Search This Blog

திங்கள், 7 டிசம்பர், 2009

எவ்வளவோ செஞ்சிட்டோம்...இதைப் பண்ண மாட்டோமா?...


தொடர்ந்து சீரியசாவே எழுதிட்டு இருந்துட்டேன். அப்புறம் நீங்க அய்யய்யோ...கருத்து கந்தசாமி வந்துட்டான்னு எஸ்கேப் ஆயிடக்கூடாதுல்ல...அதான்...எஸ்.எம்.எஸ் ஜோக் ஒண்ணை தட்டி விட்டுருக்கேன். இளைய பாரதத்தில் சிரிப்பு தேசம் தலைப்புக்கு கீழ இருக்குறது எல்லாம் இந்த எஸ்.எம்.எஸ் சரக்குதான்.

Prove that 2/10 = 0.2 is wrongly printed as "Prove that 2/10 = 2"

பொறியியல் கல்லூரி வினாத்தாளில் அச்சுப்பிழை .

மாணவர்கள் : எவ்வளவோ செஞ்சிட்டோம்...இதைப் பண்ண மாட்டோமா?...

2:- Two
10:- Ten
2/10 = two/ten

wo/en

W - 23
O - 15

E - 5
N - 14

w + o = 23+15 = 38
e + n = 5+14 = 19

So 38/19 = 2...

எப்பூடி?

Thanks: B.Anand (Aeronatical Engg. student)

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

மாத்தி யோசி - ச ரீ க மே...


பக்குவப்பட்ட மனிதன் தீயவற்றிலும் நல்ல பலன் தரும் விஷயங்களையே பார்கிறான் என்ற கூற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால்தான் வசனங்களால் பல சர்ச்சையை ஏற்படுத்திய "பாய்ஸ்" திரைப்படத்தில் "மாத்தியோசி" என்று தொடங்கிய பாடல்வரிகள் என் கவனத்தை சட்டென்று ஈர்த்தன.

போட்டி மிகுந்த உலகத்தில் வேலைவாய்ப்பு என்பது பெரிய போராட்டத்திற்குப் பிறகே பெறக்கூடிய விலை உயர்ந்த பொருளாகிவிட்டது. ஒவ்வொருவரும் ஏதாவது தனித்திறமை இருந்தால் மட்டுமே இந்த உலகின் ஓட்டப்பந்தயத்தில் சற்று முன்னே செல்லலாம் என்ற நிலை.


சாதனையாளர்கள் யாரும் செய்யாத செயல்களை செய்வதில்லை. எல்லாரும் செய்வதையே வித்தியாசமாக செய்வார்கள் - இந்த வாக்கியம் வெற்றி பெற்ற பலரும் சொன்னதுதான்.

ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் சாதனை செய்வதற்கு அல்ல...வாழ்வதற்கே வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டியுள்ளது. சுருக்கமாக சொன்னால் "மாத்தி யோசி"

அதற்காக ரொம்பவும் மாத்தி யோசிப்பதாக நினைத்துக்கொண்டு கிடைக்க வேண்டிய வேலைக்கும் சொந்த முயற்சியால் வேட்டு வைத்துக்கொள்ளக்கூடாது.

உதாரணத்திற்கு, உங்களின் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு உங்க நாற்காலிதான் சார்... என்றால் உடனே யு ஆர் அப்பாயிண்டட் என்ற வசனமெல்லாம் திரைப்படத்தில்தான் சாத்தியம். நிஜ வாழ்வில் யாருக்கு ஆப்பு வைப்பது யாரோ என்றே தெரியாத நிலையில் இந்த பதில் வேலையை வாங்கித் தரும் என்று நினைப்பது பெரிய அளவில் பலன் தரும் என்று சொல்ல இயலாது.

அப்போ மாத்தி யோசிக்கும் பதில் எப்படி இருக்க வேண்டும்?

(பெண்ணிடம்) காலையில் எழுந்தது நீங்கள் கர்ப்பம் என்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

உடனே என் கணவரிடம் விஷயத்தை சொல்லி ரெண்டு பேரும் கொண்டாடுவோம்.(திருமணமாகாமலே கர்ப்பம் என்று ஏன் நெகட்டிவாக யோசிக்க வேண்டும்)

இப்படி நேர்மறையான சிந்தனையுடன் சிந்திக்க நாலு விஷயங்களை  சேர்த்து கட்டுரையாக்கி இருக்கிறார்கள்.


(அதற்காக நேர்மறையாகவே சிந்திக்கிறேன் என்று ஆபத்துக்களை தவிர்க்கும் தயாரிப்பில் நீங்கள் இல்லை என்றால் உங்களை குழியில் தள்ள பலரும் ரூம் போடாமல் யோசித்தாலே போதும் என்ற அளவுக்கு ஏமாளி என்று அர்த்தம்.)

புதிய தலைமுறை இதழ் முழுவதும் தன்னம்பிக்கை விஷயங்கள் இருந்தாலும்
அவை வெறும் எழுத்து என்ற அளவில் இல்லாமல் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களிலேயே நடைமுறை உதாரணங்களைக் காட்டுவதால் கட்டுரைகள் மீது மட்டுமல்ல...நம் மீதே நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது.

சினிமாத்துறையில் நடிக்க வந்த விபத்து(?!) பற்றியே பலரும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் சினிமா பிரபலங்களின் கல்லூரி வாழ்க்கை பற்றி எழுதிய ஒரு விஷயம் போதும்...அவர்களுக்கும் வருங்கால இந்தியா மீது அக்கறை இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள.

நன்றி : புதிய தலைமுறை (10.12.2009)

ரூ.2500.00 பெற்ற சிறுகதை - நாளைய விழுதுகள்.


குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு பெற்றோர்தான் முதல் காரணம் என்று சொல்பவர்களில் நானும் ஒருவன். இல்லை...சமூகம்தான் காரணம் என்று மாறுபட்ட கருத்தை நீங்கள் கொண்டிருக்கலாம். அடுத்த முறை இதை நீங்கள் சொல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

'உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும்?'
- இது ஒரு புகழ் பெற்ற பொன்மொழி.

நானும் அதையேதான் கேட்கிறேன்...பெற்றோர்களுக்கே பிள்ளைகள் மீது அக்கறை இல்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன வந்தது?...பெரியவர்களின் பொறுப்பில்லாத்தனமே குழந்தைத் தொழிலாளர் உருவாக காரணம்.

வருமானம் குறைவு என்றாலும் மது, புகை உள்ளிட்ட சில தீய பழக்கங்களால்தான் பலரும் தங்கள் குடும்பத்தின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறுகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் உருவாவதற்கு முதல் விதை இந்த சூழ்நிலையில்தான் விழுகிறது.

இந்த தீய பழக்கங்கள் சில வியாதிகளுடன், வறுமை - சோம்பேறித்தனம் ஆகியவற்றையும் இலவச இணைப்பாகத் தந்துவிடுகிறது.

மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் 2006 ம் ஆண்டு மே மாதம் "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் பெற்றோரின் பங்கு" என்ற தலைப்பு கொடுத்திருந்தார்கள்.

அதில் நான் எழுதி முதல் பரிசு ரூ.2500.00 பெற்ற சிறுகதைதான் நாளைய விழுதுகள்.

கதையை முழுவதுமாக படிக்க...