Search This Blog

புதன், 14 மார்ச், 2012

கரகாட்டக்காரன் காமெடியும் - மின்சார வாரியமும்

ரெண்டு பழம் வாங்குனியா? கடைக்காரன் கொடுத்தானா?

ஒண்ணு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க? -- சினிமாவுலயாச்சும் இப்படி செந்திலிடம் கேட்டு கவுண்டமணியால் அடிக்க முடிஞ்சது.
  
நம்மால் அதுவும் செய்ய முடியாது.

நீ யாரை அடிக்கப் போறன்னுதானே கேட்குறீங்க?

தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் (ஞாயிறுடன் சேர்த்தால் இரண்டு இரண்டு நாள்) மின்சார விடுமுறை விட்டால் வீடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் மின்வெட்டு அளிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க.

நாங்களும் நம்பிட்டோம்.
தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை, சென்னைக்கு கூடுதலா ஒரு மணி நேர மின்வெட்டு இதெல்லாம் விட்டபிறகு நிலைமை ரொம்ப கேவலமா போயிட்டுதே. ஏன் அப்படின்னு கேட்டா இப்படி சிறு தொழில் நிறுவனங்கள் கிட்டயும் வீடுகள் கிட்டயும் ஏமாத்தி புடுங்குன மின்சாரத்தை நட்சத்திர ஹோட்டல்கள், மெகா மால், தியேட்டர்கள் இவங்களுக்கு எல்லாம் மின்சார விடுமுறை அளிக்காம கொடுத்துகிட்டு இருக்காங்களாம்.

அது சரி. ஐயாயிரம் ரூபாய்க்கு டீசல் போட்டு ஜெனரேட்டரை ஓட்டுறதுக்கு பதிலா ஐநூறு ரூபாயை அதிகாரிகளுக்கு கொடு. பிரச்சனை சால்வுடு.-இப்படிப்பட்ட நிர்வாகம் இருக்குற நாட்டுலதான நாம இருக்கோம்.

இப்படி வள வளன்னு எழுதாம ஏழை மேலும் பிச்சைக்காரனாகிறான். கோடீஸ்வரன் மேலும் கொள்ளையடிக்கிறான் அப்படின்னு எழுதுனா போதும். ஆனா என்ன பண்றது. சில நேரங்கள்ல எல்லாத்தையும் விளக்கமா சொல்லித்தான் ஆகணும்.

பாத்திரம் ஓட்டையா இருந்தா உலகத்துல இருக்குற எல்லாரும் சேர்ந்து ............................. அடிச்சா கூட பாத்திரம் நிரம்பாதுன்னு நம்ம நாட்டு அரசியல் வியாதிகளுக்கு யார் புரிய வெக்கிறது.

இவ்வளவு பேசுறியே? தனி மனிதனா மின்சார சிக்கனத்துக்கு என்ன செய்யுறன்னு நீங்க கேட்கலாம். கடந்த மூணு வருஷத்துக்கு முன்னாலயே எங்க வீட்டுல சிஎஃப்எல் பல்ப்புக்கு மாறியாச்சு. வெளியில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை கூடுதல் ஒளி தர்ற சிஎஃப் எல் பல்ப்பும், 9 முதல் காலை 5.30 மணி வரை 5 வாட் சிஎஃப் எல் பல்ப்பும் போட்டிருக்கோம்.

என் எல்லைக்கு உட்பட்ட விஷயம் இவ்வளவுதான்.

ஆனா பெரிய தனியார் நிறுவனங்களும், உள்ளாட்சி அமைப்புகள்ல இருக்குறவங்களும் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கிறத விரல் விட்டு எண்ணிடலாம்.

இப்போ காலை 6 மணியிலேர்ந்து 9 மணி வரை கரண்ட் இல்லாததால தெரு விளக்கை ஒழுங்கா நிறுத்துறது இல்லை.

காலை 9.30 அல்லது 10 மணிக்கு மேலதான் நிறுத்துறாங்க. இந்த அரை மணி நேரத்துல எவ்வளவு மின்சாரம் விரயம்?

அவ்வளவு ஏன்?

திருவாரூர் பெரிய கோவிலுக்கு தினமும் காலையில போறது என் வழக்கம். அங்கேயும் அடிக்கடி இந்த கதிதான். என் உயரத்துக்கு எட்டுற அளவுல சுவிட்ச் இருக்குறது ரௌத்ர துர்க்கை சன்னதியிலயும், மகாலஷ்மி சன்னதியிலயும்தான். நான் சுற்றி வரும்போது அந்த இடத்துல மட்டும் சுவிட்சை நிறுத்திடுவேன். மற்ற லைட்டுகளுக்கு எங்கே சுவிட்ச் இருக்குன்னு கோவில் எலக்ட்ரீஷியனுக்கு மட்டும்தான் தெரியும்னு நினைக்கிறேன்.

இந்த மாதிரி அலட்சியமா மின்சாரத்தை வீணாக்குறவங்களை சாமானியன் என்ன செய்ய முடியும்?

கண்ட, கண்ட ............................ எல்லாம் இலவசமா கொடுக்குறவங்க சி எப் எல் பல்ப்புகளை அதிக எண்ணிக்கையில தயாரிச்சு நியாயமான லாபத்துல விற்பனை செய்துட்டு குண்டு பல்ப் இருந்தா அந்த வீட்டுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்னு சொன்னாலே போதும். 500 மெகா வாட் மிச்சமாகும்.

வெளி மாநிலத்துல வாங்கின மின்சாரத்தை கொண்டு வர வழியில்லைன்னு ஒரு பக்கம் செய்தி வெளிவருது.

அது சரி, 50 ரூபா மதிப்புள்ள ஸ்டாம்ப் பேடு வாங்க டெல்லியில இருக்குற தலைமையிடத்துக்கு எழுதி 1000 ரூபா செலவழிச்சு கொண்டுவர்ற அளவுக்கு நிர்வாகத்துல சட்டச் சிக்கலை வெள்ளைக்காரன் உருவாக்கி வெச்சிட்டு போயிட்டான்.

அந்த காலத்துல இது மாதிரி சில பொருட்கள் எல்லா ஊர்லயும் கிடைக்காது. அதனால அப்படி நடைமுறை இருந்துருக்கலாம். இன்னும் அதையே புடிச்சுகிட்டு தொங்குறோம்.

குஜராத்துல இருந்து தமிழ் நாட்டுக்கு 1000 வாட் மின்சாரம் போகணுமா? ரைட். நெய்வேலியில இருந்து ஆந்திராவுக்கு போற ஆயிரம் வாட் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே கொடுத்துடுங்க.

குஜராத்ல இருந்து இங்க விலைக்கு கொடுக்க வேண்டிய ஆந்திராவுக்கோ கர்நாடகாவுக்கோ பண்ட மாற்று முறையில கொடுக்க முடியாதா என்ன?

செய்ய முடியும். ஆனா நாங்க செய்ய மாட்டோமே. அப்படி செய்தா Line Loss அப்படின்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு மின்சாரத்தை திருட முடியாதே.

பகலிலாவது 12 மணி நேரத்துல 6 மணி நேரம் மின்சாரம் இருக்கு. ஆனா ராத்திரியில ஒண்ணரை மணி நேரத்துக்கு ஒரு முறை முக்கால் மணி நேரம்னு போட்டு சாகடிக்கிறாங்களே. இது ஏன்னு நான் சர்வே எடுத்தேன்.

ஆளுங்கட்சி காரர்: ராத்திரியில தொடர்ந்து 3 மணி நேரம் கட் பண்ணினா ஜனங்க பொங்கிடுவாங்க.

(கிழிச்சாங்க. அப்படி பொங்கியிருந்தா முதல் நாள் பன்னண்டு மணி நேரம் கட் பண்ணினப்பவே, எவனைக் கேட்டு வெளி நாட்டு கம்பெனிக்கு 24 மணி நேரமும் மின்சாரம் தர்றேன்னு ஒத்துகிட்டீங்க அப்படின்னு கேட்டுருக்க மாட்டாங்களா?

எதிர்க்கட்சிகளில் ஒருவர் : மூணு மணி நேரம் தொடர்ந்து கட் பண்ணினா சொரணை இல்லாத தமிழன் அதுக்கும் பழகிடுவான். அப்பப்ப திங்கிற சோத்தைப் புடுங்குற மாதிரி கட் பண்ணினாத்தான் கூடங்குளம் வேணும்னு போராடுவான்.

(இதுல லாஜிக் இருக்கே)

எதிர்க்கட்சிகளில் இரண்டாமவர் : ஒரு காலத்துல குலக்கல்வி முறை கொண்டு வந்தாங்க. ஆனா அது ஃபெயிலியர். இப்போ தேர்வு தொடங்க 2 மாசம் இருக்கும்போதுல இருந்து இஷ்டத்துக்கு கட்பண்ணி படிக்க விடாம கவனத்தை சிதற வெச்சாச்சுன்னா, காசு இருக்குறவன் தவிர மற்ற யாரும் பெரிய படிப்பெல்லாம் படிக்க முடியாது.

(இதுவும் உண்மையோன்னு தோணுது. ஏன்னா ஒரு காலத்துல தெரு விளக்கு வெளிச்சத்துல இருந்தே படிச்சு முன்னேறினவங்க உண்டு. ஆனா இப்போ முடியாது. காரணம், அப்போ இந்த அளவுக்கு தான் வீட்டுக்கே காற்று நுழையாத அளவுக்கு வீடு கட்டுற பழக்கம் இல்லை. இவ்வளவு சாக்கடை இல்லை. கொசுவும் இவ்வளவு அதிகமாக இல்லை.)

கூடங்குளம் வேண்டாம்னு ஏழெட்டு மாசத்துக்கு முன்னால பிரச்சனை வெடிச்சப்பவே நான் ஒருத்தர்கிட்ட "இப்ப பாருங்க சார்...வெறும் நூறு இரு நூறு மெகா வாட்டுக்காக கூடங்குளத்தை திறக்கணும்னு சொன்னா எல்லாரும் உதைக்க வருவாங்கன்னு அவங்களுக்கும் தெரியும். அதனால, ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் கரண்ட்-டை கட் பண்ண ஆரம்பிப்பாங்க. மக்களே போராடி கூடங்குளம் வேணும்னு சொன்னதும் நெய்வேலி, தூத்துகுடி, மேட்டூர்னு இருட்டடிப்பு செய்திருக்குற மெஷினை எல்லாம் ஓட விட்டுட்டு, கூடங்குளத்தாலதான் தமிழ் நாடே ஒளிருதுன்னு சொல்லப்போறாங்கன்னு பேசினேன்.

நல்ல விஷயம் எதுவும் நான் நினைக்குற படி நடக்க மாட்டெங்குது. ஆனா உருப்புடாத விஷயம் எப்படி சார் அப்படியே நடக்குதுன்னு எனக்கு இப்பவும் ஒரு குழப்பம் இருக்கு.

காற்றாலை மின்சாரத்தை வாங்குறதுல பிரச்சனை இல்லை. ஆனா அதன் விலை மிக அதிகம்னு சொல்றாங்க. அப்படி அதிக விலைக்கு வாங்கி வீட்டுக்கு மட்டும் மாச மாசம் ரேஷன் அளவு மாதிரி கொடுத்துட்டு கூடுதல் பயன்பாட்டுக்கு லாபம் வெச்சே கொடுக்க வேண்டியதுதானே.

ஆடம்பர விளக்குகளுக்கு, வியாபார நிறுவனங்களுக்கு குறிப்பா சொல்லப்போனா கல்யாண மண்டபத்துக்கு கூட ஒரு கல்யாணத்துக்கு அரசு மின்சாரம் இவ்வளவுதான்னு ஸ்லோப் வெச்சுடலாம். இதை ஏன் சொல்றேன்னா, காசு கொடுக்குறோம். அதை ஏன் சிக்கனமா செலவழிக்கணும்னு ஒரு எண்ணம் நிறைய மக்களுக்கு இருக்கு. 15 ரூபா பொருளை 1 ரூபாய்க்கு கொடுக்குறதாலதானே இப்படி. 15 ரூபா பொருளுக்கு 17 ரூபா விலை இருந்தா அப்படி செய்ய தோணுமா?

அரசு விரைவுப்பேருந்து முன்பதிவு பயணப்படிவம் இலவசமா கொடுத்தப்போ நிறைய வீணாக்குவாங்க. ஒரு படிவம் 1 ரூபா அப்படின்னு விலை வெச்சதும் இஷ்டத்துக்கு எழுதி கிழிச்சு போடுறது அனேகமா இல்லைனே சொல்லலாம்.

சரி...இந்த மின்வெட்டால நீயும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கன்னு தெரியுது... போய் தூங்கு தம்பின்னு யாரோ சொல்றாங்க.

அது உண்மைதாங்க. நானும் ரொம்ப பாதிக்கப்பட்டது உண்மைதான். இதை இன்னும் வெளிப்படையா கேட்டா, என்னையும் ஹீரோவாக்கிடுவாங்களோன்னு பயமா இருக்கு.

டென்சன் ஆகாதீங்க சார். நான் ஹீரோன்னு சொன்னது, சூப்பர் ஸ்டார் மாதிரி இல்லை.(கொஞ்சம் ஓவர்தான்) மௌனகுரு ஹீரோ சார். எப்படின்னா, ஒருத்தனை சாகடிக்கவும் கூடாது. அவன் பேசுறது யார்கிட்டயும் எடுபடவும் கூடாது அப்படின்னு, பைத்தியம்னு முத்திரை குத்தினாலும் குத்திடுவாங்க. என்ன பண்றது...நாம ஜன நாயக நாட்டுல வாழ்றோம்.

என்ன கொடுமை சரவணா இது.

வியாழன், 8 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-3


எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.
 
மர்பி விதிகள்
11. நீங்கள் எவ்வளவு அலைந்து கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் மலிவாக இன்னொரு இடத்தில் கிடைத்தே தீரும். அது உங்கள் மனைவியின் கண்களில் தான் முதலில் படும்.
12. ஒரு பொருள் சிறந்ததாக இருந்தால் அதை தயாரிப்பதையே நிறுத்தியிருப்பார்கள்.
13. ஒரு படகோட்டியை நதியைக் கடக்கும் வரை திட்டக்கூடாது.
14. இயந்திரங்கள் என்றால் வேலை செய்ய வேண்டும். மனிதர்கள் என்றால் சிந்தனை செய்ய வேண்டும். பெரும்பாலும் இரண்டுமே நடப்பதில்லை.
15. அடுத்தவரின் செலவு எப்போதும் ஊதாரித்தனமாகவும் தேவையில்லாததாகவும் இருக்கும்.

-விதிகள் தொடரும்...

புதன், 7 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-2

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.


மர்பி விதிகள்
6. எந்த ஒரு வி­ஷயம் நிறைய பேருக்கு அசெளகரியத்தை தருகிறதோ அது நடந்தே தீரும்.

7. உள்ளூர்க்காரர்கள் தான் தாமதமாக வருவார்கள்.

8. ரகசியம் என்பது வதந்தியின் ஆரம்பம்.

9. ஒரு விஷ­யம் பற்றிய எந்த இரு மனிதர்களின் புரிதலும் சரிசமாக இருப்பதே இல்லை.

10. எந்த ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு அதிகமாக செலவு செய்கிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். பிரச்சனை வருவதை முன்கூட்டியே அறிந்து அதை வரும் முன் களைய முற்படும் அரசியல்வாதியோ சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

-விதிகள் தொடரும்...