இருபது பேர் ஆளுக்கு சுமார் ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தால் கிடைக்கக்கூடிய 10ஆயிரம் ரூபாயை வைத்து எங்களால் முடிந்த அளவு உதவலாம் என்று தீர்மானித்து இப்போது செயலில் இறங்கியிருக்கிறோம்.



ஓரளவு வாய்ப்பு இருக்கக்கூடிய அனைவரும் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். இப்படி நான்கு பேர் ஒன்றாக சேர்வதற்கு வாய்ப்பில்லை என்றால் உங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்மணியின் குழந்தைக்கு உதவுவது கூட சேவைதான். (பலர் இப்படி வெளியில் தெரியாமல் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.) செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இது வரை செய்யாதவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்.

--------------------------------------

கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு, ஆலயத்திருப்பணிகள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்காக...



இளையபாரதம் தளத்தின் முகப்பில் இருக்கும் கும்பாபிசேக அறிவிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த ஆலயம் இருக்கும் தெருவில்தான் எங்கள் வீடு உள்ளது. சில சூழ்நிலைகளின் காரணமாக சிதிலமடைந்திருந்த இந்த ஆலயத்தை 2009ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து முழுவதுமாக இடித்துவிட்டு மீண்டும் புதியதாக கட்டியுள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிசேக விழா வரும் 14.07.2013 அன்று நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தில் தட்டு ஓடு போடும் பணியும் ஆலயம் முழுவதும் வர்ணப்பூச்சு செய்ய வேண்டிய பணியும் யாகசாலை செலவுகளும் காத்திருக்கின்றன. உள்ளூர்வாசிகள் நேரடியாக கோயிலுக்கே வந்து விபரம் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் writersaran@gmail.com க்கு மெயில் அனுப்பினால் தகவல் தெரிவிக்கிறோம்.