Search This Blog

ஆசிரியர் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஜூன், 2010

ரயில் தண்டவாளம் தகர்ப்பு - யாருக்கெல்லாம் ஆப்பு?

ரயில்களையும் தண்டவாளங்களையும் தகர்க்கும் கலாச்சாரம் இதுநாள் வரை வட இந்தியாவில்தான் அதிகம் என்று நினைத்ததற்கு வந்தது ஆப்பு.மிகப்பெரிய அரசியல் சூதாட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த தண்டவாள தகர்ப்பு என்று சொல்கிறார்கள்.இது பற்றி எல்லாம் எனக்கு விவரம் தெரியாது.
நான் பேசப்போவது இது மாதிரியான நாச வேலைகளால் நமக்கு என்னென்ன பாதிப்பு என்பதைப்பற்றிதான்.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் இருவழிப்பாதைகளாகி விட்டன.அந்தப் பகுதி மக்களை மட்டுமே குறி வைத்து அந்த ரயில்கள் இயக்கப்படுவதால்தான் தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் கூட பல ரயில்கள் நிற்காமல் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.

ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்தந்த மாநிலங்களும் கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற அறிவிக்கப்படாத கொள்கை முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டது. இந்த போக்கு சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.தமிழகத்தின் முக்கிய நகரங்களை இரட்டைரயில்பாதையால் இணைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.
அதாவது, தொலைதூர ரயில்கள் அரைமணி நேரத்துக்கு ஒன்றாக புறப்பட்டால் இவ்வளவு பேருந்துகள் செல்ல வேண்டியது இருக்காது,இவ்வளவு எரிபொருள் செலவாகாது,சாலை விபத்துக்களில் நாள்தோறும் இவ்வளவு உயிர்கள் பலியாகாது,பேருந்துகள் வெளியிடும் புகையால் இந்த அளவு வளிமண்டலம் வெப்பமாகாது என்பது என் எண்ணம்.

ஆனால் இதைப் பற்றி நான் யாருடனாவது விவாதிக்கும்போது, இரட்டை ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல் வரும் என்று சொல்கிறார்கள். அது எப்படிங்க, நாலுவழிப்பாதை அமைக்க மட்டும் நிலம் கிடைக்குது?

அது சரி...நாலுவழிப்பாதைக்கு காண்ட்ராக்ட் விட்டு பத்து கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி வசூல் செய்யுற மாதிரி ரயிலை நிறுத்தி காசு வாங்க முடியாதே. அதனால இந்த பணிகள் மந்தமாத்தான் இருக்கும். அப்படின்னு என்னையே நான் சமாதானப்படுத்திகிட்டு இருக்கேன்.
இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு பழமொழி சொல்லுவாங்களே...அந்த மாதிரி இருக்குற ரயில் பாதைகளையும் இப்படி வெடி வேச்சு தகர்த்தா வேற யாருக்கு ஆப்பு?அப்பாவி பொது ஜனத்துக்குதான்.(லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், மாதம் கால் லகரம் ஊதியம் வாங்கும் தனியார் நிறுவன ஊழியர்கள், கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்,தில்லுமுல்லு வியாபாரிகள் இந்த அப்பாவி பொதுஜனப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்.)
******
போலி மருத்துவர்கள் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திருவாரூரில் கூட ஐந்து பேர் கைது என்று நாளிதழ்களில் படித்தேன்.

நம்ம நாட்டுல என்ன ஸ்பெஷல்னா, சாதாரண மனுஷன் வாழ வழி இல்லாம எல்லா பாதையையும் அடைச்சுட்டு குரல்வளையையும் நெறிப்போம்.அதுல இருந்து நீங்களா தப்பிக்க வழியைப் பார்த்தீங்கன்னா அதுக்கும் விட மாட்டோம். செத்துடலாம்னு நீங்களா முடிவெடுத்தா அதையும் தப்புன்னு சொல்லி உள்ள போட்டுடுவோம். ஏன்னா அதுக்கு ரைட்ஸ் எங்களுக்குதான் இருக்கு.

என்ன குழப்பமா?
உடம்புக்கு கேடுன்னு சொல்ற பொருள் எல்லாம் காலையில இருந்து நடுராத்திரி வவரைக்கும் கிடைக்குது. ஆனா அரசு மருத்துவமனைகளில் காலை எட்டு மணியில இருந்து பதினோரு மணி வரைதான் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆக்சிடண்ட் கேசுன்னா பெரிய ஊர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கன்னு எழுதிக்கொடுக்குறது மட்டும் இருபத்துனாலு மணி நேர சேவையா இருக்கே அத சொன்னேன்.
மருந்து கம்பெனிகளும் பல மருத்துவர்களும், மருத்துவமனைகளும், பரிசோதனைக்கூடங்களும் லாபம் சம்பாதிக்கிறதோட நிறுத்திக்காம கொள்ளை அடிக்கிறத கண்டுக்க மாட்டாங்க.குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறப்ப ஓட்டுனர் செய்யுற தவறாலயும், அவங்க அஜாக்கிரதையாலயும்தான் தொண்ணூறு சதவீத விபத்து ஏற்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவங்க செத்துகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் இதைக் கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கையையும் காணோம். இப்ப மட்டும்................................................

திங்கள், 7 ஜூன், 2010

சிங்கம் சிங்கிளா போனா எவ்வளவு அக்கப்போர்?

சிங்கம் தனியா போய்தான் அதிரவைக்கும்னு சொல்றாங்க. ஆனா நிஜ வாழ்க்கையில சிங்கிளா இருந்தா பல இம்சைதாங்க வருது.எல்லாத்தையும் சொல்ல நேரம் இல்லை.அதனால சில வில்லங்கத்தை மட்டும் தட்டச்சிருக்கேன்.

ஜூன் முதல்வாரம் குற்றாலத்துல நெருங்கிய உறவினர் கிரஹப்பிரவேச விழா வெச்சிருந்தார். பாட்டி காலமானதும் ஏப்ரல் இறுதியில இருந்து மே மாசம் முழுவதும் திருவாரூர்-பரமக்குடி பயணமாவே இருந்ததால அம்மாவை விட்டுட்டு நான் மட்டும்தான் குற்றாலம் போனேன்.

விசேஷகாலமா இருந்ததால இரவு நேரத்துல தஞ்சாவூர்ல இருந்து மதுரை போறவரை இடம் கிடைக்கிறது கஷ்டம். அங்கிருந்து செங்கோட்டை போற பஸ்சுலயும் சூழ்நிலை எப்படி இருக்குன்னு தெரியாம ரிஸ்க் எடுக்க விரும்பலை.

S.E.T.C பஸ்ல டிக்கட் ரிசர்வ் பண்ண போனேன். ஆறாம் நம்பர் இருக்கையே கிடைச்சது. பதினோரு மணி நேர டிராவல்ல குறைஞ்சது ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கலாம்னு நம்பிதாங்க பஸ்சுல ஏறுனேன்.

நைட் டின்னருக்காக(?!) தஞ்சாவூர்லயே கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வெயிட்டிங்.
தஞ்சை நகரைக் கடந்ததும் ஓரமா வண்டி நின்னுச்சு. என்னன்னு பார்த்தா கண்டக்டர், டிரைவர் சீட்டுல உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிச்சுட்டார். சிக்கன நடவடிக்கையால ஹெவி டிரைவிங் தெரிஞ்ச ஆளைத்தான் கண்டக்டரா போட்டுருக்காங்கன்னு அறிவுக்கு தெரிஞ்சாலும் மனசு அந்த இளைஞரை கண்டக்டராவே பார்த்துச்சு.

அப்புறம் எங்க தூங்குறது?

ஆனா கண்டக்டர் ரொம்ப சரியா கிளட்சை யூஸ் பண்ணி கியர் மாத்தி பஸ்சை இயக்குனார்."சரி...இவர், வேலைக்கு சேர்ந்து ரொம்ப நாள் ஆகலை போலிருக்கு. எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள்ல பலர், கியர் பாக்ஸ் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு கிளட்சை ஒழுங்கா பயன்படுத்தாமயே கியர் மாத்துவாங்க."அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

மதுரை வரைக்கும் எனக்கு தூக்கமே வரலை. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுலேருந்து கிளம்பினதுமே தூங்கலாம்னு நினைச்சேன். ஆனா பஸ் ரிங் ரோடு போகாம யானைக்கல், வடக்குமாரட்வீதி வழியா பழ மார்க்கெட் போகுதேன்னு பார்த்தேன். கண்டக்டர் கீழே இறங்கிப் போய் பழங்கள் வாங்கிட்டு வந்தார்.(அவங்களுக்குதான்.)
அப்படியே பெரியார் பேருந்து நிலைய பகுதி, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை வழியா போய் திருமங்கலத்தை நெருங்குனுச்சு. சரி...இனிமே வேடிக்கை பார்க்க எதுவும் இல்லைன்னு நினைச்சு கண்களை மூடி தூங்க முயற்சி செஞ்சேன்.

சில நிமிஷங்கள்தான்.ஒரு அவலக்குரல். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(இதை மட்டும் வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்.) வேற ஒண்ணுமில்லைங்க. அஞ்சு வரிசைக்குப் பின்னால உட்கார்ந்துருந்த ஒருத்தர் மூணு வரிசை ஆளுங்க மேல வாந்தி எடுத்துட்டார். சாதாரணமாவே எனக்கு பேருந்துப் பயணத்தின்போது வாந்தி வர முயற்சிக்கும். நான் வாயை வயித்தைக் காயப்போட்டு சமாளிச்சுடுவேன்.(இதனாலேயே உடம்புல தெம்பு இல்லாம பர்சனாலிட்டி கொஞ்சம் குறையும்.வேற வழி?)

ஆனா அந்த ஆள் ஃபுல் மப்புல சைடு டிஷ்ஷா என்ன எழவைத்தின்னாரோ? அது எதுக்குமே அவரோட வயித்தைப் புடிக்கலை.(பஸ் மேல என்ன பாசமோ) எல்லாம் வெளியில வந்துடுச்சு.

ஆறு பேர் சட்டையை கழட்டிட்டாங்க. வாந்தி எடுத்தவரை அடிக்க இல்லைங்க...இந்த நாத்தம் தாங்காமதான். அப்புறம் சாலையோர டீக்கடையில பஸ்சை நிறுத்தி காசு கொடுத்து நாலு குடம் தண்ணி வாங்கி பஸ்சை அலசி விட்டார் கண்டக்டர். நடக்குறது,பறக்குறது,நீந்துறதுன்னு என்னென்ன அவரு வயித்துக்குள்ள இருந்துச்சோ?அவ்வளவு சீக்கிரம் நாத்தம் போயிடுமா?

கண்டக்டரோட கைக்காசுல சாய்பஜன் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி எல்லாம் வாங்கி கொளுத்தி வெச்சார். அப்புறம் கொஞ்சம் பரவாயில்லை. ஒரு முக்கால் மணி நேரம் அவுட்.

பஸ் கிளம்புனதும் அப்பாடா, இனி இல்லை தொல்லைன்னு நினைச்சா மறுபடி ஒரு நாத்தம்.

எனக்கு பக்கத்துல உட்கார்ந்துருந்தவர், செண்ட் அடிச்சார்.அடப்பாவி...இதுக்கு அந்த வாந்தி நாத்தமே பரவாயில்லையேன்னு மனசுக்குள்ளயே புலம்புனேன். வேற என்ன பண்றது?

நானூறு கிலோமீட்டர் தொலைவா இருந்தாலும் இரவு நேரப் பயணத்துல சில சவுகர்யங்கள் இருக்கு. வெயில் தெரியாது. சராசரியா பகல் நேரத்தை விட இரவு நேரத்துல பத்து கிலோ மீட்டர் வேகம் அதிகமாவே இருக்கும்.தென்காசி பகுதியில ரயில்வே மேம்பாலம் கட்டுறதால செங்கோட்டை போற பஸ் எல்லாமே இலஞ்சி சந்திப்போட வேற வழியா போயிடுச்சு.
அதனால குற்றாலம் போக வேண்டிய நான் இலஞ்சியிலேயே இறங்கினேன். நிறைய தமிழ் சினிமாவுல வர்ற மாதிரியே நான் இறங்கின இடத்துலயும் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்துச்சு.

அதிகாலை நாலு மணியா இருந்தாலும் பங்காளி ஒருத்தர் டூவீலரை எடுத்துகிட்டு வந்துட்டார்.அவரோட போய் கிரஹப்பிரவேச வீட்டுக்குப்போய் குளிச்சி(நம்புங்கப்பா) மேக்கப் போட்டு, விழாவுல கலந்துகிட்டு, வயித்தை நிரப்பின பிறகு பார்த்தா மணி ஆறே முக்கால்தான் ஆனது.

அண்ணே...அப்படியே எல்லா அருவிக்கும் போய் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னேன். இன்னொரு பங்காளியும் வண்டியில என்னைய அழைச்சுட்டு போனாரு.

பிரதான அருவி தெரியுற தூரத்துலயே நிறுத்திட்டு,"தம்பி...அதான் அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க..."அப்படின்னு சொன்னார்.

நான் ஷாக்காகி அவரைப் பார்த்தேன்.

"ஏண்டா டேய்...சீசன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால வந்தா இப்படி நின்னு கும்பிட்டுட்டுதான் போகணும். அடுத்து ஐந்தருவிக்குப்போவோம்...இப்ப வீட்டுல குருக்கள், கோமியம் தெளிச்சாரே...அந்த மாதிரி முடியுதான்னு பார்க்கலாம்னு சொன்னார்.

நீங்க தண்ணியே தெளிக்க வேணாம்னு வீட்டுக்கு வண்டியை திருப்ப சொல்லிட்டேன்.
குற்றாலம் வரைக்கும் போயிட்டு அருவியிலயே குளிக்க முடியலையேன்னு நொந்து போய் வந்தா பாபநாசம் அணைக்குள்ள இருக்குற பாணதீர்த்த அருவியில எப்படி தண்ணீர் கொட்டுறதைப் பார்த்து என் வயித்து ஹீட் அதிகமானதுதான் மிச்சம்.

*****
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்...இப்படி எல்லாம் டயலாக்கை ஹீரோ பேசும்போது கேட்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா தனியா பஸ்சுல பயணம் பண்ணும் போது எவ்வளவு இம்சையா இருக்கு தெரியுமா? நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்போது கஷ்டம் தெரியாது.

இப்ப நான் போன மாதிரி நானூறு கிலோமீட்டர் வேணாம், நம்ம நாட்டுல பல சாலைகளில் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் போறதுக்குள்ளயே நாக்கு வெளியில வந்துடுது.(திருவாரூர் - தஞ்சாவூர் தூரம் 65 கிலோ மீட்டர்தான். ஆனா இந்த தூரம் போறதுக்குள்ளயே ஸ் ஸ் சப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு புலம்ப வேண்டியதுதான்.)

காத்தோட்டமா ஜன்னல் ஓரமா அப்படான்னு போய் உட்கார்ந்துருப்போம்.ரெண்டு லேடீஸ் வந்து,"சார் அங்க மாறி உட்காருங்களேன்."அப்படின்னு ஆரம்பிப்பாங்க.ரெண்டு பேரா போனா இந்த இம்சை இல்லை.

இப்படித்தான் ஒரு தடவை நான் தஞ்சாவூர்லேருந்து திருவாரூர் வரும்போது மாறி உட்கார சொன்ன ஒரு பொண்ணுகிட்ட கோபப்பட்டேன்.

"இப்ப மாறி உட்கார சொன்னீங்கன்னா பின் பக்க கண்ணாடியை உடைச்சுகிட்டு கீழே குதிக்க வேண்டியதுதான்.மாறி உட்கார சொல்லியே டிரைவருக்கு எதிர்ல இருந்த என்னைய பின்பக்க வாசல் வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க. இப்படியே அடுத்த பஸ்சுக்கு அனுப்பிடலாம்னு பார்க்குறீங்களா?"ன்னு விட்ட சவுண்டுல அந்தப் பொண்ணோட சேர்ந்து கண்டக்டரும் சிரிக்கிறாரு.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு, நண்பர்கள் யாரையாவது கூட அழைச்சுட்டுப்போனாத்தான் கிடைக்கும். இன்னும் பெட்டர் ஐடியான்னா அது மனைவியோட பயணம் பண்றதுதான்னு நான் சொல்லுவேன்.(சீக்கிரம் அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்க சொல்லணும்.)
******
சிங்கிளா இருந்து சாதிக்கிறது எல்லாம் சினிமா வசனத்துக்குதான் சரியா வரும். குறைந்த பட்சம் இன்னொருத்தர் உதவி இல்லாம பெரும்பாலான காரியங்கள் பெரிய வெற்றி அடையுறது இல்லை.
வில்லன் நடிகர் சொதப்பியிருந்தா கில்லியின் அபார வெற்றியும், சிங்கம் படம் இப்படி பேசப்படுறதும் அவ்வளவா சாத்தியம் இல்லை.
******
சிங்கம் சிங்கிளா வர்றது பத்தி வசனம் அந்தப் படத்துலயே இருந்தாலும் அதுக்கு ஜோடியா ஒரு பெண்சிங்கமும் வருதே...(நான் சொன்னது கலைஞரின் பெண் சிங்கம்.)
 ******
இப்ப நாங்க திருப்பணியில ஈடுபட்டிருக்குற கோவில் கர்ப்பக்கிரஹ விமான உயரம் சுமாரா இருபத்திரெண்டரை அடி. இதை கட்டி முடிக்கிறதுக்குள்ளேயே எங்களுக்கு நாக்கு தள்ளிகிட்டு இருக்கு. வரும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரதரிசனம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் நம்ம முன்னோர்களோட திறமையை நினைச்சு ரொம்ப பெருமையா இருந்துச்சு.
பெரியவங்களை மதிக்க மாட்டெங்குறாங்கன்னுங்குறது என்னை மாதிரி யூத்து மேல இருக்குற புகார். நாங்களா ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழக அரசின் சின்னமா இருக்குறதை எதிர்க்குறோம்?

புதன், 26 மே, 2010

இவிங்களை திருத்தவே முடியாதா?

ஒருவனுடைய உடைமையை வலுக்கட்டாயமாக கவர்ந்து செல்வதை திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று பல பெயரிட்டு அழைக்கிறார்கள்.இவை அனைத்துமே சட்டப்படி தவறுதான்.
ஆனால் திருவாளர் பொதுஜனம் நாள்தோறும் பல சுரண்டல்களைத் தாங்கிக்கொண்டும் பொதி சுமந்துகொண்டே இருப்பதற்கு பழகியாயிற்று. இப்போது நான் பட்டியலிடப்போகும் கொள்ளைகள் எந்த சட்டப்படி சரி?...ஏனென்றால் இந்த தவறுகளை செய்பவர்கள் யாரும் தண்டிக்கப்படுவதே இல்லையே? (இதெல்லாம் தப்புன்னு நீ எப்படி சொல்லலாம்னு என்னைய தண்டிக்க புறப்பட்டுடக்கூடாது.நல்ல புள்ளையா இதையெல்லாம் படிச்சுட்டு புலம்பிட்டு உங்க வேலையைப் பார்க்கப்போயிடணும். ஏன்னா இந்தியா பணக்கார நாடு. அவங்களுக்குதான் தன் இஷ்டப்படி வாழ உரிமை இருக்கு.எழுத்துப்பூர்வமாக இல்லாத சட்டம் இதுதான்.)

ஆம்னி பஸ் கொள்ளைக்காரர்கள் நலனுக்காக உருப்படியாக நாலு ரயில்களை இயக்குவது கிடையாது. அதிலும் இரட்டை ரயில் பாதையை அமைத்து விட்டால் சாமானிய மக்கள் நன்மை அடைந்து விடுவார்கள் என்பதால் கண்ணும் கருத்துமாக அதற்கு சாத்தியம் அவ்வளவு சுலபம் இல்லை என்று வருடக்கணக்காக பேட்டி கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள், கொடுப்பார்கள்.

ஆனால் நாலு வழிப்பாதை, ஆறுவழிப்பாதைக்கு மட்டும் நிலம் கையகப்படுத்தமுடியுதே...அது எப்படின்னுதானே கேட்டீங்க?...அடப்போங்க சார், ரோடுன்னா எல்லா வண்டியையும் நிறுத்தி சுங்கம் வசூலிக்கலாம். ரயிலை நிறுத்தி உங்க ஒவ்வொருத்தர் பர்த்துலயுமா வந்து கொள்ளை அடிக்க முடியும்?

மதுக்கடைகளை அரசாங்கம் எடுத்துகிட்ட மாதிரி சுங்கம் வசூலிக்கிறதையும் அரசாங்கமே எடுத்துகிட்டா கொஞ்சமாச்சும் திருப்தியா இருக்கும். பரவாயில்லை. நம்ம கிட்ட கொள்ளை அடிக்கிறது மன்னனாச்சே...மக்களுக்கும் நன்மைதானேன்னு சமாதானமாகலாம். நாலு கரைவேஷ்டி ஆளுங்க பேசி வெச்சுகிட்டு அம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து ஐநூறு கோடி அளவுக்கு கொள்ளை அடிக்கிறது என்னை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கும் புரியுறதால வர்ற வினைதான் இந்த புலம்பல்.

தனியார் கல்வி நிறுவனங்கள்ல அரசு கட்டணம் நிர்ணயம் செய்ததை ஒத்துக்காத வியாபாரிங்க, ஆசிரியர்களுக்கு ஒரு மாசம் சம்பளம் கொடுக்குறதுக்கே இந்தப் பணம் காணாதுன்னு புலம்புறாங்க. இன்னும் பல பள்ளிக்கூடத்துல ஆசிரியருக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம் கிடையாது. டியூஷன்னு சொல்லி ஒரு பையனுக்கு சில நூறு தனியா கறந்துகிட்டு வாத்தியாருக்கு போனா போகுதுன்னு ஓவர்டைம்னு எதோ கொஞ்சம் காச கண்ணுல காட்டுறாங்க.
எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு பொறியியல் கல்லூரியில விரிவுரையாளரா போனாங்க. எட்டாயிரம் ரூபாய்தான் சம்பளம். ஆனா இருபதாயிரத்துகிட்ட ஒரு தொகைக்கு வவுச்சர்ல கையெழுத்து வாங்கினதா சொன்னாங்க. அப்ப வருமான வரியைக் கட்டுறது யாருன்னு கேட்டேன். நிர்வாகம் ரொம்ப நேர்மையா, இந்த பொண்ணுக்கு பான் கார்டு வாங்கி அவங்களே, வரியையும் கட்டிடுவாங்களாம்.

இதுனாலதான் கல்விவியாபாரிங்க நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிக்கிறாய்ங்களோ.

ஆனா இவங்களை மட்டும் குத்தம் சொல்றது தப்புன்னு எனக்கே புரியுது. கல்வியை வியாபாரிங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, கலகத்துக்கு காரணமான மதுவை அரசாங்கம் எடுத்துகிட்டப்பவே சாமானிய மக்களுக்கு நியாயம் கிடைக்காதுன்னு தெரிஞ்சுடுச்சு.

இன்னும் பல லட்சம் கிராமங்கள்ல குடிதண்ணீருக்கு வழி இல்லை. ஆனா கொக்கோ கோலா, பெப்சி கம்பெனிக்காரங்களுக்கும், மினரல் வாட்டர் வியாபாரிங்களுக்கும் எங்கிருந்துதான் தண்ணீர் கிடைக்குதுன்னு புரியவே மாட்டெங்குதுங்க.

ஆம்னி பஸ் அடாவடி ஒரு பக்கம்னா, எந்த பஸ்சுலயும் பாகுபாடு இல்லாம இன்னொரு விஷயம் நடக்குது. அதுதான், காட்டுக்குள்ள இருக்குற மோட்டல். அங்க அஞ்சுரூபா பொருள் எல்லாம் இருபது ரூபா, கூவத்தை விட மோசமா இருக்குற இடத்துக்குள்ள சிறுநீர் கழிக்க அஞ்சு ரூபா, அந்த இடத்துக்கு போகாம சாலை ஓரத்துக்குப் போனா மண்டையை உடைக்க ரவுடிங்க அப்படின்னு ரொம்ப பேருக்கு சுயவேலைவாய்ப்பை பெருக்கியிருக்காங்க.

இவிங்களைத் திருத்தவே முடியாது அப்படின்னு நான் நினைச்சுகிட்டு இருக்கும்போது இன்னொரு விஷயத்தையும் கவனிச்சேன்.

திருப்பத்தூர்-புதுக்கோட்டை சாலையில கீழச்சீவல்பட்டின்னு ஒரு ஊர் இருக்கு. சில பேருந்துகள் பிரதான சாலையை விட்டு நாலு கிலோமீட்டர் தூரம் உள்ளுக்குள்ள போய்ட்டுதான் வரும்.  அங்க ஒரு பள்ளிக்கூடத்துடைய அருமை பெருமையை சொல்லி நிறைய இடத்துல போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. முக்கியமா எந்த இடம்னு தெரியுமா?

பயணிகள் நிழற்குடை, பேருந்துகளின் கால அட்டவணை, அடுத்த ஊருக்கு எவ்வளவு தூரம்னு போட்டிருந்த போர்டு.

நல்ல புத்தியைப் போதிக்க வேண்டிய பள்ளிக்கூடத்து விளம்பர போஸ்டரே இப்படி தாறுமாறா ஒட்டியிருந்தா அந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற பசங்களுக்கு பாடப்புத்தகத்துல இருக்குறத  தவிர வேற நல்ல ஒழுக்கத்தை சொல்லித்தருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்த சிக்கலுக்கெல்லாம் மிக முக்கிய காரணம் என்னன்னு இந்தியன் படத்துல ஒரு வசனம் எனக்கு புரிய வெச்சிடுச்சு.
நிழல்கள் ரவியைக் கொல்லும்போது கமல்,"முன்னேறிய நாடுகளிலும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குதான் லஞ்சம். ஆனா இங்க கடமையை செய்யுறதுக்கே லஞ்சம்."என்று சொல்வார்.
******

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உலக புத்தக தினம்-ஏப்ரல் 23-கரணின் கந்தாவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?

இந்தப் படத்தின் இயக்குனரான பாபு.K.விஸ்வநாத் திருவாரூரைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் பாபுகாமராஜ். அவரது தந்தை இரா.விஸ்வநாதன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எழுத்தாளர்.பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில வாரப்பத்திரிகைகளில் திருவாரூர்பாபு என்ற பெயரில் பாபுகாமராஜ் எழுதிய கதைகளைப் படித்தபோது இவரை யார் என்றே தெரியாது.(இப்போதும் அவருக்கு என்னைத் தெரியாது.) ஆனால் அப்போதே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது.
திருவாரூர்பாபு எழுதிய "காத்திருக்கிறார்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 15.08.1947க்கு முன்பு மழைபெய்யும் இரவில் சுதந்திரப்போராட்ட கலகம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கிராமத்துப் பெண்மணி பிரசவ வலியால் நடுவழியில் அவதிப்படுவாள். அப்போது அந்த வழியாக வரும் ஆங்கிலேய அதிகாரி, தான் காரை விட்டு இறங்கிக்கொண்டு கர்ப்பிணியை தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்புவார். நல்லபடியாக மருத்துவமனையில் அந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கும்.

கதையில் அடுத்த பகுதி, அந்த கர்ப்பிணியின் பேரனுக்கு திருமணமாகி அவன் மனைவியும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இதே மாதிரியான ஒரு சிக்கல். இது 15.08.1947க்குப் பிந்தைய காலமாயிற்றே.(முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.) மதக்கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் இந்த கர்ப்பிணியால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை.

அப்போது அந்த வழியாக வந்த போலீசார், நிலைமையைக் கேட்டுவிட்டு, "சரி...எதாவது வண்டி வந்தா போங்க." என்று சொல்லிவிட்டு நாகரிகமாக(?!) சென்றுவிடுவார்கள்.

அந்த கர்ப்பிணிப்பெண்ணும் அவள் குடும்பத்தாரும் எதாவது வாகனம் வருகிறதா என்று காத்திருக்கிறார்கள் என்று கதை முடியும்.

அந்த சிறுகதைத் தொகுப்பில் மற்றொரு கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்குக் காரணம், அந்தக் கதை எங்கள் ஊரில் 1995ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச்சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. திருவாரூர் பாபு எழுதிய இந்தக் கதையின் முடிவு மிகவும் எதார்த்தமாக இருந்தது. இந்த கதைக் கருவை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாமே என்று யோசித்தேன். கதாபாத்திரங்கள், சம்பவங்கள் என்று அனைத்திலும் நான் வேறு பல மாற்றங்களுடன் என் மனதுக்குத் தோன்றிய நடையில் குறுநாவலாக எழுதி மாலைமதிக்கு அனுப்பினேன்.

அதுவும் பிரசுரமானது. ஆனால் தூரம் அதிகமில்லை வெளிவந்த இதழை மட்டும் நான் படிக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு குமுதத்தில் இருந்து 300 ரூபாய்க்கான காசோலை வந்த பிறகுதான் அந்த மாலைமதி இதழைத் தேடி அலைந்தேன். திருவாரூரில் உள்ள பத்திரிகை நிருபர்கள், முகவர்கள் ஆகியோரில் பலர் எனக்கு நண்பர்கள்தான். குமுதம் குழும பத்திரிகைகளின் முகவரிடம் தேடியும் இந்த இதழ் கிடைக்கவில்லை. பிறகு வாடகை நூல் நிலையம் நடத்தும் ஒரு நண்பரிடம் தேடி இந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்தேன்.

அந்த காசோலையை வசூலிப்பதற்காகத்தான் வங்கிக்கணக்கையும் ஆரம்பித்தேன்.

கந்தா படத்தின் இயக்குனர் படித்த கல்லூரியின் வணிகவியல் துறையில்தான் நானும் படித்தேன்.(திரு.வி.க கல்லூரியின் வணிகவியல் துறையில் படித்த எனக்குத்தெரிந்த மற்றொரு பத்திரிகை ஆசிரியர் 'குமுதம்' ப்ரியா கல்யாணராமன்.)சுதந்திரப்போராட்ட தியாகியான திருவாரூர் பாபுவின் தந்தை இரா.விஸ்வநாதன் என் தந்தையின் டீக்கடையில் நான் இருக்கும்போது அடிக்கடி வருவார். சாத்வீகமான அவரது தோற்றமே எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தோன்றும். அப்படி நான் எழுந்து நிற்கும்போது "கல்லாவுல இருக்குற நீ இப்படியெல்லாம் எழுந்து நிற்கத்தேவையிலைப்பா."என்று அன்போடு கூறுவார்.அப்போது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும்.

பாபுவின் தந்தை திருவாரூரில் தட்டச்சுப் பயிலகம் நடத்தி வந்ததால் ஆரம்ப கால கட்டத்திலேயே பாபு, கதைகளை தட்டச்சுதான் செய்து அனுப்பியிருக்கிறார். பிறகு தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வேலை செய்த அவர் இயக்குனர் சரணிடம் (சரவணன்) உதவி இயக்குனராக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஜே.ஜே, இதயத்திருடன் (பட்டியலில் சில படங்கள் விடுபட்டிருக்கலாம்.) ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

ஆசிரியர், மாணவனுக்கு இடையே உள்ள உறவை மையமாகக் கொண்டு கந்தா படத்தை இயக்கியிருக்கும் அவர் தஞ்சாவூரைத்தான் கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். முதலில் காமெடிப் பகுதிக்கு வடிவேலுவை நடிக்கவைக்க முயற்ச்சித்திருக்கிறார்கள். கால்ஷீட் பிரச்சனையால் விவேக் நடித்திருக்கிறார்.

ஆனால் பாபு இயக்கிய படத்தைப் பார்ப்பதற்குள் அவரது தந்தை இரா.விஸ்வநாதன் அமரராகிவிட்டார்.

பாபு.K.விஸ்வநாத் அவர்களுடன் நேரில் பேசியது இல்லை. அப்புறம் ஏன் அவரைப் பத்தியும் படத்தைப் பத்தியும் மாங்குமாங்குன்னு எழுதி பப்ளிசிட்டி கொடுக்குறன்னுதானே கேட்குறீங்க? எல்லாம் ஒரே ஊர்க்காரருன்னு பாசந்தான். தசாவதாரம் படத்தில் பல்ராம்நாயுடுவிடம் ஒரு பையன் தன் பெயர் நரசிம்மராவ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஆந்திராவா என்று வாஞ்சையாக கேட்பாரே அப்படித்தான் இதுவும்.
தூரம் அதிகமில்லை கதையின் அடுத்த ஐந்து அத்தியாயங்களை நான் பதிவேற்றம் செய்ய சற்று தாமதமாகும்போல் தெரிகிறது. வரும் ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களும் சென்னையில் இருப்பேன். அதனால் ஏப்ரல் இறுதியில் மீதமுள்ள ஐந்து அத்தியாயங்களையும் பதிவேற்றுகிறேன்.
இன்று உலகபுத்தகதினம். வாசிக்கும் பழக்கம் என்னை மேம்படுத்தியுள்ளது என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் பாடப்புத்தகம் தவிர மற்றவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லும்போது அதனால் என்ன பிரயோஜனம் என்று கேட்கும் மக்கள் இன்னும் அதிகமாகவே இருக்கிறார்கள். பாடப்புத்தகத்தை கஷ்டப்பட்டு படிப்பவர்கள்தான் அதிகம். ஆனால் மற்ற நூல்களை இஷ்டப்பட்டு படித்தால் அவை நிச்சயமாக நம் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

தூரம் அதிகமில்லை-குறுநாவல் 

சனி, 17 ஏப்ரல், 2010

கமல்ஹாசன் மீது தினமலருக்கு என்ன கோபம்?

எல்டாம்ஸ் ரோடுக்கு நடிகர் கமல்ஹாசனின் பெயரை வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. இதைக் கண்டித்து 11.04.2010 அன்று வெளிவந்த தினமலர்-வாரமலரின் இது உங்கள் இடம் பகுதியில் ஒருவர் கடிதம் எழுதி ஆயிரத்து ஐநூறு ரூபாய் பரிசும் வாங்கியிருக்கிறார்.

அந்தக் கடிதம்,

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா கூட்டத்தில், சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள எல்டாம்ஸ் சாலைக்கு, நடிகர் கமலஹாசன் பெயரை வைக்க வேண்டும் என்று வழிமொழிந்து, முன்மொழிந்து, முதல்வரிடம் கோரிக்கையும் வைக்கும் அளவிற்கு போயிருக்கின்றனர். நடிகர் கமலஹாசன், நாட்டுக்கு உழைத்த தியாகியா, இல்லை உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமா? அவர் ஒரு சினிமா வியாபாரி. திறமையானவர்; மறுப்பதற்கில்லை.
நடிகர் கமலஹாசனின் வீட்டிற்கு, நான்காவது வீடு என்றால், உடனே, அடையாளம் கண்டு கொள்கின்றனர் என்று, 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில், ஒரு பெண் வழிந்திருக்கிறார்.
தன் சொந்த வீட்டை விற்று, புரஜெக்டர் வாங்கி, கேரளாவில் கிராமம் கிராமமாக தூக்கிச் சென்று மக்களுக்கு இலவசமாக சினிமா போட்டு காட்டினாரே ஜான் ஆப்ரகாம்... அவர் போல கமலஹாசன் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா!
மனித குலத்துக்கு முரண்பாடான சிந்தனைகளை விதைக்கும் கூட்டத்தில் இவரும் ஒருவர். அவ்வளவுதான்!
'முள்ளும் மலரும்' என்ற அருமையான படமும், 'பதினாறு வயதினிலே' படமும், தமிழ் சினிமா வரலாற்றை, திசை திருப்பிய போது, மார்பை காட்டி ஏவி.எம்., கைக்குலுக்கலுடன், 'நான் தான் சகலகலா வல்லவன்...' என குலுக்கி, மீண்டும் படவுலகை கமர்ஷியல் பாதைக்கு திருப்பியவர். தேவைப்படும் போது இலக்கியவாதிகளின் (இதில் போலிகளும் அடக்கம்) தோளில் கைப்போட்டு, 'பீ அள்ளும் தாயம்மாள்...' என்று குமுத குழுமத்தில் கவிதை எழுதி, தன்னை என்னமோ தலித்களின் தலைவன் போல் காட்டிக் கொண்டவர்.
ஒரு தெருவிற்கு பெயர் வைக்கும் அளவுக்கு, இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
வியாபார படங்கள் வெளியிட்டு, 'துட்டு பார்க்கும்' ஜோலியை செய்து கொண்டிருக்கும் இவரின் பெயரை, தெருவிற்கு வைக்க இவர் என்ன, வாஜ்பாய் தேடிப் போய் காலில் விழுந்த சமூக சேவகியா?
இந்த வேகத்தில் போனால்... குஷ்பு தெரு, நயன்தாரா தெரு, சிவக்குமார் தெரு, விவேக் தெரு, வடிவேலு தெரு, ரம்பா தெரு, தமன்னா தெரு, ஜீவா தெரு, சின்னத்திரை சிங்காரிகள் தெரு, சரத்குமார் தெரு, ராதிகா தெரு என்று வைக்கக்கோரி, கோரிக்கை வைத்துக் கொண்டே போவர். தமிழ்நாடு எந்த அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது என்பது, இவர்களது குறுகிய சிந்தனையில் பட்டவர்த்தனமாக தெரிகிறது.
— ஏ.ஸ்ரீதரன், கே.கே.நகர்.

இதில் உதாரணமாக சொல்லியிருக்கும் முள்ளும் மலரும் படத்தின் படப்பிடிப்பு 99 சதவீதம் முடிந்த நிலையில் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் மீதமுள்ள படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டாராம்.

சரத்பாபுவும் ஷோபாவும் சந்திக்கும் முக்கியக் காட்சியும் செந்தாழம்பூ பாடலும்தான் படம்பிடிக்க வேண்டிய காட்சிகள். படத்தின் முக்கிய ஜீவனான இந்தக் காட்சிகளை எடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்தால் என்ன ஆகுமோ என்று இயக்குனர் மகேந்திரன் தவித்து நின்றபோது மூவாயிரம் அடி பிலிமுக்கு ஏற்பாடு செய்து படப்பிடிப்பை நடத்த உதவியது கமல்ஹாசன்தான். இதை இயக்குனர் மகேந்திரனே "நானும் சினிமாவும்" என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

இது தவிர ஹீரோ என்றால் சூப்பர்மேனாக மட்டும்தான் இருப்பார் என்று இருந்து வந்த தமிழ் சினிமாவின் இலக்கணத்தை ஓரளவாவது உடைத்த ஆளாக கமல்ஹாசன் இருப்பார். அதற்காக அவர் பெயரை எல்டாம்ஸ் ரோடுக்கு வைக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

சினிமாவை பின்னுக்கு இழுத்தது என்று இவரை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வளவு காரசாரமான கடிதம் ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி. மசாலா வாசனையில் ரசிகர்களை மயக்கி கோடி கோடியாக சம்பாதிக்கும் பெரியதலைகள் யாரும் தங்கள் படங்களை பரிசோதனை முயற்சியாக செய்ய வேண்டாம். ஆண்டுக்கு இப்படி ஒரு படம் தயாரிக்க கூட மனமில்லாமல் இருக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பவர்களுக்கு கூட மசாலா படங்கள் தயாரிப்பதில்தான் குறி.
 அவர்களைப் பற்றி எழுதினால் பின்விளைவுகள் அதிகமாகவே இருக்கும் என்று எழுதியவருக்கும் தெரியும். ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்தவர்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அதனால்தான் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பையா ... அடப்போங்கய்யா...(இது விமர்சனமல்ல.)

"நான் கதாசிரியர்..."

"வந்த படத்துக்கா, வராத படத்துக்கா..."-இந்த வசனம் பூவே உனக்காக படத்தில் 'மதன்பாப்'பிடம் சார்லி பேசுவது.

அந்தப்படத்தில் கதாசிரியர் என்பவர் காமெடியனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். பெரும்பாலும் திரையுலக ஜாம்பவான்களும் கதாசிரியரை ஒரு பொருட்டாகவே மதிப்பதே இல்லை. பாடல், சில காட்சி அமைப்புகள் என்று பையா நல்ல பெயர் வாங்கினாலும் கதை என்ற விஷயத்தை வழக்கம்போல் மறந்ததால் சந்தேகத்திற்கு இடமில்லாத வெற்றி என்று சொல்ல முடியவில்லை.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வசந்தபாலன்,"தொழில்நுட்பத்தைக்கொண்டு மிரட்ட தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.கதை சொல்லத்தான் ஆள் பற்றாக்குறை."என்று சொன்னார்.இது உண்மைதான். நானும் இப்படி அனுபவப்பட்டிருக்கிறேன்.

 நான் எழுதிய சில கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமான நேரம். அந்த ஆர்வத்தில் கதை சொல்கிறேன் என்றதும்,விவேக்குடன் நகைச்சுவைக்காட்சிகளில் தோன்றும் நந்தகுமார் என்ற நடிகரிடம் நண்பன் ஒருவன் அழைத்துச் சென்றான்.(ஒரு படத்தில் மிஸ்டர் சோத்தப்பன்...என்று விவேக் சொன்னதும், சாத்தப்பன் என்று சொல்வாரே...அவர்தான்.ரன் படத்தில் விவேக்கின் தந்தையாக வருவதும் இவர்தான்.)

எப்படி சொல்றான்னு பார்த்துட்டு யாராவது ஒரு இயக்குனரிடம் உதவியாளரா சேர்த்துவிடுறேன்.என்று என் நண்பனிடம் சொல்லியிருக்கிறார்.இத்தகைய நல்ல வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை.ஆர்வக்கோளாறில் ஒரு பஸ், குற்றாலத்தில் இருந்து சென்னைக்கு பயணம் என்று உளறினேன்.

நான் கதை (!?) சொல்லி முடிச்சதும், "இந்த மாதிரி கதை சொல்ல ஆரம்பிச்ச உடனே எழுந்திரிச்சு வெளியே போன்னு சொல்லிடுவாங்க. இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு."அப்படின்னு நிறைய புத்தி சொல்லி, மறுபடி உருப்படியான கதையோட வான்னு சொன்னார். ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளரா சேர்றது எவ்வளவு கஷ்டம்னு எல்லாருக்குமே தெரியும்.என் சோம்பேறித்தனத்தால அவர்கிட்ட ஆறு வருஷமா கதை சொல்லப்போகணும்னு நினைச்சுகிட்டே இருக்கேன்.

அதை விடுங்க. வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனரான லிங்குசாமி ஒரே மாதிரி படங்களா கொடுத்துகிட்டு இருக்குறது ஏன்னு புரியலை. கதைன்னா படம் பார்க்குறவங்களோட மனசை கலங்க வைக்கிறதுன்னு இல்லை. சாதாரண நாலு வரிக்கதையை சுவாரஸ்யத்தோட சொன்னாலே போதும்.

பாடத்துல மக்கா இருந்து வீட்டுல திட்டுவாங்குற காமெடி பீசா இருக்குற ஒருத்தன் ஒரு பொண்ணை அவ மாமன்கிட்ட இருந்து காப்பாத்துறான்.-இதுதான் கில்லி படத்தோட கதை. சொல்லும்போது ரொம்ப சாதாரணமா இருக்குல்ல. ஆனா இது கூட சூப்பர் கதையானதற்கு காரணம் ரொம்பவும் சிம்பிள். விஜய், பிரகாஷ்ராஜ் ரெண்டு பேருக்கும் அந்த கேரக்டர் பொருத்தமா இருந்துச்சு. பாட்டு ஹிட். படம் அதிரடி வெற்றி.

வழவழான்னு கதையை சொல்லிகிட்டு இருந்தா புரொடியூசருங்க நம்மளை வெளில போக சொல்லிடணும். இல்லன்னா, ஜனங்க யாரும் வரலைன்னு தியேட்டரை விட்டு முதலாளிங்க படத்தை துரத்திடுவாங்க.

நல்ல கதைன்னு ஒண்ணும் இல்லை. தெளிவான கதையோட வந்த பல படங்கள் தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனா தெளிவில்லாத கதையோட வந்த ஒரு படம் கூட வெற்றி அடைஞ்சிருக்காது. இதை மனசுல வெச்சுகிட்டு படம் பண்ணினாங்கண்ணா தேவலை.
எந்த கதையை வேணுன்னாலும் படமா எடுங்க. அந்தக் கதை என்ன கேட்குதோ அதைதான் திரைக்கதையில செய்யணும். ஹீரோவுக்காக செய்தா வெற்றியோட சதவீதம் மிக மிக மிக.........குறைவு.

சுருக்கமா சொன்னா, ஹிட்டு இல்ல...ஹிட்டு மாதிரி.

பையா ... அடப்போங்கய்யா...(இது விமர்சனமல்ல.)

"நான் கதாசிரியர்..."

"வந்த படத்துக்கா, வராத படத்துக்கா..."-இந்த வசனம் பூவே உனக்காக படத்தில் 'மதன்பாப்'பிடம் சார்லி பேசுவது.

அந்தப்படத்தில் கதாசிரியர் என்பவர் காமெடியனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். பெரும்பாலும் திரையுலக ஜாம்பவான்களும் கதாசிரியரை ஒரு பொருட்டாகவே மதிப்பதே இல்லை. பாடல், சில காட்சி அமைப்புகள் என்று பையா நல்ல பெயர் வாங்கினாலும் கதை என்ற விஷயத்தை வழக்கம்போல் மறந்ததால் சந்தேகத்திற்கு இடமில்லாத வெற்றி என்று சொல்ல முடியவில்லை.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வசந்தபாலன்,"தொழில்நுட்பத்தைக்கொண்டு மிரட்ட தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.கதை சொல்லத்தான் ஆள் பற்றாக்குறை."என்று சொன்னார்.இது உண்மைதான். நானும் இப்படி அனுபவப்பட்டிருக்கிறேன்.

 நான் எழுதிய சில கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமான நேரம். அந்த ஆர்வத்தில் கதை சொல்கிறேன் என்றதும்,விவேக்குடன் நகைச்சுவைக்காட்சிகளில் தோன்றும் நந்தகுமார் என்ற நடிகரிடம் நண்பன் ஒருவன் அழைத்துச் சென்றான்.(ஒரு படத்தில் மிஸ்டர் சோத்தப்பன்...என்று விவேக் சொன்னதும், சாத்தப்பன் என்று சொல்வாரே...அவர்தான்.ரன் படத்தில் விவேக்கின் தந்தையாக வருவதும் இவர்தான்.)

எப்படி சொல்றான்னு பார்த்துட்டு யாராவது ஒரு இயக்குனரிடம் உதவியாளரா சேர்த்துவிடுறேன்.என்று என் நண்பனிடம் சொல்லியிருக்கிறார்.இத்தகைய நல்ல வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை.ஆர்வக்கோளாறில் ஒரு பஸ், குற்றாலத்தில் இருந்து சென்னைக்கு பயணம் என்று உளறினேன்.

நான் கதை (!?) சொல்லி முடிச்சதும், "இந்த மாதிரி கதை சொல்ல ஆரம்பிச்ச உடனே எழுந்திரிச்சு வெளியே போன்னு சொல்லிடுவாங்க. இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு."அப்படின்னு நிறைய புத்தி சொல்லி, மறுபடி உருப்படியான கதையோட வான்னு சொன்னார். ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளரா சேர்றது எவ்வளவு கஷ்டம்னு எல்லாருக்குமே தெரியும்.என் சோம்பேறித்தனத்தால அவர்கிட்ட ஆறு வருஷமா கதை சொல்லப்போகணும்னு நினைச்சுகிட்டே இருக்கேன்.

அதை விடுங்க. வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனரான லிங்குசாமி ஒரே மாதிரி படங்களா கொடுத்துகிட்டு இருக்குறது ஏன்னு புரியலை. கதைன்னா படம் பார்க்குறவங்களோட மனசை கலங்க வைக்கிறதுன்னு இல்லை. சாதாரண நாலு வரிக்கதையை சுவாரஸ்யத்தோட சொன்னாலே போதும்.

பாடத்துல மக்கா இருந்து வீட்டுல திட்டுவாங்குற காமெடி பீசா இருக்குற ஒருத்தன் ஒரு பொண்ணை அவ மாமன்கிட்ட இருந்து காப்பாத்துறான்.-இதுதான் கில்லி படத்தோட கதை. சொல்லும்போது ரொம்ப சாதாரணமா இருக்குல்ல. ஆனா இது கூட சூப்பர் கதையானதற்கு காரணம் ரொம்பவும் சிம்பிள். விஜய், பிரகாஷ்ராஜ் ரெண்டு பேருக்கும் அந்த கேரக்டர் பொருத்தமா இருந்துச்சு. பாட்டு ஹிட். படம் அதிரடி வெற்றி.

வழவழான்னு கதையை சொல்லிகிட்டு இருந்தா புரொடியூசருங்க நம்மளை வெளில போக சொல்லிடணும். இல்லன்னா, ஜனங்க யாரும் வரலைன்னு தியேட்டரை விட்டு முதலாளிங்க படத்தை துரத்திடுவாங்க.

நல்ல கதைன்னு ஒண்ணும் இல்லை. தெளிவான கதையோட வந்த பல படங்கள் தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனா தெளிவில்லாத கதையோட வந்த ஒரு படம் கூட வெற்றி அடைஞ்சிருக்காது. இதை மனசுல வெச்சுகிட்டு படம் பண்ணினாங்கண்ணா தேவலை.
எந்த கதையை வேணுன்னாலும் படமா எடுங்க. அந்தக் கதை என்ன கேட்குதோ அதைதான் திரைக்கதையில செய்யணும். ஹீரோவுக்காக செய்தா வெற்றியோட சதவீதம் மிக மிக மிக.........குறைவு.

சுருக்கமா சொன்னா, ஹிட்டு இல்ல...ஹிட்டு மாதிரி.

புதன், 31 மார்ச், 2010

அங்காடித்தெருவும் சூதாட்டமும்

கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 28.03.2010 அன்று சற்று வித்தியாசமான சுற்று. இதுவரை பல சுற்றுக்களில் பிரகாசிக்க முடியாமல் படங்கள் விலக்கப்பட்டாலும் அந்த இயக்குனர்களிடம் திறமை இருப்பதாக நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள்.
ஆல்பம் படம் எடுத்து தோற்ற வசந்தபாலன் வெயிலில் ஜெயித்தார். இந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சியில் சூதாட்டம் என்ற குறும்படம் எடுத்த சாமும் அப்படித்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

பெண்ணின் திருமணத்துக்காக இருபத்தைந்தாயிரம் கடன் கேட்கும் வேலைக்காரியிடம்,"ஏன் நாட்டோட பொருளாதாரம் கீழே போகும்போது இவ்வளவு செலவு பண்ணி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்குற. நாலு பேர அழைச்சுட்டு போய் கோவில்ல வெச்சு தாலிகட்டினா போதாதா." என்று கேட்பார்.

ஆனால், வாகனத்துக்கு பேன்சி நம்பர் வாங்க ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பார். ஆனால் அவரது மேனேஜர், ஐம்பதாயிரத்தை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஐம்பதாயிரத்தை மட்டும்தான் பேன்சி நம்பர் வாங்க லஞ்சமாக கொடுப்பார்.

இந்த தொழிலதிபரிடமே வருமானவரித்துறை ரெய்டு வருவதாக பயமுறுத்தி விலை உயர்ந்த வைரங்களை அவரிடமிருந்து போலி ஆபிசர் வைத்து ஒரு நபர் ஏமாற்றுவார்.

இப்படி பல தொழிலதிபர்களிடம் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும், அவரிடமே இருக்கும் மேலாளர் போன்றவர்கள் தில்லுமுல்லு செய்து கொழுத்து வளருவதும், இவர்கள் சூதாட்டம், லஞ்சம், ரெய்டு, போலீஸ் என்று செலவு செய்வதும் இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்தியது இந்த குறும்படம்.

அங்காடித்தெரு படத்தில் கூட பணியாளர்கள் அவதிப்பட்டு பல தொந்தரவுக்கும் ஆளாகும் நேரத்தில் கருங்காலி போன்றவர்கள் அடுத்தவர்களை இம்சித்துக்கொண்டு, தாங்கள் ஜாலியாகத்தானே இருக்கிறார்கள்.

என் மனதைக் கவர்ந்த இந்த குறும்படம் கலைஞர் தொலைக்காட்சியில் 01.04.2010 இரவு பத்தரை மணிக்கு மறு ஒளிபரப்பாகும்.
******
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது. எடுறா அந்த கீபோர்ட...தட்றா ஒரு தொடர்கதையை அப்படின்னு எனக்குள்ளே ஒரு அவலக்குரல்...ச்சே...அற்புதமான குரலைக்கேட்டு ரெடியாயிட்டோம்ல.
ஏப்ரல் 14, 2010 புதன்கிழமை அன்னைக்கு ஆரம்பம்.

வெள்ளி, 26 மார்ச், 2010

ஆறு வருஷமா என் கேள்விக்கு பதிலே தெரியலையே...இப்பவாச்சும் யாராவது சொல்லுங்களேன்.

"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.
அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?

எனக்கு புரியவில்லையே என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். யாருக்கு என்றுதானே கேட்குறீங்க? மாதமும் தேதியும் நினைவில் இல்லை. 2004ம் ஆண்டு ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்த வாக்கியங்கள்தான் இந்தப் பதிவின் முதல் பாராவில் உள்ளன.

இதைப் படிச்சுட்டு எத்தனை பேர் என் கூட சண்டைக்கு வர்றாங்க, விகடன், சத்குருவுக்கு ஆதரவா பேசுறாங்க, இவனே ஒரு காமெடி பீஸ். இதுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கணுமான்னு ஒதுங்கிப் போறாங்கன்னு பார்ப்போம்.

அப்பவே விகடன்ல இந்த சந்தேகத்தை தீர்த்து வெச்சிருந்தா நான் இந்த பதிவை எழுதியிருக்கப்போறதே இல்லை.ஆனா இப்பவும் அவரோட கருத்துக்களை பெரிய வேதம் மாதிரி சில பிரபலங்களே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சிருக்குறதுதான் எனக்கு நெருடலா இருக்கு.

அவரோட தியான முறைகள் நிறைய பேருக்கு நல்லது பண்ணியிருக்கலாம். அது வரைக்கும் சந்தோஷம். ஆனா அவரோட பல கட்டுரைகள் சராசரி மனிதனை விட்டுட்டு ரொம்ப மேதாவித்தனமா சிந்திக்கிறவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் இருக்கு.

அதையெல்லாம் அப்புறம் விவாதிக்கலாம்.

என்னோட ஆறு வருஷ சந்தேகத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுங்களேன்.

மீண்டும் அந்த வாக்கியங்கள்.

"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.

இதில் சொல்லியிருப்பது சரியா?


அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?

இது என் மனதில் தோன்றிய சந்தேகம். பதிலை நீங்க சொல்லுங்க.

வியாழன், 25 மார்ச், 2010

சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...(ஒரு குரூப்பாத்தான் அலையுறாய்ங்களோ?)

கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.
இது பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.இப்போது என் கவனத்துக்கு வந்த விஷயமே வேறு.சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை ஏய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தண்ணியடிக்க மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான்.பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

புதன், 24 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு - என் பார்வையில்...

என்ன இது ஒருத்தனையே காட்டி அறுத்துகிட்டு இருக்கானுங்க? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் பார்த்து இப்படி கேட்டது வயதான பெண்மணி ஒருவர். நம்மில் பலருக்கு படம் என்றால் பழைய படங்கள் போல பெரிய குடும்பம் அல்லது இப்போதைய கே.எஸ்.ரவிக்குமார் படம் போல இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு பிம்பம் வைத்திருக்கிறோம்.
இப்போது காதலித்துக்கொண்டிருப்பவர்களும் காதலிக்க முடியவில்லையே என்று யோசிப்பவர்களும் பார்த்து ஃபீல் பண்ண வைத்தது வி.தா.வ படம். என்ன தொழில் செய்வது அல்லது என்ன வேலைக்குப் போவது (வேலையே கிடைக்காதவர்களுக்கு அது மட்டும்தான் பெரிய பிரச்சனை.) என்று நிறைய ஆண்கள் இன்று வரை தீர்மானமான முடிவு எடுக்காமல்தான் எதிலோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பெண்களுக்கு திருமணம் அல்லது காதல் விஷயத்தில்தான் இந்த தடுமாற்றம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.(பெண்ணின் மற்ற விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் ...............................களைப் பற்றி நான் சொல்வதற்கில்லை.)

எங்க அப்பா உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா நான் ரெடி. ஆனா நான் உங்களை விரும்புறதா சொல்ல மாட்டேன். என்று சொன்ன ஒரு பெண்ணை நான் பார்த்திருப்பதால் படத்தில் ஜெஸ்ஸியைப் பார்த்ததும் அதில் த்ரிஷா தெரியவில்லை. நிறைய பெண்களின் பிம்பமாகத்தான் பார்க்க முடிந்தது.

என்ன செய்யுறது...பத்து வயசுல இருந்து வேலை நேரம் போக கொஞ்சம் கொஞ்சம் படிப்புன்னு இருந்ததால ஊருல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ..................யை லவ் பண்ணினேன்னு கேட்க மனசு ரெடியாகலை.

இந்த மாதிரி ஒரு பொண்ணு லவ் பண்றதுக்கு கூட கொடுப்பினை வேணும்.அப்படின்னு பலரையும் புலம்ப வெச்சதுதான் இந்த படத்தோட வெற்றி.

ஆனா அந்த பொண்ணு ஜெஸ்ஸியோட கேரக்டர்...சான்சே இல்லை.

இந்தப் படம் வசதியான மற்றும் மிடில் கிளாஸ் இளைஞர்கள் ஒரு வித ஆர்வத்தோடயும் வறுமைக்கோட்டு லெவல்லயும் அதுக்கு கீழயும் இருக்குற இளைஞர்கள் ஐம்பது வருஷத்துக்கு முன்னால காரைப் பார்த்தமாதிரியும்தான் இந்தப் படத்தைப் பார்த்திருப்பாங்க.

ஏன்னா இவங்க வாழ்க்கையில வர்ற காதல் மோதல் மாதிரியான விஷயங்களை நிறைய தமிழ்ப்படங்கள் மித மிஞ்சிய மேக்கப்போடதான் காட்டியிருக்கு.

அடுத்து ரிலீசாகப்போற அங்காடித்தெரு - ரங்கநாதன் தெருவுல இருக்குற பளபளப்பான கடைகளில் இருக்குற ஊழியர்களின் வலி நிறைஞ்ச வாழ்க்கையை சொல்லும்னு நினைக்கிறேன். பார்ப்போம்.
ஒண்ணு படம் வந்து பல நாளைக்கப்புறம் விமர்சனம் எழுதுற...இல்ல படம் ரிலீசாகுறதுக்கு முன்னால டிரெய்லர் விட்டுப் பார்க்குறன்னு சொல்லி திட்டாதீங்க. நாம நினைக்கிறத நினைச்ச நேரத்துல எழுதி இம்சை கொடுக்குறதுக்குதானே பிளாக் இருக்கு?

திங்கள், 22 மார்ச், 2010

நீண்...........ட இடைவேளைக்கப்புறம் பாக்யாவில் நான் எழுதிய கதை!

எத்தனையோ கதை எழுதி அனுப்பியிருந்தாலும் இந்தக் கதையை ஏன் சார் அவங்க பிரசுரம் செஞ்சாங்க?...கதையைப்படிச்சு முடிச்சதும் உங்களுக்கு எதாவது காரணம் தெரியுதான்னு பாருங்க.

கொடை வள்ளல் - ஒரு பக்க கதை

அழைப்பு மணியோசை கேட்டதுமே என் மனதில் குழப்பம்.

"இங்க குடி வந்து ரெண்டு நாள்தானே ஆகுது. வேண்டியவங்களுக்கு எல்லாம் இனிமேதான் முகவரியை தெரியப்படுத்தணும். அதுக்குள்ள யாரா இருக்கும்"என்று நினைத்துக் கொண்டே கதவைத்திறந்தேன்.

ஆறு நடுத்தர வயது ஆண்கள் காவியுடை, நெற்றியில் விபூதி குங்குமம், நோட்டீஸ், மஞ்சள் பை என்று நின்றதுமே, "இந்த மாதிரி ஆளுங்களோட தொல்லை தாங்காதே..."என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்தபடி "என்ன விஷயம்?" என்றேன்.

ஒருவர் தன் பற்களை எல்லாம் என்னிடம் காட்டியே தீருவது என்ற முடிவுடன் ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டு, "சார்...பத்து நாள்ல நம்ம தெரு அம்மன் கோயில் திருவிழா..."என்றவாறு நோட்டீசை என் கையில் திணித்தார். மற்றொருவர் ரசீதுப் புத்தகத்தில் எழுதத் தயாரானார்.

'என் மனைவிக்கு பக்தி அதிகம்னு இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா...பர்சை விட்டு பறந்துடுச்சுடா பெரிய தொகை' என்று நான் மனதுக்குள் அதிர்ந்த  நேரத்தில்தான் அந்த திருப்பம்.
"என்னங்க...நான் பேசிக்குறேன்..." என்று அருகே வந்த என் மனைவி,

"அய்யா...இந்த மாதிரி கோயிலுக்கெல்லாம் பணம் கொடுக்குறது என் வீட்டுக் காரருக்கு சுத்தமா பிடிக்காது. இருந்தாலும் வீடு தேடி வந்த உங்களை வெறும் கையோட அனுப்ப எனக்கு மனசில்லை. இந்தாங்க...இருபது ரூபாய்..."என்று அவர்களிடம் கொடுத்தாள்.

வந்தவர்கள் எதுவும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தந்துவிட்டுச் சென்றார்கள்.

'புது வீட்டுக்கு வந்ததும் என் மனைவி இப்படி மாறிட்டாளே' என்ற சந்தோஷம் எனக்கு. அவளிடமே என் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.

"நீங்க ஏதேதோ கற்பனை பண்ணீக்காதீங்க. நான் அவங்களை இருபது ரூபாயோட அனுப்பக் காரணமே வேற. நேற்றே அந்தக் கோயிலைப் பற்றி விசாரிச்சுட்டேன். இங்க ரெகுலரா பூஜை செய்ய ஆள் கிடையாதாம். வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களுக்கு மட்டும் ஒரு குருக்களை வெச்சு பூஜை செய்யுறாங்களாம். மற்ற நாட்களில் சரியா  விளக்கு கூட எரியுறது இல்லைன்னு சொன்னாங்க.

ஆனா இந்த ஆட்கள் ஒவ்வொரு வருடமும் வசூல் பண்ணி பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சின்னு செலவழிக்கிறாங்களாம். இந்த மாதிரி வசூல் செய்த பணத்தை வெச்சு தினமும் ஒருகால வழிபாடு நடக்க ஏற்பாடு பண்ணின பிறகு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினா பரவாயில்லை.

வருஷம் பூராவும் பட்டினி போட்டுட்டு ஒரே ஒரு நாள் விருந்து வைக்கிற செயலுக்கு நாம் ஏன் அதிகமா கொடுக்கணும்னு நினைச்சுதான் இருபது ரூபாயோட அனுப்பினேன். இந்த திருவிழா முடிஞ்ச பிறகு தினமும் வழிபாடு நடக்க கண்டிப்பா நான் ஏற்பாடு செய்வேன்...

அப்ப ஒரு பெரிய தொகையை நீங்கதான் தரணும்..." என்று என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் 'தடால்' என்று ஒரு சத்தம்...

என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க...நான் தான்  மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.
******
இந்தக்கதையை வழிபாடுன்னு தலைப்பு கொடுத்து அனுப்பியிருந்தேன். மார்ச் 25 ஏப்ரல் 1, 2010 பாக்யா வார இதழ்ல பிரசுரம் ஆகியிருக்கு. ஆனா வேற ஒரு புனைப்பெயர்ல.

ராட்டினத்தை சுத்துனா(கொசுவர்த்தியை ரொம்ப பேர் சுத்திட்டாங்க...இன்னும் சுத்திகிட்டே இருக்காங்க.நம்ம சித்ரா டீச்சரும் கிரைண்டரை சுத்திட்டாங்க.அதனால நான் ராட்டினத்தை சுத்துறேன்.) 2004 ஏப்ரல். பாக்யாவுல ஒரு கதை பிரசுரம் ஆகியிருந்துச்சு. அப்புறம் சில கதைகள் அனுப்பியிருந்தேன்.அவங்க கவனிக்கலை.அப்புறம் நான் வேற பத்திரிகைகள்ல அனுப்புன கதைகளுக்கு பரிசு கிடைக்க ஆரம்பிச்ச உடனே இந்த மாதிரி பத்திரிகைகளை நான் கண்டுக்கலை. ராட்டினத்தை நிறுத்தியாச்சுங்க. அவ்ளோதான் இப்ப இருக்குற மேட்டரு.

வெள்ளி, 12 மார்ச், 2010

மழை நீர் சேகரிப்பு - சில வழிமுறைகள்

 மழை நீர் சேகரிப்பு முறையை வெற்றிகரமாக செய்து தரும் பொறியாளர் ஒருவர் திருவாரூரில் இருக்கிறார். நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கல்லூரி ஆண்டு மலரில் அவரது பேட்டியை இடம்பெறச் செய்தோம்.
  அவரை நேர்காணல் செய்வதற்கு என்னால் செல்ல இயலவில்லை. ஆனால் பேட்டி எடுக்கச் சென்று வந்தவர்கள் கிறுக்கிக்கொண்டு வந்ததை தொகுத்து அச்சுக்கு அனுப்பினேன்.

அந்தப் பக்கங்கள் உங்களுக்காக.

படங்களின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும்.
******

இந்த ஒளிப்படத்தில் இருப்பது 2002-2003ம் வருஷம் கல்லூரி ஆண்டு மலரின் ஆசிரியர் குழுவினர். தமிழ்ப்பேராசிரியரும் நானும் மட்டுமே 95 சதவீத வேலைகளைக் கவனித்தது வேறு விஷயம்.


புதன், 10 மார்ச், 2010

நித்தியானந்தா நீலப்படமும் ஷோலே திரைக்காவியமும்

'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?' இந்த வசனத்தைப் பற்றி சொல்லும்முன் ஷோலே படம் பற்றி பேசி விடுகிறேன்.

வாடகை கொடுத்து தினசரி ஒரு காட்சிகாளாக ஒரு படத்தை ஆளில்லா தியேட்டரில் காட்டிவிட்டு திரையுலக வரலாற்றுச் சாதனை என்று சொல்பவர்கள் "பணம் கொடுத்து படம் பார்க்க வர்றவனுங்க தப்பிச்சாச்சு.சம்பளம் வாங்குறதால நான்தான் மாட்டிகிட்டேன்."அப்படின்னு கதறுற ஆப்ரேட்டர்களோட குரலையும் கொஞ்சம் கேட்டால் தேவலை.

இப்படி எல்லாம் இல்லாம மெய்யாலுமே சாதனை பண்ணின ஹிந்திப்படம்தான் ஷோலே. திருவள்ளுவரே கதறுற மாதிரியெல்லாம் அவங்க தமிழ் பேசலை. நேரடி ஹிந்திப்படமாவே ரிலீஸ் ஆனாலும் பள்ளிக்கூடத்தின் பக்கமே ஒதுங்காதவங்க கூட அவ்வளவு ஆர்வமா பார்த்தாங்க.

ஆனா எனக்கு இந்தப்  படத்தைப் பார்க்குற வாய்ப்பு 1997ல தான் கிடைச்சுது.(வழக்கம்போல நான் தியேட்டர்ல வேலை பார்த்தது பத்தின புராணம்தான் இது. கொஞ்சம் பொறுத்துக்குங்க.) இருபத்துமூணு ரீல் கொண்ட படம்.ஒரே டிக்கட்டில் இரண்டு படங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணலாம். அந்த அளவுக்கு நீ.............ளமானது.

புரொஜக்டர் அறையிலதான் எனக்கு வேலைன்னுங்குறதால சென்சார் சர்ட்டிபிகேட்ல இருந்து முழுப்படத்தையும் பார்த்துடுறது வழக்கம்.1975 ம் வருஷம் ஆகஸ்ட் 22ம் தேதி ரிலீசானதுன்னு நினைக்கிறேன். தேதி தவறா இருக்கலாம்.ஆனா வருஷம் இதுதான்.

இப்ப எதுக்கு இந்த புள்ளி விவரம்னுதானே கேட்குறீங்க.இப்ப எவ்வளவோ நாகரீகம் வளர்ந்துருக்குன்னு சொல்றோமே...இந்தப் படத்துல நான் ரொம்பவும் பிரமிப்போட கவனிச்ச ஒரு காட்சி இப்ப நினைவுக்கு வரக்காரணம் நித்தியானந்தா வீடியோ விவகாரத்துல சில ஊடகங்களின்  கேவலமான அணுகுமுறைதான்.
ஷோலே படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே வில்லன் அம்ஜத்கான் அழிப்பதாக காட்சி வரும்.பெரியவர்கள் சிலரை அவர் சுட்டுக்கொன்றதும் சிறுவன் ஒருவன் அங்கே ஓடி வருவான். அப்போது துப்பாக்கியை வைத்து அம்ஜத்கான் குறி பார்ப்பார். விசையை அழுத்து நொடி, நீராவி ரயில் எஞ்சினின் சக்கரம் சுழலுவதும்  இரைச்சலான சத்தத்துடன் நீராவி வெளியேறுவதும்தான் காண்பிக்கப்படும்.

இந்தப் படத்தை நான் திரையிட்டும் பதினாலு ஆண்டுகள் ஆகின்றன.இவ்வளவு நாட்கள் கழித்தும் இந்தக் காட்சி என் மனதில் நிற்கிறது. ஆனால் எவ்வளவோ படங்களில் மிக மோசமான ரத்தக் காட்சிகளைப் பார்த்தும் அவை அந்த நேரம் கூட ஒழுங்காக பதற வைக்கவில்லை.
இயக்குனர் மகேந்திரன், நானும் சினிமாவும் என்ற புத்தகத்தில் "எதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று சில இயக்குனர்கள் அருவருக்கத்தக்க காட்சிகளைப் படமாக்குகிறார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார். கிராமங்களில் புதர் மறைவில் மக்கள் ஒதுங்குவதும் இயற்கைதான். அந்த இயக்குனரின் தாய்-தந்தை கூடுவதும் இயற்கைதான். அதற்காக அவற்றை அப்படியே படமாக்க முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இதையேதான் நானும் கேட்கிறேன்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் மகன் அவமானப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட தந்தை, கத்தியுடன் தண்ணீரில் மூழ்குவார். வெளியே அவரது உடல் வராது. தண்ணீரில் ரத்தம் மட்டும் கொப்பளிக்கும். இந்தக் காட்சியும் நம்மை பதற வைத்ததுதான்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும் தண்ணீரில் மூழ்கி இறந்த  குழந்தையை காட்டாமல் பொம்மை மிதப்பதைதான் காட்டுவார்கள்.இது போல் எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.

சுனாமியில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்திருந்தாலும் மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஒரு புகைப்படக்கலைஞருக்கு விலை உயர்ந்த கேமராவையும் கிட்டத்தட்ட ஐந்தரை லட்ச ரூபாய் பரிசையும் பெற்றுத்தந்த ஒளிப்படம் எது தெரியுமா?
வேறு யாருமில்லாத கடற்கரையில் மண்டியிட்டுக் குனிந்து கதறும் பெண்மணி. அவரின் அருகில் பிரேமின் ஓரத்தில் ஒரு சடலத்தின் கை மட்டும். ஒட்டு மொத்த சுனாமியின் அவலத்தை செய்தி சேனல்களில் வந்த லட்சக்கணக்கான சடலங்களைக்காட்டிலும் இந்த ஒரு ஒளிப்படம் சொன்னது.

மக்களுக்கு துயரத்தையோ ஒரு விஷயத்தையோ உணர்த்த வேண்டும் என்று அவ்வளவு அசிங்கங்களையும் அள்ளித் தெளித்தால் அது வெறும் வியாபார உத்திதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

படங்களில் மோசமான காட்சிகள் இடம்பெற்றாலும் அவற்றை தியேட்டருக்குச் சென்றுதான் பார்ப்போம்.அருவருக்கத்தக்க காட்சிகள் தொலைக்காட்சியில் வந்தாலும் வேறு சேனல் மாறி விடுவோம். ஆனால் எல்லாரும் பரிந்துரைக்கும் சேனல் என்றால் டிஸ்கவரி, நியூஸ் சேனல் பாருங்கள் என்பதுதான். தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிக அளவில் அனைவரும் பார்க்கும் செய்தி சேனல் ஒன்றில் சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்துகிறேன் என்ற போர்வையைப்போர்த்திக்கொண்டு கண்ணியமான பெற்றோர்களை இப்படி அலற விட வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.

பொங்கல் அன்று குருவி படத்தை திரையிட்ட கலைஞர் தொலைக்காட்சியில் நான் ஒரு விஷயத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். சண்டைக் காட்சிகளில், அரிவாள் வெட்டு வரும்போது எல்லாம் காட்சிகள் கருப்பு வெள்ளையாகிவிடும்.படத்திலேயே இப்படியா அல்லது சேனலில் செய்த நல்ல காரியமா என்பது தெரியவில்லை.

விஜய் நடித்த கில்லி படத்தில் அவர் த்ரிஷாவுடன் மதுரையில் இருந்து முதலில் தப்பிக்கும் காட்சியில் டாடா சுமோ சேசிங் எடுக்கும்போது ஒரு வாகனம் மோதி படத்தின் கேமராமேன் கோபிநாத் படுகாயமடைந்ததாக எல்லாம் செய்திகள் வெளியானது. அந்தக் காட்சிகளில் என் கவனத்தைக் கவர்ந்தது இரண்டு ஷாட்டுகள்.

ராஜா என்ற ஸ்டண்ட் நடிகர் (மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரில் வீரப்பனின் கேரக்கடரில் நடித்தவர். அந்த வேடத்திற்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தினார்.இதைப்பார்க்கவில்லையா நீங்கள். போக்கிரி படத்தில் வடிவேலுவின் 'வட போச்சே' காமெடியில் காதலி கெ ளரி எழுதிய கடிதத்தை இழப்பாரே அவர்தான்.) ஏற்கனவே சுமோ ஓட்டிச் செல்லும் ஒருவரை எட்டி கீழே உதைத்துத் தள்ளிவிட்டு இவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கதவை சாத்திக்கொண்டு தொடர்ந்து வாகனத்தை இயக்கும் ஷாட் ஒன்று.

அந்த சுமோவை ஆட்டு மந்தைக்குள் விடும் காட்சியில் ஆட்டின் மீது கார் ஏறும் காட்சியைக் காட்டாமல் முன் பக்க கண்ணாடி முழுவதிலும் ரத்தத்தைக் காட்டுவதோடு, அதை வைப்பர் துடைப்பதாக காட்டுவார்கள்.

சன் தொலைக்காட்சியில் முன்பு கில்லி படத்தை ஒளிபரப்பும்போது ரத்தத்தை வைப்பர் சுத்தம் செய்யும் ஷாட்டை நீக்கியிருந்தார்கள். அவ்வளவு கவனமாக இருந்தவர்கள் நித்தியானதா தொடர்பான காட்சிகளை அருவருக்கத்தக்க வகையில் காட்டியதாக சிலர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.(நாலு ஆட்டோவுல இருபது பேர் உருட்டுக்கட்டையோட வந்து பதில் சொல்லாம இருந்தா சரிதான்.)

எங்க வீட்டுல கேபிள் இணைப்பை துண்டிச்சு ஒரு வருஷமாச்சு.இப்ப சாதாரண டி.டி.ஹெச் இணைப்பு மட்டும்தான். பொதிகை, மக்கள், மெகா, கலைஞர் - இவை மட்டுமே தமிழ் சேனல்கள்.நம்புங்கப்பா.

*******
அடுத்து வெட்டித் தனமா ஒரு தகவல்.

மௌன கீதங்கள் படத்தில் முதல் காட்சியில் பஸ் வந்து நிற்கும். பாக்யராஜ் சூட்கேசுடன் பஸ்சில் ஏறுவார்.அவருடைய லெதர் பேக் கீழே இருக்கும். டைரக்டர் பேக்கை மறந்து விட்டார் என்பது புத்திசாலி ரசிகரின் புளகாங்கிதம். ஆனால் படத்தில் கண்டக்டர் பாக்யராஜிடம்,'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?'  என்று கேட்பார். அசடு வழிய அதை எடுத்துக்கொள்வார் பாக்யராஜ். அசடு ஹீரோதானே தவிர டைரக்டர் அல்ல என்று உணர்த்தி ரசிகர்களை அமைதியாக படம் பார்க்கச் செய்துவிடுவார். ரசிகர்களுடன் கண்ணாமூச்சு ஆடும் இந்த டெக்னிக்கை அடிக்கடி பயன்படுத்துவார், பாக்யராஜ்.

******
ஷோலே படத்தை 1997ல் நாங்கள் மீண்டும் திரையிட்டபோது இருபத்து மூன்று ரீல் ரொம்ப அதிகம்னு நினைச்சு சில காட்சிகளை தவிர்த்து திரையிட்டோம்.படம் பார்க்க வந்திருந்த ஆளுங்க,"என்னப்பா, ஹேம மாலினி மாங்கா தோப்புக்குள்ள மாங்கா பறிக்க போன காட்சியை காணோம்...நீ சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டியா?"அப்படின்னு நீக்கிய காட்சிகளை ரொம்ப ஞாபகமா கேட்டாங்க.அதுக்கு இருபத்தி ரெண்டு வருஷத்துக்கு முன்னால திரையிட்ட படம். இந்த அளவுக்கு காட்சிகள் படம் பார்த்தவங்க மனசுல பதிஞ்சது.ஆனா இப்ப ஒரு படம் பார்த்தா அது எந்தப் படம்னு நினைவுக்கு கொண்டுவரவே வல்லாரை கீரை சாப்பிட வேண்டியிருக்கு. அது சரி...ஒரு படத்துல இருந்து சுட்டா நம்மால கண்டுபிடிக்க முடியும்.டைரக்டருங்க சின்ன வயசுல இருந்து பார்த்த எல்லா படத்துல இருந்தும் சுட்டு சுட்டு படம் எடுத்தா இப்படித்தான்.

செவ்வாய், 9 மார்ச், 2010

மகளிர் மசோதாவும் நாட்டின் அழிவும்...

"எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன். அது இதுக்குதானா" என்று தமிழில் பழமொழி சொல்லுவார்கள்.இவ்வளவு நாட்களாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யாமலேயே தள்ளிப்போட்டார்கள். இந்த ஆண்டு அப்படி என்ன திடீரென்று பெண்கள் மீது கரிசனம் என்று தெரியவில்லையே என்பது என் மனதில் இருந்த சந்தேகம்.
தினமணி நாளிதழில் வெளிவந்த சில கட்டுரைகள்  மூலமாக என் சந்தேகம் தீர்ந்து விட்டது.என்ன...நம் நாட்டு மக்களுக்கு சங்கு ஊதும் நாள் என்று என்பதுதான் சரியாகத் தெரியவில்லை.

அதோ பூனை போகுது பார் அப்படின்னு சொல்லி யானையைக் கடத்துறவங்களாச்சே நம்ம அரசியல் வியாதிகள். மகளிர் மசோதாவை நிறைவேற்ற முனைந்ததுக்குப் பின்னாலயும் மக்களுக்கு எதிரான சதி இருக்கு. ஆனா நம்மளை இதுல இருந்து யார் காப்பாத்துவாங்கன்னுதான் தெரியலை.

எதனால செத்தோம், ஏன் இந்த வியாதி வந்துச்சுன்னு தெரியாம அவஸ்தைப்படுறதோ, போய்ச்சேர்றதோ ரொம்ப கொடுமை.அணு சக்தி ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு எப்படி ஆப்பு வெக்கிதுன்னு தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படிங்க.

ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.இந்தியா விரைவில் ஜப்பான் மாதிரி ஆகப்போகுது. உடனே 'ஆ'ன்னு சந்தோஷமா வாயைப்பிளக்காதீங்க. நான் சொன்னது, ஹிரோஷிமா, நாகசாகி மாதிரி அழியப்போகுது. ஆனா ஒரே நாள்ல ஆகாது.கொஞ்சம் கொஞ்சமா உங்களை மயங்க வெச்சு மொத்தமா ஒழிக்கப்போறாங்க.
***************
கட்டுரை 1

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. 
 அதற்கு என்ன காரணமாம்?அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?
***************
கட்டுரை 2

அ​ணு​சக்​தித் துறை​யில் ஒத்​து​ழைப்​புக்​கான உடன்​பாட்டை அமெ​ரிக்​கா​வு​டன் செய்​து​கொள்ள,​​ அனைத்​துத் தரப்பு எதிர்ப்​பு​க​ளை​யும் மீறி,​​ பிடி​வா​தம் காட்டி அதைச் சாதித்​துக் காட்​டி​ய​வர் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்.​

இந்த உடன்​பாடு இந்​தி​யா​வின் மின்​சா​ரத் தேவை​களை முற்​றி​லு​மாக நிறை​வேற்ற உத​வும் அமு​த​சு​ரபி என்று இந்​திய ஆட்​சி​யா​ளர்​க​ளால் வர்​ணிக்​கப்​பட்​டது.​ இதன் இணைப்​பாக சர்​வ​தேச அணு​சக்​திக் குழு​மத்​து​டன் ஓர் உடன்​பாடு,​​ அணு​சக்தி வர்த்​தக நாடு​கள் குழு​வு​டன் மற்​றோர் உடன்​பாடு என்​றும் மத்​திய அர​சால் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ ஆனால்,​​ இந்த அணு​சக்தி விவ​கா​ரம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தை​க​ளும்,​​ நட​வ​டிக்​கை​க​ளும் முடி​வில்​லா​மல் தொட​ரு​வ​தன் விளை​வா​கப் புதிய விவா​தங்​கள் எழுந்​துள்​ளன.​

இந்​தி​யா​வு​ட​னான அணு​சக்​தித் துறை ஒத்​து​ழைப்​புக்கு அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றம் "ஹைட் சட்​டம்' என்ற ஒன்றை ஏற்​கெ​னவே நிறை​வேற்​றி​யி​ருந்​தது.​ இப்​போது அணு​சக்தி தொடர்​பாக இந்​திய நாடா​ளு​மன்​றத்​தி​லும் ஒரு புதிய சட்​டம் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்ற கோரிக்கை அமெ​ரிக்கா தரப்பி​லி​ருந்து முன்​வைக்​கப்​பட்டு,​​ அதை​யும் மன்​மோ​கன் சிங் அரசு சிர​மேற்​கொண்டு செயல்​ப​டுத்த மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்டு விட்​ட​தா​கச் செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன.​

இ ​தன் பின்​ன​ணி​தான் என்ன?​ அணு​மின் உற்​பத்​திக் கூடங்​களை நிறுவி,​​ மின்​சார உற்​பத்​தி​யில் ஈடு​ப​டு​கை​யில்,​​ விபத்​துக்​கான சாத்​தி​யக்​கூ​று​கள் இருப்​பது இயல்பே.​ அனல்-​புனல் மின் நிலை​யங்​க​ளில்​கூட விபத்​து​கள் நிகழ வாய்ப்பு உண்டு என்​றா​லும்,​​ அணு​மின் நிலைய விபத்து மிகு​தி​யான அபா​யங்​களை உள்​ள​டக்​கி​ய​தாக இருக்​கும்.​ அமெ​ரிக்​கா​வின் "மூன்று மைல் தீவு' அணு​மின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்​த​தும்,​​ ரஷி​யா​வின் "செர்​னோ​பில்' அணு​மின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்​ட​தும்,​​ இத்​த​கைய விபத்​து​க​ளின் அபாய விளை​வு​கள் எந்த அள​வுக்​குக் கடு​மை​யாக இருக்​கும் என்​ப​தற்​கான அனு​ப​வப் பாடங்​க​ளா​கும்.​

இந்த அபா​யத்​தைத் தவிர்க்​கும் வகை​யில் கூடு​தல் எச்​ச​ரிக்​கை​யோ​டும்,​​ பாது​காப்பு ஏற்​பா​டு​க​ளோ​டும் அணு​மின் உற்​பத்​தி​யில் ஈடு​பட வேண்​டி​யது அவ​சி​யம்;​ அது சாத்​தி​ய​மா​ன​தும்​கூட.​ ஆனால் இவை எல்​லா​வற்​றை​யும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடு​மா​னால்,​​ அதன் பாதிப்​பு​களை எதிர்​கொள்​வ​தும்,​​ பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உரிய இழப்​பீ​டு​களை வழங்​கு​வ​தும் தவிர்க்க முடி​யாத கட​மை​கள்.​

÷எ​திர்​பா​ராத அபா​யங்​க​ளுக்​குப் பாது​காப்பு ஏற்​பா​டாக வந்​த​வை​தான் காப்​பீட்​டுத் திட்​டங்​கள்.​ இதற்​காக சர்​வ​தேச அள​வில் சில கோட்​பா​டு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன;​ உலக நாடு​கள் பல​வற்​றில் சட்​டங்​க​ளும் இயற்​றப்​பட்​டுள்​ளன.​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழ​கத்​தின் முயற்​சி​யின் விளை​வாக 1963-ல் அணு​சக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்​பாடு ஒன்று உரு​வாக்​கப்​பட்டு அது 1997 முதல் அம​லாக்​கத்​துக்கு வந்​தது.​

÷வ​ ளர்ச்​சி​ய​டைந்த மேற்​கத்​திய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான,​​ பொரு​ளா​தார ஒத்​து​ழைப்பு மற்​றும் வளர்ச்​சிக்​கான ஸ்தா​ப​னத்​தின் முயற்​சி​யில் அணு​மின் சக்​தித் துறை​யில் மூன்​றா​வது நபர் கடப்​பா​டுக்​கான பாரிஸ் கோட்​பாடு 1960-ல் உரு​வாக்​கப்​பட்டு,​​ 1963-ல் புரூ​செல்ஸ் நக​ரில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் செழு​மைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ 1968 முதல் அம​லுக்கு வந்​தது.​ இந்த வியன்னா மற்​றும் பாரிஸ் கோட்​பா​டு​கள் இரண்​டை​யும் ஒருங்​கி​ணைத்து ஒரு முழு​மை​யான வரை​ய​றையை ஏற்​ப​டுத்த 1988-ல் செர்​னோ​பில் விபத்​துக்​குப் பிறகு ஒரு முயற்​சி​யும் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ 1997-ல்,​​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழக உறுப்பு நாடு​கள் அணு​சக்தி பாதிப்​புக்​கான கூடு​தல் இழப்​பீட்​டுக்​கான கோட்​பாடு ஒன்​றை​யும் நிறை​வேற்​றி​யுள்​ளன.​ இது இன்​ன​மும் அம​லாக்​கத்​துக்கு வர​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​
÷இந்த சர்​வ​தே​சக் கோட்​பா​டு​களை ஏற்​றுக்​கொண்ட நாடு​கள் சில,​​ தத்​தம் நாட்​டுக்​குப் பொருத்​த​மான சட்​டங்​களை இது தொடர்​பாக நிறை​வேற்​றி​யுள்​ளன.​ பிரிட்​டன்,​​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ்,​​ ரஷியா போன்​றவை பாரிஸ் அல்​லது வியன்னா கோட்​பா​டு​களை ஏற்​றுச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளில் சில.​ சர்​வ​தே​சக் கோட்​பாடு எத​னை​யும் அங்​கீ​க​ரிக்​கா​ம​லும்,​​ சொந்த நாட்​டில் சட்​ட​மி​யற்​றா​ம​லும் அணு​சக்​தித் துறை​யில் ஈடு​பட்டு வரும் நாடாக சீனா உள்​ளது.​

÷ர​ஷியா,​​ சீனா போன்ற நாடு​கள் அணு​மின் துறை​யில் உற்​பத்தி மற்​றும் வர்த்​த​கத்தை அர​சுத் துறை​யில் மட்​டுமே மேற்​கொள்​கின்​றன.​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட இதர நாடு​க​ளில் பிர​தா​ன​மாக அணு​மின்​துறை உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் தனி​யார் துறையே ஈடு​பட்டு வரு​கி​றது.​ அணு​மின் விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்​கும் முழு​மை​யான நிவா​ர​ணம் அல்​லது இழப்​பீடு வழங்க வேண்​டிய பொறுப்பு அர​சாங்​கத்​தையே சாரும் என்​பது பொது​வான ஒன்று.​ எனி​னும்,​​ காப்​பீட்​டுத் திட்​டங்​க​ளின் கீழ்,​​ இந்த அணு​மின் பாதிப்பு தொடர்​பான கடப்​பா​டு​க​ளுக்கு வழி​வகை செய்ய வேண்​டும் என்​பதே,​​ இது குறித்​துச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளின் நோக்​க​மாக அமைந்​தது.​

÷அ​ணு​மின் உற்​பத்​தித் துறை​யில் ஈடு​ப​டு​கிற நிறு​வ​னங்​கள் இரு​வ​கைப்​ப​டும்.​ அணு உலை​கள்,​​ இதர சாத​னங்​கள்,​​ எரி​பொ​ருள்,​​ எரி​பொ​ருள் பயன்​பாடு தொடர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​கள் போன்​ற​வற்​றில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் ஒரு​வகை;​ இவற்​றைப் பயன்​ப​டுத்தி அணு​மின் நிலை​யத்தை நிறுவி இயக்​கு​கிற,​​ அதைப் பரா​ம​ரிக்​கிற,​​ உற்​பத்​தி​யா​கும் மின்​சா​ரத்தை விற்று விநி​யோ​கிக்​கிற பணி​க​ளில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் இரண்​டா​வது வகை.​ அணு​மின் விபத்து பாதிப்பு குறித்த குடி​மைக் கடப்​பா​டு​கள் முதல் வகை நிறு​வ​னங்​கள் மீது சுமத்​தப்​ப​டக்​கூ​டாது என்​ப​து​தான்,​​ இது​தொ​டர்​பாக 1957-ம் ஆண்​டி​லேயே சட்​ட​மி​யற்​றிய அமெ​ரிக்க நாடு எடுத்த முடிவு.​  அ​ணு​மின் உலை மற்​றும் இதர சாத​னங்​களை உற்​பத்தி செய்​யும் நிறு​வ​னங்​கள்,​​ உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து நிகழ்ந்​தா​லும்,​​ அதன் பாதிப்​புக்கு எந்த வகை​யி​லும் கடன்​பட்​டவை ஆகாது என்று அவற்​றுக்கு முழு விலக்கு அளித்​து​விட்​டது அமெ​ரிக்க அர​சாங்​கம்.​ மாறாக,​​ விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்கு,​​ அணு​மின் நிலை​யத்​தைச் செயல்​ப​டுத்​து​கிற நிறு​வ​னமே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும்,​​ அதற்​காக அந்த நிறு​வ​னம் காப்​பீட்​டுத் திட்​டத்தை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் சட்​ட​மி​யற்​றப்​பட்​டது.​

÷அ​ணு​சக்தி ஒழுங்​கு​முறை ஆணை​யம் ஒன்​றும் ஏற்​ப​டுத்​தப்​பட்டு,​​ அது சட்​டத்​தின் கீழான காப்​பீட்டை அமெ​ரிக்க அணு​மின் கூடங்​கள் பெற்​றுள்​ள​னவா என்று கண்​கா​ணிக்​கி​றது.​ இந்த அணு​மின் கூடங்​கள் தொடர்​பான காப்​பீட்டு உத்​த​ர​வா​தத்தை "அமெ​ரிக்க அணு​சக்​திக் காப்​பீட்​டா​ளர்​கள்' என்ற ஒரு கூட்​ட​மைப்பு நல்கி வரு​கி​றது.​ இந்​தக் காப்​பீட்​டைப் பெறச் செலுத்த வேண்​டிய வரு​டாந்​திர "பிரீ​மி​யம்' தொகை,​​ ஒரே ஓர் அணு​உ​லை​யைக் கொண்ட மின்​கூ​டத்​துக்கு 4 லட்​சம் டாலர் என்று சரா​ச​ரி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்டு செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ மொத்​தத்​தில் அமெ​ரிக்​கா​வில் அணு​சக்தி சாதன உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டும் தனி​யார் துறை நிறு​வ​னங்​க​ளுக்கு,​​ விபத்து நிவா​ரண இழப்​பீட்டி​லி​ருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்​கும் வித​மா​கவே அந்​நாட்​டுச் சட்​டம் அமைந்​துள்​ளது.​

÷இப்​போது அமெ​ரிக்​கா​வில் தனி​யார் துறை அணு​மின் உற்​பத்தி நிறு​வ​னங்​க​ளாக உள்ள ஜென​ரல் எலெக்ட்​ரிக்,​​ அரேவா,​​ வெஸ்​டிங் ஹவுஸ்,​​ ரோசா​டோம் போன்ற பன்​னாட்டு நிறு​வ​னங்​கள்,​​ இந்​தி​யா​வில் புதிய அணு​மின் கூடங்​க​ளுக்​கான அணு உலை​கள் உள்​ளிட்ட சாத​னங்​களை விற்​பனை செய்ய மும்​மு​ர​மாக முயற்​சி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றன.​ இவை அமெ​ரிக்​கா​வில் உள்​ள​து​போ​லத் தங்​க​ளுக்​குப் பாது​காப்​பான சட்ட ஏற்​பா​டு​கள் இந்​தி​யா​வி​லும் செய்து தரப்​பட வேண்​டும் என்று கோரு​கின்​றன.​ இந்​தக் கோரிக்​கையை அமெ​ரிக்க அர​சாங்​க​மும் வலி​யு​றுத்​து​கி​றது.​ அண்​மை​யில் அமெ​ரிக்க நாட்​டுக்​குப் பய​ணம் மேற்​கொண்ட பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கி​டம்,​​ அதி​பர் ஒபா​மாவே இதற்​கான சட்​டத்தை விரை​வில் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்ற நெருக்​கு​தல் கொடுத்​துள்​ளார் என்​பது வெளிப்​ப​டை​யா​கவே தெரிய வந்​தது.​

÷இந்​தப் பின்​ன​ணி​யில் தான் மத்​திய அரசு அணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய முடி​வெ​டுத்​துள்​ளது.​ இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​

÷அது மட்​டு​மல்ல,​​ அணு​மின் விபத்து நேரிட்​டால்,​​ அந்த விபத்து தொடர்​பான இழப்​பீட்​டுத் தொகைக்கு 45 கோடி டாலர் ​(ரூ.​ 2,300 கோடி)​ உச்​ச​வ​ரம்​பாக விதிக்​கப்​ப​டும் என்று இந்த மசோ​தா​வைப் பற்​றிய விவ​ரங்​கள் தெளி​வு​ப​டுத்​து​கின்​றன.​ அணு​மின் கூட விபத்து,​​ லட்​சக்​க​ணக்​கான மக்​க​ளைக்​கூட பாதிப்​புக்கு இலக்​காக்​கும் பரி​மா​ணம் கொண்​ட​தாக அமை​யக்​கூ​டும்.​ அப்​ப​டிப்​பட்ட நிலை​யில் இந்த 45 கோடி டாலர் என்​பது வெறும் கண்​து​டைப்​பாக மட்​டுமே நின்​று​வி​டும் ஆபத்து எழும்.​ இந்த உச்​ச​வ​ரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டால் மட்​டுமே அதற்கு உள்​ளிட்​டுக் காப்​பீட்​டுத் திட்​டத்​தைப் பெற முடி​யும் என்​பது இந்​தச் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தற்​கான கார​ண​மா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ போபால் விஷ​வா​யுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்​டு​க​ளா​கி​யும்,​​ அதில் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உரிய நிவா​ர​ணம் பெற இய​லாது அல்​லா​டு​கிற நேர்வை நினை​வில் வைத்​துப் பார்த்​தால்,​​ மத்​திய அர​சின் புதிய சட்​டம் எவ்​வ​ளவு பாத​க​மான நிலை​மைக்கு இட்​டுச் செல்​லக் கூடும் என்​பதை ஊகிப்​பது கடி​னம் அல்​லவே!​

÷"லாபங்​கள் அனைத்​தும் தனி​யா​ருக்கு;​ பாதிப்​பு​க​ளும்,​​ இழப்​பும் அர​சாங்​கத்​துக்கு' என்​ப​து​தானே நவீன தாரா​ள​ம​யத்​தின் தாரக மந்​தி​ரம்.​ அதன்​படி அமெ​ரிக்க நாட்​டின் அணு​மின் உற்​பத்தி -​ ​ வர்த்​த​கத் தனி​யார் நிறு​வ​னங்​க​ளுக்கு ரூ.​ 60,000 கோடி வரை விற்று,​​ லாபம் ஈட்​டு​வ​தற்கு வழி​தி​றந்​து​விட முற்​ப​டு​கிற,​​ இந்​திய ஆட்​சி​யா​ளர்​கள்,​​ அவற்​றின் மீது எந்​தக் கட்​டத்​தி​லும் மயி​லி​றகு அள​வு​கூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்​டம் போட்​டுப் பாது​காப்பு நல்க முற்​ப​டு​கின்​ற​னர்.​

÷"என்ன விலை அமெ​ரிக்க அணு உலையே?​ எம் மக்​க​ளின் உயி​ரைக் கூடத் தரு​வேன்' என்று இந்​திய மக்​க​ளின் வாழ்​வு​ரி​மைக்கே எதி​ரான சட்​டத்தை மன்​மோ​கன் சிங் அரசு நிறை​வேற்ற அனு​ம​திக்​கப் போகி​றதா நம் ஜன​நா​யக நாட்​டின் நாடா​ளு​மன்​றம்?

 **************
கட்டுரை 3
அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​
அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!
******
தினமலர் இணைய தளத்தில் வெளிவந்த ஒளிப்படம்.