அனைவரும், தட்டில் ஒதுக்கப்பட்டிருந்ததை எல்லாம், தனியே ஒரு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தட்டை லேசாக கழுவி, பாத்திரம் தேய்க்கும் இடத்திலேயே போட்டுவிட்டு வந்தனர்.
நான் காரணம் கேட்டேன்.
பாத்திரம் தேய்க்க ஆள் வெச்சிருக்கோம். அப்படி இருந்தாலும், நாம் தட்டுல மிச்ச மீதியை அப்படியே வெச்சு காயவிட்டுட்டா, தேய்க்கும்போது சிரமமாகவும், கழுவி ஊற்றும்போது, குழாயில் அடைப்பும் ஏற்பட்டு, நாற்றம் அடிச்சு, நமக்கே அதிக வேலை வைக்கலாம்.
அது மட்டுமில்லாம அவங்க என்ன சூழ்நிலையால வீட்டு வேலைக்கு வர்றாங்கன்னு சொல்ல முடியாது. நம்ம எச்சிலை வழிச்சு எடுத்துப் போடும் போது, அவங்க மனசு வேதனைப் படலாம்.
எல்லாத்துக்கும் மேல், வீட்டு வேலை செய்யறவங்க வராவிட்டாலும், அநாவசியமான டென்ஷன் இருக்காது...என்று விளக்கம் கொடுத்து என்னை வியக்க வைத்துவிட்டார். உங்களுக்கு ஆச்சர்யம் வரலையா?
