Search This Blog

ஒரு செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 அக்டோபர், 2017

கிரிவலம் சென்றவர் மலையுச்சியில் இருந்து தவறி விழ என்ன காரணம்?



திருச்சி மாவட்டம், சஞ்சீவராயன் பெருமாள் கோவிலில் 2 அங்குலத்துக்கு குறைவாக விளிம்புகள் உள்ள சுவரில் கிரிவலம் வர முயன்ற நபர் தவறி விழுந்து மரணம் அடைந்ததற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? 






தவறி விழுந்த நபருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.





இந்த தகவல் உண்மையா இல்லையா என்று நான் விவாதிக்கப்போவதில்லை.





ஆனால் அந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், குழந்தை இல்லை என்ற விஷயத்தால் இவ்வளவு ஆபத்தான நேர்த்திக்கடனை செலுத்த ஒரு நபர் துணிந்திருக்கிறார் என்றால் அந்த நபர் தன்னுடைய அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த சமுதாயத்தால் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கக்கூடும்?




பழங்காலத்தைப் போல் குழந்தை இல்லை என்றால் பெண்ணை கொளுத்தி விடுவது, விவாகரத்து செய்துவிடுவது, இரண்டாவது திருமணம் செய்வது போன்று கொடுஞ்செயல்கள் அவ்வளவாக நடைபெறுவதில்லை என்றாலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மன உளைச்சலை தரும் வேலையை சமுதாயம் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.