Search This Blog

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆயுத பூஜை தேவையா?

இப்படி சில தரப்பினர் கேள்வி எழுப்பி ஆயுத பூஜை தொடர்பான புராணக்கதைகளை கடுமையான சொற்களால் சாடுகின்றார்கள். நான் அந்த விசயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஆயுதபூஜை, பொங்கல் போன்ற பண்டிகை கொண்டாட்டங்கள் இல்லை என்றால் நம் வீடும், தொழிலகமும் உலகமகா குப்பைமேடாகத்தான் இருக்கும்.

இந்த மாதிரி பண்டிகை எல்லாம் தேவையில்லை. நான் வீட்டையும், தொழிலகத்தையும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வருடமும் மிகச் சுத்தமாக சீரமைத்து வைத்துக்கொள்வேன் என்று உறுதி கூறுங்கள் பார்க்கலாம். நிச்சயமாக முடியாது.

இந்து மதம் தவிர்த்த மாற்று மதத்தினர் கூட பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜைக்கு வீடு, கடைகளை சுத்தம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் மத பண்டிகையின் போது இடத்தை புதுப்பொலிவுடன் ஜொலிக்கச்செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி எல்லாம் இல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டில் ஏதாவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியின் போது வீட்டை சுத்தம் செய்து புது வர்ணம் அடிப்பார்கள்.

வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள், பொது பண்டிகைகள் இது போன்று எதுவுமே இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். உப்புசப்பில்லாத வாழ்க்கையாகத்தான் அது இருக்கும். ஆனால் எந்த பண்டிகை கொண்டாட்டத்தையும் ஒரு அளவுடன் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வியாபாரம் நடக்கும் கடையில் 200 ரூபாய் செலவில் கொண்டாட்டம் என்றால் அது ஓ.கே. ஆனால் கடன் வாங்கி 2000 ரூபாய் செலவு செய்வது என்பது ரொம்பவே ஓவர். இந்த விசயத்தில்தான் பலர் சறுக்கி விடுகிறார்கள்.

இது போன்ற கொண்டாட்டம் தேவைதான். ஆனால் அவை நம்விரலை வீங்கச்செய்யாத அளவில் இருக்க வேண்டும். இதுதான் என் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக