Search This Blog

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூபம் - தியேட்டர்களில் பாதுகாப்பு எப்படி?







திருவாரூர் நடேஷ் திரையரங்கில் விஸ்வரூபம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி ரிலீசை முன்வைத்து சுமார்40 அடி உயர பேனர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டது. பிறகு அரசின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக அந்த பேனரை உடனடியாக அகற்றி தியேட்டர் வளாகத்துக்குள் வைத்துவிட்டார்கள். ஆனால் படம் ரிலீஸ் என்றதும் பேனர் தியேட்டர் வாசலுக்கு வந்துவிட்டது.







இன்று(30-1-2013) காலை 9 மணி முதலே கமல் ரசிகர்கள் பேண்ட் வாத்தியம், பட்டாசு, இனிப்பு என்று கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தியேட்டர் வளாகத்துக்குள் மட்டும்தான் வெடி வெடிக்கவும், இனிப்பு வழங்கவும் போலீசார் அனுமதித்தனர். இது ஒரு வகையில் நல்லதுதான். சாதாரண அகலமுள்ள சாலையில் ரசிகர்கள் கூட்டம் போட்டால் போக்குவரத்து பாதிக்கும். எந்த படத்தையும் விரும்பாமல் அன்றைய பிழைப்பை ஓட்டினால் போதும் என்ற மனநிலையில் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்களுக்கு இடையூறு தராத வகையில் ரசிகர்களை ஒழுங்குபடுத்தியதுடன் தியேட்டரிலும் எந்த விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாத வண்ணம் போலீசார் பாதுகாப்பை கடுமையாக்கியிருப்பதை பாராட்டலாம்.





இந்த சின்ன ஊரிலேயே இப்படி என்றால் பெரிய நகரங்களில் மிகக் கடுமையாக போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. விஸ்வரூபம்னு பதிவுக்கு தலைப்பு வெச்சிட்டு வழவழன்னு எழுதியிருக்கேன்னு நினைக்காதீங்க. இப்போவெல்லாம் பெரிய பெரிய ஆளுங்களே பொதுவெளியில வாயைத்திறக்க முடியலை. நான் எதையாச்சும் சொல்ல... பின்விளைவுகளை சந்திக்க என்னால முடியாதுங்கய்யா...









பின் குறிப்பு: இன்று 30-1-2013 பகல் 1.30 நிலவரப்படி திருவாரூரில்விஸ்வரூபம்திரையிடப்படவில்லை.

 


விஸ்வரூபம் - தியேட்டர்களில் பாதுகாப்பு எப்படி?

திருவாரூர் நடேஷ் திரையரங்கில் விஸ்வரூபம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி ரிலீசை முன்வைத்து சுமார்40 அடி உயர பேனர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டது. பிறகு அரசின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக அந்த பேனரை உடனடியாக அகற்றி தியேட்டர் வளாகத்துக்குள் வைத்துவிட்டார்கள். ஆனால் படம் ரிலீஸ் என்றதும் பேனர் தியேட்டர் வாசலுக்கு வந்துவிட்டது.

இன்று(30-1-2013) காலை 9 மணி முதலே கமல் ரசிகர்கள் பேண்ட் வாத்தியம், பட்டாசு, இனிப்பு என்று கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தியேட்டர் வளாகத்துக்குள் மட்டும்தான் வெடி வெடிக்கவும், இனிப்பு வழங்கவும் போலீசார் அனுமதித்தனர். இது ஒரு வகையில் நல்லதுதான். சாதாரண அகலமுள்ள சாலையில் ரசிகர்கள் கூட்டம் போட்டால் போக்குவரத்து பாதிக்கும். எந்த படத்தையும் விரும்பாமல் அன்றைய பிழைப்பை ஓட்டினால் போதும் என்ற மனநிலையில் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்களுக்கு இடையூறு தராத வகையில் ரசிகர்களை ஒழுங்குபடுத்தியதுடன் தியேட்டரிலும் எந்த விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாத வண்ணம் போலீசார் பாதுகாப்பை கடுமையாக்கியிருப்பதை பாராட்டலாம்.

இந்த சின்ன ஊரிலேயே இப்படி என்றால் பெரிய நகரங்களில் மிகக் கடுமையாக போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. விஸ்வரூபம்னு பதிவுக்கு தலைப்பு வெச்சிட்டு வழவழன்னு எழுதியிருக்கேன்னு நினைக்காதீங்க. இப்போவெல்லாம் பெரிய பெரிய ஆளுங்களே பொதுவெளியில வாயைத்திறக்க முடியலை. நான் எதையாச்சும் சொல்ல... பின்விளைவுகளை சந்திக்க என்னால முடியாதுங்கய்யா...



பின் குறிப்பு: இன்று30-1-2013 பகல் 1.30 நிலவரப்படிதிருவாரூரில்விஸ்வரூபம்திரையிடப்படவில்லை.
 

புதன், 12 டிசம்பர், 2012

விஸ்வரூபம் - கமலின் வியாபார உத்தி சரியா?


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவு வீடுகளில் தொ(ல்)லைக்காட்சிகளும் கிடையாது. டிவிடி பிளேயரும் கிடையாது. மக்களுக்கு பொழுது போக்கு என்றால் பெரும்பாலும் சினிமா தியேட்டராகத்தான் இருந்தது. அதை விட முக்கியமான விசயம், அதிகாலையில் இருந்து இரவு வரை மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் போக்கு அப்போது இந்த அளவுக்கு இல்லை.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். வேலை செய்யும் இடம், பணி செய்யும் இடத்திற்கும் குடியிருக்கும் இடத்திற்கும் உள்ள தூரம் போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஆற அமர தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அளவுக்கு நேரம் ஒதுங்குவது இல்லை.

பெரும்பாலும் காதலர்களையும் மாணவர் உலகத்தை மட்டுமே தியேட்டர்கள் நம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தனது படத்தை பார்க்கும் நபர்களிடம் ஓரளவுக்காவது சிந்தாமல் சிதறாமல் பணத்தை வசூல் செய்ய வேண்டுமே என்ற நோக்கத்தில்தான் விஸ்வரூபம் படத்தை தொலைக்காட்சியிலும் ரிலீஸ் செய்ய கமல் முடிவு செய்துள்ளார்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதனால் நன்மை, தீமை கலந்துதான் இருக்கும். அதில் உள்ள தீமைகளின் பாதிப்பை எந்த அளவுக்கு குறைக்க வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அந்த முறை ஒத்துவராது என்று மறுத்துவிடுவது பிற்காலத்தில் கிடைக்கும் நன்மைகளையும் புறந்தள்ளியதற்கு சமமாகும்.

நான்குவழிச்சாலைகளை அமைத்துவிட்டு டோல் கேட் அமைத்து வசூலிப்பவர்களிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, சுங்கம் வசூலிக்கும் இடத்தில் அவர்கள் அனுமதி இன்றி ஒரு சைக்கிள் கூட கடந்து செல்ல முடியாத அளவுக்கு கட்டமைப்பு இருக்கும். அதாவது அந்த சாலையில் செல்பவர்களிடம் சிந்தாமல் சிதறாமல் பணம் வசூலிக்கும் முறையை அப்படியே படம் பார்ப்பவர்களிடம் செயல்படுத்த முடியாது. ஆனால் பல தியேட்டர்களில் இருக்கும் பகல் கொள்ளை கட்டணம் ( பார்க்கிங் முதல் கேண்டீன் வரை), நேரமின்மை போன்ற காரணங்களால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வீட்டிலேயே அந்த படத்தை பார்த்துவிடுகிறார்கள். அவர்களிடம் ஓரளவாவது கட்டணம் பெற்று படம் பார்க்க வைப்பதை வருங்காலத்தில் முறைப்படுத்தி செய்தால்தான் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்.

பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஒரு சில சிரமங்களை அனுபவித்தாலும் அவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. ஆனால் நல்ல கதையுடன் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து 10 தியேட்டர் கூட கிடைக்காமல் அதில் 20 காட்சிகள் திரையிடுவதற்குள் அடுத்த படத்திற்காக தூக்கப்பட்டுவிடும். படம் பார்க்கலாம் என்று நினைத்து தியேட்டருக்கு சாமானிய ரசிகன் கிளம்பும் வரை படம் காத்திருப்பதில்லை. அதற்கெல்லாம் டிவியில் திரையிட்டு ரசிகர்களிடம் நேரடியாக வசூலிக்கும் முறை ஓரளவாவது தீர்வு தரும் என்று நினைக்கிறேன்.

16 ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரில் பணியாற்றிய அனுபவத்தில் என் மனதில் தோன்றிய சில விசயங்கள்:

1. அப்போதெல்லாம் எந்த படம் திரையிடப்பட்டாலும் சுமாரான படங்கள் கூட 10 நாளைக் கடந்துவிடும். தோல்வி அடைந்த படங்கள் கூட 14 நாட்கள் ஓடி தியேட்டர்களுக்கு கொஞ்சமாவது லாபம் சம்பாதித்து கொடுத்துக்கொண்டிருந்தன.

2. இதில் நான் கவனித்த இன்னொரு விசயம், மூன்று வாரங்கள் வரை படம் ஓடும்போது, கடைத்தெரு, மார்க்கெட், சுமைதூக்கும் தொழிலாளர்கள் போன்றவர்கள் திரும்ப திரும்ப இரவுக்காட்சிகளுக்கு வருவதை பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு பாடல்கள், சில நகைச்சுவைக்காட்சிகளுக்காக இதுபோன்ற ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்கள். இப்போது அதற்கெல்லாம் வேலையில்லை. ஏனென்றால் இசையருவி, சிரிப்பொலி போன்ற சேனல்களும், உள்ளூர் சேனல்களும் பாடல்கள், நகைச்சுவையை மக்களுக்கு கொடுக்கும் வேலையை பார்த்துக்கொள்கின்றன.

3. அப்படி ரிப்பீட் ஆடியன்ஸ் வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம், கட்டணம். அப்போது எட்டு ரூபாய், பத்து ரூபாய், அதிகபட்சம் 15 ரூபாய் என்றுதான் கட்டணம் இருந்தது. ஆனால் சிறு நகரங்களிலேயே இப்போது குறைந்தபட்சம் 60 ரூபாய். படம் ரிலீசாகும் நாட்களில் 100 முதல் 150 ரூபாய் வரை. கட்டண உயர்வைப் போலவே தியேட்டர்களில் மூட்டைப்பூச்சி, கொசுக்கடி என்று ரசிகர்களை இம்சைப்படுத்தும் விசயங்களும் அதிகரித்துவிட்டன. (கொசுக்கடியே தேவலாம் என்று நினைக்கும் அளவுக்கு சில படங்கள் இருக்கும்.அதைப் பற்றி பிறகு பேசுவோம்)

4. இப்போதும் 30 ரூபாய் என்ற அளவில் கட்டணம் இருந்தால் சாதாரண படங்களுக்கு கூட கூட்டம் வர வாய்ப்பு உண்டு. அதெல்லாம் வர மாட்டாங்க. எப்படி இருந்தாலும் வீட்டில் டிவிடி போட்டுதான் பார்ப்பாங்க என்று சிலர் சொல்லக்கூடும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திருட்டு டிவிடி விற்கும் இடத்தில் ஒரிஜினல் டிவிடியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை செய்யவில்லை என்றால் நஷ்டம் படம் பார்க்கும் மக்களுக்கு இல்லை.

5. திருட்டு டிவிடியை சுத்தமாக ஒழித்து விட்டாலும், அதனால் தியேட்டருக்கு கூட்டம் திருவிழா போல் வந்து விடுமா என்று கேட்டால் அதற்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் மக்களின் சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, குடிநீர் போல் சினிமா இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை எல்லாம் இல்லை.

6. டிவிடி கிடைக்கவில்லை என்றால் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று (என்ன, 2 மணி நேரப்படம் விளம்பரங்களுடன் 5 மணி நேரம் ஒளிபரப்பாகும்) மற்ற வேலைகளைப் பார்க்க போய்விடுவார்கள். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வேலை முடித்து வந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவுக்கு மக்களின் வேலைநேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை.

7. இன்னொரு காரணம், பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை, கதையில் லாஜிக் இல்லை என்று ஏகப்பட்ட இல்லைகள் சொன்னாலும் அப்போதைய படங்களை இப்போது பார்த்தாலும் படம் முடியும் போது ஒரு மனநிறைவு, படம் பார்த்து முடித்த சந்தோசம் கிடைக்கும். ஆனால் இன்றைய படங்களைப் பார்க்கும்போது இவையயல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையும் தொலைக்காட்சியில் சற்றே பழைய படங்களைப் பார்க்கும் போது உணர்வார்கள்.

8. அவ்வளவு ஏன், என்னுடைய மன நிலையை சொல்லட்டுமா? சேது, நந்தா, பிதாமகன், காசி, காதல் இது போன்று முடிவுகள் சோகமாக உள்ள படங்கள் எவ்வளவுதான் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தாலும் தொலைக்காட்சிகளில் மீண்டும் பார்க்க நேரும்போது, நடுவிலேயே வேறு சேனல்களுக்கு மாறிவிடுகிறேன். காரணம், வாழ்க்கையில்தான் இவ்வளவு சிரமப்படுகிறோம், படத்தைப்பார்த்தும் மனம் கலங்க வேண்டுமா என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு.

9. படத்தை படமாத்தான் பார்க்கணும். பெண்கள் மெகாசீரியல்களைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல் நீயும் படத்தைப் பார்த்து அழுதால் அதற்கு நாங்களா பொறுப்பு என்று சிலர் கேட்கக்கூடும். நான் சொல்ல வந்த விசயம் அது இல்லை. இது போன்ற படங்கள் நல்ல படங்கள்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தப் படங்களும் ரசிக்கத்தக்கவைதான். ஆனால் சாமானிய ரசிகன், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து விட்டு சற்று நேரம் இளைப்பாறலாம் என்று படம் பார்க்க வந்தால் இது போன்ற படங்கள் மன நிறைவை அளிக்காது. அவர்களுக்கு இரவு வாட்ச்மேன் தூக்கம் வராமல் இருக்க டீ குடித்து தூக்கத்தைப் போக்கி உற்சாகப்படுத்திக்கொள்வது போல் நிமிர்ந்து உட்காரச்செய்யும் படங்களும் தேவை என்றுதான் சொல்கிறேன்.

10. இப்போதும் இப்படி மசாலா படங்கள் வந்தாலும், ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசி காதுகளை பஞ்சராக்கி அது போன்ற படங்களையும் பிடிக்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

11. முன்பு பிலிம் சுருள் மூலம் தியேட்டரில் படம் திரையிடும்போது, ஆப்ரேட்டர் பணி செய்யும் முறையை வைத்தே படத்தின் தன்மையை கணித்துவிடலாம். ஒரு படம் என்பது 2000 அடி நீளம் உள்ள பிலிம் சுருள் கொண்ட ஏழு பகுதி அல்லது எட்டு பகுதியாக வரும். இடைவேளைக்கு முன்பு நாலு சுருள். பிறகு மூன்று அல்லது நான்கு.

18 முதல் 22 நிமிடங்கள் வரை ஒரு சுருள் ஓடும். ஒரு புரொஜக்டரில் 20 நிமிடம் ஓடி முடிந்த உடன் அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்த ஆப்ரேட்டர் ஓடி முடிந்த பிலிம் சுருளை ரீவைண்ட் செய்வது, மூன்றாவது சுருளை அடுத்த புரொஜக்டரில் பொருத்தி, கார்பனை சரிபார்ப்பது போன்ற பணிகளை 4 முதல் ஆறு நிமிடங்களுக்குள் செய்து விட்டு அவரும் படம் பார்த்துக்கொண்டே கார்பனை நெருக்கி சரியாக எரியூட்டினால் படம் ஆப்ரேட்டருக்கு பிடித்து விட்டது என்று பொருள். எல்லா நாளும் அப்படி பார்க்க வில்லை என்றாலும் குறைந்தது 4 நாட்களாவது இப்படி இருக்க வேண்டும். (பல தியேட்டர்களில் பிலிமை ரீவைண்ட் செய்யவும், கார்பனை ஒழுங்காக எரிக்கவும் உதவியாளர்கள் இருப்பார்கள். நான் சொல்வது ஆப்ரேட்டர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்யும் தியேட்டர்களைப் பற்றி)

அதைவிட்டுவிட்டு ஒரு சுருள் (2 ரீல் ) படம் ஓடும் 20 நிமிடங்களும் ஏற்கனவே ஓடிய பிலிமை ரீவைண்ட் செய்தல், அடுத்து ஓட வேண்டிய பிலிமை மற்றொரு புரொஜக்டரில் பொருத்துதல் ஆகிய வேலைகளை 10 முதல் 13 நிமிடம் வரை செய்து விட்டு படத்தை பார்க்காமல் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு கார்பனை நெருக்கிக்கொண்டிருந்தால் படம் அவர் மனதைக் கவரவில்லை என்று சொல்லலாம்.

13. அந்த காலகட்டத்தில் நான் பார்த்த பல படங்களில் இப்போதும் தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவது என்றால் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, முத்து, அவ்வை சண்முகி, ஜென்டில்மேன், என்று பல படங்களை சொல்லலாம். இவற்றில் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் உள்ள படங்களைத்தான் நாம் விரும்புவோம். எல்லா நேரங்களிலும் அழ நாம் விரும்புவதில்லை. இந்த உண்மையை படமெடுப்பவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. அதற்காக மொக்கை ஜோக்குகளை வைத்து ரம்பம் போட்டுடாதீங்கப்பா.

14. விஸ்வரூபம் படத்தை கமல் தொலைக்காட்சியில் முதலில் ரிலீஸ் செய்வது சரியா தவறான்னு பதிவுக்கு தலைப்பு வெச்சுட்டு என்னென்னமோ எழுதிட்டு போறேன்னு எனக்கும் புரியுது.

என்னைப் பொறுத்தவரை கமல் மட்டுமில்லை. படம் எடுக்கும் எல்லோருமே மக்கள் தியேட்டர்களில் மட்டுமே வந்து (சிலர் பொருளாதார நிலைக்கு ஒரு வாரத்து சம்பளமா இருக்கும்) பணத்தை கொட்டி அழுதுட்டு படம் பார்க்கணும்னு நினைக்காம, அவர்கள் இடத்துக்கே டோர் டெலிவரி மாதிரி ஏதாவது செஞ்சு காசு வசூல் பண்றதுக்கு நேர்த்தியான வழியை முயற்சிக்கணும். இதை சொல்ல வந்துதான் மெகாசீரியல் மாதிரி என்னென்னவோ எழுதுறேன்.

என்ன பண்றது. பல நேரங்கள்ல படம் எடுக்குறவங்களும் இப்படித்தான். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லாம, ஹீரோவைப் பத்தி பில்ட் அப் கொடுக்கவும், மிட்நைட் மசாலாவுல போடுறதுக்காக எடுத்து வச்ச பாட்டை செருகுறதுக்கும் ஏத்த மாதிரி கதையை சின்னாபின்னமாக்கி நான் இப்ப எழுதுன பதிவு மாதிரி ஆடியன்சுக்கு எதையும் புரிய விடாம பண்ணிடுறாங்க.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

திருவாரூர் பாபுவின் தேரடிவீதி திருக்கண்ணபுரம்

ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரிப்பில் தேரடிவீதி திருக்கண்ணபுரம் என்ற படம் ஆடி முடிந்து அமைதியாக தொடங்குகிறது என்ற குறிப்புடன் இன்று (2-8-2012) பிரபல நாளிதழ்களில் விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

 இந்த படத்தின் இயக்குனர் பாபு K விஸ்வநாத் தமிழ் பத்திரிகைகள் படிப்பவர்களுக்கு திருவாரூர் பாபு என்ற பெயரில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர்.

திருவாரூர் பாபு பல வெகுஜன இதழ்களில் நூற்றுக்கணக்கில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சரண் இயக்கிய ஜே.ஜே.,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,அட்டகாசம் போன்ற படங்களில் உதவி இயக்குனர். கரண், ராஜேஷ் ஆகியோரை வைத்து மாணவர் - ஆசிரியர் என்ற கதையுடன் பாபு K.விஸ்வநாத் என்ற பெயருடன் கந்தா என்ற படத்தை இயக்கினார். படத்தின் பர்ஸ்ட் காப்பி தயாராகி பைனான்ஸ் பிரச்சனையால் இன்னும் ரிலீசாகவில்லை.

கந்தாவில் நடித்த ஹீரோயின் மித்ரா காவலனில் விஜய்க்கு ஜோடியாக 2வது ஹீரோயினாக நடித்து தெரிந்த முகமாகி விட்டார். வாக்கிங் போய்க்கொண்டு இருக்கும்போது, பாத்ரூமில் இருக்கும்போது இந்த கதைக்கான கரு கிடைத்தது என்று கயிறு திரித்துக்கொண்டு டிவிடிக்கள் மூலமாக உலகசினிமாவில் (ஹாலிவுட்?) மூழ்கி முத்தெடுத்து படம் எடுத்து தள்ளும் சிலர் கூட தங்கள் படத்தை ரிலீஸ் செய்து விடுகிறார்கள். ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் சமூக அக்கறையுடன் நிறைய சிறுகதைகள் எழுதிய திருவாரூர் பாபு எவ்வளவோ கஷ்டங்களைத்தாண்டி இயக்குனராகிவிட்டார்.  மக்களை ரசிக்க செய்வதுடன் அவர்களுக்கும் நல்ல சேதியை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் நம் மண்ணில் நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களை வைத்து தஞ்சாவூரை கதைக்களமாக எடுத்துக்கொண்டு கந்தா படத்தை இயக்கி உள்ளார். இப்போது இயக்குனராவதைக் காட்டிலும் அதை மார்க்கெட்டிங் செய்வதற்கும் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் பிடிப்பதற்கும் மிகவும் போராட வேண்டியிருப்பது சினிமாவுக்கு நல்லதா கெட்டதா என்று என்னால் சொல்லத்தெரியவில்லை.

**********************************************
திருவாரூர் பாபுவின் காத்திருக்கிறார்கள் என்ற சிறுகதைத்தொகுப்பை பத்து ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தில் வாசித்தேன். அதில் ஒரு கதையின் கருவை உங்கள் பார்வைக்காக தந்திருக்கிறேன். கதைச்சுருக்கத்தில் நான் தந்திருக்கும் சம்பவங்கள் என் நினைவில் இல்லை. அதனால் குத்து மதிப்பாகத்தான் எழுதியிருக்கிறேன். அதை வைத்து என்னை திட்ட வேண்டாம். ஆனால் கதையின் அடி நாதம் என் நினைவில் இன்னும் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரா அல்லது முதல் உலகப்போரா என்று சரியாக நினைவில் இல்லை. ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ராணுவம் போரிட்டுக்கொண்டிருந்த சமயம். நல்ல மழை. நிறைமாத கர்ப்பிணியின் பிரசவம் சிக்கலாகிவிட வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் மாட்டு வண்டியில் கிளம்புகிறார்கள். வழியில் பலமான இடி இடித்ததும் வண்டியில் பூட்டியிருந்த மாடுகள் அறுத்துக்கொண்டு திசைக்கொன்றாக ஓடிவிடுகின்றன.

கர்ப்பிணிப்பெண்ணும் உறவினர்களும் செய்வதறியாமல் திகத்து நிறக, கலெக்டர் ரேஞ்சில் உள்ள ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அந்த வழியாக வரும்போது நடுவழியில் இவர்கள் தவித்து நிற்பதை பார்க்கிறார். உடன் இருப்பவர் மொழிபெயர்த்துக்கூற, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்டு விடுகிறார் அந்த ஆங்கிலேய அதிகாரி.

உடனே சற்றும் யோசிக்காமல் தான் காரை விட்டு இறங்கிக்கொண்டு, கர்ப்பிணிப்பெண்ணையும், அவள் உறவினர்களையும் தன் காரில் ஏற்றி வழியில் போலீசாரால் பிரச்சனை வரக்கூடாது என்று தன் பாதுகாப்பு அதிகாரியையும் கர்ப்பிணிப்பெண்ணுக்கு துணையாக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு அந்த கார் திரும்பி வரும் வரை நடுவழியில் நிற்கிறார். அந்த வெள்ளைக்கார அதிகாரி நினைவாகத்தான் எனக்கு அவர் பேரை வெச்சாங்க. என்று தாத்தா சொல்வதை கேட்கும்போது அந்த இளைஞனுக்கு பிரமிப்பாக இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த இளைஞனின் மனைவி நிறைமாதம். அவளை இவர்களது சொந்தக்காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறார்கள். வழியில் கார் ரிப்பேர். கனமழை பெய்துகொண்டிருக்கிறது. ஊரெங்கும் நிசப்தம். மதத்தொடர்பான பிரச்சனை ஒன்றின் துக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படும் நாள் அன்று. அதிகம் பிரச்சனை வரும் என்று வீதியெங்கும் போலீசார் ரோந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

அப்போது இவர்கள் அருகே ஒரு ரோந்து வாகனம் வருகிறது. அதிலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி வெளியே இறங்காமலேயே,''ஏன் இங்கே நிக்கிறீங்க?''என்று அதட்டுகிறார்.

''பிரசவ வலி சார். எங்க கார் ரிப்பேராயிடுச்சு. வேற வண்டி எதாவது வருதான்னு பார்க்குறோம்'' என்று பயந்து கொண்டே சொல்கிறார்கள்.

''சரி...ரொம்ப நேரம் இங்க நிற்காதீங்க...அப்புறம் எல்லாரையும் கைதுபண்ண வேண்டியிருக்கும். சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போற வழியப்பாருங்க.''என்று அந்த போலீஸ் அதிகாரி அதட்டியவுடன் ரோந்து வாகனம் சென்றுவிடுகிறது.

இவர்கள் வேறு வாகனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கதை முடியும்.


(ஏன் வேற வாகனத்துக்கு காத்திருக்கணும். ஆம்புலன்சுக்கு போன் பண்ணக்கூடாதா என்று குதர்க்கமான கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம். கதாசிரியர் சொல்ல வந்த விஷயம், பொதுவாக போர்க்காலங்களில் கூட பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்ற நியாயமான கோட்பாடு உண்டு. ஆனால் சுதந்திர இந்தியாவில் உள் நாட்டுப்பிரச்சனையில் கூட சாதாரண மக்களுக்கு அரசு எந்த அளவுக்கு உதவுகிறது என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புவதுதான்.)

திங்கள், 28 டிசம்பர், 2009

கட் ஷாட் தெரியும்...அது என்ன கண்ணை காலி பண்ற ஷாட்?


உலகின் தலை சிறந்த பம்பு இன்றும் மனிதனின் இதயமே. (ஆமைக்கு இதயம் இல்லையான்னு கேட்கக்கூடாது. ஒரு விளம்பரத்துல இந்த அளவு உண்மையை ஒத்துகிட்டு இருக்குறதே பெரிய விஷயம்.) அதற்கு அடுத்த தரம் வாய்ந்த பம்புகளை நாங்கள் தயாரிக்கிறோம் அப்படின்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி உலகின் தலைசிறந்த கேமரான்னா அது மனிதனின் கண்கள்தான்னு உறுதியா சொல்லலாம். நம்ம கண்ணு எதையும் பதிவு பண்ணி வெக்கிற ஹார்ட் டிஸ்க் இல்ல. அவ்வளவுதான். ஆனால் கண் ஒரு அற்புதமான டிஸ்பிளே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்ப சமீப காலமாவே உணவு, அதிக நேரம் தொலைக்காட்சி, இணையம்
உட்பட பல காரணங்களால் மனிதர்களின் பார்வைக் கோளாறுகள் அதிகரித்து வருவது வேதனையான விஷயம்.

ஒரு கொடுமைக்கார கணவன். தினமும் அவனிடமிருந்து அடி, உதையைத் தவிர வேறு எதுவும் அந்த மனைவிக்கு கிடைத்திருக்காது. குறிப்பிட்ட காட்சியில் வீட்டுக்கு வரும் அவன்,"சீக்கிரம் பிள்ளைங்களோட கிளம்பு...வெளியில போயிட்டு வருவோம்." என்று சொல்வான்.

 உடனே வெளியே ஓடி வந்த இவள் அண்ணாந்து வானத்தைப் பார்ப்பாள். கேமரா, மேகம் எதுவுமின்றி நீல நிறமாகத் தெரியும் வானத்தை ஒரு வட்டமடித்துக்காட்டும்.

சொதப்பலான காரியங்களையே தொடர்ந்து செய்யும் ஒருவர் வழக்கத்துக்கு
மாறா மகிழ்ச்சி தரும் வார்த்தையை சொன்னாலே மழை வரப்போகுதான்னுதான் கேட்போம். அதை அந்த ஷாட்டுகளில் வெகு அழகாக சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக கேமரா காட்டியிருக்கும்.

உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சியைப் பற்றி நான் ஒரு புத்தகத்தில் படித்ததுதான். படம் பார்க்கவில்லை.

கதைக்குத் தேவைப்படும்படியாக மட்டுமே கேமரா இயங்க வேண்டும் என்று இப்போதும் உறுதியாக இருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

 கேமரா கோணங்களைப் பொறுத்த வரை ஒன்பது வகையாகப் பிரித்து நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்.(கூடக் குறைச்சு இருக்கலாம். அது நமக்கு இப்ப தேவையில்லை.) எனக்கு கூட அந்தக் கோணங்களை எப்படி வைக்கணும்னு கொஞ்சம் புரியுது.

ஆனா இப்ப சில ஒளிப்பதிவாளர்கள் தெரியாம செய்ய்யுறாங்களா  இல்ல... பார்வையாளர்களோட கண்களை புடுங்கிட்டுதான் மறுவேலைன்னு ஒரு நோக்கத்தோட இப்படி செய்யுறாங்களான்னு புரியலை.எந்தக் காட்சிக்கு எந்த கோணம் வைக்கலாம்னு ஒரு வரைமுறையே இல்லாம பல படங்கள்ல அக்கப்போர் பண்றாங்க.

முன்னாடி மாதிரி பிலிமை வெட்டி ஒட்டி மட்டுமே படத்தொகுப்பு செய்யணும்னா சிரமப்படுவாங்க. ஆனா இப்பதான் Avid, Fcp அப்படி இப்படின்னு சில படத்தொகுப்பு மென்பொருட்கள் வந்துடுச்சே.

Telecine மெஷினைப் பயன்படுத்தி DV இல்லன்னா BETA கேசட்ல பதிவுபண்ணி கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்ல படத்தைக் கொண்டு வந்துடுறாங்க.

அப்புறம் என்ன...அந்த பைல் எல்லாம் கதறக்கதற கட்வலையே படாம படக்குழுவினர் எடிட்டிங் பண்ணிக்குவாங்க. இது வரைக்கும் மத்தவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.(எடிட்டிங் ஸ்டுடியோ வாடகை ஒரு பக்கம் தயாரிப்பாளரோட கழுத்தை நெறிக்கும். அதுவும் இப்ப நமக்கு தேவையில்லை.)

கடந்த சில ஆண்டுகளாகவே பாடல் காட்சிகளை கவனித்தால் ஒரு உண்மை புரியும்.

மிட் ஷாட், மிட் லாங் ஷாட்  இந்த மாதிரி ரெண்டு கோணங்கள்ல நடனக்காட்சிகளை மொத்தமா எடுத்துக்க வேண்டியது.

அப்புறம் கணிப்பொறி உதவியோட அந்த இரண்டு காட்சிகளையும் மாறி மாறி காண்பிக்க வேண்டியது. ஒரே ஷாட்டைப் பார்த்தா சலிச்சுப் போயிடும்னுதானே சொல்றீங்க...அது உண்மைதான். அதுக்காக அறுபது நொடிக்குள்ள நூறு தடவையா இந்த ரெண்டு ஷாட்டையும்  மாத்தியே காண்பிக்கிறது?

உங்க வீட்டு தொலைக்காட்சியில ஒரு நிமிஷம் யாராவது ரிமோட் மூலமா சேனலை மாத்திகிட்டே இருந்தா எவ்வளவு கோபம் வருது?அந்த மாதிரிதாங்க இதுவும்.

ஒரு நொடிக்கு பிலிம்ல 24 பிரேம் கடந்து போகுறது தான் சரியான சரியான தொழில்நுட்பம். ஒரு அடி நீள பிலிமுக்கு 16 பிரேம் இருக்கும். ஒரு நொடியில ஒண்ணரை அடி பிலிம்ல படம் காட்டுவாங்க.

ஆனா வீடியோ தொழில் நுட்பத்துல ஒரு நொடிக்கு 25 பிரேம் பதிவாகும். இதெல்லாம் நம்ம கண்ணுல பார்வை நிலைச்சு இருக்குற நேரத்தைக் கணக்கிட்டு அறிவியல் அடிப்படையில நிர்ணயம் பண்ணியிருக்குற தொழில்நுட்பம்.

இவங்க டெக்னாலஜி டெவலப்மெண்ட் அப்படின்னு சொல்லிகிட்டு ஒரு நொடிக்கு நாலு கட் ஷாட் போட்டு பார்க்குற நம்மளுக்கு கண்வலி, தலைவலி மட்டுமில்லாம நிரந்தர பார்வைக்கோளாறுக்கும் வழி செய்யுறாங்க.


ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ், இன்றைய (28.12.2009)தினகரன் நாளிதழ்ல பேட்டி கொடுத்திருக்கார். கட் ஷாட் மிக அதிகமா இருக்குற இந்த மாதிரிக் காட்சிகளைப் பார்க்குறதை தவிர்க்கும்படி டாக்டர்கள் கூட சொல்றாங்கன்னு  அவர் ஒத்துகிட்டு இருக்குறத நினைச்சு எனக்கு ஓரளவு நிம்மதியா இருக்கு.

பாடல் காட்சிகள் 24X7 அப்படின்னு தொலைக்காட்சிகள்ல ஒளிபரப்பாகுது.அதனால படத்தின் உச்சகட்ட காட்சி, கதைக்கு அவசியமான காட்சின்னு எதுவா இருந்தாலும் மக்களோட கண்களையும் மனசுல வெச்சுக்குங்க.

உதிரிப் பூக்கள் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரா இல்ல பாலு மகேந்திராவான்னு எனக்கு சரியா தெரியல. அதனால் பெயரை அங்கே குறிப்பிடவில்லை.