Search This Blog

திங்கள், 5 ஜூலை, 2010

புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க சூப்பர் ஐடியா

1996ம் ஆண்டு நான் சினிமாதியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில் படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும் இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)
அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில் இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.

திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ சமாளிச்சு உசுரோட இருக்கு.

இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா இயங்கிகிட்டு இருந்த சமயம்.பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு,பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் ஒரு தியேட்டர்ல குறைந்தபட்சம் முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல நல்லா வசூல் செய்துகிட்டு இருந்துச்சு.

இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை, இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.
இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(பதினைந்து வருஷத்துக்கு முன்னால)

இது தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய், பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு.

அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.

ஆனா இப்போ,மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க.இந்த ஐடியா பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.

காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்? இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே ஏறுவாங்க.அதுவும் ஒருநாள் கூத்துதான்.
பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும் ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய் கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.

செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல் கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.

வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து ரூபாய்,உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி படிச்ச நிபுணர் தேவையில்லை.

எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல் செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால் ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.

இப்போது சினிமா தொழிலிலும் இந்த..................................தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.

இதே டெக்னிக்கை பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எப்படின்னுதானே கேட்குறீங்க?

ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாய் என்று இருப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு, அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.
இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப்  பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டச் சொல்லும் போலீஸ்

சில தினங்களுக்கு முன்பு என் நண்பன் ஒருத்தன் இரவு பதினோரு மணிக்கு மாநில நெடுஞ்சாலையில் போய்க்கிட்டு இருந்தான். இடையில செல்போன் அழைப்பு வந்துருக்கு. உடனே டூவீலரை சாலையை விட்டு இறக்கி மணல் பகுதியில் நிறுத்திட்டுதான் செல்போன்ல பேசியிருக்கான்.அப்போ அவன்கிட்ட ரெண்டு போலீஸ்காரங்க ஓடி வந்துருக்காங்க.
அவங்களைப் பார்த்ததும் ஷாக்காகி செல்போன் பேசுறதை நிறுத்திட்டு என்னன்னு கேட்டுருக்கான்.ஓடி வந்தவங்கள்ல ஒரு போலீஸ்காரர் இவனுக்கு தெரிஞ்சவராம்.

"என்ன தம்பி...நீங்கதானா?"ன்னு அவர் கேட்டிருக்கிறார்.இதைப் பார்த்ததும் கூட வந்த இன்னொரு போலீஸ்காரர்,"உங்களுக்கு தெரிஞ்ச பையனா, சரி...சரி...இங்கெல்லாம் நிக்க கூடாது. உடனே கிளம்பு."ன்னு சொன்னாராம்.

"இல்ல சார்...போன்ல பேசுறதுக்காகதான்..."அப்படின்னு இவன் இழுத்துருக்கான்.

"அதெல்லாம் வண்டியை ஓட்டிகிட்டு போகும்போதே பேசிக்க...கிளம்பு...கிளம்பு..."அப்படின்னு அந்த இன்னொரு போலீஸ்காரர் விரட்டியிருக்கார்.

நண்பனுக்கு தெரிஞ்ச போலீஸ்காரரும், "நீங்க கிளம்புங்க தம்பி..."அப்படின்னு சொல்லி கண்ணைக்காட்டியிருக்கார்.

இவனும் போன்ல அப்புறம் பேசுறேன்னு சொல்லி போனைக் கட்பண்ணிட்டு டூவீலரை எடுத்துட்டு கிளம்பிட்டானாம். ரொம்ப பக்கத்துலேயே பேட்ரோல் வாகனமும் இன்னொரு சொகுசுக்காரும் லைட்டைக்கூட எரிய விடாம நின்னுருக்கு.

சொகுசுக்கார்ல வந்தவங்ககிட்ட ரெண்டு போலீஸ்காரங்க தீவிரமான வசூல்வேட்டையில இருந்துருக்காங்க. நண்பனுக்கு விஷயம் தெரிஞ்சதும் அவனுக்குள்ள சிரிச்சுகிட்டு வந்துருக்கான். அந்த வண்டிகளைத் தாண்டுனதும் கொஞ்ச தூரத்துலேயே இன்னும் ரெண்டு போலீஸ்காரங்க, அந்தப் பக்கம் காவலுக்கு.

வண்டி ஓட்டும்போதே செல்போன் பேசுங்கன்னு சொல்லி இவங்க யாரைக்காப்பாத்துறாங்க, யாருக்கு குழி வெட்டுறாங்கன்னு புரியுதா?

இந்த சம்பவம் எந்தப் பகுதியில நடந்தது, நண்பன் பெயர் என்னன்னு சொல்லாம பதிவு எழுதுறேன். நம்ம நாட்டுல கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரியுதா? என்னைப் பொறுத்த வரை முழு சுதந்திரம் இல்லை. நீங்க உடனே இந்த ஊர்ல பெட்ரோல் இந்த விலை. அந்த ஊர்ல பிஸ்கட் அந்த விலைன்னு பட்டியல் வாசிக்காதீங்க நண்பர்களே.

தப்பு பண்றவன் அதிகாரத்துல இருக்குறவங்ககிட்ட கூடிக் குலாவுறான். நேர்மையா நடக்குறவங்க போலீசைப் பார்த்து பயப்படுறாங்க.இதுக்கு காரணம் என்ன? நல்ல பேர் எடுக்குறது ரொம்ப கஷ்டம். கெட்டபேர் வாங்க ஒரு நொடி போதும்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி, தப்பு பண்றவன் மேல வழக்கு பதிவு பண்ணி ஒரு நாளாவது ரிமாண்டுல வெக்கிறதுதான் கஷ்டம். யோக்கியன் மேல ஒரே ஒரு பொய் வழக்கு போட்டு ஒன்பது வருஷம் கூட விசாரணையே பண்ணாம உள்ள வைக்கலாம். இதுதான் நம்ம நாடு.
இதுலயும் ஒரு ஆறுதல் என்னன்னா...நமக்கே ஷாக் கொடுக்குற அளவுக்கு ஒண்ணு ரெண்டு ரொம்ப நல்ல போலீஸ்காரங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.சென்னை சிட்டிபஸ்சுக்குள்ள பயணிகள் கூட்டத்துக்குள்ள இருக்காரா இல்லையான்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கண்டக்டர் இருப்பாரே... அந்த மாதிரியான சொற்ப எண்ணிக்கையில்.

செவ்வாய், 15 ஜூன், 2010

ரயில் தண்டவாளம் தகர்ப்பு - யாருக்கெல்லாம் ஆப்பு?

ரயில்களையும் தண்டவாளங்களையும் தகர்க்கும் கலாச்சாரம் இதுநாள் வரை வட இந்தியாவில்தான் அதிகம் என்று நினைத்ததற்கு வந்தது ஆப்பு.மிகப்பெரிய அரசியல் சூதாட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த தண்டவாள தகர்ப்பு என்று சொல்கிறார்கள்.இது பற்றி எல்லாம் எனக்கு விவரம் தெரியாது.
நான் பேசப்போவது இது மாதிரியான நாச வேலைகளால் நமக்கு என்னென்ன பாதிப்பு என்பதைப்பற்றிதான்.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் இருவழிப்பாதைகளாகி விட்டன.அந்தப் பகுதி மக்களை மட்டுமே குறி வைத்து அந்த ரயில்கள் இயக்கப்படுவதால்தான் தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் கூட பல ரயில்கள் நிற்காமல் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.

ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்தந்த மாநிலங்களும் கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற அறிவிக்கப்படாத கொள்கை முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டது. இந்த போக்கு சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.தமிழகத்தின் முக்கிய நகரங்களை இரட்டைரயில்பாதையால் இணைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.
அதாவது, தொலைதூர ரயில்கள் அரைமணி நேரத்துக்கு ஒன்றாக புறப்பட்டால் இவ்வளவு பேருந்துகள் செல்ல வேண்டியது இருக்காது,இவ்வளவு எரிபொருள் செலவாகாது,சாலை விபத்துக்களில் நாள்தோறும் இவ்வளவு உயிர்கள் பலியாகாது,பேருந்துகள் வெளியிடும் புகையால் இந்த அளவு வளிமண்டலம் வெப்பமாகாது என்பது என் எண்ணம்.

ஆனால் இதைப் பற்றி நான் யாருடனாவது விவாதிக்கும்போது, இரட்டை ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல் வரும் என்று சொல்கிறார்கள். அது எப்படிங்க, நாலுவழிப்பாதை அமைக்க மட்டும் நிலம் கிடைக்குது?

அது சரி...நாலுவழிப்பாதைக்கு காண்ட்ராக்ட் விட்டு பத்து கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி வசூல் செய்யுற மாதிரி ரயிலை நிறுத்தி காசு வாங்க முடியாதே. அதனால இந்த பணிகள் மந்தமாத்தான் இருக்கும். அப்படின்னு என்னையே நான் சமாதானப்படுத்திகிட்டு இருக்கேன்.
இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு பழமொழி சொல்லுவாங்களே...அந்த மாதிரி இருக்குற ரயில் பாதைகளையும் இப்படி வெடி வேச்சு தகர்த்தா வேற யாருக்கு ஆப்பு?அப்பாவி பொது ஜனத்துக்குதான்.(லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், மாதம் கால் லகரம் ஊதியம் வாங்கும் தனியார் நிறுவன ஊழியர்கள், கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்,தில்லுமுல்லு வியாபாரிகள் இந்த அப்பாவி பொதுஜனப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்.)
******
போலி மருத்துவர்கள் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திருவாரூரில் கூட ஐந்து பேர் கைது என்று நாளிதழ்களில் படித்தேன்.

நம்ம நாட்டுல என்ன ஸ்பெஷல்னா, சாதாரண மனுஷன் வாழ வழி இல்லாம எல்லா பாதையையும் அடைச்சுட்டு குரல்வளையையும் நெறிப்போம்.அதுல இருந்து நீங்களா தப்பிக்க வழியைப் பார்த்தீங்கன்னா அதுக்கும் விட மாட்டோம். செத்துடலாம்னு நீங்களா முடிவெடுத்தா அதையும் தப்புன்னு சொல்லி உள்ள போட்டுடுவோம். ஏன்னா அதுக்கு ரைட்ஸ் எங்களுக்குதான் இருக்கு.

என்ன குழப்பமா?
உடம்புக்கு கேடுன்னு சொல்ற பொருள் எல்லாம் காலையில இருந்து நடுராத்திரி வவரைக்கும் கிடைக்குது. ஆனா அரசு மருத்துவமனைகளில் காலை எட்டு மணியில இருந்து பதினோரு மணி வரைதான் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆக்சிடண்ட் கேசுன்னா பெரிய ஊர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கன்னு எழுதிக்கொடுக்குறது மட்டும் இருபத்துனாலு மணி நேர சேவையா இருக்கே அத சொன்னேன்.
மருந்து கம்பெனிகளும் பல மருத்துவர்களும், மருத்துவமனைகளும், பரிசோதனைக்கூடங்களும் லாபம் சம்பாதிக்கிறதோட நிறுத்திக்காம கொள்ளை அடிக்கிறத கண்டுக்க மாட்டாங்க.குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறப்ப ஓட்டுனர் செய்யுற தவறாலயும், அவங்க அஜாக்கிரதையாலயும்தான் தொண்ணூறு சதவீத விபத்து ஏற்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவங்க செத்துகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் இதைக் கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கையையும் காணோம். இப்ப மட்டும்................................................