Search This Blog

திங்கள், 5 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-1

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.

மர்பி விதிகள்

1. நீங்கள் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் அடுத்த வரிசைதான் வேகமாக நகர ஆரம்பிக்கும்.

2. ஒரு பழுதான பொருளை பழுது பார்ப்பவரிடம் காட்டும்போது (மட்டும்) அழகாக வேலை செய்யும்.

3. எந்த ஒரு வேலையையும் செய்து முடித்தவுடன் அதை எளிதாக முடிப்பதற்கான வழி தென்படும்.

4. எந்த ஒரு சிறிய பிரச்சனைக்கும் பின்னாலும் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

5. நீங்கள் ஒரு விஷ­யம் தவறாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தும் அது சரியாகவே நடந்து விட்டது என்றால் அது தவறாக நடந்திருக்குமேயானால் உங்களுக்கு லாபத்தை ஈட்டித்தருவதாக இருந்திருக்கும்.

-விதிகள் தொடரும்...

1 கருத்து: