Search This Blog

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 மே, 2013

குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது





கடந்த சில நாட்களாக வாயுபகவான் ஓரளவு கைகொடுத்துவருவதால் மின் வேட்டு அவ்வளவாக இல்லை. ஆனால் என் அலுவலகம் இருக்கும் காம்ப்ளக்சில் மின்கட்டணம் கட்டாததால் ப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட்டார்கள். சரியாக தொடர்ந்து 27 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் இந்த மாத வாடகையை கொடுக்கும் அளவுக்கு தொகை கிடைக்க வேண்டிய ஆர்டர் கைநழுவிப்போனது தனிக்கதை.


வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தில் தொல்லைக்காட்சியின் சேனலை அவ்வப்போது பார்ப்பது உண்டு. நான் சேனல் மாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் மற்றும் கே.டிவியை கடந்து செல்லும்போது கூட திடீர் திடீர் என்று குட்டிப்புலி டீசர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு கோடிரூபாய் கொடுத்தால்கூட எதாவது புரோகிராம் ஓடிக்கொண்டிருக்கும்போது சட்டென்று நிறுத்தி டீசரை ஒளிபரப்பிவிட்டு அடுத்து விளம்பரத்துக்கு போவார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் கையில் படம் சென்றுவிட்டால் அசுரபலத்துடன் இப்படி ஒரு படம் வரப்போகிறது என்று மக்களுக்கு விசயம் போய் சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இப்போது குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது என்று சொல்லலாம்.


50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பு முடித்தாலே அருமையான அரசுப்பணி நிச்சயம். அடுத்து 69-80களில் கல்லூரி முடித்திருந்தால் வேலை நிச்சயம் என்றிருந்தது. ஆனால் இப்போது கல்லூரிப்படிப்பையும் ஏதாவது ஒரு சிறந்த கல்லூரியில் முடித்தாலோ அல்லது மாணவன் தன் திறமையை நிரூபித்தாலோதான் வேலை என்றாகிவிட்டது. அதுவும் தனியார் துறையில் அந்த வேலையை தக்கவைக்க தினம் தினம் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது.


சினிமாவின் கதையும் இப்படித்தான். 20ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு படம் எடுத்துவிட்டால் எப்படியாவது தியேட்டரில் வெளியிட்டு எதாவது காசுபார்த்துவிடலாம் என்ற நிலை இருந்தது. அப்போது வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு வேறு விசயம் என்றால் அக்கம்பக்கத்து ஊர்வம்புதான். ஆனால் இப்போது படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பும் முயற்சியில் தொல்லைக்காட்சியும், இளையதலைமுறையை அடிமையாக்கும் விசயத்தில் இணையமும் வெற்றிபெற்றுவிட்டன. இப்போது ஒரு படத்தை எடுப்பதை விட இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திறமைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்த வகையில் சன்பிக்சர்ஸ், உதயநிதிஸ்டாலின் ஆகியோர் மூலம் வெளியிடப்படும் படங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றே சொல்லலாம்.


ஒரு படத்துக்கு இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நாளிதழ்களில் நன்றாக விளம்பரம் செய்யப்பட்டும் வேறு சில பிரச்சனைகளால் ரிலீசாகவில்லை. அந்த வகையில் விளம்பரத்துக்காக சுமார் 40 லட்சம் வரை நஷ்டம். இப்போது 15 லட்சம் வரை செலவு செய்து மூன்றாவது முயற்சியில் படத்தை ரிலீஸ் செய்தாயிற்று. ஆனால் படம் வந்தது யாருக்கும் தெரியவில்லை என்று அந்த படத்தின் இயக்குனர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்து போனது.


சமீபகாலமாக என் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தியேட்டரில்தான் உதயநிதிஸ்டாலினின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின்றன. குட்டிப்புலியும் அதில்தான் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும். மற்ற விசயங்களும் (வெற்றி) நல்லபடியாக நடந்தேற வாழ்த்துக்கள்.



Image Credit : searchtamilmovies


குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது

கடந்த சில நாட்களாக வாயுபகவான் ஓரளவு கைகொடுத்துவருவதால் மின் வேட்டு அவ்வளவாக இல்லை. ஆனால் என் அலுவலகம் இருக்கும் காம்ப்ளக்சில் மின்கட்டணம் கட்டாததால் ப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட்டார்கள். சரியாக தொடர்ந்து 27 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் இந்த மாத வாடகையை கொடுக்கும் அளவுக்கு தொகை கிடைக்க வேண்டிய ஆர்டர் கைநழுவிப்போனது தனிக்கதை.

வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தில் தொல்லைக்காட்சியின் சேனலை அவ்வப்போது பார்ப்பது உண்டு. நான் சேனல் மாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் மற்றும் கே.டிவியை கடந்து செல்லும்போது கூட திடீர் திடீர் என்று குட்டிப்புலி டீசர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு கோடிரூபாய் கொடுத்தால்கூட எதாவது புரோகிராம் ஓடிக்கொண்டிருக்கும்போது சட்டென்று நிறுத்தி டீசரை ஒளிபரப்பிவிட்டு அடுத்து விளம்பரத்துக்கு போவார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் கையில் படம் சென்றுவிட்டால் அசுரபலத்துடன் இப்படி ஒரு படம் வரப்போகிறது என்று மக்களுக்கு விசயம் போய் சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இப்போது குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது என்று சொல்லலாம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பு முடித்தாலே அருமையான அரசுப்பணி நிச்சயம். அடுத்து 69-80களில் கல்லூரி முடித்திருந்தால் வேலை நிச்சயம் என்றிருந்தது. ஆனால் இப்போது கல்லூரிப்படிப்பையும் ஏதாவது ஒரு சிறந்த கல்லூரியில் முடித்தாலோ அல்லது மாணவன் தன் திறமையை நிரூபித்தாலோதான் வேலை என்றாகிவிட்டது. அதுவும் தனியார் துறையில் அந்த வேலையை தக்கவைக்க தினம் தினம் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது.

சினிமாவின் கதையும் இப்படித்தான். 20ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு படம் எடுத்துவிட்டால் எப்படியாவது தியேட்டரில் வெளியிட்டு எதாவது காசுபார்த்துவிடலாம் என்ற நிலை இருந்தது. அப்போது வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு வேறு விசயம் என்றால் அக்கம்பக்கத்து ஊர்வம்புதான். ஆனால் இப்போது படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பும் முயற்சியில் தொல்லைக்காட்சியும், இளையதலைமுறையை அடிமையாக்கும் விசயத்தில் இணையமும் வெற்றிபெற்றுவிட்டன. இப்போது ஒரு படத்தை எடுப்பதை விட இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திறமைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்த வகையில் சன்பிக்சர்ஸ், உதயநிதிஸ்டாலின் ஆகியோர் மூலம் வெளியிடப்படும் படங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றே சொல்லலாம்.

ஒரு படத்துக்கு இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நாளிதழ்களில் நன்றாக விளம்பரம் செய்யப்பட்டும் வேறு சில பிரச்சனைகளால் ரிலீசாகவில்லை. அந்த வகையில் விளம்பரத்துக்காக சுமார் 40 லட்சம் வரை நஷ்டம். இப்போது 15 லட்சம் வரை செலவு செய்து மூன்றாவது முயற்சியில் படத்தை ரிலீஸ் செய்தாயிற்று. ஆனால் படம் வந்தது யாருக்கும் தெரியவில்லை என்று அந்த படத்தின் இயக்குனர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்து போனது.

சமீபகாலமாக என் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தியேட்டரில்தான் உதயநிதிஸ்டாலினின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின்றன. குட்டிப்புலியும் அதில்தான் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும். மற்ற விசயங்களும் (வெற்றி) நல்லபடியாக நடந்தேற வாழ்த்துக்கள்.

Image Credit : searchtamilmovies

வியாழன், 11 ஏப்ரல், 2013

ஜெமினி - ஏவிஎம் - நேரம் தவறாமை







12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)



ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.



ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.



திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.



இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.



ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.



ஒரு சின்ன விசயம். எந்த ஒரு விசயத்திலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது என் வழக்கம். ஆனால் நான் செய்து வரும் டி.டி.பி தொழிலில் என்னால் பல நேரங்களில் குறித்த நேரத்தில் பணி செய்து கொடுக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையை இப்போது என்னால் வெல்லமுடியவில்லை. அதற்கு காரணம் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான்.



சில நாட்களில் காலை முதல் மாலை வரை எந்த வேலையும் இருக்காது. கடந்த பல ஆண்டுகளாக மாலை 6 மணிக்கு கரண்ட் போய்விடுகிறது. இது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் மிஸ்டர் பப்ளிக் ஒருவர் மாலை 5.45 மணிக்கு வந்து இரண்டு பக்க மேட்டரை டைப் செய்து உடனே பிரிண்ட் எடுக்க வேண்டும் என்பார். நாம என்ன குமுதம், ஆனந்தவிகடனா பிரிண்ட் செய்து வெச்சிருக்கோம். காசை வாங்கிட்டு உடனே எடுத்துக்கொடுக்க.



டி.டி.பி என்பது வரும் வாடிக்கையாளருக்காக அவருக்கு சொந்தமான அவருக்கு மட்டுமே பயன்படக்கூடிய விசயத்தை டைப்செய்து தருவதாகத்தான் இருக்கும். ஒரே ஒரு பக்கத்தை டைப் செய்து 50ஆயிரம் ஜெராக்ஸ் போட்டு தரும் வேலையல்ல என்பதை வாடிக்கையாளருக்கு விளங்க வைக்கவே பாதி எனர்ஜி வேஸ்ட் ஆகிடும்.



இன்னொரு சிக்கல், பலர் தனக்கு வேண்டிய தகவலை சரியாக எழுதி எடுத்து வரமாட்டார்கள். பக்கத்தில் இருந்து ஆக்கல், அழித்தல், வார்த்தையை மாற்றுதல் வேலையை செய்துகொண்டு நமக்கு டென்சனை ஏற்றுவார்கள். கடைசியாக பார்த்தால் சரியான முறையில் வழக்கறிஞர்களால் எழுதி தரப்பட்ட ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் குறைந்தது 6 பக்கம் டைப் செய்துவிடுவேன். ஆனால் ஒழுங்காக எழுதி வராமல் பக்கத்தில் இருந்து டிக்டேட் செய்யும் இம்சை அரசர்களால் ஒரு மணி நேரத்தில் 3 பக்கம் கூட முடிக்க முடியாது.



அவர்கள் கொத்துபரோட்டா போட்ட தகவலை நாம் செம்மைப்படுத்தி ஒழுங்கான ஆவணமாக்கி எடுத்து கொடுத்தால் 3 பக்கம்தானே. இதுக்கு அவ்வளவு காசு தரணுமா என்று நம்முடைய அரைமணி நேரத்துக்கு காற்றிலேயே அல்வா கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.



ஒரு நாளைக்கு எட்டுமணி நேர பணி என்று மாதம் 30 நாளும் பணி செய்வதாக வைத்துக்கொண்டால்கூட ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 60ரூபாய் என்ற தொகை கூலியாக கிடைத்தால்தான் இன்றைய விலைவாசிக்கு மாத சம்பளம் 15ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்ட முடியும். (கட்டிட தொழிலாளர், தச்சர், பெயிண்டர் போன்றவர்களுக்கு  இதைவிட அதிக தின சம்பளம் உண்டு. அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் கம்ப்யூட்டர், கடுமையான இட வாடகை, லட்சக்கணக்கில் அட்வான்ஸ், ஒரு யூனிட் 10 ரூபாய் என்ற அநியாய மின்கட்டணம் உள்ளிட்ட எந்த செலவும் கிடையாது)



ஆனால் 1 மணி நேரத்தில் 3 பக்கம் டைப் செய்து ப்ரூப், ஒரிஜினல் என்று ஆறுபக்கம் பிரிண்ட் (அடக்கவிலை 30 ரூபாய்) போக மீதி 30 ரூபாய் கிடைத்தால் அதில் வாடகை, கரண்ட் பில், கம்ப்யூட்டர், பிரிண்டர் மெயின்டனன்ஸ், பேப்பர் உள்ளிட்ட செலவுகளை கழித்துப்பார்த்தால் என் உழைப்புக்கு கூலி கோவிந்தாதான்.



தொழில் ஆரம்பித்து பல மாதங்கள் கழித்துதான் நான் தொழில் செய்யவில்லை. தனியாக அமர்ந்து கூலி வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போ நம்ம கதை புலிவாலை பிடித்த கதைதான்.



நாட்டுல எவ்வளவு பேர் இந்த தொழில் செய்து பெரிய ஆளாயிருக்காங்க. உன்கிட்ட இருந்து மட்டும் ஏன் இந்த புலம்பல் அப்படின்னு பலருக்கு தோணும். தொழில் என்றால் என்ன தெரியுமா? நாம் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் வேலை தடைபடக்கூடாது. நமக்கு வருமானம் வந்துகொண்டே  இருக்கணும். நமக்காக பணியாளர்களோ அல்லது இயந்திரமோ அல்லது இரண்டுமே சேர்ந்து நமக்காக சம்பாதித்து கொடுக்கணும். அதற்குப்பெயர்தான் தொழில்.



தொழில்ல நேரம் தவறாமை, நேர்மை இரண்டும் முக்கியம்னு சொல்லுவாங்க. நேர்மையை நான் விடாம கெட்டியா பிடிச்சுகிட்டேன். ஆனா நேரம் தவறாமையை பல நேரங்கள்ல என்னால பின்பற்றமுடியலை. அதற்கு காரணம் அதற்கான பிடி என் கையில இல்லை. அதை சரிசெய்யணும்னா, பெரிய அளவுல முதலீடு வேணும். அதை வெச்சு என் அலுவலகத்து சூழ்நிலையை மாற்றினாதான் வர்றவங்களை நேரம் தவறாமையை பின்பற்ற செய்ய முடியும். அது நிறுவனத்துக்கும் நல்லது. வாடிக்கையாளருக்கும் நல்லது. அதை இப்போ என்னால செய்ய முடியாது. ஏன்னா, ஆரம்ப கட்டத்துல நான் அந்த கடுமையை காட்டினா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. இந்த உண்மை புரிஞ்சதால அடக்கி வாசிக்கிறேன்.


ஜெமினி - ஏவிஎம் - நேரம் தவறாமை


சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)

ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.

ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.

திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.

இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.

ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.

ஒரு சின்ன விசயம். எந்த ஒரு விசயத்திலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது என் வழக்கம். ஆனால் நான் செய்து வரும் டி.டி.பி தொழிலில் என்னால் பல நேரங்களில் குறித்த நேரத்தில் பணி செய்து கொடுக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையை இப்போது என்னால் வெல்லமுடியவில்லை. அதற்கு காரணம் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான்.

சில நாட்களில் காலை முதல் மாலை வரை எந்த வேலையும் இருக்காது. கடந்த பல ஆண்டுகளாக மாலை 6 மணிக்கு கரண்ட் போய்விடுகிறது. இது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் மிஸ்டர் பப்ளிக் ஒருவர் மாலை 5.45 மணிக்கு வந்து இரண்டு பக்க மேட்டரை டைப் செய்து உடனே பிரிண்ட் எடுக்க வேண்டும் என்பார். நாம என்ன குமுதம், ஆனந்தவிகடனா பிரிண்ட் செய்து வெச்சிருக்கோம். காசை வாங்கிட்டு உடனே எடுத்துக்கொடுக்க.

டி.டி.பி என்பது வரும் வாடிக்கையாளருக்காக அவருக்கு சொந்தமான அவருக்கு மட்டுமே பயன்படக்கூடிய விசயத்தை டைப்செய்து தருவதாகத்தான் இருக்கும். ஒரே ஒரு பக்கத்தை டைப் செய்து 50ஆயிரம் ஜெராக்ஸ் போட்டு தரும் வேலையல்ல என்பதை வாடிக்கையாளருக்கு விளங்க வைக்கவே பாதி எனர்ஜி வேஸ்ட் ஆகிடும்.

இன்னொரு சிக்கல், பலர் தனக்கு வேண்டிய தகவலை சரியாக எழுதி எடுத்து வரமாட்டார்கள். பக்கத்தில் இருந்து ஆக்கல், அழித்தல், வார்த்தையை மாற்றுதல் வேலையை செய்துகொண்டு நமக்கு டென்சனை ஏற்றுவார்கள். கடைசியாக பார்த்தால் சரியான முறையில் வழக்கறிஞர்களால் எழுதி தரப்பட்ட ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் குறைந்தது 6 பக்கம் டைப் செய்துவிடுவேன். ஆனால் ஒழுங்காக எழுதி வராமல் பக்கத்தில் இருந்து டிக்டேட் செய்யும் இம்சை அரசர்களால் ஒரு மணி நேரத்தில் 3 பக்கம் கூட முடிக்க முடியாது.

அவர்கள் கொத்துபரோட்டா போட்ட தகவலை நாம் செம்மைப்படுத்தி ஒழுங்கான ஆவணமாக்கி எடுத்து கொடுத்தால் 3 பக்கம்தானே. இதுக்கு அவ்வளவு காசு தரணுமா என்று நம்முடைய அரைமணி நேரத்துக்கு காற்றிலேயே அல்வா கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.

ஒரு நாளைக்கு எட்டுமணி நேர பணி என்று மாதம் 30 நாளும் பணி செய்வதாக வைத்துக்கொண்டால்கூட ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 60ரூபாய் என்ற தொகை கூலியாக கிடைத்தால்தான் இன்றைய விலைவாசிக்கு மாத சம்பளம் 15ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்ட முடியும். (கட்டிட தொழிலாளர், தச்சர், பெயிண்டர் போன்றவர்களுக்கு  இதைவிட அதிக தின சம்பளம் உண்டு. அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் கம்ப்யூட்டர், கடுமையான இட வாடகை, லட்சக்கணக்கில் அட்வான்ஸ், ஒரு யூனிட் 10 ரூபாய் என்ற அநியாய மின்கட்டணம் உள்ளிட்ட எந்த செலவும் கிடையாது)

ஆனால் 1 மணி நேரத்தில் 3 பக்கம் டைப் செய்து ப்ரூப், ஒரிஜினல் என்று ஆறுபக்கம் பிரிண்ட் (அடக்கவிலை 30 ரூபாய்) போக மீதி 30 ரூபாய் கிடைத்தால் அதில் வாடகை, கரண்ட் பில், கம்ப்யூட்டர், பிரிண்டர் மெயின்டனன்ஸ், பேப்பர் உள்ளிட்ட செலவுகளை கழித்துப்பார்த்தால் என் உழைப்புக்கு கூலி கோவிந்தாதான்.

தொழில் ஆரம்பித்து பல மாதங்கள் கழித்துதான் நான் தொழில் செய்யவில்லை. தனியாக அமர்ந்து கூலி வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போ நம்ம கதை புலிவாலை பிடித்த கதைதான்.

நாட்டுல எவ்வளவு பேர் இந்த தொழில் செய்து பெரிய ஆளாயிருக்காங்க. உன்கிட்ட இருந்து மட்டும் ஏன் இந்த புலம்பல் அப்படின்னு பலருக்கு தோணும். தொழில் என்றால் என்ன தெரியுமா? நாம் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் வேலை தடைபடக்கூடாது. நமக்கு வருமானம் வந்துகொண்டே  இருக்கணும். நமக்காக பணியாளர்களோ அல்லது இயந்திரமோ அல்லது இரண்டுமே சேர்ந்து நமக்காக சம்பாதித்து கொடுக்கணும். அதற்குப்பெயர்தான் தொழில்.

தொழில்ல நேரம் தவறாமை, நேர்மை இரண்டும் முக்கியம்னு சொல்லுவாங்க. நேர்மையை நான் விடாம கெட்டியா பிடிச்சுகிட்டேன். ஆனா நேரம் தவறாமையை பல நேரங்கள்ல என்னால பின்பற்றமுடியலை. அதற்கு காரணம் அதற்கான பிடி என் கையில இல்லை. அதை சரிசெய்யணும்னா, பெரிய அளவுல முதலீடு வேணும். அதை வெச்சு என் அலுவலகத்து சூழ்நிலையை மாற்றினாதான் வர்றவங்களை நேரம் தவறாமையை பின்பற்ற செய்ய முடியும். அது நிறுவனத்துக்கும் நல்லது. வாடிக்கையாளருக்கும் நல்லது. அதை இப்போ என்னால செய்ய முடியாது. ஏன்னா, ஆரம்ப கட்டத்துல நான் அந்த கடுமையை காட்டினா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. இந்த உண்மை புரிஞ்சதால அடக்கி வாசிக்கிறேன்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

முதல்வன், நாடோடிகள் வெற்றி - கந்தா - ஆனந்த விகடனில் கதையும்



ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா என்ற சிறுகதையை 10.04.2013 தேதியிட்ட ஆனந்த விகடனில் திருவாரூர் பாபு எழுதியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் உருவான முதல் சினிமாவான கந்தா படம் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதை விட பல மடங்கு அதிர்ச்சியை இந்த சிறுகதையின் முடிவு எனக்கு ஏற்படுத்தியது. 




அதற்காக கதையின் முடிவு பெரிய மலையைப் புரட்டுவது போல கனமான விசயத்தை எல்லாம் வைத்து எழுதப்படவில்லை. கதைமாந்தர் ஒருவரின் மனைவி போகிற போக்கில் சொல்கிற ஒற்றை வாக்கியத்துடன் கதை முடியும். அந்த வாக்கியம் வாசகர் எதிர்பாராதவகையில் இருக்கும். நானும் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கதைகளைப் படித்திருப்பேன். சமீப காலத்தில் நான் வாசித்த கதைகளில் கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று மனதின் ஓரத்தில் லேசான யூகம் எட்டிப்பார்த்ததை தகர்த்து வேறு வகையில் அமைந்திருந்தது இந்தக் கதையில்தான்.




சிறுகதைகள் வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு திருவாரூர் பாபு என்ற பெயர் கண்டிப்பாக பரிச்சயமாகியிருக்கும். சுமார் ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் எழுதிய அவருடைய முதல் சிறுகதை பிரசுரமாவதற்கு நான்கு ஆண்டுகள் ஆனதைப்போலவே அவர் இயக்கிய முதல் படம் திரையைத் தொடுவதற்கும் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று திருவாரூரில் கந்தா படம் ரிலீஸ் வெளியான நாளன்று குறிப்பிட்டார்.




நான்கு ஆண்டுகள் கழித்து அவருடைய முதல் கதை பிரசுரமானாலும் அதன் பிறகு ஆயிரம் கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஆனால் முதல் படம் கந்தா பல பிரச்சனைகளால் மிகவும் தாமதமாக திரையைத் தொட்டது அதன் வெற்றியை பாதித்த முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.




படத்தின் ஆறு பாடல்களையும் ஆடியோவில் கேட்கும் போது நன்றாகத்தான் இருந்தது. மூன்று பாடல்களை படமாக்கிய விதமும் குறைசொல்லும்விதமாக இல்லை. (படத்தில் மூன்று பாடல்கள்தான்) பிறகு ஏன் மக்களிடம் பிரபலமடையவில்லை என்று பார்க்கும்போது சேனல்கள் எதிலும் திரும்பத்திரும்ப ஒளி (ஒலி) பரப்பாகவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.




இப்போது படம் எடுப்பது கூட பெரிய விசயம் இல்லை. அதை மார்க்கெட்டிங் செய்வதும், தியேட்டர்களை பிடிப்பதும், அதற்கு முதல் இரண்டு வாரங்கள் கூட்டம் சேர்ப்பதும்தான் பெரிய வேலையாக சவாலாக இருக்கும் என்று பலரும் சொல்வது கந்தா படத்திலும் உண்மையாகிவிட்டது.




படம் நல்ல கருத்தைதான் சொன்னது என்றாலும் அதையும் தாண்டி முழு அளவில் மனது திருப்தி அடைந்தது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. படத்தில் ஒரு மெசேஜ் கூட சொல்லாமல் வெற்றிபெறும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு அமைந்துவிடுகிறது. பாபு எதுவும் மெசேஜ் சொல்லவில்லையோ என்று நினைத்துவிடவேண்டாம். ஆசிரியரும், பெற்றோரும்தான் சமூக விரோதிகள் உருவாக காரணம் என்ற அழுத்தமான மெசேஜ் படத்தில் இருக்கிறது. ஆசிரியரும், பெற்றோரும் தவறானவராக இருந்துதான் பிள்ளையை வீணடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கேட்காத கடனும், பார்க்காத பயிரும் பாழ் என்ற விதிக்கேற்ப பிள்ளையை கவனிக்காமல் விட்டால் கூட சிக்கல்தான் என்ற கருத்து மறைமுகமாக படத்தில் சொல்லப்பட்டுள்ளது.






ஆனால் கந்தா படத்தில் சொல்ல வந்த விசயம் மக்கள் மனதை தொடுவதற்கு தவறிவிட்டது. மேக்கிங்கில் குப்பை என்று சொல்லும்படி எல்லாம் எந்த தவறும் இல்லை. இந்த காரணத்தால்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று அறுதியிட்டு கூறுவது கடினம்.




முதல்வன் படம் படு ரிச்சான ஒரு பேண்டசி கதைக்களம். அந்த படத்தை நான் பார்க்கும்போது, படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய சேசிங், அதிரடி சண்டை என்றெல்லாம் இருக்கலாம் என்று யூகித்தேன். ஆனால் யாரும் அவ்வளவு எளிதில் யூகிக்காத வகையில் நாலு சுவற்றுக்குள் ரகுவரனை வைத்து முதல்வரின் பாதுகாவலர்களையே சுட்டுக்கொல்லவைத்தது என்று ரொம்ப சிம்பிளான கிளைமாக்ஸ்தான் இருந்தது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்திவிட்டது. 





என் பார்வையில் அதற்கு காரணம், கிளைமாக்ஸ் வருவதற்கு சில காட்சிகள் முன்பாகவே இளைஞர்கள் கையில் ஆட்சி, ஊழல் பெருச்சாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் என்ற வகையில் காட்சிகள் அமைந்ததிலேயே ரசிகர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். பெரிய விசயத்தையே சாதித்தாயிற்று. மூட்டைப்பூச்சியை நசுக்க ராணுவம் என்பதெல்லாம் தேவையில்லை. சின்ன விசயத்தை வைத்து ரகுவரனை காலிசெய்துவிடலாம் என்று காட்சி அமைந்ததால் ரசிகனும் திருப்தியாகி விட்டான் என்று சொல்லத் தோன்றுகிறது.




1994ன் இறுதியில் வெளிவந்த படம் புதிய மன்னர்கள். இப்போதும் பொதிகை, மெகா மற்றும் பல தொ(ல்)லைக்காட்சிகளிலும் இந்தப் படம் அவ்வப்போது ஒளிபரப்பாகிறது. படம் வந்தபோது மட்டுமல்ல இப்போதும் தொலைக்காட்சிகளில் படத்தைப் பார்த்த யாரும் படம் நல்லாயில்லை என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனாலும் படம் ஓடவில்லை. இப்படியும் சில படங்களுக்கு பரிதாப ரிசல்ட் கிடைக்கும்.




நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கருத்தை முன்வைத்து நாடோடிகள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தக் கதை யாருடை மனதிலும் சொந்தக்கற்பனையாக உருவான கதையோ, அல்லது தழுவல், உருவலோ என்று நான் வாதிடவில்லை. ஆனால் அந்தப் படத்தை நான் முதன்முதலில் பார்த்ததும் 2000 அல்லது 2001ஆக இருக்கலாம். கல்கி வார இதழ் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தொலைந்தகாலம் என்ற சிறுகதைதான் என் நினைவுக்கு வந்தது.




ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதி இரண்டாம்பரிசு ரூ.7,500 பரிசு பெற்றதுடன் அதை எழுதிய எழுத்தாளர் 35 வயதுக்குட்பட்டவர் என்பதற்காக கூடுதலாக 500 ரூபாயும் பரிசு பெற்ற கதை அது.




நண்பனின் காதலுக்கு உதவப்போய் நண்பன் காதலியின் அப்பாவையோ அண்ணனையோ தவறுதலாக கொலைசெய்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வருவான். ஆனால் நண்பனின் பணக்கார மனைவி வசதி வாய்ப்பில்லாத சூழ்நிலையில் வாழ விருப்பமின்றி அவனை விட்டு பிரிந்து சென்றிருப்பாள். வாரத்தில் இரண்டுநாட்கள் குழந்தையை பார்க்கலாம் என்ற அளவில் விவாகரத்து வழக்கு தீர்ப்பாகி இருக்கும்.





நண்பனின் அரைவேக்காட்டு காதலுக்காக தன் இளமைக்காலம், தன் சகோதரியின் நின்றுபோன திருமணம் என்று பல இழப்புகளை தந்துச் சென்ற தொலைந்த காலத்தை நினைத்து அந்த கதாபாத்திரம் வருந்துவதாக கதை முடியும்.






பொதுவாக சிறுகதைகள், நாவல்களை படமாக்குவதில் பல சிரமங்கள் உண்டு. கதாசிரியரை திருப்திபடுத்த நினைத்தால் ஆடியன்ஸ் எஸ்கேப்பாகிவிடுவார்கள். அதற்காக கதையின் மையக்கருவையே சிதைத்து சின்னாபின்னமாக்கி கதை அல்லது நாவலின் பெயரைக்கெடுக்கும் காரியங்களையும் பல இயக்குனர்கள் செய்ததுண்டு. ஆனால் நாடோடிகள் படத்துக்கு அமைக்கப்பட்ட திரைக்கதை ரசிகர்களைக் கட்டிப்போட்டதன் காரணமாக பெரிய வெற்றி பெற்றது.




கல்கியில் வெளிவந்த சிறுகதையை ஒருபாராவில் சொன்னாலும் முழுக்கதையும் புரிந்துவிடுகிறது. இந்த கதைக்கரு இரண்டரை மணி நேரப்படமாக வந்தபோதும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தது.

திகில், முழு நீளக்காமெடி படங்கள் சில நேரங்களில் விதிவிலக்காகிவிடும். ராஜேஷ் இயக்கிய மூன்று படங்களில் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் மட்டும் லேசாக கதை இருந்தது மாதிரி (அது எங்க சார் இருந்தது. நானே கதை இல்லைன்னு ஒத்துகிட்டேன் அப்படின்னு இயக்குனர் ராஜேஷ் சொல்லலாம்.) எனக்கு தெரிந்தது. காமெடி என்ற பெயரில் மொக்கை ஜோக் சிலவற்றை வைத்து படத்தை முடிக்காமல் காட்சி அமைப்புகளே சிரிப்பை வரவழைத்ததும், சந்தானத்தின் முகபாவனைகளும் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அத்துடன் பாடல்களும் நயன்தாராவும் பக்கபலமாக இருந்தனர்.




முனி பார்ட் 1-ஐ விட காஞ்சனா (முனி பார்ட் 2)  அதிரடி வெற்றி. அதற்கு முக்கிய காரணம் திகில் சமாச்சாரத்துடன் காமெடியைக் கலந்ததுதான். இதையயல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு விசயம் மட்டும் ஓரளவு விளங்குகிறது. கருத்து சொல்லு, சொல்லாம போ... பாடல்கள் ஓரளவு கேட்கும்போதே தாளம் போடச்செய்வதாக இருக்க வேண்டும். சிரிப்புக்கு உத்திரவாதம் தரவேண்டும். அதனால் வயிற்று வலி என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் ரசிகர்களில் பெரும்பாலனவர்கள் இருக்கிறார்கள்.




திருவாரூர் பாபுவும் காமெடிக்கு என்று குண்டு ஆர்த்தி, சத்யன், விவேக்கின் தனி காமெடி டிராக் என்று பயன்படுத்தி காட்சிகள் அமைத்திருந்தார். அத்துடன் பாடல்களும் நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும் வெற்றிக்கனியைப் பறிப்பதைத் தடுக்கும் வில்லனாக சரியான நேரத்தில் படம் ரிலீசாகாதது அமைந்துவிட்டது.




அவருடைய பேட்டி தினகரன் வெள்ளி மலரில் 5-4-2013 பிரசுரமாகியுள்ளது.

Page 1

Page 2



தில், கில்லி உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான கோபிநாத் தயாரித்து ஒளிப்பதிவு செய்யும் படமாக தேரடிவீதி திருக்கண்ணபுரம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இது திருவாரூர் பாபுவின் இரண்டாவது படம். இந்தப்படத்தில் அவருக்கு எல்லாவிசயமும் கூடி வந்து வெற்றி தேவதை அவரது படத்தை முத்தமிடவேண்டும் என்று என்னுடைய மானசீக குருவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.


























































10 ஏப்ரல் 2013 ஆனந்த விகடன் இதழில் திருவாரூர் பாபு எழுதிய கதையின் சில பாராக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.





-----------------------------------------------------



யாருக்கும் சொல்ல வழி இல்லை. போலீஸ் எப்பவும் கண்காணிச்சுக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு உணர்வு. செல்போன்கூட வெச்சுக்கலை. உன்னைக் கண்காணிச்சுட்டு இருப்பாங்களோ... என்னால கஷ்டப்படுவியோனு நெனப்பு. அதான் உனக் குக்கூடச் சொல்லாம... எல்லாம் நாசமாப்போச்சுடா.

நான் காணாப் போனதும் உன்னையும் ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வெச்சு விசாரிச்சதா கேள்விப்பட்டேன்... அழுதேன். எனக்கு வேற வழி தெரியலடா. என்னை மன்னிச்சிரு... உன்னைப் பார்க்கணும்... உன்கூடப் பேசணும்னு துடிச்சிருக்கேன். ஆனா, பொண்டாட்டி குழந்தைகளோடு இருக்கற உனக்கு, என்னால சங்கடம் வந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதனாலதான் இத்தனை வருஷமா உன்னைத் தவிர்த்தேன்!''






வேட்டியால் முகம் துடைத்துக்கொண்டான். 20 வருட சோகத்தை, ஆற்றாமையைத் தன்முன்னே இறக்கிவைக்கிறான் என்பது பரமேஸுக்குப் புரிந்தது . 





''ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா அகால மரணம் அடைந்தார். இந்த போட்டோவ பெரிசா வெச்சு நான் பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் போட்டு, போட்டோ பின்னால  எழுதியிருக்கேன். நாற்பத்துச் சொச்சம் வயசுல நான் செத்துப் போனதை இந்த ஊருக்குச் சொல்லணும்டா. பழைய போட்டோவைப் போட்டாதான் என்னை அடையாளம் தெரியும். ஆயிரம் போஸ்டர் அடிச்சு தெருத் தெருவா ஊர்ல உள்ள அத்தினி சுவத்துலயும் ஒட்டு. என்கிட்ட ஏமாந்தவன், நான் ஏமாத்தினவன் எல்லாம் போஸ்டரைப் பார்த்து 'தொலைஞ்சான்’னு ஒரு பெருமூச்சுவிடுவான். அதுதான் என் ஆத்மா சாந்தி அடையறதுக்கான மந்திர வார்த்தை. எனக்காக இதைச் செய்வியா? என்னோட கடைசி ஆசைடா...''





முதல்வன், நாடோடிகள் வெற்றி - கந்தா - ஆனந்த விகடனில் கதையும்

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா என்ற சிறுகதையை 10.04.2013 தேதியிட்ட ஆனந்த விகடனில் திருவாரூர் பாபு எழுதியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் உருவான முதல் சினிமாவான கந்தா படம் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதை விட பல மடங்கு அதிர்ச்சியை இந்த சிறுகதையின் முடிவு எனக்கு ஏற்படுத்தியது. 
அதற்காக கதையின் முடிவு பெரிய மலையைப் புரட்டுவது போல கனமான விசயத்தை எல்லாம் வைத்து எழுதப்படவில்லை. கதைமாந்தர் ஒருவரின் மனைவி போகிற போக்கில் சொல்கிற ஒற்றை வாக்கியத்துடன் கதை முடியும். அந்த வாக்கியம் வாசகர் எதிர்பாராதவகையில் இருக்கும். நானும் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கதைகளைப் படித்திருப்பேன். சமீப காலத்தில் நான் வாசித்த கதைகளில் கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று மனதின் ஓரத்தில் லேசான யூகம் எட்டிப்பார்த்ததை தகர்த்து வேறு வகையில் அமைந்திருந்தது இந்தக் கதையில்தான்.

சிறுகதைகள் வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு திருவாரூர் பாபு என்ற பெயர் கண்டிப்பாக பரிச்சயமாகியிருக்கும். சுமார் ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் எழுதிய அவருடைய முதல் சிறுகதை பிரசுரமாவதற்கு நான்கு ஆண்டுகள் ஆனதைப்போலவே அவர் இயக்கிய முதல் படம் திரையைத் தொடுவதற்கும் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று திருவாரூரில் கந்தா படம் ரிலீஸ் வெளியான நாளன்று குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டுகள் கழித்து அவருடைய முதல் கதை பிரசுரமானாலும் அதன் பிறகு ஆயிரம் கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஆனால் முதல் படம் கந்தா பல பிரச்சனைகளால் மிகவும் தாமதமாக திரையைத் தொட்டது அதன் வெற்றியை பாதித்த முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.

படத்தின் ஆறு பாடல்களையும் ஆடியோவில் கேட்கும் போது நன்றாகத்தான் இருந்தது. மூன்று பாடல்களை படமாக்கிய விதமும் குறைசொல்லும்விதமாக இல்லை. (படத்தில் மூன்று பாடல்கள்தான்) பிறகு ஏன் மக்களிடம் பிரபலமடையவில்லை என்று பார்க்கும்போது சேனல்கள் எதிலும் திரும்பத்திரும்ப ஒளி (ஒலி) பரப்பாகவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது படம் எடுப்பது கூட பெரிய விசயம் இல்லை. அதை மார்க்கெட்டிங் செய்வதும், தியேட்டர்களை பிடிப்பதும், அதற்கு முதல் இரண்டு வாரங்கள் கூட்டம் சேர்ப்பதும்தான் பெரிய வேலையாக சவாலாக இருக்கும் என்று பலரும் சொல்வது கந்தா படத்திலும் உண்மையாகிவிட்டது.

படம் நல்ல கருத்தைதான் சொன்னது என்றாலும் அதையும் தாண்டி முழு அளவில் மனது திருப்தி அடைந்தது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. படத்தில் ஒரு மெசேஜ் கூட சொல்லாமல் வெற்றிபெறும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு அமைந்துவிடுகிறது. பாபு எதுவும் மெசேஜ் சொல்லவில்லையோ என்று நினைத்துவிடவேண்டாம். ஆசிரியரும், பெற்றோரும்தான் சமூக விரோதிகள் உருவாக காரணம் என்ற அழுத்தமான மெசேஜ் படத்தில் இருக்கிறது. ஆசிரியரும், பெற்றோரும் தவறானவராக இருந்துதான் பிள்ளையை வீணடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கேட்காத கடனும், பார்க்காத பயிரும் பாழ் என்ற விதிக்கேற்ப பிள்ளையை கவனிக்காமல் விட்டால் கூட சிக்கல்தான் என்ற கருத்து மறைமுகமாக படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் கந்தா படத்தில் சொல்ல வந்த விசயம் மக்கள் மனதை தொடுவதற்கு தவறிவிட்டது. மேக்கிங்கில் குப்பை என்று சொல்லும்படி எல்லாம் எந்த தவறும் இல்லை. இந்த காரணத்தால்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று அறுதியிட்டு கூறுவது கடினம்.

முதல்வன் படம் படு ரிச்சான ஒரு பேண்டசி கதைக்களம். அந்த படத்தை நான் பார்க்கும்போது, படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய சேசிங், அதிரடி சண்டை என்றெல்லாம் இருக்கலாம் என்று யூகித்தேன். ஆனால் யாரும் அவ்வளவு எளிதில் யூகிக்காத வகையில் நாலு சுவற்றுக்குள் ரகுவரனை வைத்து முதல்வரின் பாதுகாவலர்களையே சுட்டுக்கொல்லவைத்தது என்று ரொம்ப சிம்பிளான கிளைமாக்ஸ்தான் இருந்தது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்திவிட்டது. 

என் பார்வையில் அதற்கு காரணம், கிளைமாக்ஸ் வருவதற்கு சில காட்சிகள் முன்பாகவே இளைஞர்கள் கையில் ஆட்சி, ஊழல் பெருச்சாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் என்ற வகையில் காட்சிகள் அமைந்ததிலேயே ரசிகர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். பெரிய விசயத்தையே சாதித்தாயிற்று. மூட்டைப்பூச்சியை நசுக்க ராணுவம் என்பதெல்லாம் தேவையில்லை. சின்ன விசயத்தை வைத்து ரகுவரனை காலிசெய்துவிடலாம் என்று காட்சி அமைந்ததால் ரசிகனும் திருப்தியாகி விட்டான் என்று சொல்லத் தோன்றுகிறது.

1994ன் இறுதியில் வெளிவந்த படம் புதிய மன்னர்கள். இப்போதும் பொதிகை, மெகா மற்றும் பல தொ(ல்)லைக்காட்சிகளிலும் இந்தப் படம் அவ்வப்போது ஒளிபரப்பாகிறது. படம் வந்தபோது மட்டுமல்ல இப்போதும் தொலைக்காட்சிகளில் படத்தைப் பார்த்த யாரும் படம் நல்லாயில்லை என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனாலும் படம் ஓடவில்லை. இப்படியும் சில படங்களுக்கு பரிதாப ரிசல்ட் கிடைக்கும்.

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கருத்தை முன்வைத்து நாடோடிகள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தக் கதை யாருடை மனதிலும் சொந்தக்கற்பனையாக உருவான கதையோ, அல்லது தழுவல், உருவலோ என்று நான் வாதிடவில்லை. ஆனால் அந்தப் படத்தை நான் முதன்முதலில் பார்த்ததும் 2000 அல்லது 2001ஆக இருக்கலாம். கல்கி வார இதழ் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தொலைந்தகாலம் என்ற சிறுகதைதான் என் நினைவுக்கு வந்தது.

ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதி இரண்டாம்பரிசு ரூ.7,500 பரிசு பெற்றதுடன் அதை எழுதிய எழுத்தாளர் 35 வயதுக்குட்பட்டவர் என்பதற்காக கூடுதலாக 500 ரூபாயும் பரிசு பெற்ற கதை அது.

நண்பனின் காதலுக்கு உதவப்போய் நண்பன் காதலியின் அப்பாவையோ அண்ணனையோ தவறுதலாக கொலைசெய்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வருவான். ஆனால் நண்பனின் பணக்கார மனைவி வசதி வாய்ப்பில்லாத சூழ்நிலையில் வாழ விருப்பமின்றி அவனை விட்டு பிரிந்து சென்றிருப்பாள். வாரத்தில் இரண்டுநாட்கள் குழந்தையை பார்க்கலாம் என்ற அளவில் விவாகரத்து வழக்கு தீர்ப்பாகி இருக்கும்.

நண்பனின் அரைவேக்காட்டு காதலுக்காக தன் இளமைக்காலம், தன் சகோதரியின் நின்றுபோன திருமணம் என்று பல இழப்புகளை தந்துச் சென்ற தொலைந்த காலத்தை நினைத்து அந்த கதாபாத்திரம் வருந்துவதாக கதை முடியும்.

பொதுவாக சிறுகதைகள், நாவல்களை படமாக்குவதில் பல சிரமங்கள் உண்டு. கதாசிரியரை திருப்திபடுத்த நினைத்தால் ஆடியன்ஸ் எஸ்கேப்பாகிவிடுவார்கள். அதற்காக கதையின் மையக்கருவையே சிதைத்து சின்னாபின்னமாக்கி கதை அல்லது நாவலின் பெயரைக்கெடுக்கும் காரியங்களையும் பல இயக்குனர்கள் செய்ததுண்டு. ஆனால் நாடோடிகள் படத்துக்கு அமைக்கப்பட்ட திரைக்கதை ரசிகர்களைக் கட்டிப்போட்டதன் காரணமாக பெரிய வெற்றி பெற்றது.

கல்கியில் வெளிவந்த சிறுகதையை ஒருபாராவில் சொன்னாலும் முழுக்கதையும் புரிந்துவிடுகிறது. இந்த கதைக்கரு இரண்டரை மணி நேரப்படமாக வந்தபோதும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தது.
திகில், முழு நீளக்காமெடி படங்கள் சில நேரங்களில் விதிவிலக்காகிவிடும். ராஜேஷ் இயக்கிய மூன்று படங்களில் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் மட்டும் லேசாக கதை இருந்தது மாதிரி (அது எங்க சார் இருந்தது. நானே கதை இல்லைன்னு ஒத்துகிட்டேன் அப்படின்னு இயக்குனர் ராஜேஷ் சொல்லலாம்.) எனக்கு தெரிந்தது. காமெடி என்ற பெயரில் மொக்கை ஜோக் சிலவற்றை வைத்து படத்தை முடிக்காமல் காட்சி அமைப்புகளே சிரிப்பை வரவழைத்ததும், சந்தானத்தின் முகபாவனைகளும் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அத்துடன் பாடல்களும் நயன்தாராவும் பக்கபலமாக இருந்தனர்.

முனி பார்ட் 1-ஐ விட காஞ்சனா (முனி பார்ட் 2)  அதிரடி வெற்றி. அதற்கு முக்கிய காரணம் திகில் சமாச்சாரத்துடன் காமெடியைக் கலந்ததுதான். இதையயல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு விசயம் மட்டும் ஓரளவு விளங்குகிறது. கருத்து சொல்லு, சொல்லாம போ... பாடல்கள் ஓரளவு கேட்கும்போதே தாளம் போடச்செய்வதாக இருக்க வேண்டும். சிரிப்புக்கு உத்திரவாதம் தரவேண்டும். அதனால் வயிற்று வலி என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் ரசிகர்களில் பெரும்பாலனவர்கள் இருக்கிறார்கள்.

திருவாரூர் பாபுவும் காமெடிக்கு என்று குண்டு ஆர்த்தி, சத்யன், விவேக்கின் தனி காமெடி டிராக் என்று பயன்படுத்தி காட்சிகள் அமைத்திருந்தார். அத்துடன் பாடல்களும் நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும் வெற்றிக்கனியைப் பறிப்பதைத் தடுக்கும் வில்லனாக சரியான நேரத்தில் படம் ரிலீசாகாதது அமைந்துவிட்டது.

அவருடைய பேட்டி தினகரன் வெள்ளி மலரில் 5-4-2013 பிரசுரமாகியுள்ளது.
Page 1
Page 2

தில், கில்லி உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான கோபிநாத் தயாரித்து ஒளிப்பதிவு செய்யும் படமாக தேரடிவீதி திருக்கண்ணபுரம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இது திருவாரூர் பாபுவின் இரண்டாவது படம். இந்தப்படத்தில் அவருக்கு எல்லாவிசயமும் கூடி வந்து வெற்றி தேவதை அவரது படத்தை முத்தமிடவேண்டும் என்று என்னுடைய மானசீக குருவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.














10 ஏப்ரல் 2013 ஆனந்த விகடன் இதழில் திருவாரூர் பாபு எழுதிய கதையின் சில பாராக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.


-----------------------------------------------------

யாருக்கும் சொல்ல வழி இல்லை. போலீஸ் எப்பவும் கண்காணிச்சுக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு உணர்வு. செல்போன்கூட வெச்சுக்கலை. உன்னைக் கண்காணிச்சுட்டு இருப்பாங்களோ... என்னால கஷ்டப்படுவியோனு நெனப்பு. அதான் உனக் குக்கூடச் சொல்லாம... எல்லாம் நாசமாப்போச்சுடா.
நான் காணாப் போனதும் உன்னையும் ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வெச்சு விசாரிச்சதா கேள்விப்பட்டேன்... அழுதேன். எனக்கு வேற வழி தெரியலடா. என்னை மன்னிச்சிரு... உன்னைப் பார்க்கணும்... உன்கூடப் பேசணும்னு துடிச்சிருக்கேன். ஆனா, பொண்டாட்டி குழந்தைகளோடு இருக்கற உனக்கு, என்னால சங்கடம் வந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதனாலதான் இத்தனை வருஷமா உன்னைத் தவிர்த்தேன்!''

வேட்டியால் முகம் துடைத்துக்கொண்டான். 20 வருட சோகத்தை, ஆற்றாமையைத் தன்முன்னே இறக்கிவைக்கிறான் என்பது பரமேஸுக்குப் புரிந்தது . 

''ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா அகால மரணம் அடைந்தார். இந்த போட்டோவ பெரிசா வெச்சு நான் பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் போட்டு, போட்டோ பின்னால  எழுதியிருக்கேன். நாற்பத்துச் சொச்சம் வயசுல நான் செத்துப் போனதை இந்த ஊருக்குச் சொல்லணும்டா. பழைய போட்டோவைப் போட்டாதான் என்னை அடையாளம் தெரியும். ஆயிரம் போஸ்டர் அடிச்சு தெருத் தெருவா ஊர்ல உள்ள அத்தினி சுவத்துலயும் ஒட்டு. என்கிட்ட ஏமாந்தவன், நான் ஏமாத்தினவன் எல்லாம் போஸ்டரைப் பார்த்து 'தொலைஞ்சான்’னு ஒரு பெருமூச்சுவிடுவான். அதுதான் என் ஆத்மா சாந்தி அடையறதுக்கான மந்திர வார்த்தை. எனக்காக இதைச் செய்வியா? என்னோட கடைசி ஆசைடா...''

திங்கள், 1 ஏப்ரல், 2013

கந்தா - பவர் ஃபுல் டைட்டில் - திருவாரூர் பாபு ஜெயித்தாரா?



விமர்சனம் எழுதுவதற்கு முன்பு படத்தின் இயக்குனர் ஒரே ஊர்க்காரர் என்ற பாசத்தில் என்னுடைய எண்ணங்களை சில பாராக்கள் எழுதிவிட்டு பதிவின் இறுதியில் விமர்சனம்.






திருவாரூர் பாபு என்ற பெயரில் சுமார் ஆயிரம் சிறுகதை எழுதியவர்தான் பாபு கே.விஸ்வநாத் என்ற நாமகரணத்துடன் கந்தா படத்தை இயக்கியிருக்கிறார் - இந்த செய்தியை இணையத்தில் உலவும் பலரும் அறிந்திருப்பார்கள். அவருடைய கதைகளில் பெரும்பாலானவை காந்திய சிந்தனையோடும், சமூக அக்கறையோடும் எழுதப்பட்டிருக்கும். அதனால் படத்திலும் நல்ல செய்தி சொல்லியிருப்பார் என்று பலரும் கணித்திருந்தார்கள். எனக்கு அந்த எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது. காரணம், திருவாரூர் பாபு (எ) பாபு

கே.விஸ்வநாத் அவர்களை இதுநாள் வரை நான் நேரில் பார்த்ததே கிடையாது. ஆனால் பாபுவின் தந்தை காந்தியவாதி அமரர் இரா.விஸ்வநாதனிடம் என் தந்தை நெருங்கிப்பழகியிருக்கிறார். அந்த பழக்கத்தில் பாபுவின் சகோதரர்கள், காலம் சென்ற அவரது தந்தையிடம் நான் பேசியிருக்கிறேன்




சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதரின் வாரிசு, கதைகளில் சமூக அக்கறையை காட்டுபவர் படத்திலும் அப்படியே முயற்சித்திருப்பார் என்று நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. ஒரு மனிதனுக்கு பெற்றோரும், ஆசிரியரும் சரியாக அமைந்தால் தவறு செய்யும் ஒருசில அரசியல் வியாதிகள் பின்னால் அரிவாளை தூக்கிச்செல்ல யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை மறைமுகமாக வலியுறுத்துவதுதான் படத்தின் கதைக்கரு.



என்னுடைய 15 வயதிலேயே திரையரங்கில் சினிமா புரொஜக்டரை இயக்கிய காரணத்தால் சிறுவனாக இருந்தபோது படங்களின் மீது எனக்கு இருந்த ஆர்வம் இப்போது இல்லை. கல்லூரியில் நுழையும் முன்பே நூலகத்திற்குள் ஆழமாக நுழைந்து விட்டதால் புத்தகங்கள் என் நேரத்தில் கணிசமான அளவை ஆக்ரமித்துக்கொண்டன. அது தவிர கடந்த இரண்டு வருட காலமாக தமிழகத்தில் பாவப்பட்ட பகுதிகளாக இருக்கும் சென்னை தவிர்த்த நகரங்களில், கிராமங்களில் மின் வெட்டு எல்லாருடைய பிழைப்பிற்கும் பெரும் வேட்டு வைத்துவிட்டதால் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்ட கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாகி விட்டதால் திரையரங்கில் மட்டுமல்ல கேபிள் டிவி கூட பார்ப்பதற்கு நேரமிருப்பதில்லை. (மின்சாரம் இருக்கும் நேரத்தில் கணிணியில் பிழைப்பை பார்க்க வேண்டுமே)



29.03.2013 அன்று புனித வெள்ளி என்பதால் நீதிமன்றங்களுக்கு விடுமுறை. என்னிடம் ஆவணங்கள் டைப் செய்ய வரும் வழக்கறிஞர்கள் அன்று வரமாட்டார்கள் என்பதால் காலை 10.30 மணிக்கு தீர்மானித்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்கு பிறகு திருவாரூர் தைலம்மை திரையரங்கில் கடந்த வெள்ளியன்று கந்தா படம் பார்க்க சென்றேன்.



திருவாரூர் பாபுவின் பால்யகால நண்பர்கள் இணைந்து தியேட்டரில் மூன்று பிளக்ஸ் வைத்திருந்தார்கள். எனக்கு அன்று காலை போஸ்டர் பார்த்துதான் படம் ரிலீசானதே தெரியும். மூன்று முறை நாளிதழ்களில் விளம்பரம் வந்து படம் வரவில்லை. இந்த முறை படம் தியேட்டருக்கு வந்துவிட்டது. ஆனால் விளம்பரம் இல்லை. - இது படத்தின் இயக்குனர் எங்களிடம் சொன்னது.



1994ஆம் ஆண்டு நான் 7ஆம் வகுப்பு படித்தபோது ராணி வார இதழில் திருவாரூர் பாபு எழுதிய ஒரு பக்க கதை ஒன்றை எதேச்சையாக படித்தேன். அப்போதுதான் என் மனதுக்குள் நானும் கதை எழுத வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அப்புறம் நாலைந்து ஆண்டுகள் அவ்வப்போது எதையாவது எழுத நினைத்து இரண்டு வரி கூட எழுத முடியாமல் திண்டாடி விட்டுவிட்டேன்.



பிறகு மீண்டும் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி ஆண்டு மலரில் எழுத முயற்சித்தபோதுதான் இரண்டு பக்க கதை (கதை மாதிரி) ஒன்று வெளிவந்தது. அந்த கதையை இப்போது படித்துப்பார்த்தால் எனக்கே என் மீது கோபம் வருகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் அந்த கதைக்கு செம ரெஸ்பான்ஸ். இதில் தமிழ்த்துறை பேராசிரியர் வேறு என்னிடம், ""எந்த வேலை பார்த்தாலும் எழுதுறதை விட்டுடாத...நிறைய பேர் எதையாவது காப்பியடிச்சு எழுதி கொடுத்துடுறாங்க. ஆனா நீ சொந்தமா முயற்சி செஞ்சிருக்குறது தெரியுது'' என்று உற்சாகப்படுத்தினார்.



ஆனாலும் வெளி பத்திரிகைகளில் நான் அனுப்பிய ஒரு கதை கூட பிரசுரம் ஆகவில்லை. அப்போதுதான் நான் மானசீக குருவாக நினைக்கும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தை மதி நிலையத்துக்கு கடிதம் எழுதி வி.பி.பியில் வாங்கி படித்துப் பார்த்தேன். உத்திகள் பிடிபட்டன. இப்போது பல போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளையும், சில கோயில் வரலாறு குறித்த தகவல் கட்டுரைகளையும் பிசிறின்றி, பத்திரிகையின் எடிட்டர்கள் கை வைக்காத அளவில் எழுதி அவை பிரசுரமாகியுள்ளன.



கந்தா விமர்சனம் என்று சொல்லிவிட்டு சொந்தக்கதை நோக்கி பதிவு டிராவல் செய்யுறது எனக்கும் புரியுது. ஆனால் கந்தா படத்தின் கதைக்கரு ஆசிரியர் மாணவன் உறவைப்பற்றியது என்பதால் இதையும் சொல்ல நினைத்தேன். நமக்கு ஆசிரியர் என்றால் பள்ளி, கல்லூரியில் பாடம் நடத்தியவர் மட்டுமல்ல. மழலை மொழி பேசத்தொடங்கிய காலத்தில் முதல் ஆசானாக விளங்கும் தாயும் ஆசிரியர்தான். சில நல்ல (பல கெட்ட) பழக்கங்களை நாம் தெரிந்து கொள்ள காரணமாக இருக்கும் தந்தையும் ஆசிரியர்தான். எவ்வளவோ புத்தகங்கள் படிக்கிறோம். அவற்றில் சில வரிகள் பலரது வாழ்க்கைப்பாதையையே மாற்றியிருக்கும். அந்த நூல் அல்லது கட்டுரையை எழுதியவரும் நமக்கு ஆசிரியர்தான்.



அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஜே.ஜே. ஆகியவை பாபு உதவி இயக்குனராக பணியாற்றிய படங்கள். கந்தா படத்தின் டைட்டிலில் குரு வணக்கம் என்று இயக்குனர் சரண் பெயரைப் போட்டார்.



நான் படம் பார்க்க சென்றபோது படத்தின் இயக்குனரை அங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. (நமக்கு டைம் எப்பவுமே இப்படித்தான் ஒர்க்அவுட் ஆகும். ஒரு விசயத்தை எதிர்பார்த்து போனா அதற்கு நேர் எதிரா நானே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மெகா சைஸ் ஆப்பு ரெடியா இருக்கும். ஒரு படத்துல சார்லி சாப்ளின் ரொம்ப பந்தாவா பீரங்கியை வெடிக்க வைக்கும்போது அந்த குண்டு வெடிக்காம பீரங்கியோட காலடியிலேயே விழுமே அப்படித்தான்)



முதலில் அவரிடம் பேசும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ப்ளாக்ஸ்பாட்டில் கந்தா படத்தைப் பற்றி எழுதியதையும் அவரது சில சிறுகதைகளைப் பற்றி மட்டும் பேசினேன். பிறகு படத்தின் இடைவேளையின்போது என்னுடைய தந்தையின் பெயரைக் கூறினேன். அதை முதல்லேயே சொல்றது இல்லையா?...என்று கேட்டதுடன், இப்போ அப்பா எங்க இருக்கார், நீ என்ன பண்ற என்று விசாரித்தார்.



2006ஆம் ஆண்டு எடிட்டிங் தொழில்நுட்பக் கருவிகளை எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. அப்போது அர்ஜூனின் வாத்தியார், விஜயகாந்தின் தர்மபுரி, சிம்புவின் வல்லவன், சரத்குமாரின் தலைமகன் என்று பல படக்குழுவினரை எடிட்டிங் அறையில் சந்தித்தாலும் யாருடனும் பேசியதில்லை. இப்போது படத்தின் இயக்குனரிடம் நேரில் பேசியதில் மனதுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பல நேரங்கள்ல படத்தையும் படம் எடுத்தவங்களையும் திட்டுனாலும் இதுதான் மனிதனின் ஒரிஜினல் பிம்பமா இருக்குமோ?



எனக்குத் தெரிந்து திருவாரூரைச் சுற்றி உள்ள பகுதிகளில் பலர் சினிமாவில் ஜெயித்திருந்தாலும் திருவாரூர் நகரிலிருந்து ஒருவர் இயக்குனராக ஜெயித்திருப்பது முதல் முறை என்பதால் பாபு கே.விஸ்வநாத் அவர்களுக்கு எங்கள் ஊர் மக்கள் சார்பில் பாராட்டு.



இனி விமர்சனம்:



(இயக்குனர் எங்க ஊர்க்காரரானதால என்னால படத்தை அடிச்சு துவைச்சு காயப்போட முடியாது. ஆனாலும் மிகச் சில தியேட்டர்களில் மட்டுமே ரிலீசானதாலும், சேட்டை படம் ரிலீசாகும்போது இந்த எண்ணிக்கையும் குறையும் என்பதாலும் விமர்சனத்துல அடக்கி வாசிக்கிறேன்.)



மலேசியாவுல வேலை பார்க்குற கரண், தன் நண்பனோட அம்மா தனக்கும் பொண்ணு பார்த்து வெச்சிருக்காங்கன்னதும் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வர்றார். வந்து இறங்குனதும் வழக்கமான தமிழ்சினிமா பாணியில ஒரு ஓப்பனிங் சாங்.





ஹீரோயின் மித்ராவை (அறிமுகம் இந்த படத்துலதான்னு சொல்ல ஆசை. ஆனா காவலன் படத்தை ரெண்டு வருசத்துக்கு முன்னாலேயே ரிலீஸ் பண்ணிட்டாங்களே.) கரண் சந்திக்கும்போதெல்லாம் அவங்க ஏதாவது வழிப்பறி செய்துகிட்டே இருக்காங்க. ஆனா அது எல்லாமே நல்ல நோக்கத்துக்காகன்னு அதுக்கப்புறம் உள்ள காட்சிகள் மூலம் புரிய வெச்சிடுறார். (இயக்குனர் சிறுகதை எழுத்தாளராச்சே)



வீட்டுல பார்த்த பொண்ணும் அந்த பொண்ணும் அதேதான்னு தெரிய வந்தததும் காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் காட்சியை துணைக்கு வெச்சு காமெடி வரவழைக்க முயற்சி செஞ்சு கரணுக்கும் மித்ராவுக்கும் திருமணம் முடிவாயிடுது. இதுக்கு நடுவுல தஞ்சாவூர்ல அடிக்கடி வெட்டு குத்து, கொலை, விவேக் காமெடி டிராக். இடைவேளைக்கு பத்து நிமிடம் முன்பு வரை இதுதான் கதை.



கரண் தன்னோட திருமணம் தன்னை ஆளாக்கிய ஆசிரியர் தலைமையிலதான் நடக்கணும்னு அவரைத் தேடி அலையுறார். அவரைக் கண்டுபிடிக்கிறப்ப அந்த ஆசிரியரை (ராஜேஷ்) ரவுடி கும்பல் கொலை செய்ய துரத்துது. அந்த ரவுடிகளை அடிச்சு துவம்சம் செய்து ஆசிரியரை ஆஸ்பத்திரியில சேர்க்கும்போது கதையில பரபரப்பு. அத்தோட இடைவேளை.



தஞ்சாவூரையே ரணகளமாக்கி வைத்திருக்கும் ரவுடியாருன்னா, கரணுக்கு வழிகாட்டிய ஆசிரியரின் மகன்தான்ன்னு தெரியுது. தனக்கு நல்ல வழி காட்டிய ஆசிரியரோட மகனை போலீசில் பிடிச்சுக்கொடுத்தாரா இல்லை தப்பிக்க விட்டாரான்னுதான் இடைவேளைக்கு அப்புறம் சொல்லியிருக்காங்க.



இடைவேளை ப்ளாக்ல அந்த சண்டைக்காட்சியும், பிற்பகுதியில போலீஸ் என்கவுண்டர் காட்சிகளையும் படமாக்கியிருக்குற விதம் ஓரளவு பெரிய பட்ஜெட் படங்கள் மாதிரி தெரியுது.



கிளைமேக்ஸ்ல வில்லனுக்கு காந்தி வேசம் போட்டதும் போலீஸ் சுடமாட்டாங்கன்னு காட்சி அமைத்திருப்பது நாடகத்தனமா இருக்குன்னு பலரும் விமர்சனம் செய்யுறாங்க. தசாவதாரத்துல கமல் , நான் என்ன கடவுள் இல்லைன்னா சொன்னேன்? இருந்தா நல்லாயிருக்கும்னுதானே சொன்னேன்னு வசனம் சொல்லுவாரே, அது மாதிரி சுதந்திர தினம் அதுவுமா காந்தி வேசத்துல இருக்குறவங்களை போலீசார் கொல்ல தயங்குவாங்கன்னுதான் காட்டியிருக்காங்க. ஆனா காந்தி வேடத்தில் இருக்கும் வில்லனை இப்படி கெட்டவனா வளர்த்த மாமாவே (காதல் தண்டபாணி) சுட்டுக்கொன்னுடுறதா கொஞ்சம் லாஜிக்கோட காட்சி அமைஞ்சிருக்கு.



விவேக்கோட காமெடி டிராக் தனியா இருக்குன்னு ஆரம்ப காட்சியிலேயே டீகடையில விவேக்கும், கரணும் சந்தித்து, நீ உன் டிராக்குல போ, நான் என் டிராக்குல போறேன்னு வசனம் வெச்சு அங்கங்க லாஜிக் ஓட்டையை அடைக்க பார்த்துருக்காங்க.



காந்தி வேசம் போட்டா எப்படிப்பட்ட கொடூர மனம் படைத்தவனுக்கும் குற்ற உணர்வு ஏற்பட்டு தன் தப்பை உணர ஆரம்பிச்சிடுவான் என்பது என்னுடைய கருத்து. பல பேர் முரண்பட்ட கருத்துக்களை சொன்னாலும் காந்தியின் உருவத்தை பார்க்குறவங்க மனசுல அந்த ஒரு நொடியாச்சும் அகிம்சை எண்ணம் ஏற்படும். (ரூபாய் நோட்டுல உள்ள காந்தியை சொல்லலை).



வில்லன் காந்தி வேடத்துல காரை விட்டு இறங்கி கம்பு ஊன்றி நடக்கும்போது இடைச்செருகலா அதே வில்லன் ஜீன்ஸ் பேண்ட், ஷூ போட்டு அதே கையில அரிவாளோட நடக்குறதை காட்டியிருப்பது நல்ல காட்சி.



மொத்தத்துல என்னுடைய பார்வையில படம் சமூக அக்கறையோடதான் வந்திருக்கு. மைனஸ் என்னன்னா ஆறுன கஞ்சி பழங்கஞ்சியானதுதான் பிரச்சனை. நான்கு ஆண்டுகால தாமதமா படம் வந்திருப்பதுதான் ஏதோ ஒரு குறை இருப்பது போல தெரியுது. அது மட்டுமில்லாம இடைவேளைக்கு முன்னால பல காட்சிகள் ஏதோ கட் ஷாட்டா ஜம்ப் ஆகி போற மாதிரி இருக்கு. சின்ன சின்ன காட்சிகளையும் ஒரு லாஜிக்கோட அமைக்க முயற்சி செய்திருப்பதும் இதுக்கு காரணமா இருக்கலாம்.



நானும் தங்கர்பச்சானின் உதவியாளர் இயக்கிய ஒரு குறும்படத்துல உதவி இயக்குனரா இருந்திருக்கேன். மூணு நாள் படப்பிடிப்பு, 21 காட்சிகள் அப்படின்னு திட்டமிட்டோம். அதுக்கே பல காரணங்களால ஏகப்பட்ட காம்ரமைஸ். முழு நீளப்படம்னா குறைந்தது 60 காட்சிகள், நடிகர் நடிகைகள் கால்Uட், கோடிக்கணக்கில் செலவு என்னும் போது எவ்வளவு விசயத்தில் இயக்குனரின் கை கட்டப்பட்டது என்று தெரியவில்லை.



பல தடைகளை தாண்டி வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில் ஆசிரியர், பெற்றோர் சரியாமல் அமையாமல் போவதுதான் சமூக விரோதிகள் உருவாக முதல் காரணம் என்று சொல்ல முயற்சித்திருப்பதை பாராட்டலாம்.



எனக்கு ஒரு வகையில் மானசீக குருவாக இருக்கும் திருவாரூர் பாபு அவர்களின் படத்தில் எனக்கு நல்ல அம்சங்கள் மட்டும்தான் தெரிந்தன. குறைகள் தென்பட்டாலும் அவற்றை எழுத முயற்சிக்கவில்லை. ஏனெனில் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களை நியாயப்படுத்தி படம் எடுக்காமல் நேர்மையாக ஒரு படத்தை தர முயற்சித்திருக்கும் எங்கள் ஊர் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.