Search This Blog

வியாழன், 31 டிசம்பர், 2009

புது வீட்டுக்குப் போறேன்... எல்லாரும் வந்துடுங்க...





வணக்கம் நண்பர்களே...

இளைய பாரதத்தின் புதிய url முகவரியில்  முன்னோட்டமாக ஒரு பதிவு இடப்பட்டிருக்கிறது. இனி இளைய பாரதம் 2009 தளத்தில் புதிய இடுகைகள் எதுவும் காணப்படாது. எனவே வாசகர்கள் அனைவரும் இளையபாரதத்தின் புதிய வீட்டிற்கு வருகை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த தளம் 2009 ல் இடப்பட்ட எழுபத்தைந்து இடுகைகளுடன் தொடர்ந்து இருக்கும்.

தங்கள்
சரண்

இளைய பாரதம் புதிய முகவரியில் இயங்கப்போவதை முன்னிட்டு ஒரு பிரமாண்டமான ஒப்பனிங்.



நண்பர்களே உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. குசேலன் ,ஆளவந்தான், குருவி இது மாதிரியான படங்களைப் பார்த்ததால நீங்க மனதளவுல வலிமையாத்தான் இருப்பீங்க. அதனால  பிரமாண்டமான ஒப்பனிங்குல  நான் தரப் போற அதிர்ச்சி உங்களுக்கு ஒரு மேட்டரே கிடையாது. தைரியமா வாங்க.

01.01.2010 முதல் புதிய தளத்தில் இளையபாரதம் இயங்கப் போகிறது. ஆனால் பெயரும் அதே. பதிவிடப்போற ஆளும் அதே. வில்லங்க விஷயத்தையும் விவரமான யோசனைகளையும் பற்றி எழுதலன்னா  சமூகத்துக்கு எதுவும் செய்யாம இருக்குற மாதிரி ஒரு பீலிங். (நீ எழுதாம இருக்குறதே பெரிய சேவைதான்னு சொல்லி கம்பெனி ரகசியத்தை காலி பண்ணக் கூடாது. ஒ.கே?)

நாலு நாளைக்கு முன்னாலேயே புது வருஷத்துல பிரமாண்டமான ஒப்பனிங் தர்றதுக்காக என்னுடைய நடிப்பு அனுபவங்களை படங்களோட பதிவிட்டு வெச்சிட்டேன். புது வருஷத்து அன்னைக்கு பதிவை வெளியிட வேண்டியதுதான். மறுபடி சொல்றேன். அங்க உங்களுக்காக  நீங்க மட்டும் இல்லை நானும் எதிர்பார்க்காத இன்ப அல்லது துன்ப அதிர்ச்சி காத்திருக்கு.

வழக்கம் போல படிச்சுட்டு பின்னூட்டத்துல துவைச்சு காயப் போடுறவங்க செய்யலாம். நல்ல வார்த்தை சொல்லி பாராட்டுறவங்க தாராளமா வரலாம். நாலு பேரு வந்தாதானே கடை களை கட்டும். அதை விட்டுட்டு ஆளில்லா கடையில யாருக்கு டீ ஆத்தப் போறேன்?

இளைய பாரதம் 2010 க்கு போகனுமா...அப்புறம் என்ன யோசனை? இங்க அமுக்குங்க.

புதன், 30 டிசம்பர், 2009

கல்யாணப் பத்திரிகையை படிக்க கூட கஷ்டப்படுறாங்களே...கல்வித்துறை அமைச்சர் விகடன் குழும விழாவில் சொன்ன தகவல்.

புதிய சட்டசபை வளாகம் அமைவதால் சாலைவிரிவாக்கம் செய்ய சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை இடித்துவருவதாக படத்துடன் செய்தி வெளிவந்தது. முன்பு ஒரு நாள் நம் முதல்வர், இன்னும் சிறப்பான வசதிகளுடன் புதிய அரங்கம் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அது தேர்தல் வாக்குறுதியாகி விடாது என்று நம்புவோம்.

இந்த அரங்கத்தில் நானும் ஒரு விழாவுக்கு பார்வையாளராக சென்றேன். 2007 ஏப்ரலில் விகடன் பிரசுரம் பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் வெளியிடும் விழாவை பிரமாண்டமாக நடத்தியது.

விழாவை சிறப்பித்தவர்கள், கலைஞர் மு.கருணாநிதி, கவிக்கோ. அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, இளமைக்கவிஞர் வாலி, பொள்ளாச்சிமகாலிங்கம், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுதா சேஷய்யன், விகடன் குழும உரிமையாளர்கள் எஸ்பாலசுப்ரமணியன், பா. சீனிவாசன் மற்றும் ஒரு சிலர் என்

நினைவில் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவர் சீர்காழி சிவ சிதம்பரம.

அப்போது நான் சென்னையில் இருந்ததால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்து அழைப்பிதழ் பெற்றேன். கெல்லீஸ் ஏரியாவில் இருந்து  சென்ற நான் எம்.எல்.ஏ விடுதிக்கு பக்கமாக மிதிவண்டியை பார்க் செய்தது ஒரு  சாதனை(?!) (சுற்றுப்புறச் சூழலை காக்கிறேனாக்கும்.)

விழா குறித்த நேரத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தாமதமாக தொடங்கியது எனக்கு மகிழ்ச்சி தந்த அதிர்ச்சி.

விழாவில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்னப்பா...கல்யாணம் எப்ப வெச்சிருக்க...எந்த மண்டபம்...மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு...அப்படின்னு கேள்வியா கேட்டு அடுக்குவாரு ஒருத்தரு. எப்பன்னு கேட்குறீங்கிளா?...பொண்ணோட கல்யாணப் பத்திரிகையை கொடுக்க வந்தவர்கிட்ட பத்திரிகையை வாங்கி கையில

வெச்சுகிட்டே இவ்வளவு கேள்வி வரும். படிக்கிற பழக்கம் அந்த அளவுக்குதான் இருக்கு. இந்த நிலை மாறனும்." அப்படின்னு பேசினார்.

பெருமை வாய்ந்த அந்த அரங்கம் 2009ம் ஆண்டோட நம்மை விட்டு விலகிடுச்சு.

இது மாதிரி பல விஷயங்கள் புது வருஷத்துல வரும். போகும். நாம நல்ல விஷயங்களுக்கு மனதின் ஓரத்துல இடம் கொடுப்போம். கசப்பான அனுபவங்கள் மறுபடி வராம பார்த்துக்குவோம். இதுதான் புத்தாண்டுல நாம எடுத்துக்குற பாசாங்கில்லாத உறுதிமொழியா இருக்க முடியும்.