Search This Blog

திங்கள், 27 மே, 2013

குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது





கடந்த சில நாட்களாக வாயுபகவான் ஓரளவு கைகொடுத்துவருவதால் மின் வேட்டு அவ்வளவாக இல்லை. ஆனால் என் அலுவலகம் இருக்கும் காம்ப்ளக்சில் மின்கட்டணம் கட்டாததால் ப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட்டார்கள். சரியாக தொடர்ந்து 27 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் இந்த மாத வாடகையை கொடுக்கும் அளவுக்கு தொகை கிடைக்க வேண்டிய ஆர்டர் கைநழுவிப்போனது தனிக்கதை.


வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தில் தொல்லைக்காட்சியின் சேனலை அவ்வப்போது பார்ப்பது உண்டு. நான் சேனல் மாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் மற்றும் கே.டிவியை கடந்து செல்லும்போது கூட திடீர் திடீர் என்று குட்டிப்புலி டீசர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு கோடிரூபாய் கொடுத்தால்கூட எதாவது புரோகிராம் ஓடிக்கொண்டிருக்கும்போது சட்டென்று நிறுத்தி டீசரை ஒளிபரப்பிவிட்டு அடுத்து விளம்பரத்துக்கு போவார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் கையில் படம் சென்றுவிட்டால் அசுரபலத்துடன் இப்படி ஒரு படம் வரப்போகிறது என்று மக்களுக்கு விசயம் போய் சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இப்போது குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது என்று சொல்லலாம்.


50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பு முடித்தாலே அருமையான அரசுப்பணி நிச்சயம். அடுத்து 69-80களில் கல்லூரி முடித்திருந்தால் வேலை நிச்சயம் என்றிருந்தது. ஆனால் இப்போது கல்லூரிப்படிப்பையும் ஏதாவது ஒரு சிறந்த கல்லூரியில் முடித்தாலோ அல்லது மாணவன் தன் திறமையை நிரூபித்தாலோதான் வேலை என்றாகிவிட்டது. அதுவும் தனியார் துறையில் அந்த வேலையை தக்கவைக்க தினம் தினம் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது.


சினிமாவின் கதையும் இப்படித்தான். 20ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு படம் எடுத்துவிட்டால் எப்படியாவது தியேட்டரில் வெளியிட்டு எதாவது காசுபார்த்துவிடலாம் என்ற நிலை இருந்தது. அப்போது வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு வேறு விசயம் என்றால் அக்கம்பக்கத்து ஊர்வம்புதான். ஆனால் இப்போது படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பும் முயற்சியில் தொல்லைக்காட்சியும், இளையதலைமுறையை அடிமையாக்கும் விசயத்தில் இணையமும் வெற்றிபெற்றுவிட்டன. இப்போது ஒரு படத்தை எடுப்பதை விட இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திறமைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்த வகையில் சன்பிக்சர்ஸ், உதயநிதிஸ்டாலின் ஆகியோர் மூலம் வெளியிடப்படும் படங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றே சொல்லலாம்.


ஒரு படத்துக்கு இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நாளிதழ்களில் நன்றாக விளம்பரம் செய்யப்பட்டும் வேறு சில பிரச்சனைகளால் ரிலீசாகவில்லை. அந்த வகையில் விளம்பரத்துக்காக சுமார் 40 லட்சம் வரை நஷ்டம். இப்போது 15 லட்சம் வரை செலவு செய்து மூன்றாவது முயற்சியில் படத்தை ரிலீஸ் செய்தாயிற்று. ஆனால் படம் வந்தது யாருக்கும் தெரியவில்லை என்று அந்த படத்தின் இயக்குனர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்து போனது.


சமீபகாலமாக என் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தியேட்டரில்தான் உதயநிதிஸ்டாலினின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின்றன. குட்டிப்புலியும் அதில்தான் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும். மற்ற விசயங்களும் (வெற்றி) நல்லபடியாக நடந்தேற வாழ்த்துக்கள்.



Image Credit : searchtamilmovies


குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது

கடந்த சில நாட்களாக வாயுபகவான் ஓரளவு கைகொடுத்துவருவதால் மின் வேட்டு அவ்வளவாக இல்லை. ஆனால் என் அலுவலகம் இருக்கும் காம்ப்ளக்சில் மின்கட்டணம் கட்டாததால் ப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட்டார்கள். சரியாக தொடர்ந்து 27 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் இந்த மாத வாடகையை கொடுக்கும் அளவுக்கு தொகை கிடைக்க வேண்டிய ஆர்டர் கைநழுவிப்போனது தனிக்கதை.

வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தில் தொல்லைக்காட்சியின் சேனலை அவ்வப்போது பார்ப்பது உண்டு. நான் சேனல் மாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் மற்றும் கே.டிவியை கடந்து செல்லும்போது கூட திடீர் திடீர் என்று குட்டிப்புலி டீசர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு கோடிரூபாய் கொடுத்தால்கூட எதாவது புரோகிராம் ஓடிக்கொண்டிருக்கும்போது சட்டென்று நிறுத்தி டீசரை ஒளிபரப்பிவிட்டு அடுத்து விளம்பரத்துக்கு போவார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் கையில் படம் சென்றுவிட்டால் அசுரபலத்துடன் இப்படி ஒரு படம் வரப்போகிறது என்று மக்களுக்கு விசயம் போய் சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இப்போது குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது என்று சொல்லலாம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பு முடித்தாலே அருமையான அரசுப்பணி நிச்சயம். அடுத்து 69-80களில் கல்லூரி முடித்திருந்தால் வேலை நிச்சயம் என்றிருந்தது. ஆனால் இப்போது கல்லூரிப்படிப்பையும் ஏதாவது ஒரு சிறந்த கல்லூரியில் முடித்தாலோ அல்லது மாணவன் தன் திறமையை நிரூபித்தாலோதான் வேலை என்றாகிவிட்டது. அதுவும் தனியார் துறையில் அந்த வேலையை தக்கவைக்க தினம் தினம் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது.

சினிமாவின் கதையும் இப்படித்தான். 20ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு படம் எடுத்துவிட்டால் எப்படியாவது தியேட்டரில் வெளியிட்டு எதாவது காசுபார்த்துவிடலாம் என்ற நிலை இருந்தது. அப்போது வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு வேறு விசயம் என்றால் அக்கம்பக்கத்து ஊர்வம்புதான். ஆனால் இப்போது படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பும் முயற்சியில் தொல்லைக்காட்சியும், இளையதலைமுறையை அடிமையாக்கும் விசயத்தில் இணையமும் வெற்றிபெற்றுவிட்டன. இப்போது ஒரு படத்தை எடுப்பதை விட இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திறமைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்த வகையில் சன்பிக்சர்ஸ், உதயநிதிஸ்டாலின் ஆகியோர் மூலம் வெளியிடப்படும் படங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றே சொல்லலாம்.

ஒரு படத்துக்கு இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நாளிதழ்களில் நன்றாக விளம்பரம் செய்யப்பட்டும் வேறு சில பிரச்சனைகளால் ரிலீசாகவில்லை. அந்த வகையில் விளம்பரத்துக்காக சுமார் 40 லட்சம் வரை நஷ்டம். இப்போது 15 லட்சம் வரை செலவு செய்து மூன்றாவது முயற்சியில் படத்தை ரிலீஸ் செய்தாயிற்று. ஆனால் படம் வந்தது யாருக்கும் தெரியவில்லை என்று அந்த படத்தின் இயக்குனர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்து போனது.

சமீபகாலமாக என் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தியேட்டரில்தான் உதயநிதிஸ்டாலினின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின்றன. குட்டிப்புலியும் அதில்தான் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும். மற்ற விசயங்களும் (வெற்றி) நல்லபடியாக நடந்தேற வாழ்த்துக்கள்.

Image Credit : searchtamilmovies

ஞாயிறு, 26 மே, 2013

உள்ளம் உருக வைத்த டி.எம்.எஸ்



குரலிசை மன்னர் டி.எம்.செளந்தர்ராஜன் அவர்கள் நேற்று (25-5-2013)ல் 91 வயதில் காலமானதும் வயது வித்தியாசமின்றி பலருக்கும் அவரது திரை இசைப்பாடல்களும் பக்திப்பாடல்களும் நினைவிற்கு வந்திருக்கும்.



டி.எம்.எஸ் சுமார் 10ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதாக கூறுகிறார்கள். இவற்றில் நான் 150 பாடல்களை கேட்டிருந்தால் பெரிய விசயம். அந்த பாடல்களில் கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே இப்போது கேட்கும்போது கூட மனம் லேசாவதை உணர முடியும்.



டி.எம்.எஸ் என்ற சகாப்தத்தை பற்றி பேசுவதற்கு என்னிடம் விசயம் இல்லை. 1997 கோடை விடுமுறைக்காலம். நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தேன். சில பிரச்சனைகளால் மூடப்பட்டிருந்த அந்த திரையரங்கம் சில மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டபோது தேவரின் தெய்வம் படம் திரையிடப்பட்டது. அந்த படத்தில் ஆறு பாடல்களுமே பிரபல பாடகர்களை வைத்தே படமாக்கப்பட்டிருக்கும். சீர்காழி எஸ்.கோவிந்தராஜனும், டி.எம்.செளந்தர்ராஜனும் இணைந்து திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் என்று பாடும்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற அளவில் மனம் அந்த பாடலையும் இசையையும் விரும்பியது.



மூன்று நாட்கள் மட்டும் அந்தப்படம் திரையிடப்பட்டாலும் மூன்றுநாட்களும் 12 காட்சிகள் திரையிடப்பட்டதில் சுமார் 4ஆயிரம் பேர் பார்த்திருப்பார்கள். எல்லா பாடல்காட்சிகளிலும் படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கைகள் தாளம்போடத்தவறியதில்லை. திரைப்படக்கருவியை இயக்கி டி.எம்.எஸ் தோன்றிய பாடல்காட்சியுடன் தெய்வம் படத்தை திரையிடும் வாய்ப்பு கிடைத்தது இப்போது என் நினைவில் பசுமையாக இருக்கிறது.





Image Credit : Dinamalar




எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமின்றி சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலை நாகேஷூக்காக பாடிய பாடலும் மற்றும் பக்திப்பாடல்களும் இப்போதும் கேட்க கேட்க அலுப்பு தட்டாமல் இருக்கும். அவர் பாடிய பாடல்களை என்ன படம், யார் நடிகர் என்பது தெரியாவிட்டாலும் ரசிக்கலாம். அதுதான் டி.எம்.எஸ்.