Search This Blog

வியாழன், 3 டிசம்பர், 2009

நாடு உருப்புடுற மாதிரி ஐடியா இருக்கா? ஆயிரம் ரூபாய் பரிசு காத்திருக்கு.



சமீப காலமா தமிழ்ல பல பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கி இருக்கு.ஒவ்வொண்ணுலயும் ஒரு சிறப்பு உண்டு. ஏன்னா, தனித்தன்மை இல்லாம வாசகர்களை கவர முடியாதுன்னு அவங்களுக்கும் நல்லாவே தெரியும்.

அப்படி மாதம் இருமுறை இதழா சூரிய கதிர்னு ஒரு பத்திரிகை நவம்பர் 16,2009 முதல் வெளிவரத்தொடங்கியிருக்கு. விஷயங்களும் கனமாத்தான் இருக்கு. பாலகுமாரன், மதன் - அப்படின்னு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இதழை அலங்கரிக்கிறதே ஒரு பரிசுதான்.

ஆனா மெகா பரிசுப்போட்டியால் வாசகர்களும், பத்திரிகை விற்பனை உயர்வால் தாங்களும் மட்டும் நன்றாக இருந்தால் போதாது...நாடும் நலம் பெற வேண்டும் என்று நல்லெண்ணத்தில் ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார்கள்.

கல்வி, போக்குவரத்து, பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் என்று எல்லா வகையிலும் நாடு முன்னேற உங்களிடம் அற்புதமான யோசனை இருக்கிறதா?...அதை எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் ஐடியா ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு உண்டு. அதை பிரசுரம் செய்வதோடு நிற்காமல் செயல்வடிவம் கொடுக்கவும் சூரிய கதிர் தயாராக இருப்பதுதான் மற்ற பத்திரிகைகளைவிட தனித்திருக்கும் விஷயம்.

வேறு ஒரு சில போட்டிகளும் உண்டு. எட்டு வாரங்கள் கொண்ட தொடர் போட்டியும் இதில் அடக்கம். இப்போதே பத்திரிகை வாங்கிப் படியுங்கள். ஐடியா போட்டி மற்றும் அதில் இருக்கும் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொள்ளுங்கள். பரிசுகளை வென்று குடும்பத்துடன் குதூகலமாக இருங்கள்.

ஆம்...குடும்பத்துடன் குதூகலமாக இருக்க ஒரு அற்புத போட்டியையும் அறிவித்திருக்கிறார்கள்.

இப்போதே சூரிய கதிர் மாதம் இருமுறை பத்திரிகையை வாங்க கிளம்பி விட்டீர்களா?

நன்றி : சூரிய கதிர் மாதம் இருமுறை இதழ்.