Search This Blog

சனி, 9 ஏப்ரல், 2011

இந்த ஒற்றுமை நன்மைக்கா?

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியான தருணம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கடந்த 2007ல் எந்த எதிர்பார்ப்பும் ஏற்படாத வகையில் முதல் சுற்றிலேயே நாம் வெளியேறி வந்து விட்டோம். 2003ல் பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் ஆஸ்திரேலியா நமக்கு ஆப்பு வைத்தது. ஆனால் 2011ஐ பொறுத்தவரை லீக் மேட்ச் வரை மெகா சீரியல் போல் சென்றுகொண்டிருந்த இந்திய அணியின் ஆட்டம், நாக் அவுட் சுற்றில் நச் என்று மூன்றே ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப் பற்றியது. எந்த நேரமும் பரபரப்பாக இயங்கும் நாட்டின் முக்கிய நகரங்களில் இதயம் போன்ற சாலைகள் கூட வெறிச்சோடிப்போயின.

இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதிய அரையிறுதி ஆட்டம் துவங்கும் நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டது. அன்று முழுவது இப்படித்தான் ஏறத்தாழ ஒண்ணரை மணி நேரம் பவர் கட். உடனே திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கிரிக்கெட் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அந்தப் பக்கமாக சென்ற நாகை கலெக்டருடைய காரை வழிமறித்து சாலை மறியல் போராட்டம் செய்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தன.

கிரிக்கெட் மீது வெறித்தனமாக இருக்கும் பலர் சொல்லும் சப்பைக்கட்டு காரணம், இந்த ஒரு விஷயத்தில் நம் நாட்டு மக்களின் தேசப்பற்று தெரிகிறது என்பதுதான்.

போட்டி நடக்கும்போது மைதானத்திலோ அல்லது வீட்டிலோ இருந்து ஆரவாரத்துடன் நேரிலோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ போட்டியைப் பார்ப்பதுடன் இவர்களின் ஒற்றுமை முடிந்து விடும்.

மின்வெட்டு காரணமாக பல தொழில்கள் முழுமையாகவோ,பகுதியாகவோ முற்றிலும் நசிந்து விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து கொண்டிருக்கின்றனர். அதுதான் வருடம் தோறும் மென்பொருள் துறையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கிறதே என்று சப்பையாக ஒரு காரணம் சொல்வார்கள்.

நாங்கள் குடியிருந்த பகுதியிலேயே இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லையே என்று தெருவில் குடியிருக்கும் கட்சி பிரதிநிதியிடம் சண்டை போட்டு வாங்கிய மக்கள், சாக்கடை எந்த நேரமும் நிரம்பி வழிவதைப் பற்றி நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க முன்வருவதில்லை. அவ்வளவு ஏன், நான் மனு எழுதினால் கூட தெருவாசிகள் என்ற முறையில் கையெழுத்து போடக்கூட மிகவும் தயங்குகிறார்கள்.அது வெறும் கோரிக்கை மனுதான். அதற்கே இப்படி.

இவர்கள் எங்கே ஒரு அநீதி என்றால் பொது நல மனு மூலம் நீதிமன்றத்தில் கேள்வி கேட்கப்போகிறார்கள்.?

சமுதாயத்திற்கு நல்லது செய்யும் விஷயத்தில் இல்லாத ஒற்றுமை ஒரு கேளிக்கையை ரசிக்கும்போது மட்டும் இருப்பது வரமா சாபமா?

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்து மனப்பாடம் செய்வதில் வல்லவர்களுக்கு மட்டும் நல்ல கல்வி என்ற முறையை கச்சிதமாக செய்து விட்டுப் போனார்கள். நாம் கொஞ்சம் முன்னேறி மனப்பாடம் செய்ய முடியவில்லை என்றால் என்ன, கருப்போ, வெள்ளையோ...உன்னிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தால் உயர்கல்வி உண்டு. பிறகு அதை நீ இந்த சமுதாயத்திடம் எப்படி சுரண்டினாலும் ஓ.கே என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டோம்.

இப்போது அதையும் தாண்டி, நூறு நாள் வேலைத்திட்டம், இலவசம் அது இது என்று கொண்டு வந்து குறிப்பிட்ட சாரரை மேலும் சோம்பேறிகளாக்கி மிகச்சில முதலாளிகளிடம் மட்டுமே கருப்பு பணம் குவிய வழி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 சிறுதொழில்களையும் விவசாயத்தையும் நாம் அழிய விட்டுக்கொண்டிருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இந்தியாவில் வளர்ந்து நிற்கும். அதற்கு முக்கிய காரணம் நமது மக்கள் தொகை. இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நம் நாட்டின் பலமும் பலவீனமும் இதுதான்.

சனி, 12 மார்ச், 2011

தடுமாறுகிறதா இளையபாரதம்?

அப்துல்கலாம் ஐயா இளைஞர்களை நல்ல விதமா பெரிய லட்சியத்தை அடையணும்னு கனவு கண்டு அதற்கான முயற்சிகள்ல இறங்க சொன்னாங்க. சொல்லிகிட்டும் இருக்காங்க.

ஆனா இளைய தலைமுறையில பொறுப்பில்லாம நடந்துக்குறவங்களோட சதவீதம் அதிகமாகிட்டே வருதோன்னு சந்தேகமா இருக்கு.

ஓரிரு நாட்களுக்கும் முன்பு திருச்சி பகுதியில லஞ்சம் வாங்கி பிடிபட்ட தனி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய ரெண்டு பேரோட போட்டோவும் சில பத்திரிகைகளில் வந்திருந்தது.

அந்த தனி தாசில்தாருக்கு அம்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.(பல பேரோட உடம்பு இதெல்லாம் எனக்கு பிடிக்கலைன்னு அலர்ஜியானாத்தான் டை அடிக்கிறதையே நிறுத்துறாங்க. அதனால வயசை சட்டுன்னு சொல்ல முடியலை.) அந்த ஆள் ஜாலியா ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போறது மாதிரிதான் வர்றாரு. இவய்ங்க என்னத்த, தண்டனை, வாங்கி அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிருக்கலாம்.

ஆனா கூட பிடிபட்ட வி.ஏ.ஓ பொண்ணுக்கு இருபத்து நாலு வயசுதான் ஆகுதாம். லஞ்ச வழக்குல பிடிபட்ட குறைஞ்ச வயசு ஆள் இந்த விஜயலெட்சுமியாத்தான் இருக்கும்னு சொல்றாங்க. (சத்தமா சொல்லாதீங்கப்பா...ஒருத்தர் அதை பாராட்டி அறிக்கை விட்டுட்டு உடனே அதுக்காக தனக்கு பாராட்டு விழா நடத்தணும்னு அடம் பிடிப்பாரு.)

இந்த பொண்ணு பணியில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுதாம். அரசுத்துறையில இருக்குற பல கேடு கெட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்குறதை நியாயப்படுத்தி சொல்ற ஒரே காரணம் என்ன தெரியுமா?

"வேலை வாங்க அல்லது பிரமோஷன் வாங்க லஞ்சம் கொடுத்தேன்."

இந்த பொண்ணு இப்போ தேர்வு எழுதி அதுல வேலை வாங்கினதாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஏன் இந்த பேராசை?

ஆனா இந்தப் பொண்ணு லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொன்னா, இவ எங்க நம்மை எல்லாம் மாட்டி விட்டுடுவாளோ...அதனால இவளை எந்த வம்புலயாவது கோர்த்து விட்டுடணும்னு ஒரு கூட்டம் தயாராயிருக்கும். இதுக்கு பயந்துதான் பலரும் வாங்க ஆரம்பிப்பாங்க. அப்புறம் என்ன புலிவால் புடிச்ச கதைதான்.

பிறகு, அந்த வழக்கம், ஆசையாகி பேராசையாக ரொம்ப காலம் ஆகாது.

என்னைப் பொறுத்தவரை அரசியல்வியாதிகள் கட்சி நடத்தவும் தேர்தலுக்கு செலவழிக்கவும் பெரிய பெரிய பேங்க்கை கொள்ளை அடிச்சாதான் முடியும். அது நடைமுறையில அவ்வளவா சாத்தியமில்லை. அதுதான் மக்கள் சுரண்டப்படுற எல்லா விஷயங்களிலும் இவங்க மையப்புள்ளியா இருக்காங்க.

இப்போ நாகப்பட்டினத்துல ஒரு பெண், கண்டக்டரை தாக்கியதால ரெண்டு மணி நேரம் பேருந்தை இயக்காம வேலை நிறுத்தம் பண்ணியிருக்காங்க.

அந்தப் பெண், எட்டு ரூபாய் டிக்கட்டுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டியிருக்கு. அதுல ஆரம்பிச்சிருக்கும் வில்லங்கம்.

நாகப்பட்டணத்துல இறங்கியதும் மாத்திக்குடுங்கன்னு நடத்துனர் சொல்லியிருக்காரு.

அந்த அம்மாவும் எங்கயோ சில்லறை மாத்தி ஐம்பது ரூபாயை குடுத்துருக்கு. நாற்பது ரூபாயை மட்டும் கொடுத்துட்டு ரெண்டு ரூபாயை தராம போயிருக்காரு. அதை அந்த அம்மா கேட்டதும் தகராறு ஆயிருக்கு.

ரெண்டு ரூபாயை அந்த அம்மா மூஞ்சியில தூக்கி வீசிட்டு அசிங்கமா பேசுனதாலதான் செருப்பால அடிச்சேன்னு அவங்க சொல்றாங்க. கண்டக்டர் வேற எதோ காரணம் சொல்றாரு.

டூட்டியில இருக்குறப்ப அவங்க என்ன செஞ்சாலும் பயணி மேலதான் குற்றம் சுமத்தப்படும்னு ஒரு காரணத்தை வெச்சுகிட்டு இவங்க ஆட்டம் தாங்கலை.

பஸ்சுல இருக்குற ஐம்பது பேருக்கும் 1ரூபா, ரெண்டு ரூபா சில்லரை குடுக்குற சூழ்நிலையில பணம் இல்லைன்னா கஷ்டம்தான். அதை நாகரிகமான வார்த்தையில அழுத்தமா மறுக்க நிறைய கண்டக்டருங்களுக்கு தெரியுறதே இல்லை.

பயணி கிட்ட இருந்து தப்பான வார்த்தை வர்றதுக்கு முன்னாலயே கேவலமான பேச்சு பேசுறதையே நிறைய கண்டக்டர்கள் பிழைப்பா வெச்சுருக்காங்க.

நான் பார்த்த வரை, பயணிகள் கிட்ட நல்லா பேசுற கண்டக்டருங்க கொஞ்சம் கம்மிதான். எரிஞ்சும் விழாம குழையவும் இல்லாம நடந்துக்குறவங்கதான் அதிகம்.

ஆனா இப்போ செருப்படி வாங்குன மாதிரியான கண்டக்டருங்க ரொம்ப பேர் அரசு பஸ் தனக்கே சொந்தம்னுங்குற மாதிரி நடந்துக்குறாங்க. அராஜக அரசியல்வாதிகளோட பிம்பம்தான் இவங்களும்.

பஸ்சுல போகும் சூழ்நிலை வர்றப்ப அப்பாவியான ஆட்கள் பலரும் ஓரளவு சில்லரையோடதான் போறாங்க.

அப்படி இல்லாம வீம்புக்காகவும், குடிச்சுட்டும் பிரச்சனை பண்ற சிலரை கண்டக்டர்கள் கண்டுக்குறதே இல்லை. அவங்க வீரமெல்லாம் அப்பாவிகள் மேலதான்.

என்னத்த சொல்றது?

தடுமாறுகிறதா இளையபாரதம்?

அப்துல்கலாம் ஐயா இளைஞர்களை நல்ல விதமா பெரிய லட்சியத்தை அடையணும்னு கனவு கண்டு அதற்கான முயற்சிகள்ல இறங்க சொன்னாங்க. சொல்லிகிட்டும் இருக்காங்க.

ஆனா இளைய தலைமுறையில பொறுப்பில்லாம நடந்துக்குறவங்களோட சதவீதம் அதிகமாகிட்டே வருதோன்னு சந்தேகமா இருக்கு.

ஓரிரு நாட்களுக்கும் முன்பு திருச்சி பகுதியில லஞ்சம் வாங்கி பிடிபட்ட தனி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய ரெண்டு பேரோட போட்டோவும் சில பத்திரிகைகளில் வந்திருந்தது.

அந்த தனி தாசில்தாருக்கு அம்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.(பல பேரோட உடம்பு இதெல்லாம் எனக்கு பிடிக்கலைன்னு அலர்ஜியானாத்தான் டை அடிக்கிறதையே நிறுத்துறாங்க. அதனால வயசை சட்டுன்னு சொல்ல முடியலை.) அந்த ஆள் ஜாலியா ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போறது மாதிரிதான் வர்றாரு. இவய்ங்க என்னத்த, தண்டனை, வாங்கி அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிருக்கலாம்.

ஆனா கூட பிடிபட்ட வி.ஏ.ஓ பொண்ணுக்கு இருபத்து நாலு வயசுதான் ஆகுதாம். லஞ்ச வழக்குல பிடிபட்ட குறைஞ்ச வயசு ஆள் இந்த விஜயலெட்சுமியாத்தான் இருக்கும்னு சொல்றாங்க. (சத்தமா சொல்லாதீங்கப்பா...ஒருத்தர் அதை பாராட்டி அறிக்கை விட்டுட்டு உடனே அதுக்காக தனக்கு பாராட்டு விழா நடத்தணும்னு அடம் பிடிப்பாரு.)

இந்த பொண்ணு பணியில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுதாம். அரசுத்துறையில இருக்குற பல கேடு கெட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்குறதை நியாயப்படுத்தி சொல்ற ஒரே காரணம் என்ன தெரியுமா?

"வேலை வாங்க அல்லது பிரமோஷன் வாங்க லஞ்சம் கொடுத்தேன்."

இந்த பொண்ணு இப்போ தேர்வு எழுதி அதுல வேலை வாங்கினதாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஏன் இந்த பேராசை?

ஆனா இந்தப் பொண்ணு லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொன்னா, இவ எங்க நம்மை எல்லாம் மாட்டி விட்டுடுவாளோ...அதனால இவளை எந்த வம்புலயாவது கோர்த்து விட்டுடணும்னு ஒரு கூட்டம் தயாராயிருக்கும். இதுக்கு பயந்துதான் பலரும் வாங்க ஆரம்பிப்பாங்க. அப்புறம் என்ன புலிவால் புடிச்ச கதைதான்.

பிறகு, அந்த வழக்கம், ஆசையாகி பேராசையாக ரொம்ப காலம் ஆகாது.

என்னைப் பொறுத்தவரை அரசியல்வியாதிகள் கட்சி நடத்தவும் தேர்தலுக்கு செலவழிக்கவும் பெரிய பெரிய பேங்க்கை கொள்ளை அடிச்சாதான் முடியும். அது நடைமுறையில அவ்வளவா சாத்தியமில்லை. அதுதான் மக்கள் சுரண்டப்படுற எல்லா விஷயங்களிலும் இவங்க மையப்புள்ளியா இருக்காங்க.

இப்போ நாகப்பட்டினத்துல ஒரு பெண், கண்டக்டரை தாக்கியதால ரெண்டு மணி நேரம் பேருந்தை இயக்காம வேலை நிறுத்தம் பண்ணியிருக்காங்க.

அந்தப் பெண், எட்டு ரூபாய் டிக்கட்டுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டியிருக்கு. அதுல ஆரம்பிச்சிருக்கும் வில்லங்கம்.

நாகப்பட்டணத்துல இறங்கியதும் மாத்திக்குடுங்கன்னு நடத்துனர் சொல்லியிருக்காரு.

அந்த அம்மாவும் எங்கயோ சில்லறை மாத்தி ஐம்பது ரூபாயை குடுத்துருக்கு. நாற்பது ரூபாயை மட்டும் கொடுத்துட்டு ரெண்டு ரூபாயை தராம போயிருக்காரு. அதை அந்த அம்மா கேட்டதும் தகராறு ஆயிருக்கு.

ரெண்டு ரூபாயை அந்த அம்மா மூஞ்சியில தூக்கி வீசிட்டு அசிங்கமா பேசுனதாலதான் செருப்பால அடிச்சேன்னு அவங்க சொல்றாங்க. கண்டக்டர் வேற எதோ காரணம் சொல்றாரு.

டூட்டியில இருக்குறப்ப அவங்க என்ன செஞ்சாலும் பயணி மேலதான் குற்றம் சுமத்தப்படும்னு ஒரு காரணத்தை வெச்சுகிட்டு இவங்க ஆட்டம் தாங்கலை.

பஸ்சுல இருக்குற ஐம்பது பேருக்கும் 1ரூபா, ரெண்டு ரூபா சில்லரை குடுக்குற சூழ்நிலையில பணம் இல்லைன்னா கஷ்டம்தான். அதை நாகரிகமான வார்த்தையில அழுத்தமா மறுக்க நிறைய கண்டக்டருங்களுக்கு தெரியுறதே இல்லை.

பயணி கிட்ட இருந்து தப்பான வார்த்தை வர்றதுக்கு முன்னாலயே கேவலமான பேச்சு பேசுறதையே நிறைய கண்டக்டர்கள் பிழைப்பா வெச்சுருக்காங்க.

நான் பார்த்த வரை, பயணிகள் கிட்ட நல்லா பேசுற கண்டக்டருங்க கொஞ்சம் கம்மிதான். எரிஞ்சும் விழாம குழையவும் இல்லாம நடந்துக்குறவங்கதான் அதிகம்.

ஆனா இப்போ செருப்படி வாங்குன மாதிரியான கண்டக்டருங்க ரொம்ப பேர் அரசு பஸ் தனக்கே சொந்தம்னுங்குற மாதிரி நடந்துக்குறாங்க. அராஜக அரசியல்வாதிகளோட பிம்பம்தான் இவங்களும்.

பஸ்சுல போகும் சூழ்நிலை வர்றப்ப அப்பாவியான ஆட்கள் பலரும் ஓரளவு சில்லரையோடதான் போறாங்க.

அப்படி இல்லாம வீம்புக்காகவும், குடிச்சுட்டும் பிரச்சனை பண்ற சிலரை கண்டக்டர்கள் கண்டுக்குறதே இல்லை. அவங்க வீரமெல்லாம் அப்பாவிகள் மேலதான்.

என்னத்த சொல்றது?