Search This Blog

செவ்வாய், 22 டிசம்பர், 2009

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்.

இதை நாம கண்ணை மூடிகிட்டு நம்ப வேண்டாங்க. ஏன் அப்படின்னு   விளக்கம் சொல்றதுக்கு முன்னால ஒரு சிறிய நகரத்துல நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துக்குறேன்.
எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் வேலை பார்த்த இடம் ஒரு பெரிய தனியார் நிறுவனம்.சில ஆண்டுகளுக்கு முன்னால வேற ஊருக்கு மாற்றலாகி குடும்பத்தோட போயிட்டார். அதே ஊரிலேயே அவர் பொண்ணையும் திருமணம் செய்து கொடுத்தார்.

மாப்பிள்ளை - செல்போன் ரீசார்ஜ், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஆசை வார்த்தையால வாடகை சைக்கிள் கம்பெனியும் நடத்தி வந்தார். செல்போன் தொடர்பான வியாபாரத்துல அவர் ரொம்பவே திறமைசாலிதான். ஆனால் சைக்கிள் விஷயத்தில் பூஜ்யம் என்பதால் ஒரு ஆளுக்கு நிறைய சம்பளம் கொடுத்து அந்தக் கடையை நடத்தி வந்தார். ஆனால் அதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சைக்கிள் கடையை மூடிவிட்டார்.

அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பினால் பிறகு செல்போன் கடையும் தள்ளாடியது. சைக்கிள் கடையால் பல மாதங்கள் நஷ்டம் வந்திருந்தாலும் நண்பரின் பெண் திருமணமாகிப் போன நேரம்தான் ஒரு கடையை இழுத்து மூடவேண்டியுள்ளது என்று சுற்றத்தார் பேசியிருக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களிலும் நிம்மதி இல்லை.

ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மைதான். (உதவியாக இருந்தாலும் சரி, தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலும் சரி...இரண்டையுமே வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.)

ஆனால் முற்றிலும் தெரியாத தொழிலில் ஈடுபட்டுவிட்டு அதில் நஷ்டம்

ஏற்பட்டால் உடனே மனைவி வந்த நேரம்தான், குழந்தை பிறந்த நேரம்தான்னு சொல்லி தப்பிக்கிறவங்களை என்ன செய்யுறது?

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான். - இந்தப் பழமொழி குறித்த என்னுடைய கருத்தை சொல்றேன்.

இந்தப் பழமொழிக்கு முக்கிய காரணங்களா சோம்பேறித்தனமும், ஆர்வமின்மையும்தான் இருக்கணும். ஏன்னா, செய்யுற தொழிலை விடுறவன் சோம்பேறியா இருக்கலாம். ஆர்வம் இல்லாதவன்தான் தெரியாத தொழிலை அதனுடைய போக்குலேயே விட்டு நஷ்டப்படுவான்.

பேராசை மற்றொரு காரணமா இருக்கும். நீங்க யோசிச்சுப் பார்க்கும்போதும் ஒரு தொழில் வீழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்குறதா தெரியலாம். ஆனா அதுக்கெல்லாம் அடிப்படையா மேலே சொல்லியிருக்குற மூணு காரணங்கள்தான் அதிகமா இருக்கும்.

இது 2008 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய படைப்பு.

திங்கள், 21 டிசம்பர், 2009

மறுபடியும் முதல்லேருந்தா...இளைய பாரதம் URL முகவரி மாறுகிறது.


சில சமயம் நாம் செய்யக்கூடாதுன்னு நினைக்குற விஷயத்தைதான் கட்டாயமா செய்ய வேண்டியிருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு அந்த அனுபவம் பலதடவை ஏற்பட்டிருக்கு. இப்பவும் அப்படித்தான்.

இதுவரை ஆங்கிலப் புத்தாண்டுக்கு பெரிசா அலட்டிக்காமதான் இருப்பேன். ஆனா 2010க்கு இளைய பாரதம் வலைப்பதிவுல மாற்றம் செய்ய வேண்டிய சூழ் நிலை வந்துடுச்சு.

என்னுடைய வலைப்பதிவில் பின்தொடருபவர்கள் கெஜட்டை சேர்க்குற ஆப்ஷன் வேலை செய்யலை. நானும் மனம் தளராம பின்னூட்டம் இட்ட நண்பர்கள்கிட்ட உதவி கேட்டேன். பூங்குன்றன், நாஞ்சில் பிரதாப், angel இவங்க எல்லாம் சரியான வழிதான் சொல்லியிருந்தாங்க. ஆனா எதுவும் ஒர்க் அவுட் ஆகலை.

டாஷ்போர்டை ஆங்கிலத்துல வெச்சு இந்த ஆப்ஷனை சேர்க்கலாம்னு angel , நாஞ்சில் எக்ஸ்பிரஸ் தளத்துல பின்னூட்டம் போட்டிருந்தாங்க. அந்த  முயற்சியை நான் தொடக்கத்துலேயே செய்து பார்த்துட்டேன்.

கடைசியா என்னுடைய மூளையை கசக்கிப் பிழிஞ்சு (துணியையே துவைக்கிறது இல்லை...இவருதான் மூளையை கசக்குறாராம்...அப்படின்னு ஒருத்தர் முனங்குறது காதுல விழுதுங்க.) உண்மையை கண்டுபிடிச்சுட்டேன்.

ஆங்கில ஃபார்மெட்டுலேயே புது தளத்தை உருவாக்குறதுதான் சரியான வழின்னு புரிஞ்சு போச்சு. writer-saran இந்த முகவரியை இழக்கணுமேன்னு வருத்தம்தான். அப்புறம்தான் இது என்ன படிச்சு வாங்குன பட்டமா...அது கிடக்குது...அப்படின்னு வேற முகவரிக்கு முயற்சி பண்ணினேன். http://ilaiyabharatham.blogspot.com கிடைச்சுடுச்சுங்க. இந்த தளத்துல எல்லா பதிவையும் சேர்த்துட்டேன்.

ஆனா, பழைய இம்சைஅரசன் 23ம் புலிகேசியில தங்கச்சுரங்கத்துல வடிவேலு மாட்டிக்கொள்வார். வடிவேலு இடத்தில் வேறு ஆள் மன்னராக இருப்பது பற்றி காவலர்கள் ஒவ்வொரு செய்தியைப் பேசும்போதும்  ஒரிஜினல் அரசனான அவர், அதிர்ச்சி அடைவார்.


அதே போல் நீங்களும் இளையபாரதத்தை தேடி அது இல்லாமல் அதிர்ச்சி அடையக்கூடாதுன்னு ஒரே காரணத்துக்காக 2009ம் ஆண்டு பதிவு எல்லாத்தையும் இதுலயே விட்டு வெச்சுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.(ஆளில்லா கடையில டீ ஆத்திகிட்டு பேசுற பேச்சைப் கேளுன்னுதானே சொல்ல வர்றீங்க?)

2010 தொடக்கம் முதல் புதிய பதிவுகளை மட்டும் http://ilaiyabharatham.blogspot.com இதுல வெச்சுகிட்டு ரெண்டு வீட்டையும் ச்ச...ரெண்டு தளத்துலயும் பயணம் பண்ணலாம்னு ஒரு யோசனை.

இவன் பின்னால எல்லாம் போக வேண்டியிருக்கேன்னு அலுத்துக்காம புது தளத்துக்குப் போய் வரிசையில சேர்ந்துக்குங்க. அங்க போனதும் நானே முதல் ஆளா அங்க சேர்ந்து இருக்குறதைப் பார்த்து பயப்படக்கூடாது. என்னைய நானே மதிக்கலைன்னா வேற யார்கிட்ட இருந்து அந்த மரியாதையை எதிர்பார்க்க முடியும்?

பின்தொடருதல்  தொடர்பான ஆலோசனை வழங்கிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.

என்னது?...மூணு மணி நேரத்துல அறுபதாயிரமா...



நிறைய பெண்கள் கொடூரமான நெடுந்தொடர்களால குடும்பத்துல நிம்மதியை இழந்து தவிக்கிறாங்க. இது தெரிஞ்சும் அந்த போதையை விட முடியாம பலர் அவதிப்படுறதை யாரும் மறுக்க முடியாது.

அது எப்படி தொலைக்காட்சி பார்க்காம இருக்க முடியும்? எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு இந்த தொடர்கள்தானே.அப்படின்னு சில பெண்கள் சொல்லுவாங்க. இவ்வளவு தொடர்களைப் பார்த்தா என்ன ஆகும்...அவங்களை அறியாமலே ஆழ்மனசுல ஒரு அச்சத்தை விதைச்சுடும். இது புரியாம குடும்ப உறுப்பினர்கள் கிட்ட வார்த்தை வன்முறையைப் பயன்படுத்தி தனித்தீவாகிடுவாங்க.

நிறைய குடும்பங்கள்ல என்ன பிரச்சனை தெரியுமா? இன்றைய பெண்களுக்கு அன்றாட குடும்ப வேலைகளே மிகப் பெரிய பணிச்சுமையா தெரியுது. உண்மையில் அவ்வளவு வேலை இல்லை.

பின்ன ஏன் அந்த உணர்வு?

வேலைக்குப் போகும் பெண்களுக்கு மற்றவங்க சின்ன சின்ன வேலைகளைக் கூட செய்யாம இருக்குறாங்களேன்னு ஆத்திரம் வரும். வீட்டுலேயே இருக்குறவங்களுக்கு பகல் நேரத்துல மட்டும் குறைந்தது ஐந்து தொடர்களைப் பார்க்க முடியாத நிலை வரும்போது கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கோபம் வரும்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவங்க அது கிடைக்கலைன்னா எப்படி வெறிபிடிச்சு அலையுவாங்களோ...அதுக்கு கொஞ்சமும் கொடுந்தொடர் போதை குறைஞ்சது இல்லை.

என்ன...இவங்க கோபம் குடும்பத்துக்குள்ள கொஞ்சமும் நியாயமே இல்லாத வழியிலதான் வெடிக்கும். அதை எதிர்கொள்ளும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு இவ என்ன இந்த அநியாயம் பண்றா...அப்படின்னு புரியாமயே விரோதத்தை அதிகமாக்கிடுவாங்க.

இதன் ஒரு பகுதிதான் தன் பிறந்த வீட்டு சொந்தம் தவிர கணவரோட அப்பா அம்மாவுக்கு கூட எதுவும் செய்யக்கூடாதுன்னுங்குற பிடிவாதம்.

அப்ப வீட்டுக்குள்ள இருக்குற அந்தப் பொட்டியை என்னதான் செய்யுறது? அதனால நல்லதே இல்லையா? அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது.

இந்த கிரீமைப் பூசிகிட்டா நீங்க சிரிச்சுகிட்டே போய் அந்தக் கிணத்துல விழுந்து சாவீங்க. ஆனா உலகம் முழுவதும் பிரபலமாயிடுவீங்கன்னு சொன்னா நாம செய்வோமா?

நிச்சயம் மாட்டோம். ஆனா பல விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் சில விஷயங்களை - நமக்கு தீமை தரக்கூடியதுன்னு தெரிஞ்சும் விட முடியாத அளவுக்கு நம்ம மனசை கட்டிப்போட்டு வைக்கிற வேலைகளை செய்துகிட்டு இருக்கு.

நேரடியா எந்த பாதிப்பும் இல்லை. அதாவது நான் உங்க குடும்பத்துக்குள்ள வந்து நெரடியா சண்டை போட்டா அது குற்றம். அப்படி பண்ணாம நான் உங்க மனசை என்னவோ பண்ணி நீங்களே உங்க குடும்பத்துக்குள்ள அடிச்சுக்குங்கன்னு விட்டுட்டா...அதுக்குப் பேர் என்ன?...

என்ன?...

இதுதாங்க எனக்கும் புரியலை.

இப்ப விஷயத்துக்கு வர்றேன்...(அடப்பாவி அப்ப இது வரைக்கும் வெட்டியாத்தான் பேசிகிட்டு இருந்தியா?)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு உதாரணம் சொல்லணும்னா வாகனத்தை ஒப்பிடலாங்க.

வண்டியில ஆளையும் ஏத்தலாம்...ஆள் மேல வண்டியையும் ஏத்தலாம்.(எப்படி நம்ம பஞ்ச் டயலாக்கு?...

இது புரிஞ்சா நீங்க சூப்பரு...புரியலைன்னா...எப்படியாச்சும் போங்க.

சாக்லெட் படத்து ஸ்டில் இருக்கு. அந்த மேட்டருக்கு இன்னும் வரலியேன்னு நீங்க எல்லாம் பொறுமை இழக்குறது தெரியுது. வர்றேன்...வர்றேன்...


16 - 31 டிசம்பர் 2009ந் தேதியிட்ட தேவதை மாதமிருமுறை இதழ்ல (ஆங்...நம்ம ராமலக்ஷ்மி அக்காவோட வலைப்பக்கம், ரம்யா அக்காவோட தன்னம்பிக்கை பத்தி எழுதியிருந்தாங்களே...அதேதான்.) ஒரு சகோதரி, மூணுமணி நேர வேலையில 60,000.00 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது பத்தி சொல்லியிருந்தாங்க.

ஒரு கிலோ சாக்லெட் தயாரிச்சு விற்பனை செய்தா 200 ரூபா லாபம் கிடைக்குதுன்னு சொன்னதோட மூலப்பொருள் எங்க வாங்கலாம், செய்முறை என்ன அப்படின்னு எல்லாம் ஓரளவு விபரம் இருக்கு. சாக்லெட் கலர்லேயே மூணு பக்கம் இந்தக் கட்டுரை வந்திருக்கு.

அறுபதாயிரம் ரூபாய் வருமானம்னுங்குறதை விட இன்னொரு விஷயம்தான் இந்தக் கட்டுரையை எழுத தூண்டுகோலா இருந்துச்சு.

அவங்க சாக்லெட் செய்ய ஆரம்பிச்சது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துதானாம்.

தொலைக்காட்சித் தொடர்களால் குடும்பத்தையே பாதாளத்துக்கு கொண்டு செல்லும் பெண்கள் சிகரம் நோக்கி முன்னேறும் இந்த சகோதரியையும் கவனிப்பது நல்லது.

ஊதுற விசிலை ஊதிட்டேன். இனிமே உங்க விருப்பம்.

நன்றி: தேவதை 16-31 டிசம்பர் 2009 இதழ்