Search This Blog

புதன், 31 மார்ச், 2010

அங்காடித்தெருவும் சூதாட்டமும்


கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 28.03.2010 அன்று சற்று வித்தியாசமான சுற்று. இதுவரை பல சுற்றுக்களில் பிரகாசிக்க முடியாமல் படங்கள் விலக்கப்பட்டாலும் அந்த இயக்குனர்களிடம் திறமை இருப்பதாக நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள்.




ஆல்பம் படம் எடுத்து தோற்ற வசந்தபாலன் வெயிலில் ஜெயித்தார். இந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சியில் சூதாட்டம் என்ற குறும்படம் எடுத்த சாமும் அப்படித்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.



பெண்ணின் திருமணத்துக்காக இருபத்தைந்தாயிரம் கடன் கேட்கும் வேலைக்காரியிடம்,"ஏன் நாட்டோட பொருளாதாரம் கீழே போகும்போது இவ்வளவு செலவு பண்ணி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்குற. நாலு பேர அழைச்சுட்டு போய் கோவில்ல வெச்சு தாலிகட்டினா போதாதா." என்று கேட்பார்.



ஆனால், வாகனத்துக்கு பேன்சி நம்பர் வாங்க ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பார். ஆனால் அவரது மேனேஜர், ஐம்பதாயிரத்தை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஐம்பதாயிரத்தை மட்டும்தான் பேன்சி நம்பர் வாங்க லஞ்சமாக கொடுப்பார்.



இந்த தொழிலதிபரிடமே வருமானவரித்துறை ரெய்டு வருவதாக பயமுறுத்தி விலை உயர்ந்த வைரங்களை அவரிடமிருந்து போலி ஆபிசர் வைத்து ஒரு நபர் ஏமாற்றுவார்.



இப்படி பல தொழிலதிபர்களிடம் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும், அவரிடமே இருக்கும் மேலாளர் போன்றவர்கள் தில்லுமுல்லு செய்து கொழுத்து வளருவதும், இவர்கள் சூதாட்டம், லஞ்சம், ரெய்டு, போலீஸ் என்று செலவு செய்வதும் இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்தியது இந்த குறும்படம்.



அங்காடித்தெரு படத்தில் கூட பணியாளர்கள் அவதிப்பட்டு பல தொந்தரவுக்கும் ஆளாகும் நேரத்தில் கருங்காலி போன்றவர்கள் அடுத்தவர்களை இம்சித்துக்கொண்டு, தாங்கள் ஜாலியாகத்தானே இருக்கிறார்கள்.