Search This Blog

வியாழன், 21 அக்டோபர், 2010

தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி 2010ல் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள். ஆனால் பெருகி வரும் முதியோர் இல்லங்களுக்கும் சிதைந்து வரும் குடும்ப உறவுகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஒரு பெண்தான்...இல்லை...தாய்தான்.(மாமியாரோ மருமகளோ...அவளும் ஒரு தாய்தானே.)

நம் நாட்டில் உள்ள வளங்கள் உலக மக்கள் எவ்வளவு பேர் என்றாலும் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். ஆனால் ஒரே ஒரு மனிதனி ஆசைகளைக்கூட நிறைவேற்ற போதாது என்று காந்தி சொல்லியிருக்கிறார். ஒரு மனிதனின் ஆசையையே நம் நாட்டில் உள்ள மொத்த வளங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்றால் பேராசையை சாதாரண வருமானம் உள்ள ஆணால் எப்படி நிறைவேற்ற முடியும்?... இந்தச் சிக்கலின் காரணமாக ஏற்பட்டதுதான் பல குடும்பங்களில் வயதானவர்களைக் கழித்துக் கட்டும் அவலம்.

பழங்காலத்தில் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு கொஞ்சம் ஓவராகவே சகித்துக்கொண்டு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போது பல ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசிய தேவைகளாக நாம் விரும்பியோ நம் மீது திணிக்கப்பட்டோ விட்டன. இதனால்தான் வீட்டில் உள்ள வயதானவர்களை கூடுதல் சுமையாக பலரையும் நினைக்க வைத்திருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் சுயநலம் - நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. பரிசுபெற்ற கதையின் கரு எனக்குத் தோன்றக்காரணமான சிந்தனைகள்தான் இவை.
கதையின் நடை எனக்கே முழு திருப்தியளிக்கவில்லை. ஆனால் நான் கதைக்காக தேர்வு செய்திருக்கும் கருவின் வலிமைதான் எனக்கு இந்தப் பரிசைப்பெற்றுத் தந்திருக்கிறது என்பது என் கருத்து.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ரூபாய் ஐந்தாயிரம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

இப்போது பலரும் தன் பிள்ளைகள் கொடுமைப்படுத்தி சாப்பாடு போட மறுக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்செல்கின்றனர். இந்த சூழ்நிலைக்கு சம்பந்தப் பட்ட பெற்றோர்களே பல நேரங்களில் தங்களின் துன்பத்திற்கு காரணமாகின்றனர் என்று என் மனதில் தோன்றிய கருத்தை வைத்து எழுதிய சிறுகதை.



சுயநலமே உலகம் என்று ஆகிவிட்ட நிலையில் தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமே என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய பிள்ளைகளாக
இருந்தாலுமே!

புத்தகத்தில் பிரசுரமான கதையின் பக்கங்களை விரைவில் பதிவேற்றுகிறேன்.

சனி, 2 அக்டோபர், 2010

சிவாஜி படத்தின் வசனமும் எந்திரனும்

சிங்கம் மட்டுமல்ல...பல நேரங்களில் கெட்ட விஷயங்களும் சில காலகட்டத்தில் நல்ல விஷயங்களும் கூட சிங்கிளாக வருவதில்லை.
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் ஒழுங்காக சம்பளம் வருவதில்லை. மூன்று வாரங்களுக்கு முன்பு வரை இந்த நிலைதான். ஆனால் இப்போது பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிய என்னைத் தேர்ந்தெடுத்து  பயிற்சி அளித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய வாழ்நாள் லட்சியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத துறையில் பொருளாதார தேவைக்காக வேலை செய்ய நேர்ந்தாலும் கடுமையாக உழைத்து லட்சியத்திலும் வெற்றிக்கொடி நாடிட்டியுள்ளனர்.

ஆனால் எனக்கு குறிக்கோளாக இருந்த துறையிலேயே வேலையும் கிடைத்திருப்பதால் இன்னும் என்னை மெருகேற்றிக்கொண்டு என்னுடைய குறிக்கோளில் அழுத்தமாக சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு நல்ல விஷயம் என்றால், சிறுகதைப் போட்டி ஒன்றில் பதிமூன்று வெற்றியாளர்களில் ஒருவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அந்த விவரம் நாளை உங்களுக்கு அறிவிக்கப்படும். இது தவிர சொந்த வாழ்வில் நான் எடுத்த சில முயற்சிகளும் இப்போது வெற்றியடையத் தொடங்கி உள்ளன.

கடந்த மாதம் தளபதி முதல் எந்திரன் வரை என்ற பதிவில் ரஜினிகாந்த் படங்கள் பற்றியும் வழக்கொழிந்து வரும் பிலிம் புரொஜக்ட்டர் பற்றியும் தொடர் பதிவாக எழுத நினைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். தொடர் வேலைப்பளு காரணமாக அடுத்த பதிவு எழுத முடியவில்லை. இனி ஓரளவு அதைத் தொடருவேன் என்று நம்புகிறேன்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் வெளிவந்த ஆண்டு 1991 என்று நினைக்கிறேன். திருவாரூரில் ஒரு ஏ/சி திரையரங்கில் அந்த படத்திற்குப் பிறகு ரஜினி படங்களே செப்டம்பர் 30, 2010 வரை வரவில்லை.

அதுக்கு இப்போ என்ன என்றுதானே கேட்குறீங்க?...எந்திரன் படம் அந்த தியேட்டரிலும் ரிலீசுங்க. நான் 1996 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் அவ்வப்போது படிப்பு மற்றும் ஆபரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்த அந்த தியேட்டரை தற்போது இயக்குனர் ஷங்கர் வாடகைக்கு எடுத்து இயங்காமல் இருந்த ஏ/சி யை ஏதோ செய்து DTS வசதி செய்து தன் மைத்துனர் மூலமாக நிர்வகித்து வருகிறார். அதனால் இந்த தியேட்டரிலும் எந்திரன் ரிலீஸ்.
(தியேட்டர் படம் மாடலுக்காக மட்டுமே...இது திருவாரூரில் உள்ள தியேட்டர் அல்ல.)

சிறுகதைப் போட்டியில் நான் எந்த பரிசு பெற்றேன் என்ற விபரத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.