Search This Blog

ஞாயிறு, 29 நவம்பர், 2009

கதாசிரியர் - (வந்த படத்துக்கா? வராத படத்துக்கா?)


"சார்...டைட்டில்ல கதைன்னு உங்க பேரைப் பார்த்ததும் முகில் எதுவும் பிரச்சனை பண்ணிட மாட்டானே..."

அவன் சொன்னா யாருய்யா நம்புவாங்க?...நாம ரெண்டு பேரும் இருபது வருஷமா சினிமாத்துறையிலதான் இருக்கோம். இதுவரைக்கும் ஒரு படத்துலயாவது நான் சொந்தமா எழுதின கதை இருந்ததா...இல்லைன்னு உனக்கும் எனக்கும்தான் தெரியும்.

ஆனா இதை நானே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அதான்யா நேரம்னுங்குறது.  இதுக்காகத்தான் அவனை உதவி இயக்குனரா வெச்சுகிட்டே சினிமாவுக்கு இப்படி இருக்கணும்...அப்படி மாத்தணும்னு சொல்லியே கதையை வேற வடிவத்துக்கு மாத்திட்டேன். விடுய்யா பார்த்துக்கலாம்."என்ற அந்த பிரபல இயக்குனர் மேலும் ஒரு கோப்பை உற்சாக பானத்தை உள்ளே ஊற்றினார்.

அப்போது கதையைத் தந்த அப்பாவி உதவி இயக்குனரான இளைஞன் வந்தான். அவன் கையில் இரண்டு கடிதங்கள்.

"வாடா...அடுத்த வாரம் நம்ம படம் வெளியாகப் போகுது. நீயும் இப்ப ஒரு கிளாஸ் ஊத்திக் கொண்டாடு..."என்று அழைத்தார் பிரபல இயக்குனர்.

"அதெல்லாம் வேண்டாம் சார். என்னுடைய கதையை நீங்க திரைக்கதையா மாற்றினதும் அது நான் எழுதி தமிழா மாத இதழ்லல வெளிவந்த நாவலாவே மாறிடுச்சு. அதான் அந்த பத்திரிகை நிர்வாகத்துகிட்ட இந்தக் கதையைப் படமாக்க அனுமதிக்கடிதம் வாங்கிட்டு வந்துட்டேன்.

இதுல என்னோட அனுமதிக்கடிதத்தையும் சேர்த்து வெச்சிருக்கேன்.

டைட்டில்ல கதைன்னு என் பேரைப் போடும்போது தமிழா மாத இதழ்லல பிரசுரமானதுன்னும் ஒரு வரி சேர்த்துடுங்க..."என்று அந்த உதவி இயக்குனர் சொன்னதும் பிரபல இயக்குனர் மயங்கிச்    சரிந்தார்.

சனி, 28 நவம்பர், 2009

தட்சணை





"ஏம்மா...நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என் பேச்சைக் கேட்காம உன்னை யார் வரதட்சணை கேட்கச் சொன்னது? " என்ற சந்திரனின் குரலிலேயே கோபம் தெரிந்தது.



"அடப்பாவி...இதுக்காகவா பொண்ணு வீட்டுல இருந்து இங்க வந்து சேர்ற வரைக்கும் மூஞ்சியை உம்முன்னு வெச்சுகிட்டு இருந்த?...மண்டு...பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட இத்தனை பவுன் நகை போடணும்...அவ்வளவு சீர்வரிசை சாமான் வேணுன்னு கண்டிச்சுக் கேட்டாதாண்டா அதுக்குப் பேர் வரதட்சணை. உங்க சக்திக்கு என்ன செய்ய முடியுமோ அதை உங்க பொண்ணுக்கு செய்யுங்கன்னு நான் சொன்னதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?



புகுந்த வீட்டுக்கு பொண்ணு வர்றப்ப அவ வீட்டுல இருந்து எதுவுமே கொண்டு வரலைன்னு வெச்சுக்கோயேன்...நாம இந்த வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியோ அப்படின்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துட வாய்ப்பு இருக்கு.அவ கல்யாணமாகி ஓரளவு அத்தியாவசியமான பொருட்களோட வந்தா இது நம்ம வீடு...இது நாம கொண்டு வந்த பொருள்...அப்படின்னு ஒரு அக்கறை வரும். மனசுல எந்த வித விகல்பமும் இல்லாம புகுந்த வீட்டோட ஒட்டிக்குவா.



நான் பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட ஏதாச்சும் செய்யுங்கன்னு சொன்னது அவங்களை கஷ்டப்படுத்துறதுக்காக இல்லை. அந்தப் பொண்ணு மனசு சங்கடப்படாம இங்க வந்து வாழ்றதுக்காகன்னு இப்ப புரியுதா?"என்று சந்திரனின் அம்மா சொன்னதும் அவன் மனதில் இருந்த மிகப் பெரிய பாரம் நீங்கி லேசானது.


தட்சணை


"ஏம்மா...நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என் பேச்சைக் கேட்காம உன்னை யார் வரதட்சணை கேட்கச் சொன்னது? " என்ற சந்திரனின் குரலிலேயே கோபம் தெரிந்தது.

"அடப்பாவி...இதுக்காகவா பொண்ணு வீட்டுல இருந்து இங்க வந்து சேர்ற வரைக்கும் மூஞ்சியை உம்முன்னு வெச்சுகிட்டு இருந்த?...மண்டு...பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட இத்தனை பவுன் நகை போடணும்...அவ்வளவு சீர்வரிசை சாமான் வேணுன்னு கண்டிச்சுக் கேட்டாதாண்டா அதுக்குப் பேர் வரதட்சணை. உங்க சக்திக்கு என்ன செய்ய முடியுமோ அதை உங்க பொண்ணுக்கு செய்யுங்கன்னு நான் சொன்னதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?

புகுந்த வீட்டுக்கு பொண்ணு வர்றப்ப அவ வீட்டுல இருந்து எதுவுமே கொண்டு வரலைன்னு வெச்சுக்கோயேன்...நாம இந்த வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியோ அப்படின்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துட வாய்ப்பு இருக்கு.அவ கல்யாணமாகி ஓரளவு அத்தியாவசியமான பொருட்களோட வந்தா இது நம்ம வீடு...இது நாம கொண்டு வந்த பொருள்...அப்படின்னு ஒரு அக்கறை வரும். மனசுல எந்த வித விகல்பமும் இல்லாம புகுந்த வீட்டோட ஒட்டிக்குவா.

நான் பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட ஏதாச்சும் செய்யுங்கன்னு சொன்னது அவங்களை கஷ்டப்படுத்துறதுக்காக இல்லை. அந்தப் பொண்ணு மனசு சங்கடப்படாம இங்க வந்து வாழ்றதுக்காகன்னு இப்ப புரியுதா?"என்று சந்திரனின் அம்மா சொன்னதும் அவன் மனதில் இருந்த மிகப் பெரிய பாரம் நீங்கி லேசானது.