Search This Blog

திங்கள், 21 பிப்ரவரி, 2011

வச்சுகிட்டாய்யா வஞ்சகம் பண்றோம்...

இது வடிவேலுவின் காமெடி வசனம். கடந்த 17,18 (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்களும் வெளியூர் பயணம் சென்றிருந்தோம். சனிக்கிழமை காலையில் எட்டரை மணிக்கு மேலாகியும் மின்விநியோகம் இல்லை. வழக்கமாக காலை ஆறு மணிமுதல் எட்டரை மணி வரைதானே துண்டிப்பார்கள் என்று நண்பனிடம் விசாரித்தேன்.

அடடே...இப்பல்லாம் தினமும் மூணு மணி நேரம் பியூசை புடுங்கிடுறாங்களே...இது தெரியாம ஒரு எழுத்தாளர்(?) இருக்கலாமா அப்படின்னு ஐஸ் வெச்சுட்டு போயிட்டான். போறதுக்கு முன்னால "இன்னும் ஒரு மாசம் ஆன பிறகு தினமும் நாலு மணி நேரம், அப்புறம் தேர்தல் முடிஞ்சதும் தினமும் அஞ்சு மணி நேரம் ஆப்புதாண்டி..."ன்னு போனஸ் நியூஸ் வேற.

இதைக் கேட்டதும் அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.(கரண்ட்டே இல்ல...அப்புறம் எப்படி ஷாக் அடிக்கும்னு கேட்க கூடாது.)

2008ம் வருஷம் இப்படி தினமும் அஞ்சு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. காலையில ஆறு மணியில இருந்து ஒன்பது மணி வரை மின் நிறுத்த சேவை தொடங்கும். பிறகு இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிவரை. அடுத்த ஆப்பு ரெண்டு மணி முதல் மூணு வரை. மார்கழி மாசத்துல கூட இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிருக்க மாட்டோம். பல பேருக்கு நள்ளிரவுன்னா இப்படி நரக இரவாகூட இருக்கும்னு புரிய வெச்சாங்க. சென்னையில இருந்தா தெரிஞ்சிருக்காது. குடிசை வீட்டுல வாடகைக்கு இருக்குறவன் கூட சென்னையில எதாவது மந்திரி வீட்டுக்கு பக்கத்துல குடி போனாத்தேவலை போலிருக்கேன்னு பொறாமை பட்ட நேரம் அது.

எங்க தெரு பிள்ளையார் கோவில்ல விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் இரவு தோரணம் கட்டுற வேலையில ஈடுபட்டிருந்தோம். பதினைந்து நிமிட நேரத்திற்கான வேலை மீதம் இருந்த நிலையில் இரவு ரெண்டு மணிக்கு பவர் கட். அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் என்பதால் எதிரில் இருந்தவங்க பல் கூட தெரியாத அளவுக்கு இருட்டு.(வாயை மூடிகிட்டு இருந்துருப்பாங்களோ)

நோக்கியா டார்ச் உபயத்தில் வேலையைத் தொடராமல் இரண்டு தெரு தள்ளி இருந்த மெயின் ரோட்டு டீக்கடைக்கு வந்தோம். 24மணி நேர சர்வீஸ் என்றாலும் ஸ்டவ் எரியும் வெளிச்சத்துடன் ஒரே ஒரு சிம்னி விளக்கு மட்டுமே ஒளி கொடுத்தது. (இருட்டுக்கடை டீ). இந்த லொக்கேஷனுக்கு காரணம், காவல்துறை.

இன்று நண்பன் அதிவிரைவில் அஞ்சுமணி நேரம் கரண்ட் கட் என்றதும் இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிட்டன.

தேர்தல் வர்றதுனால கரண்ட் கட் இருக்காதுன்னு ரொம்ப பேர் பேசிகிட்டு இருந்தாங்களே...அப்படின்னு என் சந்தேகத்தை ஒருத்தர்கிட்ட கேட்டேன். அப்படி ஒரு சூழ்நிலையை கொண்டு வரணும்னு அதிகாரத்துல இருக்குறவங்களுக்கும் ஆசையாத்தான் இருக்கும். ஆனா அவங்க வெச்சுகிட்டாய்யா வஞ்சகம் பண்றாங்க?. இப்படி ஒரு பதில் அவர்கிட்ட இருந்து வந்தது. இடுக்கண் வருங்கால் நகுக அப்படின்னு வள்ளுவர் சொன்னதை தமிழருங்க வேத வாக்காவே எடுத்துகிட்டாங்கன்னு எனக்கு தோணுச்சு.

ஒருத்தர் தன் பையனை போட்டு அடி பின்னிகிட்டு இருந்தார். "ஏன் சார்...பரிச்சையில பெயில் ஆயிட்டானா"ன்னு கேட்டேன்.

அட போங்க சார்...அப்படி பெயிலாயிட்டு வந்து பெயிலாயிட்டேனு சொல்லியிருந்தாதான்  சந்தோசப்பட்டிருப்பேனே. இவன் பள்ளிக்கூடத்துலயே சேரலை. ஆனா பெயிலாயிட்டேன்னு புலம்புறான். அப்படின்னு சொல்லிட்டு பையனை மறுபடி வெளுக்க ஆரம்பிச்சுட்டார். (இதைப் படிச்சுட்டு தமிழ் நாட்டுல மின்வெட்டே இருக்காதுன்னு சிலர் வாக்குறுதி கொடுக்குறதை நினைச்சு மனச குழப்பிக்க கூடாது. ஓ.கே)

புதன், 16 பிப்ரவரி, 2011

என்னதான்யா நடக்குது இங்க?...

சமீப காலமாக நடிகர் விஜய் படங்களில் பேசும் பஞ்ச் டயலாக்குகள் அவரையே பஞ்சராக்கும் அளவுக்கு படங்களை கவிழ்த்து விட்டாலும் அவரது  பல படங்களில் பஞ்ச் டயலாக் ரசிகர்களின் ரத்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது உண்மைதான்.

வாழ்க்கை ஒரு வட்டம். இதன் சுழற்சியில் கீழே இருப்பவன் மேலே போவதும் மேலே இருப்பவன் கீழே போவதும் தவிர்க்க முடியாது. (ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்குறவன் ஜெயிப்பான்- இது பல தோல்விகளுப்பின்பு விஜய்க்கு பெரிய ஹிட் கொடுத்த திருமலை படத்தில் வரும் வசனம்.)

இந்த டயலாக்குல இருக்குற உண்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். கிரிக்கெட்ல அத்தனை பேருக்கும் ஆப்பு வெச்சுகிட்டு இருந்த ஆஸ்திரேலியாவுக்கு இப்போ கஷ்ட காலம் அடிக்கடி எட்டிப் பார்க்குது. உலககோப்பை பயிற்சியின் முதல் ஆட்டத்துல இந்திய அணி முதல் ஆப்பை ஆஸ்திரேலியாவுக்கு வெச்சாச்சு. (உபயம்:ஸ்பின்னர்கள்.) அதே வேகத்துல தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி கொடுத்துட்டாங்க.

ஊரையே அடக்கி ஆள்ற தாதா படத்தின் இறுதி காட்சியில ஹீரோகிட்ட அடி வாங்கும்போது ஊர் மக்கள் கூடி நின்னு சந்தோஷமா வேடிக்கை பார்ப்பாங்க. இப்போ ஆஸ்திரேலியா அடி வாங்கும்போதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மன நிலையிலதான் இருக்காங்கன்னு தோணுது. (ஆஸ்திரேலியா தோற்கணும்னு பயபுள்ளைக யாகம் வளர்க்குறாங்களாம்.)

இரண்டாவது பயிற்சி ஆட்டத்துல இந்தியா நியூசிலாந்துக்கு எதிரா படபடன்னு 360ரன் அடிச்சுட்டாங்க. முன்னால எல்லாம் நியூசிலாந்துக்கு ஒரு கெட்ட பழக்கம். 150ரன்னுக்கு 5 விக்கெட் விழுந்தாலும் அதுக்கப்புறம் விக்கெட்டே விழாம 320 ரன் அடிப்பாங்க. அப்படி எதாவது நடக்குமான்னு பார்த்தேன். ஒண்ணும் நடக்கலை.

நம்ம பசங்களோட ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங் எப்படியோ?


ஆட்டம் 50 ஓவரும் பரபரப்பா இருந்தாதான் பவுலர் பந்துல எச்சி தடவுறதுக்குள்ள எட்டு  விளம்பரம் போட முடியும்னு ரன் குவிக்கிறது மாதிரி பிட்ச் தயார் பண்ணியிருக்காங்களாம்.

அதனால டாஸ் விண் பண்ணின உடனே பனி வரும், புயல் வரும்னு யோசிச்சு முதல் பேட்டிங் எடுக்குறது பெருசு இல்லை.அதுல ஏழு ரன்ரேட்ல அடிச்சு சாத்துனாதான் பொழைக்க முடியும். பார்ப்போம் திரும்பப்போறது 1983 வரலாறா? 2003ம் வருஷம் ஆஸ்திரேலியா நமக்கு வெச்ச ஆப்பான்னு.

பட உதவி:தினமலர் இணையதளம்

வண்டி மூவ் ஆக மாட்டெங்குதே...






2010 அக்டோபர்ல இருந்து வில் போன்னு சொல்ற கிராமத்து வயர்லெஸ் போன் மூலமா இண்டர்நெட் கனெக்ஷன் வாங்கியிருந்தேன். ஒரு டேப் திறந்து பிளாக்ல என்ட்ரி  போடுறப்ப இன்னொரு டேப்ல வேறொரு இணைய தளத்தை ஓப்பன் பண்ணி ரெப்ரஷ் கொடுத்துகிட்டே இருந்தாதான் இணைய இணைப்பு துண்டிக்கப்படாம இருக்கும். இந்த இம்சையில இருந்து எப்படி வெளிய வர்றதுன்னு புரியல. லேண்ட்லைன் இணைப்பு வாங்கி அன்லிமிட்டெட் பிளான் இணைய இணைப்பு கொடுக்க ஆசைதான். ஆனா அந்த போனை பிக்ஸ் பண்ண வர்ற லைன்மேனுக்கு முதல் தடவை காசு கொடுக்குறது கூட பரவாயில்லை. ஆனா அடிக்கடி லைன் ரிப்பேராகும். அவங்களுக்கு அப்பப்போ காசு கொடுக்குறதுக்கு ஊழல் வாதிகளோட பினாமியா இருந்தாதான் முடியும்னு தயங்கினேன்.

இந்த நேரத்துலதான் 3G டேட்டா கார்டு விற்பனைக்கு வந்தது. வாங்கி ஒரு மாசம் சரி ஸ்பீடு. அப்புறம் ஒரு மாசம் அட்டகாசம் பட காமெடிதான்.
ஆட்டோ ஸ்டார்ட் ஆகுது. கியர் விழுகுது. ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குதுன்னு கருணாஸ் புலம்புவாரே. அப்படி ஆயிடுச்சு என் நிலமை.

இணைய இணைப்பு கனெக்ட் ஆகும். GMail மட்டும் வெல்கம் ஸ்கிரீன் மட்டும் ஓப்பன் ஆகும். பாஸ்வேர்ட் கொடுத்த பிறகு பிராஸசசிங் ஆகிகிட்டே இருக்கும்.

பல பேர்கிட்ட கேட்டும் சரியான விடை கிடைக்கலை.

அப்புறம் திருச்சி பிஎஸ் என் எல் அலுவலக ஊழியர் ஒருத்தர் நெட்ஒர்க் செலக்ஷன்ல ஒரு மாற்றம் செய்ய சொன்னார். ஆட்டோமேடிக் மோடுல இல்லாம மேனுவலா வெச்சு UMTS/HSDPA வை டிக் செய்யணும். GPRS மோடுல இருந்தா மொபைல்லதான் ஒர்க் ஆகும். கம்ப்யூட்டர்ல இணைய இணைப்பு ஓப்பன் ஆகாதுன்னார்.

ஆக மொத்தத்துல அந்த மாச டேட்டா எனக்கு டாட்டா காட்டிட்டு பயன்படாமலேயே போயிடுச்சு. கிட்டத்தட்ட அறுநூறு ரூபா வேஸ்ட்.

போனா போகட்டும்னு இந்த மாசம் அன்லிமிட்டெட் பிளான்ல பணம் கட்டினேன். ஒரு MBக்கு ஒரு ரூபா வழிச்சுகிட்டு போனப்ப இருந்த வேகம் இப்போ சுத்தமா அவுட். ரெண்டு மூணு இணைய தளத்தை திறந்து வேலை பார்க்குற நேரத்துக்குள்ள ஹேங்க் ஆயிடுது. அப்புறம் பிரௌசரையும் மோடத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு மறுபடியும் முதல்லேர்ந்து தொடங்க வேண்டியிருக்கு.

அன்லிமிட்டெட் பிளான் அப்படின்னா வேகம் குறையுறது இயல்புதான். ஆனா அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதடவை மோடத்தை நிறுத்தி நிறுத்தி ரீஓப்பன் பண்ற மாதிரி இருக்குறது எந்த ஊர் நியாயம்னு தெரியலை.

ஒரு ஜி.பி ரெண்டு ஜி.பின்னு போடுற பிளான்ல எவ்வளவு டேட்டா மீதி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா டேட்டா கார்டுல இருந்து சிம் கார்டை கழட்டி ஒரு போன்ல போட்டு வாய்ஸ் மெசேஜ் மூலமா கண்டு பிடிக்க வேண்டியிருக்கு. இதுல என்ன சிக்கல்னா அந்த மாசத்துக்குள்ள இலவச டேட்டா காலியாயிட்டா மெயின் பேலன்ஸ் ல இருக்குற தொகை ஒரு எம்.பிக்கு ஒரு ரூபாய்னு புடுங்கிகிட்டு போயிடுது.

இந்த உபயோகம் எல்லாம் எளிமையாக இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலையே.

அன்லிமிட்டெட் பிளானா இருக்குறதாலதான் அஞ்சு நிமிஷத்துல ஹேங்க் ஆயிடுதா இல்ல வேற காரணமான்னு எனக்கு தெரியல. உங்கள்ல யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. புண்ணியமா போகும்.