Search This Blog

சனி, 2 அக்டோபர், 2010

சிவாஜி படத்தின் வசனமும் எந்திரனும்

சிங்கம் மட்டுமல்ல...பல நேரங்களில் கெட்ட விஷயங்களும் சில காலகட்டத்தில் நல்ல விஷயங்களும் கூட சிங்கிளாக வருவதில்லை.
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் ஒழுங்காக சம்பளம் வருவதில்லை. மூன்று வாரங்களுக்கு முன்பு வரை இந்த நிலைதான். ஆனால் இப்போது பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிய என்னைத் தேர்ந்தெடுத்து  பயிற்சி அளித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய வாழ்நாள் லட்சியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத துறையில் பொருளாதார தேவைக்காக வேலை செய்ய நேர்ந்தாலும் கடுமையாக உழைத்து லட்சியத்திலும் வெற்றிக்கொடி நாடிட்டியுள்ளனர்.

ஆனால் எனக்கு குறிக்கோளாக இருந்த துறையிலேயே வேலையும் கிடைத்திருப்பதால் இன்னும் என்னை மெருகேற்றிக்கொண்டு என்னுடைய குறிக்கோளில் அழுத்தமாக சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு நல்ல விஷயம் என்றால், சிறுகதைப் போட்டி ஒன்றில் பதிமூன்று வெற்றியாளர்களில் ஒருவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அந்த விவரம் நாளை உங்களுக்கு அறிவிக்கப்படும். இது தவிர சொந்த வாழ்வில் நான் எடுத்த சில முயற்சிகளும் இப்போது வெற்றியடையத் தொடங்கி உள்ளன.

கடந்த மாதம் தளபதி முதல் எந்திரன் வரை என்ற பதிவில் ரஜினிகாந்த் படங்கள் பற்றியும் வழக்கொழிந்து வரும் பிலிம் புரொஜக்ட்டர் பற்றியும் தொடர் பதிவாக எழுத நினைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். தொடர் வேலைப்பளு காரணமாக அடுத்த பதிவு எழுத முடியவில்லை. இனி ஓரளவு அதைத் தொடருவேன் என்று நம்புகிறேன்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் வெளிவந்த ஆண்டு 1991 என்று நினைக்கிறேன். திருவாரூரில் ஒரு ஏ/சி திரையரங்கில் அந்த படத்திற்குப் பிறகு ரஜினி படங்களே செப்டம்பர் 30, 2010 வரை வரவில்லை.

அதுக்கு இப்போ என்ன என்றுதானே கேட்குறீங்க?...எந்திரன் படம் அந்த தியேட்டரிலும் ரிலீசுங்க. நான் 1996 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் அவ்வப்போது படிப்பு மற்றும் ஆபரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்த அந்த தியேட்டரை தற்போது இயக்குனர் ஷங்கர் வாடகைக்கு எடுத்து இயங்காமல் இருந்த ஏ/சி யை ஏதோ செய்து DTS வசதி செய்து தன் மைத்துனர் மூலமாக நிர்வகித்து வருகிறார். அதனால் இந்த தியேட்டரிலும் எந்திரன் ரிலீஸ்.
(தியேட்டர் படம் மாடலுக்காக மட்டுமே...இது திருவாரூரில் உள்ள தியேட்டர் அல்ல.)

சிறுகதைப் போட்டியில் நான் எந்த பரிசு பெற்றேன் என்ற விபரத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சிவாஜி படத்தின் வசனமும் எந்திரனும்

சிங்கம் மட்டுமல்ல...பல நேரங்களில் கெட்ட விஷயங்களும் சில காலகட்டத்தில் நல்ல விஷயங்களும் கூட சிங்கிளாக வருவதில்லை.
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் ஒழுங்காக சம்பளம் வருவதில்லை. மூன்று வாரங்களுக்கு முன்பு வரை இந்த நிலைதான். ஆனால் இப்போது பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிய என்னைத் தேர்ந்தெடுத்து  பயிற்சி அளித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய வாழ்நாள் லட்சியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத துறையில் பொருளாதார தேவைக்காக வேலை செய்ய நேர்ந்தாலும் கடுமையாக உழைத்து லட்சியத்திலும் வெற்றிக்கொடி நாடிட்டியுள்ளனர்.

ஆனால் எனக்கு குறிக்கோளாக இருந்த துறையிலேயே வேலையும் கிடைத்திருப்பதால் இன்னும் என்னை மெருகேற்றிக்கொண்டு என்னுடைய குறிக்கோளில் அழுத்தமாக சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு நல்ல விஷயம் என்றால், சிறுகதைப் போட்டி ஒன்றில் பதிமூன்று வெற்றியாளர்களில் ஒருவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அந்த விவரம் நாளை உங்களுக்கு அறிவிக்கப்படும். இது தவிர சொந்த வாழ்வில் நான் எடுத்த சில முயற்சிகளும் இப்போது வெற்றியடையத் தொடங்கி உள்ளன.

கடந்த மாதம் தளபதி முதல் எந்திரன் வரை என்ற பதிவில் ரஜினிகாந்த் படங்கள் பற்றியும் வழக்கொழிந்து வரும் பிலிம் புரொஜக்ட்டர் பற்றியும் தொடர் பதிவாக எழுத நினைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். தொடர் வேலைப்பளு காரணமாக அடுத்த பதிவு எழுத முடியவில்லை. இனி ஓரளவு அதைத் தொடருவேன் என்று நம்புகிறேன்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் வெளிவந்த ஆண்டு 1991 என்று நினைக்கிறேன். திருவாரூரில் ஒரு ஏ/சி திரையரங்கில் அந்த படத்திற்குப் பிறகு ரஜினி படங்களே செப்டம்பர் 30, 2010 வரை வரவில்லை.

அதுக்கு இப்போ என்ன என்றுதானே கேட்குறீங்க?...எந்திரன் படம் அந்த தியேட்டரிலும் ரிலீசுங்க. நான் 1996 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் அவ்வப்போது படிப்பு மற்றும் ஆபரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்த அந்த தியேட்டரை தற்போது இயக்குனர் ஷங்கர் வாடகைக்கு எடுத்து இயங்காமல் இருந்த ஏ/சி யை ஏதோ செய்து DTS வசதி செய்து தன் மைத்துனர் மூலமாக நிர்வகித்து வருகிறார். அதனால் இந்த தியேட்டரிலும் எந்திரன் ரிலீஸ்.
(தியேட்டர் படம் மாடலுக்காக மட்டுமே...இது திருவாரூரில் உள்ள தியேட்டர் அல்ல.)

சிறுகதைப் போட்டியில் நான் எந்த பரிசு பெற்றேன் என்ற விபரத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வன்முறை ஒருபோதும் தீர்வு ஆகாது

கிருஷ்ணகிரி அருகே உள்ள பள்ளியில் அந்த கல்வி நிறுவனத்தின் பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தின் ஓட்டுநருக்கு உரிமம் இல்லை, அதிகவேகம், பிரேக் இல்லை என்று பல வித செய்திகள் பரவி வருகின்றன. இதில் எது உண்மையோ இல்லையோ, அந்த மாணவன் இந்த உலகத்தில் இல்லை என்பது மட்டும் கலங்க வைக்கும் உண்மை.

பணம் கட்டாத மாணவனை வகுப்புக்குள் விடாமல் திருப்பியனுப்பியிருக்கிறார்கள். அவன் பணம் வாங்கி வருவதற்காக வீட்டுக்கு திரும்பிய நேரத்தில்தான் விபத்து நடந்திருக்கிறது என்பது வெளியில் சொல்லப்படும் செய்தி. கல்வி கடை வியாபாரமாக்கிவிட்டதன் மிகச் சிறிய எதிரொலிதான் இது. தன்னால் பணம் கட்ட சிரமமாக இருக்கும் என்று தெரிந்தும், அரசுப்பள்ளிகள் அல்லது வேறு பள்ளிகளை நாடாமல் இந்தப் பள்ளியில் தன் மகனை சேர்த்தது அந்த தந்தையின் தவறா?

பல அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்க விடாமல் வைத்திருப்பது அரசின் தவறா?

மாணவன் இறந்த சிறிது நேரத்திலேயே பள்ளிக்கூடத்தை சூறையாடியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தப் பள்ளியின் மீது கோபம் என்பது மட்டும் தெரிகிறது.

வீட்டில் பிள்ளையை அடித்து அல்லது கண்டித்து வளர்க்கவில்லை என்றால் அதை வெளியில் யாராவது செய்வார்கள். நமக்கு நாமே சுயக்கட்டுப்பாடு செய்துகொள்ளவில்லை என்றால் காவல்துறையினர் அந்தப் பணியை நிறைவேற்றுவார்கள்.

நாட்டில் தொண்ணூறு சதவீத பள்ளிகள் ஏதோ ஒரு விதியை மீறிதான் செயல்பட்டு வருகின்றன.அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசு மவுனமாக இருப்பதால்தான் மக்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது இம்மாதிரியான வன்முறையில் இறங்கி விடுகிறார்கள்.

இதை நான் நியாயப்படுத்தவே இல்லை. அரசுப்பள்ளிகளை தத்தளிக்கவைத்துவிட்டு தனியார் பள்ளி முதலாளிகளின் வருமானத்துக்கு மறைமுகமாக உடந்தையாக இருப்பது யார் குற்றம்?

தனியார் பள்ளிகள் எப்படி வேண்டுமானாலும் கொள்ளை அடித்துச் செல்லட்டும். நாட்டில் ஏழைகள் கல்வி கற்க அரசுப்பள்ளிகள் உருப்படியாக செயல்பட வைப்பதை அரசு தன் கடமையாக அல்லவா செய்ய வேண்டும்.

ஒரு மாணவனின் உயிர் போனது யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்புதான். ஆனால் அதற்காக பள்ளியை நாசமாக்கி சான்றிதழ்களை எரித்து மிக அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதேல்லாம் மன்னிக்கவே முடியாத குற்றம்.

இப்போதெல்லாம் படித்து நல்ல பணியில் இருப்பவர்கள் கூட குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள். முதலில் பாமரன் முதல் படித்தவன் வரை சாலை விதிகளை மதித்து விபத்து இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பயணத்தை தொடங்குவோம்.இது உடனடியாக சாத்தியம் இல்லை என்று எனக்கும் தெரியும். அப்படி உடனடியாக நடந்து விடுமா என்று நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க வேண்டும்.

இப்படியா நம்முடைய வசதிக்காக கண்டறிந்த வாகனத்தால் நம் உயிரையே அழித்துக் கொள்வது?

இப்படி எதாவது ஒரு சம்பவம் நடந்தால் பதிவு எழுதத்தான் உனக்கு தெரியும். வேற என்ன செய்யுற அப்படின்னு நீங்க கேட்கலாம்.சைக்கிளோ, மோட்டார் சைக்கிளோ...அவற்றை சாலைவிதிகளை மதித்து இயக்கி வருகிறேன். பார்க் செய்யும்போது அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் நிறுத்துவேன். ஏதோ என்னால் முடிந்தது.