Search This Blog

திங்கள், 16 அக்டோபர், 2017

தீப ஒளி



தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது திருமலை வீதி. பாதி தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டிடங்கள். அதைத் தாண்டி ஆற்றின் கரையை நெருங்க நெருங்க சாலையின் இரு புறமும் குடிசைப் பகுதிகள். செங்கல்வர், மண்வர், கீற்றுத்தடுப்பு, ஏன் சுவரே இல்லாமல் கூரை மட்டும் உள்ள வீடுகளும் (?) உண்டு. இந்தியாவின் சமத்துவத்தை இதில் அறிந்து கொள்ளலாம்.



















 மறுநாள் தீபாவளி. பலருடைய வீடுகளில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டதற்கு அடையாளமாக பட்டாசு ஒலிகள் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தன. அந்த இருந்த நேரத்தில் திருமலை வீதியில் மண்வர், மண்தரையால் ஆன ஒரு வீட்டில் இருட்டும் நேரத்தில் விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. உழைத்த களைப்பு நீங்க வேண்டும் என்று குடிபானம் அருந்தி வந்த முனியப்பன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அந்த வீட்டையே கலவரம் நடந்த கடைவீதியாக்கிவிட்டுப் போயிருந்தான்.


மயக்கம் தெளிந்த வளர்மதி மெள்ள கண்களைத் திறந்தாள்.








உடலில் எந்த பாகமும் மிச்சம் இல்லாமல் வலித்துக் கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். தரை முழுவதும் சோற்றுப் பருக்கைகள் சிதறிக் கிடக்க, பேராசிரியர் வீட்டில் இருந்து எடுத்து வந்த குழம்பு தரை முழுவதும் கொட்டி நாற்று நடத் தயாராக இருக்கும் வயல்போல் ஆகியிருந்தது. தீபாவளிக்காக என்று அவர்கள் கொடுத்திருந்த ஆடைகளும், பலகாரங்களும் முனியப்பனின் வன்முறையில் தப்பவில்லை.

நெற்றியில் வலி மிக அதிகமாகவே இருக்க, இடது கைவிரல்களால் லேசாகத் தடவிப் பார்த்தாள். எலுமிச்சைப்பழத்தின் ஒரு பாதியைக் கவிழ்த்து வைத்தது போல் வீங்கியிருந்தது. அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து நிலைப்படியில் மோதியும் ஆத்திரம் அடங்காத முனியப்பன், கீழே தள்ளி கண்ட இடத்திலும் மிதித்துவிட்டு வெளியேறியது நினைவுக்கு வரவும் அவள் கண்கள் மீண்டும் கலங்கின.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக