Search This Blog

வியாழன், 4 மார்ச், 2010

வராக்கடன் திடீரென திரும்பக் கிடைத்தால்...

வராது என்று முடிவு செய்து நஷ்டக்கணக்கில் எழுதிய பணம் திரும்ப வசூலானால் அதை லாபம் என்று குறிப்பிட்டுதான் வரவு வைப்பார்கள்.எனக்கும் அவ்வப்போது அந்த நிலை வருவதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பதினைந்து கோயில்களுக்கு சென்று ஓரளவு தலபுராணங்களை சேகரித்தேன்.அவை அவ்வப்போது சில பத்திரிகைகளில் பிரசுரமானதும் உண்டு.அப்படி நான் மொத்தமாக தினகரன் ஆன்மீக மலருக்கு அனுப்பியவைகளில் ஐந்து மட்டும் 2008ல் மூன்று மாதங்கள் பிரசுரமாயின.

பிறகு அவ்வளவுதான் என்று நான் நினைத்திருந்தபோது தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக மாத இதழில் இதுவரை மூன்று தல வரலாறுகள் பிரசுரமாயிருப்பது வராக்கடன் வசூலான கதைதானே.

இங்கே இருப்பது மார்ச் 2010 இதழில் பிரசுரமான கட்டுரை.

ஆனந்தவிகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாஷிகா கேமராவை வைத்து புகைப்படங்கள் எடுத்தேன்.அப்போதுதான் அந்த பதினைந்து கோயில்களையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
(படத்தின் மீது க்ளிக் செய்தால் தெளிவாகப் படிக்கலாம்.)இதே கட்டுரை பிறகு காலைக்கதிர் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் ஆன்மிககதிர் இதழிலும் வேறு வடிவில் பிரசுரமாகியிருந்தது.தினமலர் இணையதளத்திலும் நான் அனுப்பிய தகவல்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன.(மூலவருடைய புகைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.)  ஆனால்  copyright தினமலருக்காம்.அது சரி...பொது வாழ்வில் இதெல்லாம் சாதாரணமப்பா...

அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழ்நாடு அரசு குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையத்தின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு,தினமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் இரண்டு முறை ஆறுதல்பரிசு - இவை உட்பட பத்திரிகைகளில் பிரசுரமான சில படப்புக்களை திருவாரூர் டாக்கீஸ் வலைப்பூவில் வைத்திருக்கிறேன்.