Search This Blog

செவ்வாய், 29 டிசம்பர், 2009

அகன்ற கோணம் - நான் முதன் முதலில் வலைப்பூ ஆரம்பித்த போது சூட்டிய பெயர்



இதைப் பற்றிய சந்தேகம் இளைய பாரதம் வாசகர்களுக்கு வந்தது. அதற்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு வரியில்தான் விளக்கம் சொன்னேன். அப்பாடா...இந்த பதிவுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிடுச்சு.

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பது குறுகிய பார்வை. நம்முடைய நலனுக்காக ஒரு செயல் நடைபெறும்போது யாருக்காவது நிச்சயமாக எதாவது ஒரு வழியில் சிறு பாதிப்பாவது இருக்கத்தான் செய்யும்.

அதைப் பற்றியும் யோசிப்பதே அகன்ற கோணம்.

நியாய விலைக் கடையில் எடை குறைவாகத்தான் பொருட்களை வழங்குவார்கள். சரியான எடை இருந்தது என்றால் அந்தப் பணியாளருக்கு மனதளவில் பிரச்சனை எதுவும் இருக்கக்கூடும். அவரிடம் கவனம் தேவை.

அங்கே, விவாதம் செய்து அல்லது சண்டை பிடித்தாவது சரியான அளவில் பொருள்களை வாங்குவது நம் உரிமை. இது சாதாரண பார்வை. நியாய விலைக் கடையில் உள்ள பணியாளர் ஏன் எடை குறைப்பு செய்கிறார்? மொத்தமாக பொருட்கள் கடைகளுக்கு வரும்போதே எடை குறைவாக இருக்கும். கடையிலும் எலி, மழை உள்ளிட்ட சில காரணங்களால் பொருட்கள் வீணாகலாம். அதை மேலதிகாரிகள் ஏற்க மறுக்கலாம்.

அல்லது வேறு சில காரணங்களுக்காக லஞ்சம் கேட்கலாம். இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்.

நியாய விலைக்கடையின் பணியாளர் மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்பது குறுகிய கோணம். அவர் அப்படி நடக்கக் காரணமான அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என நினைப்பது அகன்ற கோணம்.

2010ம் ஆண்டு பொங்கலுக்குள் இது பற்றி விரிவான பதிவு எழுதுகிறேன்.

திங்கள், 28 டிசம்பர், 2009

கட் ஷாட் தெரியும்...அது என்ன கண்ணை காலி பண்ற ஷாட்?


உலகின் தலை சிறந்த பம்பு இன்றும் மனிதனின் இதயமே. (ஆமைக்கு இதயம் இல்லையான்னு கேட்கக்கூடாது. ஒரு விளம்பரத்துல இந்த அளவு உண்மையை ஒத்துகிட்டு இருக்குறதே பெரிய விஷயம்.) அதற்கு அடுத்த தரம் வாய்ந்த பம்புகளை நாங்கள் தயாரிக்கிறோம் அப்படின்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி உலகின் தலைசிறந்த கேமரான்னா அது மனிதனின் கண்கள்தான்னு உறுதியா சொல்லலாம். நம்ம கண்ணு எதையும் பதிவு பண்ணி வெக்கிற ஹார்ட் டிஸ்க் இல்ல. அவ்வளவுதான். ஆனால் கண் ஒரு அற்புதமான டிஸ்பிளே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்ப சமீப காலமாவே உணவு, அதிக நேரம் தொலைக்காட்சி, இணையம்
உட்பட பல காரணங்களால் மனிதர்களின் பார்வைக் கோளாறுகள் அதிகரித்து வருவது வேதனையான விஷயம்.

ஒரு கொடுமைக்கார கணவன். தினமும் அவனிடமிருந்து அடி, உதையைத் தவிர வேறு எதுவும் அந்த மனைவிக்கு கிடைத்திருக்காது. குறிப்பிட்ட காட்சியில் வீட்டுக்கு வரும் அவன்,"சீக்கிரம் பிள்ளைங்களோட கிளம்பு...வெளியில போயிட்டு வருவோம்." என்று சொல்வான்.

 உடனே வெளியே ஓடி வந்த இவள் அண்ணாந்து வானத்தைப் பார்ப்பாள். கேமரா, மேகம் எதுவுமின்றி நீல நிறமாகத் தெரியும் வானத்தை ஒரு வட்டமடித்துக்காட்டும்.

சொதப்பலான காரியங்களையே தொடர்ந்து செய்யும் ஒருவர் வழக்கத்துக்கு
மாறா மகிழ்ச்சி தரும் வார்த்தையை சொன்னாலே மழை வரப்போகுதான்னுதான் கேட்போம். அதை அந்த ஷாட்டுகளில் வெகு அழகாக சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக கேமரா காட்டியிருக்கும்.

உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சியைப் பற்றி நான் ஒரு புத்தகத்தில் படித்ததுதான். படம் பார்க்கவில்லை.

கதைக்குத் தேவைப்படும்படியாக மட்டுமே கேமரா இயங்க வேண்டும் என்று இப்போதும் உறுதியாக இருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

 கேமரா கோணங்களைப் பொறுத்த வரை ஒன்பது வகையாகப் பிரித்து நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்.(கூடக் குறைச்சு இருக்கலாம். அது நமக்கு இப்ப தேவையில்லை.) எனக்கு கூட அந்தக் கோணங்களை எப்படி வைக்கணும்னு கொஞ்சம் புரியுது.

ஆனா இப்ப சில ஒளிப்பதிவாளர்கள் தெரியாம செய்ய்யுறாங்களா  இல்ல... பார்வையாளர்களோட கண்களை புடுங்கிட்டுதான் மறுவேலைன்னு ஒரு நோக்கத்தோட இப்படி செய்யுறாங்களான்னு புரியலை.எந்தக் காட்சிக்கு எந்த கோணம் வைக்கலாம்னு ஒரு வரைமுறையே இல்லாம பல படங்கள்ல அக்கப்போர் பண்றாங்க.

முன்னாடி மாதிரி பிலிமை வெட்டி ஒட்டி மட்டுமே படத்தொகுப்பு செய்யணும்னா சிரமப்படுவாங்க. ஆனா இப்பதான் Avid, Fcp அப்படி இப்படின்னு சில படத்தொகுப்பு மென்பொருட்கள் வந்துடுச்சே.

Telecine மெஷினைப் பயன்படுத்தி DV இல்லன்னா BETA கேசட்ல பதிவுபண்ணி கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்ல படத்தைக் கொண்டு வந்துடுறாங்க.

அப்புறம் என்ன...அந்த பைல் எல்லாம் கதறக்கதற கட்வலையே படாம படக்குழுவினர் எடிட்டிங் பண்ணிக்குவாங்க. இது வரைக்கும் மத்தவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.(எடிட்டிங் ஸ்டுடியோ வாடகை ஒரு பக்கம் தயாரிப்பாளரோட கழுத்தை நெறிக்கும். அதுவும் இப்ப நமக்கு தேவையில்லை.)

கடந்த சில ஆண்டுகளாகவே பாடல் காட்சிகளை கவனித்தால் ஒரு உண்மை புரியும்.

மிட் ஷாட், மிட் லாங் ஷாட்  இந்த மாதிரி ரெண்டு கோணங்கள்ல நடனக்காட்சிகளை மொத்தமா எடுத்துக்க வேண்டியது.

அப்புறம் கணிப்பொறி உதவியோட அந்த இரண்டு காட்சிகளையும் மாறி மாறி காண்பிக்க வேண்டியது. ஒரே ஷாட்டைப் பார்த்தா சலிச்சுப் போயிடும்னுதானே சொல்றீங்க...அது உண்மைதான். அதுக்காக அறுபது நொடிக்குள்ள நூறு தடவையா இந்த ரெண்டு ஷாட்டையும்  மாத்தியே காண்பிக்கிறது?

உங்க வீட்டு தொலைக்காட்சியில ஒரு நிமிஷம் யாராவது ரிமோட் மூலமா சேனலை மாத்திகிட்டே இருந்தா எவ்வளவு கோபம் வருது?அந்த மாதிரிதாங்க இதுவும்.

ஒரு நொடிக்கு பிலிம்ல 24 பிரேம் கடந்து போகுறது தான் சரியான சரியான தொழில்நுட்பம். ஒரு அடி நீள பிலிமுக்கு 16 பிரேம் இருக்கும். ஒரு நொடியில ஒண்ணரை அடி பிலிம்ல படம் காட்டுவாங்க.

ஆனா வீடியோ தொழில் நுட்பத்துல ஒரு நொடிக்கு 25 பிரேம் பதிவாகும். இதெல்லாம் நம்ம கண்ணுல பார்வை நிலைச்சு இருக்குற நேரத்தைக் கணக்கிட்டு அறிவியல் அடிப்படையில நிர்ணயம் பண்ணியிருக்குற தொழில்நுட்பம்.

இவங்க டெக்னாலஜி டெவலப்மெண்ட் அப்படின்னு சொல்லிகிட்டு ஒரு நொடிக்கு நாலு கட் ஷாட் போட்டு பார்க்குற நம்மளுக்கு கண்வலி, தலைவலி மட்டுமில்லாம நிரந்தர பார்வைக்கோளாறுக்கும் வழி செய்யுறாங்க.


ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ், இன்றைய (28.12.2009)தினகரன் நாளிதழ்ல பேட்டி கொடுத்திருக்கார். கட் ஷாட் மிக அதிகமா இருக்குற இந்த மாதிரிக் காட்சிகளைப் பார்க்குறதை தவிர்க்கும்படி டாக்டர்கள் கூட சொல்றாங்கன்னு  அவர் ஒத்துகிட்டு இருக்குறத நினைச்சு எனக்கு ஓரளவு நிம்மதியா இருக்கு.

பாடல் காட்சிகள் 24X7 அப்படின்னு தொலைக்காட்சிகள்ல ஒளிபரப்பாகுது.அதனால படத்தின் உச்சகட்ட காட்சி, கதைக்கு அவசியமான காட்சின்னு எதுவா இருந்தாலும் மக்களோட கண்களையும் மனசுல வெச்சுக்குங்க.

உதிரிப் பூக்கள் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரா இல்ல பாலு மகேந்திராவான்னு எனக்கு சரியா தெரியல. அதனால் பெயரை அங்கே குறிப்பிடவில்லை.

சனி, 26 டிசம்பர், 2009

திண்ணை இணைய இதழில் கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை...இளைய பாரதம் தொகுத்து அனுப்பிய துணுக்கு.


தொடக்க காலங்கள்ல நான் எழுதி அனுப்பிய வாசகர் கடிதம் கூட பிரசுரமானது இல்லை. ஆனா இப்போ நான் கடந்த மூணு வாரமா எழுதி அனுப்பின விஷயங்கள் மூணுமே திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன.

என்னுடைய எழுத்து தொடர்ந்து மேம்பட்டு வருதுன்னு ஒரு சின்ன சந்தோஷம். சிலர் ஒரு வாதத்துக்காக, "உன் எழுத்து உன் மனசாட்சிக்கு பிடிச்சா போதும்." அப்படின்னு சொல்லலாம். அதுக்கு நான் என் மனசுக்குள்ளயே எழுதிட்டுப் போயிடலாமே...எதுக்காக அச்சு ஊடகத்தையும், இணையத்தையும் தேடணும்?

இலக்கியப் புலமை உள்ளவங்க தன் மனதுக்கு தீனி போட எப்படி வேணுன்னாலும் எழுதுவாங்க. ஆனா நான், இந்த சமூகத்துக்காக அதாவது எனக்காகவும், என்னைச் சுற்றி இருக்குறவங்களுக்காகவும்தான் எழுதுறேன். அப்படி இருக்கும்போது பல வகையான அங்கீகாரமும் முக்கியம்.

இளைய பாரதத்தில் எழுதுறதுக்கு எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை. நினைக்கிறதை எழுதுறேன். ஆனா இன்னொரு ஊடகத்துல மற்றவர்களால தன் எழுத்து அங்கீகரிக்கப்படும்போதுதான் ஒரு எழுத்தாளனுக்கு உண்மையான சந்தோஷமும்,

ஊக்கமும் கிடைக்கும். பதிவுகளுக்கு வர்ற பின்னூட்டமும் இப்படி ஒரு மகிழ்ச்சியைத்தான் கொடுக்கும்.

பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை....கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை.

இதை இளைய பாரதத்துல படிக்கணுமா...

திண்ணை இணைய இதழ்ல படிக்கணுமா?