Search This Blog

திங்கள், 20 மே, 2013

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா?





ஒரு வேலையைச் செய்வது போல் போக்கு காட்டுபவர்களும், சும்மா இருப்பவர்களும்தான் உண்மையாக வேலை செய்பவர்களைவிட, அதிகமாய் வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.



அந்த பணி இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.



"ஏம்ப்பா...அவன் சும்மாதான இருக்கான். இந்த வொர்க்க அவன்கிட்ட கொடுங்க...'



"நீங்க ஃப்ரீயாத்தான இருக்கீங்க...கொஞ்சம் இவருக்கு ஹெல்ப் பண்ணுங்க...'



இப்படி எல்லா வேலைகளிலும் கொஞ்சம் பங்கு இவருக்கு ஒதுக்கப்பட்டு, கடைசியில் இவர் செய்கிற வேலையைப் பார்த்தால் அது எல்லோரையும் விட அதிக அளவில்தான் இருக்கும். இதற்கு உருப்படியாக ஒரே வேலையில் தன்னை ஐக்கியப்படுத்தி விட்டுப் போய்விடலாம். அப்போது அவரை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.



"அவர் அந்த வேலைல பிஸி' என்பார்கள்.



இந்த வரிகள் 27.05.2013 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளிவந்த ஷங்கர்பாபு எழுதிய  "வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வேலை வரும்'' கட்டுரையின் ஒருபகுதி.



80களின் இறுதி மற்றும் 90களின் பிற்பகுதி வரை வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில் (இப்போது போல் வேலைவாய்ப்பு பெருகாத நேரத்தில்) வீட்டுக்குவீடு வேலை இல்லாத இளைஞர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. அதை மையப்படுத்திதான் அந்த காலகட்டத்தில் பல தமிழ் திரைப்படங்களும் வந்தன.



இப்போது அந்த மாதிரி கதைகளுடன் படங்கள் வராததால் தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் ஒழிந்து இளைஞர்கள் அனைவரும் பிசியாகிவிட்டதாக நாம் தப்பாக நினைக்க கூடாது.



உண்மையில் எந்த ஒரு வேலையை செய்வதை விட சும்மா இருக்குறது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப கஷ்டம்தான்.

---------------------------

கடந்த ஆண்டு ஒரு சில நண்பர்கள் இணைந்து ஒவ்வொருவராலும் முடிந்த அளவு பணம் போட்டு கிராமப்புற அரசுப்பள்ளியில் மிக மிக வறுமை சூழலில் சிக்கியிருக்கும் மாணவர்களில் குறைந்தது 10 பேருடைய கல்விச்செலவையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.



இப்போது அந்த டிரஸ்ட்டுக்கு என்ன பெயர் என்று முடிவு செய்து விட்டோம். அதை பதிவு செய்த பிறகு விவரம் எழுதுகிறேன். அதில் என்னுடைய பங்களிப்பு வெளியில் சொல்லும் அளவுக்கு பெரிய தொகை இல்லை. ஏன்னா நம்ம பொருளாதாரம் அப்படி.



டிரஸ்ட் வைச்சது கணக்கு வழக்கை முறைப்படுத்த மட்டுமே. எங்களில் ஒருவரது முகவரியை டிரஸ்ட்டுக்கு பயன்படுத்துதல், பணத்தை சேர்த்து பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் செலவழித்தல் இது மட்டுமே நோக்கம். டிரஸ்ட் தொடர்பாக வேறு எந்த செலவுகளும் செய்து பணத்தை வீணடிக்கும் நோக்கம் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்ய 1 லட்சத்தில் விழா எடுப்பவர்களைப் பார்த்துப் பார்த்து நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்ற முடிவில் இருக்கிறோம்.



இளைஞர்கள் பலர் வெளியில் தெரியாமல் இது போன்று எவ்வளவோ உதவிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணி தொடரட்டும். நாங்களும் இது போன்று சிலர் உதவி செய்வதைப்பார்த்துதான் இந்த குறிக்கோளுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து செயலில் இறங்கியிருக்கிறோம்.

---------------------------

திருவாரூர் திருமஞ்சனவீதி-காரைக்காட்டுத்தெரு சந்திப்பில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார்கோவில் திருப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. 14-07-2013 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா.



இன்னும் 500 சதுரடி பரப்பு கொண்ட மண்டபத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதிக்கும் பணியும் பெயிண்டிங், யாகசாலை பணிகளும் காத்திருக்கின்றன. இப்போதைக்கு எங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்துவிட்டோம். ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்று சொல்வதுபோல் 10 பேர் சேர்ந்து கட்ட வேண்டியது கோவில். ஒருவரோ, இருவரோ மட்டும் செலவழிக்க கூடாது. கோவில் போன்றவற்றில் ஒவ்வொரு கல்லிலும் பலரது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.



திருவாரூரில் உள்ள நண்பர்களும் சரி, நீங்கள் எந்த ஊரில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு இந்த திருப்பணியில் பங்கேற்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும். திருப்பணியில் பங்கேற்றாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடமுழுக்கு விழாவை கண்டு தரிசனம் செய்ய வாருங்கள். இந்த தளத்திலேயே அழைப்பிதழ் உள்ளது.

-------------------

Image Credit : http://www.tamilspider.com

பெருநாட்டுப்பிள்ளையார் கோவில் பற்றி தினகரன் ஆன்மிகம் இதழில் வெளிவந்த கட்டுரை


சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா?

ஒரு வேலையைச் செய்வது போல் போக்கு காட்டுபவர்களும், சும்மா இருப்பவர்களும்தான் உண்மையாக வேலை செய்பவர்களைவிட, அதிகமாய் வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அந்த பணி இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.

"ஏம்ப்பா...அவன் சும்மாதான இருக்கான். இந்த வொர்க்க அவன்கிட்ட கொடுங்க...'

"நீங்க ஃப்ரீயாத்தான இருக்கீங்க...கொஞ்சம் இவருக்கு ஹெல்ப் பண்ணுங்க...'

இப்படி எல்லா வேலைகளிலும் கொஞ்சம் பங்கு இவருக்கு ஒதுக்கப்பட்டு, கடைசியில் இவர் செய்கிற வேலையைப் பார்த்தால் அது எல்லோரையும் விட அதிக அளவில்தான் இருக்கும். இதற்கு உருப்படியாக ஒரே வேலையில் தன்னை ஐக்கியப்படுத்தி விட்டுப் போய்விடலாம். அப்போது அவரை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

"அவர் அந்த வேலைல பிஸி' என்பார்கள்.

இந்த வரிகள் 27.05.2013 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளிவந்த ஷங்கர்பாபு எழுதிய  "வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வேலை வரும்'' கட்டுரையின் ஒருபகுதி.

80களின் இறுதி மற்றும் 90களின் பிற்பகுதி வரை வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில் (இப்போது போல் வேலைவாய்ப்பு பெருகாத நேரத்தில்) வீட்டுக்குவீடு வேலை இல்லாத இளைஞர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. அதை மையப்படுத்திதான் அந்த காலகட்டத்தில் பல தமிழ் திரைப்படங்களும் வந்தன.

இப்போது அந்த மாதிரி கதைகளுடன் படங்கள் வராததால் தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் ஒழிந்து இளைஞர்கள் அனைவரும் பிசியாகிவிட்டதாக நாம் தப்பாக நினைக்க கூடாது.

உண்மையில் எந்த ஒரு வேலையை செய்வதை விட சும்மா இருக்குறது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப கஷ்டம்தான்.
---------------------------
கடந்த ஆண்டு ஒரு சில நண்பர்கள் இணைந்து ஒவ்வொருவராலும் முடிந்த அளவு பணம் போட்டு கிராமப்புற அரசுப்பள்ளியில் மிக மிக வறுமை சூழலில் சிக்கியிருக்கும் மாணவர்களில் குறைந்தது 10 பேருடைய கல்விச்செலவையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.

இப்போது அந்த டிரஸ்ட்டுக்கு என்ன பெயர் என்று முடிவு செய்து விட்டோம். அதை பதிவு செய்த பிறகு விவரம் எழுதுகிறேன். அதில் என்னுடைய பங்களிப்பு வெளியில் சொல்லும் அளவுக்கு பெரிய தொகை இல்லை. ஏன்னா நம்ம பொருளாதாரம் அப்படி.

டிரஸ்ட் வைச்சது கணக்கு வழக்கை முறைப்படுத்த மட்டுமே. எங்களில் ஒருவரது முகவரியை டிரஸ்ட்டுக்கு பயன்படுத்துதல், பணத்தை சேர்த்து பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் செலவழித்தல் இது மட்டுமே நோக்கம். டிரஸ்ட் தொடர்பாக வேறு எந்த செலவுகளும் செய்து பணத்தை வீணடிக்கும் நோக்கம் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்ய 1 லட்சத்தில் விழா எடுப்பவர்களைப் பார்த்துப் பார்த்து நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்ற முடிவில் இருக்கிறோம்.

இளைஞர்கள் பலர் வெளியில் தெரியாமல் இது போன்று எவ்வளவோ உதவிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணி தொடரட்டும். நாங்களும் இது போன்று சிலர் உதவி செய்வதைப்பார்த்துதான் இந்த குறிக்கோளுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து செயலில் இறங்கியிருக்கிறோம்.
---------------------------
திருவாரூர் திருமஞ்சனவீதி-காரைக்காட்டுத்தெரு சந்திப்பில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார்கோவில் திருப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. 14-07-2013 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா.

இன்னும் 500 சதுரடி பரப்பு கொண்ட மண்டபத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதிக்கும் பணியும் பெயிண்டிங், யாகசாலை பணிகளும் காத்திருக்கின்றன. இப்போதைக்கு எங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்துவிட்டோம். ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்று சொல்வதுபோல் 10 பேர் சேர்ந்து கட்ட வேண்டியது கோவில். ஒருவரோ, இருவரோ மட்டும் செலவழிக்க கூடாது. கோவில் போன்றவற்றில் ஒவ்வொரு கல்லிலும் பலரது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

திருவாரூரில் உள்ள நண்பர்களும் சரி, நீங்கள் எந்த ஊரில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு இந்த திருப்பணியில் பங்கேற்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும். திருப்பணியில் பங்கேற்றாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடமுழுக்கு விழாவை கண்டு தரிசனம் செய்ய வாருங்கள். இந்த தளத்திலேயே அழைப்பிதழ் உள்ளது.
-------------------
Image Credit : http://www.tamilspider.com
பெருநாட்டுப்பிள்ளையார் கோவில் பற்றி தினகரன் ஆன்மிகம் இதழில் வெளிவந்த கட்டுரை

வியாழன், 9 மே, 2013

தேர்வுக்காய்ச்சல்





இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின்றன. இன்று தொலைக்காட்சிகளிலும் நாளை நாளிதழ்களிலும் டெம்ப்ளேட்டாக சில செய்திகள் வெளியாகும். அதாவது வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தனியார் பள்ளிகள் அதிகளவில் சிறப்பிடங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டுள்ளன. ஆனால் சில அரசுப்பள்ளி மாணவர்களும் சாதனை செய்திருக்கிறார்கள் என்ற வகையில் அந்த செய்திகள் இருக்கும்.




இந்த டெம்ப்ளேட் செய்திகள் வரிசையில் தேர்வில் தோல்வி அல்லது தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை, மாணவன் தண்டவாளத்தில் தலையைக்கொடுத்தார் ஆகிய செய்திகளும் இடம்பிடிப்பதுதான் வேதனை.



அடிப்படைக்கல்வியான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்று ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சியடைய வேண்டியது அவசியம்தான். ஆனால் எல்லோராலும் அது முடிகிற காரியமில்லை. ஏனெனில் ஒவ்வொருவருடைய திறனும் ஒவ்வொரு வகையில் மாறுபடும். இந்த தேர்வுகளில் 35 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டாலோ, பொறியியல் படிப்பில் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் மகன் பார்டரில் பாஸ் செய்தாலோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்காக டார்ச்சர் கொடுத்து அவர்கள் பிள்ளைகள் தற்கொலை முடிவு வரை செல்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.



உயிருடன் இருந்தால் உலகையே வெல்லலாம். இப்படி யாருக்கும் பயனில்லாமல் உயிரை மாய்த்துக்கொண்டால் பெற்றோர்கள் கூட சில நாட்களில் அல்லது சில மாதங்களில் உங்களை மறந்துவிடுவார்கள் என்பதை தடுமாறும் மாணவர்கள்/மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.



சில காரணங்களால் நான் 1999ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுத முயற்சித்தேன். தேர்வுக்கட்டணம் கட்டியநபர் ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தியதால் ஹால் டிக்கெட் வரவில்லை. தில்லுமுல்லு செய்து தேர்வெழுத முயற்சிக்க கூடாது என்று தேர்வுத்துறையிடமிருந்து எனக்கு எச்சரிக்கை கடிதம்தான் வந்தது. சுற்றி இருந்தவர்கள் நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை போலிருக்கு. அதனால்தான் இப்படி ஹால்டிக்கெட் வராம போயிடுச்சு. நீ பேசாம இப்போ பார்த்த வேலையையே தொடர்ந்து செய் என்றார்கள்.



அப்படி பேசியவர்கள் மீது கோபம் வந்தாலும் என் மன எண்ணம் வேறு



விதமாக சிந்தித்தது. 1ஆம் வகுப்பில் இருந்து இதுவரை ஒரு முறை கூட பெயிலாகாமல் இருந்தோம். இப்போதும் நான் தேர்வு எழுதினால் பெயில் ஆக வாய்ப்பில்லை. அதனால் தேர்வு எழுதவிடாமல் செய்யவே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று மனதை நானே தேற்றிக்கொண்டேன். அது தவிர அரசுக்கல்லூரிகளில் இப்போதும் டிமாண்டாக இருக்கும் துறையான வணிகவியல் துறையில்தான் சேருவேன். அதிலும் மெரிட்டில் இடம் பிடிப்பேன் என்று எனக்கு நானே இலக்கு வைத்துக்கொண்டு 1999 செப்டம்பரில் தேர்வெழுதினேன்.



இப்போதும் பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் விருப்பத்துக்காகதான் படிக்கிறார்களே தவிர சொந்த விருப்பத்தில் அல்ல. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நமது கல்வி முறை தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது. அதில் சாதிப்போம் என்று யோசிக்க கூட விடாத அளவுக்கு இயந்திரத்தனமாக இருக்கிறது என்ற கருத்து எனக்கு உண்டு. அப்படி எல்லாம் இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று நீங்கள் சொல்லலாம். அது உண்மையாக இருந்தாலும் இது தொடக்க நிலைதான். நமது கல்விமுறை இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.



2007ஆம் ஆண்டு தேர்வுக்காய்ச்சல் என்ற தலைப்பில் சமநிலைச்சமுதாயம் என்ற சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். அந்த படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி படிக்கலாம்.