Search This Blog

வியாழன், 11 ஏப்ரல், 2013

ஜெமினி - ஏவிஎம் - நேரம் தவறாமை







12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)



ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.



ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.



திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.



இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.



ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.



ஒரு சின்ன விசயம். எந்த ஒரு விசயத்திலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது என் வழக்கம். ஆனால் நான் செய்து வரும் டி.டி.பி தொழிலில் என்னால் பல நேரங்களில் குறித்த நேரத்தில் பணி செய்து கொடுக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையை இப்போது என்னால் வெல்லமுடியவில்லை. அதற்கு காரணம் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான்.



சில நாட்களில் காலை முதல் மாலை வரை எந்த வேலையும் இருக்காது. கடந்த பல ஆண்டுகளாக மாலை 6 மணிக்கு கரண்ட் போய்விடுகிறது. இது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் மிஸ்டர் பப்ளிக் ஒருவர் மாலை 5.45 மணிக்கு வந்து இரண்டு பக்க மேட்டரை டைப் செய்து உடனே பிரிண்ட் எடுக்க வேண்டும் என்பார். நாம என்ன குமுதம், ஆனந்தவிகடனா பிரிண்ட் செய்து வெச்சிருக்கோம். காசை வாங்கிட்டு உடனே எடுத்துக்கொடுக்க.



டி.டி.பி என்பது வரும் வாடிக்கையாளருக்காக அவருக்கு சொந்தமான அவருக்கு மட்டுமே பயன்படக்கூடிய விசயத்தை டைப்செய்து தருவதாகத்தான் இருக்கும். ஒரே ஒரு பக்கத்தை டைப் செய்து 50ஆயிரம் ஜெராக்ஸ் போட்டு தரும் வேலையல்ல என்பதை வாடிக்கையாளருக்கு விளங்க வைக்கவே பாதி எனர்ஜி வேஸ்ட் ஆகிடும்.



இன்னொரு சிக்கல், பலர் தனக்கு வேண்டிய தகவலை சரியாக எழுதி எடுத்து வரமாட்டார்கள். பக்கத்தில் இருந்து ஆக்கல், அழித்தல், வார்த்தையை மாற்றுதல் வேலையை செய்துகொண்டு நமக்கு டென்சனை ஏற்றுவார்கள். கடைசியாக பார்த்தால் சரியான முறையில் வழக்கறிஞர்களால் எழுதி தரப்பட்ட ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் குறைந்தது 6 பக்கம் டைப் செய்துவிடுவேன். ஆனால் ஒழுங்காக எழுதி வராமல் பக்கத்தில் இருந்து டிக்டேட் செய்யும் இம்சை அரசர்களால் ஒரு மணி நேரத்தில் 3 பக்கம் கூட முடிக்க முடியாது.



அவர்கள் கொத்துபரோட்டா போட்ட தகவலை நாம் செம்மைப்படுத்தி ஒழுங்கான ஆவணமாக்கி எடுத்து கொடுத்தால் 3 பக்கம்தானே. இதுக்கு அவ்வளவு காசு தரணுமா என்று நம்முடைய அரைமணி நேரத்துக்கு காற்றிலேயே அல்வா கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.



ஒரு நாளைக்கு எட்டுமணி நேர பணி என்று மாதம் 30 நாளும் பணி செய்வதாக வைத்துக்கொண்டால்கூட ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 60ரூபாய் என்ற தொகை கூலியாக கிடைத்தால்தான் இன்றைய விலைவாசிக்கு மாத சம்பளம் 15ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்ட முடியும். (கட்டிட தொழிலாளர், தச்சர், பெயிண்டர் போன்றவர்களுக்கு  இதைவிட அதிக தின சம்பளம் உண்டு. அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் கம்ப்யூட்டர், கடுமையான இட வாடகை, லட்சக்கணக்கில் அட்வான்ஸ், ஒரு யூனிட் 10 ரூபாய் என்ற அநியாய மின்கட்டணம் உள்ளிட்ட எந்த செலவும் கிடையாது)



ஆனால் 1 மணி நேரத்தில் 3 பக்கம் டைப் செய்து ப்ரூப், ஒரிஜினல் என்று ஆறுபக்கம் பிரிண்ட் (அடக்கவிலை 30 ரூபாய்) போக மீதி 30 ரூபாய் கிடைத்தால் அதில் வாடகை, கரண்ட் பில், கம்ப்யூட்டர், பிரிண்டர் மெயின்டனன்ஸ், பேப்பர் உள்ளிட்ட செலவுகளை கழித்துப்பார்த்தால் என் உழைப்புக்கு கூலி கோவிந்தாதான்.



தொழில் ஆரம்பித்து பல மாதங்கள் கழித்துதான் நான் தொழில் செய்யவில்லை. தனியாக அமர்ந்து கூலி வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போ நம்ம கதை புலிவாலை பிடித்த கதைதான்.



நாட்டுல எவ்வளவு பேர் இந்த தொழில் செய்து பெரிய ஆளாயிருக்காங்க. உன்கிட்ட இருந்து மட்டும் ஏன் இந்த புலம்பல் அப்படின்னு பலருக்கு தோணும். தொழில் என்றால் என்ன தெரியுமா? நாம் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் வேலை தடைபடக்கூடாது. நமக்கு வருமானம் வந்துகொண்டே  இருக்கணும். நமக்காக பணியாளர்களோ அல்லது இயந்திரமோ அல்லது இரண்டுமே சேர்ந்து நமக்காக சம்பாதித்து கொடுக்கணும். அதற்குப்பெயர்தான் தொழில்.



தொழில்ல நேரம் தவறாமை, நேர்மை இரண்டும் முக்கியம்னு சொல்லுவாங்க. நேர்மையை நான் விடாம கெட்டியா பிடிச்சுகிட்டேன். ஆனா நேரம் தவறாமையை பல நேரங்கள்ல என்னால பின்பற்றமுடியலை. அதற்கு காரணம் அதற்கான பிடி என் கையில இல்லை. அதை சரிசெய்யணும்னா, பெரிய அளவுல முதலீடு வேணும். அதை வெச்சு என் அலுவலகத்து சூழ்நிலையை மாற்றினாதான் வர்றவங்களை நேரம் தவறாமையை பின்பற்ற செய்ய முடியும். அது நிறுவனத்துக்கும் நல்லது. வாடிக்கையாளருக்கும் நல்லது. அதை இப்போ என்னால செய்ய முடியாது. ஏன்னா, ஆரம்ப கட்டத்துல நான் அந்த கடுமையை காட்டினா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. இந்த உண்மை புரிஞ்சதால அடக்கி வாசிக்கிறேன்.


ஜெமினி - ஏவிஎம் - நேரம் தவறாமை


சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)

ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.

ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.

திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.

இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.

ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.

ஒரு சின்ன விசயம். எந்த ஒரு விசயத்திலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது என் வழக்கம். ஆனால் நான் செய்து வரும் டி.டி.பி தொழிலில் என்னால் பல நேரங்களில் குறித்த நேரத்தில் பணி செய்து கொடுக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையை இப்போது என்னால் வெல்லமுடியவில்லை. அதற்கு காரணம் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான்.

சில நாட்களில் காலை முதல் மாலை வரை எந்த வேலையும் இருக்காது. கடந்த பல ஆண்டுகளாக மாலை 6 மணிக்கு கரண்ட் போய்விடுகிறது. இது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் மிஸ்டர் பப்ளிக் ஒருவர் மாலை 5.45 மணிக்கு வந்து இரண்டு பக்க மேட்டரை டைப் செய்து உடனே பிரிண்ட் எடுக்க வேண்டும் என்பார். நாம என்ன குமுதம், ஆனந்தவிகடனா பிரிண்ட் செய்து வெச்சிருக்கோம். காசை வாங்கிட்டு உடனே எடுத்துக்கொடுக்க.

டி.டி.பி என்பது வரும் வாடிக்கையாளருக்காக அவருக்கு சொந்தமான அவருக்கு மட்டுமே பயன்படக்கூடிய விசயத்தை டைப்செய்து தருவதாகத்தான் இருக்கும். ஒரே ஒரு பக்கத்தை டைப் செய்து 50ஆயிரம் ஜெராக்ஸ் போட்டு தரும் வேலையல்ல என்பதை வாடிக்கையாளருக்கு விளங்க வைக்கவே பாதி எனர்ஜி வேஸ்ட் ஆகிடும்.

இன்னொரு சிக்கல், பலர் தனக்கு வேண்டிய தகவலை சரியாக எழுதி எடுத்து வரமாட்டார்கள். பக்கத்தில் இருந்து ஆக்கல், அழித்தல், வார்த்தையை மாற்றுதல் வேலையை செய்துகொண்டு நமக்கு டென்சனை ஏற்றுவார்கள். கடைசியாக பார்த்தால் சரியான முறையில் வழக்கறிஞர்களால் எழுதி தரப்பட்ட ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் குறைந்தது 6 பக்கம் டைப் செய்துவிடுவேன். ஆனால் ஒழுங்காக எழுதி வராமல் பக்கத்தில் இருந்து டிக்டேட் செய்யும் இம்சை அரசர்களால் ஒரு மணி நேரத்தில் 3 பக்கம் கூட முடிக்க முடியாது.

அவர்கள் கொத்துபரோட்டா போட்ட தகவலை நாம் செம்மைப்படுத்தி ஒழுங்கான ஆவணமாக்கி எடுத்து கொடுத்தால் 3 பக்கம்தானே. இதுக்கு அவ்வளவு காசு தரணுமா என்று நம்முடைய அரைமணி நேரத்துக்கு காற்றிலேயே அல்வா கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.

ஒரு நாளைக்கு எட்டுமணி நேர பணி என்று மாதம் 30 நாளும் பணி செய்வதாக வைத்துக்கொண்டால்கூட ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 60ரூபாய் என்ற தொகை கூலியாக கிடைத்தால்தான் இன்றைய விலைவாசிக்கு மாத சம்பளம் 15ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்ட முடியும். (கட்டிட தொழிலாளர், தச்சர், பெயிண்டர் போன்றவர்களுக்கு  இதைவிட அதிக தின சம்பளம் உண்டு. அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் கம்ப்யூட்டர், கடுமையான இட வாடகை, லட்சக்கணக்கில் அட்வான்ஸ், ஒரு யூனிட் 10 ரூபாய் என்ற அநியாய மின்கட்டணம் உள்ளிட்ட எந்த செலவும் கிடையாது)

ஆனால் 1 மணி நேரத்தில் 3 பக்கம் டைப் செய்து ப்ரூப், ஒரிஜினல் என்று ஆறுபக்கம் பிரிண்ட் (அடக்கவிலை 30 ரூபாய்) போக மீதி 30 ரூபாய் கிடைத்தால் அதில் வாடகை, கரண்ட் பில், கம்ப்யூட்டர், பிரிண்டர் மெயின்டனன்ஸ், பேப்பர் உள்ளிட்ட செலவுகளை கழித்துப்பார்த்தால் என் உழைப்புக்கு கூலி கோவிந்தாதான்.

தொழில் ஆரம்பித்து பல மாதங்கள் கழித்துதான் நான் தொழில் செய்யவில்லை. தனியாக அமர்ந்து கூலி வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போ நம்ம கதை புலிவாலை பிடித்த கதைதான்.

நாட்டுல எவ்வளவு பேர் இந்த தொழில் செய்து பெரிய ஆளாயிருக்காங்க. உன்கிட்ட இருந்து மட்டும் ஏன் இந்த புலம்பல் அப்படின்னு பலருக்கு தோணும். தொழில் என்றால் என்ன தெரியுமா? நாம் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் வேலை தடைபடக்கூடாது. நமக்கு வருமானம் வந்துகொண்டே  இருக்கணும். நமக்காக பணியாளர்களோ அல்லது இயந்திரமோ அல்லது இரண்டுமே சேர்ந்து நமக்காக சம்பாதித்து கொடுக்கணும். அதற்குப்பெயர்தான் தொழில்.

தொழில்ல நேரம் தவறாமை, நேர்மை இரண்டும் முக்கியம்னு சொல்லுவாங்க. நேர்மையை நான் விடாம கெட்டியா பிடிச்சுகிட்டேன். ஆனா நேரம் தவறாமையை பல நேரங்கள்ல என்னால பின்பற்றமுடியலை. அதற்கு காரணம் அதற்கான பிடி என் கையில இல்லை. அதை சரிசெய்யணும்னா, பெரிய அளவுல முதலீடு வேணும். அதை வெச்சு என் அலுவலகத்து சூழ்நிலையை மாற்றினாதான் வர்றவங்களை நேரம் தவறாமையை பின்பற்ற செய்ய முடியும். அது நிறுவனத்துக்கும் நல்லது. வாடிக்கையாளருக்கும் நல்லது. அதை இப்போ என்னால செய்ய முடியாது. ஏன்னா, ஆரம்ப கட்டத்துல நான் அந்த கடுமையை காட்டினா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. இந்த உண்மை புரிஞ்சதால அடக்கி வாசிக்கிறேன்.

புதன், 10 ஏப்ரல், 2013

மணமாலை விளம்பரம் பார்த்து இப்படியும் மோசடிபேர்வழிகள் வரலாம்



10 ஜாதகம் வந்ததுக்கே சந்தோசப்பட்டு அதுல ஒருத்தருக்கு என்னைய கட்டிவெச்சுட்ட. அக்காவுக்கு முதல் ஜாதகத்துலேயே ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துட்ட...மிச்சம் இருக்குற என் தங்கச்சிக்காச்சும் ஒரு அம்பது அறுபது ஜாதகத்தை பார்க்கலாமே...அப்படின்னு எங்க அக்கா சொல்லுது...அதனால நாங்க அவசரப்படாம பொறுமையா எனக்கு மாப்பிள்ளை தேடுறோம் என்று அந்த பெண் என்னிடம் கூறியபோது எனக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.



அந்த பெண்ணின் வயது 26. இதில் ஒன்றும் பெரிய தாமதம் இல்லை. அந்த பொண்ணு படிச்சு முடிக்கவே 22 அல்லது 23 வயசு ஆகியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. குடும்ப வறுமை காரணமாக அந்த பெண் 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு சுமார் 9 ஆண்டுகாலமாக சொற்ப சம்பளத்தில் ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை. பூர்வீக சொத்துக்களும் இல்லை. சேமிப்பும் இல்லை. (ஆனால் 2 லட்ச ரூபாய் கடன் உண்டு). தந்தை விபத்தில் இறந்துவிட்டார்.



இவ்வளவு சிக்கலில் இருப்பதற்காக அந்த பெண் அவசரப்பட்டு ஏதாவது ஒரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் விரலுக்கு மீறிய வீக்கத்துக்கு ஆசைப்படுவதுதான் தவறு என்று தோன்றுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பு சொந்தவீடு, அரசுப்பணி, மாதம் 30ஆயிரத்துக்கு குறையாமல் சம்பளம் என்று பெரிய பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறார்கள். இந்த தகுதியுடன் இருக்கும் மாப்பிள்ளை வீட்டில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்குமே என்பதை இந்த பெண்ணைப் போன்றவர்கள் வசதியாக மறந்துவிடுவதுதான் சிக்கலே.



வசதிக்குறைவாக இருக்கும் பல இளைஞர்கள் வரதட்சணையை எதிர்பார்க்காமல் தங்களைப்போன்று கஷ்டப்படும் குடும்பங்களில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு சிரமதிசையில் இருக்கும் பெண்கள் கூட நாம் பிறந்த வீட்டில்தான் சிரமத்தை அனுபவித்துவிட்டோம். போகும் வீட்டில் ரத்தின கம்பளத்தில் போய் இறங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த ஆசையை முழுவதும் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் புகுந்தவீட்டில் கணவனுடன் நாமும் உழைத்து நமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.



தானும் உழைக்கத் தயாராக இருக்கும் பெண்களுக்கு கொடுமைக்கார அரக்க குணத்துடன் கணவனும், கணவன் குடும்பத்தாரும் அமைகிறார்கள். வரும் மனைவியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆணின் குடும்பத்துக்கு ராட்சச குணத்துடன் மருமகள் அமைகிறாள். இந்த ஏட்டிக்கு போட்டியான கணக்கு டேலி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை.



---------------------------

இணைய தளத்தில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்ய இயலாதவர்களும், புரோக்கர்களிடம் அவ்வப்போது நூற்றுக்கணக்கில் என்று கொடுத்தே பல ஆயிரங்களை இழக்க வேண்டும் என்று அஞ்சும் பலருக்கும் நாளிதழ்களில் உள்ள வரிவிளம்பரங்கள் மூலம் நல்ல வரன்கள் அமைந்துவிடுவதும் உண்டு.



ஆனால் இப்படி வரும் விளம்பரங்களை சில புல்லுருவிகள் பயன்படுத்திக்கொண்டு பெண்ணை அல்லது மாப்பிளையை ஏமாற்றும் கதைகளை அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு 07.04.2013 அன்று ஒரு நாளிதழின் திருச்சி பதிப்பில் மணமாலை பகுதியில் வெளிவந்த விளம்பரம் பார்த்து ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். மாப்பிள்ளை சுயதொழில் என்று குறிப்பிட்ட விசயம் அந்த நபரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். அதை வைத்து தூண்டில் வீசியிருக்கிறார். அதாவது தான் ஒரு எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனி வைத்திருப்பதாகவும், சுயதொழிலில் நீங்கள் தயாரிக்கும் பொருள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருந்தால் தான் ஏற்றுமதி ஆர்டர் எடுத்து தருவதாகவும், குடும்பம், உடன்பிறப்பு, பூர்வீகம், உறவுகள் இன்னும் பிற விபரங்களை சாதாரண தபாலில் அனுப்பவும். ரிஜிஸ்டர், கூரியர் தபால்கள் வாங்குவதில்லை. போனிலும் பேசுவதில்லை. அதனால் சாதாரண தபாலில் அனுப்புங்கள் என்று எழுதியிருந்தது.



சாதாரணமாக இப்படி ஒரு கடிதம் வந்தால் உடனே பதில் எழுதுவதுதான் பெரும்பாலானோரின் வழக்கமாக இருக்கும். ஆனால் நாங்கள் அப்படி அவசரப்படவில்லை. தெளிவான முகவரி கூட இல்லாமல் போன் எண் இல்லாமல் ஒருத்தன் அந்த முகவரிக்கு கடிதம் எழுத சொல்கிறான் என்றால் போஸ்ட் ஆபீசில் யாரையோ கைக்குள் வைத்துக்கொண்டு அந்த கடிதத்தை பெற்றுக்கொள்வான் என்று ரொம்ப எளிதாக யூகிக்க முடிந்தது.



அவன் கடிதம் எழுதியிருந்த லெட்டர்பேட் ரொம்ப சிம்பிளாக இருந்தது. நிறைய டிசைன் செய்து காஸ்ட்லியாக உருவாக்கியிருந்தால்தான் பிராடு கம்பெனியாக இருக்கும். இப்படி சிம்பிளாக இருந்தால் நம்பகத்தன்மை கூடும் என்று நினைத்திருந்தானோ என்னவோ. ஆனால் எங்களுக்கு கடிதத்தை பார்த்த மாத்திரத்தில் மோசடி என்பது புரிந்தது. ஒரு முக்கிய இடத்தில் அலுவலகம் அமைத்து பந்தா காட்டி நம்பவைப்பவர்களே சடாரென்று கம்பிநீட்டிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சரியான போஸ்டல் அட்ரஸ் கூட தராத மன்னார் அன் கம்பெனியை அவ்வளவு எளிதில் நம்பிவிடுவோமா என்ன... இன்னும் எப்படி எப்படி எல்லாம் யோசித்து ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ...



நண்பர்களே ஜாக்கிரதை. மோசடி வலைகள் பல்வேறு வழிகளில் பின்னப்படலாம். இன்டர்நெட், ஈமெயிலில் இதைத்தாண்டிய ஆபத்து உண்டு. கவனமுடன் நடந்துகொள்ளுங்கள். இது மாதிரி புது டெக்னிக் இருந்தால் (நான் இந்த பதிவில் சொல்லியிருப்பது மிகவும் பழைய டெக்னிக்காக கூட இருக்கலாம்) பதிவேற்றுங்கள். நிச்சயமாக நான்கு பேருக்காவது அதனால் நன்மை விளையும்.



போனில் முக்கியமான நபர் அழைப்பார் என்று காத்திருக்கும்போது டெலி மார்கெட்டிங் போன் வந்தால் எவ்வளவு எரிச்சல் வருமோ அதை தாண்டி கோபம் இந்த கடிதத்தைப் பார்த்ததும் வந்தது. சூப்பரா இல்லாவிட்டாலும் நார்மலா ஒரு ஜாதகம் வரும் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில் இங்கேயும் மார்க்கெட்டிங் லெட்டர் என்றால் கோபம் வராமல் என்ன செய்யும்?