Search This Blog

புதன், 14 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...1



குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1



மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜசேகர் தெருவுக்குள் நுழையும் முன்பு இவனிடம் இருந்த சுமைகளைப்பார்த்துவிட்டு  ஒன்றிரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சற்று முன்னால் வந்தார்கள். ஆனால் இவன், எந்த வித தயக்கமும் இல்லாமல் ரங்கநாதன் தெருவிற்குள் இறங்கி நடந்ததும் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். இதைப்பார்த்த ராஜசேகருக்கு அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல் மகிழ்ச்சி.




வேலை கிடைத்து புறப்பட்ட இவனுக்கு, சென்னை ரிட்டன் நண்பன் (எவ்வளவு நாள்தான் துபாய் ரிட்டன், சிங்கப்பூர் ரிட்டன் இப்படியே சொல்றது?) சில ஆலோசனைகளை சொல்லியிருந்தான். "உனக்கே நேரம் சரியில்லை. ஊருக்குப் புதுசுன்னு தெரிஞ்சா ஆப்படிக்கிற ஆட்டோக்காரங்க கிட்டதான் நீ போய் மாட்டுவ. அதனால, நடந்தே இந்த முகவரிக்குப் போற மாதிரி நான் வழி சொல்றேன்" என்ற அவன், ராஜசேகரிடம் எப்படி நடந்து செல்ல வேண்டும் என்று கூட பாடம் எடுத்தான்.



அதைக்கேட்ட ராஜசேகர், பிறந்து வளர்ந்த ஊரில் நடப்பது போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து செல்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவன் வைத்திருந்த சுமைகள் அப்படி. ஆனால் ஆட்டோவுக்கு கொடுக்கும் நூறு ரூபாய் இருந்தால் கையேந்தி பவனில் ரெண்டு நாளைக்கு சாப்பிடலாம். அங்க போனா ஒவ்வொன்னுக்கும் காசு. உள்ளூருன்னா சொந்தக்காரங்க வீட்டுக்கு சும்மா பார்க்கப்போற மாதிரி விசிட் விட்டுட்டு வயித்தை நிரப்பிட்டு வந்துடலாம். அங்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லடி மாப்ளே...என்று நண்பன் சொன்னது நினைவுக்கு வரவும் ராஜசேகர் வைத்திருந்த பேக்கும், ப்ரீஃப் கேசும் கனமாகவே தெரியவில்லை.



பெரிய மருத்துவமனையை எதிர்பார்த்திருந்த ராஜசேகருக்கு பர்கிட் ரோட்டில் அமைந்திருந்த அந்த கிளினிக்குக்கு சென்றதும் சின்ன ஏமாற்றம். அங்கே உள்நோயாளிகள் அனுமதி எல்லாம் கிடையாதாம். பரிசோதனைகள், ஆலோசனைகள் மட்டுமே. இதிலேயே ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கும் கிளினிக் அது. மருத்துவரின் பெரியப்பா ஆள்பிடிக்கும் தேடுதலில் இறங்கியபோது ராஜசேகர் சிக்கியிருந்தான்.



சாப்பாடு மட்டும் வெளியில பார்த்துக்க. ஆஸ்பத்திரியிலேயே தங்கிக்கலாம். வாடகையும் அட்வான்சும் மிச்சம் அப்படின்னு அவர் சொன்னதை நம்பி வந்த ராஜசேகருக்கு காட்டப்பட்ட அறையைப் பார்த்ததும் பகீர் என்றது. பனிரெண்டுக்கு பத்து என்ற அளவுடைய அறையில் ஆறு பேருக்கு அலாட்மெண்ட் என்று சீனியர் சொன்னான்.



"தம்பி...ரொம்ப பயப்படாத...இந்த ரூம்ல ஏசி வெச்சாதான் படுக்கமுடியும். இல்லன்னா லாயக்கில்லை. அதனால பேஷண்ட் வெயிட்டிங் ஹால்லயே படுத்துக்கலாம். என்ன...ராத்திரி பதினோரு மணிக்கு முன்னால படுக்க முடியாது. காலையில ஆறரை மணிக்கப்புறம் தூங்க முடியாது. போகப்போக பழகிடும்.



ஊருல உட்கார்ந்த இடத்துலயே வேலையா...இல்ல...அலைஞ்சு திரிஞ்சு பழக்கமா..." என்றான் மணிகண்டன்.



"ஏன்?"



"இங்க உட்கார வாய்ப்பே இல்லை. அதான் கேட்டேன்."



"என்னது...உட்கார முடியாதா. நான் டிகிரி படிச்சுருக்கேன். லேப்ல எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு ஃபீஸ் அப்படின்னு குறிச்சு கொடுக்குறதுதான் வேலைன்னு சொன்னாங்களே." என்ற ராஜசேகரின் கண்களில் லேசான பதற்றம் தெரிந்தது.



இதைப் பார்த்ததும் சிரித்த மணிகண்டன்,"சரியாத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு பேஷண்ட் டாக்டர் ரூமுக்குள்ள போகும்போது நீயும் கூடவே போகணும். உயரம், எடையை குறிச்சு டாக்டர்கிட்ட சொல்லணும். அவர் குறிச்சு கொடுக்குற டெஸ்ட்டுக்கான ஸ்லிப்பை எடுத்துகிட்டு பேஷண்ட்டோட வெளியில வந்து தொகையைக் குறிச்சு பணம் வாங்கி, கட்டி பெய்டு சீல் வெச்சு லேப்புக்குள்ள அனுப்பணும். அதுக்குள்ள வேற பேஷண்ட்டுகள் சிலரை மற்ற ஸ்டாஃப் கவனிச்சுக்குவாங்க. மறுபடி நீ முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்."என்றான்.



இப்போது ராஜசேகர் மனம் முழுவதும் வெறுப்பு. இந்த வெறுப்பு மனதில் இருக்கும்போது கலெக்டர் வேலையே கிடைத்தாலும் ஈடுபாடு வராது.



"அட்டெண்டர் வேலைன்னு சுருக்கமா சொல்லக்கூடாதா?" என்றான்.



இதைக் கேட்ட மணிகண்டன்,"அட...நீ டிகிரி படிச்ச ஆளுதாம்பா...இவ்வளவு சரியா புரிஞ்சுகிட்ட...பத்து நாள் வரை நீ இங்க இருக்குற யார்கிட்ட வேணுன்னாலும் வேலை தொடர்பான சந்தேகம் கேட்கலாம். யாரும் திட்ட மாட்டாங்க. அதுலயும் லேபுக்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் அழகா அம்சமா இருக்கும். அவங்ககிட்ட ஜாலியா கடலை போடுறது ஒண்ணுதான் எனக்கு இப்ப இருக்குற ஒரே ஆறுதல். நீயும் என்ஜாய். இப்ப போய் குளிச்சுட்டு வா. நான் தாங்கிக்குவேன். நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் என்னைய தப்பா நினைச்சுடுவாங்க."என்று சொல்லிவிட்டு அகன்றான்.



குளித்துவிட்டு உடைமாற்றி மேக்கப்புடன் வந்த ராஜசேகர், ரிஷப்ஷன் டேபிளின் பின்னால் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த பெண்ணிடம்,"மேடம்...நான் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன். இப்ப என்ன செய்யணும்." என்றான்.



அவள் நிமிர்ந்து,"மணிகண்டன் சொன்னார். வேலையைத் தொடங்குறதுக்கு முன்னால போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்புறம் ரெண்டு மணி வரை எங்கயும் போக முடியாது. இன்னொரு விஷயம்...நான் உங்களோட சின்னப்பொண்ணாத்தான் இருப்பேன். அதனால மேடமெல்லாம் வேண்டாம். கால் மீ ஷண்முகப்ரியா..."என்றாள்.



1-தொடரும்



******

இந்தக் கதையை நான் எழுத தூண்டுதலாக இருந்தது அங்காடித்தெரு படம்தான். படத்தில் மூன்றாவது தளத்தின் சூப்பர்வைசராக வரும் இயக்குனர் A.வெங்கடேஷ்,"என்னலே சிரிப்பு..."என்று பல்லைக்கடித்துக்கொண்டு கேட்கும் காட்சியில் பாண்டியும் மகேஷும் அலறுவது காமெடிக்காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக, அவருடைய அட்டகாசத்தைப் பார்க்கும்போது பிடித்து அடித்து விடலாமா என்று கூட நினைக்க வைத்தது. அதுதான் அவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி.



இந்தப் படம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் பத்து இயக்குனர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்தேன். வசந்தபாலன் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோது A.வெங்கடேஷ் அசோசியேட் டைரக்டராம். வசந்தபாலன் படப்பிடிப்பின்போது முக்கியமான ஒரு நோட்டைத் தொலைத்து விட்டபோது ஒரு வெங்கடேஷ் டெரர் அவதாரம் எடுத்திருக்கிறார்.



வசந்தபாலன் அப்போது அவரைப்பார்க்கவே அஞ்சி நடுங்கிய அனுபவம்தான் இந்த கேரக்டரில் வெங்கடேஷை நடிக்கவைக்க காரணம் என்று சொன்னார்.



ஆனால் ஒன்றிரண்டு முறை இயக்குனர் வெங்கடேஷைப் பார்த்தால் அவர் இவ்வளவு டெரர் என்று சொல்லவே முடியாது.




நீ எத்தனை தடவை அவரைப் பார்த்துருக்கன்னுதானே கேட்குறீங்க. ஒரே ஒரு தடவை ஏ.வி.எம் ஸ்டுடியோவுலதான் சந்திச்சிருக்கேன்.



2006ம் வருஷம் தீபாவளி நெருங்கிய சமயம், ஏவிஎம் ஸ்டுடியோவுல வாத்தியார் படத்தோட எடிட்டிங், கே.பாக்யராஜ் ஸ்டுடியோவுல சரத்குமாரின் நூறாவது படமான தலைமகன்  எடிட்டிங் நடந்துகிட்டு இருந்தது. நெகட்டிவை பிராசஸ் பண்ணின பிறகு பிரிண்ட் போட்டுட்டு அதை அப்படியே எடிட்டிங் செய்யப் பயன்படுத்துற சிரமமெல்லாம் இப்ப கிடையாது. டெலிசினி மெஷின் மூலமா வீடியோ டேப்புக்கு கன்வர்ட் பண்ணிடுவாங்க.



அந்த டேப்புல பதிவான படத்தை கணிணிமூலமா அவிட், எஃப் சி பி போன்ற தொழில்நுட்பம் மூலமா  தொகுத்து, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் முடிஞ்சு திருப்தி வந்த பிறகுதான் ஒரிஜினல் நெகட்டிவ்ல மாற்றம் செய்யுறதெல்லாம் நடக்கும்.



வீடியோ டேப்புல இருக்குற படத்தை கணிணியில ஏற்ற பீட்டா கேம் பிளேயர் தேவை. பல லட்ச ரூபாய் விலையுள்ள அந்த பிளேயரை நான் இந்த எடிட்டிங் நடக்குற இடத்துக்கெல்லாம் எடுத்துட்டுப் போனேன். இருபது கிலோவுக்கு குறையாத எடை இருக்கும்.



வாத்தியார் பட எடிட்டிங் வேலைக்காக பிளேயரை எடுத்துட்டுப் போகும்போது ஏவிஎம்ல அர்ஜூன், A.வெங்கடேஷ், எடிட்டர் வி.டி.விஜயன்  எல்லாம் இருந்தாங்க. அப்ப வெங்கடேஷ் பேசிகிட்டு இருந்ததை பார்த்துருக்கேன். அவரைப்பார்த்தா கோபப்படுவாரான்னு கேட்குற மாதிரிதான் இருந்துச்சு. ஆனா வசந்தபாலன் வெங்கடேஷ் கோபத்தைப் பத்தி சொன்னதும்,"நம்பமுடியவில்லை..."அப்படின்னு பாடத்தான் தோணுச்சு.



******


குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜசேகர் தெருவுக்குள் நுழையும் முன்பு இவனிடம் இருந்த சுமைகளைப்பார்த்துவிட்டு  ஒன்றிரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சற்று முன்னால் வந்தார்கள். ஆனால் இவன், எந்த வித தயக்கமும் இல்லாமல் ரங்கநாதன் தெருவிற்குள் இறங்கி நடந்ததும் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். இதைப்பார்த்த ராஜசேகருக்கு அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல் மகிழ்ச்சி.
வேலை கிடைத்து புறப்பட்ட இவனுக்கு, சென்னை ரிட்டன் நண்பன் (எவ்வளவு நாள்தான் துபாய் ரிட்டன், சிங்கப்பூர் ரிட்டன் இப்படியே சொல்றது?) சில ஆலோசனைகளை சொல்லியிருந்தான். "உனக்கே நேரம் சரியில்லை. ஊருக்குப் புதுசுன்னு தெரிஞ்சா ஆப்படிக்கிற ஆட்டோக்காரங்க கிட்டதான் நீ போய் மாட்டுவ. அதனால, நடந்தே இந்த முகவரிக்குப் போற மாதிரி நான் வழி சொல்றேன்" என்ற அவன், ராஜசேகரிடம் எப்படி நடந்து செல்ல வேண்டும் என்று கூட பாடம் எடுத்தான்.

அதைக்கேட்ட ராஜசேகர், பிறந்து வளர்ந்த ஊரில் நடப்பது போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து செல்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவன் வைத்திருந்த சுமைகள் அப்படி. ஆனால் ஆட்டோவுக்கு கொடுக்கும் நூறு ரூபாய் இருந்தால் கையேந்தி பவனில் ரெண்டு நாளைக்கு சாப்பிடலாம். அங்க போனா ஒவ்வொன்னுக்கும் காசு. உள்ளூருன்னா சொந்தக்காரங்க வீட்டுக்கு சும்மா பார்க்கப்போற மாதிரி விசிட் விட்டுட்டு வயித்தை நிரப்பிட்டு வந்துடலாம். அங்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லடி மாப்ளே...என்று நண்பன் சொன்னது நினைவுக்கு வரவும் ராஜசேகர் வைத்திருந்த பேக்கும், ப்ரீஃப் கேசும் கனமாகவே தெரியவில்லை.

பெரிய மருத்துவமனையை எதிர்பார்த்திருந்த ராஜசேகருக்கு பர்கிட் ரோட்டில் அமைந்திருந்த அந்த கிளினிக்குக்கு சென்றதும் சின்ன ஏமாற்றம். அங்கே உள்நோயாளிகள் அனுமதி எல்லாம் கிடையாதாம். பரிசோதனைகள், ஆலோசனைகள் மட்டுமே. இதிலேயே ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கும் கிளினிக் அது. மருத்துவரின் பெரியப்பா ஆள்பிடிக்கும் தேடுதலில் இறங்கியபோது ராஜசேகர் சிக்கியிருந்தான்.

சாப்பாடு மட்டும் வெளியில பார்த்துக்க. ஆஸ்பத்திரியிலேயே தங்கிக்கலாம். வாடகையும் அட்வான்சும் மிச்சம் அப்படின்னு அவர் சொன்னதை நம்பி வந்த ராஜசேகருக்கு காட்டப்பட்ட அறையைப் பார்த்ததும் பகீர் என்றது. பனிரெண்டுக்கு பத்து என்ற அளவுடைய அறையில் ஆறு பேருக்கு அலாட்மெண்ட் என்று சீனியர் சொன்னான்.

"தம்பி...ரொம்ப பயப்படாத...இந்த ரூம்ல ஏசி வெச்சாதான் படுக்கமுடியும். இல்லன்னா லாயக்கில்லை. அதனால பேஷண்ட் வெயிட்டிங் ஹால்லயே படுத்துக்கலாம். என்ன...ராத்திரி பதினோரு மணிக்கு முன்னால படுக்க முடியாது. காலையில ஆறரை மணிக்கப்புறம் தூங்க முடியாது. போகப்போக பழகிடும்.

ஊருல உட்கார்ந்த இடத்துலயே வேலையா...இல்ல...அலைஞ்சு திரிஞ்சு பழக்கமா..." என்றான் மணிகண்டன்.

"ஏன்?"

"இங்க உட்கார வாய்ப்பே இல்லை. அதான் கேட்டேன்."

"என்னது...உட்கார முடியாதா. நான் டிகிரி படிச்சுருக்கேன். லேப்ல எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு ஃபீஸ் அப்படின்னு குறிச்சு கொடுக்குறதுதான் வேலைன்னு சொன்னாங்களே." என்ற ராஜசேகரின் கண்களில் லேசான பதற்றம் தெரிந்தது.

இதைப் பார்த்ததும் சிரித்த மணிகண்டன்,"சரியாத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு பேஷண்ட் டாக்டர் ரூமுக்குள்ள போகும்போது நீயும் கூடவே போகணும். உயரம், எடையை குறிச்சு டாக்டர்கிட்ட சொல்லணும். அவர் குறிச்சு கொடுக்குற டெஸ்ட்டுக்கான ஸ்லிப்பை எடுத்துகிட்டு பேஷண்ட்டோட வெளியில வந்து தொகையைக் குறிச்சு பணம் வாங்கி, கட்டி பெய்டு சீல் வெச்சு லேப்புக்குள்ள அனுப்பணும். அதுக்குள்ள வேற பேஷண்ட்டுகள் சிலரை மற்ற ஸ்டாஃப் கவனிச்சுக்குவாங்க. மறுபடி நீ முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்."என்றான்.

இப்போது ராஜசேகர் மனம் முழுவதும் வெறுப்பு. இந்த வெறுப்பு மனதில் இருக்கும்போது கலெக்டர் வேலையே கிடைத்தாலும் ஈடுபாடு வராது.

"அட்டெண்டர் வேலைன்னு சுருக்கமா சொல்லக்கூடாதா?" என்றான்.

இதைக் கேட்ட மணிகண்டன்,"அட...நீ டிகிரி படிச்ச ஆளுதாம்பா...இவ்வளவு சரியா புரிஞ்சுகிட்ட...பத்து நாள் வரை நீ இங்க இருக்குற யார்கிட்ட வேணுன்னாலும் வேலை தொடர்பான சந்தேகம் கேட்கலாம். யாரும் திட்ட மாட்டாங்க. அதுலயும் லேபுக்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் அழகா அம்சமா இருக்கும். அவங்ககிட்ட ஜாலியா கடலை போடுறது ஒண்ணுதான் எனக்கு இப்ப இருக்குற ஒரே ஆறுதல். நீயும் என்ஜாய். இப்ப போய் குளிச்சுட்டு வா. நான் தாங்கிக்குவேன். நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் என்னைய தப்பா நினைச்சுடுவாங்க."என்று சொல்லிவிட்டு அகன்றான்.

குளித்துவிட்டு உடைமாற்றி மேக்கப்புடன் வந்த ராஜசேகர், ரிஷப்ஷன் டேபிளின் பின்னால் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த பெண்ணிடம்,"மேடம்...நான் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன். இப்ப என்ன செய்யணும்." என்றான்.

அவள் நிமிர்ந்து,"மணிகண்டன் சொன்னார். வேலையைத் தொடங்குறதுக்கு முன்னால போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்புறம் ரெண்டு மணி வரை எங்கயும் போக முடியாது. இன்னொரு விஷயம்...நான் உங்களோட சின்னப்பொண்ணாத்தான் இருப்பேன். அதனால மேடமெல்லாம் வேண்டாம். கால் மீ ஷண்முகப்ரியா..."என்றாள்.

1-தொடரும்

******
இந்தக் கதையை நான் எழுத தூண்டுதலாக இருந்தது அங்காடித்தெரு படம்தான். படத்தில் மூன்றாவது தளத்தின் சூப்பர்வைசராக வரும் இயக்குனர் A.வெங்கடேஷ்,"என்னலே சிரிப்பு..."என்று பல்லைக்கடித்துக்கொண்டு கேட்கும் காட்சியில் பாண்டியும் மகேஷும் அலறுவது காமெடிக்காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக, அவருடைய அட்டகாசத்தைப் பார்க்கும்போது பிடித்து அடித்து விடலாமா என்று கூட நினைக்க வைத்தது. அதுதான் அவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

இந்தப் படம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் பத்து இயக்குனர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்தேன். வசந்தபாலன் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோது A.வெங்கடேஷ் அசோசியேட் டைரக்டராம். வசந்தபாலன் படப்பிடிப்பின்போது முக்கியமான ஒரு நோட்டைத் தொலைத்து விட்டபோது ஒரு வெங்கடேஷ் டெரர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

வசந்தபாலன் அப்போது அவரைப்பார்க்கவே அஞ்சி நடுங்கிய அனுபவம்தான் இந்த கேரக்டரில் வெங்கடேஷை நடிக்கவைக்க காரணம் என்று சொன்னார்.

ஆனால் ஒன்றிரண்டு முறை இயக்குனர் வெங்கடேஷைப் பார்த்தால் அவர் இவ்வளவு டெரர் என்று சொல்லவே முடியாது.
நீ எத்தனை தடவை அவரைப் பார்த்துருக்கன்னுதானே கேட்குறீங்க. ஒரே ஒரு தடவை ஏ.வி.எம் ஸ்டுடியோவுலதான் சந்திச்சிருக்கேன்.

2006ம் வருஷம் தீபாவளி நெருங்கிய சமயம், ஏவிஎம் ஸ்டுடியோவுல வாத்தியார் படத்தோட எடிட்டிங், கே.பாக்யராஜ் ஸ்டுடியோவுல சரத்குமாரின் நூறாவது படமான தலைமகன்  எடிட்டிங் நடந்துகிட்டு இருந்தது. நெகட்டிவை பிராசஸ் பண்ணின பிறகு பிரிண்ட் போட்டுட்டு அதை அப்படியே எடிட்டிங் செய்யப் பயன்படுத்துற சிரமமெல்லாம் இப்ப கிடையாது. டெலிசினி மெஷின் மூலமா வீடியோ டேப்புக்கு கன்வர்ட் பண்ணிடுவாங்க.

அந்த டேப்புல பதிவான படத்தை கணிணிமூலமா அவிட், எஃப் சி பி போன்ற தொழில்நுட்பம் மூலமா  தொகுத்து, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் முடிஞ்சு திருப்தி வந்த பிறகுதான் ஒரிஜினல் நெகட்டிவ்ல மாற்றம் செய்யுறதெல்லாம் நடக்கும்.

வீடியோ டேப்புல இருக்குற படத்தை கணிணியில ஏற்ற பீட்டா கேம் பிளேயர் தேவை. பல லட்ச ரூபாய் விலையுள்ள அந்த பிளேயரை நான் இந்த எடிட்டிங் நடக்குற இடத்துக்கெல்லாம் எடுத்துட்டுப் போனேன். இருபது கிலோவுக்கு குறையாத எடை இருக்கும்.

வாத்தியார் பட எடிட்டிங் வேலைக்காக பிளேயரை எடுத்துட்டுப் போகும்போது ஏவிஎம்ல அர்ஜூன், A.வெங்கடேஷ், எடிட்டர் வி.டி.விஜயன்  எல்லாம் இருந்தாங்க. அப்ப வெங்கடேஷ் பேசிகிட்டு இருந்ததை பார்த்துருக்கேன். அவரைப்பார்த்தா கோபப்படுவாரான்னு கேட்குற மாதிரிதான் இருந்துச்சு. ஆனா வசந்தபாலன் வெங்கடேஷ் கோபத்தைப் பத்தி சொன்னதும்,"நம்பமுடியவில்லை..."அப்படின்னு பாடத்தான் தோணுச்சு.

******
அங்காடித்தெருவில் நான் கண்ட விஷயங்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அங்காடித்தெருவில் நான் கண்ட சில விஷயங்கள்

"இலவசமா கொடுக்க இது என்ன கவர்மெண்ட்டா, இப்படி இலவசம் கொடுத்து கொடுத்துதான் உங்களை எல்லாம் கெடுத்து வெச்சிருக்காங்க." என்ற வசனத்தை கேள்வி கேட்ட புதுப்பையனுக்கு ஒரு அறை விட்டபிறகுதான் அந்த பணியாளர் பேசுவார்.அந்த அடி, இலவசங்களை சாதனையாக நினைத்து பெருமைப்படும் சில பொதுமக்களின் கன்னத்தில் விழுந்த அறையாகத்தான் எனக்குத் தோன்றியது.
அங்காடித்தெரு படம் பற்றி பல விதமாகவும் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. படத்தின் நிறைகளை விட குறைகள் என்று குறிப்பிட்டு மிகக் குறைவான விமர்சனங்களே வந்திருப்பது ஆரோக்கியமான விஷயமாகவே எனக்குத்தோன்றுகிறது.

தந்தை, லெவல்கிராசிங் விபத்தில் உயிரிழந்ததால் கல்லூரிக்குச் சென்று உயர்கல்வியைத் தொடரமுடியாமல் வேலைக்குச்சென்று அவதிப்படும் ஜோதிலிங்கம், தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதால் கால்களை இழந்து சாலை ஓரத்தில் பூ வியாபாரம் செய்யும் கனி- விபத்தால் சிதைந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் அடையாளம்.

ஏதோ நலத்திட்ட உதவிகளுக்கான புள்ளிவிவரங்களை தெரிவிப்பது போல் சாலை விபத்துக்களைப்பற்றி நாள்தோறும் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவை எத்தனை குடும்பங்களை நிலைகுலையச்செய்து விடுகின்றன என்பதை இந்தப் படத்தின் ஜோதிலிங்கம், கனி கதாபாத்திரங்களின் மூலம் நான் புரிந்துகொண்டேன்.

நிலையான முகவரி இல்லாமல் கைகளும் கால்களும் உழைக்கத்தயாராக இருக்கையில் வேறு மூலதனம் எதற்கு என்று தன்னம்பிக்கையுடன் கோடானுகோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் நாள்தோறும் ஏகப்பட்ட விபத்துக்களால் பிழைப்பை இழந்து இயல்பாக வாழும் உரிமை பறிக்கப்பட்டு அவதிப்படும் இந்த நிலைக்கு தொண்ணூறு சதவீதம் மனிதத்தவறுகள்தான் காரணமாக இருக்கின்றன. சில விஷயங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இயந்திரம் பாராமுகமாகவே இருந்து வருகிறது.

ஊழியர்களை வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அடித்து ரத்தக்காயப்படுத்துவது படத்தில் மிகைப்படுத்திக்காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் காட்சி.

அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். கடுஞ்சொற்களால் திட்டிவிட்டு, தனி அறைக்குள் அழைத்துச் சென்றுதான் பிரித்து மேய்வார்கள்.
அப்புறம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. இது சாதாரண கடைகளில் கூட இருக்கிறது. படத்தில் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது கனி,"முன்னாடி எல்லாம் சரிதான் போன்னு விட்டுடுவேன். இப்ப முடியலை..."என்று சொல்வாள். நிஜ வாழ்க்கையிலும் பல பெண்கள் இப்படித்தான் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.(இலவசக்கழிப்பறையில் மூக்கைப்பிடித்துக்கொண்டு நுழையும் மனோபாவத்துடன் தான் என்று கூட சொல்லலாம்.)

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். நாலுமணி நேரம் அலைந்து பொருட்கள் வாங்கியதற்குள்ளேயே எங்கள் கால்கள் ஓய்வு கேட்டு கெஞ்சத்தொடங்கிவிட்டன. பனிரெண்டு மணி நேரத்துக்குமேல் நின்று, நடந்து, ஓடி வேலை செய்பவர்களின் கால்கள் எப்படிக் கதறும் என்பதை என்னால் அதிகமாகவே உணரமுடியும்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு எலக்ட்ரீஷியனிடம்  வேலை செய்த நாட்களில் நானும் உடலளவில் அதிகமான துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். எப்படி என்றால், கான்கிரீட் கூரை அமைக்கும்போது கம்பிகளின் மேல் பிளாஸ்டிக் குழாய் அமைக்கும் பணி பார்க்கும்போது சாதாரணமாகத்தான் இருக்கும்.  வெயில் இல்லாத நேரத்தில் என்றால் சாமர்த்தியமாக கம்பி மீதே அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். உச்சிவெயில் என்றால் அவ்வளவுதான். குத்துக்காலிட்டு முழங்கால் வலிக்க,பைப்புகளைப் பொருத்த வேண்டும்.
ஒரே நாளில் மூன்று கட்டிடங்களுக்கு குழாய் பொருத்தும் சூழ்நிலை வந்தது. காலை ஆறு மணிக்குத் தொடங்கிய பணி, இரவு பத்து மணிக்குதான் முடிந்தது. அன்றுதான் முதன் முதலில் என்கால்கள் கெஞ்சின. மறு நாள் கான்கிரீட் அமைக்கும்போது குழாய்கள் உருவிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது முடிந்த பிறகு சுவரில் குழாய், ஸ்விட்ச் போர்டு அமைக்க உளி சுத்தியல் பயன்படுத்தி உடைக்க வேண்டும். இப்போது கோடு போட்டுக் கிழித்து விட மெஷின் வந்தாலும், நடுவில் உள்ள பகுதியை நாம்தான் உடைக்க வேண்டும்.

நான் வேலை கத்துக்கும்போது நாற்பது முறை உளியை சுத்தியலால் அடித்தால் அதில் முப்பத்து ஒன்பது முறை இடக்கையில் புறங்கை மீதுதான் சுத்தியலின் அடி விழுந்தது. மஞ்சள் பத்து போட்டுக்கொண்டு இரண்டு நாட்களில் மீண்டும் அதே வேலையை செய்யச் சென்றது உண்டு. பிறகு உடைக்கும்போது மண் துகள் என் மேலே கூட படாமல் உடைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றது வேறு கதை.

அப்போதெல்லாம் தொடர்ந்து படிக்கணும்னு தோணலை. நீங்க நம்புறீங்களோ இல்லையோ, நான் பனிரெண்டாம் வகுப்பு பிரைவேட்டா படிச்சு தேர்வு எழுதி காலேஜூல சேர்ந்து படிக்கணும்னு முடிவெடுக்க காரணம்,"ஜாலி" படத்துல வந்த ஃபேர்வெல்டே பாடல் காட்சிதான்.

எதுக்காக இதையெல்லாம் சொல்றேன்னா படத்துல காட்டுற மாதிரி வேலை செய்யுறவங்க மேல வன்முறையைக் காட்டுறவங்க இருக்குற அதே அளவுக்கு, வெளியில தெரியாம நசுக்குற முதலாளிங்களும் ரொம்பவே இருக்காங்க.

அங்காடித்தெருவுல காட்டுன முதலாளிங்க நிக்கவெச்சே கொத்தடிமையா நடத்துறாங்கன்னா, மென்பொருள் நிபுணர்களை உட்காரவெச்சே பிழிஞ்சு எடுத்துடுறாங்க. என்ன ஒரு வித்தியாசம், மென்பொருள் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமா கிடைச்சுடுறதால வாழ்க்கையில பல வசதிகளை அடைஞ்சுட முடியுது. ஆனா அவங்க அதுக்காக இழக்குற விஷயங்கள் ஏராளம்.முக்கியமா, அமைதியான குடும்ப சூழ்நிலை அவங்களுக்கு ரொம்ப அரிதாகத்தான் கிடைக்கும்.

இப்ப கூட நான் ஒரு தனியார் நிறுவனத்துல ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு (ஐந்து மணி நேரம்) வேலை செய்யுறேன். முழு நேரப்பணியாளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் தர்றேன்னு சொல்றாங்க. இந்த காசுக்கெல்லாம் நாள் பூராவும் கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து வேலை செய்து என் உடம்பை ரிப்பேர் ஆக்கிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.

நாட்டுல முதலாளியா இருந்தாலும் தொழிலாளியா இருந்தாலும் அதுலயும் ரெண்டு வகைதான் உண்டு. புலி, மான்.

ஒண்ணு வேட்டையாடணும் இல்லை...வேட்டையாடப்படணும். இதுதான் உலகம். சில இடங்கள்ல பணியாளர்கள் முதலாளியை அலற விட்டுகிட்டு இருப்பாங்க. பல இடங்கள்ல தொழிலாளிகள் அவதிப்பட்டுகிட்டே இருக்காங்க. இதை மாத்துறது ரொம்ப கடினம்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.- இதை நான் அனுபவப்பூர்வமா உணர்ந்துருக்கேன். சென்னையில கம்பெனி வேலை சரியா அமையாம அவதிப்பட்டப்ப, எலக்ட்ரிக்கல் வேலைக்குதான் போனேன். மதியம் சாப்பாடு + முன்னூறு ரூபாய் சம்பளம். ஆர்வத்தால வீடியோ எடுக்க கத்துகிட்டேன். சில திருமண நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்யப்போனப்ப நானூறு ரூபாய் வரை சம்பாதிச்சதுண்டு.

தொழில் தெரிஞ்சா தவறான பழக்கங்களுக்கும் சில ஆடம்பரங்களுக்கும் அடிமையாகாம இருந்தா நல்ல படியா பிழைக்கலாம். ரிஸ்க் எடுக்குறதுன்னா பெரிய பணக்காரங்க வாழ்க்கையில என்ன அர்த்தமோ எனக்குத் தெரியாது. ஆனா சிரமம் பார்க்காம உழைக்கத் தயாரா இருந்தா வாழ ஆயிரம் வழிகள்- இதைத்தான் அங்காடித்தெரு சொல்ற மெசேஜா நான் புரிஞ்சுகிட்டேன்.

******
இந்தப் படத்துல பல காட்சிகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டதா சிலர் விமர்சனத்தை முன் வெச்சிருக்காங்க. நிஜ வாழ்க்கையில சுரண்டுறது தெரியாம அட்டை மாதிரி உறிஞ்சுற முதலாளிகளைப் பத்தி படம் எடுத்தா என்னய்யா டாக்குமெண்ட்ரி எடுத்துருக்கான்னு ஒதுங்கிப்போறது ரசிகர்களோட தப்பு. அதனால இந்த மாதிரி காட்சிகளை அமைச்சது சரிதான்னு சொல்லுவேன்.

பெரிய ஹீரோக்களோட படங்கள்ல லட்சம் மடங்கு மிகைப்படுத்தல் இருக்குறதை விட்டுடுவாங்க. இந்த மாதிரி படங்கள்ல இருக்குற ஒண்ணு ரெண்டு சீன்ஸ் தான் உறுத்தும்.

******
சில வாரங்களுக்கு முன்னால விகடன்ல உதயநிதி ஸ்டாலினோட பேட்டி வந்துருந்துச்சு. புது டைரக்டருங்களுக்கு வாய்ப்பு கொடுப்பீங்களான்னு கேட்டதுக்கு, பெரிய ஹீரோக்கள்னா விளம்பரம் கூட அதிகம் தேவையில்லை அப்படின்னு ஏதோ சொல்லி மழுப்பிட்டாரு. அதாவது இந்த மாதிரி படங்களை எடுக்க மாட்டோம்னு சொல்லாம சொல்லிட்டாரு.  அவரு என்ன பண்ணுவாரு பாவம், கஷ்டப்பட்டு உழைச்ச காசு. காப்பாத்தணும்னு நினைக்குறது நியாயம்தான்.

டைரக்டர் ஷங்கர் மேல பல விமர்சனம் இருந்தாலும் எனக்கு அவரை ஒரு விஷயத்துக்காக ரொம்பவே பிடிக்கும். காதல், இம்சை அரசன், ஈரம், வெயில் போன்ற படங்களைத் தயாரித்ததற்காக.
இந்த அங்காடித்தெரு படம் முடிவடைஞ்சும் பல மாதங்கள் ரிலீசுக்காக தவம் இருந்துருக்கு. ரஜினி, சன் பிக்சர்ஸ் மாதிரியான ஆட்கள் நினைச்சிருந்தா ரொம்ப எளிதா வெளியிட்டு ஒரே வாரத்துல லாபம் சம்பாதிச்சிருக்கலாம். அவதார் படமும் பிரமாண்டம் வசூலும் பிரமாண்டம்.ஏதோ பில்லியன் கணக்குல சொல்றாங்க.
ஆனா ஆறு ஆஸ்கர்  அள்ளுன தி ஹர்ட் லாக்கர் படம் பதினோரு மில்லியன்ல தயாராகி பதினாறு மில்லியன் வசூலாம். இது மாதிரி தமிழ்ல வருஷத்துக்கு பத்து படம் வரவைக்குறது பெரிய விஷயமே இல்லை.  அதற்குரிய திறமைசாலிகள்  நிறையவே இருக்காங்க. தயாரிப்பாளர்கள்தான் இல்லை.

பெரிய தயாரிப்பாளர்கள் இப்படி நல்ல படங்கள் தயாரிக்கலைன்னாலும் பரவாயில்லை.மசாலாப்படங்கள் ரிலீசைக் காரணம் காட்டி நல்ல படங்களுக்கு தியேட்டரே கிடைக்காம பண்ணிடுறது ரொம்ப கொடுமையான விஷயம்.

அங்காடித்தெரு படத்துல, கடை யூனிபார்ம் கொடுக்க ஏன் காசு கேட்குறீங்கன்னு ஒரு பையன் கேட்டதும், "ஏலே...இலவசமா கொடுக்க இது கவர்மெண்ட்டா...இப்படி கொடுத்து கொடுத்துதாம்லே உங்களை எல்லாம் கெடுத்து வெச்சிருக்காங்க."அப்படின்னு சொல்லுவார்.(இலவசமாக அந்தப்பையனுக்கு ஒரு அடி கிடைக்கும்.)

இப்படி படங்கள் தயாரித்து பெரிய தயாரிப்பாளர்களை நஷ்டமடைய சொல்லவில்லை. ஷங்கர் செய்வது போல் பெரிய தலைகளும் ஆண்டுக்கு ஒரு படம் சின்ன பட்ஜெட்டில் அற்புதமாக தயாரித்தால் போதும். அவர்களும் நாலு காசு பார்க்கலாம். அடுத்த ஆண்டு இன்னொரு படம் தயாரிக்கலாம்.தமிழ் சினிமாவும் மேம்படும்.
இவர்கள் சுயநலத்துடன் இருக்கட்டும். பொதுநலமும் கலந்தால் நல்லது என்று சொல்கிறேன். சிலருக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக்கொடுப்பதும் திருமணம் செய்து வைப்பதும் மட்டும் தொண்டு இல்லை. தன்னை வாழ வைக்கும் கலைக்கு கொஞ்சமாவது ஆக்சிஜன் கொடுப்பதும் இந்த வகைதான்.

******
நாளை முதல் ஒரு தொடர்கதை எழுதப்போவதாக அறிவித்திருந்தேன். குறுகியது வீதி மட்டுமல்ல...மனமும்தான்.