Search This Blog

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கேபிள் - பரிசல் - புத்தக விமர்சனம் - விரிவான விபரம் நாளைக்கு...

கேபிளின் புத்தகத்தில் இருந்த சில கதைகளை நான் விகடனில் வெளிவந்தபோதே படித்திருக்கிறேன்.தொகுப்பில் முதல் கதையான முத்தத்தில் ஏறிய கிக், புத்தகம் முழுவதையும் படித்து முடித்தவரை இறங்கவே இல்லை.கேபிள் அண்ணன் வித்தியாசமான கோணங்களில் இயல்பான மனிதர்களை படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பரிசல் அண்ணன் ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு களத்தில் அமைத்துக்கொடுத்திருந்தார்.தொகுப்பில் இருந்த பல கதைகள் அட என்று சொல்ல வைத்தன.

பணிச்சுமை காரணமாக விரிவான விமர்சனத்தை நாளை எழுதுகிறேன்.ஆனால் பரிசல் அண்ணனோன புத்தகத்துல முதல் பக்கமே இப்படி எனக்கு அதிர்ச்சி கொடுக்கும்னு நினைக்கலை. அந்த ரெண்டு வார்த்தைகளைப்படிச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(வடிவேலுவின் வசன உச்சரிப்பில் படிக்கவும்.)

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலும் பயிற்சி முடித்த ஆசிரியைகளும்...

மிக அதிகபேர் எழுதக்கூடிய தேர்வுமுடிவுகள் வெளிவந்த நேரத்தில் கூட இவ்வளவு பரபரப்பு இருப்பது சந்தேகம்.ஆனால் அவற்றுக்கு உரிய சான்றிதழ்கள் கிடைத்ததில் இருந்து ஒரு வாரகாலத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நிரம்பி வழியும்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கியபிறகு மாணவர்களும் மாணவிகளும் அதைப்பதிவு செய்வதற்குள் வெந்து நொந்துவிடுகிறார்கள்.இப்போது இந்தப் பட்டியலில் புதியதாக சேர்ந்திருக்கும் கோர்ஸ், ஆசிரியர் பயிற்சி படிப்பு.

சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் ஓரிரு தினங்களுக்கு முன்புதான் சான்றிதழ்களை வழங்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

இன்று திருவாரூரிலும் மாணவிகள் மிக நீ............ண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.பொன்னை (பொண்ணு இல்ல) வைக்கிற இடத்துல பூவை வைக்கிறதா சொல்லுவாங்க. ஆனா பல பொண்ணுங்க டயட் அது இதுன்னு ஐம்பது கிலோ எடை இருக்கவேண்டிய நேரத்துல முப்பத்தஞ்சு கிலோதான் இருப்பாங்க.(முப்பது சதவீதம் தள்ளுபடி?)

இந்த லட்சணத்துல பல மணி நேரம் காத்திருத்தல் அவங்களை மேலும் பலவீனப்படுத்தும். கணிணி வந்த பிறகு இப்படி கால் கடுக்க காத்திருக்குறது நேரத்தைக்கொல்றது மாதிரி.

பதிவு செய்யுற வரிசையை வெச்சுதான் வேலைக்கு கூப்பிடுவாங்களாம். என்ன கொடுமை சார் இது.ஒரு லட்சம் கோடி ரூபா காண்ட்ராக்டை ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொடுத்துட்டு முதல்ல வந்தவங்களுக்கு கொடுத்துட்டோம்னு ரொம்ப கூலா சொன்னாங்க.இது என்ன சினிமா டிக்கட்டா?அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்.

தேர்வு முடிவு வெளிவந்த தேதியை பதிவு பண்ணின தேதியா எடுத்துகிட்டு அந்த அந்த கல்வி நிறுவனங்களிலேயே போய் எல்லா சான்றிதழ்களையும் பதிவு பண்ணிடலாம். அது கஷ்டம்னா, சுழற்சி முறையில வந்து பதிவு பண்ண வைக்கலாம்.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிதான் பதிவு செய்த தேதியா கணக்கு வெச்சுகிட்டா என்ன பிரச்சனை?

இதுல பல நடைமுறை சிக்கல் இருக்குன்னு சொல்லுவாங்க. இஷ்டப்பட்டா எதுவும் சிக்கல் இல்லை. மனசுக்கு விருப்பம் இல்லைன்னாதான் தட்டிக்கழிக்க ஆயிரம் காரணம் இருக்குறதா தெரியும்.

இன்னைக்கு மெகா டி.வி செய்தியில விருதுநகர், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துல கூடி நின்ன கூட்டத்தைக் காட்டினாங்க. நாளைக்கு பேப்பர்ல எவ்வளவு தள்ளுமுள்ளு, தடியடி, உடம்புல வலு இல்லாம மயங்கி விழுந்தது எத்தனைபேர் - இந்த விவரங்கள் எல்லாம் வரும்.

திருவாரூர்ல கொஞ்ச நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்துல வேலை வாய்ப்பு அலுவலகமும் இயங்கி வந்தது.மத்திய பல்கலைக்கழகம் இயங்க தற்காலிக கட்டிடம் வேணும்னு அங்க இருந்த எல்லா அரசு அலுவலகங்களையும் தட்டி விட்டதுல திருவாரூர் கால்நடை மருத்துவமனைக்கு எதிர்ல வந்து வேலைவாய்ப்பு அலுவலகம் விழுந்துடுச்சு.

ஒரே நாள் பதிவுமூப்புன்னு ரெண்டுலட்சம் பேர் இருந்தாலும் அதுல தகுதி படைச்சவங்களைத் தேர்வு செய்ய வேறு வழிமுறையை உருவாக்கணுமே தவிர, கோயில்ல பொங்கல் கொடுக்குற மாதிரி முதல்ல பதிவு பண்ணினாதான் வேலை அப்படின்னு சொல்றது மிக மிக முட்டாள் தனம்.

இது மாதிரி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, ஆசிரியர் பயிற்சி தேர்வு எல்லாம் சனிக்கிழமை எழுதி திங்கள் கிழமை சான்றிதழ் கொடுத்து அவங்க செவ்வாய் கிழமை பதிவுபண்ண கூடிடுறாங்களா?

இல்லையே...ஒவ்வொரு வருஷமும் இந்த கூத்துதானே நடக்குது. ஒரு மா நாடு போட பல மாசங்களுக்கு முன்னாலேயே திட்டமிடுற ஆட்சியாளர்கள், இது மாதிரி நிரந்தர பிரச்சனைகளுக்கு தீர்வு காணுற முயற்சியே எடுக்குறது இல்லையே.

இதுல பொது மக்கள் செய்ய ஒண்ணும் இல்லை.அதிகாரிகளையும் அரசியல்வாதிகள் அல்லது வியாதிகள்தான் ஆட்டி வைக்கணும்.
இந்த கோரிக்கையை வெச்சு இளைஞர்கள் போராடினா, அவங்களையே, பணி செய்ய விடாம தடுத்ததா சொல்லி உள்ள வெச்சிடுவாங்க.

டென்த், பிளஸ்டூவை பள்ளிகள்லேயே பதிவு பண்ற வசதி கொண்டு வந்ததா சொன்னாலும் இந்த முயற்சியும்  தொடர்ந்து நடைபெறணும்.

ஆசிரியர் பணி - புனிதப்பணி. இப்படி எல்லாம் அவங்களை அலைக்கழிச்சா அது நாளைக்கு ஆசிரியரான பிறகு இந்த  கோபம் அவங்களை அறியாமலேயே பிள்ளைங்க மேல திரும்பலாம். இது மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்லலை. ஒரு சில ஆசிரியர்கள் மோசமா நடந்துக்குறதை பார்த்தா, அவங்க வளர்ந்த சூழ்நிலையும்  பட்ட  வடுக்களும்   கூட இதுக்கு காரணமோன்னு நினைக்கத் தோணுது.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கடைசியில என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!

முதல்வன் படத்தின் உச்சகட்ட காட்சியில் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றவுடன் அர்ஜூன்,"கடைசியில என்னையும் அரசியல்வாதியாக்கிட்டாங்களே!" என்று மணிவண்ணனிடம் சொல்வார்.
இப்போது "இப்ப என்னையும் ரசிகனாக்கிட்டாங்களே!"என்று நான் புலம்பவேண்டியதாயிடுச்சு.சீரியல் பார்த்து நேரத்தை தொலைச்சு உறவுகளை சிதையவிட்டுகிட்டு இருக்குற நிறைய தாய்மார்களை நான் கிண்டல் பண்ணினேன்.

ஆனா திங்கள் முதல் வியாழன் வரை இரவு பத்துமணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகுற விசாரணை தொடரை இரண்டு வாரமா
பார்த்துகிட்டு இருக்கேன்.

படத்துல ரெண்டு மணி நேரம் வில்லங்கத்தைக் காட்டிட்டு பத்து நிமிஷம் புத்திமதி சொல்றதையே தப்புன்னு சொல்றோம். ஆனா பல நெடுந்தொடர்கள்ல அஞ்சு வருஷம் அவ்வளவு தப்பையும் காட்டிட்டு கடைசி ஒரு எபிசோடுல மெசேஜ் சொல்றோம்னுதான் பில்ட்அப் பண்ணுவாங்க.

ஆனா விசாரணை தொடர் எல்லாமே குட்டிக்குட்டிக் கதைகள்.திங்கள் கிழமை ஆரம்பமாகுற கதை வியாழன் அன்னைக்கு முடிஞ்சுடும்.எல்லாம் கிரைம் ஸ்டோரிதான். ஒவ்வொரு கதையோட முடிவுலயும் ஒரு நல்ல மெசேஜ் உண்டு.இதுக்கெல்லாம் காரணம் யாரு...நம்ம கிரைம் ஸ்டோரி மன்னன் ராஜேஷ்குமார்தான்.

கதை வசனம் இவரே.பொதுவா ராஜேஷ்குமாரோட நாவல்கள்ல பல குற்றவாளிகள் ரொம்பவும் புத்திசாலித்தனமா தப்பு செய்வாங்க.ஆனா கதையோட முடிவுல கண்டிப்பா அவங்க மாட்டிக்கிற மாதிரிதான் எழுதியிருப்பார்.தொலைக்காட்சி தொடர்லேயும் இதே மாதிரிதான் கதை இருக்கு.இந்த சமூக அக்கறைதான் அவர்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சுது.

அப்புறம் ராஜேஷ்குமார் நாவல்களின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான விவேக்,ரூபலா,விஷ்ணு -இந்த மூணு பேரும் இருக்காங்க.கதைகளோட, இந்த தொலைக்காட்சித் தொடர்ல விஷ்ணுவோட கதாபாத்திரம் பிரமாதமா சிரிப்பை வரவழைக்கிது.அது ஷ்யாம்கணேஷ்னு நினைக்கிறேன். நாளைக்கு கன்பர்ம் பண்ணிடலாம்.இந்த வகையில எழுத்தாளர் ராஜேஷ்குமார், வசனகர்த்தாவா வெற்றி அடைஞ்சுட்டார் அப்படின்னுங்குறது என் கருத்து.

சுஜாதாவின் படைப்பான கணேஷ், வசந்த் கதாபாத்திரங்களும் இதே சுவாரஸ்யத்தை தரும்.

ஆனா எனக்குள்ள ஒரு பயம். இந்த நிகழ்ச்சியின் இடையில மா.மா விளம்பரமும் (அதுதாங்க மானாட, மயிலாட.) ஒரு எசகுபிசகான மருந்துக்கான விளம்பரமும் மட்டும் தான் போடுறாங்க.
ஒண்ணு, அரைமணி நேரத்துல இருபத்து ஏழு நிமிஷம் விளம்பரத்தையும் பிகினிங் டைட்டிலையும் எண்ட் டைட்டிலையும் போட்டு சாகடிக்கிறாங்க. இல்லன்னா இப்படி மிகக்குறைந்த விளம்பரத்தை மட்டும்தான் போடுறாங்க.அதுக்கு நீ ஏன் பயப்படுற அப்படின்னுதானே கேட்குறீங்க...

ஸ்பான்சர் கிடைக்காம நிகழ்ச்சி நின்னுடுமோன்னுதான் நான் பயப்படுறேன்.பார்ப்போம்...விசாரணை எந்த அளவுக்குப்போகுதுன்னு.

******

திருவாரூரில் பார்த்து நான் தற்போது கவலைப்பட்ட விஷயம்.

தேரோடும் நாலு வீதியிலயும் சிமெண்ட் ரோடு போடப்போறாங்களாம்.பூமி பூஜை போட்டு மணல், ஜல்லி எல்லாம் வந்து இறங்கிட்டு.பொக்லைன் வெச்சு ஏற்கனவே இருந்த தார்ரோட்டுல கோடு போட்டு கிழிச்சுகிட்டு இருக்காங்க.

இதுனால வரப்போற நன்மை என்னன்னு எனக்கு தெரியாது.ஆனா சில தீமைகளை மட்டும் இப்ப சொல்லிடுறேன்.

மண் தரை இல்லாம போறதால மழை நீர் பூமிக்குள்ள போற நுண்துளைகள் அடைபட்டுப்போகும்.
வருஷத்துக்கு ஒன்பதுமாசங்கள் அனல் காத்து தாங்காம இந்த தெருவுல இருக்குற அணிக நிறுவனங்கள் வீடுகள்ல குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறியோட பயன்பாடு ரொம்பவும் அதிகமாயிடும்.

இப்படி பூமி மேல மேல வெப்பமாகுறதுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணி திட்டம் போட்டுட்டு குடிமக்கள், வெப்பத்தைக்குறைக்கணும்னு சொல்றாங்க. என்ன கொடுமை சரவணன் இது.

பேசாம நானும் அரசாங்கப்பணிகளை டெண்டர் எடுக்குற ஒப்பந்தக்காரராயிருந்தா இப்போ சுவிஸ் பாங்க்ல பணம் சேர்த்துருக்கலாமோ.