Search This Blog

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

திருப்பாம்புரத்தில் சரத்குமார்...

செங்கற்கோயிலாக இருந்த பாம்புர நாதர் திருக்கோயில் கொற்றமங்கலம் பாரறாவாயர் எனும் சான்றோரால் கற்றளியாக புகழாபரணன் என்ற பெயருடன் மாற்றப்பட்டது.(கல்வெட்டு 95/1911) இவர் சுவாமி கோயிலையே கற்றளியாக்கினார். இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கனின் (கி.பி.1189-1218) ஆண்டுகட்கு முன் அதாவது கி.பி.1200க்கு முன் கற்றளியாக்கப்பட்டிருக்கலாம்.

திருப்பாம்புரம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு இந்த லிங்க்கைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

******
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் நீள்கிறது.நடிகர் சரத்குமார் மூன்று தினங்களுக்கு முன்பு  இருட்டிய பிறகு வந்ததற்கே கோயிலில் கூட்டம் சற்று அதிகரித்துவிட்டது.
பிரபலம் என்றால் ஒருவருடைய ஒவ்வொரு செய்கையும் பல ஜோடிக்கண்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது பிரபலமாக இருப்பதற்கு கொடுக்கும் விலைகளில் ஒன்று என்பது என் எண்ணம்.

படங்களில் இருக்கும் அர்ச்சகர்கள் எம்.விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் வி.கௌரிசங்கர் ஆகியோர் எங்கள் குடும்ப நண்பர்கள்.அதனால்தான் படங்களை எனக்கு மெயிலில் அனுப்பி வைத்தார்கள்.
******